pm logo


kandar anubuthi, kandar alangaram and
vel/mayil/cEval viruttham of aruNagiri nAthar

அருணகிரி நாதர் அருளிய முருகன் பாடல்கள் :
கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம்,
வேல் - மயில் - சேவல் விருத்தம்
(in tamil script, unicode/UTF-8 format)




Acknowledgement:
Our Sincere thanks go to Dr.K. Kalyanasundaram for his assistance in the preparation of this work.
This webpage presents Etext in Tamil script in Unicode encoding (utf-8 format).

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


அருணகிரி நாதர் அருளிய முருகன் பாடல்கள் :
1. கந்தர் அனுபூதி


காப்பு
நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத்
தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்
செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே
பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.

நூல்
ஆடும் பணிவே லணிசே வலெனப்
பாடும் பணிவே பணியா யருள்வாய்
தேடுங் கயமா முகனைச் செருவிற்
காடுந் தனியா னைசகோ தரனே.       1

உல்லாச நிராகுல யோக விதச்
சல்லாப விநோதனு நீயலையோ
எல்லாமற என்னை யிழந்த நலஞ்
சொல்லாய் முருகா கரபூ பதியே.       2

வானோ புனல்பார் கனல்மா ருதமோ
ஞானோ தயமோ நவில்நான் மறையோ
யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண்முகனே.       3

வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுகு ருரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே.       4

மகமாயை களைந்திட வல்ல பிரான்
முகமாறு மொழிந்து மொழிந் திலனே
அகமாடை மடந்தைய ரென் றயருஞ்
சகமாயையுள் நின்று தயங் குவதே.       5

திணியா னமனோ சிலைமீ துனதாள்
அணியா ரரவிந்த மரும்பு மதோ
பணியா வென வள்ளி பதம் பணியுந்
தணியா வதிமோத தயா பரனே.       6

கெடுவாய் மனனை கதிகேள் கரவா
திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய்
சுடுவாய் நெடுவே தனைதூள் படவே
விடுவாய் விடுவாய் வினையா வையுமே.       7

அமரும் பதிதே ளகமா மெனுமிப்
பிமரங் கெட்மெய்ப் பொருள் பேசியவா
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே.       8

மட்டூர்குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் பரிசென் றொழிவேன்
தட்டூ டறவேல் சயிலத் தெறியும்
திட்டூர நிராகுல நிர்ப் பயனே.       9

கார்மா மிசைகா லன்வரிற் கலபத்
தேர்மா மிகைவந் தெதிரப் படுவாய்
தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ்
சூர்மா மடியத் தொடுவே லவனே.       10

கூகா வெனவென் கிளைகூ டியழப்
போகா வகைமெய்ப் பொருள்பே சியவா
தாகாசல வேலவ நாலு கவித்
தியாகா கரலோக சிகா மணியே.       11

செம்மான் மகளைத் திருடுந் திருடன்
பெம்மான் முருகன் பிறவா னிறவான்
சும்மா இருசொல் லறவென் றலுமே
அம்மா பொரு ளொன்று மறிந்திலனே.       12

முருகன் தனிவேல் முனிநங் குருவென்
றருள்கொண் டறியா ரறியுந் தரமோ
உருவன் றருவன் றுளதன் றிலதன்
றிருளன் றொளியன் றென்நின் றதுவே.       13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்
றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய்
மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம்
ஐவாய் வழி செல்லு மவாவினையே.       14

முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங்
குருபுங்கவ எண்குண பஞ் சரனே.       15

பேராசை யெனும் பிணியிற் பிணிபட்
டோ ரா வினையே னுழலந் தகுமோ
வீரா முதுசூர் படவே லெறியுஞ்
சூரா சுரலோக துரந் தரனே.       16

யாமோதிய கல்வியு மெம் மறிவுந்
தாமே பெற வேலவர் தந்தனாற்
பூமேல் மயல் போ யறமெய்ப் புணர்வீர்
தாமேல் நடவீர் நடவீ ரினியே.       17

உதியா மரியா வுணரா மறவா
விதிமா லறியா விமலன் புதல்வா
அதிகா வநகா வபயா வமரா
பதிகா வலசூர் பயங் கரனே.       18

வடிவுந் தனமும் மனமுங் குணமுங்
குடியுங் குலமுங் குடிபோ கியவா
அடியந் தமிலா அயில்வே லரசே
மிடி யென்றொரு பாவி வௌiப் படினே.       19

அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேண்
உரிதா வுபதேச முணர்ந் தியவா
விரிதாரண விக்ரம் வேளி மையோர்
புரிதா ரக நாக புரந்தரனே.       20

கருதா மறவா நெறிகாண எனக்
கிருதாள் வனசந் தரஎன் றிசைவாய்
வரதா முருகா மயில்வா கனனே
விரதா கரசூர விபாட ணனே.       21

காளைக் குமரேச னெனக் கருதித்
தாளைப் பணியத் தவமெய் தியவா
பாளைச் சூழல் வள்ளி பதம்புணியும்
வேளைச் சுர பூபதி, மேருவையே.       22

அடியைக் குறியா தறியா மையினால்
முடியக் கெடவோ முறையோ முறையோ
வடிவிக் ரமமேல் மகிபா குறமின்
கொடியைப் புணருங் குணபூத ரனே       23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ
சூர்வே ரொடு குன்று தொளைத்தநெடும்
போர்வேல புரத்தா பூப தியே.       24

மெய்ய யெனவெவ் வினைவாழ் வையுகந்
தையோ அடியே னலையத் தகுமோ
கையோ அயிலோ கழலோ முழுதுஞ்
செய்யோய் மயிலே றிய சேவகனே.       25

ஆதார மிலே னருளைப் பெறவே
நீதா னொரு சற்று நினைந்திலையே
வேதாகம ஞான விநோ தமனோ
கீதா சுரலோக சிகா மணியே.       26

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயனிங் கிதுவோ
பொன்னே மணியே பொருளே யருளே
மன்னே மயிலேறிய வானவனே.       27

ஆனா அமுதே அயில்வே லரசே
ஞானா கரனே நவிலத் தகுமோ
யானாகிய வென்னை விழுங்கி வெறுந்
தானாய் நிலைநின் றதுதற் பரவே.       28

இல்லே யெனுமா யையி லிட்டனைநீ
பொல்லே னறியாமை பொறுத் திலையே
மல்லே புரி பன்னிரு வாகுவிலென்
சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.       29

செல்வா னுருவிற் றிகழ்வே லவனன்
றொவ்வா ததென வுணர்வித் ததுதான்
அவ்வா றறிவா ரறிகின் றதலால்
எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.       30

பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே
வீழ்வா யென என்னை விதித்தனையே
தாழ்வா னவைசெய் தனதா முளவோ
வாழ்வா யினிநீ மயில்வா கனனே.       31

கலையே பதறிக் கதறிக் தலையூ
டலையே படுமா றதுவாய் விடவோ
கொலையே புரி வேடர்குலப் பிடிதோய்
மலையே மலை கூறிடு வாகையானே.       32

சிந்தா குலவில் லொடுசெல் வமெனும்
விந்தா டவியென்று விடப் பெறுவேன்
மந்தா கினிதந்த வரோ தயனே
கந்தா முருகா கருணா கரனே.       33

சிங்கார மடந்தையர் தீநெறி போய்
மங்கார லெனக்கு வரந்தருவாய்
சங்க்ராம சிகா வலசண் முகனே
கங்கா நதி பால க்ருபாகரனே.       34

விதிகாணு முடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய்
மதிவா ணுதல்வள்ளியையல் லதுபின்
துதியா விரதா சுரபூ பதியே.       35

நாதா குமரா நமவென் றரனார்
ஓதா யெனவோ தியதெப் பொருள்தான்
வேதா முதல் விண்ணவர் சூடுமலர்ப்
பாதா குறமின் பதசே கரனே.       36

கிரிவாய் விடுவிக் ரம வேலிறையோன்
பரிவா ரமெனும் பதமே வலையே
புரிவாய் மனனே பொறையா மறிவால்
அரிவா யடியொடு மகந் தையையே.       37

ஆதாளிaய யொன் றறியே னையறத்
தீதாளியை யாண் டதுசெப் புமதோ
கூதாள கிராத குலிக் கிறைவா
வேதாள கணம் புகழ்வே லவனே.       38

மாவேழ் சனனங் கெடமா யைவிடா
மூவேடணை யென்று முடிந் திடுமோ
கோவே குறமின் கொடிதோள் புணருந்
தேவே சிவ சங்கர தேசிகனே.       39

வினையோட விடுங் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங் கிடவோ
கனையோ டருவித் துறையோடு பசுந்
தினையோ டிதணோடு திரிந் தவனே.       40

சாகா தெனையே சரணங் களிலே
காகா நமனார் கலகஞ் செயுநாள்
வாகா முருகா மயில்வா கனனே
யோகா சிவஞா னொபதே சிகனே.       41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைக் தனிவோல நிகழ்த் திடலுஞ்
செறிவற் றுலகோ டுரைசிந் தையுமற்
றறிவற் றறியா மையு மற்றதுவே.       42

தூசா மணியுந் துகிலும் புனைவாள்
நேசா முருகா நினதன் பருளால்
ஆசா நிகளந் துகளா யின்பின்
பேசா அநுபூதி பிறந் ததுவே.       43

சாடுந் தனிவேல் முருகன் சரணஞ்
சூடும் படிதந் ததுசொல் லுமதோ
வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங்
காடும் புனமுங் கமழுங் கழலே.       44

கரவா கியகல்வி யுளார் கடைசென்
றிரவா வகைமெய்ப் பொருளீ குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ்
சரவா சிவயோக தயா பரனே.       45

எந்தாயுமெனக் கருள்தந்தையுநீ
சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள்
கந்தா கதிர்வே லவனே யுமையாள்
மைந்தா குமரா மறைநா யகனே.       46

ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப்
பேறா வடியேன் பெறுமா றுளதோ
சீறா வருசூர் சிதைவித் திமையோர்
கூறா வுலகங் குளிர்வித் தவனே.       47

அறிவொன் றறநின் றறிவா ரறிவிற்
பிறிவொன் றறநின் றபிரா னலையோ
செறிவொன் றறவந் திருளே சிதைய
வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.       48

தன்னந் தனிநின் றதுதா னறிய
இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ
மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார்
கின்னங் களையும் க்ருபைசூழ் சுடரே.       49

மதிகெட்டறவா டிமயங் கியறக்
கதிகெட்டவமே கெடவோ கடவேன்
நதிபுத்திர ஞான சுகா திபவத்
திதிபுத் திரர்வீ றடுசே வகனே.       50

உருவா யருவா யுளதா யிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்
க்கருவா யுயிராய்க் கதியாய்
விதியாய்க்குருவாய் வருவா யருள்வாய் குகனே.       51
------

திருச்சிற்றம்பலம்

2. அருணகிரி நாதர் அருளிய "கந்தர் அலங்காரம்"

காப்பு
அடலருணைத் திருக் கோபுரத் தேயந்த வாயிலுக்கு
வட வருகிற் சென்று கண்டுகொண்டேன்வருவார் தலையில்
தடபடெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக்
கடதட கும்பக களிற்றுக் கிளைய களிற்றினையே.

நூல்
பேற்றைத் தவஞ் சற்றுமில்லாத வென்னைப்ர பஞ்ச மென்னுஞ்
சேற்றைக் கழிய வழிவிட்ட வா. செஞ்சடாடவிமேல்
ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமாரன் க்ருபாகரனே.       1

அழித்துப் பிறக் கவொட்டாவயில் வேலன் கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி வீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன் விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே.       2

தேரணி யிட்டுபட புரமெரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடக நௌiந்ததுசூர்ப்
பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே.       3

ஓரவொட்டாரொன்றை யுன்னவொட்டார்மலரிட்டுனதான்
சேரவொட்டாரைவர் செய்வதென்யான் சென்று தேவருய்யச்
சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிக்கக்
கூரகட்டாரியிட் டோ ரிமைப் போதினிற் கொன்றவனே.       4

திருந்தப் புவனங்களீன்ற பொற்பாவை திருமுலைப்பால்
அருந்திச் சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை
விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங்
குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே.       5

பெரும்பைம் புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற பேதை கொங்கை
விரும்புங் குமரனை மெய்யின்பி னான்மெல்ல மெல்லவுள்ள
அரும்புந் தனிப்பர மாநந்தந் திfத்தித் தறிந்தவன்றே
கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே.       6

சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு மென்றன்
உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக்
குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக்
களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே.       7

ஔiயில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல்
அளியில் விளைந்ததொரா நந்தத் தேனை யநாதியிலே
வௌiயில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற வெறுந்தனியைத்
தௌiய விளம்பிய வா.. முகமாறுடைத்தேசிகனே.       8

தேனென்று பாகனெfறுவமிக் கொணாமொழித் தெய்வ வள்ளி
கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ
வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று
தானன்று நானன் றசிரீரி யன்று சரீரியன்றே.       9

சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும்மாவிருக்கு
மெல்லையுட் செல்ல எனைவிட்டவா இகல் வேலனல்ல
கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக் கொவ்வைச்
செவ்வாய்வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல் வல்லபமே.       10

குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக்
கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத்
தசைபடு கால்பட் டசைந்து மேரு அடியிடவெண்
டிசைவரை தூள்பட்ட அத்தூளின் வாரி திடர்பட்டே       11

படைபட்ட வேலவன் பால்வந்த வாகைப் பதாகையென்னுந்
தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந்
துடைபட்ட தண்டகடாக முதிர்ந்த துடுபடலம்
இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே.       12

ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர்
திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர்
வெருவரத் திக்குச் செவிபட் டெட்டு வெற்புங்கனகப்
பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங் கெட்டதே.       13

குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவரிற் கொட்படைந்த
இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்கு வெற்பும்
அப்பாதி யாய் விழ மேருங் குலங்கவிண்ணாரு முய்யச்
சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச் சண்முகனே.       14

தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென்
பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால்
மூவடி கேட்டன்று மூதண்ட கூடி முகடுமுட்டச்
சேவடி நீட்டும் பெருமாள் சிற்றடியே.       15

தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத் தானமென்றும்
இடுங்கோ ளிருந்த படியிருங் கோளெரு பாருமுய்யக்
கொடுங்கோபச் சூருடன் குன்றத் திறக்கத் தொளக்கலை வேல்
விடுங்கொ னருள் வந்து தானே யுமக்கு வெளிப்படுமே.       16

வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைச்
பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச்
சூதான தற்ற வௌiக்கே யொளித்துச்சும் மாவிருக்கப்
போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே.       17

வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே.       18

சொன்ன கிரௌஞ்ச கிரியூ டுருவத் தொளுத்தவைவேல்
மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமௌ னத்தையுற்று
நின்னை யுணர்ந்துணரந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம் பூண்
டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே.       19

கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே.       20

மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை
கிரணப் கலாபியும் வேலுமுண் டேகிண் கிணிமுகுள
சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா
பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே.       21

மொய்தர ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால்
வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற்
கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே.       22

தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவ னே மறவேனுனைநான்
ஐவர்க் கிடம்பெறக் காலிரண்டோ ட்டி யதிலிரண்டு
கைவைத்த வீடு குலையுமுன் னே வந்து காத்தருளே.       23

கின்னங் குறித்தடி னேfசெவி நீயன்று கேட்கச்சொன்ன
குன்னங் குறிச்சி வௌiயாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை
முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாண முயன்றவனே.       24

தண்டாயுதமுந் திரிசூல மும்விழத் தாக்கியுன்னைத்
திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலவனுக்குத்
தொண்டா கியவென் னவிரோத ஞானச் சுடர்வடிவாள்
கண்டாய டாவந்த காவந்து பார்சற்றென் கைக் கெட்டவே.       25

நீலச் சிகண்டியி லேறும் பிரானெந்த நேரத்திலுங்
கோலக் குறத்தி யுடன்வரு வான் குருநாதன் சொன்ன
சீலத்தை மௌfளத் தௌiந்தறி வார் சிவயோகிகளே
காலத்தை வென்றிருப்பார், மரிப் பார்வெறுங்களே.       26

ஓலையுந் தூதருங் கண்டுதிண்டாட லொழித் தெனக்குத்
காலையு மாலையு முன்னிற்கு மேகந்த வேள் மருங்கிற்
சேலையுங் கட்டிய சீராவுங் கையிற் சிவந்தசெச்சை
மாலையுஞ் சேவற் பதாகையுந் தோகையும் வாகையுமே.       27

வேலே விளங்குகை யான் செய்ய தாளினில் வீழ்ந்திறைஞ்சி
மாலே கொளவிங்ஙன் காண்பதல் லான் மனவாக்குச்செய
லாலே யடைதற் கரிதா யருவுரு வாகியொன்று
போலே யிருக்கும் பொருளையெவ்வாறு புகல்வதுவே.       28

கடத்திற் குறத்தி பிரானரு ளாற்கலங் காதசித்தத்
திடத்திற் புணையென யான் கடந் தேன் சித்ர மாதரல்குற்
படத்திற் கழுத்திற் பழுத்தசெவ்வாயிற் பனையிலுந்தித்
தடத்திற் றனத்திற் கிடக்கும் வெங்காம சமுத்திரமே.       29

பாலென் பதுமொழி பஞ்சென் பதுபதம் பாவையர்கண்
சேலென்ப தாகத் திரிகின்ற நீசெந்தி லோன்றிருக்கை
வேலென் கிலைகொற்ற மயூர மென்கிலை வெட்சித்தண்டைக்
காலென் கிலைமன மேயெங்ங னேமுத்தி காண்பதுவே. 30

பொக்கக் குடிலிற் புகுதா வகைபுண்ட ரீகத்தினுஞ்
செக்கச் சிவந்த கழல்வீடு தந்தருள் சிந்துவெந்து
கொக்குத் தறிபட் டெறிபட் டுதிரங் குமுகுமெனக்
கக்கக் கிரியுரு வக்கதிர் வேல் தொட்ட காவலனே.       31

கிளைத்துப் புறப்பட்ட சூர்மார் புடன்கிரி யூடுருவத்
தொளைத்துப் புறப்பட்ட வேற்கந்த னே துறந் தோருளத்தை
வளைத்துப் பிடித்துப் பதைக்கப் பதைத்த வதைக்குங் கண்ணார்க்
கிளைத்துத் தவிக்கின்ற என்னை யெந்தாள் வந்திரட்சிப்பையே.       32

முடியாப் பிறவிக் கடலிற் புகார்முழு துங்கெடுக்கு
மிடியாற் படியில் விதனப் படார்வெற்றி வேற்பெருமாள்
அடியார்க்கு நல்ல பெருமாள் அவுணர் குலமடங்கப்
பொடியாக் கியபெரு மாள் திரு நாமம் புகல்பவரே.       33

பொட்டாக வெற்பைப் பொருதகந்தா தப்பிப் போனதொன்றற்
கெட்டாத ஞான கலைதரு வாயிருங் காமவிடாய்ப்
பட்டா ருயிரைத் திருகிப் பருகிப் பசிதணிக்குங்
கட்டாரி வேல்வழி யார்வலைக்கேமனங் கட்டுண்டதே.       34

பத்திற் துறையிழிந் தாநந்த வாரி படிவதானால்
புத்தித் தரங்கந் தௌiவதென் றோபொங்கு வெங்குருதி
மெத்திக் குதிகொள்ள வெஞ்சூ ரனைவிட்ட கட்டியிலே
குத்தித் தரங்கொண் டமரா வதிகொண்ட கொற்றவனே.       35

கழித்தோடு மாற்றிற் பெருக்கானது செல்வந் துன்பமின்பங்
கழித்தோடு கின்றதெக்கால நெஞ் சேகரிக் கோட்டுமுத்தைக்
கொழித்தோடு காவிரிச் செங்கோட னென்கிலை குன்றமெட்டுங்
கிழித்தோடு வேலென் கிலையெங்ங னே முத்தி கிட்டுவதே.       36

கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன் மறவேன் முதுகூளித்திரள்
குண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி யாடவெஞ் சூர்க்கொன்ற ராவுத்தனே.       37

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.       38

உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னிலொன்றா
விதித்தாண் டருள்தருங் காலமுண் டோ வெற்பு நட்டுரக
பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல
மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே.       39

சேல்பட் டழிந்தது செந்துaர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.       40

பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே.       41

நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி நிற்கநிங்குங்
குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான்
பணங்காட்டி மல்குற் குரகுங் குமரன் பதாம்புயத்தை
வணங்லாத் தவைaங்கி தெங்கே யெனக்கிங் ஙன் வாய்த்ததுவே.       42

கவியாற் கடலடைத் தோன் மரு கொனைக் கணபணக்கட்
செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர்
புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப் போற்றி யன்பாற்
குவியாக் கரங்கள் வந்தெங்கே யெனக்கிங்ஙன் கூடியவே.       43

தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே.       44

ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற்
றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப்
பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக்
குருபூத வேலவ னிட்டூர சூர குலாந்தகனே.       45

நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய்
சேயான வேற்கந்த னேசெந்தி லாய் சித்ர மாதரல்குற்
றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவளுமிந்த
மாயா விநோத மநோதுக்க மானது மாய்வயதற்கே.       46

பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த்
தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப்
புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித்
தத்திக் கரைபுர ளும்பர மாநந்த சாகரத்தே.       47

பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய்
முத்திரை வாங்க அறிகின்றி லேன் முது சூர்நடுங்கச்
சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக்
குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.       48

சூரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்சூழாஞ்
சாரிற் கதியின்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த்
தேரிற் கரியிற் பரியிற் றிரிபவர் செல்வமெல்லாம்
நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே.       49

படிக்கும் திருப்புகழ் போற்றுவன் கூற்றவன் பாசத்தினாற்
பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும் பாம்பினின்று
நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை
இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே.       50

மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியபின்
நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந்
தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர்
இலையா யினும் வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.       51

சிகாராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற்
பகரார்வமீ, பணி பாசசங் க்ராம பணாமகுட
நிகராட் சமபட்ச பட்சி துரங்க ந்ருபகுமார
குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே.       52

வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற்
பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற்
றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து
வாடிக் கிலேசித்து வாழ்நாளை வீணுக்கு மாய்ப்பவரே.       53

சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன்
றீகைக் கெனை விதித் தாயிலை யே யிலங் காபுரிக்குப்
போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே.       54

ஆங்கா ரமுமடங் காரொடுங் கார்பர மாநந்தத்தே
தேங்கார் நினைப்பு மறப்பு மறார் தினைப் போதளவும்
ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருக னுருவங்கண்டு
தூங்கார் தொழும்புசெய்யா ரென்செய்வார் யம தூதருக்கே.       55

கிழியும் படியடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி
இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய் நரகக்
குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனூர்க் குச்செல்லும்
வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே.       56

பொருபிடி யுங்களி றும் விளையாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவென் சாற்றிநித்தம்
இருபிடி சோகொண் டிட்டுண்டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாயவுடம்பிதுவே.       57

நெற்றாப் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவேந்த்ர லோக சிகாமணியே.       58

பொங்கார வேலையில் வேலைவிட் டோ னருள் போலுதவ
எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த
வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்
சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.       59

சிந்திக் கிலேனின்று சேவிக்கு லேன்றண்டைச் சிற்றடியை
வந்திக் கிலேனொன்றும் வாழ்த்துகி லேன் மயில் வாகனனைச்
சந்திக் கிலேன் பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன்
புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே.       60

வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே.       61

ஆலுக் கணிகலம் வெண்டலை மாலை யகிலமுண்ட
மாலுக் கணிகலம் தண்ணந் துழாய்மயி லேறுமையன்
காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில்
வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.       62

பாதித் திருவுருப் பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப்
போதித்த நாதனைப் போர் வேலனைச்சென்று போற்றியுய்யச்
சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச்
சாதிதfத புத்திவந் தெங்கே யெனக் கிங்ஙன் சந்தித்ததே.       63

பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய
வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய சூரனைப் போய்
முட்டிப் பொருதசெவ் வேற்பொரு மாள் திரு முன்புநின்றேன்
கட்டிப் புறப்பட டாசத்தி வாளென்றன் கையதுவே.       64

வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங் கயிற்றாற்
கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள்
எட்டுங் குலகிரி யெட்டும் விட் டோ ட வெட் டாதவெளி
மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே.       65

நீர்க்குமிழக்கு நிகரென்பர் யாக்கைநில்லாது செல்வம்
பார்க்கு மிடத் தந்த மின் போலுமென்பர் பசித்துவந்தே
ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார்
வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றெ.       66

பெறுதற் கறிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக்
குறிகிப் பணிந்து பெறக்கற் றிலேன் மத கும்பகம்பத்
தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி
இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே.       67

சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே
ஓடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப்
பாடுங் கவுரி பவுரிகொண்டா டப்பசுபதின்
றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே.       68

தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி யெனைத் தேற் றிய பின்னர்க் காலன்வெம்பி
வந்திப் பொழுதென்னை யென் செய்ய லாஞ்சத்தி வாளொன்றினாற்
சிந்தத் துணிப்பன் தணிப்பருங் கோபத்ரி சூலத்தையே.       69

விழிக்கு துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.       70

துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே.       71

சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.       72

போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும்
வாக்கும் வடிவு முடிவுமில்லாத தொன்று வந்துவந்து
தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே
ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே.       73

அராப்புனை வேணியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த அன்பாற்
குராப்புனை தண்டையந்தாள் தொழல் வேண்டுங் கொடிய ஐவர்
பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால்
இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யௌiதல்லவே.       74

படிக்கின் றிலைபழு நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுருகா வென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.       75

கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென் குன்றெறிந்த
தாடாள னெதென் தணிகைக் குமரநின் றண்டைந்தாள்
சூடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும்
பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே.       76

சேல்வாங்கு கண்ணியர் வண்ண் பயோதரஞ் சேரஎண்ணி
மால்வாங்கி யேங்கி மயங்காமல் வௌfளி மலையெனவே
கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு
நூல் வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு நெஞ்சே.       77

கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண்டாடுவிர்காள்
போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று பூண்பனவுந்
தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும்
ஆர்கொண்டு போவரையே கெடுவீர்நும் மறிவின்மையே.       78

பந்தாடு மங்கையர் செங்கயற் பார்வையிற் பட்டுழலுஞ்
சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா
கொந்தார் கடம்பு புடைசூழ் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்குமரா அமராவதி காவலனே.       79

மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே.       80

தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால்
ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற் கட்டுஞ்
சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே
வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே.       81

தகட்டிற் சிவந்த கடம்பையு நெஞ்சையுந் தாளிணைக்கே
புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட
முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை முட்டவெட்டிப்
பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர பயங்கரனே.       82

தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே
பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமிசை
தாங்கி நடப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல்
வாங்கி யினுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.       83

மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக்
கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய்
பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன்னடைக்கலமே.       84

காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப்புகட்டின்
வீட்டிற் புகுதன் மிகவௌi தேவிழி நாசிவைத்து
மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே
ஓட்டிப் பிடித்தெங்கு மோடாமற் சாதிக்கும் யோகிகளே.       85

வேலாயுதன் சங்கு சக்ராயுதன் விரிஞ் சன்னறியாச்
சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக்
காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென்
பாலா யுதம் வருமோய னோடு பகைக்கினுமே.       86

குமரா சரணஞ் சரணமென் றண்டர் குழாந்துதிக்கும்
அமரா வதியிற் பெருமாள் திருமுக மாறுங்கண்ட
தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங்
கெமராசன் விட்ட கடையோடு வந்தினி யென்செயுமே.       87

வணங்கித் துதிக்க அறியா மனித ருடனிணங்கிக்குணங்
கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும்
பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர்தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலா யுதந் தொட்ட நிர்மலனே.       88

பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை
தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேலெடுத்துப்
போங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு புலம்பவரும்
எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே.       89

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயற்பொழிற் செஙfகோடனைச் சென்று கண்டுதொழ
நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.       90

கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு
வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப்
பொருமா வினைச் செற்ற போர்வேல னைக்கன்னிப் பூகமுடன்
தருமா மருவுசெங் கோடனை வாழ்த்துகை சாலநன்றே.       91

தொண்டர்கண் டண்டிமொண் டுண்டுருக் குஞ்சுத்த ஞானமெனுந்
தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்ட வெஞ்சூர்
மண்டலங் கொண்டுபண் டண்லரண் டங்கொண்டு மண்டிமிண்டக்
கண்டுருண் டண்டர்விண் டோ டாமல் வேல்தொட்ட காவலனே.       92

மண்கம ழுந்தித் திருமால் வலம்புரி யோசையந்த
விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத்
திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற்
கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே.       93

தௌfளிய ஏனவிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும்
வள்ளியை வேட்டவன் தாள் வேட்டிலை சிறு வள்ளைதள்ளித்
துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதக் சொல்லைநல்ல
வௌfளிய நித்தில வித்தார Yமூரலை வேட்டநெஞ்சே.       94

யான்றானெனுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந்
தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க்
கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற்
சான்றாரு மற்ற தனிவௌiக் கேவந்து சந்திப்பதே.       95

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே.       96

சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி
ஆலித் தநந்தன் பணாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து
காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப்
பாலிக்கு மாயனுஞ சக்ரா யுதமும் பணிலமுமே.       97

கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே.       98

காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய்
தாவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித்
தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல்
பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே.       99

இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற்
கெடுதலி லாத்தொண் டரிற் கூட் டியவா கிரௌஞ்ச வெற்பை
அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை
விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.       100

சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன் சண்டைக்கஞ்சார்
துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயணுகார்
கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங் கந்தனன்னூல்
அலங்கார நூற்று ளொருகவி தான் கற்றறிந்தவரே.       101

திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப்
பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வாண வதனங்க ளாறும் மலர்க்கண்களுங்
குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.       102

இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக்
குராப்புனை தண்டையந் தாளரு ளாய் கரி கூப்பிட்டநாள்
கராப்புடக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள் மெச்சும்
பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே.       103

செங்கே ழடுத்த சிவனடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்தெதிர் நிற்பனே.       104

ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள்
சேவிக்க என்று நினைக்கின்றி லேன் வினை தீர்த்தருளாய்
வாவித் தடவயல் சூழுந் திருத்தணி மாமலைவாழ்
சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே.       105

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன்
உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந்
தௌfளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவி
வள்ளிக்கு வாய்த்தவ னே மயிலேறிய மாணிfக்கமே.       106

சூலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங்
காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த
ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன்
வேலுந் திருக்கையு முண்ட நமக்கொரு மெய்த்துணையே.       107

கந்தர் அலங்காரம் முற்றிற்று

3. அருணகிரி நாதர் அருளிய மயில் விருத்தம்

காப்பு
நாட்டை - ஆதி 2 களை

சந்தன பாளித குங்கும புளகித சண்பக கடக புய
        சமர சிகாவல குமர ஷடானன சரவண குரவணியும்

கொந்தள பார கிராத புராதனி கொண்க எனப்பரவும்
        கூதள சீதள பாதம் எனக்கருள் குஞ்ஜரி மஞ்ஜரிதோய்

கந்த க்ருபாகர கோமள கும்ப கராதிப மோகரத
        கரமுக சாமர கர்ண விசால கபோல விதானமதத்

எந்த மகோதர முஷிக வாகன சிந்துர பத்மமுக
        சிவசுத கனபதி விக்ன வினாயக தெய்வ சகோதரனே

(கனபதி தெய்வ சகோதரனே வினாயக தெய்வ சகோதரனே)
---------------

மயில் விருத்தம் - 1
கம்சட்வனி - கண்ட சாபு

சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முக
        சரண யுகளமிர்த்த ப்ரபா
சன்ற சேகர முஷிகாருட வெகுமோக
        சத்ய ப்ரியாலிங்கன

சிந்தாமணிக் கலச கர கட கபோல த்ரி
        யம்பக வினாயகன் முதற்
சிவனைவலம் வரும் அளவில் உலகடைய நொடியில் வரு
        சித்ர கலாப மயிலாம்

மந்தா கினிப் பிரபவ தரங்க விதரங்க
        வன சரோதய கிர்த்திகா
வர புத்ர ராஜீவ பரியங்க தந்திய
        வராசலன் குலிசாயுதத்

இந்த்ராணி மாங்கில்ய தந்து ரக்ஷாபரண
        இகல்வேல் வினோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏரு நீலக்ரீவ
        ரத்னக் கலாப மயிலே

(ரத்னக் கலாப மயிலே, ரத்னக் கலாப மயிலே)
-----------

மயில் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

சக்ரப் ப்ரசண்ட கிரி முட்டக் கிழிந்து வெளி
        பட்டுக் க்ரவுஞ்ச சயிலன்
தகரப் பெருங்க் கனக சிகர சிலம்புமெழு
        தனிவெற்பும் அம்புவியும் எண்

திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
        சித்ரப் பதம் பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
        திடுக்கிட நடிக்கு மயிலாம்

பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுன் கவுரி
        பத்மப் பதங்க் கமழ்தரும்
பகீரதி ஜடில யொகீசுரர்க் உரிய
        பரம உபதேசம் அறிவி

கைக்கு செழும் சரவணத்திற் பிறந்த ஒரு
        கந்த சுவாமி தணிகை
கல்லார கிரியுருக வரு கிரண மரகத
        கலாபத்தில் இலகு மயிலே

(கலாபத்தில் இலகு மயிலே, மரகத கலாபத்தில் இலகு மயிலே)
-------------

மயில் விருத்தம் - 3
சாரங்கா - கண்டசாபு

ஆதார பாதளம் பெயர அடி பெயர மு
        தண்ட முகடது பெயரவே
ஆடரவ முடிபெயர எண்டிசைகள் பெயர எறி
        கவுட்கிரி சரம் பெயரவே

வேதாள தாளங்களுக் கிசைய ஆடுவார்
        மிக்க ப்ரியப்பட விடா
விழிபவுரி கவுரி கண்ட் உளமகிழ விளையாடும்
        விச்தார நிர்த்த மயிலாம்

மாதானு பங்கியெனு மாலது சகோதரி
        மகீதரி கிராத குலிமா
மறைமுனி குமாரி சாரங்கனன் தனிவந்த
        வள்ளிமணி ஞூபுர மலர்

பாதார விந்த சேகரனேய மலரும் உற்
        பலகிரி அமர்ந்த பெருமாள்
படைனிருதர் கடகம் உடைபட நடவு பச்சைப்
        பசுந்தோகை வாகை மயிலே

(பசுந்தோகை வாகை மயிலே, பச்சை பசுந்தோகை வாகை மயிலே)
---------------

மயில் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
        உதித்த தென்ற் அயன் அஞ்ஜவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
        லோகமும் பொற் குவடுறும்

வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந் இரு
        விசும்பிற் பறக்க விரினீர்
வேலை சுவற சுரர் நடுக்கங்க் கொளச்சிறகை
        வீசிப் பறக்கு மயிலாம்

நககோடி கொண்டவுணர் நெஞ்ஜம் பிளந்த நர
        கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
        நந்தனன் முகுந்தன் மருகன்

முககோடி நதிகரன் குருகோடி அனவரதம்
        முகிலுலவு நீலகிரிவாழ்
முருகனுமை குமரன் அறு முகன் நடவு விகடதட
        முரிக் கலாப மயிலே

(விகடதட முரிக்கலாப மயிலே, சிறகை வீசிப் பறக்கு மயிலாம்)
------------

மயில் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்டசாபு

ஜோதியிம வேதண்ட கன்னிகையர் தந்த அபி
        நய துல்ய சோம வதன
துங்க த்ரிசூலதரி கங்காளி சிவகாம
        சுந்தரி பயந்த நிரைசேர்

ஆதினெடு முதண்ட அண்ட பகிரண்டங்கள்
        யாவுங்க் கொடுஞ்ஜ சிறகினால்
அணையுன் தனது பேடை அண்டங்கள் என்னவே
        அணைக்குங்க் கலப மயிலாம்

நீதிமரை ஓதண்ட முப்பத்து முக்கோடி
        நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
        நிர்வியாகுலன் சங்குவாள்

மாதிகிரி கோதண்ட தண்டன் தரித்த புயன்
        மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரி திரு மருகன் முருகன் குமரன்
        வரமுதவு வாகை மயிலே

(முருகன் கலாப மயிலே, வரமுதவு வாகை மயிலே)
--------------

மயில் விருத்தம் - 6
சின்துப்கைரவி - கண்ட சாபு

சங்கார காலமென அரிபிரமர் வெருவுற
        சகல லோகமு நடுங்க
சந்த்ர சூரியர் ஒளித்து இந்த்ராதி அமரரும்
        சஞ்சலப் பட உமையுடன்

கங்காளர் தனி நாடகம் செய்தபோத் அந்த
        காரம் பிறன்டிட நெடும்
ககன கூடமு மேலை முகடு முடிய பசுங்க்
        கற்றை கலாப மயிலாம்

சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
        சித்ரப் பயோதர கிரி
தெய்வ வாரண வனிதை புனிதன் குமாரன்
        திருத்தணி மகீதரன் இருங்க்

கெங்கா தரன் கீதம் ஆகிய சுராலய
        க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்சகிரி
        கிழிபட நடாவு மயிலே

(பசுங்க் கற்றை கலாப மயிலாம்)
----------

மயில் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு

தீரப் பயோததி (க)திக்கும் ஆகாயமும்
        ஜகதலமு நின்று சுழல
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்ஜிகை
        தீக் கொப்புளிக்க வெருளும்

பாரப் பணாமுடி அனந்தன் முதல் அரவெலாம்
        பதைபதைத்தே நடுங்க
படர்ச்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
        பச்சை ப்ரவாள மயிலாம்

ஆர ப்ரதாப புளகித மதன பாடீர
        அமிர்த்த கலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராம வல்லி பர
        மானந்த வல்லி சிறுவன்

கோர த்ரிசூல த்ரியம்பக ஜடாதார
        குருதரு திருத்தணிகை வேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர் பதி
        குடிபுகுத நடவு மயிலே

(பச்சை ப்ரவாள மயிலாம், வைய்யளி வருபச்சை ப்ரவாள மயிலாம்)
---------------

மயில் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

செக்கர் அளகேச சிகரத்ன புரி ராசினிரை
        சிந்தப் புராரி அமிர்த்தம்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
        தீவிஷங்க் கொப்புளிப்ப

சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
        சங்கார கோர நயன
தறுகண் வாசுகி பணா முடி எடுத் உதருமொரு
        சண்டப் பரசண்ட மயிலாம்

விக்ரம கிராதகுலி புனமீத் உலாவிய
        விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழ வினைத்துயர் அறுத்தெனை
        வெளிப்பட உணர்த்தி அருளி

துக்கசுக பேதமற வாழ்வித்த கந்த
        சுவாமி வாகனம் ஆனதோர்
துரக கஜ ரதகடக விகடதட நிருதர் குல
        துஷ்டர் நிஷடுர மயிலே

(சண்ட ப்ரசண்ட மயிலாம்)
--------------

மயில் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு

சிகர தமனிய மேருகிரி ரஜதகிரி நீல
        கிரி எனவும் ஆயிரமுக
தெய்வனதி காளிந்தி என நீழலிட்டு வெண்
        திங்கள் சங்கெனவும் ப்ரபா

நிகர் எனவும் எழுதரிய நேமியென உலகடைய
        நின்ற மா முகில் என்னவே
நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
        நீலக் கலாப மயிலாம்

அகரு மரு மணம் வீசு தணிகை அபிராம வேள்
        அடியவர்கள் மிடி அகலவே
அடல் வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
        அலங்கற்குழாம் அசையவே

மகரகன கோமள குண்டலம் பல அசைய
        வல்லவுணர் மனம் அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண்டிசை அசைய
        வைய்யளி ஏறு மயிலே

(வையாளீ ஏறு மயிலே, நீலக் கலாப மயிலாம்)
-------------

மயில் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

நிராஜத விராஜத வரோதய பராபர
        நிராகுல நிராமய பிரா
நிலாதெழு தலால் அறமிலா நெறி யிலா நெறி
        நிலாவிய உலாச இதயன்

குராமலி விராவுமிழ் பராரை அமரா நிழல்
        குரானிழல் பராவு தணிகை
குலாசல சராசரம் எலாம் இனிதுலாவிய
        குலாவிய கலாப மயிலாம்

புராரி குமரா குருபரா எனும் வரோதய
        புராதன முராரி மருகன்
புலோமஜை சலாமிடு பலாசன வலாரி புக
        லாகும் அயில் ஆயுத நெடுன்

தராதல கிராதர்கள் குலாதவ அபிராம வல
        சாதனன் வினோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படா திகழ்
        ஷடானனன் நடாவு மயிலே

(மயிலே, ஷடானனன் நடாவு மயிலே, ஷடானனன் நடாவு மயிலே)
----------------

மயில் விருத்தம் - 11
மத்யமாவதி

என்னாளும் ஒருசுனையில் இந்த்ர நீலப் போத்
        இலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏரும் ஒரு
        நம் பிரானான மயிலை

பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன்
        பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல்தரு மாசறு வேல்விருத்தம் ஒருபத்தும்
        மாசறு மயில் விருத்தம் ஒருபத்தும்

மன்னான் முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
        வாணி தழுவப் பெறுவரால்
மகராலயம் பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
        வாரிஜ மடந்தை யுடன் வாழ்

அன்னயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
        அமுதா சனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர் பெறுவர் பேர் பெறுவர்
        அழியா வரம் பெறுவரே.

(அழியா வரம் பெறுவரே, அழியா வரம் பெறுவரே)

---------------------------

4. அருணகிரி நாதர் அருளிய சேவல் விருத்தம்

சேவல் விருத்தம் - காப்பு

கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல் கொண்டேழ் இசைமருள
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி குமரன் இதம்பெறு பொற்

செந்தாமரை கடம் நந்தா வனமுள செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு சேவல் தனைப்பாட

வந்தே சமர்ப்பொரு மிண்டாகிய கய மா முகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம் மா மேருவில் எழுதி

பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு பணி சிவ லிங்கம் அதை
பார்மிசை வைத்த வினாயகன் முக்கட் பரமன் துணையாமே

(முக்கட் பரமன் துணையாமே வினாயகன் பரமன் துணையாமே)
--------------

சேவல் விரித்தம் - 1
கம்சத்வனி கண்ட சாபு

உலகில் அனுதினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பர கதி தெரியவே

உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள்மிடி கெட அருளியே

கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடினமுற வரில் அவைகளைக்

கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றா டுமாம்

மலைகள் நெறு நெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடிய அயில் கடவு முருகன்

மகுட வட கிரியலைய மலையுமுலை வனிதை குற
வரிசையின மகள் அவளுடன்

சிலைகுலிசன் மகள்மருவு புயன் இலகு சரவண
சிறுவன் அயன் வெருவ விரகிற்

சிரமிசையில் வெகு சினமொட் அடியுதவும் அறுமுகவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே அறுமுகவன் சேவற்திருத் துவஜமே)
-------------

சேவல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

எரியனைய வியனவிரம் உளகழுது பல பிரம
ராக்ஷதர்கள் மிண்டுகள் செயும்

ஏவல் பசாசு நனி பேயிற் பசாசு கொலை
ஈனப் பசாசு களையும்

கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின் உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்

கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்
கரத் தடர்த்துக் கொத்துமாம்

தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடு கிடென நடனம்

தண்டைகள் சிலம்புகள் கலிங்கலினென சிறிய
சரண அழகொடு புரியும் வேள்

திரிபுரம் அதெரிய நகைபுரியும் இறையவன் மறைகள்
தெரியும் அரன் உதவு குமரன்

திமிர தினகர முருக சரவண பவன் குகன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே குகன் சேவற் திருத் துவஜமே)
-----------------

சேவல் விருத்தம் - 3
சார்ங்கா - கண்டசாபு

கரி முரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை இறுக்கியு முறைத்து

கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடரும் அக்
காலத்தில் வேலு மயிலும்

குருபரக் குகனும் அப்பொழுதில் நட்புடன் வர
குரலொலித் அடியரிடை

குலத்தலறு முக்கிற்சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்

அரிய கொற்கையன் உடற்கருகும் வெப்பகையை உற்
பனமுறைத் தத மிகவுமே

அமணரைக் கழுவில் வைத்தவரு மெய்ப் பொடிதரித்து
அவனிமெய்த் திட அருளதார்

சிவபுரத் அவதரித் தவமுதத் தினமணி
சிவிகை பெற்றினிய தமிழை

சிவனயப் புற விரித்துரை செய் விற்பனன் நிகற்
சேவற்திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே
குருபரன் சேவற்திருத் துவஜமே)
--------------

சேவல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

அச்சப் படக் குரல் முழக்கிப் பகட்டி அல
றிக் கொட்டமிட்ட் அமரிடும்

அற்பக் குறப் பலிகள் வெட்டுக்கள் பட்டுகடி
அறு குழைகளைக் கொத்தியே

பிச்சு சினத்த் உதறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே

பெற்றுச் சுடர் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்

பொய் சித்திரப் பலவும் உட்கத் திரை ஜலதி
பொற்றைக் கறுத் அயில்விடும்

புட்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ் செட்டி சுப்ரமணியன்

செச்சைப் புயத்தன் நவ ரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினை

தெரியவரு பொதிகைமலை முனிவர்க் குரைத்தவன்
சேவற் திருத் துவஜமே

(சேவற்திருத் துவஜமே
சுப்ரமணியன் சேவற்திருத் துவஜமே)
--------------

சேவல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு

தான இடும்புசெயு மோகினி இடாகினி
தரித்த வேதாஅள பூதம்

சருவ சூனியமும் அங்கிரியினால் உதறித்
தடிந்து சந்தோட முறவே

கோனாகி மகவானும் வனாள வனாடர்
குலவு சிறை மீள அட்ட

குலகிரிகள் அசுரர் கிளை பொடியாக வெஞ்ஜிறைகள்
கொட்டி எட்டிக் கூவுமாம்

மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவனற் குருபரன்

வானீரம் அவனியழல் காலாய் நவக் கிரகம்
வாழ்னாள் அனைத்தும் அவனாம்

சேனா பதித் தலைவன் வேதாவினை சிறைசெய்
தேவாதி கட் கரசு கட்

டேனான மைக்கடலின் மீனானவற் கினியன்
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)
-------------

சேவல் விருத்தம் - 6
சின்டுப்கைரவி - கண்ட சாபு

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்து சிவத் அருந்தி

பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள் புரி
பச்சை கலாப மயிலை

துங்கமாய் அன்புற்று வன்புற்ற் அடர்ந்துவரு
துடரும் பிரேத பூத

தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்

மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்ஜி நான்முகி வராகி

மலையரையன் உதவு அமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்

செங்க் கணன் மதலையிடம் இங்குளான் என்னு நர
சிங்கமாய் இரணியனுடல்

சிந்த உகிரிற்கொடு பிளந்த மால் மருமகன்
சேவற் திருத் துவஜமே

(மால் மருமகன் சேவற்திருத் துவஜமே)
-----------

சேவல் விருத்தம் - 7
பீம்பலாச் - கண்ட சாபு

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்

விடு பேய்களே கழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம் பேய்களைத் துரத்தி

பேறான ஏசரவண பவாஏ என்னு மந்திரம்
பேசி உச்சாடனத்தார்

பிடர் பிடித்துக் கொத்தி நகனுதியினால் உற
பிய்ச்சுக் களித் தாடுமாம்

மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி

வாத பித்தம் சிலேர்ப்பனம் குட்ட முதலான
வல்ல பிணிகளை மாற்றியே

சீறாத ஓராறு திருமுக மலர்ந் அடியர்
சித்தத் இருக்கு முருகன்

சிலைகள் உரு இட அயிலை விடுகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(செவற் திருத் துவஜமே
குருபரன் சேவற் திருத் துவஜமே)
--------------

சேவல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

வந்து அர்ப்பரிக்கும் அம்மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர் பில்லி பேய்

வஞ்ஜினாற் பேதுற மகாபூதம் அஞ்ஜிட
வாயினும் காலினாலும்

பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவை செம்
பவளமா அதிகாசாமா

பசும் சிறைத்தலமிசைத் தணியயிற் குமரனை
பார்த் அன்புறக் கூவுமாம்

முந்த் ஆகமப் பலகை சங்காகமத்தர் தொழ
முன்பேறு முத்தி முருகன்

முது கானகத் எயினர் பண்டோ ட் அயிற் கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்

சிந்தா குலத்தை அடர் கந்தா எனப்பரவு
சித்தர்க் கிரங்க் அறுமுகன்

ஜெய வெற்றிவேள் புனிதன் நளினத்தன் முடி குற்றி
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே)
----------

சேவல் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு

உருவாய் எவர்க்கு நினை அரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் உயிரதாய்

உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட்பொருளதாய்

வரும் ஈசனைக் களப முகன் ஆதரித் திசையை
வலமாய் மதிக்க வருமுன்

வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான் முன்
வைகு மயிலைப் புகழுமாம்

குருமா மணித்திரள் கொழிக்கும் புனற் கடக்
குன்றுதோ றாடல் பழனம்

குலவு பழமுதிர் சோலை ஆவினன் குடி பரங்க்
குன்றிடம் திருவேரகம்

திரையாழி முத்தைத் தரங்கக் கை சிந்தித்
தெறித்திடும் செந்தி நகர் வாழ்

திடமுடைய அடியவர் தொழு பழையவன் குலவுற்ற
சேவற் திருத் துவஜமே

(சேவற் திருத் துவஜமே
பழையவன் சேவற் திருத் துவஜமே)
-------------

சேவல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

மகர ஜலனிதி சுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடு கிடு கிடெனவே

மகுடகுட வடசிகரி முகடு பட படபடென
மதகரிகள் உயிர் சிதறவே

ககனமுதல் அண்டங்கள் கண்ட துண்டப்பட
கர்ஜித் இரைத் அலறியே

காரையாழின் நகரர் மாரைப் பிளந்து சிற
கைக்கொட்டி நின்றாடுமாம்

சுகவிமலை அமலை பரை இமையவரை தரு குமரி
துடியிடை அனகை அசலையாள்

சுதன் முருகன் மதுரமொழி உழைவனிதை
இபவனிதை துணைவன் எனதிதய நிலையோன்

திகுட திகுட திதிகுட தகுடதி தகுட திகுட
செக்கண செகக் கண என

திருனடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே, சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)
----------------

சேவல் விருத்தம் - 11
மத்யமாவதி - கண்ட சாபு

பூவிலியன் வாசவன் முர்ரரி முனிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே

பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற அனு
போக பதினால் உலகமும்

தாவுபுகழ் மீறிட நிசாசரர்கள் மாள வரு
தானதவ ஞூல் தழையவே

தாள் வலியதான பல பேய்கள் அஞ்ஜ சிறகு
கொட்டிக் குரற் பயிலுமாம்

காவுகனி வாழைபுளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடன

காரண மெய்ன்யானபரி சீரணவ் அர அசன
கனகமயில் வாகனன் அடற்

சேவகன் இரஜத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முக

சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவற் திருத் துவஜமே

(துவஜமே சேவற் திருத் துவஜமே
சேவற் திருத் துவஜமே)
-------------------

5. அருணகிரி நாதர் அருளிய வேல் விருத்தம்

வேல் விருத்தம் - 1
கம்சத்வனி - கண்ட சாபு

மகரம் அளறிடை புரள உரககண பணமவுலி
        மதியும் இரவியும் அலையவே
வளரெழிலி குடருழல இமையவர்கள் துயரகல
        மகிழ்வு பெறும் அறு சிறையவான்

சிகரவரை மனை மறுகு தொறு ஞுளைய மகளிர் செழு
        செனெல்களொடு தரளம் இடவே
ஜகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி
        திடர் அடைய ஞுகரும் வடிவேல்

தகர மிருகமதம் என மணமருவு கடகலுழி
        தரு கவுளும் உறு வள் எயிறுன்
தழை செவியும் ஞுதல்விழியும் உடைய ஒருகடவுள் மகிழ்
        தரு துணைவன் அமரர் குயிலும்

குகரமலை எயினர்க்குல மடமயிலும் என இருவர்
        குயமொடமர் புரியு முருகன்
குமரன் அறுமுகன் எதிரும் விருது நிசிசரர் அணிகள்
        குலையவிடு கொடிய வேலே

(குமரன்விடு கொடிய வேலே அறுமுகவன் விடு கொடிய வேலே)
--------------

வேல் விருத்தம் - 2
மோகனம் - கண்ட சாபு

வெங்க் காள கண்டர் கை சூலமுன் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்

விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்க் கல்லி
வெல்லா எனக் கருதியே

சங்க்ராம நீஜயித்து அருளெனத் தேவரும்
சதுர்முகனும் நின்றிரப்ப

சயிலமொடு சூரனுடல் ஒருனொடியில் உருவியே
தனி ஆண்மை கொண்ட நெடுவேல்

கங்காளி சாமுண்டி வராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசன

கன்னி நாரணி குமரி த்ரிபுரை பயிரவி அமலை
கெளரி காமாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவானி கார்த்திகை கொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வ

சிறுவன் அறுமுகன் முருகன் நிருதர்க்கள் குலாந்தகன்
செம்பொட்ற்றிருக்கை வேலே

(முருகன் திருக்கை வேலே அறுமுகவன் திருக்கை வேலே)
----------

வேல் விருத்தம் - 3
சாரங்கா - கண்ட சாபு

வேதாள பூதமொடு காளி காளத்ரிகளும்
        வெகுளுறு பசாச கணமும்
வென் கழுகுடன் கொடி பருந்து செம் புவனத்தில்
        வெம்பசி ஒழிக்கவந்தே

ஆதார கமடமுங்க் கணபண வியாளமும்
        அடக்கிய தடக் கிரியெலாம்
அலைய நடமிடு நெடுன் தானவர் நிணத்தசை
        அருந்தி புரந்த வைவேல்

தாதார் மலர்ச்சுவனி பழனிமலை சோலைமலை
        தனிப்பரங்க் குன்றேரகம்
தணிகை செந்தூரிடைக் கழி ஆவினங்குடி
        தடங்க் கடல் இலங்கை அதனிற்

போதார் பொழில் கதிர்க்காமத் தலத்தினை
        புகழும் அவரவர் நாவினிற்
புந்தியில் அமர்ந்தவன் கந்தன் முருகன் குகன்
        புங்கவன் செங்கை வேலே

(கந்தங்குகன் செங்கை வேலே முருகன் குகன் செங்கை வேலே)
--------------

வேல் விருத்தம் - 4
மனோலயம் - ஆதி

அண்டர் உலகும் சுழல எண்திசைகளும் சுழல
        அங்கியும் உடன் சுழலவே
அலைகடல்களும் சுழல அவுணர் உயிரும் சுழல
        அகில தலமும் சுழலவே

மண்டல நிறைந்த ரவி சதகோடி மதி உதிர
        மாணப் பிறங்கி அணியும்
மணி ஒலியினிற் சகல தலமு மருள சிரம
        வகை வகையினிற் சுழலும் வேல்

தண்டம் உடனுங்க் கொடிய பாசம் உடனுங்க் கரிய
        சந்தம் உடனும் பிறைகள்போல்
தந்தமுட ஞும் தழலும் வெங்கண் உடனும் பகடு
        தன்புறம் வரும் சமனை யான்

கண்டு குலையும் பொழுதில் அஞ்ஜலென மெஞ்சரண
        கஞ்ஜம் உதவும் கருணைவேள்
கந்தன் முருகன் குமரன் வண்குறவர் தம்புதல்வி
        கணவன் அடல் கொண்ட வேலே

(கந்தன் அடல் கொண்ட வேலே, முருகன் அடல் கொண்ட வேலே)
--------------

வேல் விருத்தம் - 5
பாகேஸ்ரீ - கண்ட சாபு

ஆலமாய் அவுணருக் அமரருக் அமுதமாய்
        ஆதவனின் வெம்மை ஒளிமீது
அரியதவ முனிவருக் இந்துவில் தண்ணென்ற்
        அமைந்த் அன்பருக்கு முற்றா

மூலமாம் வினை அறுத் அவர்கள் வெம் பகையினை
        முடித் இந்திரர்க்கும் எட்டா
முடிவில் ஆனந்த நல்கும் பதம் அளித் எந்த
        முதண்டமும் புகழும் வேல்

ஏலமா யானையின் கோடதிற் சொரிமுத்தும்
        இன்பணைகள் உமிழு முத்தும்
இனிவாடை மான் மதம் அகிலோடு சந்தனம்
        இலவங்க நறவமாருன்

தாலமா மரமுதற் பொருள் படைத் திடும் எயினர்
        தரு வனிதை மகிழ்னன் ஐயன்
தனினடம் புரி சமர முருகன் அறுமுகன் குகன்
        சரவணக் குமரன் வேலே

(முதண்ட மும்புகழும் வேல், சரவணக் குமரன் வேலே)
------------

வேல் விருத்தம் - 6
சிந்துபைரவி - கண்ட சாபு

பந்தாடலிற் கழங்க் காடலிற் சுடர் ஊசல்
        பாடலினொ டாடலின் எலாம்
பழந்தெவ்வர் கட்கம் துணித் இந்திரர்க் அரசு
        பாலித்த திறல் புகழ்ந்தே

சந்தாரு நாண்மலர் குழல் அரம்பையர்களும்
        சசிமங்கை அனையர்த்தாமுன்
தன்னை அன்பொடு பாடி ஆடும் ப்ரதாபமும்
        தலைமையும் பெற்ற வைவேல்

மந்தாகினித் தரங்க சடிலருக் அரிய
        மந்த்ற்ற உபதேச நல்கும்
வரதேசிகன் கிஞ்சுகச் சிகா லங்கார
        வாரணக் கொடி உயர்த்தோன்

கொந்தார் மலர்க் கடம்பும் செச்சை மாலையும்
        குவளையும் செங்க் காந்தளும்
கூதாள மலரும் தொடுத்தணியு மார்பினன்
        கோலத் திருக்கை வேலே

(தேசிகன் கோலத் திருக்கை வேலே)
----------------

வேல் விருத்தம் - 7
பீம்பளாச் - கண்ட சாபு

அண்டங்கள் ஒருகோடி ஆயினுங்க் குலகிரி
        அனதமாயினு மேவினால்
அடைய உருவிப் புறம் போவதல் லது தங்கல்
        அறியாது சூரனுடலை

கண்டம் படப்பொருது காலனுங்க் குலைவுறுங்க்
        கடியகொலை புரியும் அது செங்க்
கனகா சலத்தைக் கடைந்து முனை யிட்டு
        கடுக்கின்ற துங்க நெடுவேல்

தண்டன் தனுத் திகிரி சங்கு கட்கம் கொண்ட
        தானவான் தகன் மாயவன்
தழல்விழிக் கொடுவரிப் பருவுடற் பற்றலை
        தமனியச் சுடிகையின் மேல்

வண்டொன்று கமலத்து மங்கையும் கடல் ஆடை
        மகையும் பதம் வருடவே
மதுமலர்க் கண்துயில் முகுந்தன் மருகன் குகன்
        வாகைத் திருக்கை வேலே

(வாகைத் திருக்கை வேலே, குகன் வாகைத் திருக்கை வேலே)
----------------

வேல் விருத்தம் - 8
மாண்ட் - கண்ட சாபு

மாமுதல் தடிந்து தண் மல்குகிரி யூடு போய்
        வலிய தானவர் மார்பிடம்
வழிகண்டு கமல பவனத்தனை சிறையிட்டு
        மகவான் தனை சிறைவிடுத்து

ஓமவிருடித் தலைவர் ஆசிபெற்ற் உயர்வானில்
        உம்பர் சொற்றுதி பெற்று நா
உடைய கீரன் தனது பாடல் பெற்றுலகு தனில்
        ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்

சோம கலச ப்ரபா லங்கார தர ஜடா
        சூடி காலாந்த காலர்
துங்க ரக்ஷக த்ரோண கட்க குலிசஞ்சூல
        துரக கேசர மாம்பரச்

சேம வடவாம்புயப் பரண சங்காபரண
        திகம்பர த்ரியம்பக மகா
தேவ நந்தன கஜானன சகோதர குகன்
        செம்பொற்றிருக்கை வேல்

(ஒப்பில் புகழ் பெற்ற வைவேல்)
-------------

வேல் விருத்தம் - 9
துர்கா - கண்ட சாபு

தேடுதற் கரிதான நவமணி அழுத்தியிடு
        செங்கரனை அமுதம் வாய்கொள்
ஜயமளித் அருள் எனக் என உவப்பொடு வந்து
        சேவடி பிடித்த தெனவும்

நீடுமைக் கடல் சுட்டதிற்க் அடைந்த் எழுகடலும்
        நீயெமைக் காக்க எனவும்
நிபிடமுடி நெடியகிரி எந்தமைக் கா எனவும்
        நிகழ்கின்ற துங்க நெடுவேல்

ஆடுமைக் கணபணக் கதிர்முடி புடை எயிற்று
        அடலெரிக்- கொடிய உக்ர
அழால் விழிப் படுகொலைக் கடைய கட்செவியினுக்கு
        அரசினைத் தனியெடுத்தே

சாடு மைப்புயல் எனப் பசுனிற சிகரியில்
        தாய் திமித் துட நடிக்கும்
ஷமரமயில் வாகனன் அமரர்த்தொழு நாயகன்
        ஷண்முகன் தங்கை வேலே

(ஷண்முகன் தங்கை வேலே, மயில் வாகனன் தங்கை வேலே)
-----------------

வேல் விருத்தம் - 10
மத்யமாவதி - கண்ட சாபு

வலாரி அலலாகுலம் இலாத் அகலவே கரிய
        மாலறியு நாலு மறை ஞூல்
வலான் அலைவிலா நசிவிலான் மலைவிலான் இவர்
        மனோலய உலாசம் உறவே

உலாவரு கலோல மகராலய ஜலங்களும்
        உலோகனிலை நீர்னிலை இலா
ஒலாவொலி நிசாசரர் உலோகமதெலாம்
        அழல்உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலா வினொதவா சிலிமுகா விலொச
        நா சின சிலா தணிவிலா
சிலாமலர் எலா மதிய மோதி மதி சேலொழிய
        சேவக சராப முகிலாம்

விலாச கலியாண கலை சேர பசு மேலைமுலை
        மேவிய விலாச அகலன்
விலாழி யினிலாழி அகல் வானில் அனல் ஆரவிடு
        வேழம் இளைன்யன் கை வேலே

(வேலே, வேழம் இளைன்யன் கை வேலே
வேழம் இளைன்யன் கை வேலே)

-------------

This webpage was last revised on 4 August 2021.
Feel free to send the corrections by email to the webmaster (pmadurai@gmail.com).