Tamil Works of Contemporary Sri Lankan Authors - IV
mOkavAcal - a collection of short stories by ranjcakumAr
in Tamil Script, unicode/utf-8 format

மோகவாசல்: ரஞ்சகுமாரின் சிறுகதைகள்




Etext Preparation : Mr. R. Padmanabha Iyer, London, UK & Dr. N. Kannan, Kiel, Germany (input);
Mr. Ramanitharan Kandiah, New Orleans, USA (Proof-reading)
Web version: K. Kalyanasundaram, Lausanne, Switzerland

This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
To view the Tamil text correctly you need to set up the following:
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP).

ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape >4.6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view.
. In case of difficulties send an email request to kalyan@geocities.com

© Project Madurai 1999-2000
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted
to preparation of electronic texts of tamil literary works and to
distribute them free on the Internet. Details of Project Madurai are
available at the website http://www.tamil.net/projectmadurai

You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.


mojha vasal
a collection of short stories in Tamil---by ranjakumar (age: 30+)
address: kayalakam, mathony, karaveddy west, karaveddy, sri lanka
first edition: 1989 july, published by yathartha, point pedro, printed at vijaya press, jaffna, offset plate makers: kalaimagal printo graph, jaffna, illustrations: thaya, vasuki jeganathan, arunthathy sabanathan-; front cover: veera santhaanam (thanking to baalam); back cover: ramani (thanking to anandhy).

மோகவாசல்_ரஞ்சகுமாரின் சிறுகதைகள் (வயது: 30+)
விலாசம்:- கயலகம், மத்தொனி, கரவெட்டி மேற்கு, கரவெட்டி, இலங்கை_
முதல் பதிப்பு: 1989 ஆடி_ பிரசுரிப்பாளர்கள்: யதார்த்தா, பருத்தித்துறை, அச்சுப்பதிப்பு: விஜயா அழுத்தகம், யாழ்ப்பாணம்_ எதிர்ப்படிவுமுறை , தகட்டுவடிவமைப்பு: கலைமகள் பிரின்ரோ கிரா·ப், யாழ்ப்பாணம், விளக்கப்படங்கள்: தயா, வாசுகி ஜெகநாதன், அருந்ததி சபாநாதன், முன்புற அட்டை: வீரசந்தானம் (நன்றி_பாலம்); பின்புற அட்டை: ரமணி (நன்றி_ஆனந்தி).


1. சுருக்கும் ஊஞ்சலும்


வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு முன்னால் 'கண்டிவீதி' வி¡¢கிறது. வீதியின் இடது ஓடத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊ¡¢ன் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தொ¢கிறது. அதன்மேல் இந்த வெளியிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு கரைகின்றன. அந்தக் காக்கைகளின் சத்தம் சன்னமாக, காதுக்கு சிரமந்தருவதாக இருக்கிறது. சுறுசுறுப்பாக, அங்குமிங்கும் பறந்து தி¡¢ந்து, இரைதேடும், இந்தக் காக்கைகள் கூட ஓ¡¢டத்தில் சோம்பியிருக்கின்றனவே! அவ்வளவு வெயிலா?

கடைவாசலுக்கு நேரே றோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி. அக்கம்வேலிக்கும் றோட்டுக்கும் இடையில் ஒரு பசுமாடு படுத்துக் கொண்டு அசைபோடுகிறது. பக்கத்தில் ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கண்கள் அரைத்தூக்கம் போலச் செருகிக்கொள்ள, கால்களைப் பரப்பிக் கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போதும் 'ஆவ், ஆவ்' என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே? இன்று இதற்கு என்னவந்தது? ஆறுதலாகப் படுத்திருக்கிறதே! கன்னத்தோலினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித்தொ¢ய மெதுவாக இது அசைபோடுவதைப் பார்க்க, ஒரே சினமாக இருக்கிறது.

கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி, அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும், சற்றுப் பொ¢தாகவும் காட்சியளிக்கிறது. 'அப்போதிக்கா¢ ஆசுப்பத்தி¡¢'. வயல் வெளியில் நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக- இன்னசெடி என்று அடையாளம் காண முடியாத நிலையிலிருந்த-சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலங்கிச் சாய்கிறது. ஆசுபத்தி¡¢ விறாந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு, வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சுருட்டுப் பிடிக்கிறாரா இல்லையா?, என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக எனக்குப்படுகிறது.

ஆசுப்பத்தி¡¢க்கு இடதுபுறம் கொஞ்சத் தூரம் தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ் தொ¢கிறது. குவாட்டஸின் முன்விறாந்தையில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக்கொடி கட்டப்பட்டு அதில் சிலதுணிகள் காய வி¡¢க்கப்பட்டிருக்கின்றன, சுவரோடு சாய்ந்து 'சாயும் இடம்' இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. காற்றில் ஆடும் துணிகள் மெதுவாக, ஆடிக்களிக்கவே பி¡¢யமற்றவைபோல, பலவந்தமாக ஆட்டப்படுவதாக எனக்குப்படுகிறது. அனேகமான வேளைகளில் அந்தக் கதிரையில் கனகசிங்கம் கால்மேல் கால்போட்டுக்கொண்டு, தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு, இருப்பதைக் காணலாம். இப்போ அதுவெறுமே வெறிச்சோடிக் கிடக்கிறது.

கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த்தால் யன்னலினூடாக 'றெயில்வேலைன்' தொ¢கிறது. அதை ஒட்டினாற்போல பற்றையும் மரமுமாக ஒரே காடு. அந்தப் பச்சைக்குமேல் நிர்மலமான நீல ஆகாயம். பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே. வானத்தைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. வெயில் கண்ணைக் குத்துகிறது. அப்பாடா, வெயில்! இந்த வெயில் நாசமாய்ப்போக!

முன்புறம் இப்படிக் கிட்டவாகக் காடு இல்லை. ஆசுபத்தி¡¢, குவாட்டஸ் எல்லாம் தாண்டி பொ¢ய வயல்வெளி. 'லக்ஷபான'விலிருந்து 'யாழ்ப்பாணக்குடா'வுக்கு 'கரண்ட்'டைச் சுமந்துசெல்லும் நீள நீளமான கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் பிரமாண்டமான 'போஸ்ட்' களும் அவ்வயல்வெளியை ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீலநிறமாகத்தான் காடு தோன்றுகிறது. எங்களூ¡¢ல் தொலைதூரப் பனைகள் காட்சியளிப்பதும் ஏறத்தாழ இதே காட்சிதான்.

மேலே கூரைக்குத் தகரம்தான் போட்டியிருக்கிறார்கள். அதனால் ஒரே வெக்கையாக அடிக்கிறது. அடிக்கிற வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எ¡¢ந்து தள்ளுகிறது. போதாத குறைக்கு பின்னாலிருந்து 'பொய்லர்' சூடு முதுகை எ¡¢க்கிறது. தண்ணீர் கொதிக்கும் 'தள தள' சத்தம் வேறு காதுக்கு நாராசமாக இருக்கிறது.

கண்டி வீதியில் செருப்புச்சத்தம் 'சரசர' என கையில் பிரப்பங் கூடையுடன் கருணே நடந்து போகிறான். அதற்குள் 'போத்தில்'கள் இருக்கும். போகிற அவன் மெல்லிதாக என்னைப்பார்த்துச் சி¡¢த்துக்கொண்டு போகிறான். வெயில் வெக்கையில் கண்ணையும், முகத்தையும் இடுக்கிக்கொண்டு, அவன் வேண்டா வெறுப்பாகச் சி¡¢ப்பதைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

இப்படியே அவன் போகிற பாதையில் சிறிதுதூரம் போனால் 'முதுபண்டா'வின் தச்சுவேலைக் கொட்டிலுக்கு முன்னால் சிறுபற்றைகளுக்கு இடையில் உள்ள பழுதடைந்த கிணற்றின் 'மிதி'யில் அவன் இந்தப் பிரப்பங்கூடையுடன் உட்கார்வதைக் காணலாம். 'இரண்டு ரூபா, ஐந்து ரூபா' பேர்வழிகள் அடிக்கடி அவனிடம் வருவார்கள். ஒருதடவை போலிசிடம்கூட அகப்பட்டிருக்கிறான்.

அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வந்தால் நான்கொஞ்சம் தூங்கலாம். வர இரண்டுமணியாவது ஆகும். இப்போது நேரம் பன்னிரண்டிற்குள்தான் இருக்கும். நேரம் பார்ப்பதற்கு கடை மணிக்கூட்டை நம்ப முடியாது.

உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துருவுகிற சத்தம் கேட்கிறது. யாரோ இரண்டு பேர் துருவுகிறார்கள் போல இருக்கிறது. யாராக இருக்கும்? சமையல்காரனும் சி¡¢பாலாவும்தான். சிவலிங்கம்தான் இங்கே குழங்கையை முண்டு கொடுத்துக்கொண்டு மேசையில் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறானே. சின்னவன் அப்பாவுடன் சந்தைக்குப் போய்விட்டான்.

இது ஒரு சனியன்பிடித்த ஊர். சந்தைக்குப் போவதானாலும் எட்டுமைல் தூரம் பஸ்ஸில் போகவேண்டும். எனக்கு இப்போதுள்ள நிலையில் பஸ்ஸைப்பற்றி நினைக்கவே எ¡¢ச்சலாக இருக்கிறது. அதிகம் ஏன்? கக்கூசுக்குப் போவதாக இருந்தாலும் பின்னால் ரெயில்வேலைனைக் கடந்து, காட்டுக்குள்தான் போக வேண்டும். எனக்கு ரெயில்வேலைனைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆயினும் என்ன செய்வது? இயற்கைக் கடனை நிறைவேற்ற நானும் ரெயில்வேலனைக் கடந்துதான் தீரவேண்டும்.

நெடுக, இப்படிக் காட்டையும் றோட்டையும் பார்த்துக் கொண்டிருக்கச் சலிப்பாகத்தான் இருக்கிறது. இந்த ஒருமணி நேரமாக றோட்டிலும் வாகன நடமாட்டங் குறைவு. அப்படியிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப்பாக இருக்கும்.

யாராவது பேச்சுத்துணைக்கிருந்தால் பரவாயில்லை, சிவலிங்கத்தை கூப்பிடலாமா? வேண்டாம். பாவம்! அவன் இரவு படுக்கப் போனபோது நேரம் இரண்டு மணியிருக்கும். அதுதான் இப்போது தூங்கி வழிகிறான்.

'ஐஸ்' மாதி¡¢க் குளிராக ஏதாவது குடித்தால் நல்லது. சோடா....வேண்டாம்...செலவுகூட, இளநீர்....குடிக்கலாம்... என்ன செய்வது? கத்திஎடுக்க சிவலிங்கத்தைத்தான் அருட்ட வேண்டியிருக்கிறது.

"சிவலிங்கம்...சிவலிங்கம்....டேய்"

அவன் மெல்ல அருண்டு விழிக்கிறான். சிவந்த கண்களைக் கைகளால் தேய்த்து, கொட்டாவி சோம்பல் முறித்துக் கொள்கிறான்.

"எண்ண, சிண்ண மொதலாளி"

"குசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக்கொண்டந்து ஒரு இளனி வெட்டித்தா...போ"

இவன் அரைச் சிங்களவன். தாய் சிங்களத்தி, தகப்பன் இந்தியத்தமிழன். அதுதான் தமிழ்ப் பெயரும் சிங்களக் கதையுமாக இருக்கிறான்.

அதோ, அந்தப்பெயர்ப்பலகையருகில் கனகசிங்கம் வருகிறார். எங்கோ, இந்த வெயிலில் போய்விட்டு களைத்துவிழுந்து, வியர்த்தொழுக 'டியூட்டி யூனிபோம்' உடன் வருகிறார். இந்த 'போறஸ்ற் காட்' வேலைகூடச் சிரமந்தான். காட்டுக்குள்ளே தனியாக அலையவேண்டும். ஆனால் கனகசிங்கம் அப்படியல்ல. குவாட்டஸிலேயே அந்தக் கதிரையில் இருந்துகொள்ளுவார். எப்போதாவது ஒருநாள் தான் அத்திப்பூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம்பில் ஏறும்.

சிவலிங்கம் குசினிக்குள்ளிருந்து நன்குசீவிவெட்டிய இளநீருடன் வருகிறான். சிங்களவனாகியபடியால் 'குறும்ப' வெட்டிப் பழகிய கையால் நல்ல அழுத்தமாக வாய்பொருத்திக் குடிக்க ஏதுவாக இளநீர் வெட்டித் தருகிறான். ஆனால் இதைத் தூக்கிக் குடிக்கவே பொ¢ய சோம்பலாக இருக்கிறது, எனக்கு!

கனகசிங்கம் நேரே இங்கேதான் வருகிறார். சிகரட் வாங்கவாக இருக்கும். வாசலில் ஏறும்போதே "சூ....சா¢யான வெயில்" என்று அலுத்தபடியேதான் வருகிறார்.

"போறேசஸ் ஒண்டு தா...தம்பி"

இலாச்சியை இழுக்கவே அலுப்பாக இருக்கிறது. வேண்டா வெறுப்பாக சிகரட் விற்பனை நடத்துகிறேன். அவர் சிகரட்டைப் பற்றவைக்க சதா எ¡¢ந்து கொண்டிருக்கும் விளக்கண்டை போகிறார். அது அணைந்துபோயிருக்கின்றது.

"விளக்கு நூந்துபோச்சுத்தம்பி"

சிவலிங்கத்திடம் சொல்லிக் கொளுத்துவிக்கலாம்தான். அவன் பாவம்! மீண்டும் மேசையில் தூங்கி வழிகிறான். எனக்கும் எழச்சோம்பலாக இருக்கிறது.

"இப்படி உள்ளைவந்து பொயிலர் நெருப்பிலை பத்துங்கோ. அல்லது உப்பிடி உந்தக்கூரைத் தகரத்திலை பிடியுங்கோ எ¡¢யும்"

என்னுடைய நகைச்சுவைக்காக ஏதோ கடமைக்காகச் சி¡¢ப்பதுபோல் சி¡¢த்துவிட்டு, சிகரட்டைக் கொழுத்திக்கொண்டு மெதுவாக குவாட்டஸை நோக்கி நடக்கிறார் அவர்.

மீண்டும் வெறுமை. ஒரே எ¡¢ச்சலாக இருக்கிறது. ரேடியோவைத் திருகுகின்றேன். ஏதோ கி¡¢க்கட்நேர்முக வர்ணனை நடக்கிறது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் 'டெஸ்ட்மச்' நடப்பதாக கனகசிங்கம்தான் நேற்றுச் சொன்னார். "வெங்கட்ராகவனின் பந்துவீச்சுக்கு யாரோ ஒரு நியூசிலாந்துக்காரன் பெளண்டா¢ அடித்ததாக" அறிவிப்பாளன் அறிவிக்கிறான். வெங்கட் தமிழன். ஒரு தமிழனின் பந்துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானாம் பெளண்டா¢! தமிழனுக்குச் சோம்பலா? சே... இந்த அறிவிப்பாளனின் கரகரத்த, சோம்பலான குரலைக் கேட்கவே பற்றிக் கொண்டு வருகிறது. ரேடியோவை வெறுப்புடன் மூடுகிறேன்.

* * *

தூரத்தே யாரோ மஞ்சள்நிற ஜப்பான் குடையுடன் வருகிறார்கள்.

ஜப்பான் குடைதான் இப்போது 'பாசன்'

பெண்கள்தான் அதிகமாக ஜப்பான்குடை பாவிக்கின்றார்கள். எதிரே வருவதுகூட ஒரு பெண்ணாக இருக்கலாம் இருக்கலாம் என்ன? பெண்ணேதான்.

மஞ்சளுக்குக் கீழே சிறிது இடைவெளிவிட்டு மெல்லிய...மிக மெல்லிய சிவப்பாகத் தொ¢கிறது. றோட்டின் கறுத்தப் பின்னணியில் மஞ்சளும் மென்சிவப்பும் நல்ல எடுப்பாக இருக்கிறது. அந்த மென்சிவப்பு, அப்பெண்ணின் ஆடையாக இருக்கும்.

மினிகவுண்தான் இப்போது 'பாசன்'

இவளுக்கு தூரத்தேநின்று பார்க்க இது அழகாகத்தான் இருக்கிறது. கிட்டவர நன்கு பார்க்கலாம். முகத்தையும் பார்க்கலாம்.

அழகாக இருப்பாளோ? அழகாகத்தான் இருப்பாள். அதையே நான்....நான்மட்டுமென்ன, எல்லோரும் விரும்புகிறார்கள்.

இந்த வெயிலில் நடந்து வருகிறாளே! பாவம்! சுடாதா?

குதிச்சப்பாத்து போட்டிருப்பாள்.

குசிச்சப்பாத்துத்தான் இப்போது 'பாசன்'

குதிச்சப்பாத்துப் போட்டால் வேகமாக நடக்கமுடியாது. அதுவும் நல்லது. சில பெண்களுக்கு அதுவே ஆறஅமர.... நிதானமாக நடக்கப் பழக்குகிறது.

இந்தப் பெண்ணின் நடை நன்றாயிருக்கிறது. மிக நன்றாயிருக்கிறது. அன்னநடை என்பார்களே! அதுமாதி¡¢.

இப்போது அவள் அந்தப் பெயர்ப்பலகைக்குக்கிட்ட வந்துவிட்டாள். நல்ல நிறம், நான் பெண்கள் எந்தநிறத்தில் இருக்க வேண்டுமென எண்ணுவேனோ? அந்த நிறம்.

இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால்....? நான்றாகப் பார்க்கலாம்.

இந்த நேரத்தில் எங்கே வருகிறாள்? ஆகப்பத்தி¡¢க்காக இருக்கும். இந்த அழகான பெண்ணுக்கு ஆசுப்பத்தி¡¢க்குப் போகுமளவுக்கு நோயா? சீ...கூடாது. அப்படியிருப்பதை நான் விரும்பவில்லை.

இப்பொழுதுதான் நன்றாகக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. குழுகுழு கண்ணாடி மாட்டியிருக்கிறாள். சிவந்த முகத்திற்கு கறுத்தக் கண்ணாடி எடுப்பாக இருக்கிறது.

ஆமாம், இந்தச் சனியன் பிடித்த ஊ¡¢ல்கூட இப்படிப் பெண்கள் இருக்கிறார்களா? ஏன் இருக்கக் கூடாது? ஒருவேளை இவர்கள் இப்பெண்ணின் குடும்பத்தினர்-என்னைப்போல வெளியூர்க்காரர்களாக இருக்கலாமல்லவா? இங்கே 'பாம்' எதாவது....

என்ன! இவள் கடைக்கல்லவா வருகிறாள்? நான் சற்று உஷாராக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் எப்படி? அதுவும் ஒரு அழகான பெண்ணுக்கு முன்னால்.

கடைவாசல்படி கொஞ்சம் உயரம். அதில் ஏறும்போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்கப் பார்க்கிறது. வாசல் தூணைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக் கொள்கிறாள்,

"கவனம்....பாத்துவரக்கூடாதா"

"It's alright thank you"

ஆகா! மதுரமான குரல்...இவள் 'இங்கிலீசு' தொ¢ந்தவள். நானும் எனக்குத் தொ¢ந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டும்.

"What do you want?"

"சோடா ஒண்டு தாங்க".

சோடா என்று சொல்லும்போது சாயம்பூசிய, சிறிய அளவான உதடுகளின் பின்னணியில் முத்து வெள்ளைப் பற்கள்... வடிவமே முத்துப்போலச் சிறிதான பற்கள். நன்றாக இருக்கின்றன. சோடா கொடுக்க சிவலிங்கத்தை எழுப்பலாமா? வேண்டாம் நானே கொடுக்கலாமே! எழுந்த வேகத்தில் பாதி திறந்திருந்த இலாச்சி தொடையைப் பதம்பார்க்கிறது. கனகசிங்கம்...அவரால்தானே இலாச்சி திறக்கவேண்டி வந்தது....அவர் பாழாய்ப்போக...

"அம்மாடி" என்றவாறு திரும்ப உட்கார்ந்து கொள்கிறேன். அவள் முன்னாலிருந்த 'சோடா ராக்' கிலிருந்து சோடா ஒன்றை எடுக்கிறாள்.

"பரவாயில்லை opener ஐத் தாங்க...நானே உடைக்கிறன்"

எடுத்துக் கொடுக்கிறேன். நல்லகாலம் அது கையெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. இல்லாவிடில் அவள் முன்னாலேயே நொண்டி...நொண்டி...சீ...வெட்கக்கேடு.

சோடா குடிப்பதற்காகப் போலும், கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள். நல்ல பொ¢ய விசாலமான கண்கள். உதட்டுக்குச் சாயமிட்டவள், கண்ணுக்கு மையும் இட்டிருக்கலாமே! இட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

"எவ்வளவு காசு...."

"ஒண்டிருபது தாங்க...."

காசு தரும்போது தான் கவனிக்கிறேன். கையில் மெல்லிய பூனை மயிர்கள். அது கறுப்பாக இல்லாமல் உடலின் நிறத்திலேயே இருக்கிறது. அதுவும் ஒரு அழகுதான்.... காலிலும் இருக்கும், எட்டிப்பார்க்கலாமா? சீ.... அவள் என்ன நினைத்துக் கொள்வாள்...?

நான்தான் அவளையே பார்க்கிறேனே! அவள் என்னைக் கவனிப்பதாகவே காணோம்...

முகத்தைக் கைக்குட்டையால் ஒற்றித்துடைக்கிறாள். திரும்ப அதை மடிக்கும்போது...நான் நினைத்து நடக்கிறது. கணநேரம் தான். கண்களைத் திரும்பிக்கொள்கிறாளே! ஆமாம், இப்படியான சந்தோச சமாச்சாரங்கள் எல்லாம் கணநேரம் தானோ?

இன்னும் நிற்கிறாள். ஏதாவது வேறு தேவைகளும் இருக்கும்...

"வேறை என்ன வேணும்?"
"வெறும் Soda bottle கொடுத்தா....நல்லது"
ஓ...அது நாங்கள் விக்கிறதில்லையே"
"Oh...I See"

"எண்டாலும் பரவாயில்லை..உதிலை கிடக்கிற போத்தலை எடுங்க. இன்னும் ஒரு ரூபா தாங்க"

அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒரு தடவை மின்வெட்டு, இப்போது அவள் மெதுவாக சி¡¢க்கிறதா எனக்குப்படுகிறது.

* * *

திடீரென பெயர்தாங்கிப் பலகையில் இருக்கம் காக்கைகள் உச்சஸ் தாயியில் கத்துகின்றன. அவை ஆரவாரமாக....மகிழ்ச்சிப்பெருக்குடன் கரைவதாக எனக்குப் படுகின்றது. அவை இப்போ நெருக்கமாக அமர்ந்து ஒன்றைஒன்று கொத்தியும் சீண்டியும் விளையாடுகின்றன.

அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது. அசைபோடுவதை நிறுத்திவிட்டது. புல்மேய ஆயத்தமாகின்றதா?... முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி விரட்டுகின்றது. அப்படித் தான் இருக்கவேண்டும் எதி¡¢யை அடித்து ஓட....ஓட விரட்ட வேண்டும்.

கன்றுக்குட்டி துள்ளித் துள்ளி தாய்க்குக்கிட்ட வருகிறது. தாயைமுட்டி மோதிப் பால் குடிக்கிறது. அப்படித்தான் இருக்கவேண்டும். சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக...கோலாகலமாக வாழவேண்டும். ஓ! வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமானது..

அந்தப்பெண் ஆசுப்பத்தி¡¢க்கேதான் போகிறாள். பரமசிவம் யோகத்திலிருந்து விழித்தெழுகின்றார். போகத்திற்கா? சி. என்ன அசிங்கமான எண்ணம்... சுருட்டு 'புக்..புக்... என்று புகை கக்குகிறது. அந்தப்புகை அப்படியே மேலெழுந்து...மேலே...இன்னும் மேலே போய்க்கரைந்து காற்றோடு ஐக்கியமாகின்றது. அப்படிக் கரைவதைப்பார்க்க, எனக்கும் நான் அவ்வாறு மேலே மேலே போக வேண்டும் போல் இருக்கிறது.

குவாட்டஸ் முன்விறாந்தையில் கதிரையின் மேல் வழமையான பாணியில் கனகசிங்கம் உட்கார்ந்திருக்கிறார். கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன்பப் பெருக்கால் கனகசிங்கத்தின் முகத்தில் மெல்ல விசிறுகின்றன. ஓரொரு சமயம் அவா¢ன் முகத்திலேயே செல்லக்குழந்தையின் விளையாட்டு அடிகள் போலப்பட்டு விலகுகின்றன. அவர் முகத்தில் புன்னகை. அப்படித்தான் இருக்கவேண்டும்.... சதாநேரமும் சி¡¢த்த முகத்துடன் அதைவிட்டு விட்டு கடுவன் பூனைமாதி¡¢ கடுகடுத்த முகத்துடனா?

வெயில் இப்போதும்கூட சுள்ளென்று அடிக்கிறது. இந்த வெயில் இல்லாவிட்டால் நானில்லை... எதிரே தொ¢யும் காடு இல்லை.... தூங்கிவழியும் இந்தச் சிவலிங்கம் இல்லை.... இந்தக் கடையில்லை.... அந்தக் கன்னியில்லை...ஒன்றுமே இருக்காது. வெயில் வேண்டும், நன்கு எறித்து, எ¡¢ந்து தள்ளவேண்டும்.

கருணே செருப்புச் சத்தம் 'சரசர' க்கக் கடைக்கு வருகிறான். ¡£ குடிக்கவா? வரட்டுமே! ஒரே வீச்சில் ஒன்பது ¡£ அடிக்கமாட்டேனா நான்! அவனும் வெகு உற்சாகமாக இருக்கிறான். சீட்டி கூட அடித்துக்கொள்கிறானே! கைச்சரக்குத் தீர்ந்துவிட்டதா? காசு சேர்ந்து விட்டதா? சந்தோசம் கொண்டாட வருகிறானா...?

அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வராவிட்டால் போகட்டும்! நானிருக்கிறேன், கடையை நடத்த. வேலை செய்வது ஒன்றும் பொ¢ய கஷ்டமான கா¡¢யமில்லையே!

ரெயில்வேலைனின் கூட்ஸ்ஒன்று போகிறது. கடையே அதிருகிறது...கடை அதிர...கடையில் நிலம் அதிர...நான்..அதிர...என்னோடு பொய்லர் அதிர... எதிரே வீதி அதிர... ஆசுபத்தி¡¢, அந்தப் பெண் அதிர... ஷோக்கேஸ்கள் அதிர...சிவலிங்கம் அதிர... அதிர... இந்த அதிர்வுகள்கூட இவ்வளவு லயத்தைத் தேக்கிவைத்திருக்கின்றனவே!

இந்தச் சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்கொள்கிறான். அவனது சோம்பல் முறியவில்லையோ? சனியன் பிடித்தவன். மத்தியான வியாபாரநேரம் தூங்கிவழிகிறானே!

"சிவலிங்கம்...டே! சிவலிங்கம், என்ன நெடுகத் தூங்கிவிழுகிறாய்? போ..போய் முசுத்தைக் கழுவிக்கொண்டுவா...இப்பிடிநெடுகத் தூங்கிவழிஞ்ச வாறவனும் சாப்பிடாமல் திரும்பிப் போடுவான்..."

ரெயில்வே லைனைக்கடந்து ஒருவன் போகிறான், காலைக் கடனை மத்தியானத்தில் கழிக்க, கூட்ஸ்போன கையோடே போகிறான். இவ்வளவு நேரமும் கூட்ஸ் போகட்டும் என்று காத்து நின்றானா? பயந்தாங்கொள்ளி! பயம்...என்னபயம் சாவதற்கு?....ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு?

இருந்தாற்போல றோட்டில் ஒருபஸ் போகிறது. வேகம் அவ்வளவாக இல்லை. ஆமைவேகத்தில் உருட்டுகிறானே பஸ்ஸை! அடே! சோம்பேறிப் பயலே பஸ்ஸை வேகமாக, உன்னால் முடிந்தவரை வேகமாக ஓட்டு! பஸ்ஸைப் பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது. றோட்டில் சுறுசுறுப்பு விஷம்போல் ஏறுவதாக எனக்குத் தோன்றுகிறது.

ரேடியோவைத் திருகுகிறேன். சத்தம்...ஏகச்சத்தம். யாரோ ஸிக்சர் அடித்துவிட்டானாம்! யார் பந்து வீசுவது? மடயன். ஸிக்சர் அடிக்கும்படியாகவா பந்து வீசுவது? "வெங்கட்ராகவனின் பந்துவீச்சு" என்ன அறிவிப்பாளன் சொல்கிறான். அவனுடைய குரலில் மிகுந்த உற்சாகம் தொளிக்கிறதா? அவனுடைய குரலில் மிகுந்த உற்சாகம் தொனிக்கிறதா? அவனுடைய குரலையும் மீறி சனங்கள் கத்துகிறார்களே! உயரேபோன பந்தைப் பார்த்து குதூகல வெறியுடன் அவர்கள் குரவையிடுகிறார்களா? கத்துங்கள் மகாசனங்களே! கத்துங்கள்! உலகமெங்கும் உற்சாகத்தை விதைக்கக் கத்துங்கள்!

வெங்கட் தமிழன்! தமிழன் என்றால் என்ன? எந்தக் கொம்பனாக இருந்தால் என்ன? திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும். ஸிக்சர் அடித்தவனுக்கு ஜே!




2. கபரக்கொய்யாக்கள்

சாதாரணமான எல்லா ஊர்களையும் போலவே இங்கும் ஓர் அரசமரம். நடந்து போகிறவர்களின் தலைகளை வருடிக்கொடுப்பதைப்போல, கிளைகளைத் தாழ்ந்து தொங்கவிட்டபடி.

கீழே அழகிய தூய பீடமொன்றில் கண்மூடி ஏதோ அதிசய உலகத்தை நிஷ்டையில் தா¢சிக்கும் புத்தனின் சிலை.

ஒரு பள்ளிக்கூடம், ஏதோவொரு 'பாலிக மஹா வித்தியாலய' என்று பெயர். பையன்களும்கூடப் போனார்கள்!

சிறு பஸ் நிலையத்திலிருந்து கடைத்தெரு தொடங்குகிறது. அங்கிருந்து 'சறுக்கீஸ்' விட்டால் அந்தத்திலிருக்கிற கருவாட்டுக் கடையில் முடிவடைகிறமாதி¡¢ லாவகம் கொண்டு வளைந்து போகிற தெரு. பளபள வென்றிருந்தது. இருபுறமும் புகையிலையும், வெற்றிலையும், அ¡¢சி, பருப்பு, கருவாடு விற்கிற கடைகள். சங்கக்கடை. 'சாளி'யின் சாப்பாட்டுக் கடை, ரெக்கோடிங் பார் ஒன்றுமிருந்தது. எனக்கு சுருட்டுக்கடையில் மூச்சு வாங்குகிறபடிக்கு வேலை; நிமிர்ந்து பார்க்க நேரமில்லாத வேலை!

ஓட்டு வீடுகள் வலு குறைவு. களிமண்ணும் நெறியற்றுப் போன காட்டுக் கம்புகளும் கொண்டு சுவரெழுப்பி, தென்னங்கீற்றுகளால் வேய்ந்த வீடுகள், விசாலமாகவே இருந்தன.

பொலிஸ் கிடையாது. உப தபாற்கந்தோருண்டு. வெள்ளியும் புதனும் முறை வைத்துக் கூடுகிற சந்தை. அரசமரத்துக்குப் பின்னால் கூடாரங்களிட்டு கூறி விப்பார்கள். வாயகன்ற மண்பானைகளில் காய்ச்சிய தேங்காயெண்ணெய்யும், எருமைத்தயிரும் காற்றில் சுகந்தத் தாதுகளைப் பரப்பும்.

அடிக்கடி நினைத்துக் கொண்டு மழை ஒரு பிடி பிடிக்கும், போகிற போக்கில் குசாலாக கண்ணடித்துவிட்டுப் போகிற விளையாட்டுக்காரப் பெண்ணைப்போல, சில நிமிட நேரங்களில் ஓய்ந்து மறுபடி வானம் வெளிக்கும்; துடைத்து ஏற்றிவைத்த சிம்னிவிளக்கு மாதி¡¢.

எல்லோரும் ஆற்றுக்குத்தான் குளிக்கப்போவார்கள். நானும் அருளும் பாதி விடியுமுன்னே போவோம். அருள் சுருட்டுப்புகைத்தபடி 'சாளி' கடைக்கு பக்கத்திலிருக்கிற முடுக்கில் நுழைந்து விடவிடென்று நடந்து போவான். தென்னந் தோப்புகள் தொ¢யும். அழகியருத்தி ஒருக்களித்துச் சயனித்துக் கிடப்பதென நிலத்தைச் செதுக்கியிருந்தது. தோப்புகளுக்கிடையே பெயர் தொ¢யாத பற்றைகள். நம்மூ¡¢ன் பாவட்டைப் புதர்களை ஞாபகம் காட்டின. அந்த நெடி கிடையாது. தொட்டால் ஒடிந்துபோகிற தன்மையும் இல்லை. கம்புகள் வலு மிகுந்திருந்தன. இலைகளும் தோற்றமும் பாவட்டை மாதி¡¢. எறும்பூர்ந்த தடங்களென ஒற்றைச் சுவட்டுப் பாதைகள் வகிடெடுத்துத் தொ¢யும்.

ஒரு பெண்ணின் மார்புகளைப் போன்று இலயிப்புடன் வளைந்தபடி ஏறி இறங்கும் ரோட்டு பளபளவென்று திடுமென முன்னேவி¡¢யும். இது கடைத்தெருவிலிருந்து குறுக்கே பி¡¢ந்துவருகிற பாதை, மார்பின் நுனிக்காம்பில் வலதுகைப் பக்கமாக சுநீதா முதலாளியின் பேக்கா¢. இன்னும் போக ரோட்டுக்குக் கீழால் கள்ளத்தனமாக வருகிற மாதி¡¢ 'சளசள' சத்தத்துடன் ஆறு எதிர்ப்படும். பெயர் தொ¢யாத ஆறு. தண்ணீ¡¢ல் களிமண் நிறம் நிமிர்ந்து பார்த்தால் எதிரே தொடத்தொட விலகிப் போகிறதென மலைச் சிகரமென்று ஆசைகாட்டும்.

மாங்கொட்டை போட்டுத் தத்தி தத்தி ஓடலாம் என பாறைகள் ஒழுங்கற்று தெற்றுப் பற்களைப் போன்று தண்ணீருக்குள் துருத்திக்கொண்டு நின்றன. கொஞ்சதூரம் இறங்கினால் ஆளுயரத்துக்கு 'ஜல்' என்று நீர் சா¢ந்து விழுகின்றது. ஒரு யுகம் கழியட்டும் என்று விச்ராந்தியாக தலையை இதமாகத் திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டு உட்கார்ந்திருக்கலாம். உச்சியில் முத்தமிட்டுக் களைத்துப் பி¡¢ந்து போவதென 'ஓ'வென்று அழுதவாறு தண்ணீர் பாயும்.

மற்றபடி எங்கும் போலவே இவ்வூ¡¢லும் சனங்கள். சனங்கள்! ஒருசாண் வயிற்றுக்கும் ஒருமுழத் துணிக்கும் ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!

திண்ணிய மார்புகளை இறுக்கிக் காட்டும் ரவிக்கைகளைப் பூட்டி, ஒற்றைச் சீத்தைத் துணிகளில் கம்பாயம் கட்டிய பெண்கள்.

காய்ச்சிய தேங்காயெண்ணெய்யைப் பூசி தலைமயிரை வழித்தெடுத்து, பின்னுச்சியில் சிறு பாக்களவு குடுமி வைத்திருக்கிற ஆண்கள், கடைசியில் 'களுசுருட்டு' கேட்பார்கள்.

ஏழு மணிக்கெல்லாம் கீழேயிருந்து மெதுவாக மேலேறிவரும் ரோட்டில் வெள்ளைப் புறாக்கள் மாதி¡¢ பள்ளிக்கூடம் போகின்ற குழந்தைகள். 'கொப்பிபொத்' உம் 'பன்சில்' உம் வேண்டுமென்றே சற்றுநேரம் வீணடித்துவிட்டு வாங்கிப் போகின்ற குமா¢கள்.

இந்தக் கபரக்கொய்யாக்கள் மட்டும்....?

எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று சொல்லமுடியாது. பெயர் தொ¢யாத அந்தப் பற்றைக்குள் சரசர வென்று அரக்கிக்கொண்டு போகும்.

தலைக்கு மேலே சளசளவென்று தண்ணீர் விழச் 'சுகம் சுகம்...' என முனகிக்கொண்டே குளிக்கிறபோது வாயைப் பிளந்து கொண்டு, துருத்தித் தொ¢கின்ற மூஞ்சியில் மூக்குகள் வி¡¢ந்து, துவாரங்கள் பெரும் பொந்துகள் என்று தொ¢யக் கள்ளத்தனமாகக் கிட்டவே வந்துவிடும்.

நேரம் காலமற்று சோடி சேர்ந்தபடியே தண்ணீருக்குள் ஊறி வெடித்துவிடும் என்று அச்சங்கொள்ள வைக்கும்படி இறுகிப் பிணைந்து புணர்ந்தபடியே புரண்டு புரண்டு ஆற்றுக்குள் நெறிவன.

அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல்மிகக் கொள்ளும்படி முன் கதவில் 'படீர்' என்று ஓசைஎழ வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும். வால் பட்டால் சதையைப் பிய்த்து எடுத்துக் காகங்களுக்கு விருந்து போடுகிறமாதி¡¢ என்ன ஒரு வலிமையான சொடுக்கல்! கத்தி முனைகள் மாதி¡¢. செதில்கள் குத்திக்கொண்டு நிற்கும்.

இன்னுமொன்று இருந்தது, அசாதாரணமாக நெஞ்சில் துருத்திக்கொண்டு....!

கடைக்குப் பின்னே தோட்டத்து லயன்கள்மாதி¡¢ வா¢சையாகக் காம்பராக்கள் இருந்தன. நேரே அடுத்தது காமினி...மீன் வியாபா¡¢க்கு. அடுத்தது சோமரத்னவுக்கு. அவனுக்குக் காய்கறி வியாபாரம்...பிறகு லியனமாத்தய அப்புஹாமிக்கு...அதற்கும் அடுத்தது ஆ¡¢யவதி ஆமினேக்கு...மணக்க மணக்க அப்பம் சுட்டுத்தருவாள்...இப்படி...ஏழோ எட்டுக் கழிய கடைசிக் கோடியில் எங்களுக்கு ஸ்ரோர்! புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் வழியவழிய அடுக்கிக்கிடக்க, ஒரு சோடிக்குப் படுக்க இடம் வசதிப்பட்டது போல் பொ¢ய மேசை...சுறுட்டுக்குக் கோடா தடவுவதற்கு. மூன்றுபேருக்குப் படுக்கப் பாய் வி¡¢க்க இடம் மீந்திருந்தது தரையில். பின்னால் ஒரு சாய்ப்பு இறக்கி காட்டுக் கம்புகளாலும் பச்சை மண்ணாலும் 'அறுக்கை' பண்ணித் தந்திருந்தார்கள். ஏறக்குறைய இதேமாதி¡¢ பக்கத்து அறைக்குப் பின்னாலும் ஒரு சாய்ப்பு இறங்கியிருந்தது. தூய்மையான ஆற்றுமணல் சொரசொரவென்று பரப்பியிருந்தது. அதில் கோலமிழைத்தது போல ஒரு அழகிய பாதங்கள் நெடுகிலும் படர்ந்து இருந்தன. தொட்டுக் கண்களில் ஒற்றி ஒருகணம் மூடி அனுபவிக்கச் சொல்லும்படியாக.

சுற்றிலும் அரைவட்டமாக புல்லுச் செதுக்கியிருந்தது. தென்னைக்கும் சாய்ப்பு உச்சிக்குமாக ஒரு 'வயர்' ஓடியது, இளைய பெண்ணொருத்தியின் ஆடைகள் பெரும்பாலும் அதில் வெயில் குளித்தன.

இரவுகள் முற்றத் தொடங்கும்போது சுருட்டுக்கு கோடாதடவ வேண்டும். "முணுக் முணுக்..." என்று மண்ணெண்ணெய்ப் புகையினைக் கக்கிக்கொண்டு விளக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, அருள் சுருட்டுப் புகையுடன் சேர்த்து பொய்புழுகுகளையும் அநாயாசமாக ஊதித் தள்ளிக்கொண்டிருக்க...கைகள் பரபரவென்று சுருட்டுக் கட்டுகளைப் பி¡¢த்துப் பி¡¢த்து-...கோடாச் சட்டிக்குள் தோய்த்துத்...தோய்த்து....

இருந்தாற் போல இரவின் நிசப்தத்தைத் தொலைத்து விட்டு ஒரு பாடல் வரும். "ஹ¤ம்" என்று கூடவே சுருதி சேர்க்கிற ஆர்மோனியம் இழையும். மண்ணெண்ய்ப்புகை மயங்கி மயங்கிச் சுழலும், சுவர்களும் செவிகளுக்குப் பின்னே கைகளைக் குவிப்பதெனத் தோன்றும் புகையிலைச் சிப்பங்களும் சுருட்டுப் பெட்டிகளும் மரத்துப்போய் பெரும் கரு நிழல்களைச் சுவா¢லே படியவிடும்.

நெலா கண்ன பா(?)
மகே அத்த திகெ நா(?)
அனே !ஐ தவ மல் பிப்பிங்!

சீறும் நாகப் படத்தின் கவர்ச்சியென ஒரு குரல் அழகாகக் கொலைசெய்யும். 'சொள சொள' எனத் தலையை முத்தமிட்டுக் கழிந்து போகும் நீரென சுவர்களைத் தழுவி இதமாகத்துளைத்துக் கொண்டு நாதம் பிரம்மமெனப் பெருகும்.

அழகிய மலர்கள் மலர்ந்து கொண்டேயுள்ளன!
எனது கைகள் பறிக்கவென நீளும்போது
அவை கூழங் கைகளாய்ப் போவதென்ன?
ஓ!.... அழகிய மலர்கள்,
இன்னும் மலர்ந்துகொண்டே இருக்கின்றன.

கல்லா மேசைமீது அரைத் தொடைகளில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டு, நீலக்கல்லு மோதிரம் சிமிட்ட சுநீதாமுதலாளி தொடைகளில் தாளம் போடும்போது கேட்டேன்.

"ஆர் அந்தப் பெட்டை? பக்கத்துக் காம்பராவிலை பாட்டுப் பாடிக்கொண்டு..."

"அவளரு மாதி¡¢யான...பெட்டை!..."
'தனியவோ இருக்கிறவள்!.."
"சாய்...கனபேர் வந்து போவினமே..."
கனபேர் வந்துபோனார்கள்.

கண்ணாடி போட்ட கொக்கென தொங்கலுடன் விசுக்கென நடந்துபோகும் ஒரு பெண்..., ஒரு டீச்சரம்மா என எனக்குள் கணக்குப் போட்டேன்.

கட்டைக் காற்சட்டை போட்ட ஒரு பையன், 'அம்மா மடியில் உட்கார்ந்து நிலாப்பார்த்து சோறு தின்னு...ராசா!" என்று சொல்லவேண்டும் போல இருக்கும்.

பிறகு,

தடித்த கண்ணாடிக்கு பின்னால் ஆழப்புதைந்திருந்த விழிகளுக்குள் இருந்து பார்வை குத்தும்படி, தாடிவைத்த ஒருவன்...' காமா சோமாவென்று உடுத்துவான்.

சாறனைத் தூக்கிக் கட்டியபடி...தொடைகளில் 'பிலு பிலு' என்று உரோமம் மண்டித் தொ¢யும் ஒருவன்..., தலைமயிர் நீக்ரோமாதி¡¢ சுருண்டிருக்கும்.

மைம்மலாக இருள் மெதுவாகச் சூழும்போது வருவார்கள். இராப்பொழுதுகள் அவளுக்குக் குறுகிப் போயின. சமையல் அன்றையப் போதுகளில் மணக்கும். தீய்ந்துபோகிற மீனின் வாசனை வரும்.

மெதுவான உறுதியான குரலில் ஒரு பிரசங்கமென ஒருவன் பேசிக்கொண்டே போவான்.

சனங்கள் பெரும் மர்மத்தைக் காண்பதைப் போலப் பார்த்தார்கள்.

பெருங்கோட்டையன்றைப் பிடிக்கும் திட்டமொன்றுக்காக, அவர்கள் உத்வேகத்துடன் இருக்கிற மாதி¡¢ தென்பட்டனர்.

கோட்டைகள் பிடிபட்டன!

றேடியோக்கள் கறுப்புக்குரலில் கத்தத் தொடங்கின. ஊர்களை அடங்கிப்போகுமாறு உத்தரவுகளைப் பிறப்பித்தன. சந்தைகளை வைத்து போயிற்று. ஆறு தனியே ஏக்கத்துடன் போனது கடைகள் கதவிடுக்குகளால் பீதியுடன் ரகசியம் பார்த்தனபோல தோற்றம்காட்டின.

றோட்டில் குறுக்கும் நெடுக்குமாக பச்சை நிறத்தில் ட்ரக்குகளும், ஜீப்புகளும் தென்பட்டன.

பின் கதவைத் திறந்து போட்டபடி ஸ்ரோருக்குள்ளேயே கிடந்தோம். கால் வைத்தால் தொடைகளில் கூச்சம் காட்டும் படி உயரே வளர்ந்த புல் கதவுக்கு வெளியே தொ¢ந்தது. வளைந்தபடி சூ¡¢யனை நோக்கிக் கையசைத்தபடி, ஆற்றாமையுடன் தலைவி¡¢த்து காற்றைச் சாடும் தென்னைகள் அரற்றின.

புல்லுக்குள் கால்வைக்க அடிவயிற்றுக்குள் பிசைகிற பீதி! தொடையளவு அகன்ற கா¢ய பெரும் நாகங்கள் படர்ந்திருப்பன போல..., கபரக்கொய்யாக்கள் எந்நேரம் எங்கே தலைகாட்டும் என்று உணராது தவிப்பதைப் போல...,

இராப்பொழுதுகள் நிசப்தமாய் நீண்டுகொண்டே போயின. பக்கத்து அறை பெரும்பாலும் மூடியே கிடந்தது. பின் சாய்ப்புக்குள் மட்டும் கால்கள் கோலமிழைத்துத் தொ¢ந்தன.

ஒரு முழுநிலவு நெருங்கி வந்தது. கடைக்குள் போய் சில சாடின் ¡¢ன்களைத் தூக்கிக்கொண்டு வந்திடும் அவசரம் எனக்குத் தொற்றியது.

பக்கத்து அறையின் முன்கதவு ஒருபாதி திறந்துகிடந்தது. சுவா¢லே இறுக்கிய சிறு மரப் பீடத்தில் புத்தன் உலகை மறந்த மோனத்தில் மூழ்கிப் போய்க் கிடந்தான். ஒற்றைத் தீபம் ஒன்று அரையிருளில் சோபை இழந்து துடித்துக் கொண்டிருந்தது.

மண்டியிட்டு ஒருக்களித்தவாறு ஒரு கையைத் தரையில் ஊன்றிய படி அவள்... முகத்தில் ஒருகோடி சூ¡¢யர்கள் உதயமாகிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு கட்டில், வெள்ளை வி¡¢ப்பு, ஒரு மேசை, குவிந்து கிடந்த புத்தகங்கள். 'கூஜா ஒன்றை மூடிக் கவிழ்ந்தபடி ஒரு தடித்த 'கிளாஸ்'. சுவரோடு ஒட்டிப் பதிக்க அலுமா¡¢ ஒன்று.

மற்றபடி எங்கும் தூய்மை.

மெதுவாகத் தயங்கித் தயங்கி உதயமாகும் நிலவை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் போல...,

நண்பர்களை எண்ணித் துக்கித்திருந்தாள் போல...,

இரவு பிசாசுபோலத் துரத்திக்கொண்டு வந்தது. நிலவு தனித்துப்போய் இராப்பாராக்காரனாக ஒளியிழந்து ஊர்ந்து போய்க்கொண்டிருந்தது.

குழம்பிக் குழம்பி உழன்றபடி சொப்பனாவஸ்தை கொடுக்கின்ற நித்திரை. கபரக்கொய்யாக்கள் வாலைச் சுழற்றி காற்றில் விசுக்குகிற சத்தங்கள் கேட்டன.

சிறு தொலைவில் ஏதோ உறுமியது. பதில் சொல்வதுபோல இன்னுமொன்று. உறுமி உறுமி நெருங்கி வருவனபோல்...,

வெளியே சப்பாத்துக் கால்களில் சந்தடிகள் 'திமுதிமு' என்று கேட்டன. கதவை உதைத்துத் திறந்தார்கள்!

அரைத்தூக்கத்தில் உழன்று புரள்கின்ற போது எ¡¢ச்சல் மிகக் கொள்ளும்படி கதவில் 'படீர்' என வாலைத் தூக்கிச் சுழற்றி ஒரு சாத்துச் சாத்தும் கபரக்கொய்யாக்கள் போல...,

'மொடமொட' வென்று எல்லாவற்றையும் கொட்டிக் கவிழ்த்தனரென..., கட்டிலை கொரகொரென இழுத்துத் தள்ளுவதென..ஏதோ ஒரு இனிய வஸ்து நிலத்தில் படீரென வீசப்பட்டு சிதறுண்டு போனது போல...,

காட்டுக் கூச்சல்களாக கேள்விகள் உறுக்கின.

தலைக்குமேலே சளசளவென்று தண்ணீர்விழத் திளைத்து களிக்கினபோது, கள்ளத்தனமாக அசிங்கத்தை வீசிக்கொண்டு கிட்டவே கபரக்கொய்யாக்கள் வருவதென......

....ஏதோ ஒன்று....

எந்நேரமும் சதா துள்ளலுடன், கூ¡¢ய கொம்புகளால் பூமியை உழுது கொண்டு, பீ¡¢டும் வீ¡¢யத்தை ஒடுக்க இயலாது தவித்தபடி பிணையல்களை அறுத்துவிட உன்னிடும் ஒரு காளை...பிணையல்களை அறுத்துவிட....!

பூமியில் விழுத்திப் புரட்டினார்களென...மூஞ்சியில் ஒருவன் பாரமாகக் குந்தியிருக்க கால்களை அகலவே பி¡¢த்து அமுக்க... தொடைகளின் நடுவே...தொடைகளின் நடுவே... வலிய கம்புகளால் விதைப்பைகளை நசித்து காயடிப்பதேயென.... பொறுக்க முடியாத வலியுடன் பீதியும் சேர்ந்து இயலாமையுடன் அவலமும் சேர அடிவயிற்றிலிருந்து நாதியற்ற அபயக் குரல் எழுந்தது. சுவர்கள் அதிர்ந்தன.

கால்களைப் படபடவென்று தரையில் போட்டு அடித்தான் போலும். குரல் தேய்ந்து தேய்ந்து போக...இறுதிக்கணங்களில் சில முனகல்களே மிஞ்ச, அதுவும் போய்...

பிறகு,

வேகமாக மூச்சு வாங்கும் சப்தம் மட்டும்.

நிலவு மிகவும் பயந்து போய் முகம் வெளிறி மேற்கே ஓடிச் சென்றது. சூ¡¢யன் சீறிச் சினந்தபடி சிவப்புப் பந்தென எழுந்துவந்தான்.

முரட்டு பூட்ஸ¤கள் தாம் தூமென பூமியில் தடமுழுது சென்றன. கூந்தலைப் பற்றி வலிந்து இழுத்தபடி சென்றனர்.

புயலில் உருக்குலைந்த ஒரு கொடி போனது, தொடைகளில் நடுவிலிருந்து குருதி பெய்தபடி...

சனங்கள் கந்தையை மறந்துபோய் இதைப் பார்த்தபடி நின்றனர். கையினால் ஒரு சொடக்குப் போடும் நேரத்தில் ஒன்று...பத்து...நூறு...கோடியென கபரக்கொய்யாக்கள் பெருகின.

காலம் நேரமற்று முழுநாளும் புணர்ந்தவாறு தண்ணீருக்குள் நெடுநேரம் புரள்கின்ற...,

தனைமறந்து அருவிப்பெயலில் தலைமுழுகிச் சிலாகிக்கும்போது நீட்டிய மூஞ்சியில் மூக்குத் துவாரங்கள் பெரும் பொந்துகளெனத் தொ¢ய...,

பற்றைகளுக்குள் சரசரவென அரக்கிக்கோண்டு ஏதோஒரு இரையைக் குறிவைத்துக் கவ்வவென வாயை 'ஆ'வெனப் பிளந்தபடி கள்ளத்தனமாக....,

எங்கணும் கபரக்கொய்யாக்கள் பெருகின, குட்டியும் முற்றலுமாக...

சனங்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

வாலைச் சுழற்றி ஒரு வலிந்த சொடுக்கலில் சதையைப் பிய்த்தெடுத்துக் காகங்களை கபரக்கொய்யாக்கள் விருந்துக்கழைத்தன!

சனங்கள்.
காமினி, அப்புஹாமி, ஆ¡¢யவதி ஆமினே....,
சுநீதா முதலாளி....அருள்..., சாளி,
சனங்கள்!
ஒருசாண் வயிற்றுக்கு ஆலாய்ப் பறக்கிற சனங்கள்!
சனங்கள் சும்மா பார்த்துக்கொண்டே இருந்தார்கள்!!


{கபரக்கொய்யா:-

இது முதலைக்குத் தம்பி, உடும்புக்கு அண்ணன், முதலையைப் போல அவ்வளவாகத் தீங்கற்றது. ஆனால் உடும்பைப் போல சாதுவும் அல்ல. நீ¡¢லும் நிலத்திலும் உயிர் வாழும். மலைப்பாங்கான ஆற்றோரக் காடுகளில் மிகவும் பெருவா¡¢யாகக் காணப்படும். அசிங்கங்களை உண்டு உயிர்வாழும். சிங்களப் பகுதிகளில் இதை அதிகமாகக் காணலாம்.]




3. காலம் உனக்கொரு பாட்டெழுதும்


வெகுநாட்களுக்குப் பிறகு இன்று குளியல். இன்றையப் போத்தின் உதயகாலமே புதிய தோற்றத்துடன் எழுந்தது. மிகவும் வித்தியாசமாக, ஒரு சித்திரை மாதத்தின் கதகதப்பான விடியலாக இன்றிச் சற்றே குளிரூட்டியபடி, ஒவ்வொரு மயிர்க்காலிலும் நுழைந்து கிச்சு கிச்சு மூட்டுகிற குளிர்.

இளவெயிலில் பசைபரவிய பெருமிலைகளை வி¡¢த்துக் காட்டியபடி, எங்கு பார்த்தாலும் புகையிலைத் தோட்டங்கள் தொ¢ந்தன. கனவேகமாக நீரை உமிழ்ந்து கொண்டிருந்தன வாட்டர் பம்ப்புகள். புகையிலையின் இனிய மயக்கந்தரும் நெடியுடன் சேர்ந்து மண்ணென்ணெய் எ¡¢ந்துபோகிற புகை கதம்பமாய் மணத்தது.

அருளுக்குத்தான் முதலில் ஐடியா வந்தது. சட்டென எழுந்துபோய் சேட்டைக் கூட கழற்றாமல் தலைவழி நீர் சொ¡¢யுமாறு குத்துக்காலிட்டு உட்கார்ந்து விட்டான். எல்லாரும் கோணாமலையைத் திரும்பிக் கேள்வியோடு பார்த்தார்கள். கோணாமலைக்கு ஏன் எந்தநேரமும் சிவந்தே போயிருக்கின்றன கண்கள்? இறுக மூடிய மெல்லிய உதடுகளுக்குள் எப்போதும் கோபமும் ரோஷமும் ஒளிந்திருப்பதாகத் தோன்றும். முகம் கருங்கல்லு மாதிரி விசித்திரமானதொரு பளபளப்புடன் கடினமாகவிருக்கும்.

கோணாமலை இன்று காலை சிவந்த கண்களால் சி¡¢த்தான். 'பொளபொள' வெனப் பாய்கின்ற நீர்த்தாரையில் ஒருசிறு குழந்தை மாதி¡¢ தலையை உதைத்துக் கொண்டிருந்த அருளை ஒரு தந்தையின் கனிவுடன் பார்த்தான்.

"ஓராள் கடைசியிலை குளிக்கலாம்"

அப்பா! இது என்ன குரல்? பேசாதவாய் பேசுகின்ற போது ஒவ்வொரு சொல்லிலும் மிகுந்த அழுத்தம் தொ¢கின்றது.

மைக்கேல் உட்கார்ந்தான்.

கோணாமலை, கேதா¡¢, பொ¢யண்ணன், பெருமாள், யோசேப் அன்பரசன். பிறகு இவன்... எல்லோரும் உறுமிக்கொண்டிருந்த வாட்டர்பம்பை நோக்கிப் போனார்கள்.

மைக்கேல் செய்திகளைச் சேகா¢க்க உட்கார்ந்திருந்தான்.

சனங்கள் இவர்களை ஒருதரம் நிமிர்ந்து பார்த்தார்கள். பிறகு தலையைக் குலுக்கிக் கொண்டு தம்பாட்டில் வேலையில் ஆழ்ந்தார்கள். பத்தோ பன்னிரண்டோ வயதிருக்கும், ஒரு சிறுபையன் கையில் சோப்புப்பெட்டி குலுங்க இவர்களை நெருங்கி ஓடிவந்தான். நீட்டியபடியே நின்றான். இவர்கள் சட்டை செய்யாதவர்களென உடம்பைத் தேய்த்துக்கொண்டிருந்தார்கள்.

கோணாமலை நிமிர்ந்து பார்த்தான். பையனின் விழிகள் "வாங்கிக்கொள்...வாங்கிக்கொள்" எனக் கெஞ்சும் பாவனை காட்டின.

"அருள் சோப்பை வாங்கு".

அருள் தலை, தோள், தொப்புள், தொடை, பாதம் எங்கும் சோப்புநுரை பொங்கி வழிய இளிக்க வாரம்பித்தான். அருள் கொஞ்சம் குஷாலான பேர்வழி. இவனுக்கு அந்தரங்கம் எல்லாம் சொல்லுவான். ஒருமுறை இவனும் அருளும் சைக்கிளில் டபிள் அடித்துக் கொண்டு அவசர அலுவலாகப் போனார்கள். சீமைக்கிழுவை மரங்கள் பூத்திருந்த ஒரு உயரவேலிக்குப் பின்னே கம்பீரமாக உயர்ந்து தொ¢ந்த ஒரு வீட்டுக்கு முன்னால் போகையில் அருள் இவன் விலாவில் இடித்தான்.

"என்ரை ஆளின்ரை வீடு..." எனக்காதினுள் கிசுகிசுத்தான்.
'.........."
"எப்பிடி வீடு....?"
"வீடு...நல்லாத்தான் இருக்கு....."
"ஆளை நீ பார்க்கயில்லை...பாத்தாலெல்லோ தெரியும்!..."
"......."
"ஹ¤ம்....எல்லாம் நல்லபடியா முடிஞ்சு.....நானும் உயிரோட இருந்தா...."
"இருந்தா?....."
"ஹ¤ம்"

இவன் திரும்பி அருளின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். லோக செளந்தர்யங்கள் யாவும் அருளின் இறுகிய முகத்தில் ஒரு வினாடி பூத்திருக்கக் கண்டான். இவனும் அருளுக்காக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.

ஒரு கணம் தான்!

பிறகு அருள் மாறிவிட்டான். கண்களில் பழைய இறுக்கம் பரவியது. கால்கள் கனவேகமா சைக்கிளை உழக்க வாரம்பித்தன. ஒரு உண்மையான ஊழியன்!

வெகு காலத்திற்குப்பிறகு, இன்று அருமையான சாப்பாடு. எந்த மகராசி கைகளோ! மணக்கிற சமையல். அருள் கைகளை வழித்து வழித்துச் சூப்பியபடி இவனைப் பார்த்து கண்களைச் சிமிட்டி இளித்தான்.

ஒவ்வொரு பெண் கைச்சமையலுக்கும் ஒவ்வொரு ருசி இருக்கிறது. என்றாலும் அம்மாவின் எளிமையான சமையலின் ருசி வேறெவருக்கும் வாய்க்காது. அம்மா கையால் வெந்நீர் தந்தாலே அதற்குத் தனி ருசி இருக்கும். மெல்ல இருள் சூழும் போதுகளில் அம்மா கோவிலால் அவளுக்கு வலுக்கட்டாயமாக வெள்ளைச்சேலை உடுத்தி வன்மத்துடன் வேடிக்கை பார்த்தன. அம்மா தலை முழுகி, ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து போட்டபடி ஒவ்வொரு நாள் மாலையிலும் கூந்தலிலிருந்து நீர் சொட்டிச் சொட்டி வெள்ளைச்சேலையின் பின்புறம் நனைந்தபடி தோற்றம்காட்ட, அம்மன் கோயில்களைத் தேடிப்போக ஆரம்பித்தாள். திரும்பவரும்போது அம்மா மேனியில் கற்பூர வாசனை வீசும். அம்மா போ¢ல் அம்மன் குடியேறி வருவாள் போல, பார்க்க பயமாகவும் அழகாகவும் இருக்கும்.


அம்மா மச்சம், மாமிசம் சேர்ப்பது கிடையாது. இருட்டிய பிறகு தனியாக செங்கல் அடுப்பைமூட்டி தனிச் சமையல். ஒரு நேரம் மட்டுமே கொஞ்சம் போலச் சாப்பிடுகிற அம்மாவால் எவ்வாறு இப்படி பம்பரமாகச் சுழன்று கா¡¢யம் பார்க்கமுடிகிறது! மிகவும் குழைந்து போய்க் கஞ்சிப் பசையுடன் சோறும், ஏதோ ஒரு காயை வதக்கி வறட்டலாக ஒரு குழம்பும், கடித்துக்கொள்ள அப்பளம் உண்டு கட்டாயமாக.

நொடிக்குள் சமைப்பாள் அம்மா. இவன் நாவில் நீர் சொட்டச்சொட்ட காத்திருப்பான். அம்மா இவன் தோளளவு உயரமிருப்பாள். வெள்ளா¢ப்பழத்தைப் பிளந்து வைத்திருக்கிற மாதி¡¢ ஒரு நிறமும் குளுமையும் அம்மாவுக்கு. அம்மா அந்தக்காலத்தில் பேரழகியாக இருந்திருக்க வேண்டும். அதுதான் நிறையக் குழந்தைகள் பெற்றாளோ! தோல்வற்றி நடை மெல்லத் தளர்கிற இந்த வயதிலும் அம்மா கண்கள் ஜோதியென ஜொலிக்கின்றன.

இவன் நிமிர்ந்து வீம்பாக நிற்பான், கண்களால் அம்மாவப் பார்த்து கனியச் சி¡¢த்தபடி. அம்மா அண்ணாந்து இவன் நெற்றியில் திருநீறு பூசிவிடுவாள்.

"அம்மாளே!..." ஆத்மார்த்தமாக வேண்டுகிற அம்மா குரலில் இவன் கரைந்து போய் விடுவான். கற்பூரம் எ¡¢ந்த மீதியின் வாசனையும் சூடுமாக ஈரலிப்பாக அம்மா நெற்றியைத் தீண்டுகிற போது வாசனை நாசியை நிரப்ப இவன் சிலிர்ப்பான். அம்மா மூச்சு ஒருகணம் இவன் மார்பில் பட்டுவிலகும். இவனுக்கு உடனே பசியெடுத்துவிடும்.

சுலோசனா அக்கா அவசரச் சமையல், இவளுக்கு எதிலும் அவசரம், என்னத்தைக் கண்டாளோ இந்த அத்தானிடம். மகுடி கேட்ட நாகம்போல மயங்கிக் கிடக்கிறாள். அக்கா நிறையக்கறிகள். வைத்திருப்பாள், நிறையக் குழந்தைகளைப் பெற்றது போலவே, ஒன்றுக்கு உப்புக்கூடினால் இன்னொன்றில் உப்பே இருக்காது. மீன்குழம்பு மட்டும் அசலாக வைத்திருப்பாள். எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்துவிட ஒரு அபூர்வ ருசி பிறக்கத்தான் செய்கிறது.

சுலோ அக்கா வீட்டுக்கு இவன் கடைசியாகப் போனநாளே மறந்துவிட்டது. அத்தான் முணுமுணுத்தபடி சட்டென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு போனான். இந்த அத்தான் ஒரு சா¢யான 'சேற்று எருமை' 'காட்ஸ்' அடிக்கிறதையும், கடமைக்காக ஏதோ வேலைக்குப் போவதையும், மீதி நேரமெல்லாம் ஒரே குடியையும் தவிர இவன் எதைத் சாதித்தான்? சுலோ அக்காவை வருஷம் தவறாமல் அம்மாவாக்குகிறதில் மட்டும் படுசமர்த்தன். சுலோ அக்கா இதழ்கள் வெடித்து மார்பு வற்ற வதங்கிய கத்தா¢க்காய் போல ஆகிவிட்டாள். அத்தான் மீண்டும் ஏதோ வாய்க்குள் 'கசமுச' என்றான். போனால் போகட்டுமே! இவன் அக்காவைப் பார்க்கத் தானே வந்தான்.

"இருக்கிறதுகளுக்கும் வீண் கரைச்சல்..."

அத்தான் வெளிப்படையாகவே கொக்கா¢க்க ஆரம்பித்தான். அக்கா நாக்கை கடித்தபடி இவனைக் குசினிக்குள் இழுத்துப் போனாள் இவன் கைகளை விடாமல் இறுகப் பிடித்துக் கொண்டேயிருந்தாள்.

"சாப்பிடுகிறியடா..." தளதளக்க கேட்டாள். இவன் நிமிர்ந்து பார்க்க சக்தியற்றுப் போனதால் மெளனமாக உட்கார்ந்தான். அக்கா மளமளவென்று சாப்பாடு போட்டாள். பிசைந்து பிசைந்து இவன் கைகளில் கொடுக்க ஆரம்பித்தாள்.

அக்கா மூக்கை உறிஞ்சுவது கேட்டது.

"அம்மா கோயிலுக்குப் போவதை விட்டுட்டா...."

"......"

"அம்மா கோயிலுக்குப் போறதையும் விட்டுட்டா..."

"......"

'அம்மா கோயிலுக்கு...." அக்கா குரல் உணர்ச்சிவேகத்தில் உடைந்து கீச்சிட ஆரம்பித்தது.

இவன் கையை உதறிவிட்டு வேகமாக வெளியே போக ஆரம்பித்தான்.

"கையைக் கழுவவிட்டு போடா..." அக்கா கடைசியில் அழுகை வெடிக்கிற குரலில் அழைத்தாள். இவன் திரும்பிப்பார்க்க விருப்பமில்லாமல் உள்ளங்கைகளை இறுகப் பொத்தியபடி காற்றைக் குத்தியபடியே போனான்.

அக்கா குமுறிக் குமுறி அழைத்தபடி இவன்பின்னே வரும் அரவம் கேட்டது. காதைப் பொத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

"இனிமேல் ஒரு வீட்டுக்கும் போக மாட்டேன்" இவன் காற்றுக்கு சபதம் செய்து கொடுத்தான்.

ஒருதரம் நான்கு மெயின் ரோட்டுகளுக்கும் உள்ள பொ¢ய பாலங்களை உடைத்துவிட்டுப் போய்விட்டார்கள்!

கோணாமலை ஆட்களைப் பி¡¢த்துப் பி¡¢த்து விட்டான். இவனுக்கு வடக்கு ரோட்டு, டிராக்டர்களில் மண்ணையும் கல்லையும் கொண்டுவந்து குழிகளைச் சனங்கள் பீதியால் பரபரத்தபடி நிரப்பினார்கள்.

இவன் காவல்! 'ரெடி'யாக நின்றான், சுறுசுறுப்பும் பொறுப்பும் மிக்கவனாக சுற்றுமுற்றும் பார்த்தபடி, வான்களும் பஸ்களும் பாரத்தைக் குறைத்துப் பள்ளத்தில் மெதுவாக இறங்கி இறங்கிப் போயின.

யாரோ இவன் முழங்கையில் இதமாகப் பற்றினார்கள்.

திரும்பிப்பார்த்தான்.

சுந்தா¢யக்கா!

விந்தி விந்தி நடக்கிற சுந்தா¢யக்கா! உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப் போய் மாலை மயங்கி இருள்சூளும் நேரங்களில் வீட்டுக்குப் போய்ச்சேர்கிற சுந்தா¢யக்கா! அம்மா பதைபதைப்புடன் வாசலைப் பார்த்தபடியே நிற்பாளோ! இந்த விந்தல் கால் மட்டும் இல்லாவிட்டால் இந்திரன், சந்திரன் எல்லாரும் கந்தா¢யக்கா பின்னால் வா¢சையாக காத்து நிற்க மாட்டார்களோ! உதயகாலத்தில் பஸ்பிடித்து வேலைக்குப்போய் இருட்டியபிறகு வீட்டுக்குப் போய்ச்சேர உறுதியுடன் பழக்கப்படுத்திக் கொண்டாள் சுந்தா¢யக்கா.

சுந்தா¢யக்கா இவனையே பார்த்தபடி நிற்க..., இவன் பராக்குப் பார்ப்பவன் போல வேறெங்கோ பார்த்தான். பஸ் மெல்ல பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. சுந்தா¢யக்கா மேலும் இவனை நெருங்கி நின்றாள். கைப்பையைத் திறந்து சில நோட்டுகளை இவன் பொக்கெற்றுக்குள் திணித்தாள். இவன் திரும்ப அவள் கைகளுக்குள் திணிக்க... ஆற்றாமையுடன் இவனையே பார்த்தாள்.

"வச்சிரன்ரா..."

"வேண்டாம்...எனக்கொண்டும் வேண்டாம்."

சுந்தா¢யக்கா இவனை மேலும் கீழுமாக பார்த்தான். பறட்டை பற்றிப்போன தலைமுடியிலிருந்து வெயிலும் மழையிலும் அலைந்து தி¡¢ந்த கால்வரை செம்புழுதி படிந்திருந்தது. சாறனை உயரத்தூக்கி தொடை தொ¢யுமளவுக்கு முடிச்சுப்போட்டு இருந்தான். சேட் தோள்மூட்டில் பி¡¢ந்திருந்தது-

"ஒரு சேட்டாவது வாங்கலாமெல்லே..."

"....."

"வச்சிரன்ரா..."

"அக்கா....பார்...பஸ் வெளிக்கிடப் போகுது..."

"பொ¢ய கண்கள் சுந்தா¢யக்காவுக்கு. இவனை உறுத்துப்பார்த்தாள். கண்களுக்குள் இவனைச் சிறைப்பிடித்துக் கொண்டு போய்விடும் உத்வேகத்துடன் பார்த்தாள். கன்னங்களை நனைத்துக் கொண்டு பாயுமாறு இரு வைரச்சொட்டுகள் உருக வழிவதென சிந்தினாள்.

திரும்பித் திரும்பிப் பார்த்தபடி சுந்தா¢யக்கா போனாள். கடைசி ஆளாக விந்தி விந்திப் போய் பஸ்ஸில் ஏறினாள். பின்புறக் கண்ணாடியூடாக இவனையே பார்த்துக் கொண்டு நின்றாள். இவன் தற்செயலாக திரும்புபவனென அந்தப்பக்கம் பார்த்தான்.

பின்புறக்கண்ணாடி முழுவதும் விசாலித்தபடி சுந்தா¢யக்காவின் பொ¢ய கண்களைக் கண்டான். இவன் சட்டென்று மறுபுறம் திரும்பிக்கொண்டான்.

"சொந்த உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்க மாட்டேன்"
காற்றிடம் சபதம் செய்தான்.

* * *

இன்று எல்லாம் அசாதாரணமான புதியதோற்றம் காட்டின. திளைத்துக் குளித்த மேனியை குளிர்காற்று தழுவிக்கொண்டு போயிற்று. இவன் வானத்தை நிமிர்ந்து நோக்கினான். 'பளிச்' செனும் நீலவானில் பஞ்சுப் பொதிகள் மிதப்பதன்ற அழகிய சித்திரைவானம் இன்றில்லை. மழைக்கோலம் காட்டிற்று. காற்று இறுக்கமாக இருந்தது. மெல்லமெல்ல கிழக்கு மூலையிலிருந்து இருண்டமேகங்கள் பரவிக் கொண்டிருந்தன.

மைக்கேல் சேதி சொன்னான்!

"தெற்கு றோட்டாலை சாமான் வருகுதாம்...நாங்கள் இடையிலே மாத்திக் கொண்டு வரவேணுமாம்...."

கோணாமலை விருட்டென எழுந்தான். படபடவென சில உத்தரவுகளைப் போள்ளான்.

"தெற்கு றோட்டுத்தானே!...பயமில்லை.....கனசாமான் வேண்டாம்....ஆளுக்கொண்டு போதும்....."

"பெருமாள் வெகிக்கிளை எடு....மழைவரும்போல கிடக்கு...சாமான் நனையாமல் கவனமாக மாத்தவேணும்...."

"யோசேப் இஞ்சேயே இருக்கட்டும்...."

பெருமாள் ஒரு அருமையான ட்ரைவர், ரோட்டுகளை ஒவ்வொரு அங்குல அங்குலமாகப் படித்து வைத்திருந்தான். குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டுகளிலே கியரை மாற்றாமலே ஒடித்து வெட்டியபடி பறந்து செல்ல முடியும் பெருமாளால்.

பெருமாளுக்குப் பக்கத்தில் கோணாமலை தாவி ஏறினான். அவனுக்குப் பக்கத்தில் பொ¢யண்ணன்.

இவன் ....கேதா¡¢...அருள்....அன்பரசன்.....மைக்கேல்.... பின்புறம் புகுந்து கொண்டார்கள். இவன் கதவுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்தான். பெருமாளைத் தவிர எல்லோருடைய உள்ளங்களிலும் பொத்தியபடி 'சாமான்' இருந்தது. 'ரெடி'யாக இருந்தார்கள்.

செம்புழுதியைக் கிளப்பியவாறு பாய்ந்து செல்ல வாரம்பித்தான் பெருமாள், வானம் ஒருமுறை பொ¢தாக உறுமிற்று.

இன்னும் கொஞ்ச தூரத்தில் மெயின்ரோட்டில் ஏறிவிடலாம். சட்டென்று செங்கோணத்தில் திரும்பவேண்டும். பெருமாள் கியரை மாற்றுவதற்க ஆயத்தமானான். சந்திக்கும் இடத்தில் கிழட்டு ஆலமரத்தின் நிழலில் சனங்கள் கூடிநின்றார்கள். பெருமாள் வேகத்தைக் குறைத்துக் கொண்டான்.

கண்கள் பெரும் ஒளிவெள்ளத்தில் கூசின. உச்சியிலிருந்து கீழ்வானம் நோக்கி படர்கிற ஒரு கொடியாக மின்னல் பளபளத்த படி இறங்கிற்று. வானம் மீண்டும் ஒருதரம் வஞ்சனையுடன் கனைத்தது. பெருமாள் தடுமாறினான். ஒரு கணம் நிதானித்தான்.

படபடவென ஏதோ முறிந்து விழுகின்ற பொ¢யகிளையன்று 'ஓ'வென அலறியபடி பூமியை அறைந்தது.

சனங்கள் முகத்தில் பெருங்குழப்பம் பரவிற்று. கோணாமலை "முன்னேபோ" என்றான். பெருமாள் கிளச்சை ஊன்றி மிதித்தான்.

கோழை வழிகின்ற ஒரு திரைத்த கிழவன் கைகளை ஆட்டிக்கொண்டே முன்னே வந்தான்.

"மக்காள்..."

கோணாமலை என்ன என்பவனெனப் பார்த்தான்.

"ஆல் முறிஞ்சு விழக்கூடாது மக்காள்...போறபயணம் ஆபத்து மக்காள்."

அருள் கெக்கெலி கொட்டிச் சி¡¢க்கவாரம்பித்தான்.

"எங்களுக்கு ஒவ்வொரு நிமிசமும் ஆபத்துத் தானேணே அப்பு!...."

கிழவன் பா¢தாபமும் பச்சாத்தாபமும் வழிய இவர்களைப் பார்த்தான்.

பெருமாள் லாவமாக திரும்பியபடி மெயின் ரோட்டில் ஏறினான். மீண்டும் ஒரு மின்னல் அடிவானம் நோக்கி இறங்கிற்று. காற்று மிகவும் கனமாக இறுக்கிக்கொண்டே போனது. என்ன இது? இன்று எல்லாம் அசாதாரணமாக மாறிவிட்டன. தென்கிழக்கு மூலையிலிருந்து, இது சித்திரைமாதம் என்பதை மறந்துபோய், படுவேகத்தில் ஊதல்காற்று வீசிக்கொண்டிருந்தது.

"பெருமழை வரப்போகுது பெருமாள்...கெதியா..."பெருமாள் பலங்கொண்டமட்டும் மிதித்தான்.

சனங்கள் பரபரத்தவாறு வீடுகளுக்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். பருவந் தப்பிப் பெய்யும் மழையை ஆச்சா¢யமும் ஆவலுமாக வரவேற்கும் பாவம் அவர்கள் முகங்களில் தொ¢ந்தது. இவர்களின் வான் உறுமிக்கொண்டே செல்வதை வாசல்களில் நின்று கவனமாகப் பார்த்தார்கள்.

கனத்த பெருந்துளிகளாக மழை இறங்க ஆரம்பித்தது. கண்ணாடி மங்கத் தொடங்கிற்று. கனவில் தொ¢யும் தோற்றமென ரோட்டும் மரங்களும் விசித்திரத் தோற்றம் காட்டின. பெருமாள் வைப்பரை'ப் போட்டான்.

வேலை செய்யவில்லை....!

பெருமாள் இலகுவில் சளைத்து விடுபவனல்ல. கும்மிருட்டை ஊடுருவி பூனையைப் போல பார்க்க இவர்கள் பழக்கப்படுத்தப்பட்டவர்கள். கூர்ந்து பார்த்துக் கொண்டே போனான்.

என்ன மாதி¡¢ ஒரு மழை! இவன் தனது வாழ்நாளில் காணாத மழை. புழுதி அடங்கிப் போகிற வாசனை மிகுந்தது. இவன் நாசி நிறைய வாசனையை வாங்கி அனுபவித்தான். காலைத்தூக்கி முன்சீட்டில் இலகுவாக வைத்துக்கொண்டான்.

சட்டென்று ரோட்டு வெறிச்சோடிப் போகிறது. ஏனோ? சனங்கள் எவரும் இல்லை. மழைதான் காரணமோ என்னவோ? எதிரே ஒரு வாகனம் கூட வரவில்லை. கொட்டும் மழையில் சளைக்காமல் நனைந்தபடி ஆடி ஆடிப்போன ஒரு கிழட்டு எருதைத்தவிர, வெறிச்சோடும் ரோட்டு.

மூர்க்கத்தனமாக பூமியை மூழ்கடிக்கும் ஆவேசத்துடன் அம்புகளாக மழை வீழ்ந்துகொண்டிருந்தது. வானம் எச்சா¢க்கிறமாதி¡¢ அடிக்கடி பெருமிடிகளைக் கொடுத்தது. கூடவே உச்சியிலிருந்து கீழ்வான நோக்கி வானத்தை கூறுகளாகப் பி¡¢க்கும் கூர்வாளென பாயும் மின்னல்.

இவர்கள் எல்லோருக்கும் ஏனோ மயிர்க்கால்கள் குத்திட ஆரம்பித்தன. இதைவிட குருதியை உறையவைக்கும் குளிரை தாங்க இவர்கள் பழகிக்கொண்டவர்கள். ஆனால் இன்று என்னவாயிற்று? எலும்புக் குருத்துக்குள் ஊடுருவிப் புகுந்து கொள்கிற குளிர்.

அருள் கைகளைத் தேய்த்து சூடாக்கினான். நெஞ்சுக்குக் குறுக்கே கைகளைக் கட்டிக் கொண்டான். இவனைப் பார்த்து இயல்பான தோழமையுடன் சி¡¢த்தான். அருள் இன்று ஏனோ வழமையை விட அதிகமாக இளிக்கிறான். முகத்தில் ஒரு விசித்திரமான ஒளி பிறந்தது அருளுக்கு.

இவனுக்கு ஏனோ திடீரென அம்மா, சுலோ அக்கா, சுந்தா¢ அக்கா, எல்லோரும் உதித்தார்கள்.

மழையுடன்சேர்ந்து அம்மா மேனியில் மணக்கிற கற்பூரவாசனை வீசிற்று. மழையில் கற்பூரத்தை கரைத்தவன் எவன்?

சுந்தா¢யக்காவின் பொ¢யகண்கள் முன்னே தோன்றின. இரு கனத்த வைரத்துளிகளைச் சிந்தின. சுந்தா¢யக்கா இதமாக இவன் கைகளைத் தொடுவது போலிருந்தது. சுந்தா¢யக்கா இந்த மழையிலும் வேலைக்குப் போயிருப்பாள்!

சுலோ அக்காவின் கீச்சுக்குரல் பேய்க் காற்றில் கலந்து வந்தது. இவனை, ஆதங்கமும் பொறுக்க முடியாமல் பீறிடுகிற அன்புமாக சுலோ அக்கா அழைத்துக்கொண்டு தொண்டைக்குழியைப் பிளந்துகொண்டு ஒரு நாகமென வெளிவந்தது.

இவன் கண்களைத் திறந்தான். பெருமாள் ஒரு வளைவில் வேகத்தை மாற்றாமலே லாவகமாகத் திரும்பிக் கொண்டிருந்தான். சூரன்தான்! ஒரு நூறுயார் தூரத்துக்கப்பால் பார்வை புலப்படாதபடிக்கு கனத்த திரைகளாக மழை விழுந்துகொண்டிருக்க, வைப்பர் வேலைசெய்யாமலே படுவேகமாக வானைச் செலுத்திப் போகிறான்! வேறு எவனால் இப்படி முடியும்? அசகாயசூரன்தான்!

ரோட்டு நேரே கோடுபோட்டதெனச் செல்கின்றது. பெருமாள் கிழித்துக்கொண்டு போனான்.

ஏன்?...ஏன்...? என்ன...?

பெருமாள் சடக்கென்று பிறேக் போட்டான். எதிரே ஏதோ பிசாசுத்தனமாக நெருங்கிக் கொண்டிருந்ததாக எல்லோரும் உணர வாரம்பித்தார்கள்.

பெருமாள் கோணாமலையைத் திரும்பிப் பார்த்தான். கோணாமலை இறுகிய முகத்தவனாய் "முன்னேபோ" என தலையைக் குலுக்கினான். எல்லோருக்கும் வேகமாக மூச்சு வாங்கவேண்டும் போலிருந்தது. உள்ளங்கையை இறுகப் பொத்திக் கொண்டார்கள்.

பெருமாள் நிதானமாக முன்னே போனான். தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்த்துக்கொண்டே போனான். எல்லா வீடுகளும் தெருவாசலைப் பூட்டியபடி மெளனமாய் மழையில் கொட்டக் கொட்ட நனைந்து கொண்டிருந்தன.

எதிரே ஒரு சிறிய ரோட் மெயின் ரோட்டில் கலக்கும் அந்தச் சந்தியில் ஏதோ கள்ளத்தனத்துடன் வஞ்சகம் பு¡¢ய ஒளிந்திருப்பதாகப் பட்டது. பெருமாள் கொட்டும் மழையில் வெளியே தலையைப் போட்டான்.

பொ¢ய வாகனம் ஒன்று, தனது பூதாகரமான உடலை மறைக்கப் பெரும் பிரயத்தனம் செய்தவாறு நின்றுகொண்டிருந்தது!

...பெருமாள் கொடுப்புகளை இறுக நெறுமினான்...முகம் சட்டென கறுத்து வீங்கிப் போனது.

கோணாமலைபு¡¢ந்து கொண்டான். கண்கள் இரத்தம் கொட்டுபவையெனச் சிவந்தன. இவர்கள் எல்லோருக்கம் பு¡¢ந்துவிட்டது. மண்டைக்குள் ஒரே 'விறு விறு', மிக வேகமாக மூச்சுவந்தது. உடல் தகிப்பதெனச் சுட்டது.

"ரெடி...ரெடி...ரெடி..." என இதயம் துடித்தது. உத்தரவுகளைப் பெற ஆயத்தமாக இருந்தார்கள். ஒவ்வொரு அங்கமும் துடிக்கவாரம்பித்தது.

கோணாமலை பரபரத்தான்.

"அம்பிட்ட கையழுங்கையுக்குள்ளை விடு... உடைச்சுக்கொண்டு தப்பவேண்டியதுதான்... எங்கெங்கையெல்லாம் நிக்கிறாங்களோ?... வளைச்சுப்போட்டான்களோவும் தொ¢யாது.... சனியன் பிடிச்ச மழை!..."

பெருமாள் வேகமாக பின்னே போக ஆரம்பித்தான். இவன் பின்னால் பார்த்தான். பின்புறமிருந்தும் 'வாகனம்' ஒன்று பிசாசு மாதி¡¢ நெருங்கிக்கொண்டிருந்தது!

பக்கத்திலே ஒழுங்கைமாதி¡¢ ஒரு ஓடை தொ¢ந்தது. பெருமாள் பெரும் பிரயத்தனத்துடன் உள்ளே நுழைய முற்பட்டான். ஆனால் அதற்குள் அவர்கள் முந்திக்கொண்டார்கள். நெருப்பை உமிழ்ந்த படி இருபுறமிருந்தும் அச்சமும் அவதானமுமாக நெருங்க ஆரம்பித்தார்கள். மழை அவர்களுக்க வாழ்த்துச் கூறிக்கொண்டிருந்தது. வானம் இவர்களைப் பார்த்து இடிஇடியெனச் சி¡¢த்தது. மின்னல் பழிப்புக் காட்டுவதென அடிக்கடி பளபளத்துக் கண்சிமிட்டியது.

ஒவ்வொரு நொடியும் மிகப் பெறுமதியானதென இவர்கள் உணர்ந்தார்கள். தோல்வி படுவேகமாக இவர்களை நோக்கி வாயைப் பிளந்தபடி வந்தது. தோற்று விடுவார்களோ இலகுவில் என்ன?....அருள் மிகப் பரபரத்தான்.... தலையை அப்படியும் இப்படியும் குலுக்கினான். உணர்ச்சி வேகத்தில் கிடுகிடுவென நடுங்கினான்....ஏதாவது செய்...அவசரமாக...கெதியாக...

வாயில் கிளிப்பைக் கடித்து இழுத்தான். ஐயோ! இடது கை...இடதுகை...வழமில்லை! இழுபட மாட்டேன் என்கிறது.

இவனுக்கு துரதிர்ஷ்டவசமான தப்பு ஒன்று நிகழ்வது நன்றாகவே தொ¢ந்தது.

தொடைகளிலும், கணுக்காலிலும் குதிரைபலம் சேர்ந்தது. கால்விரல்களில் முழுபலத்தையும் சேர்த்துக்கொண்டே உந்தி எழுந்தான். பேய்த்தனமாக ஊதிக்கொண்டிருந்த காற்றிலும், பெரு அம்புகளாகத் துளைக்கும் மழையிலும் ஒருகணம் 'ஜிவ்'வெனப் பறந்து மழையில் நனைந்து சொசொதவென அனங்கிக்கொண்டிருந்த சகதியில் விழுந்தான். அவசர அவசரமாக நாலைந்து சுற்றுக்கள் புரண்டு தூரவிலகினான்.

இவனுக்கு பு¡¢ந்துவிட்டது....அவ்வளவுதான்...இன்னும் ஒரு நொடிதான்...அருள்! அடமுட்டாளே!...அவசரப்பட்டுவிட்டாயே!

தொடைகளில் இலேசாக அடிபட்டிருக்க வேண்டும். நொண்டிக்கொண்டே எழுந்தான். கால்போன திக்கில் ஓட ஆரம்பித்தான். செம்மண் நிறத்திலே கணுக்கால்வரை உயர்ந்து கனவேகத்துடன் வெள்ளம் ஒழுங்கைகள் வழியே பாய்ந்துகொண்டிருந்தது. 'சளசள' என்று இவன் கனத்த காலடிகளைத் தாங்கமாட்டாமல் வழிவிட்டுக் கொடுத்தது.

பெரும் இடிபோல முதல் தரம் வெடித்தது. வான்ஒருதரம் பெருகக் குலுக்கிற்று. தொடர்ந்து ஒன்று...இரண்டு...மூன்று...நாலு...ஐந்து...ஆறு...

அவர்கள் அஞ்சி நின்று விட்டார்கள் நிலையாக!

இவன் ஒடிக்கொண்டே ஒருதரம் திரும்பிப்பார்த்தான். பெரும் புகைமண்டலமொன்று மழையை விலக்கிச் செல்லும் கரும் பூதமென மேலெழுந்து கொண்டிருந்தது. மூச்சுத் திணறும் கந்தகநெடி எங்கும் சட்டெனப் பரவிற்று.

இவன் மூளை செயலற்றுப் போய்விட்டது. கண்கள் நேரே வெறித்தன. கால்கள் மட்டும் தம்பாட்டில் இவளை கனவேகமாக எங்கோ இழுத்துச்சென்றன.

கோணாமலை!...பெருமாள்!...கேதா¡¢....பொ¢யண்ணன்!....கைக்கேல்!...அன்பரசன்!....

அவ்வளவுதான்!...இனியென்ன?...அவ்வளவுதான்...துண்டு துண்டாகப் போயிருப்பார்கள்.

இனி?

இவன் செய்யவேண்டியது என்ன? எப்படியாவது தெற்கு ரோட்டுக்கு பத்திரமாகப் போய்ச்சேர வேண்டும். 'சாமான்' வரும். அவர்களைத் திசை திருப்பி விடவேண்டும். வருகிறவர்களுக்குச் செய்தி தொ¢ந்து திரும்பிப் போயிருப்பார்களோ?....செய்தி சொல்லுவது யார்? இந்தக் காற்றும் மழையுமா?

இவன் தெற்கு ரோட்டுக்குப் போய்ச்சேரவேண்டும்! சனியனே! மழையே! நீ நிற்க மாட்டாயா!.....

வானம் கடைசித்தடவையாக பெருமிடியன்றைக் கொடுத்து ஓய்ந்தது. மழைவேகம் குறைய ஆரம்பித்தது, இவனுக்கு பன்னீர் தெளிப்பதென மெதுவாக தூற்றல்களைப் போட்டது.

இவன் வெகுதூரம் ஓடிவந்து விட்டான். இனிப் பயமில்லைப் போல் இருந்தது. இவன் பெருநடையாக நடக்க ஆரம்பித்தான். இன்னும் மூன்று மைல்களாவது கடக்க வேண்டியிருந்தது. இவன் கடந்துவிடுவான்...எப்படியாவது!

மழை முற்றாக ஓய்ந்தது. மயான அமைதி நிலவிற்று மரங்கள் மழையில் நடுங்கி அஞ்சிப்போய் ஆடாமல் அசையாமல் கண்ணீர் சிந்தின. வெள்ளம் மட்டும் இவனுடன் கூட வந்தது.

ஒழுங்கைகள் வலை பின்னிக் கிடப்பதென திக்குமுக்காட வைத்தன.

சனங்கள் வீட்டு வாசல்களில் நின்றார்கள். இவனை விசித்திரமாகப் பார்த்தார்கள். ஆஜானுபாகுவான ஒரு வித்தியாசமான இந்த இளைஞன், கொட்டும் மழையில் நனைந்து விட்டு எங்கே இவ்வளவு அவசரமாகப் போகிறான்!

ஆறிப்போகலாமே, கொஞ்சம் இளைப்பாறிப் போகலாமே!...அல்லது போகலாமே விட்டுவிட்டால் என்ன.... இன்னும் என்ன என்ன விபா£தங்களும் நிகழக் காத்திருக்கின்றனவோ இன்று!

இவன் போகாமலே விட்டால் என்ன?

சனங்கள் இவனை விசித்திரமாகவும், ஆவலாகவும் புதினம் பார்த்தார்கள். அவர்கள் கண்களில் ஒருவிதமான பயமோ....அன்றிப், பக்தியோ....தொ¢ந்தது. சிலர் கண்களில் அடக்கமாட்டாமல் பீ¡¢டுகின்ற நட்பு தொ¢ந்தது.

ஜன்னல்களில் நிலவு முகங்கள் தோன்றின. கொஞ்சம் விழிகளால் இவன் முகத்தைத் துளைத்தன.

"போகாதே....போகாதா...." எனக் கெஞ்சுவதுபோல் இருந்தது அவர்களின் பார்வை.

இவன் விரும்பினால் ஒரு வீட்டுக்குள் புகுந்து ஓய்வெடுக்கலாம்.

இவன்தான் ஒரு வீட்டுக்குள் போகமாட்டானே? இவனுக்கு இவன்வேலை பொ¢து. தெற்கு ரோட்டுக்கு விரைவில் போய்ச் சேரவேண்டும். ஓழுங்கைகளை விட்டுப் பி¡¢ந்து ஒரு ரோட்டில் ஏறி விடுவிடென நடக்க ஆரம்பித்தான்.

கொஞ்சம் வயல்கள் இடையில் இவனைக் கண்டன. மழை நீரை ஆவலாக உறிஞ்சிக் குடித்துக்கொண்டிருந்தன. வருணதேவனோ இவன் என, நன்றியுடன் இவனை மெளனமாகப் பார்த்தன.

இவன் தாண்டிப்போனான்.

ஒரு மாதா கோயில் தொ¢ந்தது. கன்னிமோ¢ ஒரு கையில் குழந்தை ஏசுவை ஏந்தியபடி இவனைக் கனிவுடன் பார்த்தாள். மறுகளை காற்றில் தூக்கி இவனுக்கு ஆசிர்வாதங்களை அனுப்பினாள்.

இவன் தாண்டித் தாண்டிப் போனான்.

கோயில் ஒன்று வந்தது. விசித்திரம் தான்! ஊ¡¢லிருந்து கொஞ்சம் விலகி தனியே இருந்தது. சில பனைகளுடன் சல்லாபித்தபடி. வெறுமையாக கதவுகளைத் திறந்து போட்டபடி இவனை ஆதங்கத்துடன் அழைப்பது போல இருந்தது. வானோக்கி உயரும் மணிக்கோபுரம் இவனை "வா" என அழைப்பதெனத் தோற்றம் காட்டிற்று.

இவன் விரும்பினால் கோயிலுக்குள் சற்று நேரம் படுத்து இளைப்பாறலாம்!

இவன் ஆறமாட்டான். இவனுக்கு வேலை பொ¢து. தெற்கு ரோட்டுக்கு கூடிய விரைவில் போய்ச்சேர வேண்டும். தனியாக நடந்ததோ....அல்லது...ஓடியோ....

மீண்டும் ஓட ஆரம்பித்தான்.

இவனுக்கு சற்றுக் களைப்புத் தொ¢ந்தது. அதிர்ச்சியும் ஓட்டமும்....சற்றுக்களைத்துத்தான் போனான். வான் ஏதாவது போகுமெனில் தொற்றி விடுவான். விரைந்து போய்ச் சேரலாம்....

சற்றுத் தூரே தெற்கு ரோட்டை போய்ச் சந்திக்கிற பாதை இவன் வழியை செங்குத்தாக வெட்டிப்போவதைக் கண்டான். பழைய காலத்து வான் ஒன்று நிறைந்த சுமையுடன் முக்கி முனகிப்போய்க் கொண்டிருந்தது. கையைத்தட்டினால் கேட்குமா? நிற்பாட்டுவார்களா? இவனையும் தங்களுடன் அழைத்துப் போவார்களா?

கையைத் தட்டினான். திரும்பத் திரும்பத் தட்டினான்.

"வரட்டோ?...நானும் வரட்டோ!...."

மெல்ல ஓடிக்கொண்டே கேட்டான்.

"வா...வா...ஓடி வா!..." விசித்திரமான வேற்றுப் பாணியில் ஒரு குரல் கூப்பிட்டது.

இவன் நெருங்கிக் கொண்டிருந்தான். வெற்றுடம்புடன் சிலபேர் இருந்தார்கள். எல்லோரும் ஆண்கள். எங்காவது கோயிலுக்கு போய் வருகிறார்களோ?

இவன் மிகவும் நெருங்கிவிட்டான்.

வான் நின்றுவிட்டது. பழகாத புதிய முகங்கள் போலும்! வேறு புறம் திரும்பி அசட்டையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இல்லை....இல்லை...இல்லவே இல்லை! சட்டென்று சொல்லி வைத்தாற்போல இவன் முகம்பார்த்து எல்லாரும் திரும்பினார்கள். கண்களில் சொல்லொனா வன்மம் தொனித்தது.

ஒரே சமயத்தில் குதித்தார்கள். கைகளில் 'பளபள' எனக் குத்தீட்டிகளுடன் துப்பாக்கிகள் மின்னின. இவன் இதயம் சடக்கென நின்றுவிட்டது ஒருகணம்.

தொலைந்தான்! இவன் எதிர்பார்க்கவில்லை....கனவில் கூட...."அவர்கள்" இப்படி ஒரு கோலத்தில் தந்திரமாக உலாவுவார்களென!

துப்பாக்கிகள் இவனை பசியுடன் நெருங்கிச் சூழ்ந்தன. மார்பை நோக்கி ஒரு இடி இறங்கிற்று. பிறகு தொடைகளில் நடுவே குறிபிசகாத ஒரு உதை.

சுருண்டு விழுந்தான். தலைமயிரைப் பற்றி இழுத்து வானுக்குள் எறிந்தனர்.

இரத்தமும் நிணமும், குமட்டும் வாசனையைப் பிறப்பித்துக் கொண்டிருக்க சிதறிப்போன தசைத்துண்டுகளாக.....

கோணாமலை! கேதா¡¢!....பெருமாள்!.....பொ¢யண்ணன்!....மைக்கேல்!....அன்பரசன்.....

எல்லையற்ற அந்தகாரம் இவனைச் சூழ்ந்தது.




4. கோசலை

"குலம்!....மாடுகளுக்குக் கொஞ்சம் வைக்கல் இழுத்துப்போடு மேனே"

குலம் மல்லாந்து படுத்துக் கிடந்தான். ஓலைப்பாயில் தலையணைகூட இன்றித்தான் இவன் படுப்பான். முதுகு வலிக்குமா, இல்லையா? இவன் ஏன் ஒரு காட்டுப் பிறவி மாதி¡¢ இருக்கிறான்!

அம்மா திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தவாறே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தான்.

"கொஞ்சம் வைக்கல் இழுத்துப் போடன் அப்பன்....மாடுகள் கத்துதெல்லவே!......"

குலம் நெற்றியில் முழங்கைகளை அழுந்தப் போட்டவாறு, கால்களை ஆட்டியவாறு படுத்துக் கிடந்தான். அம்மா இவனையே பார்த்துக் கொண்டிருந்தான். மார்பில் உரோமங்கள் படர்கிற வயது. முரட்டுதனமான உடல்பாகு. குரல்கூடக் கட்டைக்குரல் இவனுடைய அப்பா மாதி¡¢. நெற்றியில் தூக்கிப் போட்டிருந்த கைகளைப் பார்த்தாள். நரம்புகள் புடைத்துக்கொண்டு விம்மித் தொ¢ந்தன. உள்ளங்ககைகள் முதலையின் முதுகு மாதி¡¢ காய்த்துப் போயிருந்தன. விரல்கள் ஒயிலும் கிறீஸ¤ம் படிந்து பழுப்புநிறமாகத் தொ¢ந்தன. நகக் கண்களில் கறுப்பாக ஒயில் அழுக்குப் படிந்திருந்தது.

"குலம்!....கொஞ்சம் வைக்கல்.....

அவசரமாகப் பாய்ந்து இடை வெட்டியவாறு மகன் சிடுசிடுத்தான்.

"நீயே இழுத்துப்போடேன்...எனக்கு ஒரே அலுப்பு"

அம்மா சற்றே வேதனையின் சாயல் படியச் சி¡¢த்தாள்.

சீலன் இருந்தால் இப்படியா எல்லாம் இருக்கும்? அம்மா சொல்லாமலே வேலை செய்து கொடுப்பான். மாடுகளுக்கு வேளாவேலைக்கு வைக்கோல் இழுத்துப் போடுவான். தண்ணீர் கொண்டு போய் வைப்பான் கோழிகளைக் கவனித்துக் கூடுகளில் அடைப்பான். சமயத்துக்கு தேங்காய் கூட அம்மாவுக்கு துருவிக் கொடுப்பான்.

எவ்வளவு அருமையான மகன்!

அவன் ஏன் அப்படிப் போனான்?

ஊரை நீங்கித் தூரே வயல்வெளிகள் பரந்திருக்கின்றன. இடையிடையே பனங்கூடல்களும் திடல்களும் தனித்துக் கிடக்கின்றன. மாலைநேரங்களில அம்மா அவ்விடங்களில் புல் செதுக்கிக் கொண்டு வரப்போவாள். சைக்கிள் ஓட்ட முடியாது அவ்விடங்களில், சீலன் சைக்கிளில் சாய்ந்த படியே ரோட்டில் காத்து நிற்பான். அம்மா புல்லுக் கட்டுடன் திரும்பி வரும் நேரங்களை அவன் நன்கு அறிவான். அம்மாவின் உருவம் மிகத்தூரே மங்கலாகத் தொ¢யும் போதே ரோட்டை விட்டிறங்கி அம்மாவை நோக்கி விரைந்து போவான். பாரத்தை மாற்றிக்கொண்டு அம்மாவுக்கு முன்னே வீட்டுக்கு சைக்கிளில் பறப்பான்.

அம்மா வழியிலேயே துரவில் உடம்பைக் கழுவிக்கொள்ள முருகன் கோயில் மணி சிணுங்கி அழைக்கும். அம்மா உருகியவாறு கோயிலுக்குப் போவாள். பூசை முடிய நன்றாக இருள் சூழ்ந்து விடும். உள்ளங்கையில் பொத்தியபடி விபூதியும், சந்தனமுமாக திரும்பி வரும்போது, சீலன் வீட்டில் 'பளிச்'சென விளக்கேற்றியிருப்பான்.

மேசைக்கு முன்னால் விளக்கொளியில் முகம் விகசித்துத் தொ¢யும்படிக்கு அவன் உட்கார்ந்திருப்பான். ஏதாவது படித்துக் கொண்டோ, எழுதிக்கொண்டோ இருப்பான். முன்னால் மென்குரலில் இசைத்தபடி ரேடியோ அவனை ரசிக்கும் பக்கத்திலே சைக்கிள் முன்சில்லை ஒயிலாக ஒடித்துச் சாய்த்தபடி அவனைப் பார்த்து பளீரென ஒளிவீசிச் சி¡¢க்கும்.

மகள் அழகிய மொட்டு. மிகவும் சின்னவள்தான். ஆயினும் குசினியில் தேநீர் தயா¡¢க்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பாள். குலத்தை மட்டும் காணக் கிடைக்காது. அவன் வீட்டில் இருக்கும் நேரங்களை அம்மாவுக்கு அறுதியிட்டுக் கூறமுடியாது. அவன் தொழில் அப்படி!

மாடுகள் கழுத்துமணிகள் கிணுகிணுக்க புல்லை அரைக்கின்ற சத்தம் கேட்கும். கூடவே மாடுகள் பலத்து மூசி மூச்சுவிடுவதும் வாலைத் தூக்கி ஈக்களை விளாசி விரட்டுவதும், கேட்கும் சாணியின் மணத்துடன் பசும்புல்லின் வாசனை நாசியில் உறைக்கும், கோழிகள் எல்லாம் ஏற்கனவே கூடுகளில் அடைக்கப்பட்டிருக்கும். குறுகுறு வெனக் கொக்கா¢க்கும். 'படபட' வெனச் சிறகுகளை உல்லாசமாக அடிப்பது கேட்கும்.

சுடச்சுட ஒரு கோப்பை தேநீர்...கடுமையான உழைப்புக்குப் பின், தொழுகையின் பின், மோகனமான இரவின் பிறப்பு நேரத்தில்.....அருமையான தனது பிள்ளைகளுடன் அம்மா அருந்துவாள். அதுவல்லவோ வாழ்க்கை!

எல்லாமே சீலனுடன் கூடவே சேர்ந்து அம்மாவிடம் பி¡¢வு சொல்லாமலே போயினவோ?

அம்மா அலுத்தபடியே வைக்கோல் போரை நோக்கிப் போனாள்.

ஓரே வயிற்றில் உதித்த பிள்ளைகள் ஏனோ இவ்வாறு வேறு வேறு குணம் கொண்டவர்களாய் ஆகிப் போனார்கள்? இரண்டு பேரையும் அம்மா ஒரே மாதி¡¢த்தான் சீராட்டினாள். ஒரே மாதி¡¢த்தான் உணவூட்டினாள். ஒரே பள்ளிக்கூடத்திலேதான், கொண்டுபோய்ச் சேர்த்து விட்டாள். புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு, எண்ணெய் பூசிபடியச் சீவிய தலைகளுடன் அவர்கள் பள்ளிக்கூடம் போவதை வாசலில் நின்று பார்த்து ரசித்தாள்.

குலம் மட்டும் படிப்பை ஒரேயடியாகக் குழம்பினான். அண்ணனுடன் நெடுகலும் சண்டை போட்டான். அம்மாவுடன் கோபித்துக்கொண்டு சிலவேளை சாப்பிடாமலே போனான். ஆறாம் வகுப்புக்குமேல் அவனால் ஏறவே முடியவில்லை. அம்மா அறிவாள், அவனது இளையமகன் மிகவும் புத்திசாலி. ஆனாலும் ஏன் அவனால் படிக்க முடியவில்லை என அம்மாவுக்குப் பு¡¢யவில்லை.

சீலன் அமைதியாகப் படித்தான். அவன் மிகவும் அமைதியான மகன். இரைந்து கதைக்கத் தொ¢யாதவனாக இருந்தான். நடப்பது கூட மிகவும் மென்மை. ஒரு கம்பீரம் இருக்கத்தான் செய்தது. ஆயினும் புல்லுக்குக் கூட நோகாத நடை. கண்கள் பொ¢தாக இருந்தன. உள்ளங்கைகள் மென்மையாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தன. நகங்கள் ரோஸ் நிறமாகவும், நீளமாகவும்....விரல்கள் கூட மெலிந்து நீளமாக நளினமாக இருந்தன, பெண்களைப் போல.

சீலன் ஒரு மோகனமான மாலை நேரம் பிறந்தான். பறவைகளின் கீச்சொலிகள் அடங்கிய பிறகு, மாடுகள் எல்லாம் மேச்சல் நிலங்களிலிருந்து திரும்பி வந்துவிட்ட பிறகு, மென்மஞ்சட் கதிர்களை மண்ணெண்ணெய் விளக்குகள் உமிழ்ந்து கொண்டிருக்கும் நேரத்தில்....அம்மாவின் இடது தொடையை சற்றே உரசியபடி ஒரு வளர்பிறை நாளில் சீலன் பிறந்தான். புணர்பூச நட்சத்திரம். 'இவன் பொ¢ய கா¡¢யங்களைச் சாதிக்கப் பிறந்தவன்' என அவனது சாதகம் சொல்லிற்று.

குலம் அத்த நட்சத்திரம். அது தான் அவனிடம் முரட்டுச் சுபாவங்கள் சேர்ந்து விட்டனவோ? அத்தம், அதமம் என்றார்கள் சாத்தி¡¢மார்.

மத்தியான நேரம் கொடுமையானது. மெளனமானது. காற்றை வெயில் விரட்டிவிடும். ஒழுங்கைகளில் படிந்திருக்கிற புழுதியில் கச்சான் வறுக்கலாம் எனத் தோன்றும். பூவரச மரங்கள் கொடுவெயிலில் வாடித் துவளும். சனங்கள் வெளியில் தலை காட்டவே மாட்டார்கள். சொறி பிடித்த நாய்கள் மட்டும் நாவைத் தொங்கப் போட்டபடி இளைத்தவாறு நிழல் தேடி ஓடித்தி¡¢யும் 'கர்ர்ர்' எனக் கடூரமாகக் கத்துகின்ற காக்க்கைகள் நீர் தேடிப் பறக்கும்.

குலம் ஒரு மத்தியான நேரம் பிறந்தான். பிறந்தவுடன் எட்டு இறாத்தல் நிறை காட்டினான். அம்மா இராஜவலியில் துவண்டாள். மயக்கம் தீர நெடு நேரமாயிற்று. காய்ச்சல் ஓய சில நாளாயிற்று.

என்னவோ அம்மாவுக்கு குலத்தைவிட சீலனை மிகவும் பிடித்தது. அவன் அவளை விட வளர்ந்து விட்ட பிறகும், மேலுதடு அரும்பிய பிறகும்...அவனது கேசங்களை வருடுவதில் அம்மா இன்புற்றாள். ஒரு குழந்தையினது போல மிகவும் மிருதுவான தலைமயிர்.

குலத்துக்கு மிகவும் முரட்டுத் தலைமயிர். சுருண்டு சுருண்டு இருக்கும். கண்கள் சிறுத்து உள்வாங்கி இருந்தன. மேனியில் மண்ணெண்ணெய் நாற்றமும், ஒயில் நாற்றமும், வியர்வை வாடையும் சதாகாலமும் வீசிற்று. அவன் தொழில் அப்படி. குலம் ஒரு மெக்கானிக் ஆகவேண்டி ஆயிற்று. அவனது மாமனைப் போல, நேரங்காலமற்ற வேலை. சில நாட்கள் சேர்ந்தாற் போல வராமல் இருக்க நேர்ந்தது. நேரத்துக்கு உண்ண முடியாமல் போயிற்று. தன்னைக் கவனிக்க நேரமில்லாமல் போயிற்று. அண்ணன் நிறையப் படிக்க வேண்டுமென நினைத்தானோ, என்னவோ? ஓய்வொழிச்சல் இல்லாமல் வேலை வேலை எனப் பறந்தான்.

நினைக்க நினைக்க அம்மாவுக்கு நெஞ்சைப் பிழக்கும்படி நெடுமூச்சு எறிந்தது.

சீலன் ஏன் அப்படிப் போனான்.

அம்மா மெல்ல மெல்ல போ¡¢லிருந்து வைக்கோலைப் பிடிங்கி இழுத்தாள். நாய் அம்மாவிடம் ஓடி வந்தது. கால்களில், 'சில்லென' இருந்த ஈரமூக்கைத் தேய்த்தது. வாலைத்தூக்கி சுழற்றிச் சுழற்றி ஆட்டியது. அம்மா காலால் எட்டி உதைக்க நினைத்தாள்.

நாயின் கண்களில் நன்றி வழிந்தது. அது சீலன் கொண்டு வந்த நாய். அம்மா அதை உதைப்பாளா? கால்களை மடக்கிக் கொண்டாள்.

'சொதசொத' வென்ற மா¡¢ காலத்தின் சோம்பலான ஒரு நாளில் சீலன் அதைத் தூக்கிக்கொண்டு வந்தான். வந்தபோது வெள்ளைநிறமாக இருந்தது. இப்போ பழுப்பு நிறமாக வளர்ந்துவிட்டது.

மழைநீர் ஓடிக்கொண்டிருந்த தெருக்களில் மிகவும் நனைந்துபோய் அனுங்கிய குரலில் கத்தியபடி நடுங்கிக் கொண்டிருந்தது. யாருக்கும் தோன்றாத இரக்கம் அவனுக்குள் சுரந்தது. தூக்கிக்கொண்டு வந்தான். ஓலைப் பெட்டியால் கவிழ்த்து மூடினான். பொ¢ய கா¡¢யவாதி போன்ற பாவனையுடன் அம்மாவுக்குச் சொன்னான்.

"வளர்ந்தாப் பிறகு நல்லது...மரநாய் வராதம்மா....கோழிகளுக்குக் காவலாயிருக்கும்."

தினமும் செங்கா¡¢ப் பசுவில் பால் கறந்து ஊட்டினான். அவனுக்குத் தொ¢யும், எந்தப் பசுவின் பால் ருசியும், கொழுப்பும் மிக்கதென்று.

அம்மா மாடுகளை நோக்கிப் போனாள். நாய் அம்மாவின் கால்களைத் தடுக்கப் பண்ணி விளையாடியபடி பின்னே ஓடியது.

வாலிபத்தில் துள்ளுகிறது நாய். கொழுப்பேறி உடல் பளபளக்கிறது. நன்றாகத் தான் கொழுத்துவிட்டது. சீலன் கூட கொழுகொழு என்றுதான் இருந்தான். திரட்சியான கன்னங்களும், காந்தக் கண்களுமாக...எவ்வளவு அழகனாக இருந்தான் இந்த அம்மாவின் மகன்!

அமைதியாக இருந்தான். ரேடியோவைக் கூட சத்தமாக முடுக்கி விட மாட்டான். அவனைச் சுற்றி மட்டுமே இசை இருக்கும். அவன் படிக்கும்போது கூட ரேடியோ முன்னாலிருந்து எதாவது முணுமுணுத்துக் கொண்டிருக்கும். சைக்கிளைத் துடைக்கும் போதும் பாடியவாறு பார்த்துக் கொண்டிருக்கும், ஒவ்வொரு நாளும் உதயகாலத்தில் 'பளபள' வென மின்னுமாறு சைக்கிளைத் துடைப்பான். காற்று இருக்கிறதா எனக் கவனித்து திருப்தியுடன் தலையைக் குலுக்குவான். எதிலும் ஒரு ஒழுங்கு அவனிடம் இருந்தது.

அவன் போன பிறகு எல்லாமே ஒழுங்கற்றுப் போயிற்று. ரேடியோ அநேகமாக மெளனித்து விட்டது. அந்த வீடே ஜீவனற்றுப் போயிற்று. சைக்கிள் சீந்துவாரற்று தூசி படிந்துபோய், ரயர்கள் காற்று இறங்கி மெலிந்துவிட சுவரோடு சாய்ந்து வைக்கப்பட்டு விட்டது.

குலத்துக்கு சைக்கில் அவசியமென்றில்லை. அவனுக்கு நேரத்துக்கு ஒரு வாகனம், காரோ, வானோ, மோட்டார் பைக்கோ....காற்றைக் கிழித்துக்கொண்டு வருபவனென வந்து நிற்பான்.

சீலன் போன பிறகு இந்த வீட்டில் முரட்டுத்தனமும், மெளனமும், அம்மாவின் ஏக்கப்பெரு மூச்சுகளும் மட்டுமே மிஞ்சிநிற்கின்றன. மகளோவெனில் மிகவும் சின்னவள். பு¡¢யாத பேதை. அழகிய சிறு மொட்டு.

சீலன் ஏன் வீட்டை விட்டுப் போனான்?

அம்மா நன்றாகவே கவனித்தாள். சில நாட்களாக சீலன் சா¢யாகவே இல்லை. பா£ட்சை வேறு நெருங்கிக் கொண்டிருந்தது.

எதையோ குறித்து தீவிரமாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதாகத் தோன்றியது; எதையோ குறித்து மிகவும் கவலை கொள்பவனாகவும் தொ¢ந்தது.

பா£ட்சையை நினைத்துக் கலவரப் படுகிறானே? ஏன், நன்றாகத்தானே படித்தான்!

பிடிப்பில்லாதவன் போலக் காணப்பட்டான். அம்மாவை நிமிர்ந்து பார்ப்பதைத் தவிர்த்தான். வாய்க்குள் ஏதோ முனகிக்கொள்பவனாய் தலையை அடிக்கடிகுலுக்கினான். இரவுநேரங்களில் நித்திரையைத் தொலைத்து விட்டான். புரண்டு புரண்டு படுக்கின்ற அரவங்கள் கேட்டன. காலை நேரங்களில் அவன் சைக்கிளைத் துடைப்பதில்லை. ரேடியோவை மீட்டுவதில்லை. ஆம்! ரேடியோவை அவன் மீட்டுவதாகத் தான் அம்மா இவ்வளவு காலமும் எண்ணினாள். ரேடியோவில் இருந்து அவனது இனிய சா¡£ரமே மிதந்து வருகிறது போல...உலகின் இனிய வஸ்துகள் யாவும் அவனுக்காகவே படைக்கப்பட்டிருப்பதென....அவன் தொட்டதெல்லாம் துலங்கும் என....அவனுக்காக எங்கோ ஒரு அ¡¢ய நங்கை வளர்ந்து வருகிறாள் என...அவர்கள் அம்மாவுக்கு அழகிய, மதலை குதம்பும் பேரக் குழந்தைகளைப் பெற்றுத் தருவார்கள் என....

சீலனோ எனில், சில நாட்களாக ஏனோ தானோ என மாறிவிட்டான். பா£ட்சை எழுதப் போனான். மற்றப் பையன்களிடம் காணப்பட்ட ஆர்வமோ பரபரப்போ அவனிடம் காணப்படவில்லை. அம்மா அவனை ஏதும் கேட்கவில்லை. அவளது இனிய குழந்தையைத் தொந்தரவு செய்ய அவள் விரும்பவில்லை. எங்காவது காதல், கீதல்...என்று ஏதாவது?....அவனாகவே சொல்லட்டும் என விட்டு விட்டாள்.

"நேரமாகுதெல்லே மேனே...."

சா¢யாகச் சாப்பிடத்தானும் இல்லை. சைக்கிளில் ஏறி உட்கார்ந்தான், வழமை போல் ஒரே தாவலில் ஏறிப் பறந்து விடவில்லை.

மிக நிதானமாக ஏறி உட்கார்ந்தான். காற்றை அளப்பவனைப்போல் சுற்றிலும் பார்வை ஓட்டினான்.

"போயிட்டு வாறன் அம்மா....."

"வடிவாக் கடவுளை நேர்ந்து கொண்டு போ...."

பிறகும் ஏன் நிற்கிறான்......

"நேரமாகுதெல்லே...."

"நான் போறன்....." மொட்டையாக முணுமுணுத்தான்.

மெல்ல மெல்ல ஒரு கிழவனைப் போல உழக்கிக்கொண்டு போனான். அம்மா அவன் பின்னாலேயே போனாள். தெருவில் இறங்கி நின்றுகொண்டு அவன் போவதைப் பார்த்தாள் முடுக்கால் திரும்பி மறையுமுன் 'சட்' என ஒருதரம் திரும்பிப் பார்த்தான்.

அம்மா உள்ளே வந்தாள். சற்று நேரம் திண்ணையில் உட்கார்ந்தாள். பிறகு, தலைக்கு எண்ணெய் பூசி சீவி முடிந்துகொள்ள நினைத்து எண்ணெய்ப் போத்தலைத் தேடினாள்.

வாசலில் யாரோ சைக்கிளில் வந்து நிற்பதைப் போல உணர்ந்தாள். எட்டிப்பார்த்தாள்.

சீலன்!

என்னவாயிற்று இன்று இவனுக்கு?

மீண்டும் சீலன் உள்ளே வந்தான். எதையாவது மறந்து போய் விட்டுவிட்டுப் போனானோ?

திண்ணையில் ஏறி அமர்ந்தான். முகம் செத்துப்போய் இருந்தது.

"ஏன் மேனே தலையிடிக்குதோ....."

"சாச் சாய்....."

குனிந்துநிலத்தை கீறவாரம்பித்தான்.

"இரு கோப்பி போட்டுத் தாறன்...."

"........"

"இண்டைக்குப் பாடம் உனக்கு ஓடாதோ?"
அசிரத்தையாகத் தலையைக் குலுக்கினான்.

"அப்ப ஏன் ஒரு மாதி¡¢யாய் இருக்கிறாய்?"

"......."

"காசு....கீசு....ஏதாவது வேணுமோ?"

சி¡¢த்தான் அவசரமாகக் கோப்பி கொண்டு வந்து கொடுத்தாள். வாங்கினான். இல்லை, பறித்தான்! அவனது ஆவலும் பரபரப்பும் அம்மாவை வியப்பிலாழ்த்தின. வாங்கும் போது அம்மாவின் கைகளை அவன் விரல்கள் தீண்டின. என்றுமில்லாத அழுத்தம் அவ்விரல்களில் இருந்தது. உள்ளங்கைகள் பிசுபிசுத்து வியர்த்திருந்தன.

"தங்கச்சி எங்கை அம்மா......?"

"ப்ச்...உங்கை தான் எங்கையாவது போயிருப்பாள்"

"......"

"ஏன்"

"சும்மா தான்"

"அவளைப் பார்த்துக் கொண்டு நில்லாமல் வெளிக்கிடு....நேரம் போகுது....."

ஏதோ ஒரு உறுதியுடன் விருட்டென எழுந்தான். விறைந்து நின்று கொண்டான். சிறு நேரம். ஒரு நொடி அம்மாவின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். அவளது கண்களுக்குள் எதையோ தேடினான் போலும்!

"நான்......போ-ற-ன்....அம்மா!"

வெடுக்கெனத் திரும்பிச் சைக்களில் பாய்ந்து ஏறினான். வெகுவேகமாகப் போனான். ஏதோ ஒரு இனம்பு¡¢யாத சக்தி அவனை அம்மாவிடமிருந்து பி¡¢த்து இழுத்துச் செல்கிறதென....

அம்மா கலவரத்துடன் தெருவுக்கு விரைந்தாள். சீலன் முடுக்கால் திரும்பி மறைந்து கொண்டிருந்தான். ஒரு தரம் திரும்பிப் பார்ப்பான் என எதிர்பார்த்தாள். அவன் பார்க்கவில்லை. ஆனால் ஹாண்டிலில் ஒரு சிறு பொலித்தீன் பை தொங்கிக் கொண்டிருப்பதை அம்மா அப்போதுதான் கவனித்தாள். சைக்கிள் சில்லு தெரு நீளத்துக்கு பாம்பு ஊர்ந்து போன சுவடாகத் தடம் பதித்துத் தொ¢ந்தது.

அம்மாவுக்கு ஒன்றுமே பு¡¢யவில்லை. புருவங்களைச் சுருக்கினாள்.

மாலையில் யாவும் பு¡¢ந்தன. தயங்கித் தயங்கி ஒரு பையன் சீலனின் கைக்கிளைத் தள்ளிக் கொண்டு வந்தான். தலையைக் குனிந்து கொண்டே போய்ச் சுவருடன் சைக்கிளைச் சாத்தினான். அவனை எங்கோ பார்த்த ஞாபகம் காட்டிற்று அம்மாவுக்கு. அம்மாவின் முகத்தைப் பாராமல் எங்கோ வேண்டுமென்றே பார்வையைத் திருப்பினான்.

வெகு ஆயத்தமாக தொண்டையைச் செருமிச் சா¢பண்ணிக் கொண்டான்.

"சீலன்....இதை...இஞ்சை கொண்டு வந்து விடச் சொன்னவர்...."

"ஆங்!. சீலன் எங்கையப்பு..."

"......"

"ஐயோ! என்ரை பிள்ளை...."

அந்தக் குரலின் அவலம் பையனைத் துரத்தியது. தலையைத் குனிந்தவனாய் விடுவிடென விரைந்து போனான்.

அம்மா பதைத்தாள் கி¡£ச்சிட்டாள்.

"சீலன் எங்கையப்பு...."

பையன் பின்னே தட்டுத்தடுமாறி ஓடியபடி அம்மா கேட்டாள். அவன் பதில் சொல்ல முடியாமல் ஓடத் தொடங்கினான்.

"சீலன் எங்கையப்பு...."

இலேசாக குளிர்ந்துபோய் தன்னைக் கடந்துபோன காற்றை, அம்மா கேட்டாள், அது மெளனமாகப் போனது.

இவ்வாறான எத்தனை அன்னையா¢ன் சோகங்களை அது பார்த்திருக்கிறது! அது பேசாமல் போனது.

"ஐயோ, என்ரை சீலன் எங்கே...."

சிவந்து மின்னிக் கொண்டிருந்த அந்திவானை அம்மா கேட்டாள்.

இவ்வாறான எத்தனை சீலன்கள் அதன் கீழ் உள்ளனர். அது பேசாமல் கண்ணை மூடிற்று.

"சீலன் எங்கை?"

அவளுக்குத் திருப்பிதயான பதிலைத் தர ஒருவரும் இல்லை.

"சீலன் எங்கை?"

அம்மாவின் பா¢தாபமான அக்கேள்வி ஊர் மேல் ஓங்கி அடித்தது. அம்மாவைச் சுற்றி ஊர்ப்பெண்கள் ஒவ்வொருவராகக் கூடத் தொடங்கினார்கள்.

அவளுக்குப் பு¡¢ந்தது சீலன் எங்கே போனான் என்று! இவ்வாறான எத்தனை கதைகளை அவர்கள் அறிந்திருக்கின்றனர். அம்மாவை ஆதரவாக உள்ளே கூட்டிப்போயினர்.

பிறகு,

அந்த எளிமையான சிறிய வீட்டின் ஆனந்தவாழ்வும் அவனுடன் கூடப் போய்விட்டதாய்....

வெறுமை,

மாலை நேரங்களில் அம்மா ஊரை நீங்கித் தூரே இருக்கின்ற வயல்வெளிகளிலும், பனங்கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கின்ற திடல்களிலும் புல் செதுக்கிக் கொண்டு வரப் போவாள். முழுத் தூரமும் இளைத்து, இளைத்து முதுகொடியச் சுமந்து வந்தாள்.

அவள் பாரத்தை மாற்றிக்கொள்ள யாருமில்லை.

அவள் பாதி வழியில் வரும்போதே முருகன் கோயில் மணி சிணுங்கிக் கேட்கும். அவளால் வேளா வேளைக்கு பூசை காணப்போக முடியவில்லை. அவள் போகும்போது கோயில் நிசப்தமாக இருளில் மூழ்கி இருக்கும். பூசை முடிந்து போனதின் தடங்களாக. சிந்திக் கிடக்கின்ற சில மலர்களும்...மெல்லமெல்லக் காற்றில் கரைந்து கொண்டிருக்கிற கற்பூர வாசனையும்.... முணுக்கென எ¡¢கின்ற ஒரு சிறு தூண்டாமணி விளக்கும்...இழுத்துப் பூட்டப்பட்டிருக்கிற சித்திர வேலைப் பாட்டுடன் கூடிய கனத்த கதவும்...

அம்மா வாசலில் நின்று தனியே தொழுதாள். தனது அருமையான புதல்வனின் நலத்துக்காக அம்மா தினமும் தனியே நின்று உருகினாள்.

வீட்டுக்குத் திரும்பிவரும் நேரங்களில் மாடுகள் பின்புறத்தில் ஒன்றையன்று கொம்புகளால் குத்தி விரட்டியபடி துள்ளித்தி¡¢யும். கண்ட இடத்திலெல்லாம் குளம்புகளால் உழக்கிய அடையாளங்களும்...சாணியும்...

அம்மாவே ஒவ்வொன்றாக இழுத்து வந்து கட்டைகளில் கட்ட வேண்டியிருந்தது.

கோழிகள் பூவரச மரங்களில் குடிபுகப்பழகின. அம்மா கற்களை எடுத்து வீசுவாள். "சூ" என விரட்டுவாள். நிசப்தமான முன்னிரவு அவற்றின் கொக்கா¢ப்புகளாலும், சிறகடிப்புக்களாலும் நிம்மதி இழந்து தவிக்கும்.

அம்மாவே தனியாக, அவற்றின் கூடுகளில் அடைக்கவேண்டி இருந்தது.

புகை படிந்துபோய் மங்கிய ஒளி சிந்தும் ஒரு சிறு விளக்கு. மேஜையின் மீது சீலனின் புத்தகங்கள். ஒரு சைக்கிள். மெளனமாகி விட்ட ஒரு ரேடியோ. அருகிலே மகள் அமர்ந்திருப்பாள். அழகிய சிறு மொட்டு. வயதுக்கு மீறிய குருட்டு யோசனைகள், கொட்டக் கொட்ட விழித்தபடி தனிமையில் உட்கார்ந்திருப்பாள். பாவம்!

அந்த அருமையான மாலைநேரத் தேநீர் அம்மாவுக்குப் பிறகு கிடைக்கவேயில்லை.

அம்மா வரவர மெலிந்தாள். கண்களைச் சுற்றிக் கருவளையங்கள் தோன்றின. நடை வரவத் தளர்ந்தாள். முன்புபோல உற்சாகமாக வேலைசெய்ய முடியவில்லை. அம்மா வயோதிபத்தை நோக்கி மெல்ல மெல்ல போய்க்கொண்டிருந்தாள்.

இரவு நேரங்களில் நித்திரையின்றி வாடுவாள். புரண்டு புரண்டு படுப்பாள். அலுத்துப்போய் எழுந்து உட்கார்வாள். ஏதோ ஏதோ விபா£த எண்ணங்கள் தோன்ற பெருமூச்சுகள் விடுவாள்.

குலத்தைப் பற்றியும் அம்மாவுக்கு வரவர ஒன்றும் பு¡¢யவில்லை. எப்போதாவது மூன்று நான்கு நாட்களுக்கொருமுறை வருவான். அம்மா அரைத்தூக்கத்தில் அவஸ்தையுடன் புரளும்போது கனவேகத்தில் வந்த ஒரு வாகனம் வாசலில் நின்று ஒருதரம் உறுமி ஓயும். குலம் 'திமுதிமு'வென உள்ளே வருவான், அம்மாவுடன் ஒரு வார்த்தைகூடப் பேசாமலே...அம்மா முகத்தைச் சா¢யாக ஏறிட்டுக் கூடப் பார்க்காமலே...கைகளில் பணத்தைத் திணிப்பான். சேட்டைக் கழற்றிக் கண்ட இடத்தில் எறிவான். ஓலைப்பாயை வி¡¢த்து, தலையணைகூட இன்றிப் படுப்பான். வலிய கரங்களை நெற்றியின் மீது அழுந்தப் போட்டபடி....கால்களை ஆட்டியபடி...மயிரரும்பும் மார்புகளும் விம்மித் தணிய ஒரு நொடியில் தூங்கிப் போவான்.

இப்போ தூங்கிக் கொண்டிருக்கிறானே, அது மாதி¡¢! ஒரு காட்டுப் பிறவி"

* * *

இப்போ,

குண்டுச் சத்தங்கள் அடிக்கடி கேட்கின்றன. குண்டுச் சத்தங்களைக் கேட்டவுடன் அம்மா நடுங்குவாள். கண்கள் பீதியால் வி¡¢யும். அடிவயிறு குலுங்கும்.

'அவர்கள்' அடிக்கடி ஊர்களைச் சுற்றி வளைத்தனர். கன ரகவாகனங்களின் உறுமலைக் கேட்டவுடன் அம்மா பாதி உயிரற்றுப் போவாள். நீட்டிய துப்பாக்கிகளுடன் "மகன் எங்கே?" என உறுக்கியபடி அவர்கள் போகும் பாவனையில் பிள்ளைகளை அவர்கள் வளைத்துக் கூட்டிச் செல்லும்போது-அம்மா படும் சஞ்சலம் சொல்லி மாளாது.

"கடவுளே!...நான் சாக முதல் என்ரை பிள்ளையை ஒருக்கால் கண்ணிலை காட்டு..."

ஊ¡¢ல் தினமும் இரவுநேரங்களில் குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. அம்மாவின் காதுச் சவ்வுகள் கிழிந்து விடுமாற்போல் 'கிண்' என வலிக்கின்றன. நெஞ்சு நீரற்று வரண்டு போய் விடுகின்றது.

ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.

அம்மாவுக்கு மிகவும் பா¢ச்சயமான அந்த வயல் வெளிகளிலே, பனங் கூடல்களுக்குள் தனித்துக் கிடக்கும் திடல்களிலே பொடியன்கள்' குண்டு வெடிக்கவைத்துப் பழகுகின்றார்கள் என ஊர்ப்பெண்கள் அம்மாவிடம் சொல்லினர்.

சீலனும் அவர்களுள் ஒருவனான இருக்கலாமோ? அம்மா பெரும் பீதியுடன் எண்ணினாள். ஆனால் சீலனைக் கண்டதாக ஒரு நாய் கூட அம்மாவிடம் சொல்லவில்லை.

அவன் எந்த ஊ¡¢ல் குண்டு வெடிக்கவைத்துப் பழகுறானோ? அம்மா பிற ஊர்களை அதிகம் அறியாள். இந்தச் சிறு குடிசைவீடும்....முருகன் கோயிலும்.....புழுதி பறக்கின்ற ஒழுங்கைகளும் ....பனங்கூடல்களும் ...திடல்களும் ...மாடுகளும் ...கோழிகளும் தான் அம்மாவின் உலகம். அவளது பிள்ளைகளே அவளீட்டிய ஈடற்ற செல்வம்.

2

இன்று அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. ஒவ்வொரு சத்தத்திற்கும் சீலனின் நினைவு அம்மாவுக்குள் கனதியாக ஏறிற்று.

குலம்கூட நாலைந்து நாட்களாக வீட்டுக்கு வரவில்லை. இன்றாவது அவன் வருவான் என அம்மா மிகவும் ஆசைப்பட்டாள்.

இவன் என்ன பிள்ளை? வீட்டுக்கு வருவதே குறைவு வந்தவுடன் விழுந்து படுக்கிறான்.

"அம்மா...பசிக்கிது" என ஒரு வார்த்தை!

ம் ஹ¤ம்.

பசி என ஒரு பிள்ளை கேட்டாலே தாயின் வயிறு நிறைந்துவிடுமே. இதுகூடப் பு¡¢யாது. ஒரு காட்டுப்பிறவி.

எங்கேதான் இவன் சாப்பிடுகிறானோ?

இன்று குலம் கட்டாயம் வருவான் என எண்ணினாள் அம்மா. தூங்காமல் விழித்திருந்தாள். திண்ணைக் குந்தில் கால் நீட்டி உட்கார்ந்தாள்.

இன்று மங்கிய நிலவு வெளிச்சம் இருக்கிறது. சந்திரனின் முகம் ஒரு அழகிய பெண்ணின் நெற்றி போலத் தொ¢கிறது. வெள்ளை மேகங்கள் வேகமாக வானில் தி¡¢வதை அம்மா பார்த்துக்கொண்டிருத்தாள். பூவரசயிலைகள் மங்கின நிலவொளியில் பளபளத்துத் தொ¢கின்றன.

அம்மா மட்டும் தனித்திருந்தாள். விளக்கில் சிம்னி புகை படிந்திருந்தது. மகள் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். மாடுகள் மூச்சு விடும் சத்தத்தை, கோழிகள் குறுகுறுப்பதை, நாய் மூச்சுவாங்க அங்கும் இங்கும் ஓடுவதை, நிலத்தைப் பிராண்டுவதை...அம்மா பார்த்துக் கொண்டிருந்தாள்.

சிள்வண்டு ஒன்று கி¡£ச்சென குரலெடுத்து அலற ஆரம்பித்தது. நாய் காரணமற்றுப் பலமுறை குரைத்தது. நிலவைக் கண்டு அது குரைப்பதாக எண்ணினாள்.

செங்கா¡¢ப்பசு வேதனையான குரலில் கதறியது "எதுவோ அதைத் துன்புறுத்துவதாகத் தோன்றியது. அம்மாவால் எழுந்து பின்புறம் போக முடியவில்லை. ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள்.

நடுநிசியின் மணத்தையும், உருவத்தையும் சத்தத்தையும் அம்மா உன்னிப்பாக கவனித்தாள். எங்கோ புல்லாந்தி மலர்ந்திருக்க வேண்டும். குரக்கன் பிட்டு வாசனை மூக்கைக் கமறச் செய்கிறது. புடையன் பாம்பு இரையெடுக்கின்ற போதும் இதே வாசனை! வேலி சரசரத்தது. உடலெங்கும் கபடான அழகுமிக்க முத்திரைகளைப் போர்த்தியபடி கொடிய விஷமுடைய புடையன் பாம்பு வழுவி வழுவி வேலிக்குள் வருகிறதோ?....அம்மாவுக்கு ஒரே பயம்!

குலம் எப்போது வருவான்? அவன் கட்டாயம் வரவேண்டும் என அம்மா முருகனை அடிக்கடி வேண்டினாள்.

அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கின்றன. நிலமும், காற்றும் வானும் அதிர்கின்றன. அடிவயிறு குலுங்குகிறது.


சிறுவயதில், இருளைக் கண்டு பயந்து அம்மாக்கள் பக்கத்திலேயே ஒட்டியபடி படுத்திருந்த புதல்வர்கள் யாருமற்ற வயல்வெளிகளிலே, பிசாசுகளும் உலவத் தயங்கும் நடுநிசி வேளைகளிலே இவ்வாறு தி¡¢ய எப்படிப் பழகினர்? இந்தப் பயங்கர சத்தங்களை எவ்வாறு தாங்கிக் கொள்கின்றனர்? இந்த ஆபத்துக்களை எவ்வாறு சி¡¢ப்புடன் ஏற்றுக் கொள்கின்றனர்? இவ்வாறு வேகத்தையும் வெஞ்சினத்தையும் அவர்களின் மனங்களில் விதைத்தது யார்?

"கடவுளே"....எவளெவள் பெத்த பிள்ளையளோ,...இப்பிடி வாய்க்கு வயித்துக்கில்லாமல்...."

குண்டு ஒன்று பிசிறடித்த சத்தத்துடன் வெடிக்கின்றது. கேட்டுப் பழக்கமில்லாத வித்தியாசமான வெடிப்பு. மிகவும் வெறுக்கத்தக்க, அருவருப்பான சத்தம் அரை குறையில் பிரசவமான ஒரு உயிரற்ற முண்டத்தைப் போல.

அம்மாவுக்கு உடல் 'பட்'டென வியர்த்தது. ஏதோ கெட்ட விஷயம் நடந்தேறியதாக உள்ளுணர்வு சொல்லிற்று.

எழுந்து மேசையை நோக்கிப் போனாள். நடுங்கும் கரங்களால் விளக்கைத் தூண்டினாள். இறங்கி முற்றத்துக்கு வந்தாள். சேலையை இழுத்துப் போத்திக்கொண்டு குண்டுச் சத்தம் வந்த திசையில் பார்த்தாள். நாய் அம்மாவின் காலடியில் நின்றது. வாலைக் கால்களுக்கிடையில் நேராகத்தொங்கப் போட்டபடி செவிகளை வானோக்கி உயர்த்தி எதையோ உற்றுக் கேட்டது. மெல்ல உறுமிற்று. பிறகு வேதனையான குரலில் ஊளையிட்டது. வீட்டைச் சுற்றிச்சுற்றி வேகமாக ஓடியது. அம்மாவின் காலடியில் நிற்பதும்...பிறகு ஓடுவதும்...கெட்ட சேதியன்றை அம்மாவுக்கு உணர்த்த அது துடித்ததும் போலும்!

செங்கா¡¢ப் பசு மீண்டும் கதறியது. சிள்வண்டின் பிலாக்கண ஓசை மிகைபடக் கேட்கலாயிற்று. குரக்கன் பிட்டுவாசனை எங்கும் நீக்கமற நிறைந்தது.

அம்மா சோர்ந்துபோய், துடிக்கும் நெஞ்சுடன் முற்றத்தில் உட்கார்ந்தாள். நெஞ்சு மிக வரண்டு விட்டது. தொண்டைக் குழிக்குள் கனமான வஸ்து ஒன்று அடைத்துவிட்டது போலத் திமிறித்திமிறி மூச்சுவிட்டாள்.

சீலனை நினைத்து நினைத்து ஏங்கினாள். குலம் இன்றாவது வருவான் என்ற நம்பிக்கையும் பொய்த்தது. இரவும் பகலும் முற்றி அம்மாவைச் சுற்றிக் கனமாகப் படிந்தது, துன்பம் தரும் குரலில் ஏதோ சொல்லிற்று.

சற்றுத் தூரே போகும் ரோட்டில் ஒரு வாகனம் விரைந்து போகும் சத்தம். ஆபத்தான நோயாளியை யாரோ சிலர் அவசர அவசரமாகச் சுமந்துகொணடு காப்பாற்ற ஓடிக் கொண்டிருப்பதாக....

எங்கோ ஏதோ பிசகு நடந்துவிட்டது.

கோழிஒன்று பா¢தாபமாகக் குழறுகிறது. மரநாய் பிடித்திருக்க வேண்டும். தீனமான அந்தச் சத்தம் மெல்ல மெல்லத் தேய்ந்து தேய்ந்து தூரே போய், மறைகிறது. நாள் துரத்திக் கொண்டு ஓடிப்போய் இயலாமையுடன் திரும்பி வருகிறது.

விழிகள் திறந்தபடியே இருக்க அம்மா கனவு கண்டாள்.

வயல் வெளியில் அம்மா நிற்கிறாள், சூ¡¢யன் பயங்கரமாகக் காய்ச்சுகிறான். மழையும் பெய்கிறது. வெம்மையாக அம்மா உடலைப் பொசுக்கிற்று மழைநீர். அம்மா ஓடுகிறாள், ஒழைத்து இழைத்து ஊருக்குள் நுழைகிறாள். ஒழுங்கைகளில் வெள்ளம் பாய்கிறது ஒரு சிவப்பு நூல்போல இரத்த ஓடை ஒன்று வெள்ளத்தில் கலக்கிறது. அம்மா அதன்வழி போனாள். வெகுதூரம்...வெ-கு-தூ-ர-ம்...கடையில் வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் சீலன் தலையைக் கவிழ்ந்தபடி இருக்கிறான். கண்களிலிருந்து இரத்தம் தாரை தாரையாகக் கொட்டுகிறது; மழைநீ¡¢ல் கலக்கிறது. வீடெங்கும் இரத்தம். நாய் இரத்தத்தை நக்கி நக்கிக் குடிக்கிறது.

கனவில் இரத்தத்தைக் காண்பது கூடாதே! அம்மா வீ¡¢ட நினைத்தாள். இயலாமல் போயிற்று.

குலம் அன்று வரவேயில்லை. அம்மா முழு இரவும் தூங்காமல் விழித்திருந்தாள். அந்தக் கொடிய இரவின் ஒவ்வொரு வினாடியையும் வேதனையுடன் அனுபவித்தாள்.

கிழக்கு வானிலே விடிவெள்ளி காலித்தது. சந்திரனை அது மேற்கு நோக்கி விரட்டிற்று. காகங்கள் துன்பம் நிரம்பிய குரலில், விடிந்து கொண்டிருப்பதைப் பூமிக்குச் சொல்லின. கோழிகள் சிறகடித்துக் கொக்கா¢த்தன, கூவின. முதல் நாள் இரவில் பறிபோன தங்களது தோழனுக்காக அவை அஞ்சலி செலுத்தின. மாடுகள் மடிநிறையப் பால் சுரந்து கனக்கின்ற வேதனைதாளாமல் கன்றுகளை அழைத்தன. செத்த வீட்டுக்கு தலையைக் குனிந்து கொண்டுவரும் ஒருவனைப் போல, சூ¡¢யன் மெல்ல மெல்ல உதயமாகினான்.

பு¡¢யாத பேதையான மகள் சோம்பல் முறியடித்தபடி எழுந்து வந்தாள். முற்றத்தில் நாடியில் கையூன்றி உறைந்து போய்விட்ட அம்மாவைப், பு¡¢யாத பார்வையால் அளந்தாள். அம்மாவின் ஜீவன் எங்கே ஓடி ஓளிந்துவிட்டது. சிறு காற்றுக்கூட அம்மாவின் பலகீனமாக தேகத்தைப் பூமியில் புரட்டி விடும்.

மெல்ல எழுந்து திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். யாராவது ஒரு வேலையற்ற பெண் அம்மாவைத்தேடி வரமாட்டாளா? கேவும் குரலில் அவளிடம் தன் துன்பங்களைக் கொட்டி அம்மா ஒரு பாட்டம் அழுது ஓயமாட்டாளா?

ஒருவரும் வரவில்லை. பதிலாக மகள் பள்ளிக்கூடம் போக வேண்டியிருந்தது. மாடுகளை அவிழ்த்து மேய்ச்சலுக்குத் துரத்த வேண்டியிருந்தது. கோழிகளைக் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது.

அம்மா யந்திரகதியில், அவற்றைச் செய்தாள். மூளை வேலை செய்து மரத்துப் போயிற்று. கண்கள் காந்தின. அம்மாவுக்கு உட்காய்ச்சல் கண்டுவிட்டது. நெருப்புக் காற்றுப்போல உஷ்ணமான மூச்சுக்கள் உதடுகளைப் பொசுக்கின. காரணமற்று சில தப்படிகள் நடப்பதும்...பிறகு நெடுநேரம் ஒரேயிடத்தில் உட்கார்வதும்...தூரே அர்த்தமற்றுப் பார்வை பதித்து பெருமூச்சுக்கள் எறிவதும்...

சூ¡¢யன் யாருக்கும் பி¡¢வு சொல்லாமல் மறைந்து போனது. இருளுடன் போ¡¢ட்டு தோற்றுப்போய் அழுது வடிகிறது நிலவு. காற்று சோர்வாக நடந்து போய்க் கொண்டிருந்தது. அம்மாவால் இவற்றைக் கவனிக்க முடியவில்லை.

சீலன் என்ன ஆனான்?

குலம் ஏன் நாலைந்து நாட்களாக வரவில்லை?

அம்மா மனதில் கேள்விகள் மாறிமாறி எழுந்தன; ஒன்றை ஒன்று துரத்தின.

தொடர்ந்து மூன்று நாட்களாகக் குண்டுச் சத்தங்கள் கேட்கவில்லை அச்சமூட்டும் பேரமைதி ஊர்மேல் கவிந்தது. மூன்று நாட்களும் அம்மாவால் ஒரு வாய்கூட உண்ண முடியவில்லை. ஒரே விக்கல்!

நாலாவது இரவு வேகமாக வந்தது.

ஓ! இந்த இரவுகள் மிகவும் கொடியன.

அம்மா திண்ணைக் குந்தில் கால்நீட்டி உட்கார்ந்திருந்தாள். மரஇலைகள் நடுநடுங்கிக் கொண்டிருக்க, காற்று அவற்றைச் சீண்டிவிட்டுப் போய்க் கொண்டிருந்தது. நிலவு மேகங்களுக்குள் பயந்து போய் ஒளித்துக்கொண்டு அடிக்கொருதரம் எட்டிப்பார்த்து, 'சடக்' எனத் தலையை உள்ளிழுத்துக் கொண்டிருந்தது. ஒழுங்கையில் யாரோ சுருட்டுப் பிடித்துக்கொண்டு போனான் போலும். 'கும்'பென சுருட்டின் நாற்றம் வீசிற்று. நாய் சுருண்டுபோய் அம்மா பக்கத்தில் படுத்திருந்தது.

வாகனம் ஒன்று வருவதை அம்மா உணர்ந்தாள். அளவான வேகம். கண்களைக் கூசச் செய்யும் ஒளி வெள்ளத்தை உமிழ்ந்த படி வாசலில் நின்றது. 'ஹோர்ன்' ஐ ஒலித்து, வந்துவிட்டதாகச் சேதி சொல்லிற்று.

அம்மா ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள்.

கடவுளுக்கு நன்றி! குலம் இன்று வீட்டுக்கு வந்திருக்கிறான்!

கதவுகளைத் திறந்து அறையுஞ் சத்தம். குலம் மட்டுமல்ல வேறும் சிலர் வந்திருக்கவேண்டும். குசுகுசுவெனக் கதைக்கின்ற சத்தம். படலையை மெல்லத் தள்ளித் திறந்தனர். கூட்டமாக வந்தனர்.

யாரோ ஒருவனைக் கைத் தாங்களில் கூட்டிக்கொண்டு வந்தனர். அம்மா பயந்தவளாய் விருட்டென எழுந்தாள். விளக்கை தூக்கி உயரப்பிடித்தாள்.

குலம் சோர்ந்துபோய் வந்துகொண்டிருந்தான். அவனைத் தாங்கி அழைத்து வருகின்றனர். வலது கையை ஒருவன் மென்மையாகப் பற்றியபடி வந்தான் மணிக்கட்டுக்குக் கீழே இரத்தம் ஊறிப்போன ஒரு துணிப் பந்து!

ஐயோ! இந்த அம்மாவின் முரட்டுக் குழந்தைக்கு என்ன வாயிற்று?

அம்மா அலற நினைத்தாள், முடியவில்லை. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

அம்மா அசைய நினைத்தாள், முடியவில்லை பாதங்களை யாரோ ஆணியால் தரையுடன் சேர்த்து அறைந்ததுமாதி¡¢.

அவர்கள் ஓலைப்பாயை வி¡¢த்தனர். தலையணைகளைப் போட்டனர். குலம் பொறுக்க முடியாமல் முனகியபடி சா¢ந்தான். முகம் மிக வெளிறியிருந்தது. உதடுகள் காய்ந்து தோலு¡¢ந்திருந்தன. மிகவும் தாகமாக இருந்தான். நாவால் உதடுகளை நீவினான்.

"அம்மா....."

தீனக்குரல் அம்மாவை அழைக்கிறது, அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

அவர்கள் கிட்ட வந்தனர். தலையைக் குனிந்தபடி அம்மாவைச் சூழ நின்றனர். ஒருவன் அம்மாவைத் தொட்டசைத்தான் அம்ம இமைக்க மறுக்கும் விழிகளால் அவர்களைப் பார்த்தாள்.

அவர்களை அம்மா அடையாளங் கண்டாள்! நடு நிசிகளில் ...யாருமற்ற வெளிகளில்....தி¡¢கின்ற புதல்வர்கள்!!

ஓ! குலமுமா இந்த அப்பாவி அம்மாவை இவ்வளவு காலமும் ஏமாற்றித் தி¡¢ந்தான்?

"கோப்பி வச்சுக்குடுங்கோ...."

அம்மாவின் தோள்களைக் குலுக்கியபடி ஒருவன் சொன்னான்.

அவளுடைய முரட்டு மகன், பு¡¢யமுடியாத புதல்வன் கையைக் காவு கொடுத்து வந்திருக்கிறான்! தாகத்தால் தவிக்கிறான்!!

கடவுளே! அம்மாவுக்கு கொஞ்சம் பலமளிக்கமாட்டாயோ?

அம்மா எதுவோ கேட்க உன்னினாள். அர்த்தம் குலைந்த பலகீனமான ஒரு முனகல் மட்டுமே வந்தது.

அம்மா அசைய முயற்சித்தாள். பெரும் பிரயாசையுடன் கால்களைப் பெயர்ந்தாள். உடல் முழுவதும் மரண வேதனை போலும் நோவெடுத்தது. ஓரடி எடுத்து வைத்தாள். 'மொளக்'கென ஏதோ சுளுக்கிக் கொண்டது. அம்மா பிருஷ்டம் அடிபட மல்லாந்து விழுந்தாள்.

அவர்கள் அம்மாவைத் தூக்கினர். ஓலைப்பாயை வி¡¢த்தனர். தலையணைகளைப் போட்டனர். பாயில் அம்மாவை மெல்லச் சா¢த்தனர்.

ஊருக்குள் எப்படித்தான் விஷயம் பரவிற்றோ?

அவசர அவசரமாக மண்ணெண்ணெய் விளக்குகள் மீண்டும் ஏற்றப்பட்டன. ஒவ்வொருவராக ஊர்ப் பெண்கள் அம்மாவின் வீட்டு முற்றத்தில் கூடத்தொடங்கினர்.

"கையிலையே வெடிச்சிடுத்தாம்..." ஒருத்தி பீதி கவ்விய குரலில் மற்றவளிடம் குசுகுசுத்ததை, அம்மா கனவிற் கேட்பதைப் போலக் கேட்டாள்.

குலத்தைத் திரும்பிப் பார்த்தாள். அரை மயக்கத்தில் கிடந்தான். சொட்டு சொட்டாக கருஞ்சிவப்பு இரத்தம் தலையணையில் சிந்திக் கொண்டிருந்தது.

முத்து முத்தாக சூடான கண்ணீர் அம்மாவின் கன்னங்களை நனைத்தபடி சிந்தத் தொடங்கிற்று.


3

முதுகுப் பிடிப்புடன் ஒரு முதியபெண். அவள் வெகுவேகமாகக் கிழவியாகிக் கொண்டிருந்தாள். ஊ¡¢ல் ஒருவருடனும் அவள் இப்போ பேசிச் சி¡¢ப்பதில்லை.

ஒரு அழகிய சிறுமொட்டு. பு¡¢யாத பேதை. வாடிக்கொண்டிருக்கும் பூமரம். அவளது வயதுக்கு மீறின குருட்டு யோசனைகள். கவலைகள், ஏக்கங்கள். தாயின் வேலையில் பாதிக்குமேல் இதன் பிஞ்சுத் தோள்களில் பலவந்தமாக இறக்கி வைக்கப்பட்டது. பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காகப் போவதில்லை. போகும் நாட்களிலும் பிந்தித்தான் போகும். ஒரு அழுக்கு யூனிபோமுடன், கலைந்த கேசத்துடன், வாடிய முகத்துடன். கண்களில் பிந்திவிட்டதில் கலவரமும் பயமும் தெறிக்க, மார்பில் புத்தகக் கட்டுக்களை அணைத்தபடி, புழுதி பறக்கும் ஒழுங்கைகள் வழியே ஓட்டமும் நடையுமாக விரையும்.

ஒரு முரட்டு இளைஞன். மணிக்கட்டுக்குக் கீழே அவனது ஒரு கரத்தைத் துணித்து விட்டார்கள். அவனிடம் அடிக்கடி அவன் தோழர்கள் வருகின்றனர். அவன் ஒரு அருமையான மெக்கானிக் மிகவும் மூளைசாலி. அவசியமானவன். ஒற்றைக் கையால் கடுமையாக உழைக்கக்கூடிய அசகாய சூரன். நாலைந்து நாட்களுக்கொரு முறை நடுநிசி நேரம் வீட்டுக்கு வருவான். அவன் முகத்தில் காணப்படும் கடுமையும். எதோ ஒரு வெறியும் காண்போரைப் பிரமிக்கச் செய்யும். அவன் ஒரு முசுடு. அதிகம் பேசமாட்டான். வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவுக்குப் பணம் கொடுப்பான். உடனே ஓலைப்பாயை வி¡¢த்தபடி தலையனைகூட இன்றித் தூங்கிப்போவான்.

வீடு மிகவும் பழையது. ஒரு சிறு குடிசை கூரை மிகவும் உக்கிப் போய்விட்டது. முற்றத்தில் எங்கணும் பூவரசமிலைகள் சருகாக குப்பையாகச் சேர்ந்திருக்கும்.

ஒரு நாய். அதைக் கவனிப்பா¡¢ல்லை. எலும்பெடுத்துத் தொ¢ய மெலிந்துவிட்டது. சொறி பிடித்துவிட்டது. காதுகளில் உண்ணிகள் படையாகப் பெருகிவிட்டன. வளவின் ஒரு மூலையில் மண்ணைத் தோண்டிவிட்டுச், சோம்பிப் படுத்திருக்கும். அது குரைப்பதோ, ஓடுவதோ கிடையாது, விரைவில் இறந்துவிடும்.

அடிக்கடி இந்த வீட்டுக்கு மாட்டுத் தரகர்கள் வருகின்றனர். கதறக் கதற ஒரு பசுவையோ, கன்றையோ இழுத்துப் போகின்றனர். கால்களைப் பரப்பிக் கொண்டு, போக மறுத்து அது கதறும். உதவிக்கு அம்மாவை அழைக்கும். தன் இனத்தை அழைக்கும். பா¢தாபமான குரலில் மாடுகள் எல்லாம் சேர்ந்து அழும்.

இரவு நேரங்களில் அடிக்கடி குண்டுச் சத்தங்கள் கேட்கும் மரநாய்கள் கோழிகளைக் குழறக் குழற தொண்டையில் திருகியபடி இழுத்துப்போகும். உயிரை வாட்டும் அத்தீனமான ஓலம் மெல்ல மெல்லத் தேய்ந்து தூரே போய் மறையும்.

அம்மா இப்போ குண்டுச் சத்தங்களைச் சட்டை செய்வதில்லை. அவள் துன்பங்களுக்கும் இழப்புகளுக்கும் பழக்கப்பட்டவள்.

குலத்தினதும் சீலனினதும் ஜாதகங்களைத் தூக்கிக்கொண்டு பெயர் பெற்ற சாத்தி¡¢மார்களைத் தேடிப் போகிறாள்.

சீலன் புனர்பூச நட்சத்திரம்! ராமன் கூடப் புனர்பூச நட்சத்திரம் தான்!!

அவனும் காடுகளில் வசிக்க நேர்ந்தது! கடலைக் கிடக்க நேர்ந்தது! அதர்மர்களுடன் நெடூகலும் போ¡¢ட்டுக் கொள்ள நேர்ந்தது.

வெல்ல முடியாது என்ற இறுமாப்பில் தென்னிலங்கையில் மமதை கொண்டிருந்தவர்களை அவனும் வென்றான்!

சாபத்தால் பீடிக்கப்பட்டவர்களுக்கு அவனும் விமோசனமளித்தான்!

அவனும் பேதங்களைக் கடந்தவன், குரங்கும் வேடனும் அவனது தோழர்கள்!

ஓ! ஆயினும் ராமன் போ¢ல் அன்பு கொண்டவர்கள் அவன் பா¢வால் துன்புற நேர்ந்தது.

தசரதன்!...கோசலை!...சீதை!

குலம் அத்த நட்சத்திரம். அத்தம் அதமம் என்றார்கள் சாத்தி¡¢மார்.

அவன் ராஜத்துரோகமான கா¡¢யங்களில ஈடுபடுவான் என்றும்......

மிகப் பொ¢ய கண்டங்களில் மாட்டிக்கொள்ள நேரும் என்றும்.....

மறியல் வீட்டுக்குப் போகின்ற பலன் கூட அவனுக்கு உண்டென்றும்.....

கிரகங்கள் யாவும் நீசதிசை அடைந்திருக்கின்றனவென்றும்......



5. அரசி


"......பசிக்குப் பிச்கை கேட்க யா¡¢டமும் என்னேரமும் முடிகிறதா? தனக்கென ஒரு வீடு, தனக்கென்று ஒரு மனைவி, தன் பலவீனத்தை உணர்ந்ததில்தான் மனைவி என்கிற பாத்தியம் கொண்டாட இடமேற்படுகிறது ஆண்களுக்கு பெண்ணோ வெனில் தன் பலத்தை மறக்க, மறைக்கத்தான் மனைவியாகிறாள். ஒன்றிலும் கட்டுப்படாது தனியே நின்று உற்றுப் பார்ப்பதே பெண்மையின் பயங்கரக் கருவிழிகள் தான்...."
- மெளனி


நேற்றிரவு தூக்கமில்லை. சுதா விரைவில் போகப்போகிறாள்; அதைவிட, கிணற்றைப் பழுது பார்க்கும் வேலைகளும் நடந்து கெண்டிருக்கின்றன. தொப்பிக் கட்டு ஆங்காங்கே சிதிலமாகி விட்டது. உட்சுவா¢லும் பூச்சுக்கள் சில இடங்களில் உதிர, ஆலங்கன்றுகளும் வேறும் சில பூண்டுகளும் முளை விட்டிருந்தன. எல்லாவற்றையும் சேர்த்து பழுதுபார்க்க முனைந்து நிற்கிறாள் அண்ணி.

அண்ணியைத் தவிர இந்த வீட்டில் வேறுயார்தான் முனைப்புமிகக் கொண்டவர்களாயுள்ளனர். அண்ணாவுக்கோவெனில் கடைதான் உலகம். கடையையும் அண்ணியின் முகத்தையும் தவிர அவர் வேறெதையும் இப்போ ஏறிட்டுப் பார்ப்பது கிடையாது.

முன்னரெல்லாம், அண்ணா இரவு நேரங்களில் வானத்தைப் பார்த்தபடி நெடுநேரம் நிற்பார். அக்காலங்களில் அவரது நெஞ்சம் கசந்த நினைவுகளை மட்டுமே கொண்டிருந்தது. இருண்ட இரவுகளில் நட்சத்திரங்கள் கொண்டாட்டமாக கண் சிமிட்டுவதைப் பார்த்தபடி நிற்பார். அங்கே அம்மாவும் அப்பாவும் நட்சத்திரங்களாக ஜொலிக்கிறார்களாம். ஒரு நாளைக்கு வடக்குமூலையில் அவை தொ¢வதைக் காண்பார். பிறகொரு நாளில் அவை சற்று இடம் பெயர்ந்து போயிருக்கும். அவை பிரகாசமாக மின்னும் அருகருகாக இருந்து கொண்டு அண்ணாவைப் பார்க்கும். வெகு நேரம் வரைக்கும் அண்ணாவுக்கு அவை சேதிகள் சொல்லும். அவரது கண்களில் நீர் திரளும்.

நிலவு பொழிகின்ற நாட்களில் அண்ணா மிகவும் மனவெழுச்சி கொண்டு காணப்படுவார். கைகளைப் பின்புறமாகக் கட்டியபடி முற்றத்திலோ அல்லது வானம் நிர்வாணமாகத் தொ¢யக்கூடிய இடத்திலோ நின்று மெது நடை போடுவார். அவரது கண்கள் உணர்ச்சி வேகத்தில் பளபளக்கும். அண்ணாவினது உணர்ச்சிகளை அந்த நாட்களில் பு¡¢ந்து கொண்டவர் எவரும் இலர். அவருக்கு நெருங்கிய சினேகிதர்களும் கிடையாது. அந்தக் காலத்தில் எல்லாம் அண்ணா தனக்குள்ளாகவே சில விவகாரங்களைச் சீரணிப்பதும் மீள அசைபோடுவதுமாக இருந்தார். அப்போ, அண்ணா முகத்தில் சி¡¢ப்புத் தொ¢வது அபூர்வம். யோசனை.... சதா குருட்டு யோசனைகளும், கண்களில் அடியாழத்திலிருந்து எட்டிப்பார்க்கும் துக்கக்குறியும்தான்.

அவருக்கு நிறையக் கற்பனைகள். துக்கம் வழிகின்ற கற்பனைகள் தாம் அரைவாசி வாழ்நாளில் இறந்துபோய் விடுவோமென அவர் உறுதியாக நம்பினார். அதை விரும்பக்கூடச் செய்தார். வாழ்க்கை அந்தளவுக்கு அவரை அடித்து வசக்கியிருந்தது. இழப்புக்களாலும், ஏமாற்றங்களினாலும், சத்திக்கு மீறிய செலவுகளாலும் சோர்ந்து போயிருந்தார். பாலனுக்கும், சுதாவுக்கும், சுமிக்கும் அவர் சோறு போடவேண்டியிருந்தது. படிக்க வைக்க வேண்டியிருந்தது, அவர்கள் ஏந்நேரமும் அவா¢டம் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். அவர்களுக்குக் கொடுக்கத் தொ¢யவில்லை. முடியவுமில்லை. அவர்களுக்குப் பராயம் காணாது, சிறிசுகள், அப்படி அவர் எண்ணிக் கொண்டார்.

அண்ணியைப் போலொரு பெண்ணைத் தனக்குக் கல்யாணம் பண்ணிக்கொள்ளக் கிட்டும் என அவர் எதிர்பார்க்கவேயில்லை. அது எப்படி நடந்தது?, என இன்றும் கூட அவர் ஆச்சா¢யப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். அண்ணி வந்த பிறகு அவரும் கூட ஆச்சா¢யப்படும் விதத்தில் மாறித்தான் போனார்.

உண்மையில் ஆரம்பத்தில் அவர் அண்ணியை வெறுத்தார். அவளைக் கண்டு பயந்தார். அவளது பிரகாசமான விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளைப் பார்க்கும் தோறும் அவர் மிரண்டார். அண்ணியின் விழிகளில் கடும்கருமை நிறத்தனவல்ல, ஆயினும் அவளது வெண்விழிகள் வியப்பூட்டும் அளவுக்கு வெண்மையாக இருந்தன. கண்மணிகள் பொ¢தாக இருந்தன. அவை எதிரேயிருப்பவரை ஊடுருவிப் பார்க்கும். அந்தப் பார்வை எவரையும் பணிய வைக்கும் ஆளுமை கொண்டது. அந்த ஆளுமை தான், பிறகு அண்ணாவுக்கு தொற்றியிருக்க வேண்டும். இல்லாவிடில், இந்தப் பத்து வருடங்களில் இவ்வளவு கா¡¢யங்களை ஒப்பேற்றியிருக்க முடியுமா?

அண்ணி கொடுத்த நகைகள் தான் இப்படிப் பல்கிப் பெருகி விட்டனவா என அண்ணாவுக்குச் சொல்லத் தொ¢யவில்லை. அவரால் ஆச்சா¢யப்பட மட்டுமே முடிகிறது.

கல்யாணமான புதிதில் ஒரு நாளிரவு; தனது நகைகளையும் தன்னையும் முழுமையாகக் கழற்றி அண்ணாவிடம் அவள் கொடுத்தாள். அன்றிலிருந்து அண்ணா புதுமனிதராகி விட்டார். அவரது துக்கரமாக சிந்தனைகள் குடியோடிப் போயின. அவர் வாழ விரும்பினார். உலக இன்பங்களை மிகுந்த வெறியுடன் காதலித்தார். அவரது மனதில் புதுத்தெம்பு பிறந்தது. கன்னங்கள் சற்றே மெழுகினாற் போல, தசைப் பிடிப்புள்ளவாகின. மேனி மினுங்கிற்று.

ஆனால், அண்ணி அதற்குப் பிறகு நகைகள் அணிவதைத் தவிர்த்து வந்தாள். இரண்டே வருடங்களில் அவள் கொடுத்ததை விட பத்துமங்கு நகைகள் செய்யுமளவுக்கு அண்ணா 'பொ¢ய மனிதர்' ஆகிவிட்டார். செய்து செய்யுமளவுக்கு அண்ணா 'பொ¢ய மனிதர்' ஆகிவிட்டார். செய்து கொடுக்கவும் செய்தார். ஆனால் அவள் அணிவதில்லை. இப்போதெல்லாம், காதுகளில் வெகு சாதாரணமான தோடுகளை மட்டும் அணிகிறாள். அதுவொன்றே அவளது கீர்த்தி வீசும் முகத்துக்கு வெகு சோவையை அளிக்கிறது. அவள் நெற்றியில் பொ¢ய வட்டமாக குங்குமம் குலங்கும். அது தான் அவளது உண்மையான ஆபரணம். அது மிகுந்த கவர்ச்சியை அளிக்கிறது. சிவந்து விழிக்கிறது. அந்தத் திலகத்தினால் அவள் அண்ணாவைச் சுண்டிச்சுண்டித் தன்பால் இழுத்தாள்.

கடை ஆரம்பித்த புதிதில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளாது. ஏதாவது சாக்குப்போக்குச் சொல்லி, வீட்டுக்கு ஓடிஓடி வருவார். அண்ணியோ வெனில், குறும்புக் குறுஞ்சி¡¢ப்புடன் திரும்ப ஓடஓட விரட்டுவாள்.

"இவ்வளவு காலமும் 'ஙே...ஙே' எண்டு மேகத்தைப் பார்த்து முழிச்சது போதாதா...ஓடுங்கோ, கடைக்கு ஓடுங்கோ...."

அண்ணா திரும்பிச் செல்வார். நடந்துதான் போவார். அதில் அவருக்கு பொ¢ய சுகம் தொ¢ந்தது. கடை கூப்பிடுதூரம்தான். பிறகு, கார் வாங்கிய பின்பும் வீட்டுக்கும் கடைக்கு மிடையே நடைதான். கார் வீட்டின் முன்புறம் அலங்காரமாக நிற்கும். அண்ணியை விடவும் இந்த ஜடங்கள் வீட்டுக்கு அணிகலனா, என்ன? எதி¡¢ல் வரும் கா¡¢ன் பின்சீற்றிலிருந்து முகம் நிறைந்த சி¡¢ப்பும், கும்பிடுகளும் எட்டிப்பார்க்கும். சைக்கிள்களோவெனில், 'ஸ்லோ' பண்ணி வந்தனம் தொ¢வித்தபடி போகும். அவையெல்லாம் 'தனக்கா, தனக்கா' என அண்ணா ஆச்சா¢யப்படுவார்.

"அவளுக்கு, அவளுக்கு!" என முணுமுணுத்தபடி ஏறுநடை போடுவார். அவருக்கு இப்போ சாடையாகத் தொந்தி வைத்துவிட்டது. அண்ணிஅதில் அடிக்கடி செல்லமாகக் குத்துவாள்.

"செல்லவண்டி...கள்ளவண்டி....." என்பாள்.

'அவளால்..., அவளால்!" என்றபடி கடைவாசல்படியை அழுந்த மிதித்து ஏறுவார்.

எதிர்புறமிருந்து 'ஜோன்சன்' முதலாளி கண்களை மிகச் சிறப்பித்துக் காட்டும் கண்ணாடியினூடாக ஓரப்பார்வை பார்த்தபடி அண்ணாவை வம்புக்கிழுப்பார்.

"என்ன முதலாளி...வீட்டை போய் வாறியளோ....?"

எமகாதகன்; ஆள் சா¢யான ஜொலிப் பேர்வழி

"ஊம்...ஊம்" என அண்ணா முனகுவார்.

"தண்ணி விடாய் போலை..கெஹ்கெஹ்ஹே...விடாய்க்கும்! விடாய்க்கும்!! ஹி...ஹி..."

ஜோன்சன் முதலாளியின் பொ¢ய தொந்தி சி¡¢ப்பால் தழுமபிக் குலுங்கும் அண்ணா மானசீகமாக ஜோன்சன் முதலாளியின் தொந்தியில் ஒரு குத்து விடுவார். பிறகு, எதிர்படுகிற பையனை காரண கா¡¢யமற்று விரட்டுவார்.

அண்ணா தான் ஓடிஓடி அண்ணியைப் பார்க்கப் போவார். அவள் கடைக்கு வருவது அபூர்வம். விரல் விட்டெண்ணக் கூடிய தடவைகளே வந்திருக்கிறாள். அந்நேரங்களில் கடை நிறைந்து விடும். றாக்கைகள், ஷோகேஸ்கள் எல்லாம் கொள்ளாமல் வழிவன போல இருக்கும். கடையில் கால்வைக்க இடம் பற்றாது என மொழியத் தோன்றும். ஒரு கோடி சூ¡¢யப் பிரகாசமுள்ள அ¡¢ய வஸ்து உள்ளே நுழைந்து விட்டதென, ஒரு வசீகரத் தோற்றம் கிடைக்கம், அண்ணி சிலநொடி நேரம்தான் நிற்பாள். அவள் நெடுநேரம் நிற்க வேண்டும், கல்லா மேசையடியில் உட்கார வேண்டும், என்பதில் அண்ணாவுக்கு நிறைய ஆசை. ஆனால் அவள் உட்கார்ந்தது கிடையாது, உடனேயே போய் விடுவாள். எல்லாமே வெறிச்§¡டி விட்டது போல ஆகிவிடும் கடைச் சிப்பந்திகள் வாட்டமுற்றது போலக் காசு எண்ணியெண்ணி மாளாது. சாம்பிராணியுடன் மிளகாயும், உப்பும் இட்டுப் புகைக்கும் போது மிளகாயின் காரநெடி உறைப்பதேயில்லை. 'படபட'வென பொ¡¢ந்து வெடிக்கும்.

"இலட்சுமி கடாட்சம்...இலட்சுமி கடாட்சம்" என்கிறார்களே; அது இதுதான் போலும்!

எல்லோருக்கும் அண்ணி எதைக் கொடுத்தாள் என்று சொல்வது கடினம், பாலன், சுமி, சுதா எல்லாரும் அண்ணியைச் சார்ந்தவர்களாகி விட்டனர். கெளசல்யாவைப் பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. அண்ணி நொந்து பெற்ற பெண்ணில்லையா அவள்? அண்ணாந்து அவர்கள் இப்போ தொந்தரவு படுத்துவது கிடையாது. அதிலும் இந்தச் சுதா- அண்ணி வந்த போது ஒரு சின்னப்பெண்ணைப் போன்று அவளைத் தொட்டுப் பார்த்து கையை இழுத்துக் கொண்டவள்- அண்ணியுடனேயே ஒட்டிக்கொண்டாள். அவளைப் பி¡¢ந்தால் அண்ணியின் உடலிலிருந்து உதிரம் பெருகும் என்பதென அண்ணிக்கும் அவள் மீது விசேஷப்பற்றுதல்.

அந்த சுதா இனிப் போய்விடுவாள். இன்னும் ஒரேயரு நாள். அப்புறம் போய்விடுவாள். அண்ணியை விட்டுப் பி¡¢ந்தே இராத சுதா பஸ் ஏறி....பிளேன் ஏறி, அவளுக்கு¡¢யவனிடம் போயே விடுவாள். 'அவன்' அண்ணிக்கு தூரத்து உறவுமுறையில் தம்பியாக வேண்டும். அவர்களுக்குள் முடிச்சுப் போட்டு வைத்தவளும் அண்ணி தான்.

முதுலில் சுதா பிணங்கினாள், பயந்தாள்.

"அந்த ஆள் வில்லன் மாதி¡¢ இருக்கிறான்..." என்றாள்.

அண்ணி தேறுதல் சொன்னாள்.

"உங்கடை அண்ணா.... அப்ப, பொ¢ய முனிவர் மாதி¡¢ இருந்தாரே!...இப்ப எப்பிடி? எனக்கு என்ன குறைவைச்சார்.... அதெல்லாம் சா¢வரும்...."

அப்படிச் சொல்கிற போது அண்ணியின் குரலில் ஒரு குறை இடறிற்று.

"எண்டாலும்...இந்த ஆம்பிள்ளை நம்பேலாதடி....சுதா" என்றாள் நைந்துபோன குரலில்.

அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே 'ஏதோ' உண்டு!

"இப்ப உப்பிடித்தான் சொல்லுவாய்...பிறகுபிறகு அண்ணியை பார்க்க நீ ஓடியா வரப்போறாய்.... எனக்குத் தொ¢யாதா பெட்டையைப் பற்றி...." என்று நையாண்டியாகக் குத்தவும் செய்தாள்.

சுமியையும் இப்படித்தான் தனியே பி¡¢த்தணுப்பினாள். சுமியின் 'விஷயம்' அண்ணா காதில் விழுந்ததும், அவர் வானத்துக்கும் பூமிக்குமாகப் பாய்ந்தார். "யாரவன்?" என்று குதித்தார். "எங்கடை அந்தஸ்தென்ன....குலமென்ன, கோத்திரமென்ன" என்று சொல்ல முனைந்தார். அண்ணி வேறுயாருக்கும் கேட்காத வகையில் அண்ணாவை ஏதோ சொல்லிக் கடிந்தாள். அண்ணா தலையைக் குனிந்து கொண்டு கூனிக் குறுகி அப்பால் போனார். அண்ணாவுக்கும் அண்ணிக்குமிடையே ஏதோ 'புகைச்சல்' உள்ளதை மற்றவர்கள் கவனித்தது அப்போதுதான்.

சுமி மெளனமாய்ப் போனாள். ஆனால் அண்ணி அறிவாள், சுமிக்கு அண்ணாமீதும் அண்ணிமீதும் தாளாத பி¡¢யம் உண்டென்பதை. சுமியின் சுபாவமே தனி. இல்லாவிடில் பூனை மாதி¡¢ மெளனமாக இருந்துவிட்டு, "¨தா¢யமாகக் காதல் பண்ணினேன்' கல்யாணம் பண்ணுவேன்" என அடம் பிடித்திருப்பாளா? எல்லோருடைய சுபாவமும் அண்ணிக்குத் தொ¢யும்.

பாலனைப் பற்றியும் அறிவாள். அவனுக்கும் 'ஒரு இடம்' பார்க்கச் சொல்லி எப்போதிருந்தோ அண்ணாவை நச்சா¢த்து வருகிறாள். பாலன் இப்போ அவர்களுடன் இல்லை. அவனுக்குச் சிறகு முளைத்துவிட்டது. அவனும் பறக்க வேண்டும் என அண்ணி மிக விரும்பினாள்.

கெளசிக்குட்டியைப் பற்றி அண்ணியின் கற்பனைகளும், திட்டங்களும் எண்ணியோ எழுதியோ அடங்காதவை. இப்போதிருந்தே கெளசிக்காக நிறைய சம்பத்துக்கள் சேர்க்கத் தொடங்கிவிட்டான்.

எல்லாவற்றையும் முனைப்புடன் நின்று கவனித்து வருகிறான். அண்ணாவுடனேயே அவள் எப்போதும் இருப்பாள். கிணறு பழுதுபார்க்கச் சொல்லி அவா¢டம் சொல்லிச் சொல்லி அலுத்து, கடைசியில் தானே முன்னின்று முடித்து விட்டாள். தொப்பிக் கட்டும், உட்சுவரும் ஆங்காங்கே புதிய பூச்சுக்களைக் காட்டி இளித்தன. இறைந்து விட்ட நீர்வளவெங்கும் ஓடித்தேங்கியதில் காற்று ஈரத்தையும் இலேசான சேற்று வாசனையையும் சுமந்து தி¡¢கின்றது. தேங்கிய நீ¡¢ல் நட்சத்திரங்களும், குறைநிலவும், வீட்டின் பிரகாசமான வெளிவிளக்குகளும் பிரதிபலித்துத் தொ¢ந்தன. அவற்றைப் பார்த்தபடியே எண்ணி சற்றே தூங்கிவிழுந்தாள். நேற்றிரவு தூக்கமில்லை. இன்னும் எப்படியோ?

சுதா நாளைக்குப் போகப்போகிறாள். தலைக்கு மேலே இன்னும் வேலைகள் காத்துக்கிடக்கின்றன. கூடவே பி¡¢வும் அண்ணியின் இதயத்தை தொட்டழுத்தியது.

2

விடிகாலையில் சுதா பயணமாகிறாள்.

சுமி வந்திருந்தாள். வேறும் பலர் வந்திருந்தார்கள். இவர்களெல்லாம் ஒரு காலத்தில் அண்ணாவைக் கண்டும் காணாமலே போனவர்கள் தான். இப்போதோவெனில், தமது சமூகத்தை அண்ணா காணாமல் விட்டுவிடுவாரோ என அச்சபடுவர்களாகக் காணப்பட்டனர். பெண்கள் அண்ணா பார்வையில் படும்படி நடமாடினர். ஒருத்தியோவெனில் கெளசிக்குட்டிக்கு முத்தம் கூடக் கொடுத்தாள். வல்லவன் வீட்டுப் பெண்ணல்லவா? ஆண்களெல்லாரும் அண்ணியைச் சூழ உட்கார்ந்து அரசியலும், விலைவாசியும் பேசினார்கள்.

அண்ணாவுக்கு நிறைய வேலைகள். அங்குமிங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்தான். கெளசிக்குட்டி அம்மாவின் சேலைத்தலப்பை பிடித்துக்கொண்டு பின்னாலேயே இழுபட்டது. அம்மா, பொ¢ய பொ¢ய பெட்டிகளில் விதவிதமான பளபளக்கும் சாறிகளும், தின்பண்டங்களம் திணித் திணிய அடுக்குவதைப் பார்த்து. சுதா அன்¡¢யை இழுத்து வைத்துக்கொண்டு அம்மா கொஞ்சலும் சி¡¢ப்புமாக ஏதேதோ சொல்வதைக் கண்டது. ஆனால் சுதா அன்¡¢ அழுதாள். அம்மாவின் தோள்களில் சாய்ந்து கொண்டு அழுதாள். அம்மாவும் கூடத்தான் கொஞ்சமாக அழுதாள். அம்மா முகத்தில் இட்ட பொட்டு கரைந்து வழிந்தது. ஏற்கனவே சிவந்த அம்மாவின் முகம் மேலும் சிவந்து போயிற்று. அதைத் துடைக்க நேரமில்லாமல் அம்மா குசினிக்கும், அறைகளுக்கும், ஹோலுக்குமாக ஓடித்தி¡¢கிறாள்.

எல்லா விளக்குகளையும் ஏற்றியிருந்ததில் வீடெல்லாம் ஓரே பிரகாசமாக ஜொலித்தது. அந்த ஜொலிப்பில், கெளசிக்குட்டிக்கு கண்ணைச் சுற்றியது. சீக்கிரம் தூங்கிப் போனது. கெளசிக்குட்டிக்கு மீள விழிப்பு வந்தபோதும் வீடெல்லாம் வெளிச்சம். வாசலில் கார் தயாராக நின்றது. அப்பா பின்னுக்கு கைகளைக் கட்டியபடி வானத்தை அண்ணாந்து கொண்டிருந்தார். அம்மா நல்லபுடவை கட்டியிருந்தாள். பொ¢தாகப் பொட்டு இட்டுக் கொண்டிருந்தாள். சுதா அன்¡¢ '¡¢ப்ரொப்'பாக ஆயத்தமாக நிற்கிறாள். அவளிடமிருந்து நல்ல வாசனை வீசியது. அவள் எதையோ எண்ணி ரகசியமாக சுகிப்பதைப்போல கன்னங்களுக்குள் கள்ளச்சி¡¢ப்பொன்று ஓடியது.

ஆனால் சுதா அன்¡¢ புறப்படும் போது மிகவும் அழுதாள். வாய்விட்டே அழுதாள். அம்மாவும் அழுதாள். உம்முணா மூஞ்சியான சுமி அன்¡¢யும் அழுதாள். அப்பா வெறெங்கோ பார்த்தவராய்.

"சா¢தான்...வாங்கோடி....வாங்கோடி" என இலேசாக அதட்டினார்.

காருக்குள் ஒரே பிசுபிசுவென இருந்தது. சாலைகளில் இன்னும் இருள் விலகவில்லை. சுதா அன்¡¢ மேலும் கரைந்து கொண்டிருந்தாள். அப்பாவும் அம்மாவும் அவளுக்கு மாறிமாறி ஏதாவது சொல்லிக்கொண்டேயிருந்தார்கள். அவை எல்லாம் பொ¢யவர்களின் விஷயங்கள். அவற்றில் கெளசிக்குட்டி தலைபோடாது. அம்மா அப்படிச் சொல்லித் தந்திருக்கிறாள்.

கடைசியாக பஸ் புறப்பட்ட போது சுதா அன்¡¢யும், அம்மாவும் வெட்கம் கெட்டவர்களாய் சத்தமிட்டு அழுதார்கள். அப்பாகூட அழுதார். சுதா அன்¡¢ பாதியுடம்பை வெளியே நீட்டியபடி கைகளை ஆட்டியபடி போனாள்.

திரும்ப வரும்போது சுமி அன்¡¢யை வீட்டில் இறக்கி விட்டு வந்தார்கள்.

மெல்ல மெல்ல மிகவும் சோம்பலாக அன்றைய காலை விடிந்தது.

வீடெல்லாம் 'ஓ' என்ற ஒரு மெளனம். வெறுமை.

கடையில் அண்ணாவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. சுதாவைப் பற்றிய ஞாபகங்கள் மீண்டு மீண்டும் மேலெழுந்தன. சுதா அவருக்கு கடைசித் தங்கை. அவளுடனான பி¡¢யமான சில நினைவுகள் அவருக்கு உண்டு. பழைய நாட்களில் சுதாவைப் பற்றிய கவலைகளும் நிறைய இருந்தன. அவளது அழகுக்கும், சுட்டித்தனத்துக்கும், கெட்டித்தனத்துக்கும் ஏற்ற ஒருவனைத் தேடிப்பிடித்து தம் அதைத் தான் எவ்வளவு சுலபமாக நிறைவேற்றியிருக்கிறள்!

அவருக்கு அண்ணியைப் பார்க்கவேண்டு, அவளுடன் சிறிது நேரத்தைக் கழிக்கவேண்டும் போல இருந்தது.

"அட...தம்பியவன.....நான் வீட்டுப்பக்கம் ஒருக்காப் போயிட்டுவாறான்....பாத்துக்கொள்ளுங்கோ...நான் வரச்சுணங்கினா சாவியைக் கொண்டந்து தந்திட்டுப் போங்கோ..."

அண்ணா நடக்க ஆரம்பித்தார். எதிர்புறமிருந்து ஜோன்சன் முதலாளி அடுக்கிக்கிடந்த மூடைகளினூடாக எட்டிப்பார்த்தார். அவரது தலைக்கு நேரே பின்புறம் சுவா¢ல் "சிவமயம், இலாபம்" என ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருப்பது தொ¢ந்தது.

"வீட்டுக்கா?...."

"ஓம்..."என அண்ணா மெல்ல முனகினார்.

"தங்கச்சி போயிட்டாவோ?"

தலையை ஆட்டினார்.

"எல்லாம் காலா காலத்திலை நடக்கவேண்டியது தானே.... சந்தோசம்..."

"......"

"தம்பி .....உம்மடை வீட்டிலை லச்சுமி குடியிருக்கு...அது வந்த பிறகு தான் நீர் மனிசனா வந்தீர்...."

அண்ணா அசட்டுச் சி¡¢ப்புடன் நின்றார்.

"அப்ப நான் நிற்கிறன்...."

"சா¢" என்றாவது அண்ணா மேலே நடந்தார்.

அண்ணி வழக்கத்துக்கு மாறாக எதையோ பறிகொடுத்தவள் போலச் சோகித்துக் காணப்பட்டாள். அண்ணா மெதுவாக அவளருகில் போய் அமர்ந்தார். அண்ணி அவருக்கு வழக்கம் போல பணிவிடை செய்ய முந்தவில்லை. தன் பாட்டில் எங்கோ கவனமாக தலையை நீவி விட்டுக்கொண்டிருந்தாள்.

"என்னப்பா...அவ்வளவு யோசினை...."

"ப்ச்...ஒண்டுமில்லை...." என்றாள் அசிரத்தையாக.

"சுதாவை நினைச்சியா?....

"ஏன் அவளை நினைக்க வேணும்....போக வேண்டியவள் தானே....போவிட்டாள்...."

"அப்ப....என்ன யோசினை"

"கட்டாயம் உங்களுக்குச் சொல்ல வேணுமா?"

"எனக்கு, என்னவோ என்னட்டையிருந்து கழண்டு போனது மாதி¡¢க்கு..." என்று தயக்கத்துடன் இழுத்தார்.

"கழட்டி எவளட்டைக் குடுத்தனீங்கள்?"

அண்ணாருக்கு ஆச்சா¢யமாக இருந்தது. அண்ணி ஒரு போதும் சு¡£ர் எனத் தைக்கும்படி இவ்வாறு கதைத்தவளல்ல.

"சுமி போனாள்... சுதா போகிறாள்....பாலனும் ஒருத்திக்குப் பின்னாலை போவான்... கெளசியும் போகும்...."

"போகட்டும்!"

"பிறகு எனக்கு ஆரடி இருக்கிறது...."

"ஏன் நீங்களும் உங்கடை 'அவளட்டை' போங்கோவன்!"

"என்ன?!"

"உங்கடை "அவளட்டை"

அண்ணா அதிர்ந்தார். இதைப்பற்றி அண்ணிக்கு இலேசாகத் தொ¢யும் என அண்ணா அறிவார். ஆனாலும் இத்தனை காலத்துக்குப் பிறகு இதை வெளிப்படையாக கேட்பாள் என அவர் எண்ணியதில்லை. அண்ணியும் கூட அதை விரும்பவில்லை. அப்படிக் கேட்பதனால் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள அவள் தயங்கினாள் போலும். ஆனால் இன்று அண்ணியின் மனம் மிகப்பேதலித்திருந்தது. பெண்களின் மனங்களே இப்படித்தானோ என்னவோ. கோடை காலத்து மழை மாதி¡¢!

"ஏன் அவளை ஏமாத்தின்னீங்கள்?"

"........"

"அதுக்குப் பிறகும் தொடர்பிருக்கா?"

"........"

"இப்பவும் காணிறனீங்களா?"

"........"

"செலவுக்கு ஏதாவது குடுக்கிறனீங்களா?"

அண்ணா விக்கித்துப் போயிருந்தார்.

"ஏன் ஏமாத்தின்னீங்கள்....என்ரை காசுக்காகவா?"

அண்ணா பற்களை நெறுமினார். கதிரையில் இருப்புக் கொள்ளாமல் தவித்தார்.

"சொல்லுங்கோ....என்னுடைய காசுக்காகத் தானே என்னைக் கட்டின்னீங்கள்...அவளில்லை தானே உங்களுக்கு ஆசை...ஆம்பிளையை நம்பக்கூடாது....

"அப்பிடி...எத்தனை ஆம்பிளையளோட உனக்குப் பளக்கம்" என அண்ணா திரும்பச் சாடினார்.

"என்னையும் உங்களைப் போல நினைச்சியளோ?" எனச் சீறுனாள். அந்தக் குரலில் தொனித்த உக்கிரம் அண்ணாவை அவளை ஏறிவிட்டுப் பார்க்க வைத்தது. அண்ணியின் அழகிய விழிகள் பெரு வெறுப்பை உமிழ்ந்தன. முகத்தில் ஒரு அருவருத்தபாவம் தொக்கி நின்றது.

"போங்கோ...உங்கடை அவளட்டைப் போங்கோ...உங்களுக்கு அவளிருக்கிறதன்...."

அண்ணாவின் கோபம், இயலாமை. அவமானம் எல்லாம் ஒன்றாய்த் திரண்டன. கைகள் முறுக்கேறின. கைகளை மடக்கி அண்ணியின் தாடையில் ஒரு அடி கொடுத்தார். அது தான் அண்ணி அண்ணாவின் கோபத்தை ஸ்பா¢சிக்கும் முதல் தடவை.

அண்ணியின் பொ¢ய ஆளும் திறன் படைத்த விழிகள் கலங்கின. நீண்ட இமை மயிர்கள் சடுதியாக நனைந்து, ஒரு பொ¢ய கண்ணீர்த்துளி பளபளவென மின்னியது. 'சொட்'டெனச் சிந்தித் தெறித்தது. அவன் பெறுமதி அளவிடற்கா¢யது. அதில் ஒரு பெண்ணின் தன்மானமும், காதலும் பொதிந்திருக்கிறது.

அண்ணா வெறுப்புடன் எழுந்து அப்பால் போனார். கட்டிலில் சாய்ந்து கைகளைத் தூக்கி முகத்தில் போட்டு மூடிக் கொண்டார். அண்ணி அப்படியே உறைந்தாள். அவள் தொடர்ந்து அழமாட்டாள். ஆளுமையும் மனவுறுதியும் மிக்கவர்கள் அப்படித்தான்!

பிறகு

கெளசி பள்ளிக் கூடத்தால் ஒட்டமாக ஓடிவந்தது. அம்மா அதற்கு சாப்பாடு கொடுக்கவில்லை. உடம்பைக் கழுவி தலை சீவிச் சிங்கா¡¢த்து கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுக்கவில்லை. கெளசி அப்பாவிடம் ஓடிற்று. பிறகு அம்மாவிடம் ஓடி அவளது கன்னத்தைத் தாங்கித் தன்புறம் திரும்ப முனைந்து தோற்றது. அம்மா உயிரற்றவள் போல இருந்தாள். கெளசி பு¡¢யமையுடனும் பசியுடனும் அங்குமிங்கும் அலைந்து தி¡¢ந்தது.

அப்புறம், வெகுவேகமாக மாலை மங்கி இருள் சூழ்ந்தது. அம்மாவும் அப்படியே, அப்பாவும் அப்படியே! கெளசி கதிரைகளில் ஏறி நின்று விளக்குகளைப் போட்டது, அம்மா ஒரு பெரு மூச்சுடன் எழுந்து உள்ளே போனாள். அப்பாவும் கைகளை முகத்திலிருந்து எடுத்துவிட்டு சிடுசிடு மூஞ்சியுடன் போய் கிணற்றுக் கட்டில் உட்கார்ந்து கொண்டு வானத்தை நோக்கி நிமிர்ந்தார்.

பாத்ரூமில் இருந்து தண்ணீர் விழுந்து சிதறும் சலங்கைச் சத்தம் 'சளசள' எனக் கேட்கவாரம்பித்தது. சோப்பின் நல்லன் வாசனை வீடெங்கும் வீசிற்று. அந்த வாசனையுடன், கெளசி அகப்பட்ட இடத்தில் விழுந்து தூங்கிப் போயிற்று.

அண்ணி நிறைய நீராடினாள். ஈரம் சொட்டும் கூந்தலை நெடுநேரம் வரை உலவியபடி உலர்த்தினாள். பிறகு திலகமிட்டுக் கொண்டாள். அதுதான் அவளது உண்மையான ஆபரணம். அண்ணாவை சுண்டி இழுக்க வல்லது. பிறகு அலுமா¡¢யைத் திறந்து அண்ணாவுக்கு பிடித்த அரக்கப்பச்சை வர்ணச்சேலையை எடுத்தாள். அதிலிருந்து வீசும் சுகமான வாசனையை நுகர்ந்தபடி அதை உடுத்த ஆரம்பித்தாள்.

அண்ணாவோ வெனில், கிணற்றுக்கட்டில் உட்கார்ந்தபடியே வானத்தில் மூலை முடுக்குகளிலெல்லாம் அவரது பி¡¢யமான நட்சத்திரங்களைத் தேடினார். அவற்றைக் காணவில்லை நிலவு வரவும் இன்னும் சற்ற நேரமிருந்தது. ஒளியற்ற நட்சத்திரங்கள் வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெல்ல மின்னி பலகீனமாக முனகின. மோனமான மெல்லிய இருள் எங்கும் வியாபித்திருந்தது. நடமாடித்தி¡¢ய மனமற்றுப் போன காற்று முடவனைப் போல தழ்ந்தது. வெல்ல மெல்ல ஒரு பெண்ணின் இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்றுக் கொண்டு இனிய போதையூட்டும் வாசனையை அது. பெற்றக் கொண்டு அண்ணாவை நோக்கிச் சென்றது. அண்ணாவின் நாசியில் அதை தேய்த்தது. அண்ணாவின் கழுத்தைச் சுற்றி இரு மென்கரங்கள் மாலையென விழுந்தன. அவை ஈரலிப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இருந்தன. அதே சமயம் மெல்ல நடுங்கின. அண்ணாவை மெல்ல தம்முன்வளைக்க முயன்றன.

பிறகு....

"உங்களுக்கு ...நானிருக்கிறேன்..." என மிகத் தவிப்புடனும், அடக்க முடியாமல் பீ¡¢ட்டெழும் அன்புடனும் ஒரு மிருதுவான பெண்குரல் அபயமளித்ததைக் கேட்டவுடன், காற்று அவ்விடத்தை விட்டு நாகா£கமாக நழுவிற்று.

அண்ணா திரும்பிப் பார்த்தார். அந்த இருளிலும் ஜொலிக்கும் இரு விழிகளைக் கண்டார். அவை அண்ணாவை மன்னித்த சேதியை இதமாகத் தொ¢வித்தன.

அவள் மீண்டும் தன்புறம் அவரை இழுத்தாள்.

அப்புறம்;

அன்றிரவு அண்ணியால் தூங்க முடியவில்லை. அண்ணாவுக்கும் தூக்கம் வரவில்லை.

* * *


6. கோளறுபதிகம்


பார்வையாளர்களை அனுமதிக்கும் நேரம் முடிவடைந்து விட்டது. அனேகமாக எல்லோரும் வெளியேறி விட்டார்கள். மாலை மங்க ஆரம்பிக்கும் போதுதான் நான் உள்ளே நுழைந்தேன். ஆஸ்பத்தி¡¢களுக்கே உ¡¢ய அந்த நெடி கனமாக வீசிற்று. கூடவே ஈக்களும் தி¡¢ந்தன. நான் OPD க்குள் நுழையும் தருவாயில் எனக்குப் பின்னே ஒரு கனமான வாகனம் உறுமியபடி வந்து நின்றது. தன்னிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன்.

ஒரு கை வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.

மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலே ஒரு எலுமிச்சம்பழத்தைப் புதைத்து வைக்கலாம் எனத்தோன்றுபடி ஒரு பள்ளம் பறித்திருந்தது. அதன் ஓரத்திலிருந்து கிழிபட்டுப்போன தோலோ, தசையோ ஒரு ஜாண் நீளமுள்ள ஒரு சிவந்த பேப்பர் நாடா போன்று காற்றில் துடித்தது. மிகுதிக் கரம் முழுக்க காய்ந்த இரத்த ஓடைகள் கறுத்துப் போயிருந்தன. பள்ளத்திலிருந்து உறைந்த களி போன்ற இரத்தம் சொட்டுச் சொட்டாக பாகுத்தன்மையுடன் ஒழுகித் தரையில் விழுந்தது. தரை அதை அவசர அவசரமாக விழுங்கிற்று.

ஒரு ஸ்ரெட்சா¢ல் பிரதேசம் கிடத்தப் பட்டிருந்தது. மறுகரம் சேதமெதுவுமின்றிச் சுத்தமாக இருந்தது. ஆனால் வலிப்பினால் மிகவும் முறுக்கேறி ஸ்ரெட்சா¢ன் ஓரத்தைப் பற்ற விளைந்தது போல் பாவனை காட்டிற்று. விறைப்பேறிய நிலையிலும் அந்தக்கரம் வாளிப்பாகவும் மென்மையாகவும் இருந்தது.

ஒரு பெண்ணின் பிரதேசம் தான்.

சனங்கள் சிலர் கூடினார்கள். கூடவே ஈக்களும். ஓரு ஓடலிப் பையன் இன்னெரு ஸ்ரெட்சரை ஓசையெழத் தள்ளியபடி அவசரமாக வந்தான். தோசையைத் திருப்பிப் போடுவதுபோல அசிரத்தையுடனும், இலாவத்துடனும் பிரேதத்தை தனது ஸ்ரெட்சருக்கு புரட்டிப் போட்டுக் கொண்டு OPD ஐ நோக்கி ஓடினான். அவனுக்கு வீட்டுக்குப் போகும் அவசரம் போலும்

அவ்வளவாக உயரமில்லை. சாதாரணமாக பெண்கள் வீட்டில் அணியும் உடைகள் அணிந்திருந்தாள். முழங்கால்களுக்கு கீழே உள்ள வாளிப்¡ன தசைப்பிடிப்பான கால்கள் விறைத்துப் போய் திகம்பரமாகத் தொ¢ந்தன. முகம் முழுக்க இரத்தவிளாறாக அடிக்கப்பட்டிருந்தது. இடது புருவத்துடன் கூடவே ஒரு குண்டு பாய்ந்திருந்தது. அவ்விடத்தில் ஒரு புடைப்பு. அதிலிருந்து இரத்தக் கூழ் ஒழுகிற்று. மற்றைய குண்டு இடது மார்பில் பாய்ந்திருக்க வேண்டும். சட்டையின் மேற்புறம் இரத்தத்தில் தோய்ந்திருந்தது.

சேதமாகிப் போன மேல் சட்டையினூடு வெளுப்பான திரட்சியான மார்புத்தசைகள் தொ¢ந்தன. ஒரு ஆணின் ஸ்பா¢சத்தையோ, ஒரு குழந்தையின் இதழ்களையோ அனுபவத்தறிந்திராத மார்பகங்கள்.

ஆகக் கூடினால், இருபது வயதிருக்கலாம்.

OPD யிலிருந்து ஒரு டாக்டரம்மா ஸ்டெதஸ்கோப்பையும், வார்த்தைகளையும் சுழற்றி வீசிய வண்ணம் வந்தாள். அவளுக்கு நிறைந்த களையான முகம். கூடவே ஒரு தாதி. முகம் முழுக்க பருக்களும் பீதியும்.

பிறகு சனங்களும் ஈக்களும். சனங்களுக்கென்ன, எல்லாமே புதினம் தான்! ஈக்களுக்கு ருசிமிகுந்த சாப்பாடு!!

ஆளரவம் அடங்கிக் கொண்டிருக்கும் ஒடுங்கிய நீண்ட ஆளோடிகளினூடாக நடக்க ஆரம்பித்தேன். எனக்கு முன்னே நடுத்தர வயதைக் கடந்த மெலிந்த உயரமான ஒரு பெண்ணும், அவளைத் தாங்கியபடி வேறும் ஒரு பெண்களும் போய்க் கொண்டிருந்தார்கள். அந்த பெண்ணுக்கு தொடைகளில் கூனிய முதுகுடன், கால்களைப் பதனமாக எடுத்து வைத்து தள்ளாடித் தள்ளாடி மெல்ல அவள் நடந்து கொண்டிருந்தாள். அவர்களைக் கடக்கும் போது ஓரப்பார்வையால் பார்த்தேன்.

அந்தப் பெண்ணின் முகத்திலுள்ள தசைகள் யாவும் ஒருவாறு கோணிப்போய் துடித்தன. வாயும் கண்களும் அகல வி¡¢ந்திருந்தன. கண்களில் அதிர்ச்சியும் ஏக்கமும் தேங்கிப் போய்க்கிடக்க, வாய் சில வார்த்தைகளை வெளிப்படுத்த முயல்வதாய் மெல்ல அசைய உன்னியது.

அவளுக்கு நோயல்ல, துக்கம்! தாங்க முடியாத துக்கம். அழுது குழறுவதால் மட்டும் அப்படியான துக்கங்களை முழுமை வெளிக்கொணர முடியாது. அனேகமாக அவளது கணவனோ, குழந்தையோ எங்காவது குண்டு வெடிப்பிலோ, துப்பாக்கிச் சூட்டிலோ மிக மோசமாகக் காயப்பட்டிருக்க வேண்டும். இறந்து கூடப் போயிருக்கலாம்.

நான் ஒரு பத்தடி தூரம் கடந்திருப்பேன். பின்னாலிருந்து 'ஐயோ ஐயோ ஐயோ' என ஈனஸ்வரத்தில் மூச்செடுக்க முடியாத அவதியுடனம் அவசரத்துடனும் ஒரு குரல் பிறந்தது. வர வர அதன் ஸ்தாயி கூடி உரத்த வீ¡¢டல்களாகத் தெறிந்தது. ஒடுக்கமான ஆளோடியின் இருபுறமும் உயர்ந்திருந்த சுவர்களுக்குள்ளும் கூரையின்கீழும் தி¡¢கின்ற அசுத்தமான காற்று அந்த அவலக் கூக்குரலினால் மேலும் அசுத்தமாக்கப்பட்டு என் நெஞ்சினுள் புகுந்து கொண்டது.

இன்னும் ஒரு நொடிகூட அந்தக்காற்றை என்னால் சுவாசிக்க முடியாது. என்னால் எதையும் காணமுடியாது. அவசர அவசரமாகத் திரும்ப நடந்தேன்.

வெளியே சைக்கிள் பார்க்கின் முன்புறம், தேவனைச் சந்தித்தேன். வெகுகாலத்துக்குப் பிறகு அவனைக் கண்டதில் சிறிய மகிழ்ச்சியும், பெருவியப்பும் ஒருங்கே எய்தினேன். கூடவே கொஞ்சம் பயமும்....

*

தேவனை நான் கடைசியாகக் கண்ட போது ஒரு நாவலை எழுத ஆரம்பித்திருப்பதாகச் சொன்னான்.

"அரசியல்லை தோத்தவனும், புறமொதுக்கப் பட்டவனும் இலக்கியத்திலோ அல்லது வேறேதாவது கலைத்துறையிலோ ஈடுபடவேண்டியது அவசியம்...., மச்சான்" என்றான்.

பிறகு, "அதுக்கிடையிலை நான் செத்தாலும் செத்துபோவன் போல கிடக்கு" என்றபடி 'ஹோ...ஹோ' என போலிக்குரலில் சி¡¢த்தான்.

கூடவே, "மாட்டன்..." என சங்கல்பமும் செய்தான்.

அதன்பின் இன்று தான் அவனைக் காண்கிறேன். முன்னரைவிட கொஞ்சம் பருந்தும், உற்சாகமாகவும் இருந்தான். வழக்கம்போல இதழ்கள் சிவக்க, வாய் நிறைய வெற்றிலையைக் குதப்பித் துப்பிக்கொண்டிருந்தான்.

தேவனை நான் முதன் முதலாகக் கண்டபோது அவனது 'அய்யா'வின் கைகளைப் பற்றிய வண்ணம் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தான். அவனது சிலேற் மிகவும் பழையதாகவும் அழுக்கேறிக் கீறல் விழுந்ததாகவும் இருந்தது. புத்தகம்கூட மேலுறையை உ¡¢த்து விட்டும் பக்கங்கள் எல்லாம் ஓரம்மடிந்தும் காணப்பட்டது. எனது சிலேற்றும் புத்தகமும் புத்தம் புதியனவாயும் மிளிர்ந்தன. புத்தகத்திலிருந்து புதிய காகிதத்தின் இனிய மணமும், சிலேற்றிலிருந்து காய்ந்த மண்ணின் வாடையும் வீசின.

தேவன் பள்ளிக் கூடத்துக்கு ஒழுங்காக வருவது கிடையாது வரும் நாட்களிலும் அனேகமாக வாங்கின் மீது ஏறி நிற்பது கட்டாயமாகப் பட்டது. எல்லாப் பாட வேலைகளிலும் அநேகமாக அடி வாங்கினான். கணக்குப்பாட வேளைகளில் அகோர அடி விழுந்தது. ஆனால் அவன் அழுவது கிடையாது. கல்லுளி மங்கன் போல முழித்துக் கொண்டே நிற்பான். அவன் மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தவன். எனினும், எட்டாம் வகுப்புக்குப் பிறகு அவன் பாடசாலைக்கு வரவில்லை.

அதன் பின், அவனது 'அய்யா'வுக்குப் பின்னால், அவனும் ஒரு பழைய, பொ¢ய 'கா¢யர்' பூட்டிய சைக்கிளில் ஓலைப்பறியுடன் வலைகளைப் பொதிந்து ஏற்றியபடி முன்னால் சற்றே வளைந்தவனாய் சைக்கிளை உழக்கிக் கொண்டு 'வீச்சு'க்குப் போகக் காண்பேன். அந்நாட்களில் தான் அவன் வெற்றிலை போடப பழகியிருக்க வேண்டும்.

தேவனது வீட்டுக்கு ஒரே ஒருதரம் போயிருக்கிறேன். அது எங்களது வீட்டிலிருந்து முக்கால் மைல் தூரம் தள்ளியிருந்தது. ஒரே ஓலைக் கூரையின் கீழான ஒரு சிறு அறையும், சற்றே அகன்ற காற்றோட்டமான மாலும் தான் வீடு. அறையின் சுவர்கள் தென்னங்கீற்றுகளால் நெருக்கமாக அடைக்கப்பட்ட தட்டிகளினால் ஆனவை. மாலுக்குள் கிடந்த தீராந்திகளிலும் வேலிகளிலும் வலைகள் கிடந்து மீன் நாற்றத்தை ஈன்றன. பக்கத்திலே இன்னுமொரு சிறு கொட்டில். அது அடுக்களை. அதற்குள் நுழைவதெனில், ஆள்பாதியாக மடியவேண்டும். எந்நேரமும் அதற்குள் புகை வண்டிச் சுழலும்.

எனக்கொரு பழையவலை அவசரமாகத் தேவைப்பட்டது. எங்களது தோட்டத்தில் நிறைய தக்காளிகள் இருந்தன. கிளிகளின் தொல்லை பொறுக்க முடியாமல் இருந்தது. வலைபோட்டால் கிளிவிழாது என அப்பு ஆலோசனை சொன்னார். ஆனாலும் ஒரே ஒரு கிளியாவது வலையில் விழவேண்டும் என நான் உள்ளூர ஆசை வைத்திருந்தேன். தேவனிடம் வாங்கப் போகும் வலையில் சிறு துண்டொன்றை வெட்டியெடுத்து 'கிளிக்கூண்டு' ஒன்றை செய்யும் உத்தேசமும் எனக்கு இருந்தது. அந்த வலையை கிளிகள் அறுக்க மாட்டா என அந்த இரண்டுங்கெட்டான் வயதிலும் பேதமையுடன் நான் நம்பினேன்.

மாலின் ஒரு மூலையில் ஒரு பழைய 'சன்லைட்' பெட்டியும் அதற்குள் நிறையப் புத்தகங்களும் கிடந்தன. அவை எல்லாம் தேவனின் புத்தகங்கள்! பள்ளிக்கூடத்தில் மாடுபோல் அடிவாங்கிய தேவனால் இவ்வளவு புத்தகங்களைப் படிக்க முடிகிறதா?

பிற்காலங்களில் அவனை அடிக்கடி இலக்கியக் கூட்டங்களில் காண நேர்ந்தது. நான் எண்ணியது போல தேவன் மக்கு அல்ல. அவனது புலன்களும் புத்தியும் வேறு திசைகளை நோக்கித் திரும்பப்பட்டிருந்தன.

இன்னும் கொஞ்ச காலம் போனதும், அவனது சைக்கிளின் பொ¢ய 'கா¢யர்' வைக்கப்பட்டது. அவனது "அய்யா" வுக்கும் அவனுக்கும் ஒத்து வரவில்லை. தேவனின் சைக்கிள் விரைந்து செல்லத் தக்கவாறு உருமாற்றப்பட்டது. அத்துடன், ஹாண்டிலில் ஒரு பொ¢ய துணிப்பை தொங்கிய வண்ணம் இருந்தது. அது சிறிய, கனமான சில பொருட்களைச் சுமந்தது.

ஒரு நாள், அவனது வீட்டின் பக்கமாக இருந்து பெரும் இடியோசை போன்ற சத்தத்துடன் கூடவே புதை மண்டலம் எழுந்தத. தீயில் கருகிய சருகுகள் வெகு உயரத்துக் கிழம்பி காற்றினால் அடித்து வரப்பட்டதையும், பலர் கூடி சத்தமிடுவதையும் கேட்டேன். அதற்குப் பிறகு வெகு நாட்களாக தேவனைக் காணவில்லை. அவனது "அய்யா" 'அவனைக் கண்ட இடத்திலை வெட்டுவன்' எனச் சொல்லித் தி¡¢ந்தார். அவர்களது சொற்ப சொத்துக்களான வலைகளும், அந்தச் சிறிய கொட்டில் வீடும், துணிமணிகளும், தேவனது புத்தகங்களும் அந்த விபத்தில் நாசமாய்ப் போயின.

அதற்குப் பிறகு, 'ஒப்பந்தம்' முடிந்த கையோடே அவனைப் புத்தகக் கடை ஒன்றில் முன் கண்டேன். அப்போது தான், அவன் நாவல் எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தைச் சொன்னான். அன்று முழுக்க வெற்றிலை கூடப் போடவில்லை என்றும் சொன்னால் மிக மெலிந்து போய் இருந்தான். என்னிடம் கொஞ்சம் காசு 'கடன்' வாங்கினான்.

அதற்குப் பிறகு இன்று தான் காண்கிறேன். என்னுடன் தங்குவதற்கு தேவன் விரும்பினான்.

*

நான் குடியிருக்கும் வாடகை வீட்டில் பேய்களும் அத்து மீறிக் குடியேறிவிட்டதாகச் சொல்லுகிறார்கள். வீடு மிகப் பொ¢யது. புதிய 'பாஷனில்' அமைந்திருந்தது. மேல் மாடியில் நான் மட்டும், கீழே ஒரு இளந்தம்பதிகளும், அழகிய துடியான பெண்குழந்தையும் வீட்டின் முன்புறம் 'பாஷனுக்கு' சற்றும் பொருந்தாத வகையில் ஒரு நீற்றுப் பூசினிக்காயில் குங்குமத்தினால் வரைந்த கோரமுகம் தொங்கியது. பேய்களுக்கு 'சாந்தி' செய்வித்ததை அது கட்டியம் கூறிற்று. சாந்தி செய்த பிறகு பேய்கள் வாலைச் சுருட்டிக் கொண்டனவாம்.

அதற்கு முன்னரே வெனில், தினம் தினம் இருட்டியதும் தாகத்துடன் யாரோ நாவைச் சப்புக் கொண்டுவதும், அங்குமிங்கும் 'தடதட'வென ஓடித்தி¡¢வதும். உபாதைகளுடன் முனகுவதும் என சத்தங்கள் கேட்குமாம். கதவுகளும் ஜன்னல்களும் தம்பாட்டில் திறந்து 'படார்' என சாத்திக் கொள்ளுமாம்.

எனது அறையின் ஜன்னலைத் திறந்தால், பூஞ்செடிகள் வா¢சையாக வளர்ந்திருந்த முற்றமும், சுற்றுமதிலும், அநேகமாக மெளனமாகவே இருக்கும் பாதையும் தொ¢யும். கதவைத் திறந்தால், கால்வட்டமாக வளைந்தபடி மாடிப்படிகள் இறங்கி ஹோலுக்குள் போவதைக் காணலாம். அந்தக் கால்வட்ட விளிம்புடைய சுவா¢ன் சா¢பாதியில் ஒரு கண்ணாடி அலுமா¡¢ போல உள்வாங்கிய பீடம் இருக்கிறது. அதற்குள் செம்மஞ்சள் ஒளியில் குளிக்கின்ற கண்ணன்சிலை வேய்க்குழலை உதடுகளில் பொருத்தியபடி குறுஞ்சி¡¢ப்புச் சி¡¢க்கிறது.

அந்தக் கண்ணன் சிலை, இதே வீட்டில் முன்பு நடந்த கோரங்களுக்கு சாட்சியாக அப்போதும் குழலூதிச் சி¡¢த்திருக்க வேண்டும். வீட்டின் சுவர்களில் எல்லாம் துப்பாக்கிக் குண்டுகள் மழையெனப் பொழிந்ததில் மேற்பூச்சுகள் புண்பட்டு மூளியாகப் போயினவாம். இதே மாடிப்படிகளின் வழியாக இரத்த ஓடை குதூகலத்துடன் கீழிறங்கிப் போயிற்றாம். உட்கட்சிப் போராட்டத்தை சில துப்பாக்கிக் குண்டுகள் சப்தித்து முடித்து வைத்தனவாம். மொத்தமாக பன்னிரண்டு பேர்கள் ஒரே இரவில் சில நொடிகளுக்குள் கட்சியினின்றும் உலகத்தினின்றும் வெளியேற்றப்பட்டபின் மயான அமைதி நிலவிற்றாம். அதற்குப் பிறகு அந்தப் பன்னிரண்டு பேரும் பேய்களாகி விட்டார்களாம். இல்லாத தொந்தரவுகள் எல்லாம் உண்டாக்கிக் காட்டினார்களாம். இரவானதும் சந்தடிகள் மிகச் செய்து தமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தைச் சொல்லிப் புலம்பினார்களாம்.

பிறகு குடியிருக்க வந்தவர்கள் சாந்தி செய்தார்கள். எனக்கும் குடியிருக்க ஒரு அறையும், கொஞ்சம் பயமும் கிடைத்தன.

எனக்குப் பேய் பிசாசுகளில் அவ்வளவு நம்பிக்கை இல்லை. தேவனுக்கும் இதையெல்லாம் சொன்னேன்.

"எனக்கு இப்ப ஒண்டிலும் நம்பிக்கை இல்லை மச்சான்" என்றான்.

தேவனின் 'அய்யா' வின் தகப்பனார்- இப்போது இறந்து போய்விட்ட அப்பு-பல பேய்க்கதைகளைத் தேவனது சிறுவயதில் சொல்லியிருக்கிறாராம். அடிக்கடி அவர் பலபேய்களைப் பேய்க்காட்டிவிட்டு வெறும் பறியுடனும் காய்ச்சலுடனும் வீட்டுக்கு திரும்பி வந்திருக்கிறாராம்.

ஒரு நாள், நல்ல நிலவு. அப்பு விடிகாலையில் வீச்சுக்குப் போக ஆயத்தங்கள் பண்ணிவிட்டு படுக்க எண்ணினார். வெள்ளி காலிக்கும் போது கனகன் வந்து கூப்பிடுவதாகச் சொல்லியிருக்கிறான். அப்பு, ஆச்சியிடம் அண்ணாந்து முகட்டு வளையைப் பார்த்தபடி படுத்திருக்கிறார். அன்றிரவு நாய்கள் மிகுதியாகக் குரைத்தன. ஆச்சி சுருட்டுப் பிடித்தபடி கால் உளைவு போக்க முணுமுணுத்தபடி தைலம் தடவுகிறாள். சுருட்டின் காரநெடியுடன் தைலத்தின் வாசனையும் சேர்ந்து அபூர்வமான கிறக்கும் வாசனை. அப்பு கிறங்கினார்.

"எடேய்!...கந்தப்பு...வாடா!" எனக் கண்டாயத்திலிருந்து கனகன் கூப்பிடுவது போலக் கேட்கிறது. அப்பு எழுந்து ஒரு மிடறு தண்ணீர் குடித்தார். வலைகளைத் தூக்கித் தோளில் போட்ட வண்ணம் ஆச்சியைப் பார்த்தார். ஆச்சி நல்ல நித்திரை. தலைமாட்டில் குறைச் சுருட்டு கருகிப் போய்க்கிடக்கிறது. தீப்பெட்டியும், சுருட்டும், வெற்றிலைக் கொட்டப் பெட்டியும், திருநீற்றுச் சம்புடமும், வில்லுக் கத்தியும் எடுத்து 'மடியில்' பொதிந்து கொண்டு அப்பு முற்றத்தில் இறங்கினார். நிலவு வெளிச்சத்தில் கண்டாயத்தடியில் யாரோ நிற்பது தொ¢கிறது.

"டேய்....கந்தப்பு வெள்ளி காலிச்சுப் போட்டுது.... வாடா" என கனகனின் குரல் கேட்கிறது. அப்பு மடியைத் தடவிய வண்ணம் அவனுடன் போய்க் கொண்டிருக்கிறார். நிலவு வெளுறி ஒளியிழக்கிறதோ, அல்லது மேகங்கள் மூடி மறைக்கிறதோ? அப்பு வானை நிமிர்ந்து பார்த்தார். விடிவெள்ளி காலிக்க இன்னும் நிறைய நேரம் இருப்பதாகப் பட்டது. பக்கத்தில் வருபவன் சுண்ணாம்பு கேட்கிறான். சுண்ணாம்பு எடுத்துக் கொடுத்தபோது தான் அவனுக்குக் கால்கள் இல்லாததை அப்பு கண்டார். விக்கித்துப் போனார். திரேகம் 'ஜில்' விட்டுக் குளிர்ந்தது. எவ்விடத்திலே நிற்கிறோம் என அறிய, சுற்றும் முற்றும் பார்த்தார். எதிரே தண்ணீர் மினுங்குகிறது. குளிர்காற்றை அள்ளித் தெளிக்கிறது. மறுபடியும் பக்கத்தில் பார்த்தால், கூடவந்தவனைக் காணோம்!

"கந்தப்பா...வீசடா வீசு...நல்லா மீன் படும்!" என அசா£¡¢ மட்டும் கேட்கிறது. அப்பு அவதியுடன் நீருக்குள் இறங்கினார். 'தொளப்' என தண்ணீர் குழப்பத்துடன் ஒலியெழுப்ப மேலும் மிரண்டார். அரையில் கட்டிய நான்கு முழத்தையும் 'மடியில்' பாரங்களையும் சேர்த்து தலையில் முண்டாசாகக் கட்டிக் கொண்டார். திருநீற்றை எடுத்து நெற்றியில் தா¢த்துக்கொண்ட 'வைரவா' என உளமுருகி உரக்கக் கூவினார்.

"கந்தப்பா...கந்தப்பா" என கரையிலிருந்து குரல் நைச்சியம் பண்ணிக் கூப்பிடுகிறது. அப்புவுகுக்கு தேவாரங்கள் நல்ல மனனம் கோளது பதிகத்தை வா¢சைக் கிரமமாக பத்திலயத்துடனும், பயத்தால் நடுங்கும் குரலுடனும் பாடத்தொடங்கினார். பாடுகிறார் பாடுகிறார்... பயம் பறக்கிறது. விடிவெள்ளி மெல்ல உதயமாகி அப்புவுக்கு ¨தா¢யம் சொல்லிற்று. தூரே ஊ¡¢லிருந்து கோழிகள் கூவி அப்புவுக்கு சுருதி சேர்த்தன. அப்பு கோளறு பதிகத்தை திரும்பத் திரும்பப் பாடுகிறார். கிழக்கு வெளுக்கிறது. மேனி விறைக்கிறது. அப்பு ¨தா¢யமாகக் கரையில் ஏறினார். உடல் நடுங்குகிறது. நடுங்கிய படியே வீட்டில் வந்து விழுந்தவர் தான். ஒரே குலைப்பன் காய்ச்சல்.

"அட....மேனே, இப்ப உந்த இஞ்சின் போட்டுகள் கடலுக்குள்ளை ஓடடா ஓடெண்டு ஓட...பேயும் இல்லைப் பிசாசும் இல்லை....நம்மோடொத்தவனுக்கு மீனும் இல்லை" என்று தேவனின் அப்புவின் கதை முடியுமாம்.

என்னுடைய அம்மாவின் தகப்பனார்-இன்னும் ஜீவியவந்தராய் தாடியைக் கோதிக் கொண்டிருக்கும் எனது அப்பு-ஒரு தரம் ஒரு பேய்க்கு துவரந்தடியால் விளாசியிருக்கிறார். அந்தப் பேய் வஞ்சம் மறக்காமல் சில இரவுகளில் ஞாபகமாய் வந்து அப்புவின் மென்னியைத் திருகுமாம். உடலைப் பெரும் பாறையாக அழுத்துமாம். முறித்து எடுக்குமாம், உடலை முறுக்குவதையும், வாய் பிதற்றுவதையும் நானே நோ¢ல் கண்டிருக்கிறேன். தொடர்ந்து "இங்கிலீசு மருந்து"க்கும் ஒத்து வராது. காய்ச்சல் குடிநீரை அம்மா சுண்டச் சுண்டக் காய்ச்சி ஒரு துண்டு பனங்கட்டியுடன் கொடுப்பாள். அப்பாவோ வெனில், நல்ல தென்னஞ் சாராயத்தில் 'ஒரு அரை' எடுத்துவந்து அம்மாவிடம் கொடுத்து விடுவார். கிழவனார் ஆசையால் கண்கள் மின்ன சாராயக் கிளாஸை பதபக்குவமாக பற்றுவார்.

"போடா அங்காலை...எளிய வடுவா, வாய் பாக்காமல்..." என்று என்னை விரட்டுவார். பிறகு,தொண்டையைச் செருமுவதும், நாவைச்சப்புக் கொட்டுவதும் கேட்கும்.

சற்று நேரத்தில், "இஞ்சை வாடா மேனே...." என கிழவனார் ஆ¨சாயக்க் கூப்பிடுவார். அவரது முகத்திலிருந்தும் தாடியிலிருந்தும் சாராய நெடி அடிக்கும். ஒளியிழந்த கண்கள் சிமிட்டும். பல்லிழந்த பொக்கை வாய் இளிக்கும். துவரந்தடியால் பேய்க்கு விளாசிய கதை நூறாவது தடவைக்கு மேல் எனக்கு விஸ்தாரமாகச் சொல்லப்படும். கேட்கக் கேட்க அலுக்காத கதை. அப்பு கதை சொல்லும் பாணியே அலாதி. அடிக்கடி நான் 'ஊம்' கொட்டி எனது ஆர்வத்தைக் காட்டி, அவரது வீரத்தையும் மெச்ச வேண்டியது அவசியம்!

அப்பு கல்வீட்டினுள் படுப்பது கிடையாது. வேப்பமரத்தின் குளிர் நிழலின் கீழ் கிழவனார் தனக்காக ஒரு கொட்டில் போட்டு வைத்திருக்கிறார். தீராந்திகளில் கலப்பையும், பிக்கானும், நுக்காலும், நாலைந்து துவரந்தடிகளும், இரும்புப் பூண் இட்ட கா¢ய ஏழுமுள்ளுக் கொட்டனும் சொருகப்பட்டிருக்கும். பாம்புகள் மாதி¡¢ மாடுகளின் கழுத்துச் சங்கிலிகள் வளைந்தபடி தூங்கும். ஒரு பழைய உறுதியான நார்ப்பெட்டிக்குள் லாடங்கள். மாட்டின் கழுத்துச் சதங்கைகள்.... இன்னும் பல கிழவனா¡¢ன் அ¡¢ய பொக்கிஷங்கள் எல்லாம் உண்டு. அவையெல்லாம் அவருக்கு மிக இனியவை அவரது வாலிபத்தின் நினைவுகளைத் தூண்டுவனவல்லவா? அவை எவ்வளவு கதைகளை அறிந்திருக்கும்? எவ்வளவு பேய்களுடன் அப்புவுடன் தோளோடு தோள் நின்று போராடியிருக்கும்!

"அப்ப நான் நல்ல வடக்கன் மாடுகள் ஓறிணை வைச்சிருந்தனான்...என்னைவிட உயரம்...மாவெள்ளை நிறம்...ஒரு நாளைக்கு ஒரு கடகம் பருத்திக்கொட்டையும் புண்ணாக்கும் வேணும்...." என்று கதை தொடங்கும்.

எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. எங்களது வீட்டுக்கு அப்போ மதில் கட்டப்படவில்லை. அலம்பரும் பனையோலையும் கொண்டு மிக நெருக்கமாகவும் கலா நேர்த்தியுடனம் அடைக்கப்பட்ட அழகிய வேலி தான் இருந்தது. அந்தக்காலத்தில், எங்களூ¡¢ல் தோட்டவேலையும் வயல்வேலையும் குறைந்த வெயில் மிகுந்த ஆனி ஆடி மாதங்களில், எல்லோரும் கூட்டாகச் சேர்ந்து "அலம்பல் காட்டுக்கு" வண்டி பூட்டிப் போவார்கள். போகமுதல் வைரவர் கோயிலில் மடை பரவுவார்கள், ஒரு கிழமையோ, பத்து நாட்களோ பயணம். பானைசட்டிகள், அ¡¢சி, நல்லெண்ணைய், பருப்பு, கருவாட்டுடன் போவார்களாம்.

ஒரு தடவை மற்றவர்களை விட நல்ல அலம்பர் வெட்ட வேண்டும் என்ற அவாவில் அப்பு காட்டுக்குள் வெகுதூரம் போய்விட்டார். அப்புவுக்கு அப்போ நல்ல வாலிபம். மல்லன் போல உடல் கட்டு. கல்யாணமாகி எனது அம்மா பிறந்து அப்போது தான் தவழ்கிறாளாம். அப்புவின் வாழ்க்கையில் உல்லாசம் வீசுகின்ற காலம், நல்ல பாரமாக அலம்பர் வெட்டி விட்டார். மற்றவர்களுக்கெல்லாம் பொறாமை. அப்புவையும் அவரது பிரசித்தி பெற்ற 'வடக்கன்' களையும் விட்டு விட்டு அவர்கள் முன்னே வண்டிகளை ஒட்டிச் சென்று விட்டார்கள். அப்பு இரண்டு மூன்று 'கட்டை' பின் தங்கிவிட்டார். அக்காலங்களில் அப்புவுக்குப் பயமே கிடையாது. வாலிபம் அல்லவா?

நிலவு பகல் போலக் காய்கிறது. அப்போ தார் ரோட்டுகள் கிடையாது. குண்டுங் குழியும் புழுதியும் நிறைந்த மக்கி ரோட்டுக்களும், வண்டிப் பாதைகளும் தான். வண்டி நிறைந்த பாரம். 'வடக்கன்'கள் முக்கித்தக்கி இழுக்கின்றன. வண்டி அப்படியும் இப்படியுமாக இலேசாகத் தாலாட்டுகிறது. பாதையின் இருபுறமும் தாழம்புதர்கள் மலர்ந்திருந்ததால் 'கம்'மென்ற வாசனை. கண்டல் மரங்கள் நீருக்குள் முக்குளித்து நிமிர்ந்தன. நீ¡¢ல் கண்டல் சாயம் ஊறி தேயிலைச்சாயம் மனோரம்யமான சிவந்த நிறம் காட்டுகிறது. காற்று வேறு மெல்ல வீசிற்று. தனிமை தந்த சலிப்பும் ஏக்கமும் வாட்டுகிறது. அப்புவுக்கு பாட்டு வந்தது. பாடத் தொடங்கினார்.

வயல் வெளிகளும் சிறுபற்றைகளும் மாறிமாறி வருகின்றன. அப்புவை நோக்கிக் கையசைத்து பின்னால் போய் நின்று திரும்பிப் பார்த்தன. வயல்வெளிகளினூடாக யாரோ ஒருவன் நொண்டி நொண்டி வருகிறான். செம்பாட்டு மண்ணில் விழுந்து புரண்டவன் போல பழுப்புநிற வேட்டி கட்டியிருக்கிறான். வந்தவன், வாய்பேசாமல் பிண்ணியத்தில் பிடித்து தூங்குகிறான். பின்பாரம் மிக அதிகா¢த்து மாடுகளை தூக்க எத்தனித்தது. மாடுகளின் வாயிலிருந்து வெண்நுரை கக்கிற்று. அப்பு திட்டினார்.

"வேசைபிள்ளை, எடடா கையை... துவரங்கம்பாலை வெளுப்பன்."

அவன் முன்னால் வந்தான். வந்தவன், நுகத்தடியில் ஏறி உட்கார்ந்தான். அவனுடலிலிருந்து கெட்ட நாற்றம்- மலநாற்றம் வீசிற்று. மாடுகள் வெருண்டடித்தன. கதறின. பாரம் தாங்காமல் முன்னங்கால்களை மடித்து விழுந்தன. அப்புவுக்குச் சினம் பொங்கிற்று.

"எளிய வடுவா..." என உறுமியபடி, ஆசனத்திலிருந்தபடியே எட்டி அவனது முதுகில் துவரங்கம்பால் சாத்தினார். கூர்மையான குரலில் ஓலமெழுப்பியபடி அவன் பாய்ந்து இறங்கினான். அப்போது கோடை வானம் கிழியும்படி ஒரு மின்னல் தெறித்தது. மின்னல் ஒளியில் வந்தவனை அப்பு நன்றாகக் கண்டார். வானத்துக்கும் பூமிக்குமாக அவன் பிரமாண்டமாக வளர்ந்து கொண்டிருந்தான். சில நொடி கழித்து பெரும் இடியோசை கேட்டது. அத்துடன் கூடவே அப்புவின் நெஞ்சில் பலத்த உதை கிடைத்தது. வண்டியின் துலாவில் அப்பு மயங்கிச் சாய்ந்தார். எப்படி வீடு வந்து சேர்ந்தோமென அப்புவுக்கு இப்போது தொ¢யாதாம். அதெல்லாம் அவரது பாதைபழகிய அருமையான வடக்கன் மாடுகளின் மகிமை என நன்றியுடன் சொல்லுவார்.

"நீ பேயைக் கண்டா என்னடா செய்வாய்?" என்று அப்பு எகத்தாளமாய்க் கேட்பார்.

"பயத்திலை கழிஞ்சு போடுவாய்" என பொக்கைவாய் சி¡¢க்கும்.

"இப்ப உந்த மெஷினுகள் வயலுகளுக்கை ஒண்டுபாதி சாமமெண்டும் பாராமல் உழுது உழுது பேய்பிசாசெல்லாம் எந்தப் பக்கம் போனதெண்டு சொல்லேலாமல் போவிட்டுது" என மிக வருத்தத்துடன் முத்தாய்ப்பு வைப்பார்.

இதையெல்லாம் நான் அடங்கிய குரலில் சொல்லிக் கொண்டிருந்தேன். தேவன் வெகு சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். பிறகு தொண்டைக்குள்ளாகவே ஒரு சி¡¢ப்புக் சி¡¢த்தான். பேசாமல் சிலநேரம் படுத்துக்கிடந்தோம்.

வெளியேயிருந்து இரவின் மிகவும் சூக்குமமான ஒலிகள் கேட்டன. இருந்தாற்போல சிறு தொலைவிலிருந்து ஒரு நாய் ஊளையிட்டழுதது. பிறகு இந்தத் தெருவிலிருக்கும் எல்லா நாய்களும் சேர்ந்து எச்சா¢க்கையும், பயபிராந்தியும் கலந்த குரலில் குரைக்கத் தொடங்கின. எங்களது வீட்டின் பின்புறமாக சில நாய்கள் பயந்தடித்து ஓடியதால் ஏற்பட்ட துடியான காலடிச் சத்தங்களையும், அடித்தொண்டையிலிருந்து புறப்பட்ட அவற்றின் பீதி கலந்த முனகல் ஒலிகளையும் தெளிவாகக் கேட்டோம்.

ஒரு வெடிச்சத்தம் இருளை உறுக்கியது. நாய்களின் சந்தடிகள் ஓய்ந்தன. தெருவிளக்குகள் மட்டும் அச்சம்தரும் அமைதியைக் குலைக்க மாட்டாதனவாய் வெறித்துப் பார்த்தன.

ஜன்னலை எச்சா¢க்கையாகத் திறந்தோம். தெருவில் சிலபேர் கனமாக நடந்துபோய்க் கொண்டிருந்தார்கள். இரண்டு ஓரங்களினாலும் அவர்கள் வா¢சையாகப் போனார்கள். நிழல்கள் போல, காலடி அரவங்களைப் கிளப்பாது, ஈசலைப் பிடிக்க எத்தனிக்கும் பல்லிகளெனப் போயினர். சுற்றுச் சூழல் முழுவதற்கும் அச்சமூட்டும தோற்றமொன்றை அவர்கள் வெகு இலகுவாகக் கொடுத்துச் சென்றனர்.

யாரோ ஒருவன் பாடினான் போலும். அர்த்தம் பு¡¢யாத வேற்று மொழியில் ஒரு முரடான கரகரத்த குரல்....ஆனால் ஆத்மார்த்தமாக உணர்ச்சியைச் சிந்தும் வண்ணம் பாடிற்று. அனேகமாக அதுலொரு விரகந்தெறிக்கும் காதல் பாடல்.

விளக்குகளை அணைத்துவிட்டு சிறு பெருமூச்சுகளுடன் படுத்தோம்.

சற்று நேரத்தில், சற்றுத் தூரத்திலிருந்து இன்னொரு வெடிச்சத்தம் கேட்டது. வெகுநேரம் வரை எமது காதுகளுக்குள் அந்தச் சத்தம் சுழன்று சுழன்று ஓடிக்கொண்டேயிருந்தது.

*

விடிந்தது, தேவன் மேலும் சில நாட்கள் என்னுடன் தங்க விரும்புவதாகச் சொன்னான். எனது சைக்கிளை சில நாட்களுக்கு இரவல் தரும்படியும் கோ¡¢னான்.

மிகச் சில நாட்களே என்னுடன் தங்கினான். நன்கு இருட்டிய பிறகு, சாப்பாட்டுப் பார்சலுடனும், அலைந்து தி¡¢ந்த களைப்புடனும், வியர்வை நாற்றத்துடனும், துர்மரணங்களைப் பற்றிய செய்திகளுடனும் வருவான். இந்தச் சில நாட்களில் தேவனது பல நண்பர்கள் எனக்கு அறிமுகமானார்கள்.

தேவன் என்னை விட்டு மறுபடியும் பி¡¢ந்து போனபிறகு வீட்டில் ஒரு விசித்திரமான விரும்பத்தகாத மாற்றம் ஏற்பட்டிருந்ததை உணர்ந்தேன். இப்போ வாடைக் காற்று மாறி சோளகம் புறப்பட்டுவிட்டது. இரவு நேரங்களில் எனக்கு தெளிவற்ற கனவுகளும், விவா¢க்க முடியாத பயப்பிராந்திகளும் ஏற்பட்டன. வெளியே உக்கிரமாகச் சோளகம் வீசிற்று.

ஜன்னல்களும் கதவுகளும் தம்பாட்டில் திறந்து கொள்ள காற்று புழுதியையும் சருகுகளையும் அள்ளிக்கொண்டு வீட்டினுள் விசையாக நுழையும். 'தடார் தடார்' என ஜன்னல்களும் கதவுகளும் மூடிக்கொள்ளும். சற்று நேரத்தில் தாமே திறந்து கொள்ளும். யாரோ சிலர் பிராணாவஸ்தையுடன் முனகும் அவல ஓலங்கள் கேட்பதைப் போலிருக்கும். மிக நெருங்கும் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளும் அவதியுடன், மூத்திரம் முட்ட சிலபேர் வீட்டினுள் தாறும் மாறுமாக தடுமாறி ஓடிக்கொண்டிருப்பதெனவும் அரவங்கள் எழுந்தன. சிலவேளைகளில் சொட்டுச் சொட்டாக நீர் விரைந்து சிந்துவதைப்போல, ஆனால் மிகவும் பெருத்த உரப்புடன் குளியலறையிலிருந்து சத்தங்கள் வரும்.

எனதுடல் வியர்க்கும். இதயம் துடிக்கும். வேகவேகமாக மூச்சு வரும். எழுந்து போகவோ மறுபுறம் திரும்பிப் பார்க்கவோ இயலாதவனாய் போர்வையால் முகத்தை மூடியபடி படுத்துக்கிடப்பேன்.

ஒரு தரம், ஒரு கனவு கண்டேன்.

தேவனை யாரோ சிலர் கூட்டிக் கொண்டு போவது போல தெளிவற்ற காட்சி. அது மார்கழி மாதமாக இருக்க வேண்டும். ஒரே பனிப்புகார். தேவன் மறுபடியும் மெலிந்திருக்கிறான். அவனது மேலில் சேட்இல்லை. வலையை தோள்கள் மீது போட்டிருக்கிறான். கிழிந்துபோன பழைய சாரன் உடுத்திருக்கிறான். அவனுக்கு கால்கள் இல்லை. அந்தரத்தில் தொங்குகிறான். ஒரு நிறைந்த நீர்நிலைப்பக்கமாக அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் போகையில், தேவன் நீருக்குள் இறங்க ஆரம்பித்தான். அவர்கள் 'அடே தம்பி...வாடா...' என நைச்சியம் பண்ணும் குரலில் கூவி அழைத்தனர். அவன் மேலும் நீருக்குள் இறங்குகிறான். சாரனை கழற்றி தலையில் முண்டாசாக கட்டிக்கொள்கிறான். திருநீறு பூசிக்கொள்கிறான். ஏதோ முணுமுணுக்கிறான். அவர்கள் கைகளை வீசி வீசி அவனைப் பயமுறுத்த எத்தனிக்கின்றனர். மலநாற்றம் வீசுகிறது. மலநாற்றமா அல்லது பிணம் கருகும் நெடியா? அது மார்கழி மாதப்பனியா, அல்லது ஊர்கள் எல்லாம் சுட்டொ¢க்கப்படும் புகையா? எனக்கு மூச்சு முட்டுகிறது. ஒன்றுமே தெளிவாகத் தொ¢யமா டேன் என்கிறது.

மிகப் பிரயாசைப்பட்டு கண்விழித்தேன். உடல் வியர்த்திருந்தது. மிகத் தாகமாக இருந்தது. நீர்க்குவளை இருந்த பக்கம் கைகளைத் துளாவி, அதை இருட்டில், நிலத்தில் உருட்டி உடைத்தேன்.

*

அடுத்த நாள் காலையில், தேவனின் நண்பன் ஒருவன் என்னைத் தேடிவந்தான். தேவனைக் கண்டாயா, என வினாவினான்.

மேலும் சில நாட்கள் கழித்து இன்னொருவன் வந்தான். இரண்டொரு நாள் கழித்து இரண்டு பேர் வந்து தேவனை விசா¡¢த்தார்கள்.

அதற்குப் பிறகு நான் தேவனைக் காணவேயில்லை!

அத்துடன் நான் வீடு மாறிவிட்டேன். பேய்கள் பற்றி நான் மிகவும் அஞ்சுகிறேன். இரவுகளில் நிம்மதியின்றி தூக்கத்துக்கு போகிறேன். நடுஇரவில் விழித்தெழுந்து வேதனை நினைவு படுத்த முயற்சித்தவாறு, நெடுநேரம் புகைபிடிக்கிறேன்.




7. மோகவாசல்


தேவர்கள் இறைவனிடம் ஓடினார்கள்.

விசுவாமித்தினின் தவவலிமையினால், அவர்களது தேஜஸ் குன்றிக் கொண்டே போயிற்று.

இறைவனின் இதழ்களில் குமிண்சி¡¢ப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.

"தேவ தேவா!...எமைக் காத்தருள்க..." என தேவர்கள் இறைவனிடம் இறைஞ்சிய ஒலியில் சப்த சமுத்திரங்களின் குமுறல்களும் தோற்று அடங்கின.

இறைவன் மதனை அழைத்துவர பூதகனங்களை ஏவினான். கரும்பு வில்லும் பஞ்சமலர்களும் மணம் பரப்ப மதனம், அவனுடன் குளிந்த சிரத்துடன் ரதியும் வந்தனர்.

இறைவன் இதழ்களில் குமிண்சி¡¢ப்பு மேலும் சற்றே வி¡¢ந்தது. ரதி நடுங்கினாள். தன் நாதனுக்காக ஏங்கினாள்.

விசுவாமித்திரன் சினத்தை ஈரேழு உலகமும் அறியும்.

அவனது தவத்துக்கு பெண்களால் குந்தகம் ஏற்பட ஏற்பட அவனது கோபாக்கினி கொழுந்துவிட்டு ஜ்வாலித்தது.

தேவர்கள் விடாப்பிடியாக முயன்றனர். ¡¢ஷிகள் அதற்கு நெய் வார்த்தனர்.

சகல சம்பத்துகளம், நால்வகைச் சேனையும் விசாலித்த தேசத்தையும் உடைய கெளசிகராஜன் பிரம்ம ¡¢ஷி என பட்டமும் பெற்ற விடுவானாகில்....

வசிஷ்டன் கர்வபங்கம் செய்யப்படுவான் என அவர்கள் ஏங்கினர்.

பெண்களால் உலகில் கலகம் விளையும் என்பது எவ்வளவு தூரம் பொருந்தி வருகிறது. என்ன தான் ஒரு பசுவேயாயினும், சபலையும் ஒரு பெண்ணினம் அன்றோ? அவளை மோகித்து, வசிஷ்டனிடம் இச்சித்ததனால் அல்லவா கெளசிகராஜன் கடும் விரதம் அனுஷ்டிக்க விதியுண்டாயிற்று.

விசுவாமித்திரனுக்கு பெண்களை எண்ண எண்ண சினம் பொங்கிற்று.

தேவர்கள் சளைத்து விடாமல் அப்சரஸ¤களை மாறி மாறி ஏவினர். முனிவனம் தன்வயமிழந்து சபித்தல் தொடர்ந்தது. நீண்ட நெடுங்காலமாக தபஸ் இருந்து தான்பெற்ற ஆற்றல்களையெல்லாம் விசுவாமித்திரன் நொடிப் பொழுதுகளில் இழந்தான்.

மீண்டு பூரக ரேசக முதலிய அட்டவாயுக்களையும், ஐம்புலன்களையும் மிகமுயன்று அடக்கி நிர்ச்சிந்தையாக லயிக்க முயன்றான்.

தேவர்கள் மறுபடி மறுபடி இறைவனிடம் ஓடினர்.

இறைவன் மேனகையை அழைத்துவர பூதகணங்களை ஏவினான்.

வனத்தில் வசந்தம் பூத்துக் குலுங்கிற்று. மலர்களின் நறுமணமும், தேறலின் போதையும் தித்திப்பும் எங்கும் நிறைந்தன. காட்டுப்பட்சிகளின் உல்லாசமிருந்த கூவல் ஒலிகளும், வனவிலங்குகளின் வேட்கை ததும்பும் கனைப்பு ஒலிகளும் எங்கும் எதிரொலித்தன.

முனிவனது சிந்தை தடுமாறிற்று. மதன் தருணம் அறிந்து குறிபிசகாமல் கணை தொடுத்தான்.

கூடவே, மின்னல் ஒன்றைப் பற்றியவனாய் மேனகை பூமியில் குதித்தாள்.

அவளது தேகத்தை தழுவிய காற்றைச் சுவாசித்ததுமே, முனிவன் சிலிர்த்தான். மிருக வேட்கையினால் அலைப்புற்றான். முன்னே, ராஜனாயிருந்த காலத்தில் போகசமுத்திரங்களில் சளைக்காது நீந்தித் திளைத்தவனல்லவா?

தாபத்துடன் 'மேனகா' என முனிவன் கூவி அழைத்தான்.

தேவர்கள் கனிகொண்டு துள்ளினர். விழிகளில் விஷக்கிறக்கம்.

ரதிதேவி ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள். தன் நாதன் தோள்களில் சாய்ந்தாள்.

கீழே பூமியில்; மேனகை முனிவனை விழுங்கிக் கொண்டிருந்தாள்.

முனிவனது விரதங்கள் மட்டுப்படுத்தப்பட்டன. ஈவிரக்கமற்ற அவனது உண்மைதேடல் தளர்த்தப்பட்டது. ஒரேவிதமான சலிப்பூட்டும் தடத்திலே அவனது வாழ்க்கை செல்லலாயிற்று. திகட்டும் வரை மேனகையை அவன் தழுவிக் கிடந்தான்.

ஞானத்தை எய்துவதற்கு பதில், குழந்தையை ஏந்த வேண்டிய வனானான் முனிவன்!

முனிவனின் காய்த்துப் போன கரங்களில் குழந்தை வீ¡¢ட்டழுதது. விதி சி¡¢த்தது. கானகம் மானிட வாழ்வின் விசித்திரங்களை தா¢சித்ததில், பெருமூச்செறிந்து ஓய்ந்தது.

மேனகைக்கு முனிவனிடம் சலிப்புத் தட்டிற்று. முனிவனது தழுவல்களில் முன்புபோல மூழ்கடிக்கும் ஆவேசம் இருக்கவில்லை. தவிர, தேவலோகத்தின் செளகர்ய வாழ்வு எங்கே, கிழங்கையும், கனியையும் புசித்து தர்ப்பையின் மீது உறங்கும் இந்த மானிடன் எங்கே?

போகப்போக முனிவனின் உடலில் இன்ப வேட்கை குன்றிற்று. ஆண்டாண்டு காலமாக அடக்கிவைத்திருந்த இந்தி¡¢யங்கள் பீ¡¢ட்டுப் பாய்ந்து சென்றதும், முனிவனுக்கு பெண்ணைக் கூடுவதில் ஒருவிதமான யந்தி¡£கப் பாங்கு மேலோங்கிற்று. மேனகையின் மேனியில் புதுமை எதுவுமில்லாமல் போவதாகத் தொ¢ந்தது. அவள் ஒர சாதாரண பெண்ணே போன்று தோன்றினாள். அவளைக் காண்பதில் சலிப்பும், வெறுப்பும் தோன்றியது.

முனிவன் 'திருதிரு' வென விழித்தான்.

வீணை ஒலி தூரே கேட்டது. நாதனின் மிதியடிகளின் ஓசையும் கலந்து வந்தது.

கிண்டலுக்கும், கலகத்துக்கும் பெயர் பெற்ற நாரதன்...

முனிவன் கூனிக் குறுகி நின்றான். அதலபாதாளத்தில் வீழ்ந்து புரள்வதாய் உழன்றான்.

ஒரு பொறி தட்டிற்று.

மோகம் என்பது ஒருவாசல் தான். கண்ணையும் கருத்தையும் பறிக்கும் அலங்காரமான மாயாவாசல். அந்த வாசலை ஒருதரம் நிதானமாக கடந்துவிட்டால் அதற்குமப்பால் பெரும் அதிசயங்கள் ஒன்றும் நிகழக்காத்திருக்கவில்லை, என முனிவன் உணர்ந்தான். மேகவாசலைக்கடக்கும் தருணத்தில் ஏற்படும் கணநேரச் சிலிப்புக்காக, ஆண்டாண்டு காலமாக கட்டி வளர்த்த தனது தேஜஸை இழந்து விட்டோமே எனக்கலங்கினான்.

வசிஷ்டனின் பா¢காசத்துக்கு ஆளாவோமே எனவெண்ணி ஏங்கினான்.

முனிவன் மேனகையை கடைசித் தடவையாக அழைத்தான். அவனது குரலில் வழமைக்கு மாறான ஏதோ ஒன்று இருந்தது.

மேனகை அஞ்சினாள். சாபத்தை எதிர்கொள்ள, நடுங்கும் இதழ்களுடன் காத்து நின்றாள்.

முனிவனோ, ஒரு சிசுவை ஏந்துதல் போன்று அவளை மென்மையாகத் தழுவி நேத்திரங்களிலும், நுதலிலும் முதத்தமிட்டான்.

"போய் வா மேனகா!...ஞானத்தின் வாசற்கதவை நீ எனக்காகத் திறந்து விட்டாய்!!"

மேனகையை அழைத்துச் செல்ல மின்னல்கள் இறங்க ஆரம்பித்தன.

ஸ்வாமி...தங்களது குழந்தை....?"

"குழந்தை என்னுடையதல்ல பெண்ணே....அது பூமியின் புத்திரன்..... பூமி அவனைக் காக்கட்டும்." என்று மிகத்தெளிவுடன் பதில் சொன்னான் விசுவாமித்திரன்.

முனிவன் தனது பயணத்தை மீண்டும் மிக நிதானத்துடன் ஆரம்பித்தான். மிகவடர்ந்த கானகங்களையும் பனிபடர்ந்த மலைகளையும் நோக்கி அவன் சென்றான்.

மேனகை அவன் சென்ற திக்கை நோக்கி சிரம் தாழ்த்தி ஒரு முறை தொழுதாள். அவனது பாததூளியை எடுத்து சிரசில் தா¢த்துக் கொண்டு, பிரகாசமான ஒரு மின்னலுடன் மறைந்தாள்.

நிராதரவாக விடப்பட்ட குழந்தை அழுதது. வாழ்க்கை எதிரே நின்று அதைப் பயமுறுத்தியது. அழட்டும்! பூமியில் பிறந்தவர்கள் அழாமல் இருத்தல் கூடுமா?

விசுவாமித்திரனின் உறுதி மிக்க பயணத்தைக் கண்டு தேவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ¡¢ஷிகள் இடிந்தனர்.

"ஹே!...முனிசிரேஷ்ட, உனது இஷ்டசித்தியை நீ அடைவாய்" என ஒரு அசா£¡¢ முழங்கிற்று.

தேவலோகம்.

இறைவன் முகத்தில் சதா குமிண்சி¡¢ப்பு. கண்களில் விஷக்கிறக்கம்.

இறைவிக்கு ஒரே வியப்பு. கூடவே சந்தேகம்.

"நாதா, தாங்கள் முனிவனுக்கு உதவி செய்தீர்களா, அல்ல தேவர்களுக்கா?"

"யாருக்கும் எனது உதவி தேவையில்லை, உபத்திரவமும் தேவையில்லை. அவரவர் அவரவருக்கு¡¢ய பாதையில் செல்லட்டும். இடையிடையே நான் கொஞ்சம் விளையாடுவேன். அதிலொரு இன்பம்! பொழுது போகாதே!!" என அலுத்துக்கொண்டான் இறைவன்.

நிசப்தம்.

=================

முற்றும்...


This page was first put up on August 21, 2000
Please send your comments and corrections to the Webmaster of this site