
திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த 
  தேவாரப் பதிகங்கள்
  நான்காம் திருமுறை முதற் பகுதி
   பாடல்கள்  ( 1 - 487 )
 
This webpage presents the Etext in Tamil script but in Unicode encoding.
 To view the Tamil text correctly you need to set up the following: 
i). You need to have Unicode fonts containing Tamil Block (Latha,
Arial Unicode MS, TSCu_Inaimathi, Code2000, UniMylai,...) installed on your computer 
and the OS capable of rendering Tamil Scripts (Windows 2000 or Windows XP). 
ii)Use a browser that is capable of handling UTF-8 based pages
(Netscape 6, Internet Explorer 5) with the Unicode Tamil font chosen as the default font for the UTF-8 char-set/encoding view. 
.
In case of difficulties send an email request to 
kalyan@geocities.com or 
kumar@vt.edu
© Project Madurai 1999 - 2004
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of 
electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
| 4.001 | திருவதிகைவீரட்டானம் | (1-10) | மின்பதிப்பு | 
| 4.002 | திருக்கெடிலவடவீரட்டானம் | (11-20) | மின்பதிப்பு | 
| 4.003 | திருவையாறு | (21-31) | மின்பதிப்பு | 
| 4.004 | திருவாரூர் | (32-41) | மின்பதிப்பு | 
| 4.005 | திருவாரூர்ப்பழமொழி | (42-51) | மின்பதிப்பு | 
| 4.006 | திருக்கழிப்பாலை | (52-61) | மின்பதிப்பு | 
| 4.007 | திருஏகம்பம் | (61-71) | மின்பதிப்பு | 
| 4.008 | சிவனெனுமோசை | (72-81) | மின்பதிப்பு | 
| 4.009 | திருஅங்கமாலை | (82-93) | மின்பதிப்பு | 
| 4.010 | திருக்கெடிலவாணர் | (94-103) | மின்பதிப்பு | 
| 4.011 | நமச்சிவாயப்பதிகம் | (104-113) | மின்பதிப்பு | 
| 4.012 | திருப்பழனம் | (114-123) | மின்பதிப்பு | 
| 4.013 | திருவையாறு | (124-133) | மின்பதிப்பு | 
| 4.014 | தசபுராணம் | (134-144) | மின்பதிப்பு | 
| 4.015 | பாவநாசத்திருப்பதிகம் | (145-155) | மின்பதிப்பு | 
| 4.016 | திருப்புகலூர் | (156-165) | மின்பதிப்பு | 
| 4.017 | திருவாரூர் - அரநெறி | (166-176) | மின்பதிப்பு | 
| 4.018 | விடந்தீர்த்ததிருப்பதிகம் | (177-186) | மின்பதிப்பு | 
| 4.019 | திருவாரூர் | (187-197) | மின்பதிப்பு | 
| 4.020 | திருவாரூர் | (198-207) | மின்பதிப்பு | 
| 4.021 | திருவாரூர்திருவாதிரைப்பதிகம் | (208-217) | மின்பதிப்பு | 
| 4.022 | கோயில் | (218-228) | மின்பதிப்பு | 
| 4.023 | கோயில் | (229-238) | மின்பதிப்பு | 
| 4.024 | திருவதிகைவீரட்டானம் | (239-248) | மின்பதிப்பு | 
| 4.025 | திருவதிகைவீரட்டானம் | (249-258) | மின்பதிப்பு | 
| 4.026 | திருவதிகைவீரட்டானம் | (259-268) | மின்பதிப்பு | 
| 4.027 | திருவதிகைவீரட்டானம் | (269-277 ) | மின்பதிப்பு | 
| 4.028 | திருவதிகைவீரட்டானம் | (278-283) | மின்பதிப்பு | 
| 4.029 | திருச்செம்பொன்பள்ளி | (284-293) | மின்பதிப்பு | 
| 4.030 | திருக்கழிப்பாலை | (294-303 ) | மின்பதிப்பு | 
| 4.031 | திருக்கடவூர் | (304-313) | மின்பதிப்பு | 
| 4.032 | திருப்பயற்றூர் | (314-323) | மின்பதிப்பு | 
| 4.033 | திருமறைக்காடு | (324-333) | மின்பதிப்பு | 
| 4.034 | திருமறைக்காடு | (334-343) | மின்பதிப்பு | 
| 4.035 | திருவிடைமருது | (344-353) | மின்பதிப்பு | 
| 4.036 | திருப்பழனம் | (354-363) | மின்பதிப்பு | 
| 4.037 | திருநெய்த்தானம் | (364-373) | மின்பதிப்பு | 
| 4.038 | திருவையாறு | (374-383) | மின்பதிப்பு | 
| 4.039 | திருவையாறு | (384-393) | மின்பதிப்பு | 
| 4.040 | திருவையாறு | (394-403) | மின்பதிப்பு | 
| 4.041 | திருச்சோற்றுத்துறை | (4104-413) | மின்பதிப்பு | 
| 4.042 | திருத்துருத்தி | (414-423) | மின்பதிப்பு | 
| 4.043 | திருக்காஞ்சிமேற்றளி | (424-433) | மின்பதிப்பு | 
| 4.044 | திருஏகம்பம் | (434-443) | மின்பதிப்பு | 
| 4.045 | திருவொற்றியூர் | (444-453) | மின்பதிப்பு | 
| 4.046 | திருவொற்றியூர் | (454-455) | மின்பதிப்பு | 
| 4.047 | திருக்கயிலாயம் | (456-465) | மின்பதிப்பு | 
| 4.048 | திருஆப்பாடி | (466-475 ) | மின்பதிப்பு | 
| 4.049 | திருக்குறுக்கை | (476-485) | மின்பதிப்பு | 
| 4.050 | திருக்குறுக்கை | (486-487) | மின்பதிப்பு | 
| 1 | 
 கூற்றாயின வாறுவி லக்ககிலீர் ஏற்றாயடிக் கேஇர வும்பகலும் தோற்றாதென் வயிற்றின் அகம்படியே ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில 4.1.1 |  | 2 | நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்  வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன் நஞ்சாகி வந்தென்னை நலிவதனை அஞ்சேலுமென் னீர்அதி கைக்கெடில 4.1.2
   | 
3 |    பணிந்தாரன பாவங்கள் பாற்றவல்லீர்  | துணிந்தேயுமக் காட்செய்து வாழலுற்றாற் பிணிந்தார்பொடி கொண்டுமெய் பூசவல்லீர் டணிந்தீரடி கேள்அதி கைக்கெடில 4.1.3
   | 
4 |  முன்னம்மடி யேன்அறி யாமையினான்  | பின்னையடி யேனுமக் காளும்பட்டேன் தன்னையடைந் தார்வினை தீர்ப்பதன்றோ அன்னநடை யார்அதி கைக்கெடில 4.1.4
   | 
5 |  காத்தாள்பவர் காவல் இகழ்ந்தமையாற்  | நீத்தாய கயம்புக நூக்கியிட வார்த்தையிது வொப்பது கேட்டறியேன் ஆர்த்தார்புன லார்அதி கைக்கெடில 4.1.5
   | 
6 | சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்  | நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன் உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய் அலந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 4.16
   | 
7 | உயர்ந்தேன்மனை வாழ்க்கையும் ஒண்பொருளும்  | வயந்தேயுமக் காட்செய்து வாழலுற்றால் பயந்தேயென் வயிற்றின கம்படியே அயர்ந்தேன்அடி யேன்அதி கைக்கெடில 4.1.7
   | 
8 | வலித்தேன்மனை வாழ்கை மகிழ்ந்தடியேன்  | சலித்தாலொரு வர்துணை யாருமில்லைச் கலித்தேயென் வயிற்றி னகம்படியே அலுத்தேனடி யேன்அதி கைக்கெடில 4.1.8
   | 
9 | பொன்போல மிளிர்வதொர் மேனியினீர்  | துன்பேகவ லைபிணி யென்றிவற்றை என்போலிக ளும்மை இனித்தெளியார் அன்பேஅமை யும்மதி கைக்கெடில 4.1.9
   | 
10 |   போர்த்தாயங்கோ ரானையின் ஈருரிதோல்  | ஆர்த்தானரக் கன்றனை மால்வரைக்கீழ் வேர்த்தும்புரண் டும்விழுந் தும்மெழுந்தால் ஆர்த்தார்புனல் சூழ்அதி கைக்கெடில 4.1.10
 |  | 
| 11 | 
 சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்  வண்ண உரிவை யுடையும் அண்ணல் அரண்முர ணேறும் திண்ணன் கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.1 |  | 12 |   பூண்டதோர் கேழல் எயிறும்  நீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து காண்டகு புள்ளின் சிறகுங் ஈண்டு கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.2
   | 
13 | ஒத்த வடத்திள நாகம்  | முத்து வடக்கண் டிகையும் *சித்த வடமும் அதிகைச் தத்துங் கெடிப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை (*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது. 4.2.3
   | 
14 |   மடமான் மறிபொற் கலையும்  | குடமால் வரைய திண்டோ ளுங் இடமால் தழுவிய பாகம் தடமார் கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.4
   | 
15 |   பலபல காமத்த ராகிப்  | கலமலக் கிட்டுத் திரியுங் வலமேந் திரண்டு சுடரும் நலமார் கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதென்று மில்லை 4.2.5
   | 
16 |   கரந்தன கொள்ளி விளக்குங்  | பரந்த பதினெண் கணமும் அரங்கிடை நூலறி வாளர் நிரந்த கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.6
   | 
17 | கொலைவரி வேங்கை அதளுங்  | விலைபெறு சங்கக் குழையும் மலைமகள் கைக்கொண்ட மார்பும் உலவு கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.7
   | 
18 | ஆடல் புரிந்த நிலையும்  | பாடல் பயின்ற பல்பூதம் நாடற் கரியதோர் கூத்தும் ஓடுங் கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.8
   | 
19 |   சூழு மரவத் துகிலுந்  | யாழின் மொழியவள் அஞ்ச வேழ முரித்த நிலையும் தாழுங் கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. 4.2.9
   | 
20 |   நரம்பெழு கைகள் பிடித்து  | உரங்களெல் லாங்கொண் டெடுத்தான் வரங்கள் கொடுத்தருள் செய்வான் நிரம்பு கெடிலப் புனலும் அஞ்சுவ தியாதொன்று மில்லை 4.2.10
 |  | 
| 21 | 
மாதர்ப் பிறைக்கண்ணி யானை  போதொடு நீர்சுமந் தேத்திப் யாதுஞ் சுவடு படாமல் காதன் மடப்பிடி யோடுங் கண்டே னவர்திருப் பாதங் 4.3.1 |  | 22 |  போழிளங் கண்ணியி னானைப்  வாழியம் போற்றியென் றேத்தி ஆழி வலவனின் றேத்தும் கோழி பெடையொடுங் கூடிக் கண்டே னவர்திருப் பாதங் 4.3.2
   | 
23 |   எரிப்பிறைக் கண்ணியி னானை  | முரித்த இலயங்க ளிட்டு அரித்தொழு கும்வெள் ளருவி வரிக்குயில் பேடையொ டாடி கண்டே னவர்திருப் பாதங் 4.3.3
   | 
24 |   பிறையிளங் கண்ணியி னானைப்  | துறையிளம் பன்மலர் தூவித் அறையிளம் பூங்குயி லாலும் சிறையிளம் பேடையொ டாடிச் கண்டே னவர்திருப் பாதங் 4.3.4
   | 
25       | ஏடு மதிக்கண்ணி யானை  | காடொடு நாடு மலையுங் ஆட லமர்ந்துறை கின்ற பேடை மயிலொடுங் கூடிப் கண்டே னவர்திருப் பாதங் 4.3.5
   | 
26       | தண்மதிக் கண்ணியி னானைத்  | உண்மெலி சிந்தைய னாகி அண்ண லமர்ந்துறை கின்ற வண்ணப் பகன்றிலொ டாடி கண்டே னவர்திருப் பாதங் 4.3.6
   | 
27 |   கடிமதிக் கண்ணியி னானைக்  | வடிவொடு வண்ண மிரண்டும் அடியிணை ஆர்க்குங் கழலான் இடிகுர லன்னதோர் ஏனம் கண்டே னவர்திருப் பாதங் 4.3.7
   | 
28       | விரும்பு மதிக்கண்ணி யானை  | பெரும்புலர் காலை யெழுந்து அருங்கலம் பொன்மணி யுந்தும் கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன் கண்டறி யாதன கண்டேன். 4.3.8
   | 
29 | முற்பிறைக் கண்ணியி னானை  | பற்றிக் கயிறறுக் கில்லேன் அற்றருள் பெற்றுநின் றாரோ நற்றுணைப் பேடையொ டாடி கண்டே னவர்திருப் பாதங் 4.3.9
   | 
30       | திங்கள் மதிக்கண்ணி யானைத்  | எங்கருள் நல்குங்கொ லெந்தை அங்கிள மங்கைய ராடும் பைங்கிளி பேடையொ டாடிப் கண்டே னவர்திருப் பாதங் 4.3.10
   | 
31 |   வளர்மதிக் கண்ணியி னானை  | களவு படாததோர் காலங் அளவு படாததோ ரன்போ இளமண நாகு தழுவி கண்டே னவர்திருப் பாதங் 4.3.11
 |  | 
| 32 | 
 பாடிளம் பூதத்தி னானும்  கூடிள மென்முலை யாளைக் ஓடிள வெண்பிறை யானும் ஆடிளம் பாம்பசைத் தானும் 4.4.1 |  | 33 | நரியைக் குதிரைசெய் வானும்  விரதங்கொண் டாடவல் லானும் முரசதிர்ந் தானை முன்னோட அரவரைச் சாத்திநின் றானும் 4.4.2
   | 
34       | நீறுமெய் பூசவல் லானும்  | ஏறுகந் தேறவல் லானும் நாறு கரந்தையி னானும் ஆறு சடைக்கரந் தானும் 4.4.3
   | 
35 |   கொம்புநல் வேனி லவனைக்  | செம்புனல் கொண்டெயில் மூன்றுந் வம்புநற் கொன்றையி னானும் அம்பர ஈருரி யானும் 4.4.4
   | 
36 |   ஊழி யளக்கவல் லானும்  | தாழிளஞ் செஞ்சடை யானுந் தோழியர் தூதிடை யாடத் ஆழி வளைக்கையி னானும் 4.4.5
   | 
37 |   ஊர்திரை வேலையுள் ளானும்  | சீர்தரு பாடலுள் ளானுஞ் வார்தரு பூங்குழ லாளை ஆதிரை நாளுகந் தானும் 4.4.6
   | 
38       | தொழற்கங்கை துன்னிநின் றார்க்குத்  | கழற்கங்கை பன்மலர் கொண்டு குழற்கங்கை யாளையுள் வைத்துக் அழற்கங்கை ஏந்தவல் லானும் 4.4.7
   | 
39 |   ஆயிரந் தாமரை போலும்  | ஆயிரம் பொன்வரை போலும் ஆயிர ஞாயிறு போலும் ஆயிரம் பேருகந் தானும் 4.4.8
   | 
40 |   வீடரங் காநிறுப் பானும்  | ஓடரங் காகவைத் தானும் காடரங் காமகிழ்ந் தானுங் ஆடரங் கத்திடை யானும் 4.4.9
   | 
41 |   பையஞ் சுடர்விடு நாகப்  | கையஞ்சு நான்குடை யானைக் பொய்யஞ்சி வாய்மைகள் பேசிப் ஐயஞ்சின் அப்புறத் தானும் 4.4.10
 |  | 
| 42 | 
மெய்யெலாம் வெண்ணீறு சண்ணித்த  உய்யலா மென்றெண்ணி உறிதூக்கி கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ கையினாற் றொழா தொழிந்து 4.5.1 |  | 43 | என்பிருத்தி நரம்புதோல் புகப்பெய்திட்  இன்பிருத்தி முன்பிருந்த வினைதீர்த்திட் அன்பிருத்தி அடியேனைக் கூழாட்கொண் முன்பிருக்கும் விதியின்றி முயல்விட்டுக் 4.5.2
   | 
44 |   பெருகுவித்தென் பாவத்தைப் பண்டெலாங்  | உருகுவித்தென் உள்ளத்தின் உள்ளிருந்த அருகுவித்துப் பிணிகாட்டி ஆட்கொண்டு அருகிருக்கும் விதியின்றி அறமிருக்க 4.5.3
   | 
45 |   குண்டானாய்த் தலைபறித்துக் குவிமுலையார்  | பண்டமாப் படுத்தென்னைப் பால்தலையிற் தொண்டெலா மிசைபாடத் தூமுறுவல் பண்டெலாம் அறியாதே பனிநீராற் 4.5.4
   | 
46 |   துன்னாகத் தேனாகித் துர்ச்சனவர்  | என்னாகத் திரிதந்தீங் கிருகையேற் பொன்னாகத் தடியேனைப் புகப்பெய்து என்னாகத் திருத்தாதே ஏதன்போர்க் 4.5.5
   | 
47 |   பப்போதிப் பவணனாய்ப் பறித்ததொரு  | ஒப்போட வோதுவித்தென் உள்ளத்தின் அப்போதைக் கப்போதும் அடியவர்கட் எப்போது நினையாதே இருட்டறையின் 4.5.6
   | 
48       | கதியொன்றும் அறியாதே கண்ணழலத்  | பதியொன்று நெடுவீதிப் பலர்காண மதிதந்த ஆருரில் வார்தேனை விதியின்றி மதியிலியேன் விளக்கிருக்க 4.5.7
   | 
49       | பூவையாய்த் தலைபறித்துப் பொறியற்ற  | காவிசேர் கண்மடவார்க் கண்டோ டிக் ஆவியைப் போகாமே தவிர்த்தென்னை பாவியேன் அறியாதே பாழூரிற் 4.5.8
   | 
50 |   ஒட்டாத வாளவுணர் புரம்மூன்றும்  | கட்டானைக் காமனையுங் காலனையுங் அட்டானை ஆரூரில் அம்மானை தட்டானைச் சாராதே தவமிருக்க 4.5.9
   | 
51       | மறுத்தானோர் வல்லரக்கன் ஈரைந்து  | இறுத்தானை எழில்முளரித் தவிசின்மிசை அறுத்தானை ஆரூரில் அம்மானை கறுத்தானைக் கருதாதே கரும்பிருக்க 4.5.10
 |  | 
| 52 | 
 வனபவள வாய்திறந்து வானவர்க்குந்  சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு அனபவள மேகலையோ டப்பாலைக் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் 4.6.1 |  | 53 |   வண்டுலவு கொன்றை வளர்புன்  விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப் கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் 4.6.2
   | 
54 |   பிறந்திளைய திங்களெம் பெம்மான்  | நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் கறங்கோத மல்குங் கழிப்பாலைச் 4.6.3
   | 
55       | இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர்  | சுரும்பார்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் பெரும்பால னாகியோர் பிஞ்ஞக கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் 4.6.4
   | 
56       | பழியிலான் புகழுடையன் பால்நீற்றான்  | விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல சுழியுலாம் வருகங்கை தோய்ந்த கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் 4.6.5
   | 
57       | பண்ணார்ந்த வீணை பயின்ற  | எண்ணார் புரமெரித்த எந்தை பண்ணார் முழவதிரப் பாடலோ கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் 4.6.6
   | 
58       | முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும்  | அதுகண் டதனருகே தோன்றும் சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் 4.6.7
   | 
59 |   ஓரோத மோதி உலகம்  | நீரோத மேற நிமிர்புன் பாரோத மேனிப் பவளம் காரோத மல்குங் கழிப்பாலைச் 4.6.8
   | 
60       | வானுலாந் திங்கள் வளர்புன்  | ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் தேனுலாங் கோதை திளைக்குந் கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் 4.6.9
   | 
61 |   அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ்  | சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க் கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் 4.6.10
 |  | 
| 62 | 
கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால் விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை அரவாடச் சடைதாழ அங்கையினில் அனலேந்தி இரவாடும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.1 | 63 | தேனோக்குங் கிளிமழலை உமைகேள்வன் செழும்பவளந் தானோக்குந் திருமேனி தழலுருவாஞ் சங்கரனை வானோக்கும் வளர்மதிசேர் சடையானை வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.2 | 64 | கைப்போது மலர்தூவிக் காதலித்து வானோர்கள் முப்போதும் முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வனை அப்போது மலர்தூவி ஐம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.3 | 65 |   அண்டமாய் ஆதியாய் அருமறையோ டைம்பூதப் பிண்டமாய் உலகுக்கோர் பெய்பொருளாம் பிஞ்ஞகனைத் தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற இண்டைசேர் சடையானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.4 | 66 |   ஆறேறு சடையானை ஆயிரம்பே ரம்மானைப் பாறேறு படுதலையிற் பலிகொள்ளும் பரம்பரனை நீறேறு திருமேனி நின்மலனை நெடுந்தூவி ஏறேறும் பெருமானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.5 | 67 |   தேசனைத் தேசங்கள் தொழநின்ற திருமாலாற் பூசனைப் பூசனைகள் உகப்பானைப் பூவின்கண் வாசனை மலைநிலநீர் தீவளிஆ காசமாம் ஈசனை எம்மானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.6 | 68 | நல்லானை நல்லான நான்மறையோ டாறங்கம் வல்லானை வல்லார்கள் மனத்துறையும் மைந்தனைச் சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானைத் துகளேதும் இல்லானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.7 | 69 |   விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானைப் பதஞ்சந்திப் பொருளுருவாம் புண்ணியனைத் தரித்தானைக் கங்கைநீர் தாழ்சடைமேல் மதில்மூன்றும் எரித்தானை எம்மானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.8 | 70 | ஆகம்பத் தரவணையான் அயன்அறிதற் கரியானைப் பாகம்பெண் ணாண்பாக மாய்நின்ற பசுபதியை மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி ஏகம்ப மேயானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.9 | 71 |   அடுத்தானை உரித்தானை அருச்சுனற்குப் பாசுபதங் கொடுத்தானைக் குலவரையே சிலையாகக் கூரம்பு தொடுத்தானைப் புரமெரியச் சுனைமல்கு கயிலாயம் எடுத்தானைத் தடுத்தானை என்மனத்தே வைத்தேனே.  | 4.7.10 | 
| 72 | 
 சிவனெனு மோசையல்ல தறையோ வுலகிற்  அவனுமோ ரையமுண்ணி யதளாடை யாவ கவணள வுள்ளஉண்கு கரிகாடு கோயில் அவனது பெற்றிகண்டு மவனீர்மை கண்டு 4.8.1 |  | 73 |   விரிகதிர் ஞாயிறல்லர் மதியல்லர் வேத  திரிதரு வாயுவல்லர் செறுதீயு மல்லர் அரிதரு கண்ணியாளை ஒருபாக மாக எரியர வாரமார்பர் இமையாரு மல்லர் 4.8.2
        | 
74 |   தேய்பொடி வெள்ளைபூசி யதன்மேலோர் திங்கள்  | காய்கதிர் வேலைநீல ஒளிமா மிடற்றர் வேயுட னாடுதோளி அவள்விம்ம வெய்ய தேயிவ ராடுமாறும் இவள்காணு மாறும் 4.8.3
   | 
75       | வளர்பொறி யாமைபுல்கி வளர்கோதை வைகி  | கிளர்பொறி நாகமொன்று மிளிர்கின்ற மார்பர் நளிர்பொறி மஞ்ஞையன்ன தளிர்போன்ற சாய குளிர்பொறி வண்டுபாடு குழலா லொருத்தி 4.8.4
   | 
76 |   உறைவது காடுபோலு முரிதோ லுடுப்பர்  | இறையிவர் வாழும்வண்ண மிதுவேலு மீச பிறைநுதல் பேதைமாதர் உமையென்னு நங்கை அறைகழல் வண்டுபாடும் அடிநீழ லாணை 4.8.5
  | 
77       | கணிவளர் வேங்கையோடு கடிதிங்கள் கண்ணி  | அணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ண மணிகிளர் மஞ்ஞையால மழையாடு சோலை அணிகிள ரன்னவண்ணம் அவள் வண்ணவண்ணம் 4.8.6
   | 
78 |   நகைவலர் கொன்றைதுன்று நகுவெண் டலையர்  | மிகைவளர் வேதகீத முறையோடும் வல்ல முகைவளர் கோதைமாதர் முனிபாடு மாறு பகைவளர் நாகம்வீசி மதியங்கு மாறு 4.8.7
   | 
79 |   ஒளிவளர் கங்கைதங்கு மொளிமா லயன்ற  | றணிகிள ராரவெள்ளை தவழ்சுண்ண வண்ணர் களிகிளர் வேடமுண்டோ ர் கடமா வுரித்த அணிகிள ரன்னதொல்லை யவள்பாக மாக 4.8.8
   | 
80 |   மலைமட மங்கையோடும் வடகங்கை நங்கை  | தலைகல னாகவுண்டு தனியே திரிந்து விலையிலி சாந்தமென்று வெறிநீறு பூசி அலைகடல் வெள்ளமுற்று மலறக் கடைந்த 4.8.9
   | 
81 |   புதுவிரி பொன்செயோலை யொருகாதோர் காது  | விதிவிதி வேதகீத மொருபாடு மோத மதுவிரி கொன்றைதுன்று சடைபாக மாதர் இதுஇவர் வண்ணவண்ணம் இவள்வண்ண வண்ணம் 4.8.10
 |  | 
| 82 | 
 தலையே நீவணங்காய் - தலை தலையா லேபலி தேருந் தலைவனைத் 4.9.1 |  | 83 |   கண்காள் காண்மின்களோ - கடல்  எண்டோ ள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக் 4.9.2
   | 
84 |   செவிகாள் கேண்மின்களோ - சிவன் | எரிபோல் மேனிப்பி ரான்றிறம் எப்போதுஞ் 4.9.3
   | 
85 |   மூக்கே நீமுரலாய் - முது | வாக்கே நோக்கிய மங்கை மணாளனை 4.9.4
   | 
86       | வாயே வாழ்த்துகண்டாய் - மத | பேய்வாழ் காட்டகத் தாடும் பிரான்றன்னை 4.9.5
   | 
87 |   நெஞ்சே நீநினையாய் - நிமிர்  | மஞ்சா டும்மலை மங்கை மணாளனை 4.9.6
   | 
88       | கைகாள் கூப்பித்தொழீர் - கடி  | பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் 4.9.7
   | 
89 |   ஆக்கை யாற்பயனென் - அரன்  | பூக்கை யாலட்டிப் போற்றி யென்னாதவிவ் 4.9.8
   | 
90 |   கால்க ளாற்பயனென் - கறைக்  | கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் 4.9.9
   | 
91 |   உற்றா ராருளரோ - உயிர்  | குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் 4.9.10
   | 
92       | இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன்  | சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங் 4.9.11
   | 
93 |   தேடிக் கண்டுகொண்டேன் - திரு | தேடித் தேடொணாத் தேவனை என்னுளே 4.9.12
 |  | 
| 94 | 
 முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் வளைத்தெழு சடையினர் மழலை வீணையர் திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன் கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.  | 4.10.1 | 95 |   ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு கூறினர் கூறினர் வேதம் அங்கமும் ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங் கீறின வுடையினர் கெடில வாணரே.  | 4.10.2 | 96 |   விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப் படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல் கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.  | 4.10.3 | 97 |   விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர் கெழுமணி அரவினர் கெடில வாணரே.  | 4.10.4 | 98 | குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை தழுவின கழுவுவர் பவள மேனியர் மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக் கெழுவின யோகினர் கெடில வாணரே.  | 4.10.5 | 99 |   அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும் மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக் கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.  | 4.10.6 | 100 |  கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர் வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள் கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.  | 4.10.7 | 101 |  கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.  | 4.10.8 | 102 |  வெறியுறு விரிசடை புரள வீசியோர் பொறியுறு புலியுரி யரைய தாகவும் நெறியுறு குழலுமை பாக மாகவுங் கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.  | 4.10.9 | 103 |  பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத் தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார் ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக் கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.  | 4.10.10 | 
| 104 | 
 சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.  | 4.11.1 | 105 |   பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.  | 4.11.2 | 106 |         விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.  | 4.11.3 | 107 |         இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.  | 4.11.4 | 108 |         வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.  | 4.11.5 | 109 |         சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.  | 4.11.6 | 110 |        வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.  | 4.11.7 | 111 |        இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.  | 4.11.8 | 112 |         முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே.  | 4.11.9 | 113 |  மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.  | 4.11.10 | 
| 114 | 
 சொன்மாலை பயில்கின்ற குயிலினங்காள் சொல்லீரே பன்மாலை வரிவண்டு பண்மிழற்றும் பழனத்தான் முன்மாலை நகுதிங்கள் முகிழ்விளங்கு முடிச்சென்னிப் பொன்மாலை மார்பன்என் புதுநலமுண் டிகழ்வானோ.  | 4.12.1 | 115 |        கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் பண்டரங்க வேடத்தான் பாட்டோ வாப் பழனத்தான் வண்டுலாந் தடமூழ்கி மற்றவனென் தளிர்வண்ணங் கொண்டநாள் தானறிவான் குறிக்கொள்ளா தொழிவானோ.  | 4.12.2 | 116 |        *மனைக்காஞ்சி இளங்குருகே மறந்தாயோ மதமுகத்த பனைக்கைமா வுரிபோர்த்தான் பலர்பாடும் பழனத்தான் நினைக்கின்ற நினைப்பெல்லாம் உரையாயோ நிகழ்வண்டே சுனைக்குவளை மலர்க்கண்ணாள் சொற்றூதாய்ச் சோர்வாளோ. * மனைக்காஞ்சியென்பது வீட்டுக்குச் சமீபத்திலிருக்குங் காஞ்சிமரம்.  | 4.12.3 | 117 |        புதியையாய் இனியையாம் பூந்தென்றால் புறங்காடு பதியாவ திதுவென்று பலர்பாடும் பழனத்தான் மதியாதார் வேள்விதனை மதித்திட்ட மதிகங்கை விதியாளன் என்னுயிர்மேல் விளையாடல் விடுத்தானோ.  | 4.12.4 | 118 |        மண்பொருந்தி வாழ்பவர்க்கும் மாதீர்த்த வேதியர்க்கும் விண்பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானைப் பண்பொருந்த இசைபாடும் பழனஞ்சேர் அப்பனையென் கண்பொருந்தும் போழ்தத்துங் கைவிடநான் கடவேனோ.  | 4.12.5 | 119 |        பொங்கோத மால்கடலிற் புறம்புறம்போய் இரைதேருஞ் செங்கால்வெண் மடநாராய் செயற்படுவ தறியேன்நான் அங்கோல வளைகவர்ந்தான் அணிபொழில்சூழ் பழனத்தான் தங்கோல நறுங்கொன்றைத் தாரருளா தொழிவானோ.  | 4.12.6 | 120 |        துணையார முயங்கிப்போய்த் துறைசேரும் மடநாராய் பணையார வாரத்தான் பாட்டோ வாப் பழனத்தான் கணையார இருவிசும்பிற் கடியரணம் பொடிசெய்த இணையார மார்பன்என் எழில்நலமுண் டிகழ்வானோ.  | 4.12.7 | 121 |         *கூவைவாய் மணிவரன்றிக் கொழித்தோடுங் **காவிரிப்பூம் பாவைவாய் முத்திலங்கப் பாய்ந்தாடும் பழனத்தான் கோவைவாய் மலைமகள்கோன் கொல்லேற்றின் கொடியாடைப் பூவைகாள் மழலைகாள் போகாத பொழுதுளதே. *கூவைவாய்மணி என்பது பூமியினிடத்தில் பொருந்திய முத்துக்கள் - அவையாவன - யானைக்கொம்பு, பன்றிக்கொம்பு, நாகம், பசுவின்பல், மூங்கிற்கணு, கொக்கின்கழுத்து, கற்புள்ள மாதர்கண்டம் என்னுமிவ்விடங்களி லுண்டாயிருக்கு முத்துக்களாம். ** காவிரிப்பூம்பாவைவாய் முத்து என்பது நீர்முத்து எனக்கொள்க. அவை - சங்கு, இப்பி, மீன், தாமரைமலர் என்னு மிவைகளி லுண்டாகு முத்துக்கள். இதனை "சிறைகொள் நீர்த்தரளத் திரல்கொணித்திலத்த" எனத் திருமாளிகைத்தேவர் அருளிச்செய்த திருவிசைப்பா, 2-வது பதிகம் 5-வது திருப்பாடலானுமுணர்க.  | 4.12.8 | 122 |        புள்ளிமான் பொறியரவம் புள்ளுயர்த்தான் மணிநாகப் பள்ளியான் தொழுதேத்த இருக்கின்ற பழனத்தான் உள்ளுவார் வினைதீர்க்கும் என்றுரைப்பர் உலகெல்லாங் கள்ளியேன் நான்இவற்கென் கனவளையுங் கடவேனோ.  | 4.12.9 | 123 |        வஞ்சித்தென் வளைகவர்ந்தான் வாரானே யாயிடினும் பஞ்சிக்காற் சிறகன்னம் பரந்தார்க்கும் பழனத்தான் அஞ்சிப்போய்க் கலிமெலிய அழலோம்பும் அப்பூதி குஞ்சிப்பூ வாய்நின்ற சேவடியாய் கோடியையே.  | 4.12.10 | 
| 124 | 
 விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும் இடைகிலேன் அமணர்கள்தம் அறவுறைகேட் டலமலந்தேன் தொடர்கின்றேன் உன்னுடைய தூமலர்ச்சே வடிகாண்பான் அடைகின்றேன் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.1 | 125 |        செம்பவளத் திருவுருவர் திகழ்சோதி குழைக்காதர் கொம்பமருங் கொடிமருங்கிற் கோல்வளையா ளொருபாகர் வம்பவிழும் மலர்க்கொன்றை வளர்சடைமேல் வைத்துகந்த அம்பவள ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.2 | 126 |        நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் துணியானே தோலானே சுண்ணவெண் ணீற்றானே மணியானே வானவர்க்கு மருந்தாகிப் பிணிதீர்க்கும் அணியானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.3 | 127 |         ஊழித்தீ யாய்நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் வாழித்தீ யாய்நின்றாய் வாழ்த்துவார் வாயானே பாழித்தீ யாய்நின்றாய் படர்சடைமேற் பனிமதியம் ஆழித்தீ ஐயாறார்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.4 | 128 |        சடையானே சடையிடையே தவழுந்தண் மதியானே விடையானே விடையேறிப் புரமெரித்த வித்தகனே உடையானே உடைதலைகொண் டூரூருண் பலிக்குழலும் அடையானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.5 | 129 |         நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே பிறைசூடீ பிணிதீர்க்கும் பெருமானென் றாராத ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.6 | 130 |        கண்ணானாய் மணியானாய் கருத்தானாய் *அருத்தானாய் எண்ணானாய் எழுத்தானாய் எழுத்தினுக்கோர் இயல்பானாய் விண்ணானாய் விண்ணிடையே புரமெரித்த வேதியனே அண்ணான ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே. * அருத்தனாயென்பதற்கு - உண்ணப்படும் பொருள்களாயின எனப் பொருள்படுகின்றது.  | 4.13.7 | 131 |        மின்னானாய் உருமானாய் வேதத்தின் பொருளானாய் பொன்னானாய் மணியானாய் பொருகடல்வாய் முத்தானாய் நின்னானார் இருவர்க்குங் காண்பரிய நிமிர்சோதி அன்னானே ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.8 | 132 |        முத்திசையும் புனற்பொன்னி மொய்பவளங் கொழித்துந்தப் பத்தர்பலர் நீர்மூழ்கிப் பலகாலும் பணிந்தேத்த எத்திசையும் வானவர்கள் எம்பெருமா னெனஇறைஞ்சும் அத்திசையாம் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.9 | 133 |        கருவரைசூழ் கடலிலங்கைக் கோமானைக் கருத்தழியத் திருவிரலால் உதகரணஞ் செய்துகந்த சிவமூர்த்தி பெருவரைசூழ் வையகத்தார் பேர்நந்தி என்றேத்தும் அருவரைசூழ் ஐயாறர்க் காளாய்நான் உய்ந்தேனே.  | 4.13.10 | 
| 134 | 
 பருவரை யொன்றுசுற்றி அரவங்கை விட்ட  திருநெடு மால்நிறத்தை அடுவான் விசும்பு பெருகிட மற்றிதற்கொர் பிதிகார மொன்றை அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட 4.14.1 |  | 135 |        நிரவொலி வெள்ளமண்டி நெடுவண்ட மூட  பரமொரு தெய்வமெய்த இதுவொப்ப தில்லை பிரமனு மாலுமேலை முடியோடு பாதம் பரமுத லாயதேவர் சிவனாய மூர்த்தி 4.14.2
   | 
136   |        காலமு நாள்கள்ஊழி படையா முன்ஏக  | சாலவு மாகிமிக்க சமயங்க ளாறின் ஞாலமு மேலைவிண்ணோ டுலகேழு முண்டு பாலனு மாயவற்கோர் பரமாய மூர்த்தி 4.14.3
   | 
137   |        நீடுயர் மண்ணுவிண்ணும் நெடுவேலை குன்றொ  | சூடிய கையராகி இமையோர் கணங்கள் ஓடிய தாருகன்றன் உடலம் பிளந்து ஆடிய மாநடத்தெ மனலாடி பாதம் 4.14.4
   | 
138  |         நிலைவலி இன்றியெங்கும் நிலனோடு விண்ணும்  | றலைநலி வஞ்சியோடி அரியோடு தேவர் கொலைநலி வாளிமூள அரவங்கை நாணும் மலைசிலை கையிலொல்க வளைவித்த வள்ள 4.14.5
   | 
139   |        நீலநன் மேனிசெங்கண் வளைவெள் ளெயிற்ற  | காலைநன் மாலைகொண்டு வழிபாடு செய்யும் பாலனை ஓடவோடப் பயமெய்து வித்த காலனை வீடுசெய்த கழல்போலும் அண்டர் 4.14.6
   | 
140   |        உயர்தவ மிக்கதக்கன் உயர்வேள்வி தன்னில்  | பயமுறு மெச்சனங்கி மதியோனு முற்ற அயனொடு மாலுமெங்க ளறியாமை யாதி சயமுறு தன்மைகண்ட தழல்வண்ணன் எந்தை 4.14.7
   | 
141   |        நலமலி மங்கைநங்கை விளையாடி யோடி  | உலகினை ஏழுமுற்றும் இருள்மூட மூட அலர்தர அஞ்சிமற்றை நயனங்கை விட்டு அலர்தரு சோதிபோல அலர்வித்த முக்கண் 4.14.8
   | 
142   |        கழைபடு காடுதென்றல் குயில்கூவ அஞ்சு  | மழைவடி வண்ணன்எண்ணி மகவோனை விட்ட எழில்பொடி வெந்துவீழ இமையோர் கணங்கள் தழல்படு நெற்றிஒற்றை நயனஞ் சிவந்த 4.14.9
   | 
143   |        தடமலர் ஆயிரங்கள் குறைவொன்ற தாக  | உடன்வழி பாடுசெய்த திருமாலை யெந்தை சுடரடி யான்முயன்று சுழல்வித் தரக்கன் அடல்வலி ஆழியாழி யவனுக் களித்த 4.14.10
   | 
144   |        கடுகிய தேர்செலாது கயிலாய மீது  | முடுகுவ தன்றுதன்ம மெனநின்று பாகன் விடுவிடு வென்றுசென்று விரைவுற் றரக்கன் நெடுநெடு இற்றுவீழ விரலுற்ற பாதம் 4.14.11
 |  | 
| 145 | 
 பற்றற் றார்சேற் பழம்பதியைப்  சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் *வெற்றி யூரில் விரிசுடரை ஒற்றி யூரெம் உத்தமனை * வெற்றியூரென்பது வைப்புத்தலங்களிலொன்று. 4.15.1 |  | 146 |        ஆனைக் காவில் அணங்கினை  கானப் பேரூர்க் கட்டியைக் வானப் பேரார் வந்தேத்தும் மானக் கயிலை மழகளிற்றை 4.15.2
   | 
147  |         மதியங் கண்ணி ஞாயிற்றை  | அதிகை மூதூர் அரசினை விதியைப் புகழை வானோர்கள் நெதியை ஞானக் கொழுந்தினை 4.15.3
   | 
148   |        புறம்ப யத்தெம் முத்தினைப்  | *உறந்தை யோங்கு சிராப்பள்ளி கறங்கு மருவிக் கழுக்குன்றிற் அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே. * உறந்தையென்பது உறையூர். 4.15.4
   | 
149  |         கோலக் காவிற் குருமணியைக்  | ஆலங் காட்டி லந்தேனை பாலிற் றிகழும் பைங்கனியைப் சூலத் தானைத் துணையிலியைத் *குடமூக்கென்பது கும்பகோணம். 4.15.5
   | 
150   |        மருக லுறையுமா ணிக்கத்தை  | கருகா வூரிற் கற்பகத்தைக் பெருவே ளூரெம் பிறப்பிலியைப் திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் 4.15.6
   | 
151   |        எழிலார் இராச சிங்கத்தை  | குழலார் கோதை வரைமார்பிற் நிழலார் சோலை நெடுங்களத்து அழலார் வண்ணத் தம்மானை 4.15.7
   | 
152   |        மாலைத் தோன்றும் வளர்மதியை  | ஆலைக் கரும்பி னின்சாற்றை சோலைத் துருத்தி நகர்மேய மேலை வானோர் பெருமானை 4.15.8
   | 
153   |        சோற்றுத் துறையெஞ் சோதியைத்  | ஆற்றிற் பழனத் தம்மானை நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் தோற்றக் கடலை அடலேற்றைத் 4.15.9
   | 
154   |        புத்தூ ருறையும் புனிதனைப்  | வித்தாய் மிழலை முளைத்தானை பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் வைத்தேன் என்றன் மனத்துள்ளே * மாத்தூரென்பது - திருவாமாத்தூர். 4.15.10
   | 
155   |        முந்தித் தானே முளைத்தானை  | அந்திச் செவ்வான் படியானை சிந்தை வெள்ளப் புனலாட்டிச் எந்தை பெம்மான் என்னெம்மான் 4.15.11
 |  | 
| 156 | 
 செய்யர் வெண்ணூலர் கருமான் மறிதுள்ளுங் கையர் கனைகழல் கட்டிய காலினர் மெய்யர் மெய்ந்நின் றவர்க்கல்லா தவர்க்கென்றும் பொய்யர் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.1 | 157 |        மேகநல் ஊர்தியர் மின்போல் மிளிர்சடைப் பாக மதிநுத லாளையோர் பாகத்தர் நாக வளையினர் நாக வுடையினர் போகர் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.2 | 158 |        பெருந்தாழ் சடைமுடி மேற்பிறை சூடிக் கருந்தாழ் குழலியுந் தாமுங் கலந்து திருந்தா மனமுடை யார்திறத் தென்றும் பொருந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.3 | 159 |        அக்கார் அணிவடம் ஆகத்தர் நாகத்தர் நக்கார் இளமதிக் கண்ணியர் நாடொறும் உக்கார் தலைபிடித் துன்பலிக் கூர்தொறும் புக்கார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.4 | 160 |        ஆர்த்தார் உயிரடும் அந்தகன் றன்னுடல் பேர்த்தார் பிறைநுதற் பெண்ணின்நல் லாள்உட்கக் கூர்த்தார் மருப்பிற் கொலைக்களிற் றீருரி போர்த்தார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.5 | 161 |  தூமன் சுறவந் துதைந்த கொடியுடைக் காமன் கணைவலங் காய்ந்தமுக் கண்ணினர் சேம நெறியினர் சீரை யுடையவர் பூமன் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.6 | 162 |        உதைத்தார் மறலி உருளவோர் காலாற் சிதைத்தார் திகழ்தக்கன் செய்தநல் வேள்வி பதைத்தார் சிரங்கரங் கொண்டுவெய் யோன்கண் புதைத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.7 | 163 |        கரிந்தார் தலையர் கடிமதில் மூன்றுந் தெரிந்தார் கணைகள் செழுந்தழ லுண்ண விரிந்தார் சடைமேல் விரிபுனற் கங்கை புரிந்தார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.8 | 164 |        ஈண்டார் அழலி னிருவருங் கைதொழ நீண்டார் நெடுந்தடு மாற்ற நிலையஞ்ச மாண்டார்தம் என்பு மலர்க்கொன்றை மாலையும் பூண்டார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.9 | 165 |        கறுத்தார் மணிகண்டங் கால்விர லூன்றி இறுத்தார் இலங்கையர் கோன்முடி பத்தும் அறுத்தார் புலனைந்தும் ஆயிழை பாகம் பொறுத்தார் புகலூர்ப் புரிசடை யாரே.  | 4.16.10 | 
| 166 | 
 எத்தீ புகினும் எமக்கொரு தீதிலை தெத்தே யெனமுரன் றெம்முள் உழிதர்வர் முத்தீ யனையதோர் மூவிலை வேல்பிடித் தத்தீ நிறத்தார் அரநெறி யாரே.  | 4.17.1 | 167 |        வீரமும் பூண்பர் விசயனொ டாயதோர் தாரமும் பூண்பர் தமக்கன்பு பட்டவர் பாரமும் பூண்பர்நற் பைங்கண் மிளிரர வாரமும் பூண்பர் அரநெறி யாரே.  | 4.17.2 | 168 |        தஞ்சவண் ணத்தர் சடையினர் தாமுமோர் வஞ்சவண் ணத்தர்வண் டார்குழ லாளொடுந் துஞ்சவண் ணத்தர்துஞ் சாதகண் ணார்தொழும் அஞ்சவண் ணத்தர் அரநெறி யாரே.  | 4.17.3 | 169 |        விழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் றிழித்தனர் கங்கையை யேத்தினர் பாவங் கழித்தனர் கல்சூழ் கடியரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.  | 4.17.4 | 170 |        துற்றவர் வெண்டலை யிற்சுருள் கோவணந் தற்றவர் தம்வினை யானவெல் லாமற அற்றவர் ஆரூர் அறநெறி கைதொழ உற்றவர் தாமொளி பெற்றனர் தாமே.  | 4.17.5 | 171 |                கூடர வத்தர் குரற்கிண் கிணியடி நீடர வத்தர்முன் மாலை யிடையிருள் பாடர வத்தர் பணமஞ்சு பைவிரித் தாடர வத்தர் அரநெறி யாரே.  | 4.17.6 | 172 |                கூடவல் லார்குறிப் பில்லுமை யாளொடும் பாடவல் லார்பயின் றந்தியுஞ் சந்தியும் ஆடவல் லார்திரு வாரூர் அரநெறி நாடவல் லார்வினை வீடவல் லாரே.  | 4.17.7 | 173 |                பாலை நகுபனி வெண்மதி பைங்கொன்றை மாலையுங் கண்ணியு மாவன சேவடி காலையு மாலையுங் கைதொழு வார்மனம் ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே.  | 4.17.8 | 174 |        முடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பிற் பொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம் படிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி றடிவண்ணம் ஆரூர் அரநெறி யார்க்கே.  | 4.17.9 | 175 |                பொன்னவில் புன்சடை யானடி யின்னிழல் இன்னருள் சூடியெள் காதுமி ராப்பகல் மன்னவர் கின்னரர் வானவர் தாந்தொழும் அன்னவர் ஆரூர் அரநெறி யாரே.  | 4.17.10 | 176 |        பொருள்மன் னனைப்பற்றிப் புட்பகங் கொண்ட மருள்மன் னனையெற்றி வாளுட னீந்து கருள்மன் னுகண்டங் கறுக்க நஞ்சுண்ட அருள்மன்னர் ஆரூர் அரநெறி யாரே.  | 4.17.11 | 
| 177 | 
 ஒன்றுகொ லாமவர் சிந்தை யுயர்வரை ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டலை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது தானே.  | 4.18.1 | 178 |                இரண்டுகொ லாமிமை யோர்தொழு பாதம் இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண் இரண்டுகொ லாமுரு வஞ்சிறு மான்மழு இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.  | 4.18.2 | 179 |                மூன்றுகொ லாமவர் கண்ணுத லாவன மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண் மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே.  | 4.18.3 | 180 |                நாலுகொ லாமவர் தம்முக மாவன நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும் நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் நாலுகொ லாமறை பாடின தாமே.  | 4.18.4 | 181 |                அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கணை அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.  | 4.18.5 | 182 |                 ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால் ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே.  | 4.18.6 | 183 |                ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் ஏழுகொ லாமவர் ஆளு முலகங்கள் ஏழுகொ லாமிசை யாக்கின தாமே.  | 4.18.7 | 184 |                எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம் எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர் எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன எட்டுக்கொ லாந்திசை யாக்கின தாமே.  | 4.18.8 | 185 |                ஒன்பது போலவர் வாசல் வகுத்தன ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை ஒன்பது போலவர் கோலக் குழற்சடை ஒன்பது போலவர் பாரிடந் தானே.  | 4.18.9 | 186 |                பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல் பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.  | 4.18.10 | 
| 187 | 
 சூலப் படையானைச் சூழாக வீழருவிக் கோலத்தோட் குங்குமஞ்சேர் குன்றெட் டுடையானைப் பாலொத்த மென்மொழியாள் பங்கனைப் பாங்காய ஆலத்தின் கீழானை நான்கண்ட தாரூரே.  | 4.19.1 | 188 |         பக்கமே பாரிடங்கள் சூழப் படுதலையிற் புக்கவூர்ப் பிச்சையேற் றுண்டு பொலிவுடைத்தாய்க் கொக்கிறகின் தூவல் கொடியெடுத்த கோவணத்தோ டக்கணிந்த அம்மானை நான்கண்ட தாரூரே.  | 4.19.2 | 189 |         சேய உலகமுஞ் செல்சார்வு மானானை மாயப்போர் வல்லானை மாலைதாழ் மார்பனை வேயொத்த தோளியர்தம் மென்முலைமேல் தண்சாந்தின் ஆயத் திடையானை நான்கண்ட தாரூரே.  | 4.19.3 | 190 |  ஏறேற்ற மாவேறி எண்கணமும் பின்படர மாறேற்றார் வல்லரணஞ் சீறி மயானத்தின் நீறேற்ற மேனியானாய் நீள்சடைமேல் நீர்ததும்ப ஆறேற்ற அந்தணனை நான்கண்ட தாரூரே.  | 4.19.4 | 191 |  தாங்கோல வெள்ளெலும்பு பூண்டுதம் ஏறேறிப் பாங்கான வூர்க்கெல்லாஞ் செல்லும் பரமனார் தேங்காவி நாறுந் திருவாரூர்த் தொன்னகரில் பூங்கோயி லுள்மகிழ்ந்து போகா திருந்தாரே.  | 4.19.5 | 192 |  எம்பட்டம் பட்ட முடையானை யேர்மதியின் நும்பட்டஞ் சேர்ந்த நுதலானை அந்திவாய்ச் செம்பட் டுடுத்துச் சிறுமா னுரியாடை அம்பட் டசைத்தானை நான்கண்ட தாரூரே.  | 4.19.6 | 193 |  போழொத்த வெண்மதியஞ் சூடிப் பொலிந்திலங்கு வேழத் துரிபோர்த்தான் வெள்வளையாள் தான்வெருவ ஊழித்தீ யன்னானை ஓங்கொலிமாப் பூண்டதோர் ஆழித்தேர் வித்தகனை நான்கண்ட தாரூரே.  | 4.19.7 | 194 |  வஞ்சனையா ரார்பாடுஞ் சாராத மைந்தனைத் துஞ்சிருளில் ஆடல் உகந்தானைத் தன்தொண்டர் நெஞ்சிருள் கூரும் பொழுது நிலாப்பாரித் தஞ்சுடராய் நின்றானை நான்கண்ட தாரூரே.  | 4.19.8 | 195 |  காரமுது கொன்றை கடிநாறு தண்ணென்ன நீரமுது கோதையோ டாடிய நீள்மார்பன் பேரமுத முண்டார்கள் உய்யப் பெருங்கடல்நஞ் சாரமுதா வுண்டானை நான்கண்ட தாரூரே.  | 4.19.9 | 196 |  தாட வுடுக்கையன் தாமரைப்பூஞ் சேவடியன் கோடலா வேடத்தன் கொண்டதோர் வீணையினான் ஆடரவக் கிண்கிணிக்கால் அன்னானோர் சேடனை ஆடுந்தீக் கூத்தனை நான்கண்ட தாரூரே.  | 4.19.10 | 197 |  மஞ்சாடு குன்றடர வூன்றி மணிவிரலாற் றுஞ்சாப்போர் வாளரக்கன் றோள்நெரியக் கண்குருதிச் செஞ்சாந் தணிவித்துத் தன்மார்பில் பால்வெண்ணீற் றஞ்சாந் தணிந்தானை நான்கண்ட தாரூரே.  | 4.19.11 | 
| 198 | 
 காண்டலேகருத் தாய்நினைந்திருந்  பூண்டுகொண் டொழிந்தேன் ஈண்டுமாடங்கள் நீண்டமாளிகை தீண்டிவந் துலவுந் 4.20.1 |  | 199 |  கடம்படந்நட மாடினாய்களை  ஒடுங்கி வந்தடைந் முடங்கிறால்முது நீர்மலங்கிள றடைந்த தண்கழனி 4.20.2
   | 
200 |  அருமணித்தடம் பூண்முலை  | உரிமையிற் றொழுவார் விரிசடைவிர திகளந்தணர் தெருவினிற் பொலியுந் 4.20.3
   | 
201 |  பூங்கழல்தொழு தும்பரவியும்  | ஈங்கிருக்கப் பெற்றேன் ஓங்குதெங்கிலை யார்கமுகிப தீங்கனி சிதறுந் 4.20.4
   | 
202 |  நீறுசேர்செழு மார்பினாய்நிரம்  | ஆறுபாய வைத்தாய் ஏறிவண்டொடு தும்பியஞ்சிற தேறல்பாய்ந் தொழுகுந் 4.20.5
   | 
203 |  அளித்துவந்தடி கைதொழுமவர்  | களித்துவந் துடனே குளித்துமூழ்கியுந் தூவியுங்குடைந் தெளிக்குந் தீர்த்தமறாத் 4.20.6
   | 
204 |  திரியுமூவெயில் தீயெழச்சிலை  | பிரியுமா றெங்ஙனே பெரியசெந்நெற் பிரம்புரிகெந்த தரியுந் தண்கழனி 4.20.7
   | 
205 |  பிறத்தலும்பிறந் தாற்பிணிப்பட  | றிறக்குமா றுளதே அறத்தையேபுரிந் தமனத்தனாய் திறத்தனாய் ஒழிந்தேன் 4.20.8
   | 
206 | முளைத்தவெண்பிறை மொய்சடையுடை  | வளைத்துக் கொண்டிருந்தேன் அளைப்பிரிந்த அலவன்போய்ப்புகு திளைக்குந் தண்கழனித் 4.20.9
   | 
207 | நாடினார்கம லம்மலரய  | நாடிக் காணமாட்டாத் பாடுவார்பணி வார்பல்லாண்டிசை தேடிக் கண்டுகொண்டேன் 4.20.10
 |  | 
| 208 | 
 முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர்க ளோடு பாவையர் சூழப் பலிப்பின்னே வித்தகக் கோல வெண்டலை மாலை விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.1 | 209 |  நணியார் சேயார் நல்லார் தீயார் நாடோ றும் பிணிதான் தீரும் என்று பிறங்கிக் கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா மணாளா என்பார்கட் கணியான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.2 | 210 |  வீதிகள் தோறும் வெண்கொடி யோடுவி தானங்கள்  சோதிகள் விட்டுச் சுடர்மா மணிகள் ஒளிதோன்றச் சாதிக ளாய பவளமு முத்துத் தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.3 | 211 |  குணங்கள் பேசிக் கூடிப் பாடித் தொண்டர்கள் பிணங்கித் தம்மிற் பித்தரைப் போலப் பிதற்றுவார் வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.4 | 212 |  நிலவெண் சங்கும் பறையும் ஆர்ப்ப நிற்கில்லாப் பலரு மிட்ட கல்ல வடங்கள் பரந்தெங்குங் கலவ மஞ்ஞை காரென் றெண்ணிக் களித்துவந் தலம ராரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.5 | 213 |  விம்மா வெருவா விழியாத் தெழியா வெருட்டுவார் தம்மாண் பிலராய்த் தரியார் தலையான் முட்டுவார் எம்மான் ஈசன் எந்தை எனப்பன் என்பார்கட் கம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.6 | 214 |  செந்துவர் வாயார் செல்வன் சேவடி சிந்திப்பார் மைந்தர்க ளோடு மங்கையர் கூடிம யங்குவார் இந்திர னாதி வானவர் சித்தர் எடுத்தேத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.7 | 215 |  முடிகள் வணங்கி மூவா தார்கண் முன்செல்ல வடிகொள் வேய்த்தோள் வான்அர மங்கையர் பின்செல்லப் பொடிகள் பூசிப் பாடுந் தொண்டர் புடைசூழ அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.8 | 216 |  துன்பம் நும்மைத் தொழாத நாள்கள் என்பாரும் இன்பம் நும்மை யேத்து நாள்கள் என்பாரும் நும்பின் எம்மை நுழையப் பணியே என்பாரும் அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.9 | 217 |  பாரூர் பௌவத் தானைப் பத்தர் பணிந்தேத்தச் சீரூர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பார்ந் தோரூர் ஒழியா துலகம் எங்கும் எடுத்தேத்தும் ஆரூ ரன்றன் ஆதிரை நாளால் அதுவண்ணம்.  | 4.21.10 | 
| 218 | 
 செஞ்சடைக் கற்றை முற்றத்  நஞ்சடைக் கண்ட னாரைக் மஞ்சடைச் சோலைத் தில்லை துஞ்சடை இருள் கிழியத் 4.22.1 |  | 219 |  ஏறனார் ஏறு தம்பால்  ஆறனார் ஆறு சூடி நாறுபூஞ் சோலைத் தில்லை நீறுமெய் பூசி நின்று 4.22.2
   | 
220 |  சடையனார் சாந்த நீற்றர்  | உடையனா ருடைத லையில் கடிகொள்பூந் தில்லை தன்னுட் அடிகழ லார்க்க நின்று 4.22.3
   | 
221 |  பையர வசைத்த அல்குற்  | மையரிக் கண்ணி யாளும் செய்யெரி தில்லை தன்னுட் கையெரி வீசி நின்று 4.22.4
   | 
222 |  ஓதினார் வேதம் வாயால்  | பூதனார் பூதஞ் சூழப் நாதனார் தில்லை தன்னுள் காதில்வெண் குழைகள் தாழக் 4.22.5
   | 
223 |  ஓருடம் பிருவ ராகி  | பாரிடம் பாணி செய்யப் காரிடந் தில்லை தன்னுட் பேரிடம் பெருக நின்று 4.22.6
   | 
224 |  முதற்றனிச் சடையை மூழ்க  | மதக்களிற் றுரிவை போர்த்த மதத்துவண் டறையுஞ் சோலை கதத்ததோ ரரவ மாடக் 4.22.7
   | 
225 |  மறையனார் மழுவொன் றேந்தி  | இறைவனார் எம்பி ரானார் சிறைகொள்நீர்த் தில்லை தன்னுட் அறைகழ லார்க்க நின்று 4.22.8
   | 
226 |  விருத்தனாய்ப் பால னாகி  | நிருத்தனார் நிருத்தஞ் செய்ய கருத்தனார் தில்லை தன்னுட் அருத்தமா மேனி தன்னோ 4.22.9
   | 
227 |  பாலனாய் விருத்த னாகிப்  | காலனைக் காலாற் காய்ந்த ஞாலமாந் தில்லை தன்னுள் நீலஞ்சேர் கண்ட னார்தாம் 4.22.10
   | 
228 |  மதியிலா அரக்க னோடி  | நெதியன்றோள் நெரிய வூன்றி மதியந்தோய் தில்லை தன்னுள் அதிசயம் போல நின்று 4.22.11
 |  | 
| 229 | 
 பத்தனாய்ப் பாட மாட்டேன்  எத்தினாற் பத்தி செய்கேன் முத்தனே முதல்வா தில்லை அத்தாவுன் ஆடல் காண்பான் 4.23.1 |  | 230 |  கருத்தனாய்ப் பாட மாட்டேன்  ஒருத்தரா லறிய வொண்ணாத் திருத்தமாந் தில்லை தன்னுட் நிருத்தம்நான் காண வேண்டி 4.23.2
   | 
231 |  கேட்டிலேன் கிளைபி ரியேன்  | நாட்டினேன் நின்றன் பாதம் மாட்டினீர் வாளை பாயு கூட்டமாங் குவிமு லையாள் 4.23.3
   | 
232 |  சிந்தையைத் திகைப்பி யாதே  | எந்தைநீ அருளிச் செய்யாய் செந்தியார் வேள்வி ஓவாத் அந்தியும் பகலும் ஆட 4.23.4
   | 
233 |  கண்டவா திரிந்து நாளுங்  | கொண்டிருந் தாடிப் பாடிக் வண்டுபண் பாடுஞ் சோலை எண்டிசை யோரு மேத்த 4.23.5
   | 
234 |  பார்த்திருந் தடிய னேன்நான்  | மூர்த்தியே என்பன் உன்னை ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் கூத்தாவுன் கூத்துக் காண்பான் 4.23.6
   | 
235 |  பொய்யினைத் தவிர விட்டுப்  | ஐயநீ அருளிச் செய்யாய் வையகந் தன்னில் மிக்க பையநின் னாடல் காண்பான் 4.23.7
   | 
236 |  மனத்தினார் திகைத்து நாளும்  | கனைப்பரால் என்செய் கேனோ தினைத்தனை வேதங் குன்றாத் அனைத்துநின் னிலயங் காண்பான் 4.23.8
   | 
237 |  நெஞ்சினைத் தூய்மை செய்து  | வஞ்சமே செய்தி யாலோ மஞ்சடை சோலைத் தில்லை அஞ்சொலாள் காண நின்று 4.23.9
   | 
238 |  மண்ணுண்ட மால வனும்  | விண்ணுண்ட திருவு ருவம் திண்ணுண்ட திருவே மிக்க பண்ணுண்ட பாட லோடும் 4.23.10
 |  | 
| 239 | 
 இரும்புகொப் பளித்த யானை  கரும்புகொப் பளித்த இன்சொற் சுரும்புகொப் பளித்த கங்கைத் அரும்புகொப் பளித்த சென்னி 4.24.1 |  | 240 |  கொம்புகொப் பளித்த திங்கட்  வம்புகொப் பளித்த கொன்றை செம்புகொப் பளித்த மூன்று அம்புகொப் பளிக்க எய்தார் 4.24.2
   | 
241 |  விடையுங்கொப் பளித்த பாதம்  | சடையுங்கொப் பளித்த திங்கட் உடையுங்கொப் பளித்த நாகம் அடையுங்கொப் பளித்த சீரார் 4.24.3
   | 
242 |  கறையுங்கொப் பளித்த கண்டர்  | இறையுங்கொப் பளித்த கண்ணார் மறையுங்கொப் பளித்த நாவர் அறையுங்கொப் பளித்த சென்னி 4.24.4
   | 
243 |  நீறுகொப் பளித்த மார்பர்  | கூறுகொப் பளித்த கோதை ஏறுகொப் பளித்த பாதம் ஆறுகொப் பளித்த சென்னி 4.24.5
   | 
244 |  வணங்குகொப் பளித்த பாதம்  | பிணங்குகொப் பளித்த சென்னிச் சுணங்குகொப் பளித்த கொங்கைச் அணங்குகொப் பளித்த மேனி 4.24.6
   | 
      245 |    சூலங்கொப் பளித்த கையர்  | நூலுங்கொப் பளித்த மார்பில் மாலுங்கொப் பளித்த பாகர் ஆலங்கொப் பளித்த கண்டத் 4.24.7
   | 
246 |  நாகங்கொப் பளித்த கையர்  | மேகங்கொப் பளித்த திங்கள் பாகங்கொப் பளித்த மாதர் ஆகங்கொப் பளித்த தோளார் 4.24.8
   | 
247 |  பரவுகொப் பளித்த பாடல்  | விரவுகொப் பளித்த கங்கை இரவுகொப் பளித்த கண்டர் அரவுகொப் பளித்த கையர் 4.24.9
   | 
248 |  தொண்டைகொப் பளித்த செவ்வாய்த்  | கொண்டைகொப் பளித்த கோதைக் வண்டுகொப் பளித்த தீந்தேன் கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் 4.24.10
 |  | 
| 249 | 
 வெண்ணிலா மதியந் தன்னை  உண்ணிலாப் புகுந்து நின்றங் விண்ணிலார் மீயச் சூரர் அண்ணியார் பெரிதுஞ் சேயார் 4.25.1 |  | 250 |  பாடினார் மறைகள் நான்கும்  கூடினார் கூட லால சூடினார் சூடல் மேவிச் றாடினார் ஆடல் மேவி 4.25.2
   | 
251 |  ஊனையே கழிக்க வேண்டில்  | தேனைய மலர்கள் கொண்டு ஏனைய பலவு மாகி ஆனையின் உரிவை போர்த்தார் 4.25.3
   | 
252 |  துருத்தியாங் குரம்பை தன்னில்  | விருத்திதான் தருக வென்று வருத்தியால் வல்ல வாறு அருத்தியார்க் கன்பர் போலும் 4.25.4
   | 
253 |  பத்தியால் ஏத்தி நின்று  | துத்திஐந் தலைய நாகஞ் உத்தர மலையர் பாவை அத்தியின் உரிவை போர்த்தார் 4.25.5
   | 
254 |  வரிமுரி பாடி யென்றும்  | கரியுரி மூட வல்ல சுரிபுரி விரிகு ழலாள் அரிவையோர் பாகர் போலும் 4.25.6
   | 
255 |  நீதியால் நினைசெய் நெஞ்சே  | பாதியாம் உமைதன் னோடும் சோதியாய்ச் சுடர்வி ளக்காய்ச் ஆதியும் ஈறு மானார் 4.25.7
   | 
256 | எல்லியும் பகலு மெல்லாந்  | புல்லிய மனத்துக் கோயில் வில்லிஐங் கணையி னானை அல்லியம் பழன வேலி 4.25.8
   | 
257 |  ஒன்றவே யுணர்தி ராகில்  | வென்றஐம் புலன்கள் தம்மை நன்றவன் நார ணனும் றன்றவர்க் கரியர் போலும் 4.25.9
   | 
258 |  தடக்கையால் எடுத்து வைத்துத்  | கிடக்கையால் இடர்க ளோங்கக் முடக்கினார் திருவி ரலான் தடக்கினார் என்னை யாளும் 4.25.10
 |  | 
| 259 | 
 நம்பனே எங்கள் கோவே  பங்கனே பரம யோகி செம்பொனே பவளக் குன்றே அன்பனே அலந்து போனேன் 4.26.1 |  | 260 |  பொய்யினால் மிடைந்த போர்வை  மெய்யனாய் வாழ மாட்டேன் செய்யதா மரைகள் அன்ன ஐயநான் அலந்து போனேன் 4.26.2
   | 
261 |          நீதியால் வாழ மாட்டேன்  | ஓதியும் உணர மாட்டேன் சோதியே சுடரே உன்றன் ஆதியே அலந்து போனேன் 4.26.3
   | 
262 |  தெருளுமா தெருள மாட்டேன்  | பொருளுளே அழுந்தி நாளும் இருளுமா மணிகண் டாநின் அருளுமா றருள வேண்டும் 4.26.4
   | 
263 |  அஞ்சினால் இயற்றப் பட்ட  | அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் அஞ்சினால் உய்க்கும் வண்ணங் அஞ்சினால் பொலிந்த சென்னி 4.26.5
   | 
264 |          உறுகயி றூசல் போல  | மறுகயி றூசல் போல பெறுகயி றூசல் போலப் தறுகயி றூச லானேன் 4.26.6
   | 
265 |  கழித்திலேன் காம வெந்நோய்  | ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி விழித்திலேன் வெளிறு தோன்ற அழித்திலேன் அயர்த்துப் போனேன் 4.26.7
   | 
266 |  மன்றத்துப் புன்னை போல  | ஒன்றினால் உணர மாட்டேன் கன்றிய காலன் வந்து அன்றினான் அலமந் திட்டேன் 4.26.8
   | 
267 |  பிணிவிடா ஆக்கை பெற்றேன்  | பணிவிடா இடும்பை யென்னும் துணிவிலேன் தூய னல்லேன் அணியனாய் அறிய மாட்டேன் 4.26.9
   | 
268 |  திருவினாள் கொழுந னாருந்  | இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் ஒருவனே எம்பி ரானே அருவனே அருள வேண்டும் 4.26.10
 |  | 
| 269 | 
மடக்கினார் புலியின் தோலை  முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் அடக்கினார் கெடில வேலி 4.27.1 |  | 270 |  சூடினார் கங்கை யாளைச்  கூடினாள் நங்கை யாளும் பாடினார் சாம வேதம் ஆடினார் கெடில வேலி 4.27.2
   | 
271 |  கொம்பினார் குழைத்த வேனற்  | நம்பினார் காண லாகா வெம்பினார் மதில்கள் மூன்றும் அம்பினார் கெடில வேலி 4.27.3
   | 
272 |  மறிபடக் கிடந்த கையர்  | செறிபடக் கிடந்த செக்கர்ச் பொறிபடக் கிடந்த நாகம் கிறிபட நடப்பர் போலுங் 4.27.4
   | 
273 |  நரிவரால் கவ்வச் சென்று  | தெரிவரால் மால்கொள் சிந்தை வரிவரால் உகளுந் தெண்ணீணர்க் அரிவரால் வயல்கள் சூழ்ந்த 4.27.5
   | 
274 |  புள்ளலைத் துண்ட ஓட்டில்  | சுள்ளலைச் சுடலை வெண்ணீ துள்ளலைப் பாகன் றன்னைத் அள்ளலைக் கடப்பித் தாளும் 4.27.6
   | 
275 |  நீறிட்ட நுதலர் வேலை  | கூறிட்ட மெய்ய ராகிக் கீறிட்ட திங்கள் சூடிக் ஆறிட்டு முடிப்பர் போலும் 4.27.7
   | 
276 |  காணிலார் கருத்தில் வாரார்  | ஏணிலார் இறப்பும் இல்லார் நாணிலார் ஐவ ரோடும் ஆணலார் பெண்ணும் அல்லார் 4.27.8
   | 
 | இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.                         | 4.27.9
   | 
   277 |       தீர்த்தமா மலையை நோக்கிச்  | பேர்த்தலும் பேதை அஞ்சப் சீர்த்தமா முடிகள் பத்துஞ் ஆர்த்தவாய் அலற வைத்தார் 4.27.10
 |  | 
| 278 | 
முன்பெலாம் இளைய காலம்  கண்கண இருமி நாளுங் பின்பக லுணங்கல் அட்டும் அன்பனாய் வாழ மாட்டேன் 4.28.1 |  | 279 |  கறைப்பெருங் கண்டத் தானே  நிறைப்பெருங் கடலைக் கண்டேன் பிறைப்பெருஞ் சென்னி யானே அறுப்பதோர் உபாயங் காணேன் 4.28.2
   | 
280 |  நாதனா ரென்ன நாளும்  | ஏதங்கள் அறிய மாட்டார் ஆதனா னவனென் றெள்கி பாதநான் பரவா துய்க்கும் 4.28.3
   | 
281 |  சுடலைசேர் சுண்ண மெய்யர்  | படலைசேர் அலங்கல் மார்பர் மடலைநீர் கிழிய வோடி கெடிலவீ ரட்ட மேய 4.28.4
   | 
282 |  மந்திர முள்ள தாக  | இந்திரன் வேள்வித் தீயில் சிந்திர மாக நோக்கித் கந்திரம் முரலுஞ் சோலைக் 4.28.5
   | 
 | இப்பதிகத்தில் 6,7,8,9-ம் செய்யுட்கள்  | சிதைந்து போயின. 4.28.6-9
   | 
283 |  மைஞ்ஞல மனைய கண்ணாள்  | மெய்ஞ்ஞரம் புதிரம் பில்க கைஞ்ஞரம் பெழுவிக் கொண்டு கின்னரங் கேட்டு கந்தார் 4.28.10
 |  | 
| 284 | 
 ஊனினுள் ளுயிரை வாட்டி  வானினுள் வான வர்க்கும் நானெனிற் றானே யென்னு தேனும்இன் னமுது மானார் 4.29.1 |  | 285 |  நொய்யவர் விழுமி யாரும்  மெய்யவர் பொய்யு மில்லார் நெய்யமர் திரியு மாகி செய்யவர் கரிய கண்டர் 4.29.2
   | 
286 |  வெள்ளியர் கரியர் செய்யர்  | ஒள்ளியர் ஊழி யூழி பள்ளியர் நெஞ்சத் துள்ளார் தெள்ளியர் கள்ளந் தீர்ப்பார் 4.29.3
   | 
287 |  தந்தையுந் தாயு மாகித்  | முந்திய தேவர் கூடி எந்தைநீ சரண மென்றங் சிந்தையுட் சிவம தானார் 4.29.4
   | 
288 |  ஆறுடைச் சடையர் போலும்  | கூறுடை மெய்யர் போலுங் நீறுடை யழகர் போலும் சேறுடைக் கமல வேலித் 4.29.5
   | 
289 |  ஞாலமும் அறிய வேண்டின்  | காலமுங் கழிய லான கோலமும் வேண்டா ஆர்வச் சீலமும் நோன்பு மாவார் 4.29.6
   | 
290 |  புரிகாலே நேசஞ் செய்ய  | எரிகாலே மூன்று மாகி தெரிகாலே மூன்று சந்தி திரிகாலங் கண்ட எந்தை 4.29.7
   | 
291 |          காருடைக் கொன்றை மாலை  | நீருடைச் சடையுள் வைத்த பாரொடு விண்ணும் மண்ணும் சீரொடு பாட லானார் 4.29.8
   | 
292 |          ஓவாத மறைவல் லானும்  | மூவாத பிறப்பி லாரும் பூவான மூன்றும் முந்நூற் தேவாதி தேவ ரென்றுந் 4.29.9
   | 
293 |          அங்கங்க ளாறு நான்கும்  | சங்கங்கள் பாட ஆடுஞ் அங்கங்கள் உதிர்ந்து சோர செங்கண்வெள் ளேற தேறுந் 4.29.10
 |  | 
| 294 | 
 நங்கையைப் பாகம் வைத்தார்  அங்கையில் அனலும் வைத்தார் தங்கையின் யாழும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார் 4.30.1 |  | 295 |  விண்ணினை விரும்ப வைத்தார்  பண்ணினைப் பாட வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட கண்ணினை நெற்றி வைத்தார் 4.30.2
   | 
296 |  வாமனை வணங்க வைத்தார்  | சோமனைச் சடைமேல் வைத்தார் ஆமனை யாட வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார் 4.30.3
   | 
297 |  அரியன அங்கம் வேதம்  | பெரியன புரங்கள் மூன்றும் பரியதீ வண்ண ராகிப் கரியதோர் கண்டம் வைத்தார் 4.30.4
   | 
298 |  கூரிருள் கிழிய நின்ற  | பேரிருள் கழிய மல்கு ஆரிருள் அண்டம் வைத்தார் காரிருள் கண்டம் வைத்தார் 4.30.5
   | 
299 |  உட்டங்கு சிந்தை வைத்தார்  | விட்டங்கு வேள்வி வைத்தார் நட்டங்கு நடமும் வைத்தார் கட்டங்கந் தோண்மேல் வைத்தார் 4.30.6
   | 
300 |  ஊனப்பே ரொழிய வைத்தார்  | ஞானப்பேர் நவில வைத்தார் வானப்பே ராறும் வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார் 4.30.7
   | 
301 |  கொங்கினும் அரும்பு வைத்தார்  | சங்கினுள் முத்தம் வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் 4.30.8
   | 
302 |  சதுர்முகன் தானும் மாலுந்  | எதிர்முக மின்றி நின்ற பிதிர்முகன் காலன் றன்னைக் கதிர்முகஞ் சடையில் வைத்தார் 4.30.9
   | 
303 |  மாலினாள் நங்கை அஞ்ச  | வேலினான் வெகுண் டெடுக்கக் நூலினான் நோக்கி நக்கு காலினால் ஊன்றி யிட்டார் 4.30.10
 |  | 
| 304 | 
 பொள்ளத்த காய மாயப்  வெள்ளத்தைக் கழிக்க வேண்டில் உள்ளத்த திரியொன் றேற்றி கள்ளத்தைக் கழிப்பர் போலுங் 4.31.1 |  | 305 |  மண்ணிடைக் குரம்பை தன்னை  விண்ணிடைத் தரும ராசன் பண்ணிடைச் சுவைகள் பாடி கண்ணிடை மணியர் போலுங் 4.31.2
   | 
306 |  பொருத்திய குரம்பை தன்னுட்  | ஒருத்தனை யுணர மாட்டீர் வருத்தின களிறு தன்னை கருத்தினில் இருப்பர் போலுங் 4.31.3
   | 
307 | பெரும்புலர் காலை மூழ்கிப்  | அரும்பொடு மலர்கள் கொண்டாங் விரும்பிநல் விளக்குத் தூபம் கரும்பினிற் கட்டி போல்வார் 4.31.4
   | 
308 |  தலக்கமே செய்து வாழ்ந்து  | விலக்குவா ரிலாமை யாலே மலக்குவார் மனத்தி னுள்ளே கலக்கநான் கலங்கு கின்றேன் 4.31.5
   | 
309 |  பழியுடை யாக்கை தன்னிற்  | வழியிடை வாழ மாட்டேன் அழிவுடைத் தாய வாழ்க்கை கழியிடைத் தோணி போன்றேன் 4.31.6
   | 
310 |  மாயத்தை அறிய மாட்டேன்  | பேயொத்துக் கூகை யானேன் நேயத்தால் நினைய மாட்டேன் காயத்தைக் கழிக்க மாட்டேன் 4.31.7
   | 
311 |  பற்றிலா வாழ்க்கை வாழ்ந்து  | உற்றலாற் கயவர் தேறா எற்றுளேன் என்செய் கேன்நான் கற்றிலேன் களைகண் காணேன் 4.31.8
   | 
312 |  சேலின்நேர் அனைய கண்ணார்  | பாலுநற் றயிர்நெய் யோடு மாலினைத் தவிர நின்ற காலனை யுதைப்பர் போலுங் 4.31.9
   | 
313 |  முந்துரு இருவ ரோடு  | இந்திர னோடு தேவர் வந்திரு பதுகள் தோளால் கந்திரு வங்கள் கேட்டார் 4.31.10
 |  | 
| 314 | 
 உரித்திட்டார் ஆனை யின்றோள்  விரித்திட்டார் உமையா ளஞ்சி தரித்திட்டார் சிறிது போது சிரித்திட்டார் எயிறு தோன்றத் 4.32.1 |  | 315 |  உவந்திட்டங் குமையோர் பாகம்  பவந்திட்ட பரம னார் தாம் கவர்ந்திட்ட புரங்கள் மூன்றுங் சிவந்திட்ட கண்ணர் போலுந் 4.32.2
   | 
316 |  நங்களுக் கருள தென்று  | தங்களுக் கருளும் எங்கள் எங்களுக் கருள்செய் யென்ன திங்களுக் கருளிச் செய்தார் 4.32.3
   | 
317 |  பார்த்தனுக் கருளும் வைத்தார்  | சாத்தனை மகனா வைத்தார் கூத்தொடும் பாட வைத்தார் தீர்த்தமுஞ் சடைமேல் வைத்தார் 4.32.4
   | 
318 |  மூவகை மூவர் போலும்  | நாவகை நாவர் போலும் ஆவகை யாவர் போலும் தேவர்கள் தேவர் போலுந் 4.32.5
   | 
319 |  ஞாயிறாய் நமனு மாகி  | தீயறா நிருதி வாயுத் பேயறாக் காட்டி லாடும் தீயறாக் கையர் போலுந் 4.32.6
   | 
320 |  ஆவியாய் அவியு மாகி  | பாவியர் பாவந் தீர்க்கும் காவியங் கண்ண ளாகிக் தேவியைப் பாகம் வைத்தார் 4.32.7
   | 
321 |  தந்தையாய்த் தாயு மாகித்  | கெந்தையு மென்ன நின்ற எந்தையெம் பிரானே என்றென் சிந்தையுஞ் சிவமு மாவார் 4.32.8
   | 
322 |  புலன்களைப் போக நீக்கிப்  | இலங்களைப் போக நின்று மலங்களை மாற்ற வள்ளார் சினங்களைக் களைவர் போலுந் 4.32.9
   | 
323 |  மூர்த்திதன் மலையின் மீது  | பார்த்துத்தான் பூமி மேலாற் ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் தேத்தெத்தா என்னக் கேட்டார் 4.32.10
 |  | 
| 324 | 
 இந்திர னோடு தேவர்  சுந்தர மானார் போலுந் சந்திர னோடுங் கங்கை மந்திர மானார் போலும் 4.33.1 |  | 325 |  தேயன நாட ராகித்  பாயன நாட றுக்கும் காயன நாடு கண்டங் மாயன நாடர் போலும் 4.33.2
   | 
326 | அறுமையிவ் வுலகு தன்னை  | வெறுமையின் மனைகள் வாழ்ந்து சிறுமதி அரவு கொன்றை மறுமையும் இம்மை யாவார் 4.33.3
   | 
327 |  கால்கொடுத் திருகை யேற்றிக்  | தோல்படுத் துதிர நீராற் ஏல்வுடைத் தாவ மைத்தங் மால்கொடுத் தாவி வைத்தார் 4.33.4
   | 
328 |  விண்ணினார் விண்ணின் மிக்கார்  | பண்ணினார் கின்ன ரங்கள் கண்ணினார் கண்ணி னுள்ளே மண்ணினார் வலங்கொண் டேத்தும் 4.33.5
   | 
329 |  அங்கையுள் அனலும் வைத்தார்  | தங்கையில் வீணை வைத்தார் திங்களைக் கங்கை யோடு மங்கையைப் பாகம் வைத்தார் 4.33.6
   | 
330 |  கீதராய்க் கீதங் கேட்டுக்  | வேதராய் வேத மோதி ஏதராய் நட்ட மாடி மாதையோர் பாகம் வைத்தார் 4.33.7
   | 
331 |  கனத்தினார் வலி யுடைய  | சினத்தினுட் சினமாய் நின்று தனத்தினைத் தவிர்ந்து நின்று மனத்தினுள் மாசு தீர்ப்பார் 4.33.8
   | 
332 |  தேசனைத் தேசன் றன்னைத்  | வாசனை செய்து நின்று காசினைக் கனலை என்றுங் மாசினைத் தீர்ப்பர் போலும் 4.33.9
   | 
333 |  பிணியுடை யாக்கை தன்னைப்  | பணியுடைத் தொழில்கள் பூண்டு துணிவுடை அரக்க னோடி மணிமுடிப் பத்தி றுத்தார் 4.33.10
 |  | 
| 334 | 
 தேரையு மேல்க டாவித்  யாரையு மேலு ணரா பாரையும் விண்ணும் அஞ்சப் காரிகை அஞ்ச லென்பார் 4.33.1 |  | 335 |  முக்கிமுன் வெகுண்டெ டுத்த  நக்கிருந் தூன்றிச் சென்னி அக்கர வாமை பூண்ட தெக்குநீர்த் திரைகள் மோதுந் 4.33.2
   | 
336 |  மிகப்பெருத் துலாவ மிக்கா  | அகப்படுத் தென்று தானும் உகைத்தெடுத் தான்ம லையை நகைப்படுத் தருளி னானூர் 4.33.3
   | 
337 |  அந்தரந் தேர்க டாவி  | உந்தினான் மாம லையை பந்தமாந் தலைகள் பத்தும் சிந்தனை செய்து விட்டார் 4.33.4
   | 
338 |  தடுக்கவுந் தாங்க வொண்ணாத்  | கடுக்கவோர் தேர்க டாவிக் எடுப்பன்நான் என்ன பண்ட அடுக்கவே வல்ல னூராம் 4.33.5
   | 
339 |  நாண்முடிக் கின்ற சீரான்  | கோள்பிடித் தார்த்த கையான் நீண்முடிச் சடையர் சேரும் தோண்முடி நெரிய வைத்தார் 4.33.6
   | 
340 |  பத்துவாய் இரட்டிக் கைக  | பொத்திவாய் தீமை செய்த கத்திவாய் கதற அன்று முத்துவாய்த் திரைகள் மோதும் 4.33.7
   | 
341 |  பக்கமே விட்ட கையான்  | புக்கனன் மாம லைக்கீழ்ப் மிக்கமா மதிகள் கெட்டு நக்கன பூத மெல்லாம் 4.33.8
   | 
342 |  நாணஞ்சு கைய னாகி  | பாணஞ்சு முன்னி ழந்த நீணஞ்சு தானு ணரா ஏணஞ்சு கைகள் செய்தார் 4.33.9
   | 
343 |  கங்கைநீர் சடையுள் வைக்கக்  | தென்கையான் தேர்க டாவிச் முன்கைமா நரம்பு வெட்டி அங்கைவாள் அருளி னானூர் 4.33.10
 |  | 
| 344 | 
 காடுடைச் சுடலை நீற்றர்  பாடுடைப் பூதஞ் சூழப் தோடுடைக் கைதை யோடு ஏடுடைக் கமல வேலி 4.34.1 |  | 345 |  முந்தையார் முந்தி யுள்ளார்  சந்தியார் சந்தி யுள்ளார் சிந்தையார் சிந்தை யுள்ளார் எந்தையார் எம்பி ரானார் 4.34.2
   | 
346 |  காருடைக் கொன்றை மாலை  | நீருடைச் சடையுள் வைத்த போருடை விடையொன் றேற ஏருடைக் கமல மோங்கும் 4.34.3
   | 
347 |  விண்ணினார் விண்ணின் மிக்கார்  | பண்ணினார் பண்ணின் மிக்க கண்ணினார் கண்ணின் மிக்க எண்ணினார் எண்ணின் மிக்கார் 4.34.4
   | 
348 |  வேதங்கள் நான்குங் கொண்டு  | பூதங்கள் பாடி யாட பாதங்கள் பரவி நின்ற ஏதங்கள் தீர நின்றார் 4.34.5
   | 
349 |  பொறியர வரையி லார்த்துப்  | முறிதரு வன்னி கொன்றை மறிதரு கங்கை தங்க ஏறிதரு புனல்கொள் வேலி 4.34.6
   | 
350 |  படரொளி சடையி னுள்ளாற்  | சுடரொளி மதியம் வைத்துத் அடரொளி விடையொன் றேற இடரவை கெடவு நின்றார் 4.34.7
   | 
351 |  கமழ்தரு சடையி னுள்ளாற்  | தவழ்தரு மதியம் வைத்துத் மழுவது வலங்கை யேந்தி எழில்தரு பொழில்கள் சூழ்ந்த 4.34.8
   | 
352 |  பொன்றிகழ் கொன்றை மாலை  | மின்றிகழ் சடையில் வைத்து அன்றவர் அளக்க லாகா இன்றுட னுலக மேத்த 4.34.9
   | 
353 |  மலையுடன் விரவி நின்று  | தலையுட னடர்த்து மீண்டே சிலையுடை மலையை வாங்கித் இலையுடைக் கமல வேலி 4.34.10
 |  | 
| 354 | 
 ஆடினா ரொருவர் போலு  கூடினா ரொருவர் போலுங் சூடினா ரொருவர் போலுந் பாடினா ரொருவர் போலும் 4.35.1 |  | 355 |  போவதோர் நெறியு மானார்  வேவதோர் வினையிற் பட்டு கூவல்தான் அவர்கள் கேளார் பாவமே தீர நின்றார் 4.35.2
   | 
356 |  கண்டராய் முண்ட ராகிக்  | தொண்டர்கள் பாடி யாடித் விண்டவர் புரங்க ளெய்த பண்டையென் வினைகள் தீர்ப்பார் 4.35.3
   | 
357 |  நீரவன் தீயி னோடு  | பாரவன் விண்ணின் மிக்க யாரவ னண்ட மிக்க பாரகத் தமுத மானார் 4.35.4
   | 
358 |  ஊழியா ரூழி தோறும்  | பாழியார் பாவந் தீர்க்கும் ஆழியான் அன்னத் தானும் பாழியார் பரவி யேத்தும் 4.35.5
   | 
359 |  ஆலின்கீழ் அறங்க ளெல்லாம்  | நூலின்கீ ழவர்கட் கெல்லா காலின்கீழ்க் காலன் றன்னைக் பாலின்கீழ் நெய்யு மானார் 4.35.6
   | 
360 |  ஆதித்தன் அங்கி சோமன்  | போதித்து நின்று லகிற் சோதித்தா ரேழு லகுஞ் பாதிப்பெண் ணுருவ மானார் 4.35.7
   | 
361 |  காற்றனாற் காலற் காய்ந்து  | தோற்றனார் கடலுள் நஞ்சைத் ஏற்றினார் இளவெண் டிங்கள் பாற்றினார் வினைக ளெல்லாம் 4.35.8
   | 
362 | கண்ணனும் பிரம னோடு  | எண்ணியுந் துதித்து மேத்த வண்ணநன் மலர்கள் தூவி பண்ணுலாம் பாடல் கேட்டார் 4.35.9
   | 
363 |  குடையுடை அரக்கன் சென்று  | இடைமட வரலை அஞ்ச விடையுடை விகிர்தன் றானும் படைகொடை அடிகள் போலும் 4.35.10
 |  | 
| 364 | 
  காலனை வீழச் செற்ற  மேலவா யிருக்கப் பெற்றேன் கோலநெய்த் தான மென்னுங் நீலம்வைத் தனைய கண்ட 4.37.1 |  | 365 |  காமனை யன்று கண்ணாற்  தூபமுந் தீபங் காட்டித் சேமநெய்த் தான மென்னுஞ் வாமனை நினைந்த நெஞ்சம் 4.37.2
   | 
366 |  பிறைதரு சடையின் மேலே  | உறைதர வைத்த எங்கள் நிறைதரு பொழில்கள் சூழ குறைதரும் அடிய வர்க்குக் 4.37.3
   | 
367 |  வடிதரு மழுவொன் றேந்தி  | பொடிதரு மேனி மேலே நெடிதரு பொழில்கள் சூழ அடிதரு கழல்கள் ஆர்ப்ப 4.37.4
   | 
368 |  காடிட மாக நின்று  | பாடிய பூதஞ் சூழப் ஆடிய கழலார் சீரார் கூடிய குழக னாரைக் 4.37.5
   | 
369 |  வானவர் வணங்கி யேத்தி  | தானவர்க் கருள்கள் செய்யும் தேனமர் பொழில்கள் சூழத் கூனிள மதியி னானைக் 4.37.6
   | 
370 |  காலதிற் கழல்க ளார்ப்பக்  | ஞாலமுங் குழிய நின்று மேலவர் முகடு தோய மாலொரு பாக மாக 4.37.7
   | 
371 |  பந்தித்த சடையின் மேலே  | அந்திப்போ தனலு மாடி வந்திப்பார் வணங்கி நின்று சிந்திப்பார் சிந்தை யுள்ளார் 4.37.8
   | 
372 |  சோதியாய்ச் சுடரு மானார்  | ஓதிவா யுலகம் ஏத்த ஆதியாய் அந்த மானார் நீதியாய் நியம மாகி 4.37.9
   | 
373 |  இலையுடைப் படைகை யேந்தும்  | தலையுடன் அடர்த்து மீண்டே சிலையுடன் கணையைச் சேர்த்துத் நிலையுடை யடிகள் போலும் 4.37.10
 |  | 
| 374 | 
 கங்கையைச் சடையுள் வைத்தார்  திங்களைத் திகழ வைத்தார் மங்கையைப் பாகம் வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார் 4.38.1 |  | 375 |  பொடிதனைப் பூச வைத்தார்  கடியதோர் நாகம் வைத்தார் வடிவுடை மங்கை தன்னை அடியிணை தொழவும் வைத்தார் 4.38.2
   | 
376 |  உடைதரு கீளும் வைத்தார்  | படைதரு மழுவும் வைத்தார் விடைதரு கொடியும் வைத்தார் அடைதர அருளும் வைத்தார் 4.38.3
   | 
377 |  தொண்டர்கள் தொழவும் வைத்தார்  | இண்டையைத் திகழ வைத்தார் வண்டுசேர் குழலி னாளை அண்டவா னவர்கள் ஏத்தும் 4.38.4
   | 
378 |  வானவர் வணங்க வைத்தார்  | கானிடை நடமும் வைத்தார் ஆனிடை ஐந்தும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் 4.38.5
   | 
379 |  சங்கணி குழையும் வைத்தார்  | வெங்கதிர் எரிய வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் அங்கம தோத வைத்தார் 4.38.6
   | 
380 |  பத்தர்கட் கருளும் வைத்தார்  | சித்தத்தை ஒன்ற வைத்தார் முத்தியை முற்ற வைத்தார் அத்தியின் உரிவை வைத்தார் 4.38.7
   | 
381 |  ஏறுகந் தேற வைத்தார்  | நாறுபூங் கொன்றை வைத்தார் கூறுமை யாகம் வைத்தார் ஆறுமோர் சடையில் வைத்தார் 4.38.8
   | 
382 |  பூதங்கள் பலவும் வைத்தார்  | கீதங்கள் பாட வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார் ஆதியும் அந்தம் வைத்தார் 4.38.9
   | 
383 |  இரப்பவர்க் கீய வைத்தார்  | கரப்பவர் தங்கட் கெல்லாங் பரப்புநீர்க் கங்கை தன்னைப் அரக்கனுக் கருளும் வைத்தார் 4.38.10
 |  | 
| 384 | 
 குண்டனாய்ச் சமண ரோடே  துண்டனே சுடர்கொள் சோதீ அண்டனே அமரர் ஏறே தொண்டனேன் தொழுதுன் பாதஞ் 4.39.1 |  | 385 |  பீலிகை இடுக்கி நாளும்  வாலிய தறிகள் போல வாலியார் வணங்கி ஏத்துந் டாலியா எழுந்த நெஞ்சம் 4.39.2
   | 
386 |  தட்டிடு சமண ரோடே  | ஒட்டிடு மனத்தி னீரே மொட்டிடு கமலப் பொய்கைத் டொட்டிடும் உள்ளத் தீரே 4.39.3
   | 
387 |  பாசிப்பல் மாசு மெய்யர்  | நேசத்தா லிருந்த நெஞ்சை தேசத்தார் பரவி யேத்துந் வாசத்தால் வணங்க வல்லார் 4.39.4
   | 
388 |  கடுப்பொடி யட்டி மெய்யிற்  | வடுக்களோ டிசைந்த நெஞ்சே மடுக்களில் வாளை பாயுந் அடுத்துநின் றுன்னு நெஞ்சே 4.39.5
   | 
389 |  துறவியென் றவம தோரேன்  | உறவினால் அமண ரோடும் நறவமார் பொழில்கள் சூழ்ந்த மறவிலா நெஞ்ச மேநன் 4.39.6
   | 
390 |  பல்லுரைச் சமண ரோடே  | சொல்லிய செலவு செய்தேன் மல்லிகை மலருஞ் சோலைத் எல்லியும் பகலு மெல்லாம் 4.39.7
   | 
391 |  மண்ணுளார் விண்ணு ளாரும்  | எண்ணிலாச் சமண ரோடே தெண்ணிலா எறிக்குஞ் சென்னித் கண்ணினாற் காணப் பெற்றுக் 4.39.8
   | 
392 |  குருந்தம தொசித்த மாலுங்  | திருந்துநற் றிருவ டியுந் அருந்தவ முனிவ ரேத்துந் பொருந்திநின் றுன்னு நெஞ்சே 4.39.9
   | 
393 |  அறிவிலா அரக்க னோடி  | முறுகினான் முறுகக் கண்டு நிறுவினான் சிறுவி ரலால் அறிவினால் அருள்கள் செய்தான் 4.39.10
 |  | 
| 394 | 
  தானலா துலக மில்லை  கானலா தாட லில்லை வானலா தருளு மில்லை ஆனலா தூர்வ தில்லை 4.40.1 |  | 395 |  ஆலலால் இருக்கை இல்லை  நூலலால் நொடிவ தில்லை மாலுநான் முகனுங் கூடி ஆலலால் அமுத மில்லை 4.40.2
   | 
396 |  நரிபுரி சுடலை தன்னில்  | சுரிபுரி குழலி யோடுந் தெரிபுரி சிந்தை யார்க்குத் அரிபுரி மலர்கொண் டேத்தும் 4.40.3
   | 
397 |  தொண்டலாற் றுணையு மில்லை  | கண்டலா தருளு மில்லை பண்டைநான் மறைகள் காணாப் அண்டவா னவர்கள் ஏத்தும் 4.40.4
   | 
398 |  எரியலா லுருவ மில்லை  | கரியலாற் போர்வை யில்லை பிரிவிலா அமரர் கூடிப் அரியலாற் றேவி யில்லை 4.40.5
   | 
399 |  என்பலாற் கலனு மில்லை  | புன்புலால் நாறு காட்டிற் துன்பிலாத் தொண்டர் கூடித் அன்பலாற் பொருளு மில்லை 4.406
   | 
400 |  கீளலால் உடையு மில்லை  | தோளலாற் றுணையு மில்லை வேளலாற் காயப் பட்ட ஆளலாற் கைம்மா றில்லை 4.40.7
   | 
401 |  சகமலா தடிமை யில்லை  | நகமெலாந் தேயக் கையான் முகமெலாங் கண்ணீர் மல்க அகமலாற் கோயி லில்லை 4.40.8
   | 
402 |  உமையலா துருவ மில்லை  | நமையெலா முடைய ராவர் கமையெலா முடைய ராகிக் கமைவிலா அருள் கொடுப்பார் 4.40.9
   | 
403 |  மலையலா லிருக்கை யில்லை  | தலையலால் நெரித்த தில்லை நிலையிலார் புரங்கள் வேவ அலையினார் பொன்னி மன்னும் 4.40.10
 |  | 
| 404 | 
 
 பொய்விரா மேனி தன்னைப்  மெய்விரா மனத்த னல்லேன் ஐவரால் அலைக்கப் பட்ட செய்வரால் உகளுஞ் செம்மைத் 4.41.1 |  | 405 |  கட்டராய் நின்று நீங்கள்  எட்டவாங் கைகள் வீசி அட்டமா மலர்கள் கொண்டே சிட்டராய் அருள்கள் செய்வார் 4.41.2
   | 
406 |  கல்லினாற் புரமூன் றெய்த  | எல்லியும் பகலு முள்ளே பல்லில்வெண் டலைகை யேந்திப் சொல்லுநன் பொருளு மாவார் 4.41.3
   | 
407 |  கறையராய்க் கண்ட நெற்றிக்  | இறையராய் இனிய ராகித் பிறையராய்ச் செய்த வெல்லாம் துறையராய்ப் புகுந்தெ னுள்ளச் 4.41.4
   | 
408 |  பொந்தையைப் பொருளா வெண்ணிப்  | எந்தையே ஏக மூர்த்தி பந்தமாய் வீடு மாகிப் சிந்தையுட் டேறல் போலுந் 4.41.5
   | 
409 |  பேர்த்தினிப் பிறவா வண்ணம்  | பார்த்தனுக் கருள்கள் செய்த ஆர்த்துவந் திழிவ தொத்த தீர்த்தமாய்ப் போத விட்டார் 4.41.6
   | 
410 |  கொந்தார்பூங் குழலி னாரைக்  | எந்தையெம் பிரானாய் நின்ற முந்தரா அல்கு லாளை செந்தாது புடைகள் சூழ்ந்த 4.41.7
   | 
411 |  அங்கதி ரோன வனை  | வெங்கதி ரோன் வழியே அங்கதி ரோன வனை செங்கதி ரோன்வ ணங்குஞ் 4.41.8
   | 
412 |  ஓதியே கழிக்கின் றீர்கள்  | நீதியால் நினைக்க மாட்டீர் சாதியா நான்மு கனுஞ் சோதியாய்ச் சுடர தானார் 4.41.9
   | 
413 |  மற்றுநீர் மனம்வை யாதே  | பெற்றதோர் உபாயந் தன்னாற் கற்றுவந் தரக்க னோடிக் செற்றுகந் தருளிச் செய்தார் 4.41.10
 |  | 
| 414 | 
 
 பொருத்திய குரம்பை தன்னைப்  இருத்தியெப் போதும் நெஞ்சுள் ஒருத்தியைப் பாகம் வைத்தங் துருத்தியஞ் சுடரி னானைத் 4.42.1 |  | 415 |  சவைதனைச் செய்து வாழ்வான்  இவையொரு பொருளு மல்ல அவைபுர மூன்றும் எய்தும் சுவையினைத் துருத்தி யானைத் 4.42.2
   | 
416 |  உன்னியெப் போதும் நெஞ்சுள்  | கன்னியை ஒருபால் வைத்துக் பொன்னியின் நடுவு தன்னுள் துன்னிய துருத்தி யானைத் 4.42.3
   | 
417 |  ஊன்றலை வலிய னாகி  | தான்றலைப் பட்டு நின்று வான்றலைத் தேவர் கூடி தோன்றலைத் துருத்தி யானைத் 4.42.4
   | 
418 |  உடல்தனைக் கழிக்க லுற்ற  | இடர்தனைக் கழிக்க வேண்டில் கடல்தனில் நஞ்ச முண்டு சுடர்தனைத் துருத்தி யானைத் 4.42.5
   | 
419 |  அள்ளலைக் கடக்க வேண்டில்  | பொள்ளலிக் காயந் தன்னுட் வள்ளலை வான வர்க்குங் துள்ளலைத் துருத்தி யானைத் 4.42.6
   | 
420 |  பாதியில் உமையாள் தன்னைப்  | வேதியன் என்று சொல்லி சாதியாஞ் சதுர்மு கனுஞ் சோதியைத் துருத்தி யானைத் 4.42.7
   | 
421 |  சாமனை வாழ்க்கை யான  | தூமநல் லகிலுங் காட்டித் சோமனைச் சடையுள் வைத்துத் தூமனத் துருத்தி யானைத் 4.42.8
   | 
422 |  குண்டரே சமணர் புத்தர்  | கண்டதே கருது வார்கள் விண்டவர் புரங்கள் எய்து தொண்டர்கள் துணையி னானைத் 4.42.9
   | 
423 |  பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்  | அண்டத்தைக் கழிய நீண்ட கண்டொத்துக் கால்வி ரலால் துண்டத்துத் துருத்தி யானைத் 4.42.10
 |  | 
| 424 | 
 
 மறையது பாடிப் பிச்சைக்  பிறையது சடைமு டிமேற் கறையது கண்டங் கொண்டார் இறையவர் பாட லாடல் 4.43.1 |  | 425 | மாலன மாயன் றன்னை  பாலனார் பசுப தியார் காலனைக் காலாற் செற்றார் ஏலநற் கடம்பன் தாதை 4.43.2
   | 
426 |  விண்ணிடை விண்ண வர்கள்  | பண்ணிடைச் சுவையின் மிக்க கண்ணிடை மணியி னொப்பார் எண்ணிடை யெழுத்து மானார் 4.43.3
   | 
427 |  சோமனை அரவி னோடு  | வாமனை வான வர்கள் காமனைக் காய்ந்த கண்ணார் ஏமநின் றாடும் எந்தை 4.43.4
   | 
428 |  ஊனவ ருயிரி னோடு  | தானவர் தனமு மாகித் கானவர் காள கண்டர் ஏனமக் கோடு பூண்டார் 4.43.5
   | 
429 |  மாயனாய் மால னாகி  | தேயமாய்த் திசையெட் டாகித் காயமாய்க் காயத் துள்ளார் ஏயமென் றோளி பாகர் 4.43.6
   | 
430 |  மண்ணினை யுண்ட மாயன்  | பண்ணினைப் பாடி யாடும் கண்ணினை மூன்றுங் கொண்டார் எண்ணினை யெண்ண வைத்தார் 4.43.7
   | 
431 |  செல்வியைப் பாகங் கொண்டார்  | மல்லிகைக் கண்ணி யோடு கல்வியைக் கரையி லாத எல்லியை விளங்க நின்றார் 4.43.8
   | 
432 |  வேறிணை யின்றி யென்றும்  | கூறிய லாக வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார் ஏறினை யேறு மெந்தை 4.43.9
   | 
433 |  தென்னவன் மலையெ டுக்கச்  | மன்னவன் விரலா லூன்ற கன்னலின் கீதம் பாடக் இன்னவற் கருளிச் செய்தார் 4.43.10
 |  | 
| 434 | 
 
 நம்பனை நகர மூன்றும்  அம்பனை அமுதை யாற்றை கம்பனைக் கதிர்வெண் திங்கட் செம்பொனைப் பவளத் தூணைச் 4.44.1 |  | 435 |  ஒருமுழம் உள்ள குட்டம்  அரைமுழம் அதன் அகலம் பெருமுழை வாய்தல் பற்றிக் கருமுகில் தவழும் மாடக் 4.44.2
   | 
436 |  மலையினார் மகளோர் பாக  | சிலையினால் மதில்கள் மூன்றுந் இலையினார் சூலம் ஏந்தி தலையினால் வணங்க வல்லார் 4.44.3
   | 
437 |  பூத்தபொற் கொன்றை மாலை  | தீர்த்தமாங் கங்கை யாளைத் ஏத்துவார் ஏத்த நின்ற வாழ்த்துமா றறிய மாட்டேன் 4.44.4
   | 
438 |  மையினார் மலர்நெ டுங்கண்  | கையிலோர் கபாலம் ஏந்திக் எய்வதோர் ஏனம் ஓட்டி கையினாற் றொழவல் லார்க்குக் 4.44.5
   | 
439 | தருவினை மருவுங் கங்கை  | அருவினை அகல நல்கும் திருவினைத் திருவே கம்பஞ் உருவினை உருகி ஆங்கே 4.44.6
   | 
440 |  கொண்டதோர் கோல மாகிக்  | உண்டதோர் நஞ்ச மாகில் எண்டிசை யோரும் ஏத்த கண்டுநான் அடிமை செய்வான் 4.44.7
   | 
441 |  படமுடை அரவி னோடு  | கடமுடை யுரிவை மூடிக் இடமுடைக் கச்சி தன்னுள் நடமுடை யாடல் காண 4.44.8
   | 
442 |  பொன்றிகழ் கொன்றை மாலை  | நன்றியிற் புகுந்தெ னுள்ளம் குன்றியில் அடுத்த மேனிக் இன்றுயில் போது கண்டார் 4.44.9
   | 
443 |  துருத்தியார் பழனத் துள்ளார்  | அருத்தியால் அன்பு செய்வார் எருத்தினை இசைய ஏறி வருத்திநின் றடிமை செய்வார் 4.44.10
 |  | 
| 444 | 
 
 வெள்ளத்தைச் சடையில் வைத்த  மெள்ளத்தான் அடைய வேண்டின் கள்ளத்தைக் கழிய நின்றார் உள்ளத்துள் ஒளியு மாகும் 4.45.1 |  | 445 | வசிப்பெனும் வாழ்க்கை வேண்டா  புசிப்பதோர் பொள்ள லாக்கை அசிர்ப்பெனும் அருந்த வத்தால் உசிர்ப்பெனும் உணர்வு முள்ளார் 4.45.2
   | 
446 |  தானத்தைச் செய்து வாழ்வான்  | வானத்தை வணங்க வேண்டில் ஞானத்தை விளக்கை ஏற்றி ஊனத்தை ஒழிப்பர் போலும் 4.45.3
   | 
447 |  காமத்துள் அழுந்தி நின்று  | சாமத்து வேத மாகி ஏமத்தும் இடையி ராவும் ஓமத்துள் ஒளிய தாகும் 4.45.4
   | 
448 |  சமையமே லாறு மாகித்  | இமையவர் பரவி யேத்த கமையினை யுடைய ராகிக் உமையொரு பாகர் போலும் 4.45.5
   | 
449 |  ஒருத்திதன் றலைச்சென் றாளைக்  | ஒருத்திக்கு நல்ல னாகி ஒருத்தியைப் பாகம் வைத்தான் ஒருத்திக்கு நல்ல னல்லன் 4.45.6
   | 
450 |  பிணமுடை உடலுக் காகப்  | புணர்வெனும் போகம் வேண்டா நிணமுடை நெஞ்சி னுள்ளால் உணர்வினோ டிருப்பர் போலும் 4.45.7
   | 
451 |  பின்னுவார் சடையான் தன்னைப்  | துன்னுவார் நரகந் தன்னுள் மன்னுவான் மறைக ளோதி உன்னுவார் உள்ளத் துள்ளார் 4.45.8
   | 
452 |  முள்குவார் போகம் வேண்டின்  | எள்குவார் எள்கி நின்றங் பள்குவார் பத்த ராகிப் உள்குவார் உள்ளத் துள்ளார் 4.45.9
   | 
453 |  வெறுத்துகப் புலன்க ளைந்தும்  | மறுத்துக ஆர்வச் செற்றக் பொறுத்துகப் புட்ப கத்தேர் ஒறுத்துகந் தருள்கள் செய்தார் 4.45.10
 |  | 
| 454 | 
 
 ஓம்பினேன் கூட்டை வாளா  காம்பிலா மூழை போலக் பாம்பின்வாய்த் தேரை போலப் ஓம்பிநீ உய்யக் கொள்ளாய் 4.46.1 |  | 455 |  மனமெனுந் தோணி பற்றி  சினமெனுஞ் சரக்கை யேற்றிச் மதனெனும் பாறை தாக்கி துனையுனும் உணர்வை நல்காய் 4.46.2
   | 
 | இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.   | 4.46.3-10
 |  | 
| 456 | 
 
 கனகமா வயிர முந்து  உனகனா யரக்க னோடி அனகனாய் நின்ற ஈச மனகனா யூன்றி னானேல் 4.47.1 |  | 457 |  கதித்தவன் கண்சி வந்து  அதிர்த்தவன் எடுத்தி டலும் நெதித்தவ னூன்றி யிட்ட மதித்திறை யூன்றி னானேல் 4.47.2
   | 
458 |  கறுத்தவன் கண்சி வந்து  | மறித்தலும் மங்கை அஞ்ச நெறித்தொரு விரலா லூன்ற மறித்திறை யூன்றி னானேல் 4.47.3
   | 
459 |  கடுத்தவன் கண்சி வந்து  | எடுத்தலும் மங்கை அஞ்ச நொடிப்பள விரலா லூன்ற மடித்திறை யூன்றி னானேல் 4.47.4
   | 
460 |  கன்றித்தன் கண்சி வந்து  | வென்றித்தன் கைத்த லத்தா நன்றுத்தான் நக்கு நாத மன்றித்தான் ஊன்றி னானேல் 4.47.5
   | 
461 |  களித்தவன் கண்சி வந்து  | நெளித்தவ னெடுத்தி டலும் வெளித்தவ னூன்றி யிட்ட மளித்திறை யூன்றி னானேல் 4.47.6
   | 
462 |  கருத்தனாய்க் கண்சி வந்து  | எருத்தனாய் எடுத்த வாறே திருத்தனாய் நின்ற தேவன் வருத்துவான் ஊன்றி னானேல் 4.47.7
   | 
463 |  கடியவன் கண்சி வந்து  | வடிவுடை மங்கை அஞ்ச செடிபடத் திருவி ரலா வடிவுற வூன்றி னானேல் 4.47.8
   | 
464 |  கரியத்தான் கண்சி வந்து  | இரியத்தான் எடுத்தி டலும் நெரியத்தான் ஊன்றா முன்னம் மரியத்தான் ஊன்றி னானேல் 4.47.9
   | 
465 |  கற்றனன் கயிலை தன்னைக்  | செற்றவன் எடுத்த வாறே உற்றிறை ஊன்றா முன்னம் மற்றிறை ஊன்றி னானேல் 4.47.10
 |  | 
| 466 | 
 
 கடலகம் ஏழி னோடும்  உடலகத் துயிரும் பாரும் தடமலர்க் கந்த மாலை மடலவிழ் கொன்றை சூடி 4.48.1 |  | 467 |  ஆதியும் அறிவு மாகி  சோதியுட் சுடரு மாகித் பாதியிற் பெண்ணு மாகிப் வேதியர் வாழுஞ் சேய்ஞல் 4.48.2
   | 
468 | எண்ணுடை இருக்கு மாகி  | பண்ணொடு பாடல் தன்னைப் கண்ணொரு நெற்றி யாகிக் பெண்ணொரு பாக மாகிப் 4.48.3
   | 
469 |  அண்டமார் அமரர் கோமான்  | கொண்டவன் குறிப்பி னாலே கண்டவன் தாதை பாய்வான் தண்டியார்க் கருள்கள் செய்த 4.48.4
   | 
470 |  சிந்தையுந் தெளிவு மாகித்  | வந்தநற் பயனு மாகி மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த அந்தமோ டளவி லாத 4.48.5
   | 
471 |  வன்னிவா ளரவு மத்தம்  | மின்னிய உருவாஞ் சோதி கன்னியோர் பாக மாகிக் இன்னிசை தொண்டர் பாட 4.48.6
   | 
472 |  உள்ளுமாய்ப் புறமு மாகி  | வெள்ளமாய்க் கரையு மாகி கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் அள்ளுவார்க் கள்ளல் செய்திட் 4.48.7
   | 
473 |  மயக்கமாய்த் தெளிவு மாகி  | தியக்கமாய் ஒருக்க மாகிச் இயக்கமாய் இறுதி யாகி அயக்கமாய் அடக்க மாய 4.48.8
   | 
474 |  ஆரழல் உருவ மாகி  | பேரொளி உருவி னானைப் சீரவை பரவி யேத்திச் பேரருள் அருளிச் செய்வார் 4.48.9
   | 
475 |  திண்டிறல் அரக்க னோடிச்  | எண்டிறல் இலனு மாகி விண்டிறல் நெறிய வூன்றி பண்டிறல் கேட்டு கந்த 4.48.10
 |  | 
| 476 | 
    ஆதியிற் பிரம னார்தாம்  ஓதிய வேத நாவர் சோதியுட் சுடராய்த் தோன்றிச் கோதிவண் டறையுஞ் சோலைக் 4.49.1 |  | 477 |  நீற்றினை நிறையப் பூசி  ஆற்றுநீர் பூரித் தாட்டும் சாற்றுநாள் அற்ற தென்று கூற்றினைக் குமைப்பர் போலுங் 4.49.2
   | 
478 |  தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த்  | அழைத்தங்கே ஆவின் பாலைக் பிழைத்ததன் றாதை தாளைப் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் 4.49.3
   | 
479 |  சிலந்தியும் ஆனைக் காவிற்  | உலந்தவண் இறந்த போதே கலந்தநீர்க் காவி ரிசூழ் குலந்தனிற் பிறப்பித் திட்டார் 4.49.4
   | 
480 |  ஏறுடன் ஏழ டர்த்தான்  | ஆறுடைச் சடையி னானை வேறுமோர் பூக்கு றைய கூறுமோர் ஆழி ஈந்தார் 4.49.5
   | 
481 |  கல்லினால் எறிந்து கஞ்சி  | நெல்லினார் சோறு ணாமே எல்லியாங் கெரிகை ஏந்தி கொல்லியாம் பண்ணு கந்தார் 4.49.6
   | 
482 |  காப்பதோர் வில்லும் அம்புங்  | தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தீப்பெருங் கண்கள் செய்யக் கோப்பதும் பற்றிக் கொண்டார் 4.49.7
   | 
483 |  நிறைமறைக் காடு தன்னில்  | கறைநிறத் தெலிதன் மூக்குச் நிறைகடல் மண்ணும் விண்ணும் குறைவறக் கொடுப்பர் போலுங் 4.49.8
   | 
484 |  அணங்குமை பாக மாக  | வணங்குவார் இடர்கள் தீர்க்கும் கணம்புல்லர்க் கருள்கள் செய்து குணங்களைக் கொடுப்பர் போலுங் 4.49.9
   | 
485 |  எடுத்தனன் எழிற் கயிலை  | அடுத்தொரு விரலால் ஊன்ற விடுத்தனன் கைந ரம்பால் கொடுத்தனர் கொற்ற வாணாள் 4.49.10
 |  | 
| 486 | 
நெடியமால் பிரம னோடு  அடியொடு முடியுங் காணார் துடியுடை வேட ராகித் கொடிநெடுந் தேர்கொ டுத்தார் 4.50.1 |  | 487 | ஆத்தமாம் அயனு மாலும்  சோத்தமெம் பெருமான் என்று தீர்த்தமாம் அட்ட மிமுன் கூத்தராய் வீதி போந்தார் 4.50.2
   | 
 | இப்பதிகத்தில் ஏனைய செய்யுட்கள் சிதைவுற்றன.           | 4.50.3-10
 |  |