-tiruvaruTpA and tiruvoRRiyUr vaTivuTai mANikka mAlai 
of irAmalingka aTikaL (vaLLaLAr)
(in tamil script, unicode/utf-8 format)
திருவருட்பா  -அகவல் & 
திருவொற்றியூர் வடிவுடை மாணிக்க மாலை
இராமலிங்க அடிகள் (வள்ளலார்) அருளியது 
 
 
 Acknowledgement: 
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Etext preparation: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland  
Etext proof-reading:  Elango Sampandam, Chicago, USA 
This webpage presents the Etext in Tamil script, in Unicode encoding (utfi-8 format).
 
© Project Madurai, 1998-2021.
 
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to the preparation
 
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
 
Details of Project Madurai are available at the website
 
         https://www.projectmadurai.org/
 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
1. இராமலிங்க அடிகள் (வள்ளலார்)  அருளிய திருவருட்பா  அகவல்
அருட்பெருஞ் ஜோதி            அருட்பெருஞ் ஜோதி
 தனிப்பெருங்கருணை          அருட்பெருஞ் ஜோதி
 
        அருட்பெருஞ் ஜோதி  அகவல்
        =======================
 
 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
 
 அருட்சிவ நெறிசாரருட்பெருஞ்ஜோதி
 அருட்சிவ பதியாமருட்பெருஞ்ஜோதி
 
 ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
 ஆகநின் றோங்கிய வருட்பெருஞ்ஜோதி
 
 இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
 அகமறப் பொருந்திய வருட்பெருஞ்ஜோதி
 
 இனமின்றிகபரத்திரண்டின்மேற்பொருளாய்
 ஆனலின்றோங்கிய வருட்பெருஞ்ஜோதி             10
 
 உரைமனங் கடந்த வொருபெருவெளிமேல்
 அரைசுசெய் தோங்கு மருட்பெருஞ்ஜோதி
 
 ஊக்கமு முணர்ச்சியுமொளிதரு மாக்கையும்
 ஆக்கமு மருளிய வருட்பெருஞ்ஜோதி
 
 எல்லையில் பிறப்பெனு மிருங்கடல் கடத்தியென்
 அல்லலை நீக்கிய வருட்பெருஞ்ஜோதி
 
 ஏறா நிலைமிசை யேற்றியென் றனக்கே
 ஆறாறு காட்டிய வருட்பெருஞ்ஜோதி
 
 
 ஐயமுந்திரிபு மறுத்தெனதுடம்பினுள்
 ஐயமு நீக்கிய வருட்பெருஞ்ஜோதி                        20
 
 ஒன்றென விரண்டென வொன்றிரண்டெனவிவை
 யன்றென விளங்கிய வருட்பெருஞ்ஜோதி
 
 ஓதாதுணர்ந்திட வொளியளித்தெனக்கே
 ஆதாரமாகிய வருட்பெருஞ்ஜோதி
 
 ஒளவியமாதி யோராறுந் தவிர்த்தபேர்
 அவ்வியல் வழுத்து மருட்பெருஞ்ஜோதி
 
 திருநிலைத் தனிவெளி சிவவெளி யெனுமோர்
 அருள்வெளிப் பதிவள ரருட்பெருஞ்ஜோதி
 
 சுத்தசன் மார்க்க சுகத்தனிவெளியெனும்
 அத்தகையச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி            30
 
 சுந்தமெஞ்ஞான சுகோதய வெளியெனு
 அத்துவிதச்ச்பை யருட்பெருஞ்ஜோதி
 
 துயெகலாந்த சுகந்தரு வெளியெனும்
 ஆயசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
 
 ஞானயோகாந்த நடத்திருவெளியெனும்
 ஆனியில் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 விமல போதந்தமா மெய்ப்பொருள்வெளியெனும்
 அமல சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
 
 பொய நாதந்தப் பெருநிலைவெளியெனும்
 அயசிற்றம்பலத் தருட்பெருஞ்ஜோதி                       40
 
 சுத்தவேதாந்தத் துரியமேல்வெளியெனும்
 அத்தகு சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 சுத்த சித்தாந்த சுகப்பெருவெளியெனும்
 அத்தனிச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 தகரமெய்ஞ்ஞானத் தனிப்பெருவெளியெனும்
 அகர நிலைப்பதி யருட்பெருஞ்ஜோதி
 
 தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும்
 அத்திருவம்பலத் தருட்பெருஞ்ஜோதி
 
 சச்சிதானந்தத் தனிப்பரவெளியெனும்
 அச்சிய லம்பலத் தருட்பெருஞ்ஜோதி                        50
 
 சாகாக் கலைநிலை தழைத்திடுவெளியெனும்
 ஆகாயத் தொளி ரருட்பெருஞ்ஜோதி
 
 காரண காரியங் காட்டிடு வெளியெனும்
 ஆரணச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 ஏக மனேக மெனப்பகர் வெளியெனும்
 ஆகமச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 வேதா கமங்களின் விளைவுகட்கெல்லாம்
 ஆதாரமாஞ்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 என்றாதிய சுடர்க் கியனிலையாயது
 வன்றாந்திருச்சபை  யருட்பெருஞ்ஜோதி              60
 
 சமயங் கடந்த தனிப்பொருள் வெளியாய்
 அமையுந்திருச்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 முச்சுடர் களுமொளி முயங்குற வளித்தருள்
 அச்சுடராஞ்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 துரியமுங்கடந்த சுகபூரணந்தரும்
 அரியசிற்றம்பலத்  தருட்பெருஞ்ஜோதி
 
 எவ்வகைச் சுகங்களு மினிதுற வளித்தருள்
 அவ்வகைச் சிற்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 இயற்கையுண்மை யதாயியற்கையின்பமுமாம்
 அயர்ப்பிலாச் சிற்சபை  யருட்பெருஞ்ஜோதி          70
 
 சாக்கிரா தீதத் தனிவெளியாய்நிறை
 வாக்கிய சிற்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
 அட்டமேற் சிற்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 நவந்தவிர் நிலைகளு நண்ணுமோர் நிலையாய்
 அவந்தவிர் சிற்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 உபயபக் கங்களு மொன்றெனக் காட்டிய
 அபயசிற் சபையி  லருட்பெருஞ்ஜோதி
 
 சேகர மாம்பல சித்தி நிலைக்கெலாம்
 ஆகர மாஞ்சபை  யருட்பெருஞ்ஜோதி                        80
 
 மனாதிகட் கரிய மதாதீத வெளியாம்
 அனாதி சிற்சபையி லருட்பெருஞ்ஜோதி
 
 ஓதிநின்றுணர்ந்துணர்ந்துணர்தற்காதாம்
 ஆதிசிற்சபையி  லருட்பெருஞ்ஜோதி
 
 வாரமு மழியா வரமுந் தருந்திரு
 வாரமுதாஞ் சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 இழியாப் பெருநல மெல்லா மளித்தருள்
 அழியாச் சிற்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 கற்பம் பலபல கழியுனு மழிவுறா
 அற்புதந் தருஞ்சபை  யருட்பெருஞ்ஜோதி              90
 
 எனைத்துந் துன்பிலா வியலளித்தெண்ணிய
 வனைத்துந் தருஞ்சபை  யருட்பெருஞ்ஜோதி
 
 பாணிப்பிலதாய்ப் பரவினோர்க் கருள்புரி
 ஆணிப் பொனம்பலத்  தருட்பெருஞ்ஜோதி
 
 எம்பல மெனத்தொழு தேத்தினோர்க் கருள்புரி
 அம்பலத்தாடல்செய்  யருட்பெருஞ்ஜோதி
 
 தம்பர ஞான சிதம்பர மெனுமோர்
 அம்பரத் தோங்கிய  அருட்பெருஞ்ஜோதி
 
 எச்சபை பொதுவென வியம்பின ரறிஞர்கள்
 அச்சபை யிடங்கொளு  மருட்பெருஞ்ஜோதி           100
 
 வாடுதனீக்கிய மணிமன் றிடையே
 ஆடுதல் வல்ல வருட்பெருஞ்ஜோதி
 
 நாடகத் திருச்செய நவிற்றிடு மொருபே
 ராடகப் பொதுவொளி ரருட்பெருஞ்ஜோதி
 
 கற்பனை முழுவதுங் கடந்தொளி தருமோர்
 அற்புதச் சிற்சபை யருட்பெருஞ்ஜோதி
 
 இன்றநற் றாயினு மினிய பெருந்தய
 வான்றசிற் சபையி லருட்பெருஞ்ஜோதி
 
 இன்புறு நானுளத் தெண்ணியாங் கெண்ணியாங்
 கன்புறத் தருசபை யருட்பெருஞ்ஜோதி                     110
 
 எம்மையு மென்னைவிட்டிறையும் பிரியா
 தம்மையப் பனுமா மருட்பெருஞ்ஜோதி
 
 பிறிவுற் றறியாப் பெரும்பொருளாயென்
 னறிவுக் கறிவா மருட்பெருஞ்ஜோதி
 
 சாதியு மதமுஞ் சமயுமுங் காணா
 ஆதிய நாதியா மருட்பெருஞ்ஜோதி
 
 தநுகர ணாதிக டாங்கடந்தறியுமோர்
 அனுபவ மாகிய வருட்பெருஞ்ஜோதி
 
 உனுமுணர் வுணர்வா யுணர்வெலாங் கடந்த
 அநுபவா தீத வருட்பெருஞ்ஜோதி               120
 
 பொதுவுணர் வுணரும் போதலாற் பிரித்தே
 அதுவெனிற் றோன்றா வருட்பெருஞ்ஜோதி
 
 உளவினி லறிந்தா லொழியமற் றளக்கின்
 அளவினி லளவா வருட்பெருஞ்ஜோதி
 
 என்னையும் பணிகொண் டிறவா வரமளித்
 தன்னையு லுவந்த வருட்பெருஞ் ஜோதி
 
 ஓதியோ தாம லுறவெனக் களித்த
 ஆதியீ றில்லா வருட்பெருஞ் ஜோதி
 
 படியடி வான்முடி பற்றினுந் தோற்றா
 அடிமுடி யெனுமோ ரருட்பெருஞ் ஜோதி            130
 
 பவனத் தினண்டப் பரப்பினெங் கெங்கும்
 அவனுக் கவனா மருட்பெருஞ் ஜோதி
 
 திவளுற் றவண்டத் திரளினெங் கெங்கும்
 அவளுக் கவளா மருட்பெருஞ் ஜோதி
 
 மதனுற் றவண்ட வரைப்பினெங் கெங்கும்
 அதனுக் கதுவா மருட்பெருஞ் ஜோதி
 
 எப்பா லுமாய்வெளி யெல்லாங் கடந்துமேல்
 அப்பா லுமாகிய வருட்பெருஞ் ஜோதி
 
 வல்லதா யெல்லா மாகியெல் லாமும்
 அல்லதாய் விளங்கு மருட்பெருஞ் ஜோதி             140
 
 எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோ ர்
 அப்பொரு ளாகிய அருட்பெருஞ் ஜோதி
 
 தாங்ககி லாண்ட சராசர நிலைநின்
 றாங்குற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 சத்தர் களெல்லாந் தழைத்திட வகம்புறத்
 தத்திசை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 சத்திக ளெல்லாந் தழைக்கவெங் கெங்கும்
 அத்தகை விளங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 முந்துறு மைந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
 ஐந்தொழி லளிக்கு மருட்பெருஞ் ஜோதி           150
 
 பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினுஞ் சிறிதாய்
 அரிதினு மரிதா மருட்பெருஞ் ஜோதி
 
 காட்சியுங் காணாக் காட்சியு மதுதரும்
 ஆட்சியு மாகிய வருட்பெருஞ் ஜோதி
 
 இன்புறு சித்திக ளெல்லாம் புரிகவென்
 றன்புட னெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 இறவா வரமளித் தென்னைமே லேற்றிய
 அறவா ழியாந்தனி யருட்பெருஞ் ஜோதி
 
 நானந் தமில்லா நலம்பெற வெனக்கே
 ஆனந் தநல்கிய வருட்பெருஞ் ஜோதி                    160
 
 எண்ணிய வெண்ணியாங் கியற்றுக வென்றெனை
 யண்ணியுள் ளோங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீயது
 வாயினை யென்றரு ளருட்பெருஞ் ஜோதி
 
 எண்ணிற் செழுந்தே னினியதெள் ளமுதென
 அண்ணித் தினிக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 சிந்தையிற் றுன்பொழி சிவம்பெறு கெனத்தொழி
 லைந்தையு மெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 எங்கெங் கிருந்துயி ரெதெது வேண்டினும்
 அங்கங் கிருந்தரு ளருட்பெருஞ் ஜோதி             170
 
 சகமுதற் புறப்புறந் தங்கிய வகப்புறம்
 அகம்புற முற்றுமா மருட்பெருஞ் ஜோதி
 
 சிகரமும் வகரமுஞ் சேர்தனி யுகரமும்
 அகரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
 
 உபரச வேதியி னுபயமும் பரமும்
 அபரமு மாகிய வருட்பெருஞ் ஜோதி
 
 மந்த்ண மிதுவென மறுவிலா மதியால்
 அந்தணர் வழுத்து மருட்பெருஞ் ஜோதி
 
 எம்புயக் கனியென வெண்ணுவா ரிதய
 வம்புயத் தமர்ந்த வருட்பெருஞ் ஜோதி             180
 
 செடியறுத் தேதிட தேகமும் போகமும்
 அடியருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
 
 துன்புறுத்  தொருசிவ துரிய சுகந்தனை
 அன்பருக் கேதரு மருட்பெருஞ் ஜோதி
 
 பொதுவது சிறப்பது புதியது பழயதென்
 றதுவது வாய்த்திக ழருட்பெருஞ் ஜோதி
 
 சேதனப் பெருநிலை திகழ்தரு மொருபரை
 யாதனத் தோங்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 ஓமயத் திருவுரு வுவப்புட னளித்தெனக்
 காமயத் தடைதவி ரருட்பெருஞ் ஜோதி           190
 
 எப்படி யெண்ணிய தென்கருத் திங்கெனக்
 கப்படி யருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 எத்தகை விழைந்தன வென்மன மிங்கெனக்
 கத்தகை யருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 இங்குறத் திரிந்துள மிளையா வகையெனக்
 கங்கையிற் கனியா மருட்பெருஞ் ஜோதி
 
 பாருயப் புரிகெனப் பணித்தெனக் கருளியென்
 ஆருயிர்க் குள்ளொளி ரருட்பெருஞ் ஜோதி
 
 தேவியுற் றொளிர்தரு திருவுரு வுடனென
 தாவியிற் கலந்தொளி ரருட்பெருஞ் ஜோதி         200
 
 எவ்வழி மெய்வழி யென்பவே தாகமம்
 அவ்வழி யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 வையமும் வானமும் வாழ்த்திட வெனக்கருள்
 ஐயறி வளித்த வருட்பெருஞ் ஜோதி
 
 சாமா றனைத்துந் தவிர்த்திங் கெனக்கே
 ஆமா ரருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 சத்திய மாஞ்சிவ சத்தியை யீந்தெனக்
 கத்திறல் வளர்க்கு மருட்பெருஞ் ஜோதி
 
 சாவா நிலையிது தந்தன முனக்கே
 ஆவா வெனவரு ளருட்பெருஞ் ஜோதி                     210
 
 சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
 ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி
 
 மயர்ந்திடேல் சிறிது மனந்தளர்ந் தஞ்சேல்
 அயர்ந்திடே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
 
 தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல்
 ஆசறத் தொத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காட்டிய வுலகெலாங் கருணையாற் சித்தியின்
 ஆட்டியல் புரியு மருட்பெருஞ் ஜோதி
 
 எங்குல மெம்மின மென்பதொண் ணூற்றா
 றங்குல மென்றரு ளருட்பெருஞ் ஜோதி             220
 
 எம்மத மெம்மிறை யென்ப வுயிர்த்திறள்
 அம்மத மென்றரு ளருட்பெருஞ் ஜோதி
 
 கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
 ஆறிய லெனவுரை யருட்பெருஞ் ஜோதி
 
 எண்டர முடியா திலங்கிய பற்பல
 அண்டமு நிறைந்தொளி ரருட்பெருஞ் ஜோதி
 
 சாருயிர்க் கெல்லாந் தாரக மாம்பரை
 யாருயிர்க் குயிரா மருட்பெருஞ் ஜோதி
 
 வாழிநீடுழீ வாழியென் றோங்குபே
 ராழியை யளித்த வருட்பெருஞ் ஜோதி                  230
 
 மாய்ந்தவர் மீட்டும் வருநெறி தந்திதை
 யாய்ந்திடென் றுரைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 எச்ச நினக்கிலை யெல்லாம் பெறுகவென்
 அச்சந் தவிர்த்தவென் னருட்பெருஞ் ஜோதி
 
 நீடுக நீயே நீளுல கனைத்தும்நின்
 றாடுக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி
 
 முத்திறல் வடிவமு முன்னியாங் கெய்துறு
 மத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
 ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி             240
 
 கருமசித் திகளின் கலைபல கோடியும்
 அரசுற வெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 யோகசித் திகள்வகை யுறுபல கோடியும்
 ஆகவென் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 ஞானசித் தியின்வகை நல்விரி வனைத்தும்
 ஆனியின் றெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 புடையுறு சித்தியின் பொருட்டே முத்தியை
 அடைவதென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 முத்தியென் பதுநிலை முன்னுறு சாதனம்
 அத்தக வென்றவென் னருட்பெருஞ் ஜோதி          250
 
 சித்தியென் பதுநிலை சேர்ந்த வநுபவம்
 அத்திற லென்றவென் னருட்பெருஞ் ஜோதி
 
 ஏகசிற் சித்தியே யியாற வனேகம்
 ஆகிய தென்றவென் னருட்பெருஞ் ஜோதி
 
 இன்பசித் தியினிய லேக மனேகம்
 அன்பருக் கென்றவென் னருட்பெருஞ் ஜோதி
 
 எட்டிரண் டென்பன வியாமுற் படியென
 அட்டநின் றருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 இப்படி கண்டனை யினியுறு படியெலாம்
 அப்படி யேயெனு மருட்பெருஞ் ஜோதி                    260
 
 படிமுடி கடந்தனை பாரிது பாரென
 அடிமுடி காட்டிய வருட்பெருஞ் ஜோதி
 
 ஜோதியுட் ஜோதியின் சொருபமே யந்த
 மாதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 இந்தசிற் ஜோதியி நியாரு வாதி
 யந்தமென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 ஆதியு மந்தமு மறிந்தனை நீயே
 ஆதியென் றருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 நல்லமு தென்னொரு நாவுளங் காட்டியென்
 அல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி            270
 
 கற்பக மென்னுளங் கைதனிற் கொடுத்தே
 அற்புத மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
 
 கதிர்நல மென்னிரு கண்களிற் கொடுத்தே
 அதிசய மியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
 
 அருளொளி யென்றனி யறிவினில் விரித்தே
 அருணெறி விளக்கெனு மருட்பெருஞ் ஜோதி
 
 பரையொளி யென்மனப் பதியினில் விரித்தே
 அரசது வியற்றெனு மருட்பெருஞ் ஜோதி
 
 வல்லப சத்திகள் வகையெலா மளித்தென
 தல்லலை நீக்கிய வருட்பெருஞ் ஜோதி           280
 
 ஆரிய லகம்புற மகப்புறம் புறப்புறம்
 ஆரமு தெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 சூரிய சந்திர ஜோதியுட் ஜோதியென்
 றாரியர் புகழ்தரு மருட்பெருஞ் ஜோதி
 
 பிறிவே தினியுனைப் பிடித்தன முனக்குநம்
 மறிவே வடிவெனு மருட்பெருஞ் ஜோதி
 
 எஞ்சே லுகினில் யாதொன்று பற்றியும்
 அஞ்சே லென்றரு ளருட்பெருஞ் ஜோதி
 
 மாண்டுழ லாவகை வந்திளங் காலையே
 ஆண்டுகொண் டருளிய வருட்பெருஞ் ஜோதி          290
 
 பற்றுக ளனைத்தையும் பற்றறத் தவிர்த்தென
 தற்றமு நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 சமயங் குலமுதற் சார்பெலாம் விடுத்த
 அமயந் தோன்றிய வருட்பெருஞ் ஜோதி
 
 வாய்தற் குரித்தெனு மறையா கமங்களால்
 ஆய்தற் கரிய வருட்பெருஞ் ஜோதி
 
 எல்லாம் வல்லசித் தெனக்களித் தெனக்குனை
 யல்லா திலையெனும் மருட்பெருஞ் ஜோதி
 
 நவையிலா வுளத்தி னாடிய நாடிய
 வவையெலா மளிக்கு மருட்பெருஞ் ஜோதி         300
 
 கூற்றுதைத் தென்பாற் குற்றமுங் குணங்கொண்
 டாற்றன்மிக் களித்த வருட்பெருஞ் ஜோதி
 
 நன்றறி வறியா நாயினேன் றனையும்
 அன்றுவந் தாண்ட வருட்பெருஞ் ஜோதி
 
 நாயினுங் கடையே னீயினு மிழிந்தேன்
 ஆயினு மருளிய வருட்பெருஞ் ஜோதி
 
 தோத்திரம் புகலேன் பாத்திர மல்லேன்
 ஆத்திர மளித்த வருட்பெருஞ் ஜோதி
 
 எச்சோ தனைகளு மியற்றா தெனக்கே
 அச்சோ வென்றரு ளருட்பெருஞ் ஜோதி             310
 
 ஏறா நிலைநடு வேற்றியென் றனையீண்
 டாறாறு கடத்திய வருட்பெருஞ் ஜோதி
 
 தாபத் துயரந் தவிர்த்துல குறுமெலா
 ஆபத்தும் நீக்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 மருட்பகை தவிர்த்தெனை வாழ்வித் தெனக்கே
 யருட்குரு வாகிய வருட்பெருஞ் ஜோதி
 
 உருவமு மருவமு முபயமு மாகிய
 அருணிலை தொத்த வருட்பெருஞ் ஜோதி
 
 இருளறுத் தென்னுளத் தெண்ணியாங் கருளி
 அருளமு தளித்த வருட்பெருஞ் ஜோதி                   320
 
 தெருணிலை யிதுவெனத் தெருட்டியென் னுளத்திருந்
 அருணிலை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
 
 பொருட்பத மெல்லாம் புரிந்துமே லோங்கிய
 அருட்பத மளித்த வருட்பெருஞ் ஜோதி
 
 உருள்சக டாகிய வுளஞ்சலி யாவகை
 அருள்வழி நிறுத்திய வருட்பெருஞ் ஜோதி
 
 வெருள்மன மாயை வினையிரு ணீக்கியுள்
 அருள்விளக் கேற்றிய வருட்பெருஞ் ஜோதி
 
 சுருள்விரி வுடைமனச் சுழலெலா மறுத்தே
 அருளொளி நிரப்பிய வருட்பெருஞ் ஜோதி         330
 
 விருப்போ டிகாறு வெறுப்புந் தவிர்த்தே
 அருட்பே றளித்த வருட்பெருஞ் ஜோதி
 
 அருட்பேர் தரித்துல கனைத்து மலர்ந்திட
 அருட்சீ ரளித்த வருட்பெருஞ் ஜோதி
 
 உலகெலாம் பரவவென் னுள்ளத் திருந்தே
 அலகிலா வொளிசெய் யருட்பெருஞ் ஜோதி
 
 விண்ணினுள் விண்ணாய் விண்ணடு விண்ணாய்
 அண்ணி நிறைந்த வருட்பெருஞ் ஜோதி
 
 விண்ணுறு விண்ணாய் விண்ணிலை விண்ணாய்
 அண்ணி வயங்கு மருட்பெருஞ் ஜோதி                     340
 
 காற்றினுட் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
 ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 காற்றுறு காற்றாய்க் கானிலைக் காற்றாய்
 ஆற்ற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 அனலினு ளனலா யனனடு வனலாய்
 அனாற விளங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 அனாறு மனலா யனனிலை யனலாய்
 அனாற வயங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 புனலினுட் புனலாய்ப் புனலிடைப் புனலாய்
 அனையென வயங்கு மருட்பெருஞ் ஜோதி            350
 
 புனாறு புனலாய்ப் புனனிலைப் புனலாய்
 அனையெனப் பெருகு மருட்பெருஞ் ஜோதி
 
 புவியினுட் புவியாய்ப் புவிநடுப் புவியாய்
 அவைதர வயங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 புவியுறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
 அவைகொள விரிந்த வருட்பெருஞ் ஜோதி
 
 விண்ணிலை சிவத்தின் வியனிலை யளவி
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வளிநிலை சத்தியின் வளர்நிலை யளவி
 அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி            360
 
 நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி
 அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீர்நிலை திரைவளர் நிலைதனை யளவி
 ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புவிநிலை சுத்தமாம் பொற்பதி யளவி
 அவையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணினிற் றிண்மையை வகுத்ததிற் கிடக்கை
 யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணினிற் பொன்மை வகுத்ததி லைமையை
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி              370
 
 மன்ணினி லைம்பூ வகுத்ததி லைந்திறம்
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணினி னாற்றம் வகுத்தது பல்வகை
 அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணினிற் பற்பல வகைகரு நிலையியல்
 அண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணினி லைந்தியல் வகுத்ததிற் பல்பயன்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணிடை யடிநிலை வகுத்ததிற் பன்னிலை
 யண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி            380
 
 மண்ணிலைந் தைந்து வகையுங் கலந்துகொண்
 டண்ணுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணியற் சத்திகள் மண்செயற் சத்திகள்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணுருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணொளிச் சத்திகள் மண்கருச் சத்திகள்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்கணச் சத்திகள் வகைபல பலவும்
 அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி           390
 
 மண்ணிலைச் சத்தர்கள் வகைபல பலவும்
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்கரு வுயிர்த்தொகை வகைவிரி பலவா
 அண்கொள வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணினிற் பொருள்பல வகைவிரி வெவ்வே
 றண்ணுறப் புந்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணுறு நிலைபல வகுத்ததிற் செயல்பல
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மண்ணிடைப் பக்குவம் வகுத்ததிற் பயன்பல
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி             400
 
 மண்ணியல் பலபல வகுத்ததிற் பிறவும்
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரினிற் றண்மையும் நிகழூ ரொழுக்கமும்
 ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரினிற் பசுமையை நிறுத்தி யதிற்பல
 வாருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடைப் பூவியல் நிகழுறு திறவியல்
 ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரினிற் சுவைநிலை நிரைத்ததிற் பலவகை
 ஆருறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி                  410
 
 நீரினிற் கருநிலை நிகழ்த்திய பற்பல
 ஆருற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடை நான்கிய னிலவுவித் ததிற்பல
 ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடை யடிநடு நிலையுற வகுத்தன
 லார்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடை யொளியியல் நிகழ்பல குணவியல்
 ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல
 ஆர்தர வகுத்த வருட்பெருஞ் ஜோதி                    420
 
 நீரினிற் சத்தர்க ணிறைவகை யுறைவகை
 ஆர்தரப் புர்ந்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடை யுயிர்பல நிகழுறு பொருள்பல
 ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரிடை நிலைபல நிலையுறு செயல்பல
 ஆர்கொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீருறு பக்குவ நிறைவுறு பயன்பல
 ஆருற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீரியல் பலபல நிறைத்ததிற் பிறவும்
 ஆர்தரப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி                 430
 
 தீயினிற் சூட்டியல் சேர்தரச் செலவியல்
 ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயினில் வெண்மைத் திகழியல் பலவா
 வாயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடைப் பூவெலாந் திகழுறு திறமெலாம்
 ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடை யொளியே திகழுற வமைத்ததில்
 ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடை யருநிலை திருநிலை கருநிலை
 ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி                     440
 
 தீயிடை மூவியல் செறிவித் ததிற்பல
 ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை
 ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடைப் பெருந்திறற் சித்திகள் பலபல
 ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடைச் சித்துகள் செப்புறு மனைத்தும்
 ஆயுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்
 ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி                    450
 
 தீயிடை யுயிர்பல திகழுறு பொருள்பல
 ஆய்வகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்
 ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயினிற் பக்குவஞ் சேர்குண மியற்குணம்
 ஆய்பல வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயிடை யுருக்கியல் சிறப்பியல் பொதுவியல்
 ஆயுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தீயியல் பலபல செறித்ததிற் பலவும்
 ஆயுறப் புரிந்த வருட்பெருஞ் ஜோதி                  460
 
 காற்றிடை யசையியல் கலையிய யியல்
 ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடைப் பூவியல் கருதுறு திறவியல்
 ஆற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றினி லூறியல் காட்டுறு பலபல
 ஆற்றிலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றினிற் பெருநிலை கருநிலை யளவில்
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடை யீரியல் காட்டி யதிற்பல
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி           470
 
 காற்றினி லிடைநடு கடைந்டு வகம்புறம்
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றினிற் குணம்பல கணம்பல வணம்பல
 ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடைச் சத்திகள் கணக்கில வுலப்பில
 ஆற்றவு மமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடைச் சத்தர்கள் கணிதங் கடந்தன
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடை யுயிர்பல கதிபல கலைபல
 ஆற்றலி னமைத்த வருட்பெருஞ் ஜோதி            480
 
 காற்றிடை நானிலைக் கருவிக ளனைத்தையும்
 ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடை யுணாயல் கருதிய லாதிய
 ஆற்றுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றிடைச் செயலெலாங் கருதிய பயனெலாம்
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றினிற் பக்குவக் கதியெலாம் விளைவித்
 தாற்றலின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காற்றினிற் காலங் கருதுறு வகையெலாம்
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி            490
 
 காற்றியல் பலபல கணித்ததிற் பிறவும்
 ஆற்றவும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியிடைப் பகுதியின் விவிய லணைவியல்
 அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியிடைப் பூவெலாம் வியப்புறு திறனெலாம்
 அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியினி லொலிநிறை வியனிலை யனைத்தும்
 அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியிடைக் கருநிலை விரிநிலை யருநிலை
 அளிகொள வகுத்த வருட்பெருஞ் ஜோதி             500
 
 வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
 அளிபெற விளக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 வெளியினிற் சத்திகள் வியப்புற சத்தர்கள்
 அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியிடை யொன்றே விரித்ததிற் பற்பல
 அளியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியிடை பலவே விரித்ததிற் பற்பல
 அளிதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெளியிடை யுயிரியல் வித்தியல் சித்தியல்
 அளிபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி            510
 
 வெளியி னனைத்தயும் விரித்ததிற் பிறவும்
 அளியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறநடுவொடு கடை புணர்ப்பித் தொருமுதல்
 அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறந்தலை நடுவொடு புணர்ப்பித் தொருகடை
 அறம்பெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகப்புற நடுக்கடை யணைவாற் புறமுதல்
 அகப்பட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகப்புற நடுமுத லணைவாற் புறக்கடை
 அகப்பட வ்மைத்த வருட்பெருஞ் ஜோதி             520
 
 கருதக நடுவொடு கடையணைந் தகமுதல்
 அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தணியக நடுவொடு தலையனைந் தகக்கடை
 அணியுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகநடு புறக்கடை யணைந்தகப் புறமுதல்
 அகமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகநடு புறத்தலை யணைந்தகப் புறக்கடை
 அகலிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகநடு வதனா லகப்புற நடுவை
 அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி                    530
 
 அகப்புற நடுவா லணிபுற நடுவை
 அகப்பட வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறநடு வதனாற் புறப்புற நடுவை
 அறமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புகலரு மகண்ட பூரண நடுவால்
 அகநடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறப்புறக் கடைமுதற் புணர்ப்பாற் புறப்புற
 அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறத்தியல் கடைமுதற் புணர்ப்பாற் புறத்துறும்
 அறக்கணம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி             540
 
 அகப்புறக் கடைமுத லணைவா லக்கணம்
 அகத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம்
 அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
 ஆனற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
 அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மே யிர்ப்பும்
 ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி                      550
 
 புனன்மேற் புவியும் புவிமேற் புடைப்பும்
 அனன்மேல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பகுதிவான் வெளியிற் படர்ந்தமா பூத
 வகல்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 உயிர்வெளி யிடையே வுரைக்கரும் பகுதி
 அயவெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 உயிர்வெளி யதனை யுணர்கலை வெளியில்
 அயலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 கலைவெளி யதனைக் கலப்பறு சித்த
 அலர்வெளி வகுத்த வருட்பெருஞ் ஜோதி            560
 
 சுத்தநல் வெளியைத் துரிசறு பரவெளி
 அத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பரவெளி யதனைப் பரம்பர வெளியில்
 அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பரம்பர வெளியைப் பராபர வெளியில்
 அரந்தெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்
 அராவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பெருவெளி யதனைப் பெருஞ்சுக வெளியில்
 அருளுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி                      570
 
 குணமுதற் கருவிகள் கூடிய பகுதியில்
 அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மனமுதற் கருவிகள் மன்னுயிர் வெளியிடை
 அனமுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காலமே முதலிய கருவிகள் கலைவெளி
 ஆலுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 துரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை
 அரசுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 இவ்வெளி யெல்லா மிலங்கவண் டங்கள்
 அவ்வயி னமைந்த வருட்பெருஞ் ஜோதி            580
 
 ஓங்கிய வண்ட மொளிபெற முச்சுடர்
 ஆங்கிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 சிருட்டித் தலைவரைச் சிருட்டியண் டங்களை
 அருட்டிறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 காவல்செய் தலைவரைக் காவலண் டங்களை
 ஆவகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அழித்தல்செய் தலைவரை  யவரண் டங்களை
 அழுக்கற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மறைத்திடு தலைவரை மற்றுமண் டங்களை
 அறத்தொடு வகுத்த வருட்பெருஞ் ஜோதி           590
 
 தெளிவுசெய் தலைவரைத் திகழுமண் டங்களை
 அளிபெற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 விந்துவாஞ் சத்தியை விந்தினண் டங்களை
 அந்திறல் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 ஓங்கார சத்திக ளுற்றவண் டங்களை
 ஆங்காக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 சத்தத் தலைவரைச் சாற்றுமண் டங்களை
 அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நாதமாம் பிரமமும் நாதவண் டங்களும்
 ஆதரம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி                    600
 
 பகர்பரா சத்தியைப் பதியுமண் டங்களை
 அகமற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பரசிவ பதியைப் பரசிவாண் டங்களை
 அரசுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 எண்ணில்பல் சத்தியை யெண்ணிலண் டங்களை
 அண்ணிற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அளவில்பல் சத்தரை யளவி லண்டங்களை
 அளவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 உயிர்வகை யண்ட முலப்பில வெண்ணில
 அயர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி                    610
 
 களவில கடல்வகை கங்கில கரையில
 அளவில வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 கடலவை யனைத்துங் கரையின்றி நிலையுற
 அடலன லமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 கடல்களு மலைகளு கதிகளு நதிகளும்
 அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 கடலிடைப் பல்வளங் கணித்ததிற் பல்லுயிர்
 அடாற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மலையிடைப் பல்வளம் வகுத்ததிற் பல்லுயிர்
 அலைவற வகுத்த வருட்பெருஞ் ஜோதி               620
 
 ஒன்றினி லொன்றே யொன்றிடை யாயிரம்
 அன்றற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பத்திடை யாயிரம் பகரதிற் கோடி
 அத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நுற்றிடை யிலக்க நுவலதி லனந்தம்
 ஆற்றிடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 கோடியி லனந்த கோடிபல் கோடி
 ஆடுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வித்திய லொன்றா விளைவியல் பலவா
 அத்தகை யமைத்த வருட்பெருஞ் ஜோதி             630
 
 விளைவிய லனைத்தும் வித்திடை யடங்க
 அளவுசெய் தமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வித்தும் பதமும் விளையுப கரிப்பும்
 அத்திற லமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வித்திடை முளையும் முளையிடை விளைவும்
 அத்தக வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
 அத்திறம் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
 அளையுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி             640
 
 முளையதின் முளையும் முளையினுண் முளையும்
 அளைதர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
 அத்துற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பதமதிற் பதமும் பதத்தினுட் பதமும்
 அதிர்வற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 ஒற்றுமை வேற்றுமை யுரிமைக ளனைத்தும்
 அற்றென வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பொருணிலை யுறுப்புயல் பொதுவகை முதலிய
 அருளுற வகுத்த அருட்பெருஞ் ஜோதி                    650
 
 உறவினி லுறவும் உறவினிற் பகையும்
 அறனுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பகையினிற் பகையும் பகையினி லுறவும்
 அகைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பாதியு முழுதும் பதிசெயு மந்தமும்
 ஆதியும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 துணையு நிமித்தமுந் துலங்கதி னதுவும்
 அணைவுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 உருவதி னுருவும் உருவினுள் ளுருவும்
 அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி             660
 
 அருவினுள் ளருவும் மருவதி லருவும்
 அருளிய லமைந்த வருட்பெருஞ் ஜோதி
 
 கரணமு மிடமுங் கலைமுத லணையுமோர்
 அரணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 உருவதி லருவும் மருவதி லுருவும்
 அருளுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வண்ணமு வடிவு மயங்கிய வகைபல
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 சிறுமையிற் சிறுமையும் சிறுமையிற் பெருமையும்
 அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி                    670
 
 பெருமையிற் பெருமையும் பெருமையிற் சிறுமையும்
 அருணிலை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 திண்மையிற் றிண்மையுந் திண்மை யினேர்மையும்
 அண்மையின் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 மென்மையின் மன்மையும் மென்மையில் வன்மையும்
 அன்மையிற் றமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அடியினுள் ளடியும் மடியிடை யடியும்
 அடியுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 நடுவினுண் ணடுவும் நடுவதி னடுவும்
 அடர்வுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி            680
 
 முடியுனுண் முடியும் முடியினின் முடியும்
 அடர்தர வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகப்பூ வகவுறுப் பாக்க வதற்கவை
 அகத்தே வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறப்பூ புறத்திற் புனையுரு வாக்கிட
 அறத்துடன் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அகப்புறப் பூவகப் புறவுறுப் பியற்றிட
 அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 புறப்புறப் பூவதிற் புறப்புற வுறுப்புற
 அறத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி            690
 
 பாரிடை வேர்வையிற் பையிடை முட்டையில்
 ஆருயி ரமைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 ஊர்வன பறப்பன வுறுவன நடப்பன
 ஆர்வுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அசைவில வசைவுள வாருயிர்த் திரள்பல
 அசலற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 அறிவொரு வகைமுத லைவகை யறுவகை
 அறிதர வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 வெவ்வே றியலொடு வெவ்வேறு பயனுற
 அவ்வா றமைத்த வருட்பெருஞ் ஜோதி                  700
 
 சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
 அத்தகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பெண்ணினுள் ளாணு மாணினுட் பெண்ணும்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பெண்ணினுண் மூன்று மாணினுள் ளிரண்டும்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பெண்ணிடை நான்கு மாணிடை மூன்றும்
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பெண்ணிய லாணு மாணியற் பெண்ணும்
 அண்ணுற வமைத்த வருட்பெருஞ் ஜோதி             710
 
 பெண்டிறல் புறத்து மாண்டிற லகத்தும்
 அண்டுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 பெண்ணியன் மனமு மாணிய லறிவும்
 அண்ணுற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தனித்தனி வடிவினுந் தக்கவாண் பெண்ணுயல்
 அனைத்துற வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 உனற்கரு முயிருள வுடாள வுலகுள
 வனைத்தையும் வகுத்த வருட்பெருஞ் ஜோதி
 
 ஓவுறா வெழுவகை வுயிர்முத லனைத்தும்
 ஆவகை வகுத்த வருட்பெருஞ் ஜோதி                      720
 
 பைகளின் முட்டையிற் பாரினில் வேர்வினில்
 ஐபெற வமைத்த வருட்பெருஞ் ஜோதி
 
 தாய்கருப் பையினுட் டங்கிய வுயிர்களை
 ஆய்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 முட்டைவாய்ப் பயிலு முழுவுயிர்த் திரள்களை
 அட்டமே காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 நிலம்பெறு முயிர்வகை நீள்குழு வனைத்தும்
 அலம்பெறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 வேர்வுற வுதித்த மிகுமுயிர்த் திரள்களை
 ஆர்வுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி            730
 
 உடலுறு பிணியா லுயிருடல் கெடாவகை
 அடாறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 சிசுமுதற் பருவச் செயல்களி னுயிர்களை
 அசைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 உயிருறு முடலையு முடாறு முயிரையும்
 அயர்வறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 பாடுறு மவத்தைகள் பலவினு முயிர்களை
 ஆடுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 முச்சுட ராதியா லெச்சக வுயிரையும்
 அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி           740
 
 வான்முகிற் சத்தியான் மழைபொழி வித்துயர்
 ஆனறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 இன்புற சத்தியா லெழின்மழை பொழிவித்
 தன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 எண்ணியற் சத்தியா லெல்லா வுலகினும்
 அண்ணுயிர் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 அண்டப் புறப்புற வமுதம் பொழிந்துயிர்
 அண்டுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 தேவரை யெல்லாந் திகழ்புற வமுதளித்
 தாவகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி             750
 
 அகப்புற வமுதளித் தைவர்ரா திகளை
 அகப்படக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 தருமக வமுதாற் சத்திசத் தர்களை
 அருளினிற் காக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 காலமு நியதியுங் காட்டியெவ் வுயிரையும்
 ஆறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 விச்சையை யிச்சயை விளைவித் துயிர்களை
 அச்சறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 போகமுங் களிப்பும் பொருந்துவித் துயிர்களை
 ஆகமுட் காக்கு மருட்பெருஞ் ஜோதி                      760
 
 கலையறி வளித்துக் களிப்பினி யிரெலாம்
 அலைவறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 விடய நிகழ்ச்சியான் மிகுமுயி ரனைத்தையும்
 அடைவுறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 துன்பளித் தாங்கே சுகமளித் துயிர்களை
 அன்புறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 கரணேந் தியத்தாற் களிப்புற வுயிர்களை
 அரணேர்ந் தளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 எத்தகை யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
 கத்தகை யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி           770
 
 எப்படி யெவ்வுயி ரெண்ணின வவ்வுயிர்க்
 கப்படி யளித்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 ஏங்கா துயிர்த்திர ளெங்கெங் கிருந்தன
 ஆங்காங் களித்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 சொல்லுறு மசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
 அல்லலிற் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 சுத்தமு மசுத்தமுந் தோயுயிர்க் கிருமையின்
 அத்தகை காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 வாய்ந்திடுஞ் சுத்த வகையுயிர்க் கொருமையின்
 ஆய்ந்துறக் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி          780
 
 எவையெலா மெவையெலா மீண்டின வீண்டின
 அவையெலாங் காத்தரு ளருட்பெருஞ் ஜோதி
 
 அண்டத் துரிசையு மகிலத் துரிசையும்
 அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 பிண்டத் துரிசையும் பேருயிர்த் துரிசையும்
 அண்டற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 உயிருறு மாயையி னுறுவிரி வனைத்தும்
 அயிரற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 உயிருறு மிருவினை யுறுவிரி வனைத்தும்
 அயர்வற வடக்கு மருட்பெருஞ் ஜோதி                      790
 
 காமப் புடைப்புயிர் கண்டொட ராவகை
 ஆமற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 பொங்குற வெகுளிப் புடைப்புக ளெல்லாம்
 அங்கற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 மதம்புரை மோகமு மற்றவு மாங்காங்
 கதம்பெற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 வடுவுறு மசுத்த வாதனை யனைத்தையும்
 அடர்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 சுத்தமு மசுத்தமுந் தோய்ந்தவா தனைகளை
 அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி                    800
 
 நால்வயிற் றுரிசும் நண்ணுயி ராதியில்
 ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 நால்வயிற் படைப்பு நால்வயிற் காப்பும்
 ஆலற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்கரில்
 ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 மூவிட மும்மையின் முன்னிய தொழிற்கரில்
 ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 தத்துவச் சேட்டையுந் தத்துவத் துரிசும்
 அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி                    810
 
 சுத்தமா நிலையிற் சூழுறு விரிவை
 அத்தகை யடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 கரைவின் மாமாயைக் கரும்பெருந் திரையால்
 அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 பேருறு நீலப் பெருந்திரை யதனால்
 ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 பச்சைத் திரையாற் பரவெளி யதனை
 அச்சுற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 செம்மைத் திரையாற் சித்துறு வெளியை
 அம்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி          820
 
 பொன்மைத் திரையாற் பொருளுறு வெளியை
 அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 வெண்மைத் திரையான் மெய்ப்பதி வெளியை
 அண்மையின் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 கலப்புத் திறையாற் கருதனு பவங்களை
 அலப்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
 அடர்புற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
 அத்திற மறைக்கு மருட்பெருஞ் ஜோதி             830
 
 திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே
 அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 தோற்றமா மாயைத் தொடர்பறுத் தருளி
 னாற்றலைக் காட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 சுத்தமா மாயைத் தொடர்பறுத் தருளி
 அத்தகை காட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 எனைத்தா ணவமுத லெல்லாந் தவிர்த்தே
 அனுக்கிர கம்புரி யருட்பெருஞ் ஜோதி
 
 விடய மறைப்பெலாம் விடுவித் துயிர்களை
 அடைவுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி           840
 
 சொருப மறைப்பெலாந் தொலைப்பித் துயிர்களை
 அருளினிற் றெருட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 மறைப்பின் மறந்தன வருவித் தாங்கே
 அறத்தொடு தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 எவ்வகை யுயிர்களு மின்புற வாங்கே
 அவ்வகை தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்
 அடையுறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 சத்திகண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
 அத்துறத் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி            850
 
 சத்தர்கண் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்
 அத்தகை தெருட்டும் மருட்பெருஞ் ஜோதி
 
 படைக்குந் தலைவர்கள் பற்பல கோடியை
 அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ் ஜோதி
 
 காக்குந் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை
 ஆக்குறக் காக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 அடக்குந் தலைவர்க ளளவிலர் தம்மையும்
 அடர்ப்பற வடக்கு மருட்பெருஞ் ஜோதி
 
 மறைக்குந் தலைவர்கள் வகைபல கோடியை
 அறத்தொடு மறைக்கு மருட்பெருஞ் ஜோதி           860
 
 தெருட்டுந் தலைவர்கள் சேர்பல கோடியை
 அருட்டிறந் தெருட்டு மருட்பெருஞ் ஜோதி
 
 ஐந்தொழி லாதிசெய் யைவரா திகளை
 ஐந்தொழி லாதிசெ யருட்பெருஞ் ஜோதி
 
 இறந்தவ ரெல்லா மெழுந்திட வுலகில்
 அறந்தலை யளித்த வருட்பெருஞ் ஜோதி
 
 செத்தவ ரெல்லாஞ் சிரித்தாங் கெழுதிறல்
 அத்தகை காட்டிய வருட்பெருஞ் ஜோதி
 
 இறந்தவ ரெழுகவென் றெண்ணியாங் கெழுப்பிட
 அறந்துணை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி         870
 
 செத்தவ ரெழுகவெனச் செப்பியாங் கெழுப்பிட
 அத்திற லெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி
 
 சித்தெலாம் வல்ல திறலளித் தெனக்கே
 அத்தனென் றோங்கு மருட்பெருஞ் ஜோதி
 
 ஒன்றதி ரண்டது வொன்றினி ரண்டது
 ஒன்றினு ளொன்றது  வொன்றெனு மொன்றே
 
 ஒன்றல ரண்டல வொன்றினி ரண்டல
 ஒன்றினு ளொன்றல வொன்றெனு மொன்றே
 
 ஒன்றினு லொன்றுள வொன்றினி லொன்றில
 ஒன்றுற வொன்றிய  வொன்றெனு மொன்றே           880
 
 களங்கநீத் துலகங் களிப்புற மெய்நெறி
 விளங்கவென் னுள்ளே விளங்குமெய்ப் பொருளே
 
 மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
 ஓவற விளங்கு மொருமைமெய்ப் பொருளே
 
 எழுநிலை மிசையே யின்புரு வாகி
 வழுநிலை நீக்கி வயங்குமெய்ப் பொருளே
 
 நவநிலை மிசையே நடுவுறு நடுவே
 சிவமய மாகித் திகழ்ந்தமெய்ப் பொருளே
 
 ஏகா தசநிலை யாததி னடுவே
 ஏகா தனமிசை யிருந்தமெய்ப் பொருளே          890
 
 திரையோ தசநிலை சிவவெளி நடுவே
 வரையோ தருசுக வாழ்க்கைமெய்ப் பொருளே
 
 இரெண் ணிலையென வியம்புமே னிலையிற்
 பூரண சுகமாய்ப் பொருந்துமெய்ப் பொருளே
 
 எல்லா நிலைகளு மிசைந்தாங் காங்கே
 எல்லா மாகி யிலங்குமெய்ப் பொருளே
 
 மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
 அனாதியுண் மையதா யமர்ந்தமெய்ப் பொருளே
 
 தானொரு தானாய்த் தானே தானாய்
 ஊனுயிர் விளக்கு மொருதனிப் பொருளே           900
 
 அதுவினு ளதுவா யதுவே யதுவாய்ப்
 பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
 
 இயல்பினு ளியல்பா யியல்பே யியல்பா
 உயாற விளங்கு மொருதனிப் பொருளே
 
 அருவினு ளருவா யருவரு வருவாய்
 உருவினுள் விள்ங்கு மொருதனிப் பொருளே
 
 அலகிலாச் சித்தா யதுநிலை யதுவாய்
 உலகெலாம் விளங்கு மொருதனிப் பொருளே
 
 பொருளினுட் பொருளாய்ப் பொருளது பொருளா
 யொருமையின் விளங்கு மொருதனிப் பொருளே               910
 
 ஆடுறு சித்திக ளறுபத் துநான்கெழு
 கோடியும் விளங்கக் குலவுமெய்ப் பொருளே   
 
 கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
 ஆட்டுற விளங்கு மரும்பெரும் பொருளே
 
 அறிவுறு சித்திக ளனந்தகோ டிகளும்
 பிறிவற விளக்கும் பெருந்தனிப் பொருளே
 
 வீடுக ளெல்லாம் விதிநெறி விளங்க
 ஆடல்செய் தருளு மரும்பெரும் பொருளே
 
 பற்றுக ளெல்லாம் பதிநெறி விளங்க
 உற்றரு ளாடல்செய் யொருதனிப் பொருளே         920
 
 பரத்தினிற் பரமே பரத்தின்மேற் பரமே
 பரத்தினுட் பரமே பரம்பரம் பரமே
 
 பரம்பெறும் பரமே பரந்தரும் பரமே
 பரம்பதம் பரமே பரஞ் சிதம்பரமே
 
 பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே
 பரஞ்சுக பரமே பரஞ்சிவ பரமே
 
 பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே
 தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும் பரமே
 
 வரம்பரா பரமே வணம்பரா பரமே
 பரம்பரா பரமே பதம்பரா பரமே                    930
 
 சத்திய பதமே சத்துவ பதமே
 நித்திய பதமே நிற்குண பதமே
 
 தத்துவ பதமே தற்பத பதமே
 சித்துறு பதமே சிற்சுக பதமே
 
 தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே
 அம்பரம் பதமே யருட்பரம் பதமே
 
 தந்திர பதமே சந்திர பதமே
 மந்திர பதமே மந்தண பதமே
 
 நவந்தரு பதமே நடந்தரு பதமே
 சிவந்தரு பதமே சிவசிவ பதமே                     940
 
 பிரமமெய்க் கதியே பிரமமெய்ப் பதியே
 பிரமநிற் குணமே பிரமசிற் குணமே
 
 பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்
 பரமமே பரம பதந்தருஞ் சிவமே
 
 அவனோ டவளா யதுவா யலவாய்
 நவமா நிலைமிசை நண்ணிய சிவமே
 
 எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்
 செம்பொரு ளாகிய சிவமே சிவமே
 
 ஒருநிலை யிதுவே வுயர்நிலை யெனுமொரு
 திருநிலை மேவிய சிவமே சிவமே                950
 
 மெய்வைத் தழியா வெறுவெளி நடுவுற
 தெய்வப் பதியாஞ் சிவமே சிவமே
 
 புரைதவிர்த் தெனக்கே பொன்முடி சூட்டிச்
 சிரமுற நாட்டிய சிவமே சிவமே
 
 கல்வியுஞ் சாகாக் கல்வியு மழியாச்
 செல்வமு மளித்த சிவமே சிவமே
 
 அருளமு தெனக்கே யளித்தரு ணெறிவாய்த்
 தெருளுற வளர்க்குஞ் சிவமே சிவமே
 
 சத்தெலா மாகியுந் தானொரு தானாஞ்
 சித்தெலாம் வல்லதோர் திருவருட் சிவமே         960
 
 எங்கே கருணை யியற்கையி னுள்ளன
 அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே
 
 யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
 சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே
 
 பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
 செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே
 
 கொல்ல நெறியே குருவரு ணெறியெனப்
 பல்கா லெனக்குப் பகர்ந்தமெய்ச் சிவமே
 
 உயிரெலாம் பொதுவி னுளம்பட நோக்குக
 செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே             970
 
 பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
 உயிர்த்திர ளொன்றென வுரைத்தமெய்ச் சிவமே
 
 உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
 உயிர்நலம் பரவுகென் றுரைத்தமெய்ச் சிவமே
 
 இயலரு ளொளியோ ரேகதே சத்தினாம்
 உயிரொளி காண்கவென் றுரைத்தமெய்ச் சிவமே
 
 அருளலா தணுவு மசைந்திடா ததனால்
 அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
 
 அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
 அருளுற முயல்கவென் றருளிய சிவமே            980
 
 அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
 இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
 
 அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
 தெருளிது வெனவே செப்பிய சிவமே
 
 அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
 மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
 
 அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
 மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
 
 அருட்பே றதுவே யருபெறற் பெரும்பே
 றிருட்பே றருக்குமென் றியம்பிய சிவமே         990
 
 அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
 பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
 
 அருளறி யார்தமை யறியார் எம்மையும்
 பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
 
 அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
 பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
 
 அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
 வருள்பெற முயாகென் றருளிய சிவமே
 
 அருளே நம்மிய லருளே நம்முரு
 அருளே நம்வடி வாமென் றசிவமே                1000
 
 அருளே நம்மடி யருளே நம்முடி
 அருளே நம்நடு வாமென் றசிவமே
 
 அருளே நம்மறி வருளே நம்மனம்
 அருளே நங்குண மாமென் றசிவமே
 
 அருளே நம்பதி யருளே நம்பதம்
 அருளே நம்மிட மாமென் றசிவமே
 
 அருளே நந்துணை யருளே நந்தொழில்
 அருளே நம்விருப் பாமென் றசிவமே
 
 அருளே நம்பொரு ளருளே நம்மொளி
 அருளே நாமறி வாயென் றசிவமே                        1010
 
 அருளே நங்குல மருளே நம்மினம்
 அருளே நாமறி வாயென் றசிவமே
 
 அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
 அருளே நாமறி வாயென் றசிவமே
 
 அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
 அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
 
 அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
 அருளர சியற்றுகென் றருளிய சிவமே
 
 உள்ளகத் தமர்ந்தென துயிரிற் கலந்தருள்
 வள்ளல்சிற் றம்பலம் வளர்சிவ பதியே            1020
 
 நிகாலா வின்ப நிலைநடு வைத்தெனைத்
 தகவொடு காக்குந் தனிச்சிவ பதியே
 
 சுத்தசன் மார்க்க சுகநிலை தனிலெனைத்
 சத்திய னாக்கிய தனிச்சிவ பதியே
 
 ஐவருங் காண்டற் கரும்பெரும் பொருளென்
 கைவரப் புரிந்த கதிசிவ பதியே
 
 துன்பந் தொலைத்தருட் ஜோதியால் நிறைந்த
 இன்ப மெனக்கரு ளெழிற்சிவ பதியே
 
 சித்தமும் வாக்குஞ் செல்லாப் பெருநிலை
 ஒத்துற வேற்றிய வொருசிவ பதியே                    1030
 
 கையற வனைத்துங் கடிந்தெனைத் தேற்றி
 வையமேல் வைத்த மாசிவ பதியே
 
 இன்புறச் சிறியே னெண்ணுதோ றெண்ணுதோ
 றன்பொடன் கண்ணுறு மருட்சிவ பதியே
 
 பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
 மழையெலாம் பொழிந்து வளர்சிவ பதியே
 
 உளத்தினுங் கண்ணினு முயிரினு மெனது
 குளத்தினு நிரம்பிய குருசிவ பதியே
 
 பரமுட னபரம் பகர்நிலை யிவையினத்
 திரமுற வருளிய திருவருட் குருவே                   1040
 
 மதிநிலை யிரவியின் வளர்நிலை யனலின்
 றிதிநிலை யனைத்துந் தொந்தசற் குருவே
 
 கணநிலை யவற்றின் கருநிலை யனைத்துங்
 குணமுறத் தெரித்துட் குலவுசற் குருவே
 
 பதிநிலை பசுநிலை பாச நிலையெலாம்
 மதியுறத் தெரித்துள் வயங்குசற் குருவே
 
 பிரம ரகசியம் பேசியென் னுளத்தே
 தரமுற விளங்குஞ் சாந்தசற் குருவே
 
 பரம ரகசியம் பகர்ந்தென துளத்தே
 வரமுற வளர்த்து வயங்குசற் குருவே                1050
 
 சிவரக சியமெலாந் தெரிவித் தெனக்கே
 நவநிலை காட்டிய ஞானசற் குருவே
 
 சத்திய லனைத்துஞ் சித்தியன் முழுதும்
 அத்தகை தெரித்த வருட்சிவ குருவே
 
 அறிபவை யெல்லா மறிவித்தென் னுள்ளே
 பிறிவற விளங்கும் பெரியசற் குருவே
 
 கேட்பவை யெல்லாங் கேட்பித் தெனுள்ளே
 வேட்கையின் விளங்கும் விமலசற் குருவே
 
 காண்பவை யெல்லாங் காட்டுவித் தெனக்கே
 மாண்பத மளித்து வயங்குசற் குருவே               1060
 
 செய்பவை யெல்லாஞ் செய்வித் தெனக்கே
 உய்பவை யளித்தெனு ளோங்குசற் குருவே
 
 உண்பவை யெல்லா முண்ணுவித் தென்னுள்
 பண்பினில் விளங்கும் பரமசற் குருவே
 
 சாகாக் கல்வியின் றரமெலாங் கற்பித்
 தேகாக் கரப்பொரு ளீந்தசற் குருவே
 
 சத்திய மாஞ்சிவ சித்திக ளனைத்தையும்
 மெய்த்தகை யளித்தெனுள் விளங்குசற் குருவே
 
 எல்லா நிலைகளு மேற்றிச் சித்தெலாம்
 வல்லா னெனவெனை வைத்தசற் குருவே            1070
 
 சீருற வருளாந் தேசுற வழியாப்
 பேருற வென்னைப் பெற்றநற் றாயே
 
 பொருந்திய வருட்பெரும் போகமே யுறுகெனப்
 பெருந்தய வாலெனைப் பெற்றநற் றாயே
 
 ஆன்றசன் மார்க்க மணிபெற வெனைத்தான்
 இன்றமு தளித்த வினியநற் றாயே
 
 பசித்திடு தோறுமென் பாலணைந் தருளால்
 வசித்தமு தருள்புரி வாய்மைந்ற் றாயே
 
 தளர்ந்தோ றடியேன் சார்பணைந் தென்னை
 உளந்தெளி வித்த வொருமைநற் றாயே            1080
 
 அருளமு தேமுத லைவகை யமுதமும்
 தெருளுற வெனக்கருள் செல்வநற் றாயே
 
 இயலமு தேமுத லெழுவகை யமுதமும்
 உயாற வெனக்கரு ளுரியநற் றாயே
 
 நண்புறு மெண்வகை நவவகை யமுதமும்
 பண்புற வெனக்கருள் பண்புடைத் தாயே
 
 மற்றுள வமுத வகையெலா மெனக்கே
 உற்றுண வளித்தரு ளோங்குநற் றாயே
 
 கலக்கமு மச்சமுங் கடிந்தென துளத்தே
 அலக்கணுந் தவிர்த்தரு ளன்புடைத் தாயே            1090
 
 துய்ப்பினி லனைத்துஞ் சுகம்பெற வளித்தெனக்
 கெய்ப்பிலாந் தவிர்த்த வின்புடைத் தாயே
 
 சித்திக ளெல்லாந் தெளிந்திட வெனக்கே
 சத்தியை யளித்த தயவுடைத் தாயே
 
 சத்திநி பாதந் தனையளித் தெனைமேல்
 வைத்தமு தளித்த மரபுடைத் தாயே
 
 சத்திசத் தர்களெலாஞ் சார்ந்தென தேவல்செய்
 சித்தியை யளித்த தெய்வநற் றாயே
 
 தன்னிக ரில்லாத் தலைவனைக் காட்டியே
 என்னைமே லேற்றிய வினியநற் றாயே            1100
 
 வெளிப்பட விரும்பிய விளைவெலா மெனக்கே
 யளித்தளித் தின்புசெய் யன்புடைத் தாயே
 
 எண்ணகத் தொடுபுறத் தென்னையெஞ் ஞான்றுங்
 கண்ணெனக் காக்குங் கருணைநற் றாயே
 
 இன்னரு ளமுதளித் திறவாத் திறல்புரிந்
 தென்னை வளர்த்திடு மின்புடைத் தாயே
 
 என்னுட லென்னுயி ரென்னறி வெல்லாம்
 தன்னவென் றாக்கிய தயவுடைத் தாயே
 
தெரியா வகையாற் சிறியேன் றளர்ந்திடத்
 தரியா தணைத்த தயவுடைத் தாயே                      1110
 
 சினமுத லனைத்தையுந் தீர்த்தெனை நனவினுங்
 கனவினும் பிரியாக் கருணைநற் றாயே
 
 தூக்கமுஞ் சோம்புமென் றுன்பமு மச்சமும்
 ஏக்கமு நீக்கிய வென்றனித் தாயே
 
 துன்பெலாந் தவிர்த்துளே யன்பெலாம் நிரம்ப
 இன்பெலா மளித்த வென்றனித் தந்தையே
 
 எல்லா நன்மையு மென்றெனக் களித்த
 எல்லாம் வல்லசித் தென்றனித் தந்தையே
 
 நாயிற் கடையே னலம்பெறக் காட்டிய
 தாயிற் பெரிதுந் தயவுடைத் தந்தையே            1120
 
 அறிவிலாப் பருவத் தறிவெனக் களித்தே
 பிறவிலா தமர்ந்த பேரருட் டந்தையே
 
 புன்னிக ரில்லேன் பொருட்டிவ ணடைந்த
 தன்னிக ரில்லாத் தனிப்பெருந் தந்தையே
 
 அகத்தினும் புறத்தினு மமர்ந்தருட் ஜோதி
 சகத்தினி லெனக்கே தந்தமெய்த் தந்தையே
 
 இணையிலாக் களிப்புற் றிருந்திட வெனக்கே
 துணயடி சென்னியிற் சூட்டிய தந்தையே
 
 ஆதியீ றறியா வருளர சாட்சியிற்
 ஜோதிமா மகுடஞ் சூட்டிய தந்தையே                     1130
 
 எட்டிரண் டறிவித் தெனைத்தனி யேற்றிப்
 பட்டிமண் டபத்திற் பதித்தமெய்த் தந்தையே
 
 தங்கோ லளவது தந்தருட் ஜோதிச்
 செங்கோல் சொத்தெனச் செப்பிய தந்தையே
 
 தன்பொரு ளனைத்தையுந் தன்னர சாட்சியில்
 என்பொரு ளாக்கிய என்றனித் தந்தையே
 
 தன்வடி வனைத்தையுந் தன்னர சாட்சியில்
 என்வடி வாக்கிய என்றனித் தந்தையே
 
 தன்சித் தனைத்தையுந் தன்சமு கத்தினில்
 என்சித் தாக்கிய என்றனித் தந்தையே           1140
 
 தன்வச மாகிய தத்துவ மனைத்தையும்
 என்வச மாக்கிய வென்னுயிர்த் தந்தையே
 
 தன்கையிற் பிடித்த தனியருட் ஜோதியை
 என்கையிற் கொடுத்த என்றனித் தந்தையே
 
 தன்னையுந் தன்னருட் சத்தியின் வடிவையும்
 என்னையு மொன்றென வியற்றிய தந்தையே
 
 தன்னிய லென்னியல் தன்செய லென்செயல்
 என்ன வியற்றிய வென்றனித் தந்தையே
 
 தன்னுரு வென்னுரு தன்னுரை யென்னுரை
 என்ன வியற்றிய வென்றனித் தந்தையே           1150
 
 சதுரப் பேரருட் டனிப்பெருந் தலைவனென்
 றெதிரற் றோங்கிய வென்னுடைத் தந்தையே
 
 மனவாக் கறியா வரைப்பினி லெனக்கே
 இனவாக் கருளிய வென்னுயிர்த் தந்தையே
 
 உணர்ந்துணர்ந் துணரினு முணராப் பெருநிலை
 யணைந்திட வெனக்கே யருளிய தந்தையே
 
 துரியவாழ் வுடனே சுகபூ ரணமெனும்
 பெரியவாழ் வளித்த பெருந்தனித் தந்தையே
 
 இறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த
 பேறளித் தாண்ட பெருந்தகைத் தந்தையே           1160
 
 எவ்வகைத் திறத்தினு மெய்துதற் காதாம்
 அவ்வகை நிலையெனக் களித்தநற் றந்தையே
 
 இனிப்பிற வாநெறி யெனக்களித் தருளிய
 தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே
 
 பற்றயர்ந் தஞ்சிய பரிவுகண்ட ணைந்தெனைச்
 சற்றுமஞ் சேலெனத் தாங்கிய துணையே
 
 தளர்ந்தவத் தருணமென் றளர்வெலாந் தவிர்த்துட்
 கிளர்ந்திட வெனக்குக் கிடைத்தமெய்த் துணையே
 
 துறையிது வழியிது துணிவிது நீசெயும்
 முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே         1170
 
 எங்குறு தீமையு மெனைத்தொட ராவகை
 கங்குலும் பகாமெய்க் காவல்செய் துணையே
 
 வேண்டிய வேண்டுய விருப்பெலா மெனக்கே
 யீண்டிருந் தருள்புரி யென்னுயிர்த் துணையே
 
 இகத்தினும் பரத்தினு மெனக்கிடர் சாரா
 தகத்தினும் புறத்தினு மமர்ந்தமெய்த் துணையே
 
 அயர்வற வெனக்கே யருட்டுணை யாகியென்
 னுயினுஞ் சிறந்த வொருமையென் னட்பே
 
 அன்பினிற் கலந்தென தறிவினிற் பயின்றே
 இன்பினி லளைந்தவென் னின்னுயிர் நட்பே           1180
 
 நான்புரி வனவெலாந் தான்புரிந் தெனக்கே
 வான்பத மளிக்க வாய்த்தநன் னட்பே
 
 உள்ளமு முணர்ச்சியு முயிருங் கலந்துகொண்
 டெள்ளுறு நெய்யிலென் னுள்ளுறு நட்பே
 
 செற்றமுந் தீமையுந் தீர்த்துநான் செய்த
 குற்றமுங் குணமாக் கொண்டவென் னட்பே
 
 குணங்குறி முதலிய குறித்திடா தெனையே
 அணங்கறக் கலந்த அன்புடை நட்பே 
 
 பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
 கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநன் னட்பே            1190
 
 சவலைநெஞ் சகத்தின் றளர்ச்சியு மச்சமு
 கவலையுந் தவிர்த்தெனைக் கலந்தநன் னட்பே
 
 களப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்
 கிளைப்பறிந் துதவிய வென்னுயி ருறவே
 
 தன்னைத் தழுவுறு தரஞ்சிறி தறியா
 வென்னைத் தழுவிய வென்னுயி ருறவே
 
 மனக்குறை நீக்கிநல் வாழ்வளித் தென்றும்
 எனக்குற வாகிய என்னுயி ருறவே
 
 துன்னு மனாதியே சூழ்ந்தெனைப் பிரியா
 தென்னுற வாகிய வென்னுயி ருறவே                      1200
 
 என்றுமோர் நிலையாய் என்றுமோ ரியலாய்
 என்றுமுள் ளதுவா மென்றனிச் சத்தே
 
 அனைத்துல கவைகளு மாங்காங் குணரினும்
 இனைத்தென வறியா வென்றனிச் சத்தே
 
 பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
 இதுவெனக் கரிதா மென்றனிச் சத்தே
 
 ஆகம முடிகளு மவைபுகல் முடிகளும்
 ஏகுதற் காதா மென்றனிச் சத்தே
 
 சத்தியஞ் சத்தியஞ் சத்திய மெனவே
 இத்தகை வழுத்து மென்றனிச் சத்தே               1210
 
 துரியமுங் கடந்ததோர் பெரியவான் பொருளென
 உரைசெய் வேதங்க ளுன்னுமெய்ச் சத்தே
 
 அன்றத னப்பா லதன்பரத் ததுதான்
 என்றிட நிறைந்த வென்றனிச் சத்தே
 
 என்றுமுள் ளதுவாய் எங்குமோர் நிறைவாய்
 என்றும் விளங்கிடு மென்றனிச் சித்தே
 
 சத்திகள் பலவாய்த் சத்தர்கள் பலவாய்
 இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே
 
 தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
 இத்தகை விளங்கு மென்றனிச் சித்தே             1220
 
 படிநிலை பலவாய் பதநிலை பலவாய்
 இடிவற விளங்கிடு மென்றனிச் சித்தே
 
 மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்
 ஏற்பட விளங்கிடு மென்றனிச் சித்தே
 
 உயிர்வகை பலவா யுடல்வகை பலவாய்
 இயாற விளக்கிடு மென்றனிச் சித்தே
 
 அறிவவை பலவா யறிவன பலவாய்
 எறிவற விளக்கிடு மென்றனிச் சித்தே
 
 நினைவவை பலவாய் நினைவன பலவாய்
 இனைவற விளக்கிடு மென்றனிச் சித்தே           1230
 
 காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்
 ஏட்சியின் விளக்கிடு மென்றனிச் சித்தே
 
 செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்ச்
 எய்வற விளக்கிடு மென்றனிச் சித்தே
 
 அண்ட சராசர மனைத்தையும் பிறவையும்
 எண்டற விளக்கு மென்றனிச் சித்தே
 
 எல்லாம் வல்லசித் தெனமறை புகன்றிட
 எல்லாம் விள்க்கிடு மென்றனிச் சித்தே
 
 ஒன்றதி லொன்றென் றுரைக்கவும் படாதாய்
 என்றுமோர் படித்தா மென்றனி யின்பே            1240
 
 இதுவது வென்னா வியாடை யதுவாய்
 எதிரற நிறைந்த வென்றனி யின்பே
 
 ஆக்குறு மவத்தைக ளனைத்தையுங் கடந்துமேல்
 ஏக்கற நிறைந்த வென்றனி யின்பே
 
 அறிவுக் கறிவினி லதுவது வதுவாய்
 எறிவற் றோங்கிய வென்றனி யின்பே
 
 விடய மெவற்றினு மேன்மேல் விளைந்தவை
 யிடையிடை யோங்கிய வென்றனி யின்பே
 
 இம்மையு மறுமையு மியம்பிடு மொருமையும்
 எம்மையு நிரம்பிடு மென்றனி யின்பே                     1250
 
 முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
 எத்திறத் தவர்க்குமா மென்றனி யின்பே
 
 எல்லா நிலைகளி னெல்லா வுயிருறும்
 எல்லா வின்புமா மென்றனி யின்பே
 
 கரும்புறு சாறுங் கனிந்தமுக் கனியின்
 விரும்புறு மிரதமு மிக்கதீம் பாலும்
 
 குணங்கொள்கோற் றேனுங் கூட்டியொன் றாக்கி
 மணங்கொளப் பதஞ்செய் வகையுற வியற்றிய
 
 உணவெனப் பல்கா லுரைக்கினு நிகரா
 வணமிறு மின்ப மயமே யதுவாய்க்                 1260
 
 கலந்தறி வுருவாய்க் கருதுதற் கரிதாய்
 நலந்தரு விளக்கமு நவிலருந் தண்மையும்
 
 உள்ளதா யென்று முள்ளதாஅ யென்னுள்
 உள்ளதா யென்ற னுயிருள முடம்புடன்
 
 எல்லா மினிப்ப வியாறு சுவையளித்
 தெல்லாம் வல்லசித் தியற்கைய தாகிச்
 
 சாகா வரமுந் தனித்தபே ரறிவும்
 மாகா தலிற்சிவ வல்லப சக்தியும்
 
 செயற்கரு மனந்த சித்தியு மின்பமும்
 மயக்கறத் தருந்திறல் வண்மைய தாகிப்            1270
 
 பூரண வடிவாய்ப் பொங்கிமேற் றதும்பி
 ஆரண முடுயுட னாகம முடியுங்
 
 கடந்தென தறிவாங் கனமேற் சபைநடு
 நடந்திகழ் கின்றமெய்ஞ் ஞானவா ரமுதே
 
 சத்திய வமுதே தனித்திரு வமுதே
 நித்திய வமுதே நிறைசிவ வமுதே
 
 சச்சிதா னந்தத் தனிமுத லமுதே
 மெய்ச்சிதா காச விளைவரு ளமுதே
 
 ஆனந்த வமுதே யருளொளி யமுதே
 தானந்த மில்லாத் தத்துவ வமுதே               1280
 
 நவநிலை தருமோர் நல்லதெள் ளமுதே
 சிவநிலை தனிலே திரண்டவுள் ளமுதே
 
 பொய்படாக் கருணைப் புண்ணிய வமுதே
 கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள்வா னமுதே
 
 அகம்புற மகப்புற மாகிய புறப்புறம்
 உகந்தநான் கிடத்து மோங்கிய வமுதே
 
 பனிமுத னீக்கிய பரம்பர வமுதே
 தனிமுத லாய சிதம்பர வமுதே
 
 உலகெலாங் கொள்ளினு முலப்பிலா வமுதே
 அலகிலாப் பெருந்திற லற்புத வமுதே                    1290
 
 அண்டமு மதன்மே லண்டமு மவற்றுள
 பண்டமுங் காட்டிய பரம்பர மணியே
 
 பிண்டமு மதிலுறு பிண்டமு மவற்றுள
 பண்டமுங் காட்டிய பராபர மணியே
 
 நினைத்தவை நினைத்தவை நினைத்தாங் கெய்துற
 அனைத்தையுந் தருமோ ரரும்பெறன் மணியே
 
 விண்பத மனைத்து மேற்பத முழுவதுங்
 கண்பெற நடத்துங் ககனமா மணியே
 
 பார்பத மனைத்தும் பகரடி முழுவதுஞ்
 சார்புற நடத்துஞ் சரவொளி மணியே                      1300
 
 அண்டகோ டிகளெலா மரைக்கணத் தேகிக்
 கண்டுகொண் டிடவொளிர் கலைநிறை மணியே
 
 சராசர வுயிர்தொறுஞ் சாற்றிய பொருடொறும்
 விராவியுள் விளங்கும் வித்தக மணியே
 
 மூவரு முனிவரு முத்தருஞ் சித்தருந்
 தேவரு மதிக்குஞ் சித்திசெய் மணியே
 
 தாழ்வெலாந் தவிர்த்துச் சகமிசை யழியா
 வாழ்வெனக் களித்த வளரொளி மணியே
 
 நவமணி முதலிய நலமெலாந் தருமொரு
 சிவமணி யெனுமருட் செல்வமா மணியே           1310
 
 வான்பெறற் கரிய வகையெலாம் விரைந்து
 நான்பெற வளித்த நாதமந் திரமே
 
 கற்பம் பலபல கழியினு மழியாப்
 பொற்புற வளித்த புனிதமந் திரமே
 
 அகாரமு முகரமு மழியாச் சிகரமும்
 வகரமு மாகிய வாய்மைமந் திரமே
 
 ஐந்தென வெட்டென வாறென நான்கென
 முந்துறு மறைமுறை மொழியுமந் திரமே
 
 வேதமு மாகம விரிவுக ளனைத்தும்
 ஓதநின் றுலவா தோங்குமந் திரமே                  .1320
 
 உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
 மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
 
 சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
 தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
 
 இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
 சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
 
 மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
 கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
 
 நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
 உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே             1330
 
 என்றே யென்னினு மிளமையோ டிருக்க
 நன்றே தருமொரு ஞானமா மருந்தே
 
 மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
 நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
 
 சிற்சபை நடுவே திருநடம் புரியும்
 அற்புத மருந்தெனு மானந்த மருந்தே
 
 இடையுறப் படாத வியற்கை விளக்கமாய்த்
 தடையொன்று மில்லாத் தகவுடை யதுவாய்
 
 மாற்றிவை யென்ன மதித்தளப் பரிதாய்
 ஊற்றமும் வண்ணமு மொருங்குடை யதுவாய்க்            1340
 
 காட்சிக் கினியநற் கலையுடை யதுவாய்
 ஆட்சிக் குரியபன் மாட்சியு முடைத்தாய்
 
 கைதவிர் கனவினுங் காண்டற்க் கரிதாய்ச்
 செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
 
 உளம்பெறு மிடமெலா முதவுக வெனவே
 வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
 
 புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
 வடம்படா நலமும் வாய்த்தசெம் பொன்னே
 
 மும்மையுந் தருமொரு செம்மையை யுடைத்தாய்
 இம்மையே கிடைத்திங் கிலங்கிய பொன்னே         1350
 
 எடுத்தெடுத் துதவினு மென்றுங் குறையா
 தடுத்தடுத் தோங்குமெய் யருளுடைப் பொன்னே
 
 தளர்ந்திடே லெடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
 கிளர்ந்திட வுரைத்துக் கிடைத்தசெம் பொன்னே
 
 எண்ணிய தோறு மியற்றுக வென்றெனை
 யண்ணியென் கரத்தி லமர்ந்தபைம் பொன்னே
 
 நீகேண் மறக்கினு நின்னையாம் விட்டுப்
 போகே மெனவெனைப் பொருந்திய பொன்னே
 
 எண்ணிய வெண்ணியாங் கெய்திட வெனக்குப்
 பண்ணிய தவத்தாற் பழுத்தசெம் பொன்னே           1360
 
 விண்ணியற் தலைவரும் வியந்திட வெனக்குப்
 புண்ணியப் பயனாற் பூத்தசெம் பொன்னே
 
 நால்வகை நெறியினு நாட்டுக வெனவே
 பால்வகை முழுதும் பணித்தபைம் பொன்னே
 
 எழுவகை நெறியினு மியற்றுக வெனவே
 முழுவகை காட்டி முயங்கிய பொன்னே
 
 எண்ணிய படியெலா மியற்றுக வென்றனைப்
 புண்ணிய பலத்தாற் பொருந்திய பொன்னே
 
 ஊழிதோ றுழி யுலப்புறா தோங்கி
 வாழியென் றெனக்கு வாய்த்தநன் னிதியே          1370
 
 இதமுற வூழிதோ றெடுத்தெடுத் துலகோர்க்
 குதவினு முலவா தோங்குநன் னிதியே
 
 இருநிதி யெழுநிதி யியனவ நிதிமுதற்
 றிருநிதி யெல்லாந் தருமொரு நிதியே
 
 எவ்வகை நிதிகளு மிந்தமா நிதியிடை
 அவ்வகை கிடைக்குமென் றருளிய நிதியே
 
 அற்புதம் விளங்கு மருட்பெரு நிதியே
 கற்பனை கடந்த கருணைமா நிதியே
 
 நற்குண நிதியே சற்குண நிதியே
 நிற்குண நிதியே சிற்குண நிதியே                     1380
 
 பளகிலா தோங்கும் பளிக்குமா மலையே
 வளமெலா நிறைந்த மாணிக்க மலையே
 
 மதியுற விளங்கு மரகத மலையே
 வதிதரு பேரொளி வச்சிர மலையே
 
 உரைமனங் கடந்தாங் கோங்குபொன் மலையே
 துரியமேல் வெளியிற் ஜோதிமா மலையே
 
 புற்புதந் திரைநுரை புரைமுத லிலதோர்
 அற்புதக் கடலே யமுதத்தண் கடலே
 
 இருட்கலை தவிர்த்தொளி யெல்லாம் வழங்கிய
 அருட்பெருங் கடலே யானந்தக் கடலே              1390
 
 பவக்கடல் கடந்துநான் பார்த்தபோ தருகே
 உவப்புறு வளங்கொண் டோ ங்கிய கரையே
 
 என்றுயர்ச் சோடைக ளெல்லாந் தவிர்த்துள
 நண்றுற விளங்கிய நந்தனக் காவே
 
 சேற்றுநீ ரின்றிநற் றீஞ்சுவை தருமோர்
 ஊற்றுநீர் நிரம்ப வுடையபூந் தடமே
 
 கோடைவாய் விரிந்த குளிர்தரு நிழலே
 மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே
 
 களப்பறக் கிடைத்த கருணைநன் னீரே
 இளைப்புற வாய்த்த வின்சுவை யுணவே             1400
 
 தென்னைவாய்க் கிடைத்த செவ்விள நீரே
 தென்னைவான் பலத்திற் றிருகுதீம் பாலே
 
 நீர்நசை தவிர்க்கு நெல்லியங் கனியே
 வேர்விளை பலவின் மென்சுவைச் சுளையே
 
 கட்டுமாம் பழமே கதலிவான் பழமே
 இட்டநற் சுவைசெய் யிலந்தையங் கனியே
 
 புனிதவான் றருவிற் புதுமையாம் பலமே
 கனியெலாங் கூட்டிக் கலந்ததீஞ் சுவையே
 
 இதந்தரு கரும்பி லெடுத்ததீஞ் சாறே
 பத்ந்தரு வெல்லப் பாகினின் சுவையே             1410
 
 சாலவே யினிக்குஞ் சர்க்கரைத் திரளே
 ஏலவே நாவுக் கினியகற் கண்டே
 
 உலப்புறா தினிக்கு முயர்மலைத் தேனே
 கலப்புறா மதுரங் கனிந்தகோற் றேனே
 
 நவையிலா தெனக்கு நண்ணிய நறவே
 சிவையெலாந் திரட்டிய துயெதீம் பதமே
 
 பதம்பெறக் காய்ச்சிய பசுநறும் பாலே
 இதம்பெற வுருக்கிய விளம்பசு நெய்யே
 
 உலர்ந்திடா தென்று மொருபடித் தாகி
 மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே              1420
 
 இகந்தரு புவிமுத லெவ்வுல குயிர்களும்
 உகந்திட மணக்குஞ் சுகந்தநன் மணமே
 
 யாழுறு மிசையே யினியவின் னிசையே
 ஏழுறு மிசையே யியலரு ளிசையே
 
 திவளொளிப் பருவஞ் சேர்ந்தநல் லவளே
 அவளொடுங் கூடி யடைந்ததோர் சுகமே
 
 நாதநல் வரைப்பி னண்ணிய பாட்டே
 வேதகீ தத்தில் விளைதிருப் பாட்டே
 
 நன்மார்க்கர் நாவி னவிற்றிய பாட்டே
 சன்மார்க்க சங்கந் தழுவிய பாட்டே                     1430
 
 நம்புறு மாகம நவிற்றிய பாட்டே
 எம்பல மாகிய வம்பலப் பாட்டே
 
 என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
 என்னிரு கண்ணே யென்கணுண் மணியே
 
 என்பெருங் களிப்பே யென்பெரும் பொருளே
 என்பெருந் திறலே யென்பெருஞ் செயலே
 
 என்பெருந் தவமே என்றவப் பலனே
 என்பெருஞ் சுகமே யென்பெரும் பேறே
 
 என்பெரு வாழ்வே யென்றன்வாழ் முதலே
 என்பெரு வழக்கே யென்பெருங் கணக்கே             1440
 
 என்பெரு நலமே யென்பெருங் குலமே
 என்பெரு வலமே யென்பெரும் புலமே
 
 என்பெரு வரமே யென்பெருந் தரமே
 என்பெரு நெறியே யென்பெரு நிலையே
 
 என்பருங் குணமே என்பெருங் கருத்தே
 என்பெருந் தயவே யென்பெருங்கதியே
 
 என்பெரும் பதியே யென்னுயி ரியலே
 என்பெரு நிறைவே யென்றனி யறிவே
 
 தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
 மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட          1450
 
 என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
 மென்புடைத் த்சையெலா மெய்யுறத் தளர்ந்திட
 
 இரத்து மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
 உரத்திடை பந்தித் தொரு திரளாயிட
 
 மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
 உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட
 
 ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
 தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட
 
 உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
 கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட          1460
 
 வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
 கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட
 
 மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
 கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட
 
 மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
 இனம்பெறு சித்த மியைந்து களித்திட
 
 அகங்கார மாங்காங் கதிபரிப் பமைந்திடச்
 சகங்காண வுள்ளத் தழைத்து மலர்ந்திட
 
 அறிவுறு வனைத்து மானந்த மாயிடப்
 பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்          1470
 
 தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
 சத்துவா மொன்றே தனித்துநின் றோங்கிட
 
 உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
 அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட
 
 என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
 என்னுளத் தோங்கிய என்றனி யன்பே
 
 பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
 என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே
 
 தன்னையே யெனக்குத் தந்தெரு ளொளியால்
 என்னைவே தித்த என்றனி யன்பே                1480
 
 என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
 என்னுளே விரிந்த என்னுடை யன்பே
 
 என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
 என்னுளே கனிந்த வென்னுடை யன்பே
 
 தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
 என்னுளே நிறைந்த என்றனி யன்பே
 
 துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
 யின்புரு வாக்கிய என்னுடை யன்பே
 
 பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
 என்னுளங் கலந்த என்றனி யன்பே                 1490
 
 தன்வச மாகித் ததும்பிமேற் பொங்கி
 என்வசங் கடந்த என்னுடை யன்பே
 
 தன்னுளே பொங்கிய தண்ணமு துணவே
 என்னுளே பொங்கிய என்றனி யன்பே
 
 அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்
 இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே
 
 துன்புறு தத்துவத் துரிசெலா நீக்கிநல்
 லின்புற வென்னுளத் தேற்றிய விளக்கே
 
 மயலற வழியா வாழ்வுமேன் மோம்
 இயாற வென்னுளத் தேற்றிய விளக்கே              1500
 
 இடுவெளி யனைத்து மியலொளி விளங்கிட
 நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
 
 கருவெளி யனைத்துங் கதிரொளி விளங்கிட
 உருவெளி நடுவே யொளிர்தரு விளக்கே
 
 தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
 ஏற்றிய ஞான வியளொளி விளக்கே
 
 ஆகம முடிமே லருளொளி விளங்கிட
 வேகம தறவே விளங்கொளி விளக்கே
 
 ஆரியர் வழுத்திய வருணிலை யனாதி
 காரியம் விளக்குமோர் காரண விளக்கே         1510
 
 தண்ணிய வமுதே தந்தென துளத்தே
 புண்ணியம் பலித்த பூரண மதியே
 
 உய்தர வமுத முதவியென் னுளத்தே
 செய்தவம் பலித்த திருவளர் மதியே
 
 பதியெலாந் தழைக்கப் பதம்பெறு மமுத
 நிதியெலா மளித்த நிறைதரு மதியே
 
 பாலெனத் தண்கதிர் பரப்பியெஞ் ஞான்று
 மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
 
 உயங்கிய உள்ளமு முயிருந் தழைத்திட 
 வயங்கிய கருணை மழைபொழி மழையே            1520
 
 என்னையும் பணிகொண் டென்னுளே நிரம்ப
 மன்னிய கருணை மழைபொழி மழையே
 
 உளங்கொளு மெனக்கே யுவகைமேற் பொங்கி
 வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
 
 நலந்தர வுடாயிர் நல்லறி வெனக்கே
 மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
 
தூய்மையா லெனது துரிசெலா நீக்கிநல்
 வாய்மையாற் கருணை மழைபொழி மழையே
 
 வெம்மல விரவது விடிதரு ணந்தனிற்
 செம்மையி லுதித்துளந் திகழ்ந்தசெஞ் சுடரே         1530
 
 திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே
 வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே
 
 அலகிலாத் தலவர்க ளரசுசெய் தத்துவ
 உலகெலாம் விளங்க வோங்குசெஞ் சுடரே
 
 முன்னுறு மலவிருள் முழுவது நீக்கியே
 என்னுள வரைமே லெழுந்தசெஞ் சுடரே
 
 ஆதியு நடுவுட னந்தமுங் கடந்த
 ஜோதியா யென்னுளஞ் சூழ்ந்தமெய்ச் சுடரே
 
 உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட
 வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே            1540
 
 நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை
 வலஞ்சுழித் தெழுந்து வளர்ந்தமெய்க் கனலே
 
 வேதமு மாகமு விரிவும் பரம்பர
 நாதமுங் கடந்த ஞானமெய்க் கனலே
 
 எண்ணிய வெண்ணிய வெல்லாந் தரவெனுள்
 நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே
 
 வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு
 நலமெலா மளித்த ஞானமெய்க் கனலே
 
 இரவொடு பகலிலா வியல்பொது நடுமிடு
 பரமவே தாந்தப் பரம்பரஞ் சுடரே                       1550
 
 வரநிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி
 பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே
 
 சமரச சத்தியச் சபையி னடம்புரி
 சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே
 
 சபையென துளமென தனமர்ந் தெனக்கே
 அபய மளித்ததோ ரருட்பெருஞ் ஜோதி
 
 மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
 அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி
 
 வாழிநின் பேரருள் வாழிநின் பெருஞ்சீர்
 ஆழியொன் றளித்த வருட்பெருஞ் ஜோதி           1560
 
 என்னையும் பொருளென வெண்ணியென் னுளத்தே
 அன்னையு மப்பனு மாகிவீற் றிருந்து
 
 உலகியல் சிறிது முளம்பிடி யாவகை
 அலகில்பே ரருளா லறிவது விளக்கிச்
 
 சிறுநெறிச் செல்லாத் திறனளித் தழியா
 துறுநெறி யுணர்ச்சிதந் தொளியுறப் புரிந்து
 
 சாகாக் கல்வியின் றரமெலா முணர்த்திச்
 சாகா வரத்தையுந் தந்துமேன் மோம்
 
 அன்பையும் விளைவித் தருட்பே ரொளியால்
 இன்பையு நிறைவித் தென்னையு நின்னையும்          1570
 
 ஓருரு வாக்கியா னுன்னிய படியெலாஞ்
 சீருறச் செய்துயிர்த் திறம்பெற வழியா
 
 அருளமு தளித்தனை யருணிலை யேற்றினை
 அருளறி வளித்தனை யருட்பெருஞ் ஜோதி
 
 வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
 அல்கலின் றோங்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 உலகுயிர்த் திரளெலா மொளிநெறி பெற்றிட
 இலகுமைந் தொழிலையும் யான்செயத் தந்தனை
 
 போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
 ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி           1580
 
 மூவருந் தேவரு முத்தருஞ் சித்தரும்
 யாவரும் பெற்றிடா வியலெனக் களித்தனை
 
 போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
 ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 சித்திக ளனைத்தையுந் தெளிவித் தெனக்கே
 சத்திய நிலைதனைத் தயவினிற் றந்தனை
 
 போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
 ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 உலகினி யிர்களுக் குறுமிடை யூறெலாம்
 விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க                      1590
 
 சுத்தசன் மார்க்க சுகநிலை பெறுக
 உத்தம னாகுக வோங்குக வென்றனை
 
 போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
 ஆற்றலி னோங்கிய வருட்பெருஞ் ஜோதி
 
 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி
 அருட்பெருஞ் ஜோதி யருட்பெருஞ் ஜோதி           .1596
 
        திருச்சிற்றம்பலம்
 
 
 வள்ளலார் அருளிய  திருவொற்றியூர்   வடிவுடை மாணிக்க மாலை
 
 (கட்டளைக் களித்துறை)
 
 காப்பு
 சீர்கொண்ட வொற்றிப் பதியுடை யானிடஞ் சேர்ந்தமணி
 வார்கொண்ட கொங்கை வடிவாம் பிகைதன் மலரடிக்குத்
 தார்கொண்ட செந்தமிழ்ப் பாமாலை சாத்தத் தமியனுக்கே
 ஏர்கொண்ட நல்லரு ளீயுங் குணாலய வேரம்பனே.           
 
 நூல்
 கடலமு தேசெங்கரும்பெ அருட்கற் பசுக்கனியே
 உடலுயி ரேயுயிர்க் குள்ளுணர் வேயுணர் வுள்ளெளியே
 அடல்விடை யாரொற்றி யாரிடங் கொண்ட அருமருந்தே
 மடலவிழ் ஞானமலரே வடிவுடை மாணிக்கமே.                        1
 
 அணியே அணிபெறும் ஒற்றித் தியாகர்தம் அன்புறுசற்
 குணியேஎம் வாழ்க்கைக் குலதெய்வ மேமலைக் கோன்தவமே
 பணியேன் பிழைபொறுத் தாட்கொண்ட தெய்வப் பதிகொள்சிந்தா
 மணியேயென் கண்ணுண் மணியே வடிவுடை மாணிக்கமே.                  2
 
 மானேர் விழிமலை மானேஎம் மானிடம் வாழ்மயிலே
 கானேர் அளகப் பசுங்குயி லேஅருட் கட்கரும்பே
 தேனே திருவொற்றி மாநகர் வாழும் சிவசத்தியே
 வானே கருணை வடிவே வடிவுடை மாணிக்கமே.                       3
 
 பொருளே அடியர் புகலிட மேஒற்றிப் பூரணன்தண்
 அருளேஎம் ஆருயிர்க் காந்துணை யேவிண்ணவர் புகழும்
 தெருளேமெய்ஞ் ஞானத் தெளிவே மறைமுடிச் செம்பொருளே
 மருளேத நீக்கும் ஒளியே வடிவுடை மாணிக்கமே.                     4
 
 திருமாலும் நான்முகத் தேவுமுன் னாள்மிகத் தேடிமனத்
 தருமா லுழக்க அனலுரு வாகி அமர்ந்தருளும்
 பெருமான்எம் மான்ஒற்றிப் பெம்மான்கைம்
 மருமான் இடங்கொள்பெண் மானே வடிவுடை மாணிக்கமே.                5
 
 உன்னேர் அருள்தெய்வம் காணேன் மனத்தும் உரைக்கப்படாப்
 பொன்னேஅப் பொன்னற் புதஒளி யேமலர்ப் பொன்வணங்கும்
 அன்னேஎம் ஆருயிர்க் கோர்உயி ரேஒற்றி யம்பதிவாழ்
 மன்னே ரிடம்வளர் மின்னே வடிவுடை மாணிக்கமே.                   6
 
 கண்ணேஅக் கண்ணின் மணியே மணியில் கலந்தொளிசெய்
 விண்ணே வியன்ஒற்றி யூர்அண்ணல் வாமத்தில் வீற்றிருக்கும்
 பெண்ணே மலைபெறும் பெண்மணி யேதெய்வப் பெண்ணமுதே
 மண்நேயம் நீத்தவர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                  7
 
 மலையான் தவஞ்செய்து பெற்றமத்தேஒற்றி வாழ்கனகச்
 சிலையோன் மணக்க மணக்குந்தெய் வீகத் திருமலரே
 அலையான் மலிகடல் பள்ளிகொண்டான்தொழும் ஆரமுதே
 வலையான் அருமை மகளே வடிவுடை மாணிக்கமே.                   8
 
 காமம் படர்நெஞ் சுடையோர் கனவினும் காணப்படாச்
 சேமம் படர்செல்வப் பொன்னே மதுரச் செழுங்கனியே
 தாமம் படர்ஒற்றி யூர்வாழ் பவளத் தனிமலையின்
 வாமம் படர்பைங் கொடியே வடிவுடை மாணிக்கமே.                  9
 
 கோடா அருட்குணக் குன்றே சிவத்தில் குறிப்பிலரை
 நாடாத ஆனந்த நட்பேமெய் யன்பர் நயக்கும் இன்பே
 பீடார் திருவொற்றிப் பெம்மான் இடஞ்செய் பெருந்தவமே
 வாடா மணிமலர்க் கொம்பே வடிவுடை மாணிக்கமே.                  10
 
 நாலே எனுமறை அந்தங்கள் இன்னமும் நாடியெனைப்
 போலே வருந்த வெளிஒளி யாய்ஒற்றிப் புண்ணியர்தம்
 பாலே இருந்த நினைத்தங்கை யாகப் பகரப்பெற்ற
 மாலே தவத்தில் பெரியோன் வடிவுடை மாணிக்கமே.                  11
 
 கங்கைகொண் டோ ன்ஒற்றி யூரண்ணல் வாமம் கலந்தருள்செய்
 நங்கைஎல்லா உல குந்தந்த நின்னைஅந் நாரணற்குத்
 தங்கைஎன் கோஅன்றித் தாயர்என் கோசொல் தழைக்குமலை
 மங்கையங் கோமள மானே வடிவுடை மாணிக்கமே.                   12
 
 சேலையிட் டார்வயல் ஊரொற்றி வைத்துத்தன் தொண்டர்பின்
 வேலையிட் டால்செயும் பித்தனை மெய்யிடை மேவுகரித்
 தோலையிட் டாடும் தொழிலுடை யோனைத் துணிந்துமுன்னாள்
 மாலையிட் டாய்இஃதென்னே வடிவுடை மாணிக்கமே.                   13
 
 தனையாள் பவரின்றி நிற்கும் பரமன் தனிஅருளாய்
 வினையாள் உயிர்மல நீக்கிமெய் வீட்டின் விடுத்திடுநீ
 எனையாள் அருளொற்றி யூர்வா ழவன்றன் னிடத்துமொரு
 மனையாள் எனநின்ற தென்னே வடிவுடை மாணிக்கமே.                  14
 
 பின்னீன்ற பிள்ளையின் மேலார்வம் தாய்க்கெனப் பேசுவர்நீ
 முன்னீன்ற பிள்ளையின் மேலாசை யுள்ளவர் மொய்யசுரர்
 கொன்னீன்ற போர்க்கிளம் பிள்ளையை ஏவக் கொடுத்ததென்னே
 மன்னீன்ற ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.                    15
 
 பையாளும் அல்குல் சுரர்மட வார்கள் பலருளும்இச்
 செய்யாளும் வெண்ணிற மெய்யாளும் எத்தவம் செய்தனரோ
 கையாளும் நின்னடிக் குற்றேவல் செய்யக் கடைக்கணித்தாய்
 மையாளும் கண்ணொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.               16
 
 இலையாற்று நீமலர்க் காலால் பணிக்குங்குற் றேவலெலாம்
 தலையால் செயும்பெண்கள் பல்லோரில் பூமகள் தன்னைத் தள்ளாய்
 நிலையால் பெரியநின் தொண்டர்தம் பக்க நிலாமையினான்
 மலையாற் கருளொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                  17
 
 கலைம களேநின்பணியைஅன் போடும் கடைப்பிடித்தாள்
 அலைமகளே அன் பொடிபிடித் தாள்எற் கறைகண்டாய்
 தலைமகளே அருட் டாயேசெவ் வாய்க்கருந் தாழ்குழற்பொன்
 மலைமகளே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                    18
 
 பொன்னோடு வாணிஎன் போரிரு வோரும் பொருணற் கல்வி
 தன்னோ டருளுந் திறநின்குற் றேவலைத் தாங்கிநின்ற
 பின்னோ அலததன் முன்னோ தெளிந்திடப் பேசுகநீ
 மன்னோ டெழிலொற்றி யூர்வாழ் வடிவுடை மாணிக்கமே.                19
 
 காமட் டலர்திரு வொற்றிநின் னாயகன் கந்தைகற்றி
 யேமட் டரையொடு நிற்பது கண்டும் இரங்கலர்போல்
 நீமட்டு மேபட் டுடுக்கின் றனைஉன்றன் நேயம்என்னோ
 மாமட் டலர்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.                    20
 
 வீற்றார்நின் றன்மணத் தம்மியின் மேல்சிறு மெல்லனிச்சம்
  ஆற்றாநின் சிற்றடிப் போதினைத் தூக்கிவைத் தாரெனின்மால்
 ஏற்றார் திருவொற்றி யுரார் களக்கறுப் பேற்றவரே
 மாற்றா இயல்கொண்மயிலே வடிவுடை மாணிக்கமே.                 21
 
 பொருப்புறு நீலியென் பார்நின்னை மெய்அது போலும்ஒற்றி
 விருப்புறு நாயகன் பாம்பா பரணமும் வெண்தலையும்
 நெருப்புறு கையும் கனல்மேனி யுங்கண்டு நெஞ்சம் அஞ்சாய்
 மருப்புறு கொங்கை மயிலே வடிவுடை மாணிக்கமே.                    22
 
 அனம்பொறுத் தான்புகழ் ஒற்றிநின் நாயகன் அங்குமிழித்
 தனம்பொறுத் தாள்ஒரு மாற்றாளைத் தன்முடி தன்னில்வைத்தே
 தினம்பொறுத் தான்அது கண்டும் சினமின்றிச் சேர்ந்தநின்போல்
 மனம்பொறுத் தார்எவர் கண்டாய் வடிவுடை மாணிக்கமே.                23
 
 ஓருரு வாய்ஒற்றி யூர்அமர்ந்தார் நின் னுடையயவர்பெண்
 சீருரு வாகுநின் மாற்றாளை நீதெளி யாத்திறத்தில்
 நீருரு வாக்கிச் சுமந்தார் அதனை நினைந்திலையே
 வாருரு வார்கொங்கை நங்காய் வடிவுடை மாணிக்கமே.                  24
 
 சார்ந்தேநின் பால்ஒற்றி யூர்வாழும் நாயகர் தாமகிழ்வு
 கூர்ந்தே குலாவும்அக் கொள்கையைக் காணில் கொதிப்பளென்று
 தேர்ந்தேஅக் கங்கையைச் செஞ்சடைமேல்சிறை செய்தனர்ஒண்
 வார்ந்தே குழைகொள் விழியாய் வடிவுடை மாணிக்கமே.                  25
 
 நீயே எனது பிழைகுறிப் பாயெனில் நின்னடிமைப்
 பேயேன் செயும்வண்ணம் எவ்வண்ண மோஎனப் பெற்றளிக்கும்
 தாயே கருணைத் தடங்கட லேஒற்றிச் சார்முத
 வாயேர் சவுந்தர மானே வடிவுடை மாணிக்கமே.                     26
 
 முப்போதும் அன்பர்கள் வாழ்த்தொற்றி யூர்எம் முதல்வர்மகிழ்
 ஒப்போ தருமலைப் பெண்ணமு தேஎன்று வந்துநினை
 எப்போதும் சிந்தித் திடர்நீங்கி வாழ எனக்கருள்வாய்
 மைப்போ தனையகண் மானே வடிவுடை மாணிக்கமே.                   27
 
 மீதலத் தோர்களுள் யார்வணங் காதவர் மேவுநடுப்
 பூதலத் தோர்களுள் யார்புக ழாதவர் போற்றிநிதம்
 பாதலத் தோர்களுள் யார்பணி யாதவர் பற்றிநின்றாள்
 மாதலத் தோங்கொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                  28
 
 சேய்க்குற்றம் தாய்பொறுத் தேடா வருகெனச் செப்புவள்இந்
 நாய்க்குற்றம் நீபொறுத் தாளுதல் வேண்டும் நவின்மதியின்
 தேய்க்குற்றம் மாற்றும் திருவொற்றி நாதர்தந் தேவிஅன்பர்
 வாய்க்குற்றம் நீக்கும் மயிலே வடிவுடை மாணிக்கமே.                    29
 
 செங்கம லாசனன் தேவிபொன் நாணும் திருமுதலோர்
 சங்கம தாமிடற் றோங்குபொன் நாணும் தலைகுனித்துத்
 துங்கமு றாதுஉளம் நாணத் திருவொற்றித் தோன்றல்புனை
 மங்கல நாணுடை யாளே வடிவுடை மாணிக்கமே.                     30
 
 சேடா ரியன்மணம் வீசச் செயன்மணம் சேர்ந்துபொங்க
 ஏடார் பொழிலொற்றி யூரண்ணல் நெஞ்சம் இருந்துவக்க
 வீடா இருளும் முகிலும்பின் னிட்டு வெருவவைத்த
 வாடா மலர்க்குழ லாளே வடிவுடை மாணிக்கமே.                     31
 
 புரநோக்கி னால்பொடி தேக்கிய ஒற்றிப் புனிதர்களக்
 கரநோக்கி நல்லமு தாக்கிநிற் போற்றுங் கருத்தினரா
 தரநோக்கி உள்ளிருள் நீக்கிமெய்ஞ் ஞானத் தனிச்சுகந்தான்
 வரநோக்கி ஆள்விழி மானே வடிவுடை மாணிக்கமே.                  32
 
 உன்னும் திருவொற்றி யூருடை யார்நெஞ் சுவப்பஎழில்
 துன்னும் உயிர்ப்பயிர் எல்லாந் தழைக்கச் சுகக்கருணை
 என்னும் திருவமு தோயாமல் ஊற்றி எமதுளத்தின்
 மன்னும் கடைக்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.                   33
 
 வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன்
 உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத்
 தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ்வாய்க்குமுத
 வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே.                   34
 
 மாநந்த மார்வயல் காழிக் கவுணியர் மாமணிக்கன்(று)
  ஆநந்த இன்னமு தூற்றும் திருமுலை ஆரணங்கே
 காநந்த வோங்கும் எழுவொற்றி யார்உட் களித்தியலும்
 வானந் தருமிடை மானே வடிவுடை மாணிக்கமே.                      35
 
 வான்தேட நான்கு மறைதேட மாலுடன் வாரிசமே
 வான்தேட மற்றை அருந்தவர் தேடஎன் அன்பின்மையால்
 யான்தேட என்னுளம் சேர்ஒற்றி யூர்எம் இருநிதியே
 மான்தேடும் வாட்கண் மயிலே வடிவுடை மாணிக்கமே.                36
 
 முத்தேவர் விண்ணன் முதல்தேவர் சித்தர் முனிவர்மற்றை
 எத்தே வருநின் அடிநினை வார்நினைக் கின்றிலர்தாம்
 செத்தே பிறக்கும் சிறியர்அன் றோஒற்றித் தேவர்நற்றா
 மத்தேவர் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.                37
 
 திருநாள் நினைத்தொழும் நன்னாள் தொழமல் செலுத்தியநாள்
 கருநாள் எனமழை எல்லாம் புகலும் கருத்தறிந்தே
 ஒருநா ளினுநின் றனைமற வார்அன்பர் ஒற்றியில்வாழ்
 மருநாண் மலர்க்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.                38
 
 வாணான் அடைவர் வறுமை யுறார்நன் மலமைக்கள்பொன்
 பூணாள் இடம்புகழ் போதம் பெறுவர்பின் புன்மைஒன்றும்
 காணார்நின் நாமம் கருதுநின் றோர்ஒற்றிக் கண்ணுதல்பால்
 மாணார்வம் உற்ற மயிலே வடிவுடை மாணிக்கமே.                39
 
 சீரறி வாய்த்திரு வொற்றிப் பரம சிவத்தைநினைப்
 போரறி வாய்அவ் அறிவாம் வெளிக்கப் புறத்துநின்றாய்
 யாரறி வார்நின்னைநாயேன் அறிவ தழகுடைத்தே
 வாரெறி பூண்முலை மானே வடிவுடை மாணிக்கமே.               40
 
 போற்றிடு வோர்தம் பிழையா யிரமும் பொறுத்தருள்செய்
 வீற்றொளிர் ஞான விளக்கே மரகத மென்கரும்பே
 ஏற்றொளிர் ஒற்றி யிடத்தார் இடத்தில் இலங்குமுயர்
 மாற்றொளி ரும்பகம் பொன்னே வடிவுடை மாணிக்கமே.             41
 
  ஆசைஉள் ளார்அயன் மால் ஆதி தேவர்கள் யாரும்நின்தாள்
 பூசையுள் ளார்எனில் எங்கே உலகர்செய் பூசைகொள்வார்
 தேசையுள் ளார்ஒற்றி யூருடை யார்இடஞ் சேர்மயிலே
 மாசையுள் ளார் புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.                42
 
 அண்டாரை வென்றுல காண்டுமெய்ஞ் ஞானம் அடைந்துவிண்ணில்
 பண்டாரை சூழ்மதி போலிருப் போர்கள்நின் பத்தர்பாதம்
 கண்டாரைக் கண்டவர் அன்றோ திருவொற்றிக் கண்ணுதல்சேர்
 வண்டாரை வேலன்ன மானே வடிவுடை மாணிக்கமே.                43
 
 அடியார் தொழுநின் அடிப்பொடி தான்சற் றணியப்பெற்ற
 முடியால் அடிக்குப் பெருமைபெற் றார்அம் முகுந்தன்சந்தக்
 கடியார் மலர்அயன் முன்னோர்தென் ஒற்றிக் கடவுட் செம்பால்
 வடியாக் கருணைக் கடலே வடிவுடை மாணிக்கமே.                44
 
 ஓவா தயன்முதலோர்முடி கோடி உறழந்துபடில்
  ஆவா அனிச்சம் பொறாமலர்ச் சிற்றடி ஆற்றக்கொலோ
 காவாய் இமயப்பொற் பாவாய் அருளொற்றிக் காமர்வல்லி
 வாவா எனும்அன்பர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                45
 
 இட்டார் மறைக்கும் உபநிட தத்திற்கும் இன்னுஞ்சற்றம்
 எட்டாநின் பொன்னடிப் போதெளி யேன்தலைக் கெட்டுங்கொலோ
 கட்டார் சடைமுடி ஒற்றிஎம் மான்நெஞ்ச சுத்தமர்ந்த
 மட்டார் குழன்மட மானே வடிவுடை மாணிக்கமே.                46
 
 வெளியாய் வெளிக்குள் வெறுவெளி யாய்ச்சிவ மேநிறைந்த
 ஒளியாய் ஒளிக்குள் ஒளியாம் பரைநினை ஒப்பவரார்
 எளியார்க் கெளியர் திருவொற்றி யார்மெய் இனிதுபரி
 மளியார்நின் றோங்கு மருவே வடிவுடை மாணிக்கமே.                47
 
 விணங்காத லன்பர்தம் அன்பிற்கும் நின்புல விக்கும்அன்றி
 வணங்கா மதிமுடி எங்கள் பிரான்ஒற்றி வாணனும்நின்
 குணங்காதலித்துமெய்க் கூறுதந்தான் எனக் கூறுவர்உன்
 மணங்கா தலித்த தறியார் வடிவுடை மாணிக்கமே.                48
 
 பன்னும்பல் வேறண்டாம் எல்லாம்அவ் அண்டப் பரப்பினின்று
 துன்னும் சராசரம் யாவையும் ஈன்றது சூழ்ந்தும் உன்னை
 இன்னும் இளந்தை அழியாத கன்னிகை என்பதென்னே
 மன்னும் சுகாநந்த வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                49
 
 சினங்கடந் தோர்உள்ளச் செந்தா மரையில் செழித்துமற்றை
 மனங்கடந் தோதும்அவ் வாக்கும் கடந்த மறைஅன்னமே
 தினங்கடந் தோர்புகழ் ஒற்றிஎம் மானிடம் சேரமுதே
 வனங்கடந் தோன்புகழ் மானே வடிவுடை மாணிக்கமே.                50
 
 வல்லாரும் வல்லவர் அல்லாரும் மற்றை மனிதர்முதல்
 எல்லாரும் நின்செயல் அல்லா தணுவும் இயக்கிலரேல்
 இல்லாமை யால்உழல் புல்லேன்செய் குற்றங்கள் ஏதுகண்டாய்
 மல்லார் வயல்ஒற்றி நல்லாய் வடிவுடை மாணிக்கமே.                51
 
 எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே
 தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே
 செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தம் திருந்துணையே
 வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே.                52
 
 தெருட்பா லுறும்ஐங்கைச் செல்வர்க்கும்  நல்லிளஞ் சேய்க்குமகிழ்ந்து
 அருட்பால் அளிக்கும் தனத்தனமேஎம் அகங்கலந்த
 இருட்பால் அகற்றும் இருஞ்சுடரேஒற்றி எந்தைஉள்ளம்
 மருட்பால் பயிலு மயிலே வடிவுடை மாணிக்கமே.              53
 
 அயிலேந்தும் பிள்ளைநற்றாயே திருவொற்றி ஐயர்மலர்க்
 கயிலேந் தரும்பெறல் முத்தே இசையில் கனிந்தகுரல்
 குயிலே குயின்மென் குழற்பிடியே மலைக் கோன்பயந்த
 மயிலே மதிமுக மானே வடிவுடை மாணிக்கமே.                54
 
 செய்யகம் ஓங்கும் திருவொற்றியூரில் சிவபெருமான்
 மெய்யகம் ஓங்குநல் அன்பேநின்பால்அன்பு மேவுகின்றோர்
 கையகம் ஓங்கும் கனியே தனிமெய்க் கதிநெறியே
 வையகம் ஓங்கு மருந்தே வடிவுடை மாணிக்கமே.              55
 
 தரும்பேர் அருளொற்றி யூருடையான்இடஞ் சார்ந்தபசுங்
 கரும்பே இனியகற் கண்டே மதுரக் கனிநறவே
 இரும்பேய் மனத்தினர் பால்இசை யாத இளங்கிளியே
 வரும்பேர் ஒளிச்செஞ் சுடரே வடிவுடை மாணிக்கமே.              56
 
 சேலேர் விழியருள் தேனே அடியருள் தித்திக்கும்செம்
 பாலே மதுரச்செம் பாகேசொல் வேதப் பனுவல்முடி
 மேலே விளங்கும் விளக்கே அருளொற்றி வித்தகனார்
 மாலே கொளும்எழில் மானே வடிவுடை மாணிக்கமே.              57
 
 எம்பால் அருள்வைத்தெழி லொற்றி யூர் கொண்டிருக்கும் இறைச்
 செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே
 வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே
 வம்பால் அணிமுல்லை மானே வடிவுடை மாணிக்கமே.              58
 
 ஏமமுய்ப் பேர்எமக் கென்றே இளைக்கில் எடுக்கவைத்த
 சேமவைப் பேஅன்பர் தேடுமெய்ஞ் ஞானத் திரவியமே
 காமமைக்கார் மலர்க் கூந்தல் பிடிமென் தனிநடையாய்
 வாமநற் சீர்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.              59
 
 மன்னேர் மலையன் மனையும் நற்காஞ்சன மாலையும் நீ
 அன்னே எனத்திரு வாயால் அழைக்கப்பெற்றார் அவர்தாம்
 முன்னே அருந்தவம் என்னே முயன்றனர் முன்னும் ஒற்றி
 வன்னேர் இளமுலை மின்னே வடிவுடை மாணிக்கமே.             60
 
 கணமொன்றி லேனும்என் உள்ளக் கவலைக்கடல்கடந்தே
 குணமொன்றி லேன்எது செய்கின்றேன் நின் உள்ளக் குறிப்பறியேன்
 பணமொன்று பாம்பணி ஒற்றிஎம்மானிடப் பாலில்தெய்வ
 மணமொன்று பச்சைக்கொடியே வடிவுடை மாணிக்கமே.              61
 
 கருவே தனையற என்னெஞ் சகத்தில் களிப்பொடொற்றிக்
 குருவே எனும்நின் கணவனும் நீயும் குலவும் அந்தக்
 திருவே அருள்செந் திருவே முதற்பணி செய்யத்தந்த
 மருவே மருவு மலலே வடிவுடை மாணிக்கமே.              62
 
 எண்ணிய எண்ணங்கள் எல்லாம் பலிக்க எனக்குனருள்
 பண்ணிய உள்ளங்கொள் உள்ளும் புறம்பும் பரிமளிக்கும்
 புண்ணிய மல்லிகைப் போதே எழில்ஒற்றிப் பூரணர்பால்
 மண்ணிய பச்சை மணியே வடிவுடை மாணிக்கமே.              63
 
 தீதுசெய் தாலும்நின் அன்பர்கள் தம்முன் செருக்கிநின்று
 வாதுசெய் தாலும்நின் தாள்மறந்தாலும் மதியிலியேன்
 ஏதுசெய் தாலும் பொறுத்தருள் வாய்ஒற்றி யின்னிடைப்பூ
 மாதுசெய் தாழ்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.              64
 
 மருந்தினின் நான்ஒற்றி யூர்வாழும் நின்றன் மகிழ்நன்முன்னும்
 திருந்திநின் றார்புகழ் நின்முன்னும் நல்லருள் தேன்விழைந்தே
 விருந்தினின் றேன்சற்றும் உள்ளிரங் காத விதத்தைக்கண்டு
 வருந்திநின் றேன்இது நன்றோ வடிவுடை மாணிக்கமே.              65
 
 என்போல் குணத்தில் இழிந்தவர் இல்லைஎப் போதும்எங்கும்
 நின்போல் அருளில் சிறந்தவர் இல்லைஇந் நீர்மையினால்
 பொன்போலும் நின்னருள் அன்னே எனக்கும் புரிதிகண்டாய்
 மன்போல் உயர்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.            66
 
 துன்பே மிகும்இவ் அடியேன் மனத்தில்நின் துய்யஅருள்
 இன்பே மிகுவதெந் நாளோ எழிலொற்றி எந்தைஉயிர்த்
 கன்பேமெய்த் தொண்டர் அறிவே சிவநெறிக் கன்பிலர்பால்
 வன்பேமெய்ப் போத வடிவே வடிவுடை மாணிக்கமே.             67
 
 சற்றே யெனினும் நெஞ்சத் துயரம் தவிரவும்நின்
 பொற்றே மலர்ப்பாதம் போற்றவும் உள்ளம் புரிதிகண்டாய்
 சொற்றேர் அறிஞர் புகழ்ஒற்றி மேவும் துணைவர்தஞ்செம்
 மற்றேர் புயத்தணை மானே வடிவுடை மாணிக்கமே.             68
 
 சந்தோட மாப்பிறர் எல்லாம் இருக்கவும் சஞ்சலத்தால்
 அந்தோ ஒருதமி யேன்மட்டும் வாடல் அருட்கழகோ
 நந்தோட நீக்கிய நங்காய் எனத்திரு நான்முகன்மால்
 வந்தோதும் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.             69
 
 அடியேன் மிசைஎன் பிழையிருந் தாலும் அவைபொறுத்துச்
 செடியேதம் நீக்கிநற் சீரருள் வாய்திகழ் தெய்வமறைக்
 கொடியே மரகதக் கொம்பே எழில்ஒற்றிக் கோமளமே
 வடியேர் அயில்விழி மானே வடிவுடை மாணிக்கமே.             70
 
 கண்ணப்பன் ஏத்துநற் காளத்தி யார்மங் கலங்கொள்ஒற்றி
 நண்ணப்பர் வேண்டும் நலமே பரானந்த நன்னறவே
 எண்ணப் பசும்பொன் வடிவே வடிவுடை மாணிக்கமே.             71
 
 கற்பே விகற்பம் கடியும்ஒன்றே எங்கள் கன்நிறைந்த
 பொற்பேமெய்த் தொண்டர்தம் புண்ணியமே அருட் போத இன்பெ
 சொற்பேர் அறிவுட் சுகப்பொரு ளேமெய்ச் சுயஞ்சுடரே
 மற்பேர் பெறும்ஒற்றி மானே வடிவுடை மாணிக்கமே.             72
 
 மிகவே துயர்க்கடல் வீழ்ந்தேனே நீகை விடுதலருள்
 தகவே எனக்குநற் றாயே அகில சராசரமும்
 சுகவேநஇ முழ்கத் திருவொற்றி யூரிடந் துன்னிப் பெற்ற
 மகவே எனப்புரக் கின்றோய் வடிவுடை மாணிக்கமே.             73
 
 வேதங்க ளாய்ஒற்றி மேவும் சிவத்தின் விளைவருளாய்ப்
 பூதங்க ளாய்ப் பொறி யாய்ப்புல னாகிப் புகல்கரண
 பேதங்க ளாய்உயிர் ஆகிய நின்னைஇப் பேதைஎன்வாய்
 வாதங்க ளால்அறி வேனோ வடிவுடை மாணிக்கமே.             74
 
 மதியே மதிமுக மானே அடியர் மனத்துவைத்த
 நிதியே கருணை நிறைவே சுகாநந்த நீள்நிலையே
 கதியே கதிவழி காட்டுங்கண் ணேஒற்றிக் காவலர்பால்
 வதியேர் இளமட மானே வடிவுடை மாணிக்கமே.             75
 
  ஆறாத் துயரத் தழுந்துகின்றேனைஇங் கஞ்சல்என்றே
 கூறாக் குறைஎன்குறையே இனிநின் குறிப்பறியேன்
 தேறாச் சிறியர்க் கரிதாம் திருவொற்றித் தேவர்மகிழ்
 மாறாக் கருணை மழையே வடிவுடை மாணிக்கமே.             76
 
 எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச்
 சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே
 சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே
 மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             77
 
 செவ்வேலை வென்றகண் மின்னே நின்சித்தம் திரும்பியெனக்
 கெவ்வேலை செய்யேன் றிடினும் அவ்வேலை இயற்றுவல்காண்
 தெவ்வேலை வற்றச்செய் அவ்வேளை யீன்றொற்றித் தேவர்நெஞ்சை
 வவ்வேல வார்குழல் மானே வடிவுடை மாணிக்கமே.             78
 
 தாயே மிகவும் தயவுடை யாள்எனச் சாற்றுவர்இச்
 சேயேன் படுந்துயர் நீக்கஎன்னேஉளம் செய்திலையே
 நாயேன் பிழைஇனி நாடாது நல்லருள் நல்கவரு
 வாயேஎம் ஒற்றி மயிலே வடிவுடை மாணிக்கமே.             80
 
 கல்லாரிடத்தில்என் இல்லாமை சொல்லிக் கலங்கிஇடர்
 நல்லாண்மை உண்டருள் வல்லாண்மை உண்டெனின் நல்குவையே
 வல்லார் எவர்கட்கும் வல்லார் திருவொற்றி வாணரொடு
 மல்லார் பொழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             81
 
 சுந்தர வாண்முகத் தோகாய் மறைகள் சொலுபைங்கிள்ளாய்
 சுந்தர வார்குழற் பூவாய் கருணைக் கடைக்கண்நங்காய்
 அந்தர நேரிடைப் பாவாய் அருள்ஒற்றி அண்ணல்மகிழ்
 மந்தர நேர்கொங்கை மங்கை வடிவுடை மாணிக்கமே.     82
 
 பத்தர்தம் உள்ளத் திருக்கோயில் மேவும் பரம்பரையே
 சுத்தமெய்ஞ் ஞானவொளிப்பிழம் பேசிற் சுகாநந்தமே
 நித்தநின் சீர்சொல எற்கருள் வாய்ஒற்றி நின்மலர்உன்
 மத்தர்தம் வாம மயிலே வடிவுடை மாணிக்கமே.             83
 
 பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப்
 பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய்
 காவாய் எனஅயன்காவாய் பவனும் கருதுமலர்
 மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             84
 
 தாதா உணவுடை தாதா எனப்புல்லர் தம்மிடைப்போய்
 மாதாகம் உற்றவர் வன்நெஞ்சில் நின்அடி வைகுங்கொலோ
 காதார் நெடுங்கட் கரும்பேநல் ஒற்றிக் கருத்தர்நட
 வாதா ரிடம்வளர் மாதே வடிவுடை மாணிக்கமே.             85
 
 களந்திரும் பாஇக் கடையேனை ஆளக்கருணைகொண்டுன்
 உளத்திரும் பாமைக் கென் செய்கேன் துயர்க்கட லூடலைந்தேன்
 குளத்திரும் பாவிழிக் கோமா னொடுந்தொண்டர் கூட்டமுற
 வளந்திரும் பாவொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             86
 
  ஆரணம் பூத்த அருட்கோ மளக்கொடி அந்தரிபூந்
 தோரணம் பூத்த எழில்ஒற்றி யுர்மகிழ் சுந்தரிசற்
 காரணம் பூத்த சிவைப்பார்ப் பதிநங் கெளரிஎன்னும்
 வாரணம் பூத்த தனத்தாய் வடிவுடை மாணிக்கமே.                87
 
 திருவல்லி ஏத்தும் அபிடேக வல்லிஎஞ் சென்னியிடை
 வருவல்லி கற்பக வல்லிஒண் பச்சை மணிவல்லிஎங்
 கருவல்லி நீக்குங் கருணாம் பகவல்லி கண்கொள்ஒற்றி
 மருவல்லி யென்று மறைதேர் வடிவுடை மாணிக்கமே.              88
 
 உடையென்ன ஒண்புலித் தோல்உடை யார்கண்டுவக்குமிள
 நடையென்ன மேமலர்ப் பொன்முத லாம்பெண்கள் நாயகமே
 படையென்ன நீள்விழி மின்னேர் இடைப் பொற் பசுங்கிளியே
 மடைமன்னு நீரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             89
 
 கற்பதும் கேட்பதும் எல்லாம்நின் அற்புதக் கஞ்சமலர்ப்
 பொற்பதங் காணும் பொருட்டென எண்ணுவர் புண்ணியரே
 சொற்பத மாய் அவைக் கப்புற மாய்நின்ற தூய்ச் சுடரே
 மற்பதம் சேரொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             90
 
 நின்னால் எனக்குள எல்லா நலனும் நினைஅடைந்த
 என்னால் உனக்குள தென்னைகண் டாய்எமை ஈன்றவளே
 முன்நால் வருக்கருள் ஒற்றிஎம் மான்கண் முழுமணியே
 மன்னால் மறையின் முடிவே வடிவுடை மாணிக்கமே.             91
 
 நன்றே சிவநெறி நாடுமெய்த் தொண்டர்க்கு நன்மைசெய்து
 நின்றேநின் சேவடிக் குற்றேவல் செய்ய நினைத்தனன்ஈது
 என்றே முடிகுவ தின்றே முடியில் இனிதுகண்டாய்
 மன்றேர் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             92
 
 அத்தனை ஒற்றிக் கிறைவனை அம்பலத் தாடுகின்ற
 முத்தனைச் சேர்ந்தஒண் முத்தே மதிய முகவமுதே
 இத்தனை என்றள வேலாத குற்றம் இழைத்திடும்இம்
 மத்தனை ஆளல் வழக்கோ வடிவுடை மாணிக்கமே.              93
 
 கூறாத வாழ்க்கைச் சிறுமையை நோக்கிக் குறித்திடும்என்
 தேறாத விண்ணப்பம் சற்றேனும் நின்றன் திருச்செவியில்
 ஏறாத வண்ணம்என் ஒற்றித் தியாகர் இடப்புறத்தின்
 மாறா தமர்ந்த மயிலே வடிவுடை மாணிக்கமே.                94
 
 ஓயா இடர்கொண் டுலைவேனுக் கன்பர்க் குதவுதல் போல்
 ஈயா விடினும்ஓர் எள்ளள வேனும் இரங்குகண்டாய்
 சாயா அருள்தரும் தாயே எழில்ஒற்றித் தற்பரையே
 மாயா நலம்அருள் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             95
 
 பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையிற்
 துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே
 கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே
 அரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.             96
 
 காதரவால்உட் கலங்கிநின் றேன்நின் கடைக்கண்அருள்
  ஆதர வால்மகிழ் கின்றேன் இனிஉன் அடைக்கலமே
 சீதரன் ஏத்தும் திருவொற்றி நாதர்தம் தேவிஎழில்
 மாதரசே ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே.               97
 
 பொன்னுடை யார் அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார்
 என்னுடை யார்எனஏசுகின் றார்இஃ தென்னை அன்னே
 மின்னுடையாய் மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண்
 மன்னுடை யாய்என் னுடையாய்  வடிவுடை மாணிக்கமே.              98
 
 பொய்விட்டி டாதவன் நெஞ்சகத் தேனைப் புலம்பும்வண்ணம்
 கைவிட்டி டாதின்னும் காப்பாய் அதுநின் கடன்கரும்பே
 மெய்விட்டி டாருள் விளைஇன்ப மேஒற்றி வித்தகமே
 மைவிட்டி டாவிழி மானே வடிவுடை மாணிக்கமே.                99
 
 நேயானு கூல மனமுடை யாய்இனி நீயும்என்றன்
 தாயாகில் யான்உன் தனையனும் ஆகில் என் தன்உளத்தில்
 ஓயா துறந்துயர் எல்லாம் தவிர்த்தருள் ஒற்றியில்செவ்
 வாயார் அமுத வடிவே வடிவுடை மாணிக்கமே.                 100
 
 வாழிநின் சேவடி போற்றிநின் பூம்பத வாரிசங்கள்
 வாழிநின் தாண்மலர் போற்றிநின் தண்ணளி வாழிநின்சீர்
 வாழிஎன் உள்ளத்தில் நீயநின் ஒற்றி மகிழ்நரும்நீ
 வாழிஎன் ஆருயிர் வாழ்வே வடிவுடை மாணிக்கமே.                  101
 
 திருச்சிற்றம்பலம்
 
 
This webpage was last revised on 31 July 2021. 
Feel free to send the corrections by email  to the webmaster (pmadurai@gmail.com).