pm logo

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 18 (2237 - 2338)
திருவிடைமருதூர்த்திரிபந்தாதி.

Tiricirapuram makAvitvAn mInATci cuntaram piLLaiyin
pirapantat tiraTTu - part 18 (verses 2237 - 2338)
tiruviTaimarutUrtttiripantAti
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the following persons for their assistance in the preparation of this work.
Thanks go to Dr. Thomas Malten of the Univ. of Koeln, Germany for providing us with a photocopy of the work.
This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
S.Karthikeyan, V. Devarajan, Govindarajan and V.S. Kannan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
This webpage was placed online first on 9 May 2007.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

திருவாவடுதுறை ஆதீனத்து மஹாவித்வான்
திரிசிபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின்
"பிரபந்தத்திரட்டு" - பகுதி 18 (2237 - 2338)
திருவிடைமருதூர்த்திரிபந்தாதி.


உ - கணபதி துணை.
திருச்சிற்றம்பலம்.

காப்பு.


2237       ஆண்டவிநாயகர்துதி.
சிதவாரணங்குமுறுந்துறைமூழ்கித்திருமறையோ
ரிதவாரணங்குலவச்செய்யிடைமருதீசனென்றோ
மதவாரணங்குமுலைபாகற்பாடுதற்காண்டபெரு
மதவாரணங்குவலயங்கொண்டாடும்வரந்தருமே.       1

2238       குருவணக்கம்.
பெரும்புங்கவர்புகழ்கோமுத்திவாழ்சுப்பிரமணிய
வரும்புங்கவன்பதம்யான்றொழவென்கையருட்குறியொன்
றிரும்புங்கரையவெடுத்தளித்தானதையேத்தல்செய்வேன்
கரும்புங்கனியுமெனவன்புசாருங்கதியுமுண்டே.       2

நூல்.

2239
திருவருந்தாமரைமேலாருமாயசிறப்பினர்க
ளிருவருந்தாமரைநாட்டேடிக்காண்பிலிடைமருத
வொருவருந்தாமரைபோலுழலாமலுவந்தெனையா
டருவருந்தாமரைவேண்டேனிதரசமையத்தரே.       1

2240
சமையத்தவரையிகழாந்தற்போதந்தடிந்துசெம்பொ
னிமையத்தவரையெடுத்தவிடைமருதீச்சுரரை
யுமையத்தவரையரையோர்ந்துதம்மையுமோர்ந்தருள்பெற்
றமையத்தவரையடிமலர்தாழ்ந்துள்ளடங்குறினே.       2

2241
அடக்கந்தரத்தரைமேற்பயிலாமன்பருளடையா
மடக்கந்தரத்தரையென்றாழிநல்கவருகொடிய
விடக்கந்தரத்தரைமேவிடைமாமருதூரின்மென்புற்
றடக்கந்தரத்தரையெவ்வாறுநாஞ்சென்றுசார்வதுவே.       3

2242
சாராததென்னைதமைவிழைந்தாரைவிண்டாங்குதலிற்
சோராததென்னையிடைமருதீசர்தந்தூமனமு
மோராததென்னையொருவேள்சமருமுடற்றியென்றுந்
தீராததென்னைதரக்கரம்வீசுறுந்திங்கள்வந்தே.       4

2243
வந்தித்தவரையயன்மால்வந்திக்கவிண்வைப்பவரைச்
சிந்தித்தவரையிடைமருதீரென்றுந்தீயமதின்
முந்தித்தவரையெடுத்தீரென்றுந்திண்ணர்மொய்செருப்புக்
கந்தித்தவரையுடையீரென்றுஞ்சொலக்கற்றனமே.       5

2244
கற்றனமாலையிடைமருதூரரைக்கம்பவென்று
முற்றனமாலைவயலாருங்கோமுத்தியும்பவென்றுஞ்
சொற்றனமாலைமின்னாரம்பராயென்றுஞ்சொற்றிடநாண்
விற்றனமாலையிராவதவாழ்க்கையும்வேண்டலமே.       6

2245
வேண்டாதவரைவிழையாதவரைவிழைந்தெனுள்ளத்
தீண்டாதவரையிடைமருதீசரையென்றுமன்பே
பூண்டாதவரையரையரையக்கரைப்போந்துகொடி
தீண்டாதவரையுறைவாரையன்றியொர்தெய்வமுண்டே.       7

2246
உண்டலங்காரவன்னாயாயத்தாரொடுமுற்றுச்செய்த
வண்டலங்காரவுற்றேனென்றுகூறியொர்மாரனொப்பா
னெண்டலங்காரமனையாரிடைமருதீசர்க்கொல்லாக்
கண்டலங்காரகனைப்போற்பறித்திவள்கைத்தந்ததே.       8

2247
தந்தவளக்கரிகொங்கையொண்பாம்பல்குல்சங்கங்கள
நந்தவளக்கரியன்றுதருநஞ்சநாட்டமிய
லந்தவளக்கரியான்கோலமாகியறமுயன்று
முந்தவளக்கரியானிடைமாமருதூர்முதலே.       9

2248
முதலைப்பரவைதருநஞ்சமுண்டமுதல்வமண
மதலைப்பரவையிடைமருதூரவிண்வாழ்க்கைபெற்ற
சிதலைப்பரவையகந்தாழ்வன்மீகசிறியனென்றும்
விதலைப்பரவையழுந்தாதுகாத்தலுன்மெய்யருளே.       10

2249
மெய்யருளத்தனைநண்மருதூரனைவீணர்க்கெல்லாம்
பொய்யருளத்தனையீயானைமாரிப்புயல்சமழ்க்கப்
பெய்யருளத்தனையும்முடையானைப்பெரிதெண்ணினோஞ்
செய்யருளத்தனையாறாறுந்தீர்த்தருடேவனென்றே.       11

2250
தேவவருக்கம்பணிவானயனரிதீர்தருநாண்
மேவவருக்கவெலும்பணிவான்விழைகங்கைமங்கை
நோவவருக்கஞ்சடையேற்றினானன்னுதல்வதன
மேவவருக்கன்மதியழலான்வைப்பிடைமருதே.       12

2251
மருதவனத்தனிடைமுதலாங்கடைமன்னியவுள்
கருதவனத்தனரிமுதலோருங்கழிந்தபெரு
விருதவனத்தன்விண்மண்முடிந்தாலும்விளங்கவனெற்
கொருதவனத்தன்மையனெனவோதுமெம்மொண்ணுதலே.       13

2252
ஒண்ணுதலானைகரந்தீர்ந்தவர்க்கொளியைப்புரவு
பண்ணுதலானையுகைப்பானைத்தன்னுருப்பற்றுருவென்
றெண்ணுதலானையெனையாண்டவனையிடைமருதூர்க்
கண்ணுதலானைக்கருதார்பிறப்பிற்கரங்கணன்றே.       14

2253
கரமனகத்தையுறுநாயுமற்றொளிகால்கனக
வாமனகத்தைவளைத்தபிரானிடைமாமருதப்
புரமனகத்தையலர்பணிபூண்டுழல்புன்மையரப்
பரமனகத்தைமுழக்காரடைந்தபவத்தினுமே.       15

2254
பவம்பலவாயினுமாகவெனக்குவிண்பற்றுகன
கவம்பலவாயினுநல்லவகற்றுவல்லாமுருடர்க்
குவம்பலவாயினுந்தீதில்லிடைமருதூர்குறுகுந்
தவம்பலவாயினுமென்றொருஞானந்தலைப்படினே.       16

2255
தலையுமடியுமிசைகிழக்கார்பியறாங்கப்பெற்றே
அலையுமடியுமதளாரிடைமருதார்நமனார்
குலையுமடியுமென்னாதருள்வார்நஞ்சுகொண்டிலரே
னிலையுமடியும்படைப்புமடியுநெடுநிலத்தே.       17

2256
நிலங்காவலவென்றுமேதக்கவதமிழ்நேயத்தின்மிக்
கலங்காவலவென்றுபோலொளிர்வாய்கவியாய்கொடையின்
மலங்காவலவென்றுபாடாமலேயிடைமாமருதூர்த்
தலங்காவலவென்றுமுள்ளாயென்றீசனைச்சார்மின்களே.       18

2257
சாரலங்கற்றைநினைந்துசெலாவெனத்தானங்கிழி
வேரலங்கற்றையொளிக்கயிலாயத்தும்வேட்கைமிக
வாரலங்கற்றையலாள்பாகன்வாழ்மத்தியார்ச்சுனத்தை
யோரலங்கற்றையையோவறிதேபொழுதோட்டுவமே.       19

2258
ஒடுங்கனகமுமொன்றார்கொண்மன்றுமுபரிகையென்
றாடுங்கனகமுஞ்சேரிடைமாமருதூரண்ணலைப்
பாடுங்கனகமுமுண்டாகுமின்பப்பயனென்பது
நீடுங்கனகமுமொவ்வாவருள்வந்துநேர்நிற்குமே.       20

2259
நிற்குநடக்குமிருக்குநின்னாடனெறியனைத்துங்
கற்குநடக்கும்படியெவனென்றுகருதியுள்ளத்
தற்குநடக்குமிடைமருதூரவத்தாணியிருப்
பிற்குநடக்குமுலாவிற்குங்காமுற்றவென்மயிலே.       21

2260
என்னாவியன்னமணிமிடற்றானையிமையவர்தோய்
துன்னாவியன்னமலியிடைமாமருதூரனைச்சொ
னன்னாவியன்னமவென்குழல்பாகனைநாடினர்போன்
மன்னாவியன்னமடமாதர்மேவுமிவ்வைகலிலே.       22

2261
வையம்பரவவிடைமருதூர்வதிவார்வரைவாய்க்
கையம்பரவமெனக்கொடுவேடர்கலப்பருள
நையம்பரவலரிப்பானிற்பானெனினண்ணவனு
தையம்பரவவருதியித்தானந்தராதிபனே.       23

2262
தரங்கந்தருவல்விடமூணிடைமுதல்சார்மருதே
புரங்கந்தருவமறையுடைதோறில்லங்காடுபொலி
யரங்கந்தருவமைவாழ்க்கையர்யாருமடிமையென்னிற்
றரங்கந்தருவகைசெய்யும்பிதாவிவர்செய்கைநன்றே.       24

2263
நன்றாவிருக்கினுந்தீதாவிருக்கினுநல்லருளே
யொன்றாவிருக்கினுமோராவிடைமருதூரன்செய்கை
யென்றாவிருக்கினும்பாலேயிகபரமெய்துங்குணக்
குன்றாவிருக்கினுமாலாதியரிதுகொள்வரிதே.       25

2264
அரியரவிந்தன்மகவான்முதலியரஞ்சலிக்க
வரியரவிந்தம்புனைவாரிடைமருதூரர்வரைக்
குரியரவிந்தமடவாள்பொருட்டிங்ஙனுற்றுச்சொல்லும்
பெரியரவிந்தமுயலூனுந்தேனும்பெறுகைநன்றே.       26

2265
பெற்றங்குலவவிடைமருதீசர்பிறங்குமறு
குற்றங்குலவக்கரங்குவித்தாளிவ்வொருபிழைக்காச்
சுற்றங்குலவமடமாதரம்பறுணியப்பொன்செ
யிற்றங்குலவவெளிப்பட்டுளாளென்னிளங்கொடியே.       27

2266
இளங்கொடியானவுமைபாகன்வாழுமிடைமருத
வளங்கொடியானஞ்செயேன்பூசநீர்த்துறைவாஞ்சைவையேன்
களங்கொடியானலைவேனையையோவென்னகன்மந்திரு
வுளங்கொடியானனினைத்ததென்னோவொன்றுமோர்கிலனே.       28

2267
ஓராதவனையிருட்புகுத்தானையுணர்தலில்லார்ச்
சாராதவனையொருபாகனைத்தங்கிடைமருதம்
பேராதவனைப்பெயருகென்றாலுமென்பேதைநெஞ்சந்
தீராதவனைமயிலொடுவாழுந்திறனெவனே.       29

2268
திறப்பாவனையமனமோரணுத்துணைசெப்பலென்ன
மறப்பாவனையமனமிலையோவிடைமாமருதுஞ்
சிறப்பாவனையமருதருந்தேவியுந்தேவிடையு
மறப்பாவனையக்கொடுவைகலென்னுளடக்கியதே.       30

2269
அடத்தருமன்றண்டங்கொண்டமராற்றியலக்கணைந்தும்
விடத்தருமன்றண்டங்கொண்டாடவந்துவிலக்குதுயில்
வடத்தருமன்றண்டமென்னிடைமாமருதூரவின்னு
நடத்தருமன்றண்டவுஞ்செய்யவேண்டுமிந்நாயினையே.       31

2270
நாயகத்தன்மைகொளச்சிலர்நாணிலர்ஞாலமுற்று
மேயகத்தன்மைவிழியொருபாகனிடைமருத
னாயகத்தன்மைவிளக்கவிரங்கியரியகண்ட
வாயகத்தன்மையுறநஞ்சங்கொண்டவலிகண்டுமே.       32

2271
கண்டனங்கோலம்வருமாமுயல்வுங்கண்டங்கறுப்பும்
பெண்டனங்கோலமெய்வாழ்வுந்தலைப்பெருக்கத்தொடையு
முண்டனங்கோலமடமாரிடைமருதூருறையு
மண்டனங்கோலமலையானுமூவருளண்டனன்றே.       33

2272
அண்டத்திருப்புநரலையிலாகியடர்ந்தவிடங்
கண்டத்திருப்புமண்ணாதியபூதங்கலங்கிலய
மண்டத்திருப்புவதுசூலமேனண்மருதர்மதித்
துண்டத்திருப்புவனமான்றவனைத்துணைபவரே.       34

2273
துணைத்ததனத்தியொருபாகர்மாண்டுதொலைந்ததன்னோ
பணைத்ததனத்தியெனான்வாள்கொடுத்தவன்பால்விருப்ப
ரணைத்ததனத்திரளென்னாவியார்நண்மருதரவா
வுணைத்ததனத்தினுழலாதருளெற்குதவுவரே.       35

2274
உதவாதவரையுபகாரரொன்றுங்கல்லாதவரு
சிதவாதவரைவெலுங்குரவோரெனவேத்திறந்த
புதவாதவரைப்புகழாநும்வாயிதுபோக்கியொரீஇ
மதவாதவரையிடைமருதூரரைவாழ்த்துமினே.       36

2275
வாழ்த்தாதவாயுமிடைமருதூரர்மலரடிப்பாற்
றாழ்த்தாதவாயுந்தலையுமுன்னாத்தனிநெஞ்சுந்தள்ளு
மூழ்த்தாதவாயுமறுப்பாங்குணமுமுலகத்தில்லாப்
பாழ்த்தாதவாயுமெனக்கேபிரமன்படைத்தனனே.       37

2276
படைப்பருந்தானையிடைமருதூரர்பதம்பணியார்
கிடைப்பருந்தானைசிதராகக்கொண்டுகெழுமுசெல்வப்
புடைப்பருந்தானையர்வீடுகடோறும்புக்குண்டுபுலான்
முடைப்பருந்தானையுடம்போம்பிநிந்தைமொழிகுவரே.       38

2277
மொழிவருங்கூற்றநல்லார்தமைப்பேசிமுனிந்துசினங்
கொழிவருங்கூற்றமுமெண்ணார்பரரிற்குறுகியுண்டே
யிழிவருங்கூற்றமுமில்லாரிடைமருதீசனெந்தைக்
கொழிவருங்கூற்றமுதனீள்கருணைபெற்றுய்வதென்றே.       39

2278
என்றுவருந்துமதுதீர்ந்தின்பெய்தியிருப்பன்மிளிர்
மின்றுவருந்துதிவேணியிடைமருதூரன்விடைக்
குன்றுவருந்துகளிலானடியர்குழாங்குறுகி
நன்றுவருந்துபணியாற்றியுள்ளநலமடைந்தே.       40

2279
நல்லங்கமலைசிராப்பள்ளிகாஞ்சிநணாகுடந்தை
வல்லங்கமலைவயற்றில்லைவாழிடைமாமருதூர்
சொல்லங்கமலைபவரெற்றுறைசையிலாண்டிலரே
லொல்லங்கமலைவறக்கோடிகொள்ளினுமுய்தியுண்டே.       41

2280
உய்தியவாயகுணமேலிடைமருதூர்ப்பரனை
எய்தியவாயவொருநானடைந்தனனென்றிருத்தல்
செய்தியவாயடையாத்தெருச்சூழ்ந்துதெரிசிமலர்
கொய்தியவாயமலன்றாள்புனைந்துகொண்டாடுநெஞ்சே.       42

2281
ஆட்டிற்குவந்தவிதியெவனோவன்றியானைகொன்றான்
றோட்டிற்குவந்தமுறினுமறாநசைதோன்றவெறி
நாட்டிற்குவந்தமையும்மன்றிலேறனகைதருமென்
பாட்டிற்குவந்தவிடைமருதூரன்பனிவரைக்கே.       43

2282
வரையாதவரைமகட்பேசல்வேட்டுவருகுநருக்
குரையாதவரைமறுத்தலொல்லாதின்னுமுத்தமர்க்குக்
கரையாதவரையிருட்கரவொத்திடுங்காவலபொன்
னரையாதவரையிடைமருதூரரணிவரைக்கே.       44

2283
அணியாமருவியிடைமருதீசரமர்ந்தருளு
மணியாமருவிவழங்குங்குற்றாலவரைக்கணன்றித்
தணியாமருவியனாரமெங்குண்டுதரிற்கவரேங்
கணியாமருவியவாமருதாயிற்கவருதுமே.       45

2284
கவராததில்லைகடவுளரேனுமென்கையதிதற்
குவராததில்லையுளாருட்டுறவுளைலைகுறிகொள்
ளவராததில்லையுளேன்கொளல்வேண்டுமென்னாரணங்கே
யுவராததில்லையிடைமருதீசனொருவரைக்கே.       46

2285
ஒருவரையூழியங்காதுசெய்வான்கொலுளங்குறித்தல்
மருவரையூழியலர்தரச்சூழிடைமாமருதூ
ரிருவரையூழியராக்கொளுமீசனிறையவன
கருவரையூழியளவும்வசைக்கதிர்வேலருக்கே.       47

2286
வேலவன்றந்தையிடைமருதீசன்விரிந்தமறை
நாலவன்றந்தையுறழிடைபாகன்வெந்நஞ்சங்கண்டு
மாலவன்றந்தையறவுண்டுமாலவன்வாழச்செய்தான்
மூலவன்றந்தையெனக்குபதேசமொழிந்தனனே.       48

2287
மொழிமனங்காயமைதீர்தரநண்ணுபுமொய்த்தவலஞ்
சுழிமனங்காயமைமெய்பாதியென்றவன்சொற்றநன்னூல்
வழிமனங்காயமைதுஞ்சில்லிடைமருதூர்வசிப்பாங்
கழிமனங்காயமைசாராதுமுத்திகலப்புறுமே.       49

2288
கலந்தநலாரையிகழ்வார்வெம்போலிக்கவிபுகழ்வார்
குலந்தநலாரைப்பரர்கொளவேங்கிமெய்திகூசிச்சில
ரலந்தநலாரையிடைமருதூரிலடைந்திறைஞ்சா
துலந்தநலாரையவிப்பாரிலுண்டுண்டுழலுவரே.       50

2289
வரந்தந்தவரைபெறநாவல்வாய்வழங்கிச்சிலம்பிக்
குரந்தந்தவரையிடைமருதீசரையுன்னினர்போற்
சுரந்தந்தவரைவனந்தந்தமாந்தழைதூமொழிக்கா
யிரந்தந்தவரைதெனவரைகாறுமிலங்கியதே.       51

2290
இலங்கியவேதமுதனடுவீற்றுமிடைமருதுந்
துலங்கியவேதம்பலத்தொளிமுத்தலைத்தூக்கிரிவாய்க்
கலங்கியவேதநடுவந்தயானைகடிந்தவர்க்கோ
மலங்கியவேதமுகிலினின்றார்க்குமணமுரசே.       52

2291
மணமதலையுமரவுமுள்ளானிடைமாமருதூர்க்
கணமதலையும்பவந்தீர்க்கவைகுமுக்கட்கடவுள்
குணமதலையும்பலுஞ்சேயுமாகக்கொண்டான்மிடற்று
வணமதலையுந்தலின்றேலின்றாகுவர்மாலயனே.       53

2292
அயனாகமஞ்சுநிகர்மேனிமாயவனாகமற்று
மியனாகமஞ்சுபடையானுமாகவிடைமருது
தயனாகமஞ்சுபெறத்துதித்துப்பணிந்தேதழைந்தார்
வியனாகமஞ்சுகுணத்தாய்ந்துவேண்டிலர்வீணர்களே.       54

2293
வீணாவுடலமெடுத்தனன்யான்பெருவிண்ணவர்த
மேணாவுடலமிடைமருதீசரிகலினர்போற்
கோணாவுடலமதன்வருவான்மணிகொண்டலைக்கும்
பூணாவுடலமளியிற்றுயிலும்பொருந்திலதே.       55

2294
பொருந்தாதவரைதெனவாழ்புரமடுபுண்ணியர்நன்
கிருந்தாதவரைப்புரப்பாரிடைமருதூரிலிரு
ளருந்தாதவரைநிகர்வார்நந்துன்பமறிந்திலரால்
திருந்தாதவரைகொல்லோவவர்திண்ணியசிந்தனையே.       56

2295
சிந்தனையாதும்வறிதுசெலாமற்செலுத்திநமன்
வந்தனையாதுநரகதுதானென்முன்வாய்நிரம்பக்
கந்தனையாதுதிநண்மருதூரவெனக்கலப்பிற்
பந்தனையாதுவிடுமோவிடாதவிப்பாரகத்தே.       57

2296
பாராதரித்தவிடைமருதூரற்குப்பாரகமே
தேராதரித்தகலமரவாசெழுந்திங்களொடு
நீராதரித்தசடைமேலிருப்பென்றுநெட்டுயிர்ப்பாள்
பேராதரித்ததுயரமெஞ்ஞான்றிவள்பேர்ப்பதுவே.       58

2297
பேர்ப்பதுமத்தவிடைமருதூர்நல்குபெற்றியும்வெள்
ளேர்ப்பதுமத்தவருக்குமலமருளேனுமையர்
போர்ப்பதுமத்தகரித்தோலுடைபுலித்தோறெரிந்தும்
வார்ப்பதுமத்தவளைநிகர்வாள்பெருமால்கொளுமே.       59

2298
பெருமாலையனையிடைமருதூர்க்குடிபேணுங்கொன்றைத்
திருமாலையனையெண்ணாதவர்செல்லுஞ்செலவிற்செல்வி
கருமாலையனைவருநீப்பவேதிலொர்காளைபின்செ
றருமாலையனைவிலையைகொள்வெய்யதனியிடமே.       60

2299
இடந்தந்தவளைநெடுமான்முயன்றுமெய்தாக்கழற்கீழ்க்
கிடந்தந்தவளையிடைமருதூர்கெழுமிற்கிடைக்கு
நடந்தந்தவளைவுடனேயணுகுநமனகலு
மடந்தந்தவளையனமுண்டெம்மானைவழுத்துதுமே.       61

2300
வழுத்துப்படருமிடைமருதூர்வதிவான்முளைமேற்
கொழுத்துப்படரும்வரலருங்கூற்றங்கொன்றானருளாம்
விழுத்துப்படரும்பெரியானவன்புகழ்மெய்யன் றியோர்
எழுத்துப்படருமதிப்புமுண்டாகுங்கொலெங்களுக்கே.       62

2301
எங்கடந்தேயவனிதாழிடைமருதெவ்வகைத்தன்
மங்கடந்தேயவழிமல்கவைகும்வல்லானணிற்கோ
பங்கடந்தேயவ்வினுண்மையுமோர்ந்துபகருமலச்
சங்கடந்தேயவொன்றாதொன்றுமுத்திதலைப்படுமே.       63

2302
படமாசுணத்தையணிவாரிடைமருதிற்பயில்வார்
திடமாசுணத்தையலர்பாற்பயிக்கஞ்சென்றார்தயிர்பாற்
குடமாசுணத்தையெடுத்தாட்டவாடுங்குழகருணா
விடமாசுணத்தையமைகுழையேலிவர்மேன்மையென்னே.       64

2303
என்னாயகனையிடைமருதானையிமையவர்க்கு
முன்னாயகனைகடனஞ்சமுண்டமுதலவனை
மன்னாயகனையவாங்கியவாவென்றுன்மாண்புதபத்
துன்னாயகனைதருமலமாசுந்துணிதருமே.       65

2304
துணிந்தாரையன்றிகழுங்கூடற்சோதிபொற்றூயமுடிக்
கணிந்தாரையன்றினரூரெரித்தான்கஞ்சக்கண்ணிற்றம்மை
யணிந்தாரையன்றிகிரியான்றெழுநண்மருதடைந்து
பணிந்தாரையன்றியெவர்காணுயர்வுபடைத்தவரே.       66

2305
படைத்தவராகமுழுதும்பசலைபகலருங்கே
ளுடைத்தவராகமுடையவராகவுஞற்றுங்கொலோ
புடைத்தவராகந்தொழுமிடைமாமருதூரர்பொற்றா
ளிடைத்தவராகப்பணிந்தேத்தெடுப்பினல்வேத்தலொன்றே       67

2306
ஒன்றியம்பக்கவர்பாங்கவிடைமருதூரர்வெற்பே
நன்றியம்பக்கமயிலிடமாமியனஞ்சநமன்
வென்றியம்பக்கமனைதுறவேகொங்கைமென்மருங்கு
லென்றியம்பக்ககுடும்பசந்நியாசமிருட்கதிரே.       68

2307
கதிரங்கதிர்க்கும்பருப்பதத்தான்றிருக்காளத்தியா
னதிரங்கதிர்க்குமிடைமருதூரனடிகட்கன்பு
பிதிரங்கதிர்க்குமுனமிருளாநம்பிணியைச்செய்தா
முதிரங்கதிர்க்குமுடம்பிலினிக்குறையொன்றிலையே.       69

2308
இலைமலருமிடைமருதூரரையெய்தியங்கைத்
தலையுமலரும்பணியென்றுகொண்டுதவாதிறைப்பா
முலையுமலருநலராவர்கூற்றமுடன்றுவிடு
நிலையுமலருமுறலாவரியாவுநிரம்பிடுமே.       70

2309
நிரம்பாசமன்றுகுறுமூரலான்மதினீறுசெய்தார்
திரம்பாசமன்றுபெற்றாயென்றுதீர்த்தருள்செல்வர்வறுங்
கரம்பாசமன்றுகொளாவிடைமாமருதூரிடையா
யிரம்பாசமன்றுகளிலாநின்மெய்யுறுப்பியாவையுமே.       71

2310
யாவருமங்கைகுவிக்கவிடைமருதின்னமர்வார்
தேவருமங்கையருமாடுகாளத்தித்தெண்சுனைவாய்
மேவருமங்கைதெனத்தோன்றியீர்த்துவெளிவிடுத்தார்
தாவருமங்கைத்தவராயிவளுய்தரற்பொருட்டே.       72

2311
தரங்கந்தரங்கவெழுவிடமூண்சலசத்தவன்மா
லிரங்கந்தரங்கப்பெருந்தானந்தில்லையிடைமருதே
புரங்கந்தரங்கற்றமாதவர்வாழ்பொருப்புக்கயிலை
திரங்கந்தரங்கடுப்பாள்பாதியாளெங்கள்செல்வனுக்கே.       73

2312
செல்லத்தனையுமிவர்மாடத்தில்லைச்சிவக்கொழுந்தை
வில்லத்தனையுமணியரவத்துவிளங்கியைமால்
பல்லத்தனையுந்திடைமருதப்பைங்கிளியையன்றி
நல்லத்தனையுமனையையுந்தேர்கிலநானிலத்தே.       74

2313
நிலாவையரவைமுடிக்கணிந்தார்நிகழ்சேரரரு
ளுலாவையரவைவியக்கும்புலமையரொண்மைவிழாக்
குலாவையரவைகிடைமருதூர்க்குறியைக்குணம
கலாவையரவையமாதேவகாவெனக்கற்றனமே.       75

2314
கற்றவருக்கங்கலவேனென்புன்சொலுங்கைக்கொளுவா
னற்றவருக்கங்கமோதியிடைமருதூரைநண்ண
லுற்றவருக்கங்குமுன்னிற்பவனிமையோர்க்கிறைவன்
வெற்றவருக்கமதலையிற்சூடும்விதியெண்ணினே.       76

2315
எண்ணத்திருந்தவிடைமருதூரெய்தியெல்லைதொழா
வெண்ணத்திருந்தகரத்தேக்கரனைவிரிந்தமனங்
கண்ணத்திருந்தவடியேன்பெற்றேன்கைவிடினுடனே
நண்ணத்திருந்தவறேலென்பன்யானுநலமுறவே.       77

2316
உறவனிகலனெனறவக்கூறதையுள்ளங்கொள்ளேன்
மறவனிகலனென்றோதுவரேயிடைமாமருத
லறவனிகலனரிசெய்தகோனடிக்கன்புறினப்
புலவனிகலனெனநினையாள்வன்பொறுப்புவைத்தே.       78

2317
பொறுத்தவளகத்தடமாரிடைமருதிற்புலிடை
சிறுத்தவளகத்திற்றேசாஞ்சிவன்பொற்சிலம்பிலிலா
மறுத்தவளகலைமாமதியுப்பக்கமன்னவென்பாற்
கறுத்தவளகத்திருள்வந்துகூடலென்காரிகையே.       79

2318
காரம்பரந்தவழாநிற்குங்கொன்றைகஞலியபூ
ணாரம்பரந்தமுலையாயினும்வந்தடைந்திலரே
சீரம்பரந்தவிடைமருதூருறைசெல்வரெங்க
ளேரம்பரந்தமுறாத்தந்தையார்வெற்பிறையவரே.       80

2319
இறையவனையிடைமாமருதூரனையேய்ந்தசெம்பட்
டுறையவனையிடையாளொருபாகனையொண்முழக்க
நிறையவனையிடையாரணமார்தில்லைநேயனைநான்
மறையவனையிடையாதேழ்பிறப்பும்வணங்குதுமே.       81

2320
வண்டாரவாயைந்தருநிதிதேனுவுமானுங்கொல்லோ
வண்டாரவாயைதெனவடையாத்தில்லையாளியின்சொ
லொண்டாரவாயைமணந்திடைமாமருதூரினல்கும்
பண்டாரவாயைத்தகர்த்தானதுவுநம்பாக்கியமே.       82

2321
பாக்கியமாவதுவேறிலையென்றுபகரச்சொற்றேன்
வாக்கியமாவதுவையாள்பெருநலமாமுலையே
தேக்கியமாவதுசூழ்மத்தியார்ச்சுனஞ்சேருமிடம்
யோக்கியமாவதுலாவென்றுசேர்மினொருவனையே.       83

2322
ஒருவனையாறுவிழைவான்பிறரையுறாதபெருந்
திருவனையாறுதவிர்மத்தியார்க்கனத்தேனனுரு
வருளனையாறுமையாறுமெட்டானனைத்துக்கொள்பெருங்
கருவனையாறுசெயக்காப்பிவனன்றிக்காப்பிலையே.       84

2323
காமாவகலவரிநீயினிதென்றுங்கஞ்சனெனு
நாமாவகலப்புவியளப்பாயென்றுநல்கியபூந்
தேமாவகலவிடைமருதாவென்றுசிந்தைசெயி
னாமாவகலறுணிவன்றிக்கூற்றமடைவதற்கே.       85

2324
அடையம்புயனைத்திருமாலைப்பாங்கரமைத்தகொன்றை
மிடையம்புயனையிடைமருதூரனைமேவுகிலா
ருடையம்புயனைகருமேனிக்கூற்றமுற்றாலதற்குக்
கடையம்புயனைதருமானமானிற்கலங்குவரே.       86

2325
கலங்கச்சினந்துநமன்றூதர்வந்தெனைக்கைக்கொளுங்கால்
விலங்கச்சினந்துமுதலியமார்ப்பவிடையில்வம்மோ
பலங்கச்சினந்துவர்முற்பூண்முலையொருபாகவலி
வலங்கச்சினந்துதியாரிடைமாமருதூர்வள்ளலே.       87

2326
வள்ளலைக்குங்குமக்கொங்கையள்பாகனைவாவியன்னப்
புள்ளலைக்குங்குலநீரிடைமாமருதூர்புகுந்தே
யுள்ளலைக்குங்குலுவொப்பப்புகையொழியாவின்பென
விள்ளலைக்குங்குவலாற்றருமோரிடம்வேறிலையே.       88

2327
வேறாகவந்தநமன்கூற்றுவாவில்லவாவளவா
வாறாகவந்தமடித்தான்றொழுமிடைமாமருதூர்ப்
பேறாகவந்தமுழுதும்பசுபதிபேணொருநீ
கூறாகவந்தவிரார்சிலமூடக்குருடர்களே.       89

2328
குருக்கத்திமாலைக்குழலாளிடைமருதூர்குறுகி
வெருக்கத்திமாலையுறநீள்விழியுறக்கண்டனளாந்
திருக்கத்திமாலையிராவதமஞ்சச்செயிர்த்தவரைப்
பெருக்கத்திமாலைவருமுனமார்த்துப்பிறங்கிடுமே.       90

2329
பிறங்கும்பரவையனலினுந்தோன்றுபெருவிடத்தா
லுறங்கும்பரவைபுரந்தானிடைமருதூரன்கலாத்
திறங்கும்பரவைமனைநடந்தானருளேய்ந்திலமேற்
கறங்கும்பரவையமேற்போஞ்சகடமுங்காண்பிறப்பே.       91

2330
பிறவானவரையிடைமருதூர்க்கன்புபேணலின்றி
யுறவானவரைவெண்ணீற்றினிலாசையொருங்கவிக்குந்
துறவானவரைமறந்தொழியாதுள்ளஞ்சூழுவனே
லறவானவரையுகைப்பார்க்கடிமையலனலனே.       92

2331
அல்லையப்பகமற்றோர்நான்குமற்றுனையாருணர்வார்
நெல்லய்ப்பாகமழ்முல்லையப்பாதில்லைநேயவப்பா
சொல்லையப்பாகமுறாவெனுலாவுங்கொடூயவகல்
வில்லையப்பாகவமாலாவிடைமருதூர்விளக்கே.       93

2332
விளங்கவிதனையுணர்நெஞ்சமேசற்றுமெய்ம்மையிலே
னிளங்கவிதனையுமேற்றபிரானிடைமாமருதத்
துளங்கவிதனையுமீவானவன்பாலுமைமலத்து
களங்கவிதனையுநீங்காதுகாக்குங்கருணையளே.       94

2333
கரியவரையைச்சுவணவரையைமெய்க்கண்ணிருத்தும்
பெரியவரையையொருபாகர்பேணுமிடைமருதந்
தெரியவரையைமுறிநமன்சேர்கிலன்செய்சினமும்
பொரியவரையைக்கடவானுமாவனிப்பூதலத்தே.       95

2334
பூத்தமருந்துதிசாலிடைமாமருதம்புகழேஞ்
சோத்தமருந்துதியென்னுமைபாதந்தொழுதுருகி
யேத்தமருந்துதிவாவுமிரவுமென்றெம்பரன்சீர்
யாத்தமருந்துதியென்னாமற்கூற்றமறைந்திலமே.       96

2335
அறையாகமனமமைந்ததெனக்கதனாலருளு
மறையாகமனந்தவோராதுபின்னும்வயங்குபத்தி
முறையாகமனல்லறிவாமுளைத்திடுமாவடுதண்
டுறையாகமனவிடைமருதூருறைசுந்தரனே.       97

2336
சுந்தரநந்தமிடைமருதார்தந்தைதூயரென்று
கந்தரநந்தந்தரஞ்சொலப்பெற்றகருணையினா
ரந்தரநந்தவிடமுண்டுளாரருள்வார்மலமா
செந்தரநந்தவுயர்சிவலோகமதெய்துவமே.       98

2337
துவரவலஞ்சுழியேரகமாப்பாடிசூதத்துறை
யிவரவலஞ்சுழிகோமுத்திகாழியிலங்குதில்லை
கவரவலஞ்சுழியாரூருடனிரும்பூளைகண்டீர்
குவரவலஞ்சுழிகொள்ளிடைமாமருதன்கொளலே.       99

2338
கொள்ளவரையும்படருறுத்தாதின்பங்கூட்டியதா
னள்ளவரையும்பர்மேறசெய்மகாலிங்கநாதருல
கெள்ளவரையும்பழிபாவஞ்சறறிலிடைமருதர்
தெள்ளவரையுமொண்குஞ்சிதமாயதிருவடியே.       100

திருவிடைமருதூர்த்திரிபந்தாதி முற்றிற்று.
--------

This webpage was last revised on 30 October 2021.
Feel free to send corrections and suggestions to the webmaster (pmadurai AT gmail.com).