கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பகுதி 11
6. தக்ஷ காண்டம்/ படலம் 11 - 13 (404 - 907)

kantapurANam of kAcciyappa civAccAriyAr
part 11 /canto 6 taksha kANTam (verses 404 - 907)
In tamil script, Unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Thomas Malten & colleagues of the Univ. of Koeln, Germany for providing with a transliterated/romanized version of this work and for permissions to release the Tamil script version as part of Project Madurai collections.
Our thanks also go to Shaivam.org for the help in the proof-reading of this work in the Tamil Script format.

Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2008.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய
கந்த புராணம் - பாகம் 11

6. தக்ஷ காண்டம்/ படலம் 11 - 13 (404 - 907)

11. சாலை செய் படலம் 404-454
12. ததீசிப் படலம் 455-519
13. ததீசி யுத்தரப் படலம் 520-907
404 அன்றுமுன் னாகவே அளப்பில் காலமா
ஒன்றுமவ் வேள்வியில் ஓம்பு கின்றிலர்
துன்றிய முனிவருஞ் சுரரும் பார்தனில்
முன்றிகழ் அந்தணர் முதலி னோர்களும்.
1
405 ஓர்ந்தனன் அன்னதை ஊழின் தீநெறி
சார்ந்திடு தக்கன்ஓர் வைகல் தன்முனஞ்
சேர்ந்திடும் இமையவர் திறத்தை நோக்கியே
ஈர்ந்திடு தீயதொன் றியம்பு கின்றனன்.
2
406 எடுத்திடு சுருதியின் இயற்கை முற்றுற
வடித்திடு தேவிர்காள் வரம்பில் காலமா
அடுத்திடும் வேள்விய தாற்றல் இன்றியே
விடுத்ததென் அனையது விளம்பு வீரென்றான்.
3
407 வேறு
எய்யாது வெய்ய வினையீட்டு தக்கன் இவைசெப்ப லோடும் இமையோர்
மெய்யார ணத்தன் முதனாள் இயற்று வேள்விக் களத்தில் அவியூண்
ஐயான னத்தர் பெறநல்கல் என்றி அதனாலும் நந்தி யடிகள்
பொய்யாத சாப உரையாலும் யாங்கள் புரியாதி ருத்து மெனவே.
4
408 அந்நாளில் ஈசன் விடுகின்ற நந்தி அறைகின்ற சாபம் அதனுக்
கிந்நாளும் அஞ்சி மகவேள்வி தன்னில் யாதுஞ்செ யாது திரிவீர்
முன்னாக யானொர் பெருமா மகத்தை முறைசெய்வன் முற்றி இடுமேல்
பின்னாக நீவிர் புரிமின்க ளென்று பீடில்ல வன்பு கலவே.
5
409 நீமுன்னொர் வேள்வி புரிகின்ற தைய நெறியென்றி சைப்ப அவரைப்
போமின்கள் யாரும் எனவேபு கன்று புரிதோறு மேவி மிகவும்
ஏமங்கொள் சிந்தை யுளதக்கன் ஊழின் இயல்பால்அ தற்பின் ஒருநாள்
ஓமஞ்செய் வேள்வி புரிவான்வி ரும்பி உள்ளத்தில் உன்னி முயல்வான்.
6
410 தொட்டாம னுத்தொல் மயனைத் தனாது சுதரென்ன முன்னம் உதவிக்
கட்டாம ரைக்குள் விதிபோல நல்கு கலைகற்று ளானை விளியா
முட்டாத வேள்வி யதுவொன்று செய்வன் முனிவோர்கள் தேவர் உறைவான்
எட்டாத வெல்லை தனில்இன்றொர் சாலை இயல்பால்வி தித்தி எனவே.
(1. அன்று - நந்தியம் பெருமாள் சபித்த காலம்.
4. நல்கல் - அளிக்காதே. என்றி - என்றனை.
5. பீடில்லவன் - பெருமையற்ற தக்கன். 6. ஏமம் - இறுமாப்பு.
7. தொட்டா மனு மயன் - துவட்டா, மனு, மயன் என்போர்;
இவர்கள் விசுவகன்மாக்கள். தனாது சுதர் - தன்னுடைய புதல்வர்கள்.)
7
411 வேறு
இனிதென இறைஞ்சியே ஏகிக் கங்கையம்
புனனதி அதனொரு புடைய தாகிய
கனகலம் என்பதோர் கவின்கொள் வைப்பிடை
வினைபுரி கம்மியன் விதித்தல் மேயினான்.
8
412 பத்துநூ றியோசனைப் பரப்பும் நீளமும்
ஒத்திடும் வகையதா ஒல்லை நாடியே
வித்தக வன்மையால் வேள்விக் கோரரண்
அத்தகு பொழுதினில் அமைத்து நல்கினான்.
9
413 நாற்றிசை மருங்கினும் நான்கு கோபுரம்
வீற்றுவீற் றுதவிய வியன்கொள் நொச்சியில்
ஏற்றிடு ஞாயில்கள் இயற்றி அன்னதை
ஆற்றலை யுடையதோ ரரணம் ஆக்கினான்.
10
414 உள்ளுற அணங்கினர் அறைதற் கோரிடை
தௌ¢ளிதின் நல்கியே தேவர் தம்மொடு
வள்ளுறை வேற்கணார் மருவி ஆடுவான்
புள்ளுறை வாவியும் பொழிதலும் ஆக்கினான்.
11
415 அப்பரி சமைத்துமேல் அமரர் வேதியர்
எப்பரி சனரும்வந் தீண்டி வெ·கின
துய்ப்பதற் கொத்திடு சுவைகொள் தீம்பதம்
வைப்பதோர் இருக்கையும் மரபில் தந்தனன்.
12
416 அந்தண ராதியோர் அமரர் யாவரும்
வந்துண வருந்துவான் வரமபில் சாலைகள்
இந்திர வுலகென இமைப்பில் ஈந்தனன்
முந்தையின் மகவிதி முழுதும் நாடினான்.
13
417 விருந்தினர் பெற்றிட விரைமென் பாளிதம்
நரந்தமொ டாரம்வீ நறைகொள் மான்மதம்
அருந்துறு வௌ¢ளடை ஆன பாகிவை
இருந்திடு சாலையும் இயற்றி னானரோ.
14
418 ஆனபல் வகையுடை ஆடை செய்யபூண்
மேனதொர் அம்பொனின் வியன்கொள் குப்பைகள்
ஏனைய வெறுக்கைகள் மணிகள் யாவையுந்
தானம தியற்றிடத் தானம் நல்கினான்.
15
419 கடிகெழு சததளக் கமல மேலுறை
அடிகள்தன் நகர்கொலென் றையஞ் செய்திட
நடைதரு வேள்விசெய் நலங்கொள் சாலைய
திடையுற அமைத்தனன் யாரும் போற்றவே.
(8. கனகலம் - கங்கையின் அருகுள்ள ஓர் இடம்.
9. வித்தக வன்மை - கல்வித் திறம். 10. நொச்சி - மதில்.
ஞாயில் - மதிலுறுப்பு.
11. வள் - கூர்மை. 14. பாளிதம் - பாற்சோறு. ஆரம் - சந்தனம்.
நரந்தம் - வாசனைப் பொருள். வீ - மலர். மான்மதம் - கஸ்தூரி.
வௌ¢ளடையான பாகு - வெற்றிலைப் பாக்கு.)
16
420 நூறெனும் யோசனை நுவலும் எல்லையின்
மாறகல் சாலையின் வன்னி சேர்தரக்
கூறிய மூவகைக் குண்டம் வேதிகை
வேறுள பரிசெலாம் விதித்தல் செய்தனன்.
17
421 மேலொடு கீழ்புடை வெறுக்கை யின்மிசைக்
கோலநன் மணிகளாற் குயிற்றி வாவியுஞ்
சோலையும் பறவையுந் தோமில் தேவரும்
போலிய ஓவியம் புனைந்திட் டானரோ.
18
422 புண்டரீ காசனம் பொருந்து நான்முகன்
தண்டுள வோன்இவர் தமக்கி ருக்கையும்
எண்டிசை வாணருக் கியலி ருக்கையும்
அண்டருக் கிருக்கையும் அருளல் செய்துமேல்.
19
423 தொக்குறு முனிவரர் தொல்லை வேதியர்
ஒக்கலின் மேயினர் உறையி ருக்கையுந்
தக்கனுக் கிருக்கையுஞ் சமைத்து நல்கினான்
வைக்குறு தவிசின்நூன் மரபின் நாடியே.
20
424 தக்கனை வணங்கிநின் சாலை முற்றிய
புக்கனை காண்கெனப் புனைவன் செப்பலும்
அக்கண மதுதெரிந் தளவி லாதர
மிக்கனன் மகிழ்ந்தனன் விம்மி தத்தினான்.
21
425 பூங்கம லத்தமர் புனிதன் கான்முளை
பாங்கரின் முனிவரில் பலரைக் கூவியே
தீங்கனல் மாமகஞ் செய்ய நூன்முறை
யாங்கனம் வலித்தனன் அவர்க்குச் செப்புவான்.
22
426 தருவுறு சமிதைகள் சாகை தண்ணடை
பரிதிகள் மதலைநாண் பறப்பை பல்பசு
அரணிநன் முதிரைகள் ஆதி யாவிதற்
குரியன உய்த்திரென் றொல்லை ஏவினான்.
23
427 ஆனொடு நிதிகளை மணியை ஐந்தருக்
கானினை அழைத்துநம் மகத்தைக் காணிய
மாநிலத் தந்தணா¢ வருவர் உண்டியும்
ஏனைய பொருள்களும் ஈமென் றோதினான்.
(17. மூவகைக் குண்டம் - சதுரம், வட்டம், கோணம் என்னும் முத்திற
அமைப்பான ஓம குண்டங்கள்.
19. எண்டிசை வாணர் - அட்ட திக்குப் பாலகர்.
20. ஒக்கல் - சுற்றத்தார். 22. கான்முளை - புதல்வன்.
23. சாகை - கிளைகள். தண்ணடை - பச்சிலைகள்.
பரிதிகள் - யாக மேடைகள். மதலை - யூபஸ்தம்பங்கள்.
நாண் - தருப்பைக் கயிறு. பறப்பை - சிருக்கு சிருவம்.
பல்பசு - ஆடு முதலிய பசுக்கள். அரணி - தீக்கடைக்கோல்.
24. ஆன் - காமதேனு. ரூதி - சங்கநிதி, பதுமநிதி. மணி - சிந்தாமணி.
தரு - கற்பகத்தரு.)
24
428 நல்விடை கொண்டுபோய் நவையி லான்முதற்
பல்வகை யவையெலாம் படா¢ந்து வீற்றுவீற்
றொல்வதோ ரிடந்தொறும் உற்ற ஆயிடைச்
செல்வதோர் பொருளெலாஞ் சிறப்பின் நல்கவே.
25
429 தனதுறு கிளைஞராய்த் தணப்பி லாததோர்
முனிவரர் தங்களின் முப்ப தாயிரர்
துனியறு வோர்தமைச் சொன்றி ஏனவை
அனைவரும் விருப்புற அளித்தி ரென்றனன்.
26
430 மற்றவர்க் கிருதிற மாத வத்தரை
உற்றனர் யாவரும் உண்டி அன்றியே
சொற்றன யாவையுந் தொலைவின் றீமென
நற்றவத் தயன்மகன் நயப்புற் றேவினான்.
27
431 தீதினை நன்றெனத் தௌ¤யும் நான்முகன்
காதலன் ஓர்மகங் கடிதி யற்றுவான்
வேதியர் விண்ணவர் யாரும் மேவுவான்
தூதரை நோக்கியே இனைய சொல்லுவான்.
28
432 நக்கனை யல்லதோர் நாகர் தங்களை
மிக்குறு முனிவரை வேத மாந்தரைத்
திக்கொடு வான்புவி யாண்டுஞ் சென்றுகூய்
உய்க்குதி ராலென உரைத்துத் தூண்டினான்.
29
433 முந்துற வரித்திடும் முனிவர் அவ்வழித்
தந்தனர் மகஞ்செயத் தகுவ யாவையும்
வந்தன நோக்கியே மரபில் உய்த்திரென்
றெந்தைதன் அருளிலான் இயம்பி னானரோ.
30
434 வரித்திடு பான்மையின் வழாது போற்றிடும்
இருத்தினர் தமிற்பலர் யாக சாலையுள்
திருத்திய வேதிவாய்ச் செறிபல் பண்டமும்
நிரைத்தனர் பறப்பையும் நிலையிற் சேர்த்தினார்.
31
435 அசைவறு வேதியின் அணித்தி னோரிடை
வசைதவிர் மதலைகள் மரபின் நாட்டுபு
பசுநிரை யாத்தனர் பாசங் கொண்டுபின்
இசைதரு பூசையும் இயல்பின் ஆற்றினார்.
(26. துனி - துன்பம். சொன்றி - சோறு. 29. நாகர் தேவர்கள்.)
32
436 வேறு
நடையிது நிகழும் வேலை நலமிலாத் தக்கன் நல்கும்
விடைதலைக் கொண்டு போய வியன்பெருந் தூதர் தம்மில்
புடவியின் மறையோர்க் கெல்லாம் புகன்றனர்சிலவர் வெய்யோன்
உடுபதி நாள்கோள் முன்னர் உரைத்தனர் சிலவா¢ அன்றே.
33
437 காவல ராகி வைகுங் கந்தரு வத்த ராதி
ஆவதோர் திறத்தோர்க் கெல்லாம் இறைந்தனர் சிலவர் ஆசை
மேவிய கடவு ளோர்க்கும் விளம்பினர் சிலவர் முப்பால்
தேவா¢கள் யாருங் கேட்பச் செப்பினர் சிலவ ரன்றே.
34
438 விண்ணக முதல்வ னுககு விளம்பினர் சிலவர் ஆண்டு
நண்ணிய தேவர்க் கெல்லாம் நவின்றனர் சிலவர் மேலைப்
புண்ணிய முனிவ ரர்க்குப் புகன்றனர் சிலவர் ஏனைப்
பண்ணவர் முன்னஞ் சென்று பகர்ந்தனர் சிலவர் அம்மா.
35
439 வானவர் முதுவன் தொல்லை மன்றன்மா நகரத் தெய்திக்
கோனகர் வாயில் நண்ணிக் குறுகினர் காப்போர் உய்ப்ப
மேனிறை காத லோடும் விரைந்தவற் றாழ்ந்து நின்சேய்
ஆனவன் வேள்விக் கேக அடிகள்என் றுரைத்தார் சில்லோர்.
36
440 மேனகு சுடர்செய் தூய விண்டுல கதனை நண்ணி
மானிறை கின்ற கோயில் மணிக்கடை முன்னர் எய்திச்
சேனையந் தலைவன் உய்ப்பச் சீதரற் பணிந்து வேள்விப்
பான்மையை தியம்பி எந்தை வருகெனப் பகர்ந்தார் சில்லோ¢.
37
441 மற்றது போழது தன்னில் மாயவன் எழுந்து மா£பூ
டுற்றிடு திருவும் பாரும் உடன்வர உவணர் கோமான்
பொற்றடந் தோள்மேற் கொண்டு போர்ப்படை காப்பத் தன்பாற்
பெற்றனர் சூழத் தானைப் பெருந்தகை பரவச் சென்றான்.
38
442 செல்லலும் அதனை நாடித் திசைமுகக் கடவுள் அங்கண்
ஒல்லையில் எழுந்து முப்பால் ஒண்டொடி மாத ரோடும்
அல்லியங் கமலம் நீங்கி அன்னமேற் கொண்டு மைந்தர்
எல்லையில் முனிவர் யாரும் ஏத்தினர் சூழப் போந்தான்.
39
443 மாலொடு பிரமன் ஈண்டி வருதலும் மகவான் என்போன்
வேலொடு வில்லும் வாளும் விண்ணவர் ஏந்திச் சூழ
நாலிரு மருப்பு வௌ¢ளை நாகம துயர்த்துத் தங்கள்
பாலுறை குரவ ரோடு பாகமார் விருப்பில் வந்தான்.
40
444 ஆயவன் புரத்தில் வைகும் அரம்பையே முதலா வுள்ள
சேயிழை மார்கள் யாருந் தேவரோ டகன்றா£ எங்கள்
நாயகன் போந்தான் என்றே நலமிகு சசியென் பாளுந்
தூயதோர் மானத் தேறித் தோகையர் காப்பச் சென்றாள்.
41
445 எண்டிசைக் காவலோரும் ஈரிரு திறத்த ரான
அண்டரும உடுக்கள் தாமும் ஆரிடத் தொகையு ளோரும்
வண்டுளர் குமுதம் போற்றும் மதியமும் ஏனைக் கோளும்
விண்டொடர் இயக்கர் சித்தர் விஞ்சையர் பிறரும் போந்தார்.
(33. புடவி - பூமி. சிலவர் - சிலர். உடுபதி - சந்திரன்.
நாள் - நட்சத்திரம். கோள் - கிரகம்.
34. ஆசை - திக்கு. 37. சேனையந் தலைவன் - சேனாதிபதி.
38. திருவும் பாரும் - திருமகளும் பூமகளும். உவணர் கோமான் - கருடன்.
39. மைந்தர் - உபப்பிரமர். 40. குரவர் - வியாழன் முதலியோர்.
பாகம் - அவிர்ப்பாகம்.
42. ஈரிரு திறத்தரான அண்டர் - ஆதித்தர், உருத்திரர், வசுக்கள்,
மருத்துவர் என்னும் நால்வகை தேவர்கள்.
ஆரிடத்தொகை - முனிவர் குழாம்.)
42
446 சேணிடை மதியி னோடு செறிதரும் உடுக்க ளான
வாணுதல் மகளிர் யாரும் மகிழ்வொடு தந்தை வேள்வி
காணிய வந்தார் ஈது கண்ணுறீஇ அவுணர் கோமான்
சோணித புரத்துக் கேளிர் தொகையொடுந் தெடா¢ந்து சென்றான்.
43
447 வனைகலன் நிலவு பொற்றோள் வாசவன் முதலா வுள்ள
இனையரும் பிறரும் எல்லாம் இருவர்தம் மருங்கும் ஈண்டிக்
கனகல வனத்திற் செய்த கடிமகச் சாலை எய்த
முனிவர ரோடுந் தக்கன் முன்னெதிர் கொண்டு நின்றான்.
44
448 எதிர்கொடு மகிழ்ந்து மேலாம் இருவர்தங் களையும் அங்கண்
முதிர்தரு காத லோடு முறைமுறை தழுவி வானோர்
பதிமுத லோரை நோக்கிப் பரிவுசெய் தினையர் தம்மைக்
கதுமெனக் கொண்டு வேள்விக் கடிமனை இருக்கை புக்கான்.
45
449 மாலயன் தன்னை முன்னவர் மணித்தவி சிருத்தி வான
மேலுறை மகவா னாதி விண்ணர் முனிவர் யார்க்கும்
ஏலுறு தவிசு நல்கி இடைப்பட இருந்தான் தக்கன்
காலுறு கடலா மென்னக் கடவுள்மா மறைக ளார்ப்ப.
46
450 அல்லியங் கமல மாதும் அம்புவி மகளும் வேதாப்
புல்லிய தெரிவை மாரும் பொருவிலா உடுவி னோருஞ்
சொல்லருஞ் சசியும் ஏனைச் சூரினர் பிறரும் வேத
வல்லிதன் இருக்கை நண்ணி மரபின்வீற் றிருந்தார் மன்னோ.
47
451 மாமலர்க் கடவுள் மைந்தன் மகத்தினை நாடி யாருங்
காமுறும் உண்டி மாந்திக் கதுமென மீடும் என்றே
பூமிசை மறையோர் தாமும் முனிவரும் போந்து விண்ணோர்
தாமுறும் அவையை நண்ணித் தகவினால் சார்த லோடும்.
48
452 அழைத்திடப் போன தூதர் அனைவரும் போந்து தக்கன்
கழற்றுணை வணங்கி நிற்பக் கருணைசெய் தவரை நோக்கி
விழுத்தகு தவத்தீர் நீவிர் விளித்தனர் தமிலு றாது
பிழைத்தனர் உளரோ உண்டேல் மொழிமெனப் பேசல் உற்றார்.
49
453 அகத்தியன் சனகன் முன்னோர் அத்திரி வசிட்டன் என்பான்
சகத்துயர் பிருகு மேலாந் ததீசிவெஞ் சாபத் தீயோன்
பகைத்திடு புலத்தை வென்ற பராசரன் இனைய பாலார்
மகத்தினை இகழா ஈண்டு வருகிலர் போலும் என்றார்.
50
454 மற்றது புகல லோடு மலரயன் புதல்வன் கேளா
இற்றிது செய்தார் யாரே முனிவரில் இனையர் தாமோ
நெற்றியங் கண்ணி னார்க்கும் நேயம துடைய ரென்னாச்
செற்றமொ டுயிர்த்து நக்கான் தேவர்கள் யாரும் உட்க.
(43. சோணிதபுரம் - ஒரு நகரம். இ·து அசுரர்கள் இருக்கும் ஒரு நகரம்.)
51
ஆகத் திருவிருத்தம் - 454
-----------

12. ததீசிப் படலம் (455-519)

455 அன்ன வேலையில் ஆரிடர் தம்மொடுந்
துன்னி னானொரு தொல்லிறைக் காகவே
முன்ன மாலமர் மூண்டெழ மற்றவன்
தன்னை வென்ற ததீசிஎன் பானரோ.
1
456 கடிது போந்து கடிமகச் சாலையின்
இடைய தாகி இமையவர் யாவரும்
அடையும் எல்லை அணுகலுங் கண்ணுறீஇக்
கொடிய தக்கன் குறித்துணர் கின்றனன்.
2
457 ஆகும் ஆகும் அரற்குரித் தல்லன்இப்
பாக மாமகம் பார்க்கும் பொருட்டினால்
ஏகி னானெனக் கஞசி எனாநினைந்
தோகை யெய்தி உளங்குளிர்ப் பாகியே.
3
458 வருக ஈண்டென மற்றவன் தன்னிடை
ஒருபெ ருந்தவி சுய்த்தலும் மாதவர்
இரும ருங்கும் இருந்திட ஆயிடைப்
பொருவின் மாதவப் புங்கவன் மேவியே.
4
459 ஆக்கந் தீரும் அயன்புதல் வன்தனை
நோக்கி எம்மை நொடித்ததென் நீயிவண்
ஊக்கி யுற்றதென் ஒல்லையில் யாவையும்
நீக்க மின்றி நிகழ்த்துதி யென்னவே.
5
460 தக்கன் ஆண்டுத் ததீசியை நோக்கியே
நக்க னென்பவன் நான்பெறுங் கன்னியை
மிக்க காதலின் வேட்டொளித் தோர்பகல்
உக்க மேலுய்த் துயர்வரை ஏகினான்.
6
461 போய பின்னைப் புதல்விக்குத் தன்பெரு
மாயை செய்தனன் மற்றவர் தங்களை
ஆயு மாறவ் வகன்கிரி எய்தினேன்
ஏய தன்மை இருவருந் தேர்ந்தரோ.
7
462 அடுத்த பூதரை ஆங்கவர் கூவியே
தடுத்தி டுங்களத் தக்கனை நம்முனம்
விடுத்தி ரல்லிர் விலக்குதி ராலென
எடுத்தி யம்பினர் ஏயினர் போலுமால்.
(1. ஆரிடர் - முனிவர்கள். தொல் - பழைய.
இறை- இங்குக் குபன் என்னும் அரசன்;
இக் குபன் என்னும் அரசனுக்காகப் போர் செய்த திருமாலைத் ததீசி
முனிவர் வென்றார் என்பது வரலாறு; இதன் விரிவை இந்நூலில் முன்னர்க் காண்க.
5. நொடித்தது - அழைத்தது. ஊக்குதல் - முயற்சித்தல்.
6. உக்கம் - இடபம். உயர்வரை - கயிலைமலை.)
8
463 இற்று ணர்ந்திலன் ஏகினன் பூதர்கள்
நிற்றி நீயென்று நிந்தனை எண்ணில
சொற்ற லோடுந் துணையதில் வௌ¢ளியம்
பொற்றை நீங்கிப் புரம்புகுந் தேனியான்.
9
464 தங்கண் மாநகர் சார்ந்தனன் நீங்குழி
எங்கண் மாதும் எனைவந்து கண்டிலன்
மங்கை யென்செய்வள் மற்றவன் மாயையால்
துங்க மேன்மை துறந்தனள் போயினாள்.
10
465 அந்த வேலை அரும்பெரும் வேள்வியொன்
றெந்தை செய்துழி யான்சென் றரற்குமுன்
தந்த பாகந் தடுத்தனன் அவ்வழி
நந்தி சாபம் நவின்றனன் போயினான்.
11
466 வேறு
எறுழ்படு தண்ணுமை இயம்பு கையுடைச்
சிறுதொழில் லவன்மொழி தீச்சொற் கஞ்சியே
முறைபடு வேள்வியை முற்றச் செய்திலன்
குறையிடை நிறுவினன் குரவ னாகியோன்.
12
467 நஞ்சமர் களன்அருள் நந்தி கூறிய
வெஞ்சொலும் என்பெரு விரத முந்தெரீஇ
அஞ்சினர் இன்றுகா றாரும் வேள்வியை
நெஞ்சினும் உன்னலர் நிகழ்த்தும் வேட்கையால்.
13
468 ஆனதொர் செயலுணர்ந் தையம் ஏற்றிடும்
வானவன் தனக்கவி மாற்றும் பான்மையான்
நானொரு வேள்வியை நடாத்து கின்றனன்
ஏனைய தோர்பயன் யாதும் வேண்டலன்.
14
469 அப்பெரு மகந்தனக் கமரர் மாதவர்
எப்பரி சனரும்வந் தீண்டு தொக்கனர்
ஒப்பருந் தவத்தினீர் உமக்கும் இத்திறஞ்
செப்பினன் விடுத்தனன் செயலி தென்னவே.
(9. இற்று - இதனை. 10. மாது - இங்கு மகள்.
11. எந்தை - என் தந்தையான பிரமன்.
12. எறுழ் - வலிமை. தண்ணுமை - மத்தளம். எறுழ் படு...
சிறுதொழிலவன் - நந்தியம் பெருமான். குரவனாகியோன் - பிரமன்.
14. ஐயம் ஏற்றிடும் வானவன் - சிவன்.)
15
470 வேறு
தண்ணளி புரித தீசி தக்கன துரையைக் கேளாப்
புண்ணியம் பயனின் றம்மா பொருளினிற் பவமே யென்னா
எண்ணினன் வினைக ளீட்டு இழிதகன் இயற்கை போலாம்
அண்ணல்தன் செயலும் என்னா அணியெயி றிலங்க நக்கான்.
16
471 நக்கதோர் வேலை தன்னில் நலத்தகும் ஊழிக் கான்மேன்
மிக்கெழும் வடவை என்ன வெய்துயிர்த் துரப்பிச் சீறி
முக்கணன் அடியான் போலும் முறுவலித் திகழ்ந்தாய் என்னத்
தக்கனீ துரைத்த லோடுந் ததீசிமா முனிவன் சொல்வான்.
17
472 மலரயன் முதலே யாக வரம்பிலா உயிரை முன்னந்
தலையளித் துதவு தாதையாய் அளித்து மாற்றி
உலகெலா மாகி ஒன்றாய் உயிர்க்குயி ராகி மேலாய்
இலகிய பரனை நீத்தோ யாகம்ஒன் றியற்ற நின்றாய்.
18
473 புங்கவர் எவர்க்கும் நல்கும் புவிபுகழ் அறிகொள் வானும்
அங்கியின் முதலும் வேள்விக் கதிபனும் அளிக்கின் றானுஞ்
சங்கரன் தானே வேதஞ் சாற்றுமால் மகத்துக் காதி
இங்கொரு தேவுண் டென்னின் எழுகென உரைத்தி மாதோ.
19
474 மாலயன் முதலோர் யாரும் வரம்பிலித் திருவை எய்த
மேலைநாள் அளித்தோன் தானும் விமலனும் இனையர்க் கெல்லாம்
மூலமுந் தனக்கு வேறொர் முதலிலா தவனும் எங்கள்
ஆலமர் கடவுள் அன்றி அமரரில் யாவர் அம்மா.
20
475 தேவதே வன்மா தேவன் சிறப்புடை ஈசன் எங்கோன்
மூவரின் முதல்வன் ஏகன் முடிவிற்கு முடிவாய் நின்றோன்
ஆவியுள் ஆவி யானோன் அந்தண னாதி என்றே
ஏவரை யிசைத்த அம்மா எல்லையில் மறைக ளெல்லாம்.
21
476 விதிமுறை லாகி உள்ளோர் வியனுயிர்த் தொகையாம் ஈசன்
பதியவன் பணிய தன்றே பரித்தனர் இனையர் எல்லாம்
இதுவுமச் சுருதி வாய்மை இவையெலாம் அயர்த்து வாளா
மதிமயங் கினையால் பேரா மாயையூ டழுந்து கின்றாய்.
22
477 அந்தணர்க் காதி ஈசன் ஏனையோர்க் கரியே வேதா
இந்திரன் என்று வேதம் இயம்பிய மறையோர் தங்கண்
முந்தையின் முதலை நீத்து முறையகன் றொழுகல் பெற்ற
தந்தையை விலக்கி வேறு தேடுவான் தன்மை யன்றே.
23
478 ஆதலின் எவர்க்கும் மேலாம் ஆதியை இகழா நிற்றல்
பேதைமை யன்றி யீதோர் பெருமித மன்றால் ஆற்ற
நோதக உன்னி யாரே நோற்பவா¢ அனையை நீயே
வேதம தொழுக்கம் நீத்திவ் வேள்வியைப் புரிய நின்றாய்.
24
479 விலக்கினை மறையின் வாய்மை வேள்விசெய் யினுமுற் றாது
கலக்குமேல் அமல னாணை காண்டியால் அவனுக் கஞ்சா
வலத்தினர் யாவ ருண்டேல் மாய்வரே மறையும் எம்முன்
இலைப்பொலி சூலம் ஏந்தும் ஏகனென் றேத்திற் றன்றே.
(16. வினைகள் - பாவச் செயல்கள். ஈட்டும் - செய்யும்.
17. ஊழிக்கால் - ஊழிக்காற்று. வடவை - வடவாமுகாக்கினி.
19. மகத்துக்கு ஆதி - யாகத்தலைவன்.
20. விமலன் - மலமற்றவன்; பரிசுத்தன். 21. ஏவரை - எவரை.
22. அயர்த்து - மறந்து. வாளா - வீணாக. பேரா - நீங்காத.
23. முந்தையின் முதலை - முழுமுதற் கடவுளாகிய சிவனை.)
25
480 ஆதியு முடிவும் இல்லா அமலனுக் கவியை நல்கி
வேதக முறைவ ழாது வேள்விஓம் புவது நாடாய்
தீதுநின் எண்ணம் என்னச் சிவன்தனச் கருள்பா கத்தை
மாதவன் தனக்கு நல்கி மாமகம் புரிவன் என்றான்.
26
481 அவ்வுரை கொடியோன் கூற அருந்தவ முனிவன் கேளா
அவ்வமீது துரைத்தாய் மேலாய் யாவரும் புகழ நின்ற
செவ்வியர் தமையி ழித்துச் சிறியரை உயர்ச்சி செய்தல்
உய்வகை அன்றா னும்மோ ருயிர்க்கெலா முடிவீ தென்றான்.
27
482 ஊறுசேர் தக்கன் சொல்வான் உனதுருத் திரனை ஒப்பார்
ஆறின்மே லைந்த வான உருத்திரர் அமர்வான் ஆசை
ஈறுசேர் தருமீ சானர் இருந்தனர் அவர்க்கே முன்னர்
வீறுசேர் அவியை நல்கி வேள்வியை முடிப்ப னென்றான்.
28
483 என்னலும் முனிவன் சொல்வான் ஈறுசெய் தகில மெல்லாந்
தன்னிடை யொடுக்கி மீட்டுந் தாதையாய் நல்கி யாரு
முன்னருந் திறத்தில் வைகும் உருத்திர மூர்த்திக் கொப்போ
அன்னவன் வடிவும் பேரும் அவனருள் அதனாற் பெற்றோர்.
29
484 உருத்திர மூர்த்தி என்போன் உயர்பரம் பொருளா யுள்ளே
நிருத்தம தியற்று கின்ற நித்தனாம் அவன்தன் பொற்றாள்
கருத்திடை நினைந்தோர் அன்னான் காயமுந் திருப்பேர் தானும்
பரிப்பரால் அனையர் எல்லை பகர்ந்திடின் உலப்பின் றாமால்.
30
485 ஆதிதன் நாமம் பெற்றோர் அவனியல் அடையார் கொண்ட
ஏதமில் வடிவும் அற்றே என்னினும் இறைவ ரென்றே
பூதல முழுதும் விண்ணும் போற்றிட இருப்பர் இந்த
வேதனும் புகழு நீரான் மெய்ந்நெறித் தலைமை சார்வார்.
31
486 ஈசனை அளப்பில் காலம் இதயமேல் உன்னி நோற்றே
ஆசக லுருவம் பெற்ற அன்பினர் போல்வர் இன்னோர்
வாசவன் முதலோர் போல வரத்தகார் எந்தை பால்நீ
நேசமில் லாத தன்மை நினைந்திலர் போலு மென்றான்.
32
487 வேறு
என்ற காலை இருந்ததக் கன்னிது
நன்று நாரணன் நான்முகன் நிற்கஈ
றொன்று செய்யும் உருத்திர னாதியாய்
நின்ற தென்கொல் நிகழத்துதி யென்னவே.
33
488 விதிசி ரங்கள் வியன்முடி வேய்ந்திடும்
பதிசி வன்தன் பதத்துணை உட்கொடு
மதிசி றந்திட வாலிதின் வைகிய
ததீசி யென்னுந் தவமுனி சாற்றுவான்.
(26. நாடாய் - கருதுகின்றிலை. 27. எவ்வம் - குற்றம்.
28. ஆறின் மேல் ஐந்து ஆன உருத்திரர் - ஏகாதச ருத்திரர்.
ஆசைஈறு - வடகிழக்குத் திசை.
32. உருவம் பெற்ற - சாரூபம் பெற்ற. 34. விதி சிரங்கள் -
பிரமர்களின் தலைகள். முடி - தலைமாலை.)
34
489 இருவர் தம்மொடும் எண்ணிய தன்மையால்
ஒருவ னான உருத்திர மூர்த்தியைப்
பெரியன் என்று பிடித்திலை அன்னதுந்
தெரிய ஓதுவன் தேர்ந்தனை கேட்டியால்.
35
490 ஆதி யந்தமி லாதஎம் மண்ணலுக்
கோது பேரும் உருவுமொர் செய்கையும்
யாது மில்லையிவ் வாற்றினை எண்ணிலா
வேதம் யாவும் விளம்புந் துணிபினால்.
36
491 அன்ன தோர்பரத் தண்ணல்தன் னாணையால்
முன்னை யாரிருள் மூடத்துண் மூழ்கிய
மன்னு யிர்த்தொகை வல்வினை நீக்குவான்
உன்னி யேதன்னு ளத்தருள் செய்துமேல்.
37
492 உருவுஞ் செய்கையும் ஓங்கிய பேருமுன்
அருளி னாற்கொண்ட னைத்தையும் முன்புபோல்
தெரிய நல்கித் திசைமுக னாதியாஞ்
சுரர்கள் யாரையுந் தொன்முறை ஈந்துபின்.
38
493 ஏற்ற தொல்பணி யாவும் இசைத்தவை
போற்று செய்கை புரிந்துபின் யாவையும்
மாற்று கின்றது மற்றெமக் காமெனச்
சாற்றி னான்அத் தகைமையுங் கேட்டிநீ.
39
494 வேறு
அந்தம் ஆதியின் றாகியே உயிரெலாம் அளிக்குந்
தந்தை யாகிய தனக்கன்றி முழுதடுந் தகைமை
மைந்த ராகிய அமரரான் முடிவுறா மையினால்
எந்தை தன்வயிற் கொண்டனன் ஈறுசெய் யியற்கை.
40
495 அன்று தேவர்கள் யாவரும் எம்பிரான் அடியில்
சென்று தாழ்ந்தெமக் கிப்பணி புரிந்தனை சிறியேம்
என்று தீருதும் இப்பரம் என்றலும் எங்கோன்
ஒன்று கூறுதுங் கேண்மினோ நீவிர்என் றுரைத்தான்.
41
496 ஆயுள் மற்றுமக் கெத்துணை அத்துணை யளவு
நீயிர் இச்செயல் புரிமின்கள் பரமெ நினைந்தீர்
தூய வித்தையால் நீறுள தாக்கியே தொழுது
காய மேற்புனைந் தஞ்செழுத் துன்னுதிர் கருத்தின்.
(37. தன்ஆணை - தனது அருட் சத்தி. 40. ஈறுசெய் இயற்கை -
சங்காரத் தொழில். 42. பரம் - பாரம்; சுமை. தூய வித்தையால் -
பரிசுத்தமான பஞ்சப்பிரம மந்திரங்களால். உன்னுதிர் - நினையுங்கள்.)
42
497 தன்மை யிங்கிவை புரிதிரேல் இத்தொழில் தரிக்கும்
வன்மை யெய்துவீர் அன்றிநங் கலைகணும் மருங்கு
தொன்மை யுள்ளன காட்டிநின் றருளுமால் தொலைவில்
நன்மை எய்துவீர் என்றருள் செய்தனன் நம்பன்.
43
498 அன்ன வர்க்கொடே யெவ்வகைச் செய்கையும் அளித்துப்
பின்னை யுள்ளதோர் செய்கையும் புரியுமெம் பெருமான்
முன்னை வேதங்கள் அவன்தனை ஐந்தொழில் முதல்வன்
என்னும் மற்றிது தேருதி கேட்டியால் இன்னும்.
44
499 வேறு
உருத்திரன் என்னும் நாமம் ஒப்பிலா அரற்கும் அன்னான்
தரத்தகு சிறார்கள் ஆனோர் தங்கட்கும் அனையன் பாதங்
கருத்திடை உன்னிப் போற்றுங் கணங்கட்கும் அவன்றன் மேனி
பரித்திடு வோர்க்குஞ் செந்தீப் பண்ணவன் தனக்கும் ஆமால்.
45
500 இன்னலங் கடலுட் பட்டோர் யாரையும் எடுக்கும் நீரால்
உன்னரும் பரம மூர்த்தி உருத்திரன் எனும்பேர் பெற்றான்
அன்னவன் தரவந் தோர்க்கும் அடியடைந் தோர்க்கும் அன்னான்
தன்னுரு வெய்தி னோர்க்குஞ் சார்ந்ததால் அவன்த னிப்பேர்.
46
501 செந்தழ லென்ன நின்ற தேவனுக் குருத்தி ரப்பேர்
வந்தது புகல்வன் கேட்டி வானவன் யாரும் ஈண்டி
முந்தையில் அவுணர் தம்மை முனிந்திட முயன்று செல்ல
அந்தமில் நிதியந் தன்னை அவ்வழி ஒருங்கு பெற்றார்.
47
502 பெற்றிடு நிதியம் எல்லாம் பீடிலால் கனல்பால் வைத்துச்
செற்றலர் தம்மேற் சென்று செருச்செய்து மீண்டு தேவர்
உற்றுழி அதுகொ டாமல் ஓடலுந் தொடர்ந்து சூழ
மற்றவன் கலுழ்த லாலே வந்தது மறையுங் கூறும்.
48
503 ஓதுமா மறைகள் தம்மில் உருத்திரன் எனும்பேர் நாட்டி
ஏதிலார் தம்மைச் சொற்ற தீசன்மேற் சாரா வந்த
ஆதிநா யகனைச் சுட்டி அறைந்ததும் பிறர்மாட் டேறா
மேதைசா லுணர்வின் ஆன்றோர் விகற்பம்ஈ துணர்வ ரன்றே.
49
504 ஓங்கிய சுருதி தன்னுள் உருத்திரன் எனுநா மத்தால்
தீங்கன லோனை ஏனைத் திறத்தரை உரைத்த வாற்றை
ஈங்கிவண் மொழியல் எங்கோற் கியம்பிய இடங்கள் நாடி
ஆங்கவன் தலைமை காண்டி அறைகுவன் இன்னும் ஒன்றே.
(46. அன்னான் தன்உரு - சிவசாரூபம். 48. கலுழ்தல் - அழுதல்.
49. மேதை - சிறந்த அளிவு. 50. மொழியல் - கூறாதே.
காண்டி - காண்பாயாக.)
50
505 வேறு
முந்தை யோர்பகன் முனிவர்கள் யாவரு முதலோ
டந்த மில்லதோர் பரம்இவர் அவரென அறைந்து
தந்தமிற் சென்று வாதுசெய் தறிவருந் தகவால்
நொந்து மற்றவர் பிரமனை வினவுவான் நுவன்றா£.
51
506 மல்லல் மேருவின் முடிதனில் மனோவதி வைகும்
அல்லி வான்கம லத்திடை அண்ணலை அணுகி
எல்லை தீர்ந்திடு பரம்பொருள் உணர்கிலேம் இவரென்
றொல்லை தன்னில்நீ உரைத்தருள் செய்யனெ உரைத்தார்.
52
507 உரைத்த வாசகங் கேட்டலும் நான்முகத் தொருவன்
கருத்தில் இங்கிவை தௌ¤தர மறைமொழி காட்டி
விரித்து மென்னினுந் தௌ¤வுறார் மெய்மையால் விரைவில்
தெரித்து மிங்கென உன்னினன் அவர்மயல் தீர்ப்பான்.
53
508 நாற்ற லைச்சிறு மாமகன் தாதைதன் னலஞ்சேர்
தோற்ற முள்ளுற உன்னியே விழபுனல் சொரிய
ஏற்றெ ழுந்துமீக் கரம்எடா வுருத்திர னென்றே
சாற்றி மும்முறை நின்றனன் தௌ¤தருந் தகவால்.
54
509 அங்கண் நான்முகன் சூளினால் ஆதியம் பகவன்
சங்க ரன்எனக் காட்டியே பொடிப்புமெய் தயங்க
வெங்க னற்படும் இழுதென உருகிமீ மிசைசேர்
செங்கை மீட்டனன் முனிவருக் கினையன செப்பும்.
55
510 வம்மி னோவுமக் கோருமரை மொழிகுவன் வானோர்
தம்மை எங்களை அளித்தனன் மறைகளுந் தந்தான்
மெய்ம்மை யாவர்க்குஞ் செய்பணி உதவினன் மேனாள்
மும்மை யாகிய செய்கைநம் பாலென மொழிந்தான்.
56
511 அருளின் நீர்மையால் ஐந்தொழில் புரிபவன் அநாதி
பரமன் நின்மலன் ஏதுவுக் கேதுவாம் பகவன்
ஒருவா¢ பாலினும் பிறந்திடான் அருவதாய் உருவாய்
இருமை யாயுறை பூரண னியாவர்க்கும் ஈசன்.
57
512 முற்று மாயினான் முடிவிற்கும் முடிவிற்கும் முடிவாய்
உற்றுளான் என்றும் உள்ளவன் அனைத்தையும் உடையோன்
மற்றென னாலுரைப் பரியதோர் சீர்த்தியன் மலர்த்தாள்
பற்றினோர்க் கன்றி உணரவொண ணாததோர் பழையோன்.
58
513 அன்ன தோர்சிவன் பரமென மறையெலாம் அறையும்
இன்னு மாங்கவன் நிலையினைக் கண்ணனும் யானும்
உன்னி நாடியுங் காண்கிலம் அவன்பதி ஒழிந்தோர்
மன்னு யிர்த்தொகை யென்றனன் அன்னதொல் மலரோன்.
59
514 அருள்பு ரிந்துபின் சிவனடி கைதொழு தந்நாள்
மருள கன்றிடு பிதாமகன் இருந்தனன் மற்றப்
பொருளின் நீர்மையைத் தெரிந்துதம் புந்திமேற் கொண்ட
இருளொ ழிந்தனர் மகிழ்ந்தனர் முனிவரர் இசைப்பார்.
(51. பரம் - பரம்பொருள். 55. இழுது - நெய்.
மீமிசை - மிகமேலே; தலைக்குமேல்.
58. மலர்த்தாள் பற்றியரா அன்பினர். 60. மருள் - மயக்கம்.
பிதாமகன் - பிரமதேவன்.)
60
515 தாதை யாய்எமை அளித்தனை யாங்கள்உன் தனயர்
ஆத லால்எமக் கித்திறம் தேற்றினை அடிகேள்
ஈதலால் இன்று குரவனும் ஆயினை என்றே
பாத தாமரை வணங்கினர் முனிவரர் பலரும்.
61
516 அடிவ ணங்கினர் தமைத்தெரிந் தின்றுதொட் டமலன்
வடிவம் உன்னுதிர் அருச்சனை புரிகுதிர் வயங்கும்
பொடிய ணிந்துநல் லஞ்செழுத் தியம்புதிர் புரைசேர்
கொடிய வெம்பவம் அகலுதிர் எனவிடை கொடுத்தான்.
62
517 ஆதலால் எங்க ளீசனே பரம்பொருள் அல்லா
ஏதி லாரெலா உயிர்த்தொகை யாகுமால் இதனைக்
காத லாலுரைத் தேன்அன்று வாய்மையே காண்டி
வேத மேமுத லாகிய கலையெலாம் விளம்பும்.
63
518 அன்றி முன்அயன் உன்றனக் கரன்புகழ் அனைத்தும்
நன்று கேட்டிட உணர்த்தினன் நீயது நாடி
நின்று மாதவம் புரிந்திது பெற்றனை நினக்குப்
பொன்று காலம்வந் தெய்தலின் மறந்தனை போலாம்.
64
519 தந்தை யேமுதல் யாவரும் முடிவுறுந் தகவால்
வந்து நின்னவை இருந்தனர் மாயையால் மருண்டாய்
உய்ந்திடு டும்படி நினைத்தியேல் அரற்கவி உதவி
இந்த மாமகம் புரிந்திடு வாயென இசைத்தான்.
(62. பொடி - விபூதி. அஞ்செழுத்து - பஞ்சாட்சரம்.
63. ஏதிலார் - அயலார்.
65. நின் அவை - உனது சபை.)
65
ஆகத் திருவிருத்தம் - 519
---------

13. ததீசி யுத்தரப் படலம் (520 - 907)

520 இந்த வண்ணமத் ததீசிமா முனிவரன் இயம்பக்
கந்த மாமலர்க் கடவுள்சேய் நகைசெய்து கானிற்
சிந்து மென்பொடு சிரத்தொகை அணியுமோ தேவர்
வெந்த சாம்பரும் பூசுமோ பரனெனும் மேலோன்.
1
521 கழிந்த தீயுடல் ஏந்தியே திரியுமோ கானில்
இழிந்த கேசமுந் தரிக்குமோ ஏனத்தின் எயிறு
மொழிந்த கூருமத் தோடுமேற் கொள்ளுமோ உலகம்
அழிந்தி டும்படி உயிர்களை முடிக்குமோ அமலன்.
2
522 புலியின் ஈருரி உடுக்குமோ தந்தியின் புன்றோல்
வலிய தன்புயம் போக்குமோ செந்தழல் மழுமான்
இலைகொள் முத்தலை வேற்படை ஏந்துமோ எங்கும்
பலியு மேற்குமோ நிருத்தமுஞ் செய்யுமோ பகவன்.
3
523 மிக்க சாரதர் படையெனத் திரியுமோ விடமே
கக்கும் வெம்பணி பூணுமோ வெண்டலை கலமாச்
செக்கர் மாமுடி தரிக்குமோ அம்பரந் திசையா
நக்க னாகுமோ வேற்றுருக் கொள்ளுமோ நாதன்.
4
524 விடையும் ஏறுமோ ஆலமுங் கொள்ளுமோ வீந்தோர்
சுடலை தன்னினும் ஆடுமோ ஒருத்தியைச் சுமந்தோர்
மடம கட்கிடங் கொடுக்குமோ மகவையும் பெறுமோ
கடிய தோர்குணம் படைக்குமோ பரமெனுங் கடவுள்.
5
525 ஆதலால் உங்கள் ஈசனோர் குணமிலன் அவனுக்
கீத லின்றியாம் புரிகின்ற மகத்தவி எனலும்
நாத னைக்கொலோ பழிக்குவன் இவனென நகையாக்
கோதின் மாதவ முனிவரன் அழலெனக் கொதித்தான்.
6
526 தீர்த்தன் உண்மையை உணர்கிலன் இவனொடு சிறிதும்
வா£த்தை கூறுதல் தகாதுமால் அயன்முதல் வானோர்
ஆர்த்தசங் கத்தில் இகழ்ந்தவற் கெதிர்மொழி யறைய
ஈர்த்த தென்னுளம் உணர்த்துவன் சிலவென இசைந்தான்.
7
527 இந்த வாறிசைந் தெம்பெரு மான்றனக் கிவண்நீ
நிந்தை போற்சில கூறினை நிமலனுக் கவைதாம்
வந்த வண்ணமோர் சிறுவதும் உணர்ந்திலை மருண்டாய்
புந்தி யில்லதோர் கயவநீ கேளெனப் புகல்வான்.
8
528 நிலவு கின்றதன் னருளுருக் கொண்டிடு நிமலன்
தலைமை பெற்றிடு புங்கவர் தம்மைமுன் தந்தே
உலகம் யாவையும் அளித்தருள் செய்திட உதவி
அலகி லாவுயிர் யாவையும் அயன்கண்நின் றளிப்பான்.
9
529 மாய வன்கண் நின் றவையெலாம் போற்றிமற் றவைக்குத்
தூய துப்புர வருத்தியே மேல்வினை தொலைச்சி
ஆய வற்றிலோர் பற்பல வீடுற அருளி
மேய ஆருயிர் உலகெலாம் பின்னரே வீட்டும்.
10
530 அன்ன வேலையில் அவையெலாம் அழித்தபின் னளிப்போர்
என்ன நின்றவர் தன்மையும் ஒடுக்குறும் இதற்பின்
முன்ன ருள்ளதோர் ஏகமாய் உறையும்எம் மூர்த்தி
பின்னும் இம்முறை புரிந்திடும் என்றும்இப் பெற்றி.
(1. கந்தமாமலர் - சிறந்த தாமரைமலர். 2. கேசம் - மயிர்;
இது பிரம்மவிஷ்ணுக்களின் சிகை. ஏனத்தின் எயிறு - பன்றிக்கொம்பு.
கூருமம் - ஆமை. 3. தந்தி - யானை. பலி - பிச்சை.
பகவன் - சகல குணங்களும் உடையவன்; சிவன்.
4. வெண்டலை - தசைநீங்கியதலை. அம்பரம் - ஆடை. நக்கன் - நிருவாணி.
6. ஈதல்இன்று - கொடுப்பதில்லை.
7. தீர்த்தன் - பரிசுத்தன்; சிவபெருமான். சங்கம் - சபை.
8. நிந்தைபோல் - பழிப்பினையுடையவைபோல்.
சிறுவதும் - சிறிதும். கயவ - கீழ்மகனே! 9. மேல் வினை - ஆகாமியவினை.
10. துப்புரவு - போகம்.)
11
531 பரமன் இவ்வகை அடுந்தொறும் அடுந்தொறும் பலவாம்
பிரம னாதியோர் என்பினைத் தரிக்குமப் பெரியோர்
சிரமெலாந் தொடுத்த தணியலா அணிந்திடுஞ் சிகைதன்
உரமு லாவுமுந் நூலென வேயணிந் துறையும்.
12
532 அல்ல தங்கவர் தங்களை முத்தலை அயிலால்
மெல்ல வேயெடுத் தேந்திடும் அவர்தமை விழியால்
தொல்லை நாளின் நீறாக்கியும் புனைந்திடுந் தூயோன்
மல்லல் மாதவம் அனையவர் இயற்றிய வகையால்.
13
533 ஆத லால்தனை வியப்பதற் கன்றவை அணிதல்
ஈத லாதொரு திறமுள தியாவரும் எவர்க்கும்
நாத னேயிவன் என்றுதன் பாங்கரே நண்ணித்
தீதெ லாமொரீஇ முத்திபெற் றுய்ந்திடுஞ் செயலே.
14
534 என்பு நீறொடு கழியுடல் சிகைமுடி எனைத்தும்
முன்ப ணிந்திடும் இயல்பினை முழுதுயிர்த் தொகைக்கும்
அன்பு செய்திடுஞ் செயலிது வாமென அறிநீ
பின்பு முள்ளதுங் கேண்மதி அகந்தையாற் பெரியோய்.
15
535 விண்ணு ளோர்க்கெலாம் அல்லலே வைகலும் விளைத்து
நண்ணும் ஆடக் கண்ணினன் முன்னமோர் நாளில்
மண்ண கந்தனை வௌவியே வயிற்றிடை வைத்துத்
துண்ணெ னப்பிலம் புக்கனன் உயிரெலாந் துளங்க.
16
536 கண்டு வானவர் யாவரும் அஞ்சினர் கரிய
கொண்டல்நன் மேனியம் பண்ணவன் கோகன தத்தோன்
துண்ட மாகிய விடத்திலோர் ஏனமாய்த் தோன்றி
அண்ட மீதுபோய் வடவரை எனவளர்ந் தார்த்தான்.
17
537 ஓரி மைக்குமுன் பாதலந் தன்னில்மால் உற்றுக்
கூரெ யிற்றினாற் பாய்ந்துபொற் கண்ணனைக் கொன்று
பாரி னைக்கொடு மீண்டுமுன் போலவே பதித்து
வீர முற்றனன் தன்னையே மதித்தனன் மிகவும்.
18
538 மாலும் அப்பகல் அகந்தையாய் உணர்வின்றி மருப்பால்
ஞாலம் யாவையும் அழிதர இடந்தவை நனிசூழ்
வேலை தன்னையும் உடைத்தனன் அன்னதோர் வேலை
ஆல மார்களத் தண்ணல்கண் டெய்தினான் அங்கண்.
(12. உரம் - மார்பு. முந்நூல் - பூணூல். 13. அயில் - சூலம்.
நீறாக்கி - விபூதி ஆககி.
15. கழியுடல் - வெண்டலை. முடி - தலைகள்.
16. ஆடகக் கண்ணினன் - இரணியாட்சன்.
17. கொண்டல்நன் மேனியம் பண்ணவன் - திருமால்.
கோகனதத்தோன் துண்டமாகிய இடத்தில் - பிரமனுடைய நாசியினிடத்தில்.
துண்டம் - நாசி. ஏனம் - (வௌ¢ளைப்) பன்றி. வடவரை - மேருமலை.
18. பொற்கண்ணன் - இரணியாட்சன். 19. மருப்பால் - கொம்பினால்.
இடந்து - கிளரி. வேலை - கடல்.)
19
539 கண்டு கண்ணுதல் அவன்மருப் பொன்றினைக் கரத்தால்
கொண்டு வல்லையிற் பறித்தலும் உணர்வுமுன் முறுக
விண்டு மற்றதும் பறிப்பன்இங் கிவனென வெருவிப்
பண்டு போலநின் றேத்தலும் போயினன் பரமன்.
20
540 அன்று கொண்டதோர் மருப்பினைச் சின்னமா அணிந்தான்
இன்றும் அங்கவன் மார்பிடைப் பிறையென இலங்கும்
ஓன்று மற்றிது கேட்டனை நின்றதும் உரைப்பாம்
நன்று தேர்ந்துணர் மறைகளும் இத்திறம் நவிலும்.
21
541 அடலின் மேதகு தேவரும் அவுணரும் அந்நாட்
கடல்க டைந்திடும் எல்லையின் மந்தரங் கவிழ
நெடிய மாலது நிறுவியே பொருக்கென நீத்தந்
தடவி உள்ளணைந் தாமையாய் வெரிநிடைத் தரித்தான்.
22
542 தரித்த வேலைஅவ் வேலையை மதித்திடத் தன்கண்
அருத்தி மிக்குறும் அமிர்தினைத் தருதலும் அதனைத்
தெரித்து மற்றிது நமதென நமதெனச் செப்பி
மருத்தின் நம்மையால் அமரரும் அவுணரும் மலைந்தார்.
23
543 மலைந்த போரினை நீக்கலன் மாயன்இவ் வரையை
அலைந்த வேலையின் நிறுவியே வெரிநிடை ஆற்றி
உலைந்தி டாவகை காத்துமா லெனப்பெரி துன்னக்
கலந்த தால் அவன் உளத்தினில் அகந்தையங் கடலே.
24
544 அகந்தை எய்தியே யாவையுந் தேற்றலான் அலைபோய்த்
திகந்த முற்றிட வேலைகள் உழக்கினன் திரியச்
சகந்த னக்கழி வெய்தலும் தனதருட் டன்மை
இகந்த னன்கொலாம் கண்ணனென் றுன்னினன் எங்கோன்.
25
545 அற்றை நாளவண் வல்லையில் ஏகியே அரிதன்
முற்ற லாமையின் உருவினை நோக்கியே முனிந்து
கற்றை வார்சடைக் கண்ணுதல் யாப்புறக் கரத்தாற்
பற்றி யாங்கவன் அகந்தையும் வன்மையும் பறித்தான்.
26
546 நினைந்து தொல்லுருக் கொண்டனன் புகழ்தலும் நிலவைப்
புனைந்த செஞ்சடை நின்மலன் அவுணரைப் போக்கி
இனைந்த தேவருக் கமிர்தினை ஈகென ஏக
வனைந்த மேனிமான் மாயைமால் அவுணரை மாய்த்தான்.
27
547 மாய்த்து வானவர்க் கமுதினை நல்கினன் வையங்
காத்த கண்ணனென் றுரைப்பரால் அவனுறு கமடம்
மீத்த யங்கிய காப்பினை வாங்கியே விமலன்
சாத்தி னான்முனம் அணிந்திடு மருப்புடன் சார.
(22. வெரித் - முதுகு. 23. மருத்து - அமிர்தம்.
24. அகந்தையங் கடல் - அகங்காரமாகிய கடல்.
25. திகந்தம் - திக்கின் முடிவு. இகந்தனன் - இகழ்ந்தனன்.
26. முற்றல் ஆமை - முதிய ஆமை.
28. கமடம் மீத் தங்கிய காப்பு - ஆமை ஓடு.)
28
548 வாரி சூழ்புவி அகழ்தரு கேழலின் மருப்பும்
மூரி யாமையின் ஓடுமேற் கொண்டது மொழிந்தாம்
தாரு காவனத் தெம்பிரான் பலிக்குறு தகவுஞ்
சேர வேயவண் நிகழ்ந்தவுங் கூறுதுந் தௌ¤நீ.
29
549 வேறு
முன்பு தாருக வனத்தின் முனிவரர் யாரும் ஈசற்
கன்பி லராகி வேள்வி அளப்பில புரிந்து தாமே
இன்புறு முத்தி தன்னை எய்துவான் உன்னி அங்கம்
துன்புற வாளா நோற்றுத் துணிவினால் ஒழுக லுற்றார்.
30
550 ஒழுகிய வேலை தன்னில் உயிர்க்குயி ராகி உற்றோன்
பழுதினை அகற்றித் தன்னோர் பாங்கரில் உமையாள் மேவ
விழுமிய கயிலை நாப்பண் வீற்றிருந் தருள்வோன் அங்கண்
இழுதையர் புரியும் நீர்மை யாவையும் உணர்ந்தான் அன்றே.
31
551 முன்னவன் இதனை நாடி முழுதுணர் முகுந்தன் தன்னை
உன்னினன் அன்ன பான்மை ஒய்யென உணர்ந்து மாலோன்
என்னையும் முதல்வன் தன்பால் எய்துவான் பணித்தான் என்னாப்
பன்னப அமளி நீத்துப் பணியினாற் கயிலை உற்றான்.
32
552 உற்றனன் நகர்முன் எய்தி உணர்த்திய நந்தி உய்ப்பப்
பற்றலர் புரமூன் றட்ட பரனடி பணிந்து முன்போய்
நிற்றலுங் குறிப்பால் அங்கண் நினைத்தன உணர்த்தி மாயன்
பொற்றடஞ் செங்கை பற்றிப் புனிதன்ஆண் டெழுந்து போந்தான்.
33
553 கயிலையங் கிரியை நீங்கிக் கண்ணனை நோக்கித் தொன்னாள்
இயலுறு நினது பெண்மை எய்துதி இவண்நீ யென்னப்
புயலுறழ் மேனி மாயோன் பொருக்கென அளப்பில் காமர்
மயலுறு பான்மை அங்கோர் மடந்தையாய் மருங்கு வந்தான்.
34
554 வந்திடு கின்ற காலை மாயைசேர் பொருண்மை முற்றுந்
1தந்திடும் உமையுங் காணில் தளர்ந்து வீழ்பான்மை தானும்
அந்தமில் யாணர் மேல்கொண் டாயிடைப் பெயர்ந்தான் முக்கண்
எந்தைதன் வடிவின் நீர்மை யார்விரித் துரைக்கற் பாலார்.
35
555 முன்பன துருவை எல்லாம் முகனுறு விழியால் மாந்தித்
முன்புறு மால்மீக் கொள்ளத் துண்ணென அரியுஞ் சோர்ந்தும்
அன்புடை அருளால் வந்தான் மற்றவன் தனக்கு மாலோன்
என்பதோர் பெயரும் அஞ்ஞான றெய்திய போலும் அன்றே.
(29. கேழல் - பன்றி. மூரி - பெரிய. 30. வாளா - வீணாக.
31. அங்கண் - இங்குத் தாருகாவனம். இழுதையர் - அறிவிலிகள்.
32. முதல்வன் - இறைவன்; சிவன். பன்னக அமளி - சேஷசயனம்.
32. பற்றலர் - பகைவர் ; திரிபுரர். 35. யாணர் - அழகு.
36. முன்பன் - முதல்வன்.)
36
556 நராரியின் உரிவை நீத்து நக்கனே யாகி முக்கட்
பராபரன் சூலத் தோடு பலிக்கலன் அங்கை கொண்டு
முராரிதன் பாங்கர் செல்ல முனிவருக் கிருக்கை யாகத்
தராதல மதிக்க நின்ற தாருகா வனத்திற் புக்கான்.
37
557 புக்கனன் மாலை நோக்கிப் போந்துநீ நமைஎண் ணாது
தொக்குறு முனிவர் வைகுஞ் சூழல்கள் தோறும் நண்ணி
மிக்கமால் பூட்டி அன்னோர் விரதங்கள் மாற்றி நந்தம்
பக்கநீ வருதி என்னப் பகர்ந்தனன் விடுத்துச் சென்றான்.
38
558 விடுத்தலும் முராரி ஏகி வேள்வியுந் தவமுந் தாமே
கொடுத்திடு முத்தி யென்னுங் கொள்கைசேர் முனிவர் யாரும்
அடுத்திடும் அவைக்கண் எய்தி அளவையில் அநங்கர் வல்லே
தொடுத்திடு சரங்க ளேபோல் துணைவிழி பரப்பி நின்றான்.
39
559 கண்டனர் முனிவர் அம்மா கதுமெனக் காம வேட்கை
கொண்டனர் விரத நோன்மை குலைந்தனர் மகத்தின் செய்கை
விண்டனர் மதனீர் பாய மெலிந்தனர் வெதும்பி வேழம்
உண்டிடு கனியாம் என்ன உணர்வுபோய் உருகா நின்றார்.
40
560 ஆலமார் கண்டத் தெந்தை அருளினால் மாயோன் கொண்ட
கோலமார் வடிவ மெல்லாங் குறிப்புடன் நோக்கி நோக்கிச்
சீலமாம் அனைத்தும் வீட்டிச் செழுஞ்சுடர் மலர்ச்சி கண்ட
ஓலமார் விட்டி லென்ன ஒல்லென வந்து சூழ்ந்தார்.
41
561 பார்கொலோ விசும்பு கொல்லோ பங்கயன் பதியோ காமன்
ஊர்கொலோ முகுந்தன் வைகும் உலகமோ உறையுள் அன்றேல்
நீர்கொலோ அமரர்க் காக நிருதரைத் தொலைத்தீர் உன்மை
ஆர்கொலோ உணரு கிற்பார் அடியருக் கருளு மென்றார்.
42
562 என்றிவை பலவும் பன்னி இடருழந் தெரியிற் பட்ட
மென்றளிர் அலங்க லென்ன வெதும்பியே விரகத் தீயால்
பொன்றினர் போன்று நின்றார் பொருவரு முனிவர் பொன்னார்
கொன்றையஞ் சடையோன் செய்த செயலினைக் கூறல் உற்றேன்.
43
563 கண்ணனை விடுத்தத் தானோர் கலனொடு சூலம் ஏந்தி
எண்ணரும் முனிவர் வைகும் இருக்கையின் மறுகு சென்று
பண்ணிசை மறைகள் பாடி ஐயமேற் படர்வார் போன்றான்
உண்ணிகழ் உணர்வாய் என்றும் உயிரினுக் குயிராய் நின்றான்.
(37. நராரி - நரசிங்கம். உரிவை - தோல்.
நக்கன் - நிருவாணி; சிவன். முராரி - திருமால்.
38. மால் பூட்டி - மோகத்தை உண்டாக்கி.
39. அளவைஇல் அநங்கர் - அளவற்ற மன்மதர்கள்.
40. விண்டனர் - விடுத்தனர். மதநீர் - காமநீர். வேழம் உண்டிடு கனி -
வேழம் என்னும் நோய் பிடித்த விளாங்கனி;
வேழம் என்னும் நோய்பிடித்த விளாங்கனி உள்ளீடின்றி இருக்கும்;
இதனைத்தான் 'யானையுண்ட விளாம்பழம்' என்பது.
41. ஓலம் - இரதல். விட்டில் - விட்டிற் பறவை; இ·து உருவைக் கண்டு
அழியும் தன்மையது.
43. பன்னி - சொல்லி. 44. கலன் - பிட்சாபாத்திரம். மறுகு - வீதி.
பண்ணிசை மறைகள் - பண்ணோசையோடு உள்ளாளக்கீதம்.)
44
564 பாட்டியல் இசையை அங்கண் முனிவர்தம் பன்னி மார்கள்
கேட்டலும் எவர்கொல் அம்மா கிடைத்தனர் அவரைக் காண்பான்
வேட்டன விழிகள் இன்னே விரைவினில் சேறும் என்னா
ஈட்டமொ டெழுந்து வீதி எய்தியங் கிறைவற் கண்டார்.
45
565 கண்ணுறு மாதர் யாருங் காமன்ஐங் கணையின் மூழகி
உண்ணிகழ் உணர்வு மாழ்க உயிர்பதை பதைத்துச் சோர
அண்ணல்தன் காத லென்னும் ஆழ்திரைப் பட்டார் அன்னார்
பண்ணிய செய்கை தன்னில் சிறிதியான் பகர்தல் உற்றேன்.
46
566 வேறு
காய மேல்அணி கண்டிலம் இத்தவர்
தூய பாடலைத் துண்ணெனக் கேட்டலும்
மேய காமத்தின் 1வீழ்ந்தனம் ஆகையால்
மாய மேஇவ் வடிவம்என் பார்சிலர்.
(பா-ம் 1 - வீழ்ந்தன வாகையால்.)
47
567 ஐயர் செய்கை அறிந்தனம் இவ்விடைப்
பைய வந்து பலிதனைக் கேட்பது
மெய்ய தன்றிது மெல்லிய லார் தமை
மையல் செய்திட வந்ததென் பார்சிலர்.
48
568 நன்று நன்றிந்த நற்றவர்க் காந்துகில்
ஒன்று நல்கி உணவளித் கோவிலா
மன்ற லின்புற மங்கையர் ஏவரும்
இன்று கொல்என் றிரங்குகின் றார்சிலர்.
49
569 மாறி லாஇவ் வனத்திடை வந்தனன்
வேறொரு ரூரிடை மேவிலன் போலுமால்
தேறில் யாமுனஞ் செய்திடு செய்தவப்
பேறி தாமெனப் பேசுகின் றார்சிலர்.
50
570 ஈண்டு வந்த இருந்தவன் யாரையும்
வேண்ட லன்இது மெய்மை அவன்பதம்
பூண்டு காதலிற் போற்றுநர் போலமெய்
தீண்டு தும்மெனச் செப்புகின் றார்சிலர்.
51
571 பூணி லங்கிய பொற்றொடி சங்கினம்
மாணு றுந்துகில் மற்றிவை சோர்தலுங்
காணு கின்றனர் கைநெரித் தஞ்சியே
நாணி வீதி நடுவிருந் தார்சிலா¢.
52
572 ஏமம் பாயமெய் எங்கணுங் காமவேள்
தூமம் பாயவை சூழ்ந்துயிர் வாட்டிட
வாமம் பாய்புனல் போல்மயிர்க் கால்தொறுங்
காமம் பாயக்க லுகின் றார்சிலர்.
(47. காமமேல் - உடலின்மேல்.
49. துகில் - ஆடை. ஏவரும் - எவரும்.
51. பதம் - பாதம். மெய் - உடல். 53. ஏமம் - கலக்கம்.
தூம் அம்பு - விடும் அம்புகன்.
வாமம் - மலை. புனல் - பால்நீர்.)
53
573 பாசம் நீங்கிப் பரபதம் ஈதென
ஆசை யோடுகண் டன்புசெய் வாரென
வாசம் நீங்கி வளையுகுத் தையர்தங்
கோசம் நோக்கினர் கும்பிடு வா£சிலர்.
54
574 இளையி னோடுறும் எந்தைதன் வேட்கையால்
களையி னோடு கதுமெனச் சென்றுபால்
அளையி னோடுறும் ஓதனம் அங்கைவீழ்
வளையி னோடு வழங்குகின் றார்சிலர்.
55
575 பாவை மார்முன் பலிக்குறுந் தன்மையால்
நீவி இன்றிந் நெற்றியங் கண்ணுதல்
மேவும் நந்துகில் வீழ்கினும் வீழுக
ஏவ மோஎமக் கென்றுரைப் பார்சிலர்.
56
576 போய நாணம் புகுந்தது மால்உளந்
தீயு மால்நிறை சிந்திய தாருயிர்
வீயும் மெய்யும் விளிந்திடும் எம்முயிர்
ஈயும் எங்களுக் கென்றுரைப் பார்சிலர்.
57
577 தண்டு லங்கொல் தவத்தர் இரப்பெனக்
கொண்டு சென்று குறுகினர் காமமாம்
மண்டு தீச்சுட வண்பொடி ஆதலும்
அண்டர் நாயகன் போலணிந் தார்சிலர்.
58
578 வடிவி னால்எமை மாலுறுத் தாளுமென்
றடியில் வீழினும் ஆரருள் செய்கிலர்
கடிது போவது போலுங் கருத்திவர்க்
கிடுகி லீர்ஐயம் என்றுரைப் பார்சிலர்.
59
579 ஆர மற்றனர் ஆரமும் வீழமெய்
ஈர மற்றனர் ஈரம் அதன்படை
தீர மற்றனர் தீரவு மேகலா
பாரம் அற்றனர் பாரமற் றார்சிலர்.
60
580 சூலம் உண்டு சுடர்விழி மேல்நிமிர்
பாலம் உண்டு படர்சடை யுண்டுசெங்
கோலமுண்டு குறைமதி உண்டிவர்
ஆல முண்டவர் ஆகுமென் பார்சிலர்.
61
581 எந்தை யார்தம் இருங்குறி யின்கணே
சிந்து கின்ற திவலையொன் றல்லவோ
உந்தி மேல்வந் துலகனைத் துந்தரும்
அந்த நான்முகன் ஆனதென் பார்சிலர்.
(54. வாசம் நீங்கி - ஆடை இழந்து. வளை - வளையல்.
கோசம் - ஆண்குறி.
55. இளை - இளமை. அளை - தயிர். ஓதனம் - சோறு.
56. நீவி - ஆடை. ஏவமோ - குற்றமோ.
58. தண்டுலம் - அரிசி.
59. கடிது விரைந்து ஐயம் இடுகிலீர் - பிச்சையிடாதிர்கள்.
62. இரும்குறி - பெருமை பொருந்திய ஆண்குறி. திவலை - துளி.)
62
582 சங்கும் ஆழியுந் தாங்குதல் இன்றியே
பொங்கு காமரம் பொன்னந் துகிலொரீஇத்
துங்க மாதவர் துண்ணென மால்கொள
அங்கண் மேவும் அரியையொத் தார்சிலர்.
63
583 கட்டு செஞ்சடைக் கண்ணியின் உள்ளகப்
பட்ட மான்எனப் பார்த்தகண் வாங்கலர்
சட்டு வந்தனில் தாங்கிய ஓதனம்
இட்டு வௌ¢ளிடை ஏமரு வார்சிலர்.
64
584 கிளியின் மேற்செலுங் கேழ்கிளர் ஓதிமம்
களிம யக்குறு காளகண் டத்திறை
வௌ¤யின் மேனியும் மெய்ப்படு கோலமுந்
தௌ¤கி லாது தெருமரு வார்சிலர்.
65
585 அளியின் அட்ட அடிசில்கொண் டாயிடைக்
களிம மயக்கங் கருத்துற ஏகியே
ஔ¤யி னுக்கோ ளியாகி உள்ளாருரு
வௌ¤யி னுக்கு விரைந்தளிப் பார்சிலர்.
66
586 அண்ணல் மேனிகண் டார்வமுற் றாடைபோய்ப்
பெண்ணின் நீர்மைப் பெருங்குறி மூடியும்
கண்ணை மூடியும் வைக்கடங் காமையால்
விண்ணை மூடினர் போல்வௌ¢ கினார்சிலர்.
67
587 விருந்த ராயிவண் மேவினிர் விண்ணவர்
மருந்து போல்வதொர் வண்பதம் உண்டவை
அருந்தி யேநல் லருள்புரிந் தோரிறை
இருந்து போமென் றிசைத்திடு வார்சிலர்.
68
588 கையி லேந்து கலனொடு சூலமும்
வையும் நம்மனை வந்திடும் பாலொடு
நெய்யும் உண்டியும் நிற்றலும் உண்டியாம்
உய்ய நீரிங் குறையுமென் பார்சிலர்.
69
589 பார்க்குமா தர்க்கும் பல்குழு ஆடவர்
ஆர்க்கும் மையல் அளிக்கும் வடிவுளீர்
சீர்க்கும் ஓடொன்று செங்கைகொண் டெங்கணும்
ஏற்கு மோவிதென் என்றுரைப் பார்சிலர்.
70
590 இன்றுமைக் கண்டி யாங்களும் ஆடைபோய்
ஒன்று காதலுற் றோய்ந்தனம் இங்கிது
நன்று கூடுதிர் நங்களை நீரென
நின்று கூறி நெடிதுயிர்த் தார்சிலர்.
(63. சங்கு - பாஞ்ச சன்னியம்; வளையல். ஆழி - சக்கரம்; மோதிரம்.
பொன்னம் துகில் - பீதாம்பரம்;
அழகிய ஆடை. 64. செஞ்சடைக் கண்ணி - செஞ்சடையாகிய வலை.
சட்டுவம் - அகப்பை.
65. கிளியின் மேற்செலும் கேழ்கிளர்ஓ திமற் - திலோத்தமையாகிய கிளியின்மேல்
ஆசைகொண்டு தொடர்ந்து சென்ற அழகு பொருந்திய பிரமதேவனாகிய அன்னம்.
67. பெண்ணின் நீர்மைப் பெருங்குறி - பெண்தன்மைக்குரிய பெண்குறி.
68. மருந்து - தேவாமிர்தம். பதம் - சோறு. 69. கலன் - பிரம கபாலம்.)
71
591 நந்தும் இவ்வனம் நண்ணிய மாதவர்
இந்த வேலையில் ஏகலர் யாவதுஞ்
சிந்தை கொள்ளலிர் சேக்கையுண் டோரிறை
வந்து போமென வாய்மலர்ந் தார்சிலர்.
72
592 எம்மை ஆரிட மாதரென் றெண்ணியோ
வெம்மை பேசினும் மேவுகி லீர்பவம்
உம்மை மேவுங் கொலோஒழிந் தார்கள்போல்
அம்ம வந்தெமை ஆளுமென் பார்சிலர்.
73
593 ஆடை தாரும் அதன்றெனில் கொண்டதோர்
வேடை தீரும் விளம்பு கிலீரெனில்
கூட வாருங் குறிப்புமக் கென்னெனப்
பாடு சோ¢ந்து பகர்ந்திடு வார்சிலர்.
74
594 ஒல்லு கின்ற துமக்கிவ் வடிவினால்
செல்லு கின்ற தெரிவையர் யாரையுங்
கொல்லு கின்றது வோபலி கொள்வதோ
சொல்லு மென்று தொடர்ந்திடு வார்சிலர்.
75
595 போற்றி இங்கெமைப் புல்லும்என் றாலுமால்
ஆற்றி இன்பத் தணைகிலிர் யாவருஞ்
சாற்று கின்றனர் சங்கரர் என்றுமை
ஏற்று தோவதற் கென்றுரைப் பார்சிலர்.
76
596 அணங்கின் நல்லவர் அண்ணல்தன் கோசமேல்
நுணங்கு மாலொடு நோக்கி அதற்குமுன்
வணங்கு மாறென மற்றவர் நாணுபு
கணங்க ளோடு கவிழ்ந்துசென் றார்சிலர்.
77
597 வேறு
இன்னவர் பலருஞ் சூழா ஈண்டுபு கலையுஞ் சங்குந்
துன்னிய கலனும் நாணுந் துறப்பருங் கற்புஞ் சிந்தி
மன்னுயிர் ஒன்றுந் தாங்கி மால்கொடு தொடர எங்கோன்
பொன்னடிக் கமலஞ் சேப்பப் புனிதமா மறுகிற் போனான்.
78
598 சில்லிடை வீணை நாதஞ் செய்திடும் அ·தே அன்றிச்
சில்லிடை மறைகள் பாடுஞ் சில்லிடைச் சிவநூல் ஓதுஞ்
சில்லிடைத் தன்மெய் காட்டுஞ் சில்லிடை ஐயங் கேட்குஞ்
சில்லிடை அன்பர் போல்தன் சீர்த்தியைப் புகழ்ந்து செல்லும்.
(72. இந்த வேலையில் - இப்பொழுது. ஏகலர் - வாரார். சேக்கை - படுக்கை.
74. வேடை - விரகதாபம். குறிப்பு - கருத்து.
76. சங்கரன் - இன்பத்தைச் செய்பவன்.
79. சிவநூல் - சிவாகமம்.)
79
599 தேமலர்க் கமலை அன்ன தெரிவையர் தொழுங்கால் ஈசன்
மாமலர்த் தாள்மேல் இட்ட மலர்களும் அன்னார் சிந்துந்
தூமலர்த் தொடையுஞ் சங்குந் துலங்குபொற் கலனுங் காமன்
பூமலா¢த் தொடையும் ஈண்டப் பொலிந்ததப் புனித வீதி.
80
600 ஊனுலாம் உயிர்கட் கெல்லாம் உணர்வுடன் உயிராய் நின்றோன்
வானுலாம் பலிக்கு வந்த வடிவினை நினைக்கின் மாயோன்
தானுமா லாகி இன்னுந் தளர்வுறும் என்றால் அம்மா
ஏனையோர் செய்கை தன்னை இனைத்தென இயம்ப லாமோ.
81
601 செந்திரு வனைய மேனிச் சீறடிக் கருங்கட் செவ்வாய்ப்
பைந்தொடி மகளிர் கற்பாம் பரவைகள் மதிக்கும் எண்ணில்
மந்தரம் போன்றான் எங்கோன் மற்றவர்க் கெல்லாம் வெவ்வே
றிந்திர ஞால மென்று எல்லையில் உருக்கொண் டெய்தி.
82
602 நீண்டஅந் நிகமம் புக்க நிமலன்மேல் ஆர்வம் வைத்துக்
காண்டகு மாதர் யாருங் கருவுறு நிலையராகி
மாண்டகு வயாவும் மற்றோர் வருத்தமும் இன்றி யாங்கே
ஆண்டகை மகார்க ளாக வாறெண்ணா யிரரைப் பெற்றார்.
83
603 பந்தைபால் விழைவு செய்தாங் கிமைப்பினின் மடவார் ஈன்ற
மைந்தர்கள் யாரும் ஐயன் மலரடி முன்னர்த் தாழ்ந்து
புந்திகொள் அன்பின் நின்று போற்றிட அனையன் நீவிர்
நந்தமை உன்னி ஈண்டு நற்றவத் திருத்திர் என்றான்.
84
604 நெட்டிருஞ் சடில மீது நிலவினை முடித்த அண்ணல்
கட்டுரை செய்தல் கேளாக் கைதொழூஉ விடைபெற் றேகி
உட்டௌ¤ வெய்தி நோற்றாங் கொருசிறை இருந்தார் நாற்பான்
எட்டுள பத்து நூற்றின் எண்டொகை முனிவர் யாரும்.
85
605 சேயென வந்தோர் நோற்பச் சென்றுழித் தெரிவை மாராம்
மாயிரும் பரவை நீத்தம் மால்கொடு தொடர்ந்து செல்லப்
போயினன் என்ப மன்னோ புரியிகந் தரிமுன் ஈந்த
ஆயிரங் கமலங் கொண்டோர் ஆழியை அளிக்க வல்லோன்.
86
606 போதலும் அதனை நோக்கிப் பொற்றொடி யாகி நின்ற
சீதரன் அமலன் தன்பாற் சேறலுந் தொடர்ந்து பின்னா¢
மாதவர் யாரும் போந்தார் மற்றதன் இயல்பு நோக்கி
ஏதமில் கங்கை பாலாம் யமுனையைக் கடுத்த தன்றே.
87
607 மெல்லியல் வடிவ மாகி மேயினோன் தன்பால் வீழ்ந்து
செல்லுறு முனிவர் ஆற்றத் தீவினை புரிந்த நீரால்
அல்லுறழ் மிடற்றுப் புத்தேள் அவர்க்கெலாந் தனதாய் உள்ள
தொல்லுரு மறைத்து வேறோர் வடிவொடு தோன்றி நின்றான்.
(82. கற்பாம் பரவைகள் - கற்பெனும் கடல்களை. மதிக்கும் - கடைகின்ற.
83. நிகமம் - வீதி. கரு - கருப்பம். வயா - கருப்பநோய்.
ஆண்டகை மகார்கள் - ஆண்மக்கள்.
86. ஓர் ஆழி - ஒப்பற்ற சுதரிசனம் என்னும் சக்கரப்படை.
87. சீதரன் - திருமால்.
கங்கை - இது தௌ¤ந்த நீர். யமுனை - இது கலங்கிய நீர்.
கங்கை மாயோன் உள்ளத்திற்கும்; யமுனை தாருக முனிவர் உள்ளத்திற்கும் உவமைகளாகும்.)
88
608 மடந்தை யாய்வந்த மாலோன் மணிமிடற் றிறைவன் தன்பால்
அடைந்திட முனிவர் தத்தம் அரிவையா¢ தம்மை நோக்கித்
தொடர்ந்தனர் இவரும் நம்போல் தோற்றனர் கலையும் நாணுங்
கடந்தனர் இவனைக் கண்டு காதலித் தார்கொல் என்றார்.
89
609 மோனமா நெறியின் நோற்கும் முனிவரர் முகுந்தன் தன்பால்
ஆனமால் சிறிது நீங்கி அருங்குலப் பன்னி மார்கள்
ஈனமா நிலையை நோக்கி இன்னலுற் றிரங்கி ஏங்கி
மானமேல் கொண்டு வீடா மன்னுயி ரோடு நின்றார்.
90
610 பொன்னுலாம் அல்கு லாள்இப் பொற்றொடி ஒருத்தி எம்பால்
மன்னிய தவத்தைச் சிந்தி மால்செய்தாள் ஒருவன் வந்து
பன்னிமார் கற்பை வீட்டிப் படுத்தினன்¢ மோகம் அந்தோ
என்னமா யங்கொ லீதென் றெண்ணினர் யாரும் ஈண்டி.
91
611 எண்ணிய முனிவர் தேறி இயம்புவார் கயிலை வைகுங்
கண்ணுத லாகும் இன்னோர் கற்பினை உடைத்தான் யாமுன்
பண்ணிய தவத்தை வீட்டப் பைந்தொடி யாகி வந்தோன்
மண்ணுல கனைத்தும் உண்ட மாயவன் போலும் அன்றே.
92
612 நந்தவந் தன்னை வீட்ட நாரணன் தானே நம்பால்
வந்தனன் அன்றால் ஈசன் பணியினால் மாயை செய்தான்
இந்திரை கேள்வன் செய்த தென்கொலோ எமது நோன்பு
சிந்தினும் நன்றால் இன்னுந் தீர்வுநேர்ந் தியற்று கின்றோம்.
93
613 அங்கையிற் கபால்ஒன் றேந்தி ஐயம்ஏற் றிடுவான் போலச்
சங்கரன் வந்து மற்றித் தாருகா வனத்தின் மேவு
மங்கையர் கற்புச் சிந்தும் வசையுரைக் கொழிவு முண்டோ
செங்கதிர் மதியஞ் செல்லுந் திசையெலாம் பரவும் அன்றே.
94
614 தானொரு வேடங் கொண்டுந் தண்டுள வலங்கற் சென்னி
வானவன் தன்னை விட்டு மற்றிவை அனைத்துஞ் செய்தோன்
கானுறு கடுக்கை வேய்ந்த கண்ணு தலேகொல் என்றே
மானவெங் கனலுஞ் சீற்ற வன்னியுங் கிளர நின்றார்.
95
615 நின்றிடு முனிவர் யாரும் நெருப்பெழ விழித்துச் செம்பொற்
குன்றுறழ் முலையி னார்தங் குழுவினைக் கூவி யார்பின்
சென்றிடு கின்றீர் கற்பின் செய்கைய திகந்தீர் இங்ஙன்
பொன்றுதல் அழகி தன்றேல் போமின்நும் புரியின் என்றார்.
96
616 இத்திற மாதர் கேளா ஈங்கிவர் தம்மைக் கண்டோர்
முத்தராய் உறுவ தன்றி முடிவரோ முனிவர் தாமும்
பித்தர்கொல் என்றே அன்னான் பிறங்குரு வினையுட் கொண்டு
நித்தன தருளால் மீண்டு நீணகர் இருக்கை புக்கார்.
(90. மோனமா நெறி - மௌன வழி. மானம் - அபிமானம். வீடா - இறவா.
93. இத்திரை கேள்வன் - இலக்குமி நாயகன்; திருமால். 94. கபால் - கபாலம்.)
97
617 நீணகர் புகுந்த பின்னர் நேழிழை மகடூஉ வாகித்
தாணுவின் அயலின் நின்ற தண்டுள வலங்கற் புத்தேள்
ஆணுவின் உருவு கொண்டான் அருளினால் அனைய தன்மை
காணிய விரிஞ்ச னாதிக் கடவுளர் யாரும் வந்தார்.
98
618 கடவுளர் யாரும் வந்த காலையில் அங்கண் நின்ற
முடிவறு முதல்வன் தன்னை முனிவொடு நோக்கி ஈண்டுக்
கொடியதோர் வேள்வி ஆற்றிக் கொல்லுதும் இவனை என்னா
மடமைகொள் முனிவர் சூழ்ந்து மற்றொர்தீ மகத்தைச் செய்தார்.
99
619 எள்ளுதற் குரிய வேள்வி எரியதன் இடையே யாரும்
உள்ளுதற் கரிய தோற்றத் துருமிடிக் குரல பேழ்வாய்த்
தள்ளுதற் கரிய சீற்றத் தழல்விழித் தறுகட் செங்கால்
வள்ளுகிர்ப் புலியொன் றம்மா வல்லையின் எழுந்த தன்றே.
100
620 எழுதரு புலியை நோக்கி ஈசனை முடித்தி என்றே
தொழுதனர் விடுப்ப ஆங்கே துண்ணென வருத லோடும்
அழல்விழிப் பரமன் நேர்போய் அங்கையால் உரித்து மற்றவ்
வுழுவையந் தோலை முன்னம் உடுத்தனன் தானையொப்ப.
101
621 இங்கிது போய பின்றை இறுதிசெய் கணிச்சி ஒன்று
செங்கன லிடையில் தோன்றித் தீயவர் விடுப்ப ஏகிச்
சங்கரன் தனது முன்னஞ் சார்தலும் அதனைப் பற்றி
அங்கையில் ஏந்தி நீநம் அடுபடை யாதி என்றான்.
102
622 பின்னுற ஒருமான் அங்கட் பிறந்தது முனிவர் எல்லாம்
அன்னதை அரன்பால் உய்ப்ப அந்தரத் தெழுந்து பாய்ந்து
தன்னெடுங் குரலால் வல்லே சராசரம் வீட்டிச் செல்ல
முன்னவன் உயிர்கள் அற்றால் முடிவுறா தருட்கண் வைத்தான்.
103
623 மற்றதன் பின்றை எந்தை மான்பிணை அதனை நோக்கித்
தெற்றென விளித்து நத்தஞ் செவியினுக் கணித்தாய் மேவி
நிற்றலுங் கூவு கென்றே நீடருள் செய்து வாமப்
பொற்றடங் ககையிற் பற்றிப் பொருக்கென ஏந்தி நின்றான்.
104
624 ஏந்திய பின்னர் வேள்வி எரியழற் கிடையே எண்ணில்
பாந்தளங் கெழுந்து தீயோர் பணியினாற் சீற்றத் தோடும்
போந்தன அவற்றை மாயோன் புள்ளினுக் கஞ்சித் தன்பாற்
சேர்ந்திடு பணிக ளோடுஞ் செவ்விதிற் புனைந்தான் எங்கோன்.
(98. மகடூஉ - பெண். தாணு - அசைவில்லாதவன்; சிவன்.
99. தீமகம் - அபிசார வோமம்.
100. வேழ்வாய் - பிளந்த வாய். 101. முடித்தி - சொல்வாயாக.
உழுவை - புலி. தானை - ஆடை.
102. கணிச்சி - மழு. தீயவர் - தாருகவன முனிவர்.
104. வாமம் - இடதுபக்கம்.
105. பாந்தள் - பாம்பு. பணிகளோடு - பாம்புகளோடு.)
105
625 பணியெலாம் பணிய தாகிப் பரனிடைத் திகழப் பின்னர்
அணிகெழு கனலின் நாப்பண் அசனிகள் எழுந்தா லென்னக்
கணிதமில் பூத வௌ¢ளங் கதுமென எழலும் நீவிர்
மணிகிளர் மிடற்றோன் வன்மை மாற்றுதிர் என்றே உய்த்தார்.
106
626 ஆரிடர் ஏவல் போற்றி அண்டமுந் துளங்க ஆர்த்துச்
சாரதர் வருத லோடுஞ் சங்கரன் அவரை நோக்கி
நீரெமை அகன்றி டாது நிற்றலுந் தானை யாகிச்
சேருதி ரென்றான் உற்றோர் தீவினை தீர்க்க வல்லான்.
107
627 ஆற்றல் சேர்பூதர் யாரும் ஆதியீ துரைப்ப அன்னான்
போற்றியே தானை யாகிப் புடையுற நிற்ற லோடுஞ்
சீற்றமா முனிவர் வேள்வித் தீயில்வெண் டலைதான் ஒன்று
தோற்றியே உலகம் யாவுந் தொலையநக் கெழுந்த தன்றே.
108
628 நக்கெழு சிரத்தை அன்னோர் நாதன்மேல் விடுத்த லோடும்
அக்கணம் அணுக வற்றால் அகிலம திறவா வண்ணம்
முக்கணன் அருள்செய் தந்த முணடமுண் டகக்கை பற்றிச்
செக்கரஞ சடைமேற் கொண்டுன் செயலினைப் புரிதி யென்றான்.
109
629 அறுகுறை முடிமேற் கொண்ட அமலனை நோக்கி நோக்கி
இறுகிய முனிவர் தத்தம் வாய்மை மந்திரங் களேவி
இறுதி செய்திடுதி ரென்ன இனையவை துடியொன் றாகிச்
செறிதரு புவனம் யாவுஞ் செவிடுற ஒலித்த தன்றே.
110
630 பொருவருந் துடியின் ஓதை பொம்மெனக் கேட்ட லோடுந்
தரணியின் வானி னுள்ள சராசரம் யாவும் ஈசன்
அருளினால் வீடிற் றில்லை அசனியின் ஆர்ப்புக் கேட்ட
உரகர் தங்குலங்க ளென்ன ஒய்யென மயங்கிற் றன்றே.
111
631 அத்துடி ஆர்த்துச் செவ்வே அமலன்முன் அணுக மற்றைக்
கைத்தலம் அதனிற் பற்றிக் கறங்குதி கன்னத் தென்று
வித்தக மரபில் யாரும் வியப்புற ஏந்தி நின்றான்
இத்திறம் யாரே செய்வார் என்றனர் முனிவ ரெல்லாம்.
112/tr>
632 இனையது கண்டு பின்னும் இறுதிசெய் இறைவற் கின்றால்
அனைய தென்றறிதல் தேற்றார் அடுசினங் கடவத் தொல்லூழ்
வினையது விளைவாற் பின்னும் வேள்வியை இயற்றல் உற்றா£
முனிவரர் கனற்க ணேயோர் முயலகன் எழுந்த தன்றே.
113
633 முயலகன் தன்னை நோக்கி முகமனுஞ் சொற்றுத் தங்கள்
செயலகன் றிருந்த வேள்வித் தீயையும் விளித்து நந்தம்
இயலகன் றிடவே செய்த ஈசனை முடித்தி ரென்றே
மயலகன் றிலாதார் உய்ப்ப வல்விரைந் தணைந்த அம்மா.
(106. அசனி - இனி. 107. ஆரிடர் - முனிவர்.
109. நக்கு எழு சிரம் - சிரித்தலையுடைய வெண்டலை.
110. இனையவை - இங்கு, மந்திரங்கள். துடி - உடுக்கை.
111. ஓதை - ஓசை. பொம்மென - விரைந்து.
ளுரகர் - தாகங்கள். 113. முயலகன்- இவன் ஒருபூதம்.
114. முகமன் - உபசார வார்த்தை. சொற்று - உரைத்து.)
114
634 வன்னியந் தேவும் உட்க வந்திடு கனலை யார்க்கும்
முன்னவன் ஒருகை ஏந்தி முயலகன் தன்னை மெல்லத்
தன்னடி அதனால் வீழத் தள்ளிஅக் கமலத் தாளை
வென்னிடை அருளால் ஊன்றி விண்ணவர் போற்ற நின்றான்.
115
635 நிற்றலும் அதனைத் தீயோர் நெருப்பெழ விழியா இன்னும்
உற்றனன் பரமன் அந்தோ உஞற்றி யாமுய்த்த வெல்லாம்
இற்றன கொல்லோ என்றே இரங்கியே எண்ணில் சாபஞ்
சொற்றனர் உலக மெல்லாந் தொலைப்பவன் தொலைய வென்றே.
116
636 சங்கையில் முனிவர் யாருஞ் சாற்றிய சாபம் யாவும்
எங்கடம் பெருமான் முன்னும் எய்திய தில்லை அன்னோர்
எங்கவன் தன்பால் உய்க்கும் அளவையில் இறுதி நாளிற்
பொங்கெரி அதன்மேற் செல்லும் பூளைபோல் மாய்ந்த அன்றே.
117
637 சாபமும் பயனின் றாகத் தவத்தர்கள் யாருங் கொண்ட
கோபமும் நீங்கி ஆற்றல் குறைந்தொரு செயலும் இன்றிச்
சோபமும் நாணுங் கொண்டு துளங்கியே தொலைவி லாத
பாபமும் பழியும் பூண்டு படிக்கொரு பொறையாய் நின்றார்.
118
638 ஏற்றமில் முனிவர் தங்கள் ஏழைமை தனையென் னென்று
சாற்றுதும் இறுதி இல்லாத் தாணுவை முடிப்பான் வேள்வி
ஆற்றினர் பலவும் உய்த்தார் அறைந்தனர் சாபம் அற்றால்
மாற்றி அற்றோ தங்கள் வன்மையும் இழந்தோர் மாதோ.
119
639 கடுக்கையும் நதியும் பாம்புங் கலைமதிக் கொழுந்துஞ் சென்னி
முடித்தவன் பதத்தில் ஊன்று முயலகன் மெல்ல மெல்ல
எடுத்தெடுத் தசைத்த லோடும் ஏதுவங் கதனை நோக்கி
நடித்தனன் என்றும் நீங்கா நடம்புரி கின்ற தேபோல்.
120
640 ஆண்டவ ணிமையா முக்கண் ஆதிநா யகன்அஞ் ஞான்று
தாண்டவம் புரித லோடுஞ் சகமெலாந் துளங்கிற் றங்கண்
ஈண்டிய வுயிர்கள் அச்சுற் றிரங்கிய நடுக்கம் எய்தி
வீண்டனர் வேள்வி செய்து வினையினை ஈட்டும் வெய்யோர்.
121
641 நஞ்சணி கண்டத் தெந்தை நடநவில் செய்கை தன்னைக்
கஞ்சனும் ஆழி யானுங் கண்டுகண் களித்துப் போற்றி
செஞ்சகம் மகிழ்ந்து பாங்கர் நின்றனர் மகவான தன்னோ
டெஞ்சிய அமரர் யாரும் இறைஞ்சுவார் போல வீழ்ந்தார்.
122
642 அருளொடு நிருத்தஞ் செய்யும் அண்ணலிப் புவனம் யாவும்
வெருவுறு செயலும் வீழும் விண்ணவர் அயர்வு நோக்கித்
திருநட மொழிந்து நிற்பத் தேவருந் தேவர் கோனும்
பருவுடன் எழுந்து நின்று கைதொழூஉப் பாங்கர் உற்றார்.
(115. வன்னியந்தேவு - அக்கினிதேவன். 116. உஞற்றி - உண்டாக்கி.
117. இறுதி நாளில் பொங்குஎரி - ஊழித்தீ பூளை - பூளைப்பஞ்சு.
119. ஏழைமை - அறியாமை.
120. கடுக்கை - கொன்றை. 121. விண்டனர் - விலகி நின்றனர்.)
123
643 மாதொர்பா கத்தோன் தன்னை மதித்திடா முனிவர்க் கெல்லாம்
போதமே யருள லோடும் பொருக்கென எழுந்து பொல்லா
ஏதமே இயற்று கின்ற எம்பெரும் பிழைகள் யாவும்
நாதநீ பொறுத்தி என்று நடவில் கழல்முன் வீழ்ந்தார்.
124
644 பொறுத்தி எம்பிழையை என்றே போற்றிசெய் முனிவர் தங்கள்
திறத்தினை நோக்கி நந்தஞ் செந்நெறி யொழுதித் தீய
மறத்தினை அகற்றி மேலை மாதவம் புரிதி ரென்று
நிறுத்தினன் அடையா தார்க்கும் நீடருள் புரியும் நித்தன்.
125
645 முனிவரை நிறுவி அங்கண் முக்கணன் மீண்டு வௌ¢ளிப்
பனிவரை ஏகி மாலும் பங்கயத் தவனும் வானோர்
அனைவருந் தத்தம் பாலில் படைந்திட அருளி அம்பொற்
புனையிழை உமையி னோடும் பொருந்திவீற் றிருந்தான் அன்றே.
126
646 உரித்திடும் உழுவை வன்தோல் உரிமுத லுள்ள எல்லாந்
தரித்ததும் எங்கள் நாதன் தாருகா வனத்தில் அன்று
நிருத்தம தியற்றி நின்ற நீர்மையும் பிறவும் எல்லாம்
விரித்திவண் உரைத்தாங் கேட்டி மேலதும் இயம்பு கின்றாம்.
127
647 வேறு
துங்க மால்கரி யாக்கையின் உலகெலாந் தொலைக்கும்
வெங்க யாசுரன் என்பவன் மேருவின் மிசைபோய்ப்
பங்க யாசனற் போற்றி செய்தருந் தவம்பயில
அங்கண் நாடியே தோன்றினன் உலகெலாம் அளித்தோன்.
128
648 வேண்டு கின்றதென் மொழிகென நான்முகன் விளம்ப
ஆண்டு நோற்றிடுங் கயாசுரன் என்றனக் கடிகேள்
மாண்டி டாதபே ராயுளும் ஆற்றலும் வயமும்
ஈண்டு நல்குதி என்றலும் நகைத்திவை இசைப்பான்.
129
649 இந்த வண்ணநீ வேண்டிய தளித்தனம் இகலில்
அந்தி வண்ணன்நேர் சென்றிடல் சேறியேல் அந்நாட்
சிந்தும் இவ்வரங் கடைப்பிடி ஈதெனச் செப்பி
உந்தி வந்தவன் போயினன் தனதுபே ருலகில்.
130
650 அன்ன காலையில் கயாசுரன் என்பவன் அயன்சொல்
உன்னி ஈசன்மேற் போகலாம் ஒழிந்தவர் தம்பால்
துன்னி வெஞ்சமர் ஆற்றி எவ்வு லகமுந் தொலைத்தே
இன்னலே புரிந்திருத் தும்என் றுன்னியே எழுந்தான்.
(124. போதம் - நல்லுணர்ச்சி. பொல்லா ஏதம் - பெரும்பிழை.
128. துங்கமால் - பெரிய மதமயக்கம் பொருந்திய.
129. அடிகளே - சுவாமியே.
130. அந்தி வண்ணன் - சிவபெருமான். சேறியேல் - செல்லுவாயாயின்.)
131
651 எழுதல் கொண்டிடும் அவுணர்கோன் அமரர்கள் யாருங்
குழுமியே அமர்வான் பதந்தொ றுந்தொறுங் குறுகி
வழுவியே அவர்முரிந் திடப்பொ ருதுமற் றவரூர்
முழுது மட்டுமா சுவர்க்கமேல் ஏகினன் முனிவால்.
132
652 போகி யோட மராற்றியே அன்னவன் புறந்தந்
தேகவே துரந்துயர்த் திடுநாள் மருப்பி யானைத்
தோகை வானுதி பற்றியே பன்முறை சுலவி
மாக யாசுரன் ஓச்சினன் மகபதி மயங்க.
133
653 பின்னர் அன்னதோர் பொன்னகர் அழித்தனன் பெயர்ந்து
துன்னு மெண்டிசைக் காவலர் தமையெலாந் துரந்து
தன்னி னங்களாம் அவுணர்கள் தம்மையுஞ் சாடி
வன்னி யஞ்சிகை அரக்கர்தங் குழுவையும் மாய்த்தான்.
134
654 மஞ்சு நேர்தரு கயாசுரன் புவிமிசை வைகி
வெஞ்சி னங்கொடே மக்கள்தந் தொகையெலாம் வீட்டி
நஞ்ச மாமெனத் திரிதலும் நாடி நற்றவர்கள்
அஞ்சி யோடியே அரனமர் காசியை யடைந்தார்.
135
655 அருந்த வத்தர்கள் அடைதலுங் கயாசுரன் அவரைத்
துரந்து காசியிற் சென்றிட அனையவர் துளங்கித்
திருந்தும் அந்நகர் வாணர்தங் கிளையொடுஞ் செறிந்து
விரைந்து போய்மணி கன்னிகை புகுந்தனர் வெருவி.
136
656 இனிது வித்திய தம்பயன் ஈவதே என்னத்
தனது மந்திரம் முடிபவர் செவியிடைச் சாற்றிப்
புனித மாயதன் னுருத்திர வடிவருள் புரியும்
அனக நாயகற் பணிந்துநின் றின்னவா றறைவார்.
137
657 வெய்ய தந்தியாய் வந்தொரு தானவன் விரைவில்
வைய கத்தையட் டெம்மையுங் கொல்லிய வருவான்
ஐய நின்னதாள் அரணமென் றடைந்தனம் அடியேம்
உய்ய வேயருள் புரியெனப் போற்றியே உறலும்.
138
658 அகில நாயகன் மந்திரத் தப்பரி சனர்கள்
தொகையி னோடுபோய் அரணமென் றடைதரு தொடர்பை
முகிலை நேருருக் கயாசுரன் காணுறா முனியா
இகலி யேமணி கன்னிகை வாயில்வந் திறுத்தான்.
139
659 வாயில் வந்திறுத் துருமெனத் தெழித்தலும் மதித்துக்
கோயி லெய்திய சனமெலாம் உளங்குலை குலையா
ஆய கண்ணுதல் நிமலனைத் தழீஇ மயக்கடையத்
தீயன் அன்னது நாடியும் அடும்வகை செறுத்தான்.
(133. போகி - இந்திரன். நால் மருப்பு யானை - ஐராவதம்.
135. மஞ்சு - கரிய மேகம்.
136. மணி கன்னிகை - காசியிலுள்ள கங்கைக் கரையின் ஓர் கட்டம்.
137. மந்திரம் - தாரக மந்திரம்; பிரணவம். முடிபவர் - இற்போர்.
138. தந்தியாய் - யானையாக. 139. அகிலநாயகன் - விசுவநாதர். மந்திரம் - ஆலயம்.
140. உரும் - இடி. தெழித்தல் - கர்ச்சித்தல். தழீஇ - தழுவிக்கொண்டு.)
140
660 செறுத்து மற்றவன் செல்லுழித் தேவர்கள் உய்யக்
கறுத்த கந்தரத் தண்ணலாங் கத்திறங் கண்டு
குறித்தெ லாமடும் உக்கிர வடிவினைக் கொண்டு
நிறுத்தும் அண்டமேல் உச்சியின் முடிதொட நிமிர்ந்தான்.
141
661 விண்ணு லாவிய அமரரும் முனிவரும் விழித்துக்
கண்ணின் நாடரி தெனவிழி பொத்தினர் கவல
அண்ணல் ஆயிர கோடிஆ தவர்திரண் டதுபோல்
னுண்ணி லாதபே ரொளியொடு தோன்றினன் எங்கோன்.
142
662 உக்கி ரப்பெரு வடிவுகொண் டெம்பிரான் ஒருகால்
நக்கு மெல்லென உரப்பலும் நடுங்கின அகிலம்
அக்கொ டுந்தானி ஒழிந்தில துகம்பல அயனும்
மிக்க தேவரும் அவ்வொலி கேட்டலும் வெருண்டார்.
143
663 சொற்ற இத்திறம் உக்கிர வடிவொடுந் தோன்றிக்
கொற்ற மால்கரி அவுணன்முன் எம்பிரான் குறுக
மற்றி வன்சிவ னாமெனத் தேறியும் மலைவான்
உற்று நின்றனன் அயர்த்தனன் மலரயன் உரையே.
144
664 மதித்து வேழமாந் தானவன் எதிர்தலும் வடவை
உதித்த வன்னியும் அச்சுற எரிவிழித் தொருதன்
கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து
பதைத்து வீழ்தலும் திதித்தனன் சிரத்தையோர் பதத்தால்.
145
665 ஒருப தத்தினைக் கவானுறுத் திருகரத் துகிரால்
வெரிநி டைப்பிளந் தீரிரு தாள்புடை மேவக்
குருதி கக்கியே ஒலிட அவுணர்தங் குலத்துக்
கரியு ரித்தனன் கண்டுநின் றம்மையும் கலங்க.
146
666 கார்த்த சிந்துரத் தவுணர்கோன் விளிந்திடக் கரத்தால்
ஈ£¢த்த தோலினை ஈர்த்தலும் உலகுயிர் யாவுந்
தீர்த்தன் மேனிகொள் பேரொளி நோக்கியே தியங்கிப்
பார்த்த கண்ணெலாங் கதிரிழந் தலமரப் பதைத்த.
147
667 ஆளு நாயகன் அ·தறிந் துயிர்த்தொகை அனைத்தும்
வாளி லாதுகண் ணயர்வது மாற்றுதல் மதித்து
நீளி ருங்கரி உரித்திடும் அதளினை நிமலன்
தோளின் மேற்கொடு போர்த்தனன் அருள்புரி தொடர்பால்.
(143. உகம் பல - பலயுகம். 145. படவை - வடவாமுகாக்கினி.
146. இச்செய்யுள் கஜசம்மார மூர்த்தியின் கோலத்தைச் சித்தரித்துக் காட்டுவது.
147. சிந்துரத்தவுணர்கோன் - கயாசுரன். தீர்த்தன் - பரிசுத்தன் - சிவன்.
148. அதள் - தோல்.)
148
668 ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீர் அறாத
மையல் யானைவன் தோலைமேற கொண்டனன் மறைத்தான்
செய்ய கோளொடு கரியகோள் இருவருஞ் செறிந்து
வெய்ய பானுவின் நடுவுறக் கவர்ந்துமே வியபோல்.
149
669 மிகவும் எம்பிரான் தன்சுடர் மாற்றி மெய்தளரும்
அகில மேலவர் விழிக்கெலாந் தொல்கதிர் அருளித்
தகவில் அச்சமும் அகற்றியே காத்தனன் தனக்கு
நிகரும் மேலுமின் றாகியே அமர்தரு நிமலன்.
150
670 அந்த வேலையில் அமரர்போற் றிசைத்தனர் அதுகேட்
டெந்தை மாமணி கன்னிகை ஆலயத் தேக
முந்து தந்திமால் அவுணற்கு வெருவி மொய்ம்பிழந்து
சிந்தை மான்றுவீழ் பரிசனர் யாவருந் தௌ¤ந்தார்.
151
671 செறிவு போகிய சனத்தினோர் எழுந்தருட் டிறத்தால்
கறைகொள் காலினான் குருதிஎன் பொடுதசை காணா
இறைவ னேஅவன் தன்னைஅட் டானென எண்ணி
அறையும் நேமிபோல் ஆடினர் பாடினர் ஆர்த்தார்.
152
672 காசி வாணரும் முனிவரும் பணிந்தனர் கழல்கள்
பூசை யாற்றவும் புரிவித்து வழுத்தியே போனார்
ஈசன் வேழவன் தோல்புனை பேரருள் இதுகாண்
பேசு வாம்இனி அயன்சிரம் ஏந்திய பெற்றி.
153
673 வேறு
முன்னமோர் வைகல் மாலும் முண்டகத் தயனு மாகப்
பொன்னின்மால் வரையி னுச்சிப் பொலங்குவ டொன்றின் உம்பர்
மன்னுழி முனிவர் தேவர் வரம்பிலோர் வந்தான் னாரைச்
சென்னியால் வணக்கஞ் செய்து செங்கரங் குவித்துச் சொல்வார்.
154
674 மூவரின் முதலா னோரும் முதலிடை முடிவும் இல்லாத்
தேவரும் எவையும் நல்குஞ் செல்வரும் பரமே லாகி
ஓவரும் புவனத் துள்ள உயிர்க்குயி ராய்நின் றோரும்
ஏவரெங் களுக்கு வல்லே இருவரும் இசைத்தி ரென்றார்.
155
675 என்றுரைத் திடலும் வேதா எம்பிரான் பிணித்த மாயை
தன்றலைப் படலால் யான்அத் தலைமையாம் பிரமம் ஆகும்
நன்றிதைத் தௌ¤திர் என்ன நாரணன் தானும் அற்றாய்
உன்றனைத் தந்த யானே உயர்தரும் பிரமம் என்றான்.
156
676 இருவரும் இனைய பேசி எண்ணிலா வைகல் யாரும்
வெருவரு நிலைய தாக வெய்துயிர்த் தழன்று மாறாய்ப்
பொருவரு தருக்கஞ் செய்யப் போயினர் முனிவர் தேவர்
ஒருவரும் இன்றி நம்மால் உற்றதிப் பெற்றி என்றே.
(149. செய்யகோள் - செம்பாம்பு; ராகு. கரியகோள் - கரும்பாம்பு; கேது.
பானு - சூரியன்.
151. பரிசனர் - தொண்டர் முதலியோர். 153. காசிவாணர் - காசிவாசிகள்.
வழுத்தி - துதித்து.
பெற்றி - தன்மை. 155. இருவரும் - பிரம விஷ்ணுக்களாகிய நீங்கள்.
156. பிரமம் - மேலான கடவுள்.
157. தருக்கம் - சண்டை.)
157
677 போதலும் அனையர் பின்னும் பூசல்செய் திட்ட காலை
வேதமுங் குடிலை தானும் வேறுவே றுருக்கொண் டெய்தி
வாதம தியற்றல் என்று மன்னுயிர்க் குயிராய் ஆர்க்குந்
தாதையாஞ் சிவனே வாய்மைத் தற்பரன் என்ற அன்றே.
158
678 பண்டவர் உணர்ந்த வேதப் பனுவலுங் குடிலை வாக்குங்
கொண்டிலர் விலக்கிப் பின்னுங் கொடியவெம் பூசல் செய்யக்
கண்டுமற் றதனை அன்னோர் கடுமுரண் தொலைக்கு மாறு
கொண்டனன் கருணை யார்க்குங் குறித்தருள் கூரும் பெம்மான்.
159
679 அடிமுடி யிலாத வள்ளல் அமலமாம் ஔ¤யாய் விண்ணின்
ரூடுவுற வந்து தோன்ற நாரணன் தானும் வேதக்
கடவுளுஞ் சிவனாம் என்று கருதிலர் யாதோ இந்தச்
சுடரென மருண்டார் மாயச் சூழச்சியின் நீங்க லாதார்.
160
680 இயலது தெரிந்து சோதி இடையதாய் எம்மை யாளக்
கயிலையில் உமையா ளோடு கலந்துவீற் றிருக்குங் கோலச்
செயல்கொடு பரமன் நண்ணச் சிவனெனச் சிந்தை தேற்றிப்
புயலுறழ் மேனிப் புத்தேள் பொருக்கென எழுந்து தாழந்தான்.
161
681 மாயையோர் சிறிதுந் தீரா மலரயன் நமது தந்தை
ஆயவன் போந்தான் என்னா அச்சுத மூர்த்தி யேபோல்
நேயமோ டெழுந்து தாழான் நெடியதன் உச்சிச் சென்னித்
தீயதோர் வாயால் மேலாஞ் சிவனையும் இகழ்த லுற்றான்.
162
682 முண்டகம் இருந்த ஐந்து முகத்தவன் முதல்வன் தோற்றங்
கண்டளன் இகழ வந்தக் கருணையங் கடலுஞ் சீற்றங்
கொண்டிலன் சிறிது மற்றே கொண்டனன் என்னின் எல்லா
அண்டமும் உயிரும் பின்னும் அழிவுறா திருக்கு மோதான்.
163
683 எகினம துயர்த்த அண்ணல் இரும்பவந் தொலைப்ப ஏனைப்
பகவர்தம் அகந்தை மாற்றப் பண்ணவர் மதர்ப்புச் சிந்த
மிகபெருங் கருணை தன்னால் வேதநா யகனுள் ளத்து
மகிழ்வொடு புரிந்தான் என்ப வயிரவக் கடவுள் தன்னை.
164
684 நீலுறு சுடரின் மெய்யும் ஞெகிழிகள் அகற்றுந் தாளும்
ஆலம துயிர்க்குஞ் செங்கேழ் அரவவெற் றரையுஞ் சென்னி
மாலைகள் அநந்த கோடி வயின்வயின் பெயரும் மார்புஞ்
சூலமும் பரசும் நாணும் துடியும்ஏந் தியபொற் றொளும்.
165
685 முக்கணுந் திங்க ளேபோல் முளைத்தவா ளெயிறும் வன்னிச்
செக்கரஞ் சடையின் சீருஞ் செயிர்கெழு நகையு மாக
உக்கிர வடிவு கொண்டாங் குதித்திடு வடுகன் தன்னை
மைக்கிளா¢ கண்டத் தெந்தை நோக்கியே வகுத்துச் சொல்வான்.
(158. பூசன் - சண்டை. குடிலை - பிரணவம்.
161. புயல் உறழ் மேனிப் புத்தேள் - திருமால்.
163. ஐந்து முகத்தவன் - ஐந்து முகங்களையுடைய பிரமதேவன்.
164. எகினம் - அன்னப்பறவை. வேதநாயகன் - சிவபெருமான்.
165. ஞெகிழிகள் - சிலம்புகள். செங்கேழ் - செந்நிறம். வெற்றரை - நிருவாணம்.
166. வடுகன் - வயிரவக் கடவுள். )
166
686 திகழ்ந்தநஞ் சிறுவ னாகுஞ் செங்கம லத்தோன் சென்னி
இகழ்ந்தது நம்மை உச்சி இருந்ததே அதனை வல்லை
அகழ்ந்தனை கரத்தி லேந்தி அவனுயிர் நல்கித் தம்மைப்
புகழ்ந்திடு முனிவர் தேவர் புரந்தொறும் போதி அன்றே.
167
687 போந்தனை அனையர் தங்கள் புலவுடற் சோரி தானே
வாய்ந்ததோர் ஐய மாக வாங்குதி வாங்கும் வேலை
வீந்தவர் தமக்கு மீட்டும் வியனுயிர் உதவி அன்னோர்
ஆய்ந்திடும் அகந்தை மாற்றி அண்டமேல் அடைதி அம்மா.
168
688 முன்புடைத் தாகும் அண்ட முகடுதோய் பதத்தின் மன்னி
மன்பதைக் குலங்கள் யாவும் வானவர் தொகையும் யாண்டுந்
துன்பறக் காத்தி யென்று தூய நல்லருளை நல்கி
அன்புடைக் கடலாம் எங்கோன் அமலமாஞ் சோதி புக்கான்.
169
689 ஆதியங் கடவுள் அங்கண் அடைதலும் அமல மாகுஞ்
சோதியும் அனையர் காணாத் தோற்றம தாக மாயோன்
ஈதெலாந் தெரிந்து நிற்றல் இயற்கையன் றென்னா முக்கண்
நாதனை இறைஞ்சி வல்லை நடந்துதுன் பதியிற் புக்கான்.
170
690 அளந்து மண்கொண்ட மாயன் அகனகர் அடைத லோடுங்
கிளர்ந்தெழு காரி வேதாக் கேழ்கிளர் உச்சிச் சென்னி
களைந்துதன் நகத்தால் ஏந்தக் காலுறு குருதி நீத்தம்
வளைந்தது புவியைத் துஞ்சி மலரவன் தானும் வீழ்ந்தான்.
171
691 சோரிநீர் நீத்த மாகித் துண்ணென உலகங் கொண்டு
மேருமால் வரையைச் சூழ வெய்யதன் நுதற்கண் தீயால்
சேரவே வறப்பித் தந்தச் செங்கம லத்தி னானுக்
காருயிர் நல்க லோடும் அவனுணர்ந் தெழுந்தான் அன்றே.
172
692 வேறு
துயிலு ணர்ந்தவ ராமெனத் தொல்லையில்
பயிலு நல்லுணர் வெய்தலும் பங்கயன்
வயிர வன்தன் மலரடி மீமிசை
இயலும் அன்பொ டிறைஞ்சியுரை செய்வான்.
173
693 நெற்றி யங்கண் நிமலற் கியான்செயுங்
குற்ற முண்டு குணிப்பில அன்னதால்
பெற்று வேன்இப் பெரும்பழி ஈங்கினிச்
செற்றம் ஏதுந் திருவுளங் கொள்ளலை.
174
694 இன்மை யாக இமைப்பின் உலகடும்
வன்மை கொண்ட வடுகநின் ஆரருள்
நன்மையால் தொல்லை நல்லுணர் வெய்தினன்
புன்மை யாவும் பொறுத்திடல் வேண்டுமால்.
(168. புலவு - மாமிசம். சோரி - இரத்தம்.
169. மன்பதைக் குலங்கள் - மக்கட் கூட்டம்.
171. காரி - வயிரவன். உச்சிச் சென்னி - நடுத்தலை.)
175
695 தீய தான சிறியவிச் சென்னியுந்
தூய தாகத் தொழும்பினன் கண்டுழி
மாயை தீர மலர்க்கையிற் கோடிநீ
மேய சூல வியன்படை என்னவே.
176
696 என்ன இத்தகை பன்னி இறைஞ்சலுஞ்
சென்னி நான்குடைத் தேவனை நோக்கியே
அன்ன தாக என்றையன் அருளியே
பொன்னின் மால்வரை நீங்கினன் போயினான்.
177
697 கால வேகன் கனன்முகன் சோமகன்
ஆல காலன் அதிபலன் ஆதியாச்
சால நீடிய சாரதர் தானையை
நீல மேனி நிமலன் உதவினான்.
178
698 எண்ணி லாஅக் கணங்களொ டெம்பிரான்
நண்ணி ஒல்லை நவையுறு மாதவர்
மண்ணின் மேய வனந்தொறும் வானவர்
விண்ணின் எல்லை தொறும்விரைந் தேகினான்.
179
699 மெய்யின் ஊறும் வியன்குரு திப்புனல்
ஐய மாக்கொண் டனையர்தம் ஆவிகள்
உய்ய வேபின் னுதவி உளமெலாந்
துய்ய வாக்கினன் தொல்லருள் ஆழியான்.
180
700 வடுக அண்ணல் அவ்வானவர் ஊரெலாங்
கடிதின் நீங்கிக் கருவத்தை நீங்குறா
நெடிய மாலுறை நீள்புரம் போயினான்
முடுகி யேகினர் முன்கண நாதரே.
181
701 அந்த மில்கணம் ஆனவர் யாவரும்
முந்தி ஏக முதற்பெரு வாயிலோன்
தந்தி ரத்தலை வன்தடுத் தானரோ
நந்தும் ஆழியும் நாரணன் போலுளான்.
182
702 கால வேகனை ஆதிக் கணத்தவர்
ஆல மென்ன அவனொடு போர்செய
மேலை யோன்அங்கு மேவி அவனுடல்
சூல மேற்கொந்தித் துண்ணென ஏகினான்.
183
703 வேறு
நிலமகள் ஒருபுடை நிறங்கொள் பங்கய
மலர்மகள் ஒருபுடை மருவப் ப·றலை
குலவிய பணியின்மேற் கொண்டல் மேனியான்
தலைமையொ டுறைதரு தானம் நண்ணினான்.
(176. கோடி - கொள்வாயாக. 178. நீலமேனிநிமலன் - வயிரவக் கடவுள்.
181. புரம் - நகர்; வைகுண்டம்.
182. தந்திரத் தலைவன் - விடுவசேனன்.)
184
704 நிணங்கிளர் முத்தலை நெடிய வேல்இறை
கணங்களின் நிரையொடு கடிது செல்லமால்
அணங்கின ரோடெழா ஐயன் தாள்மிசை
வணங்கிநின் றெந்தைநீ வந்ததென் னென்றான்.
185
705 என்றலுங் கண்ணுதல் இறைவன் யாமிவண்
சென்றது பலிக்குநின் றிருந்து சென்னியில்
ஒன்றிய குருதியே உதவு வாயென
நன்றென நாரணன் நவின்று போற்றியே.
186
706 தன்னுதல் அதனிடைத் தனாது செங்கையின்
நன்னகத் தாலொரு நாடி வாங்கியே
அன்னதொர் பொழுதினில் அரியுய்த் தானரோ
துன்னிய குருதிநீர் சூலி ஏற்பவே.
187
707 வீண்டிடு சோரியின் வௌ¢ளம் வெம்பணி
பூண்டதொர் கண்ணுதல் பொலங்கைச் சென்னிமேல்
ஆண்டொரு நூறுநூ றவதி உய்த்தலும்
மாண்டது வேறொரு மயக்கம் வந்ததே.
188
708 பாதியும் நிறைந்ததும் இல்லை பாணியின்
மீதுறு பலிக்கலன் மிக்க வன்மைபோய்ச்
சீதரன் சோர்தலுந் திருவும் ஞாலமும்
காதலன் நிலைமையைக் கண்டி ரங்கினார்.
189
709 செஞ்சரண் அடைந்தயர் தெரிவை மார்தமை
அஞ்சலென் றருளியெம் மண்ணல் அச்சுதன்
நெஞ்சுறு மயலினை நீக்கி யாங்கவன்
உஞ்செழு மாறுசெய் துறையுள் நீங்கினான்.
190
710 நீங்கினன் பின்வரும் நெடிய மாயனை
ஈங்கினி திருத்திஎன் றியம்ப அன்னவன்
ஓங்குநின் சூலமேல் உற்று ளான்தனைப்
பாங்குற வருள்கெனப் பகர்ந்து வேண்டவே.
191
711 கைத்தலை அயன்தலைக் கபால்கொண் டுற்றவன்
முத்தலை வேலினும் முடிந்த சேனையின்
மெய்த்தலை வனதனை விடுத்துத் தொல்லுயிர்
அத்தலை நல்கியே அருள்செய் தானரோ.
(186. கண்ணுதல் இறைவன் - வயிரவக் கடவுள். இவண் - இங்கு. பலி - பிச்சை.
187. நுதல் - நெற்றி. சூலி - வயிரவன். ஒரு நாடி - ஒரு நரம்பு.
188. அவதி - அளவு; காலம்.
189. திருவும் ஞாலமும் - திருமகளும் பூமகளும்.
191. சூலமேல் உற்றுளான் - விடுவசேனன்.
192. கபால் - கபாலம்.)
192
712 மாலுல கொருவியே வடுகன் அன்னதோர்
கோலமொ டேகணங் குழுமிச் சூழ்தர
மேலுள புவனமேல் மேவி வைகலும்
பாலனஞ் செய்தனன் பலஅண் டங்களும்.
193
713 அடுவதொ ரிறுதியில் கமலன் ஆணையால்
கடவுளர் சென்னியுங் கமலன் ஆதியோர்
முடிகளும் அட்டுயிர் முற்று மாற்றிநுண்
பொடிபட இயற்றுமால் புவனம் யாவையும்.
194
714 பொறியுறும் உயிர்களும் புவனம் யாவையும்
இறுதியாய் அழிவுறும் ஈமத் தெல்லையின்
மறையெனு ஞாளியை உயர்த்து மற்றவன்
உறுவதோர் மகிழ்ச்சியால் உலவும் என்பவே.
195
715 வேறு
கண்ட கங்கொள் கபால்கொடு காசினி
விண்ட கந்தொறும் வெம்பலிக் குற்றதும்
முண்ட கன்முத லோர்தமை எம்பிரான்
தண்ட கஞ்செய் தலையளி யாகுமால்.
196
716 ஆற்றின் மல்கும் அவிர்சடை அண்ணல்பால்
தோற்று கின்றதொர் தூயவன் சோரிநீர்
ஏற்ற தன்மை இயம்பினம் ஈங்கினி
வேற்றுருக் கொண்ட தன்மை விளம்புவாம்.
197
717 வேறு
முந்தொரு ஞான்று மூவுலகும் போற்றிடும்
இந்திரன் இமையவர் இனத்தொ டேகியே
அந்தமில் கயிலையில் அரனைப் போற்றுவான்
வந்தனன் அகந்தையும் மனத்தில் தாங்கியே.
198
718 பொன்கெழு கடிமதில் பொன்னங் கோயில்முன்
மின்கெழு வச்சிர வேந்தன் சேர்தலுங்
கொன்கெழு பாரிடக் கோலந் தாங்கியே
முன்கடை நின்றனன் முடிவின் முன்னையோன்.
199
719 நின்றிடும் ஒருவனை நெடிது நோக்கியே
இன்றுனைக் கண்டனன் யாரை ஐயநீ
மன்றவும் விருந்தினை வள்ள லைத்தொழச்
சென்றனன் வேலையென் செப்பு கென்னவே.
200
720 மற்றது காலையின் மகேசன் யாவதுஞ்
சொற்றில னாகியே சூர்த்த நோக்குடன்
உற்றிட மேல்வரும் ஊற்றம் உன்னலன்
செற்றம தாயினன் தேவர் செம்மலே.
(193. பாலனம் - பாதுகாத்தல். 195. ஞாளி - நாய்.
199. வச்சிரவேந்தன் - இந்திரன்.
கொன் - அச்சம். பாரிடம் - பூதம். முன்கடை - தலைவாசல்.
200. விருந்தினை - புதியை.
201. சூர்த்த - அச்சம் தரத்தக்க.)
201
721 அண்டரும் அகந்தையன் ஆற்ற வுந்திறல்
கொண்டனன் என்றுதன் குலிச மாப்படை
கண்டகன் எறிதலுங் கடவுள் மேற்படா
நுண்டுக ளாகியே நொய்தின் மாய்ந்ததே.
202
722 மருத்துவன் வச்சிரம் மாய்ந்து போதலும்
புரத்தினை யட்டருள் புனிதன் அவ்வழிக்
கிருத்திம வுருவினை நீங்கிக் கேழ்கிளர்
உருத்திர வடிவினை ஒல்லை தாங்கினார்.
203
723 உயர்ப்புறு சடிலநின் றூறு தண்புனல்
அயர்ப்புறு மகபதி அகந்தை கண்டட
மயிர்ப்புறம் எங்கணும் வந்து தோன்றலின்
வியர்பபுவந் தடைந்தன மேனி முற்றுமே.
204
724 எள்ளுதல் செய்திடும் இவன்தன் ஆருயிர்
கொள்ளுதும் எனச்சினங் கொண்ட தீயொடும்
உள்ளுறு காலெழீஇ ஒருங்கு சென்றெனப்
பொள்ளென உயிர்ப்பழல் புகையொ டுற்றதே.
205
725 குறுகிநின் றாற்றலால் குலிச மாப்படை
எறிதரு கொடியனை எய்த வேளெனச்
செறுகனல் விழியெனச் செப்பச் சேறல்போல்
நெறிதரு புருவமும் நெற்றி சேர்ந்தவே.
206
726 பற்றலர் புரங்களோ உலகின் பன்மையோ
முற்றுயிர் ஈட்டமோ முடிக்கப் பேதையைச்
செற்றிடல் வசையவன் செயலைக் காண்டுமென்
றுற்றனன் முறுவலும் உதித்த தொல்லையில்.
207
727 துடித்தன துவரிதழ் உரப்பித் தூயவாய்
இடித்தன சேந்தன இரண்டு கண்களும்
விடத்தினை நுகர்ந்தவன் வெகுளித் தீயினுக்
கடுத்திடு துணைவர்தம் அமைதி போலவே.
208
728 அக்கணம் இவ்வகை யார்க்கும் ஆதியாம்
முக்கணன் நான்முகன் முதல தேவரும்
மிக்குள உயிர்களும் வெருவ வெய்யதோர்
உக்கிர வடிவுகொண்டு ருத்து நின்றனன்.
(202. கண்டகன் - இரக்கமில்லாத இந்திர. 203. மருத்துவன் -
இந்திரன். கிருத்திமம் - பூதம்.
208. துவர் இதழ் - செவ்விதழ்.)
209
729 வேறு
நிற்கின்ற எம்பெருமான் பெருஞ்சீற்றந்
      தனைநோக்கி நெஞ்சமாகுங்,
கற்குன்றம் நடுநடுங்கப் பதைபதையா
     அஞ்சியவன் கழலின் வீழ்ந்தே,
எற்குன்றன் மாயமெலாந் தெரிந்திடுமோ
     மாலயனும் இன்னுந்தேறார்,
பொற்குன்றச் சிலையானே வினையேன்செய்
     பிழையதனைப் பொறுத்தி என்றான்.
210
730 போற்றிப்பன் முறைதாழும் புரந்தரனை
      அஞ்சலென்று புரிந்து நோக்கி,
மேற்றிக்கில் வீழ்கின்ற செங்கதிரோ
      இதுவென்ன வேலை மேற்றன்,
சீற்றத்தீ யினைவீசி ஆங்கவற்கு
      விடைகொடுத்துச் செல்கென் றேவி,
ஏற்றிற்செய் அரியணைமேல் உறையுள்புகுந்
      துமையொடும்வீற் றிருந்தான் எங்கோன்.
211
731 வேறு
கூற்று வன்தனிக் கூற்றன் மந்திரம்
வீற்றி ருந்திடும் வேலை வாய்தனில்
ஆற்றல் சேர்புனற் கரசன் பால்விடு
சீற்ற மானதோர் சிறுவன் ஆனதே.
212
732 ஆன பாலனை அம்பு ராசிதன்
கானு லாந்திரைக் கரங்களால் தழீஇத்
தான வேசன்என் தனயன் ஆயினான்
நான லாதியார் நற்றவஞ் செய்தார்.
213
733 ஊழி பேரினும் உலகம் பேரினும்
வாழி வாழியென் மைந்த நீயெனாக்
கேழில் ஆசிகள் கிளத்திப் போற்றினான்
ஆழி மால்கடற் கரசன் என்பவே.
214
734 நசைகு லாவிய நரலை காத்திட
வசைவி லான்சிறி தழுத வேலையில்
வசையி லாதுயர் வானும் மண்ணுமெண்
டிசையும் யாவையுஞ் செவிடு பட்டவே.
215
734 நூன்மு கத்தினோர் நுனித்துக் காணுறு
நான்னு கத்தினோன் நாடி இவ்வொலி
வான்மு கத்திடை வருமி தேதெனா
மீன்மு கத்துலாம் வேலை மேவினான்.
216
736 வேலை சேரஅவ் வேலை வேலையுஞ்
சால வன்பினால் தவிசொன் றிட்டுநீ
ஏல மேவுகென் றிருத்தி யான்பெறும்
பாலன் ஈங்கிவன் பார்த்தி யாலெனா.
217
737 கையில் நீட்டலுங் கடிது வாங்கியே
ஐயன் தன்மடி அதனில் சேர்த்திடத்
துய்ய புல்லணந் தொடர்ந்து பற்றினான்
மையல் மைந்தனுந் தனது வன்மையால்.
(212. மந்திரம் - ஆலயம்.
213. அம்புராசி - கடல். தானவேசன் - தானவர் தலைவன்.
215. நசை - விருப்பம். நரலை - கடல். 218. புல்லணம் - தாடி.
மையல் மைந்தன் - பித்தன் (சிவன்) மகன் இவன் கோபாக்கினியால் உதித்தவன்.)
218
738 நார்த்தொ டுத்தெனும் நான்கு தாடியும்
ஈத்துத் தூங்கலும் இணையில் வேதனும்
ஆர்த்தி எய்தினான் அவன்கண் ஏயவன்
சீர்த்தி கான்றெனச் சிந்திற் றொண்புனல்.
219
739 காறொ டர்ந்திழி கலங்கு கட்புனல்
ஆறு போலிய அகலம் தன்வழச்
சேறல் மேயது செறிவுற் றீண்டியே
வேறொர் வேலைபோல் வேலை புக்கதே.
220
740 முக்கண் நாயகன் முனிவு தன்னிடைப்
புக்க காலையிற் புனல்வ றந்திடு
மைக்க ருங்கடல் வறுமை நீங்கிற்றால்
மிக்க நான்முகன் விழியின் நீரினால்.
221
741 பதுமன் அவ்வழிப் படர்ம யிர்த்தொகை
மதலை கையினும் மரபின் நீக்கியே
கதுமெ னப்பல கரங்க ளாலெடுத்
துததி தன்கையில் உயிர்த்து நீட்டினான்.
222
742 நீட்டி யோரிறை நினைந்து நீயிது
கேட்டி யொன்றியாங் கிளத்து வோம்இவன்
ஏட்டு லாயதேன் இதழி சென்னியிற்
சூட்டும் எம்பிரான் முனிவில் தோன்றினான்.
223
743 கருதி டான்ஒரு கடவுள் தன்னையும்
வரமும் வேண்டலன் ஏது மற்றிவன்
ஒருவ ராலுமீ றுற்றி டானரோ
பரமன் சீற்றமே யான பான்மையால்.
224
744 தேவர் தேவர்கோன் திசையினோர் வெரீஇப்
போவ ரேயெனில் பொருகிற் பாரெவர்
நீவி ரேனுமுன் நிற்றல் அஞ்சுவீர்
ஏவ ரேஇவன் எதிர்நிற் பார்களே.
225
745 ஆயுந் தொன்னெறி அமரர் யாவரும்
ஈயுஞ் சாபம்வந் திவனை நேருமோ
காயுந் திண்டிறற் கடவுட் டன்மைசேர்
தீயுந் தீயுநின் சிறுவன் வெம்மையால்.
226
746 நானும் அஞ்சுவன் நளினை காவலன்
தானும் அஞ்சுவன் தவறில் வேள்விசெய்
கோனும் அஞ்சும்வெங் கூற்றும் அஞ்சுமவ்
வானும் அஞ்சும்இம் மண்ணும் அஞ்சுமே.
(219. தூங்கல் - தொங்குதல். ஆர்த்தி - துன்பம்.
220. அகலம் - மார்பு.
222. உததி - கடல்; வருணன். 224. மற்று - அசை.
227. நளினை - திருமகள்.)
227
747 பாச னங்களே பரவ ஞாலமேல்
தேசில் வெய்யகோல் செலுத்தி யாங்கவர்
ஆசி செய்யநீ டரசு செய்வனால்
ஈசன் அன்றியார் இவனை வீட்டுவார். 228
228
748 என்னு மாத்திரத் திவன்த னக்குநீ
நன்ன லந்திகழ் நாமம் ஒன்றினைப்
பன்னு கென்னநீ பரித்த லால்இவன்
தன்ன தொண்பெயர் சலந்த ரன்எனா.
229
749 பேரிட் டொல்லையில் பிரமன் தானுறை
ஊரிற் போயினான் உததி பற்பகல்
சீரிற் போற்றலுஞ் சிறுவன் காளையாய்ப்
பாரிற் சேர்ந்தனன் அவுணர் பாற்பட.
230
750 சென்று பாரிடைத் திசைகள் யாவையும்
வென்று வாசவன் விண்ணு ளோர்நிதிக்
குன்று சேர்தரக் கொடுமை செய்தனன்
துன்று கின்றதொல் லவுணர் சூழவே.
231
751 பொன்னெ டுங்கிரி தனிற்புத் தேளிரு
மன்னும் வைகலும் வான நாடெலாந்
தன்னை நேரிலான் தான வர்க்கெலாம்
நன்ன யப்பொடு நல்கி னானரோ.
232
752 வச்சி ரப்படை மன்னன் பொன்னகர்
நச்சும் வண்ணமோர் நகரஞ் செய்கென
அச்ச லந்தரன் அருளத் தானவர்
அச்சன் அவ்வழி ச¨திது நல்கினான்.
233
753 பாந்தள் மீமிசை பரிக்கு நேமிசா
லாந்த ரம்மென அறைய நின்றதோர்
ஏந்தல் மாநக ரிடையில் தானவர்
வேந்தர் போற்றிட அரசில் மேயினான்.
234
754 கால நேமியாம் அவுணன் கன்னிகை
வேலை நேர்விழி விருந்தை யென்பவள்
கோல நாடியே குரவன் கூறிட
ஏல வேமணந் தின்பம் எய்தினான்.
(228. பாசனங்கள் - அசுர பரிவாரங்கள். வீட்டுவார் - கொல்லுவோர்.
229. சலத்தரன் - கடலால் வளர்க்கப்பட்டவன். சலம் - கடல்.
தரம் - தரித்தல்; ஆகவே கடலால் தாங்கப்பட்டவன் சலந்தரன் என்பதாம்.
333. நச்சும் - விரும்பும். தானவர் தச்சன் - அசுர தச்சன்; கம்மியன்.
234. நேமி - பூமி. சாலாந்தரம் - காலாந்தரபுரி; இது சலந்தராசுரன் நகரம்.
235. விருந்தை - இவள் கற்பிலும் அழகிலும் அறிவிலும் சிறந்தவள்;
காலநேம என்னும் அசுரன் மகள்; விருந்தையைப் பிருந்தை எனவும் கூறுவர்.)
235
755 பாரில் அவ்வழிப் பன்னெ டும்பகல்
சீரின் வைகினான் தேவர் யாவரும்
மேரு வுற்றனர் அவரை மேவியாம்
போர்செய் வோமெனப் புகன்று போயினான்.
236
756 துங்க வீரர்கள் தொழுச லந்தரன்
அங்கண் மேவலும் அமரர் வெய்யவன்
இங்கும் வந்தனன் என்செய் வோமெனார்
சிங்கங் கண்டதோர் கரியின் தேம்பினார்.
237
757 தேம்பு கின்றவர் செய்வ தோர்சிலார்
பாம்ப ணைத்துயில் பவனை உன்னியே
ஓம்பு கென்றலும் உவண மீமிசை
ஏம்ப லோடும்வந் திமைப்பில் எய்தினான்.
238
758 வருச லந்தரன் மாறு கொண்டெழ
இருப தாயிரம் யாண்டு பல்படை
உரிய மாயைகொண் டுருத்தெ ழுந்துமால்
பொருதும் வென்றிலன் புகழ்ந்து போயினான்.
239
759 கொண்டல் மேனியன் கொடியன் தன்னொடு
மண்டு போரிடை மலையும் வேலையில்
அண்டர் வாசவன் அஞ்சி ஆலமார்
கண்டன் மேவிய கயிலை எய்தினார்.
240
760 வேறு
அற்றா கின்ற வேலையின் வேலை அருள்மைந்தன்
பற்றார் தம்மை நாடினன் யாண்டும் பார்க்கின்றான்
கற்றார் ஏத்துங் கண்ணுதல் மேய கயிலாயத்
துற்றார் கொல்லென் றுன்னி வெகுண்டான் ஊர்போந்தான்.
241
761 தூண்டா ஒற்றால் பெற்றிடு சேனைத் தொகையோடு
மீண்டா நிற்பான் தென்க கயிலைக்கென் றெழும்வேலை
வேண்டாம் வேண்டாம் நித்த னுடன்வெஞ் சமர்செய்யின்
மாண்டாய் என்றாள் இல்லென வாழும் மதிவல்லி.
242
762 குலந்தனில் வந்தாள் கூறிய மாற்றங் குறிக்கொள்ளான்
நலந்தரு கின்ற செய்வினை ஓரான் நவைபாரான்
புலந்தரு செற்றம் மீக்கொள யாதும் பொறையின்றிச்
சலந்த ரனாம்பே ருண்மைய தென்னச் சாதித்தான்.
243
763 சோனா மேகம் போற்படை மாரி சொரிகின்ற
சேனா யூகஞ் சூழ்தர வாழித் திருமைந்தன்
போனான் எங்கோன் தென்க யிலைக்கோர் புடையாக
வானா டுள்ளோன் ஆங்கது காணா மறுகுற்றான்.
(237. துங்கம் - உயர்வு. 238. உவணம் - கருடன். ஏம்பல் - ஆசை.
241. வேலை அருள்மைந்தன் - சலந்தராசுரன்.
243. சலந்தரனாம் பேர் உண்மை - கோபத்தைச் சுமந்தவன் சலந்தரன்
என்பதாம். சலம் - கோபம். தரன் - சுமந்தவன்.)
244
764 தாண்டும் பாய்மாத் தோகரி வீரர் தற்சூழ
ஈண்டும் வந்தான் தீயவன் ஆவி இறும்வண்ணங்
காண்டும் என்னா வாசவன் வானோர் கணமோடும்
வேண்டும் வௌ¢ளிக் குன்றுறு கோயில் மேவுற்றான்.
245
765 வேறு
முந்திய வாயிலின் முறைபு ரிந்திடு
நந்தியை வணங்கியுள் நடுக்கஞ் செப்பலும்
அந்தமில் பண்ணவன் அருளை நாடியே
உந்திட இந்திரன் உறையுள் போயினான்.
246
766 குணங்களின் மேற்படு குழகன் மால்வரை
அணங்கொடு வீற்றிருந் தருளும் எல்லைபோய்
வணங்கினன் தொழுதனன் வலிய துன்பினால்
உணங்குதன் மனக்குறை உரைத்தல் மேயினான்.
247
767 நிலந்தனை வளைந்த முந்நீரில் வந்தவன்
சலந்தரன் எனும்பெயர்த் தறுகட் டானவன்
மலைந்தெமை வென்றிட மாசுற் றோடினேன்
நலந்தரு நின்றபொன் னாடு நீத்தனன்.
248
768 வெந்துயர் எய்தியே மேரு வின்புடை
உய்ந்தனன் யானென ஔ¤த்து மேவினன்
அந்தவண் ணத்தையும் அறிகுற் றாங்கவன்
வந்தனன் அவ்வழி மாலை உன்னினேன்.
249
769 மாலும்வந் தணுகியே மலைந்து தோற்றிடா
மேலுமங் கவன்தனை வியந்து போயினான்
நீலகண் டத்தனே நினது மால்வரை
ஏலவந் துற்றனன் இதுவுங் கேட்டனன்.
250
770 ஈங்கும்வந் துற்றன னியாவ துன்னியோ
ஆங்கது தெரிகிலேன் அளியன் துன்பமுந்
தீங்குறு சலந்தரன் திறலும் வாழ்க்கையும்
நீங்குதல் உன்னுதி நிமலநீ என்றான்.
251
771 வரையெறி படையினன் மாற்றங் கேட்டுநின்
பருவரல் ஒழிகெனப் பகர்ந்து போக்கியே
கருணையின் நீர்மையாற் கணிச்சி வானவன்
ஒருதனி ஆடலை உள்ளத் துன்னினான்.
252
772 நான்றகுண் டிகையினன் நரைகொள் யாக்கையன்
ஊன்றிய கோலினன் ஓலைக் கையினன்
மூன்ற னல்வளர்ப் புறுமுனி வரேயெனத்
தோன்றினன் தனக்கொரு தோற்றம் வேறிலான்.
253
773 விம்மலை உற்றிடு விரதர்க் காகமுன்
கைம்மலை உரித்தவன் கயிலை என்றிடும்
அம்மலை ஒருபுடை அணுகுந் தானவர்
செம்மலை எதிர்கொடு செல்லல் மேயினான்.
254
774 இந்திரன் இமையவர் இனத்தொ டீண்டியே
வந்தனை செய்தனன் மறைந்து பின்வர
அந்தணர் வடிவுகொண் டவுணர் காவலன்
முந்துற வெய்தியே முதல்வன் கூறுவான்.
255
775 எங்குளை யாரைநீ எவரை நாடியே
இங்குறு கின்றனை இயம்பு வாயென
அங்கணன் மொழிதலும் அந்தண் வேதிய
சங்கைய தில்வகை சாற்றக்கேள் என்றான்.
256
776 நிலந்தனில் உற்றுளேன் நேமி காதலன்
சலந்தரன் என்பவன் தமியன் வானவர்
உலைந்திட நுதல்விழி ஒருவன் தன்னுடன்
மலைந்திட வந்தனன் வல்லையீண் டென்றான்.
257
777 அவ்வுரை வினவியே அண்ணல் எண்ணமுஞ்
செவ்விது செவ்விது தீதுண் டோவெனா
எவ்வமில் புகழ்ச்சிபோல் இகழ்ந்து காட்டிடா
நவ்வியங் கைத்தலன் நகைத்துச் செப்புவான்.
258
778 கயிலையங் கிரியுறை கண்ணு தற்பிரான்
அயலுற இருப்பன்யான் அவனொ டேயமர்
முயலுறு கிற்றியேல் முடிதி உய்ந்திடுஞ்
செயலினை நினைத்தியேற் செல்கமீண் டென்றான்.
259
779 பண்ணவன் இனையன பகர்தல் கேட்டலும்
எண்ணமில் சலந்தரன் எரியிற் சீறியே
கண்ணழல் கதுவுறக் காயம் வோ¢வெழத்
துண்ணென உயிர்த்திவை சொற்றல் மேயினான்.
(253. நான்ற - தொங்குகின்ற. ஓலை - ஓலைக்குடை.
மூன்று அனல் - மூவகை அக்கினி.
254. கைம்மலை - யானை. தானவர் செம்மல் - சலந்தரன்.
257. நேமிகாதலன் - வருணன் மகன்.
258. எவ்வம் - குற்றம். நவ்வி - மான்.
260. பண்ணவன் - அந்தண வடிவுகொண்ட சிவன்.)
260
780 சிறியவன் போலெனைச் 1சிந்தித் தீரியான்
பெறுவதோர் சயமெலாம் பேசி யாவதென்
இறைவரை யீண்டுநின் றெனது வன்மையை
அறிகுதிர் அறிகுதிர் அந்தணீர் என்றான்.
(பா-ம் 1 - சிந்திப்பீரியான்.)
261
781 என்றிவை சலந்தரன் இசைப்ப யாமுமுன்
வன்றிறல் காணிய வந்த னம்மெனாத்
தன்திரு வடியினால் தரணி யின்மிசை
ஒன்றொரு திகிரியை ஒல்லை கீறினான்.
262
782 ஆங்கது திகிரியொன் றாக அந்தணன்
ஈங்கிது சென்னியில் ஏற்றி வன்மையால்
தங்குதல் வல்லையோ என்று சாற்றலும்
தீங்குறு சலந்தரன் இனைய செப்புவான்.
263
783 புங்கவர் யாரையும் புறங்கண் டேன்வரு
கங்கையை அடைத்தனன் கார்கொள் வேலையில்
அங்கியை அவித்தனன் அரியை வென்றனன்
இங்கிது தாங்குவ தரிய தோவெனா.
264
784 புரத்தழல் கொளுவியோன் பொறித்த நேமியைக்
கரத்திடை எடுத்தனன் கனங்கொண் டெய்தலின்
உரத்திடைப் புயத்திடை உயிர்த்துத் தாங்கியே
சிரத்திடை வைத்தனன் தேவர் ஆர்க்கவே.
265
785 செழுஞ்சுடர்ப் பா¤தியைச் சென்னி கோடலால்
ஒழிந்திடு சலந்தரன் உச்சி யேமுதற்
கிழிந்தது முழுதுடல் கிளர்ந்து சோரிநீர்
இழிந்தது புவிதனில்இழுமென் ஓசையால்.
266
786 பரிதியங் கடவுள்அப் பதகன் தன்னுடல்
இருபிள வாக்கியே இறைவன் தன்னிடை
உருவுகொண் டுற்றதிவ் வுலகம் யாவையுங்
குருதியம் பெருங்கடல் வளைந்து கொண்டதே.
267
787 பாதல நிரயமாம் பாழி யூடுநீ
போதென எருவைநீர் போந்த தாயிடை
ஆதியங் கடவுள்அவ் வவுணன் சேனையைக்
காதினன் விழிபொழி கனலின் தானையால்.
268
788 பரந்திடும் அவுணர்தம் பகுதி வீட்டியே
கரந்ததொல் வடிவினைக் காட்டி நிற்றலும்
புரந்தரன் முதலினோர் வணங்கிப் போற்றிஎம்
அரந்தையை அகற்றினை ஐயநீ என்றார்.
269
789 முன்புறு புரந்தரன் முதலி னோர்க்கெலாம்
இன்புறு தொல்லர சியற்ற நல்கியே
அன்புடன் விடைகொடுத் தமல நாயகன்
தென்பெருங் கயிலைமேற் சேர்ந்து வைகினான்.
(262. தரணி - பூமி. திகிரி - சக்கரம். 265. பொறித்த - உண்டாக்கிய.
நேமி - சக்கரப்படை.
267. பரிதி அம் கடவுள் - சக்கரமாகிய தெய்வம். பதகன் - கீழ் மகன்;
சலந்தரன். 268. பாழி - இடம். எருவை நீர் - இரத்தம்.
காதனன் - அழித்தனன். கனலின் தானை - தீப்பொறியாகிய சேனை.)
270
790 ஆவியை இழந்திடும் அவுணர் காவலன்
தேவியை விரும்பியே திருவின் நாயகன்
மாவிர தியரென மற்ற வன்மனைக்
காவி னுள்இருந் தனன்கை தவத்தினான்.
271
791 இருந்திடும் எல்லையில் ஏமக் கற்புடை
விருந்தைஎன் றிடும்அவள் வேந்தன் செய்கையைத்
தெரிந்திலள் ஆற்றவுஞ் சிந்தை நொந்துமெய்
வருந்தினள் உய்ந்திடும் வண்ணங் காண்கிலாள்.
272
792 பரிதலுற் றிரங்கினள் பதைத்துச் சோர்ந்தனள்
ஒருதனித் திருக்கிலள் உரையும் ஆடலள்
திரிதலுற் றுலவினள் சேய்வ தோர்கிலள்
இருதலைக் கொள்ளியின் எறும்பு போன்றுவாள்.
273
793 கல்வரை யேந்திய காளை யைப்புணர்
தொல்வரை ஊழினால் துன்பம் நீங்கலா
மெல்வரை அன்னதோள் விருந்தை மேவினாள்
இல்வரை இகந்திடா ஏமக் காவினுள்.
274
794 மடவரல் வருதலும் வைகுண் டந்தனில்
கடைமுறை போற்றிடும் இருவர் காவலர்
அடலரி ஆகியே ஆர்த்து முன்னுற
இடியுறும் அரவுபோல் ஏங்கி ஓடினாள்.
275
795 மடந்தையங் கிரிதலும் மடங்க லானவர்
தொடர்ந்தனர் பின்வரத் துளங்கிச் சோலையின்
இடந்தனில் முனியென இருந்த வெய்யனை
அடைந்தனள் அடைதலும் அஞ்சல்நீ என்றான்.
276
796 என்றருள் புரிதலும் இகல்வெஞ் சீயமாய்ப்
பின்றொடர் காவலர் பெயர்வுற் றோடினார்
நின்றவள் இருந்தவன் நிலைமை நோக்கியே
நன்றிவன் இயல்பென நவில்வ தாயினாள்.
277
797 எந்தையெம் பெருமகேள் எனது காதலன்
அந்தமில் ஈசன்மேல் அமருக் கேகினான்
வந்திலன் இன்னமும் மாய்வுற் றான்கொலோ
உய்துள னேகொலோ உரைத்திநீ என்றாள்.
(271. திருவின்நாயகன் - திருமால். மாவிரதியர் - சிவமூர்த்தியை எண்ணித்
தவம் இயற்றும் ஒரு தவசி.
272. ஏமம் - இன்பவடிவு. 274. கல்வரை - கோவர்த்தனகிரி. மேல்வரை
அன்ன - மெல்லிய மூங்கிலைப் போன்ற.
275. கடைமுறை - வாயில். காவலர் இருவர் - துவார பாலகர். அரி - சிங்கம்.
276. இரிதல் - ஓடுதல். மடங்கல் - சிங்கம். வெய்யனை - இங்குத் திருமாலை.
277. சீயம் - சிங்கம். காவலர் - துவார பாலகர்கள்.
278. எனது காதலன் - என்னுடைய கணவன்; கலந்தராசுரன். கொல் - ஐயப்பொருள்.)
278
798 இரங்கினள் இவ்வகை இசைப்ப மாதவன்
வரங்கெழு தானையின் மன்னர் மாயையால்
குரங்கென ஈருருக் கொண்டு கொம்மென
உரங்கிளர் சலந்தரன் உடல்கொண் டேய்தினார்.
279
799 இருபிள வாம்அவ னியாக்கை கொண்டுசென்
றரிவைமுன் இட்டனர் அதனைக் காண்டலும்
வெருவினள் பதைத்தனள் வீழ்ந்த ரற்றினாள்
ஒருவினள் உயிரென உணர்வு நீங்கினாள்.
280
800 வருந்தலை வருந்தலை மங்கை நீயெனாக்
கரந்தனை ஓச்சியே காதல் நீர்மையால்
இருந்தவன் எழுப்பலும் எழுந்து தேறியே
விருந்தைகை தொழுதிவை விளம்பல் மேயினாள்.
281
801 நின்னிகர் மாதவர் நிலத்தின் இல்லையால்
என்னுயிர் கார்தியேல் எனது நாயகன்
பொன்னுடை லந்தனைப் பொருந்தி அவ்வுயிர்
தன்னையும் அமைத்தனை தருதிநீ என்றாள்.
282
802 ஆயது காலையில் அவுணன் யாக்கையை
ஏயென ஒன்றுமா றியற்றி மாதவன்
மாயம தாகியே மறைந்து மற்றவன்
காயம திடைதனில் கலந்து வைகினான்.
283
803 புல்லிய குரங்கெனப் புகுந்த கள்வரும்
ஒல்லையின் மறைந்தனர் உயர்ச லந்தரன்
தொல்லுடல் புகுந்தரி துண்ணென் றேயெழ
மெல்லியல் கண்டனள் வியந்து துள்ளினாள்.
284
804 உய்ந்தனன் கணவனென் றுளத்தில் உன்னியே
வெந்துயர் அகன்றனள் விருந்தை என்பவள்
வந்தனை பேலுமென் மகிண நீயெனா
அந்தமில் உவகையால் அவனைப் புல்லினாள்.
285
805 புல்லிய விருந்தையைப் புணர்ந்து மாயவன்
எல்லியும் பகலுமோர் இறையும் நீங்கலான்
அல்லியந் தேனுகர் அளியைப் போல்அவண்
மெல்லிதழ் அமுதமே மிசைந்து மேவினன்.
286
806 காய்கதிர் நுழைவுறாக் கடிமென் காவினுள்
மேயினன் பலபகல் வேளின் நூல்வழி
ஆயதோர் வைகலின் அரன தாணையால்
மாயம தயர்த்தனன் மலர்க்கண் துஞ்சினான்.
(279. தானையின் மன்னவர் - சேனைக்காவலர். 280. அரிவை - பிருந்தை.
284. புல்லிய - இழிந்த. துள்ளுதல் - மகிழ்ச்சி மிகுதியால் குதித்தாடுதல்.
286. புல்லிய - தழுவிய. எல்லியும் - இரவும். 287. கதிர் - சூரிய வௌ¤ச்சம்.
கடி - அச்சம். வேளின் நூல் - மன்மதாகமம். மாயமது அயர்த்தனன் -
(தான்கொண்ட) மாயைமறந்து; முற்றெச்சம். துஞ்சினான் - தூங்கினான்.)
287
807 துஞ்சிய வேலையில் துணைவி யாகிய
பஞ்சினின் மெல்லடிப் பாவை பார்த்திவன்
வஞ்சகன் வஞ்சகன் மாய னேயெனா
அஞ்சினள் நெஞ்சகம் அழன்று நீங்கிளாள்.
288
808 அருந்ததி அன்னகற் பழிந்த தன்மையால்
வருந்தினள் உயிர்த்தனள் மாயம் யாவையும்
பொருந்திய தன்னுயிர்ப் போத நீர்மையால்
தெரிந்தனள் சீதரற் கிதனைச் செப்புவாள்.
289
809 மாவலி யுடையதோர் மடங்க லாயினோர்
காவல ரிருவர்அக் காவ லாளர்உன்
மேவல ராயுற வேந்த னாகிநீ
ஓவலை குரங்கொடு திரிதி ஒண்புவி.
290
810 பொற்புறு கணவனைப் போல வந்தெனைப்
பற்பகல் புணர்ந்தனை பகைவர் மாயையால்
கற்புடை மனைவியைக் கவர்ந்து போகநீ
சொற்படு பழியினைச் சுமத்தியால் என்றாள்.
291
811 இக்கொடு மொழிபுகன் றெரியை மூட்டியே
புக்குயிர் துறந்தனள் புலம்பி யாங்கவள்
அக்குறு சுடலைநீ றாடி வாடினான்
மைக்கடல் மேனியன் மாலின் மூழ்கியே.
292
812 வேறு
அத்துணை தன்னின் வானோர் அம்புயன் கயிலை யேகி
நித்தனை இறைஞ்சி மாயோன் நிலைமையை உயர்த்தும் போழ்தில்
சத்தியங் கதனைத் தேர்ந்து தலையளி செய்து தானோர்
வித்தினை உதவி ஈது விண்டுமுன் இடுதிர் என்றாள்.
293
813 ஈதலும் அதனை வேதா இருகையால் ஏந்திச் சென்னி
மீதுறக் கொண்டு போந்து விருந்தைதன் ஈமந் தன்னில்
தாதுறு பலியின் வித்தித் தடங்கட லமுதம் பெயய
மாதவன் முன்னம் ஆங்கோர் துளவமாய் மலிந்த தன்றே.
(289. தன் உயிர்ப்போத நீர்மையால் - தனது சீவபோதத் தன்மையால்.
290. மாவலி - மிக்க வலிமை. மேவலராய் உற - பகைவராய்ப் பொருந்த.
இங்குப் பகைவர் இராவணனும் கும்பகர்ணனும் ஆவர்.
அரசன் - இ·து இராமனை உணர்த்தும்.
291. கற்புடைய மனைவி - இங்கு சீதையை உயர்த்தும்.
292. அக்கு - என்பு. சுடலைநீறு - சுடுகாட்டுச் சாம்பல். ஆடி - புரண்டு.
293. சத்தி - உமாதேவியார். வித்து - (துளசி) விதை. 294. தாது - புழுதி.
பலி - சாம்பல்.)
294
814 தண்டுள வான தாங்கோர் கையலாய் நின்ற காலைக்
கண்டனன் தருவின் கேள்வன் கனலிடைப் புகுந்தாள் மீது
கொண்டிடு காதல் நீங்கி அவள்வயிற் கூட்டம் வெ·க
அண்டரும் அயனும் மாலுக் கருங்கவடி இயற்றி ஈந்தார்.
295
815 கடியுறு துளவம் என்னுங் கன்னியைக் கொண்டு கஞ்சக்
கொடியுறு தகைமைத் தான கோநகர் குறுகி வேறோர்
படியுறு பெற்றித் தல்லாப் பல்பெரும் போகம் ஆற்றி
முடியுறு கூட்டு மாக முடித்தனன் முளரிக் கண்ணன்.
296
816 அவன்சலந் தரனை வீட்டும் ஆழியை வாங்கப் பன்னாள்
சிவன்கழல் வழபட் டோர்நாள் செங்கணே மலராச் சாத்த
உவந்தனன் விடைமேல் தோன்றி அப்படை உதவப் பெற்று
நிவந்தனன் அதனால் வையம் நேமியான் என்ப மாதோ.
297
817 வேறு
போற்ற லார்தம் புரமடு புங்கவன்
வேற்று ருக்கொள் வியனருட் டன்மையைச்
சாற்றி னாம்இனித் தன்னிகர் இல்லதோர்
ஏற்றின் மேல்வருந் தன்மை இயம்புவாம்.
298
818 இன்ன நான்குகத் தெல்லை இராயிரம்
மன்னு கின்றதொர் வைகல்அவ் வைகல்தான்
துன்னு முப்பது தொக்கதொர் திங்களா
அன்ன தாறிரண் டால்வரும் ஆண்டரோ.
299
819 ஆண்டு நூறுசென் றால்அயற் காயுவும்
மாண்டு போமது மாற்கொரு வைகலாம்
ஈண்டு நூல்களெ லாமிவை கூறுமால்
காண்டி யாலிவை கற்றுணர் பேதைநீ.
300
820 ஆய தன்மையில் அச்சுதற் காயுவும்
மாயும் எல்லையின் மன்னுயிர் யாவையுந்
தேயும் அண்டஞ் சிதைந்திடும் எங்கணும்
பாயி ருங்கன லேபரந் துண்ணுமால்.
301
821 ஆன காலை அகிலமும் ஈமமாய்த்
தூந லங்கொடு தோன்றுமச் சூழலில்
தானு லாவித் தனிநடஞ் செய்திடு
ஞான நாயக னாயகி காணவே.
302
822 பெருகு தேயுப் பிரளயம் அன்னதில்
தருமம் யாவினுக் குந்தனித் தெய்வதம்
வெருவி யாமிவண் வீடுது மேலினிப்
புரிவ தேனெப் புந்தியிற் சூழ்ந்ததே.
(295. கூட்டம் - சேர்க்கை. அருங்கடி - அரிய திருமணம்.
297. அவன் - இங்குத் திருமால். நிவந்தனன் - உயர்ந்தனன்.
298. ஏறு - இடபம்.
299. உகம் - யுகம். இன்ன - (பிரமனுக்கு) இத்தன்மையான.
303. தேயுப்பிரளயம் - அக்கினிப் பிரளயம்; இதில் தருமத் தெய்வம் மட்டும்
அழியாது என்பது நூற்றுணிபு. தருமம் யாவினுக்கும் தனித்தெய்வதம் -
எல்லோர்க்கும் பொதுவான தருமத்தெய்வம்.)
303
823 ஆறு லாஞ்சடை அண்ணலைச் சேர்வனேல்
ஈறிலா சென்றும் உற்றிடு வேனெனாத்
தேறி யேஅறத் தெய்வதஞ் செங்கணான்
ஏற தாயொ ரெழிலுருக் கொண்டதே.
304
824 ஏற்றின் மேனிகொண் டீசன்முன் ஏகியே
போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை
மாற்றி யாற்றல் வழங்கிநிற் கூர்தியாம்
பேற்றை எற்குப் பிரானருள் என்னவே.
305
825 வேறு
இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப்
பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும்
உறைத்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே
அறத்தனிக் கடவுளுக் கண்ணல் கூறுவான்.
306
826 முதலயல் இடைகடை மொழிய நின்றிடுஞ்
சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம்
இதுவென நான்குமூன் றிரண்டொன் றாகிய
பதமுறை யூன்றியே படியிற் சேறிமேல்.
307
827 ஈங்குன திடந்தனில் யாமெக் காலமும்
நீங்கலம் இருந்தனம் நீயும் வந்துநம்
பாங்கரின் அடைந்தனை பரிவொ டூர்தியாய்த்
தாங்குதி யாரினுந் தலைமை பெற்றுளாய்.
308
828 எண்ணுநந் தொண்டர்கள் இயற்று பாவமும்
புண்ணிய மாநமைப் புறக்க ணித்துளார்
பண்ணிய அறமெலாம் பாவ மாகுமால்
திண்ணமீ தருமறை தானுஞ் செப்புமே.
309
829 மைதவிர் அடியர்செய் பவமு மற்றுளார்
செய்திடு தருமமுந் திரிப தாகியே
எய்திடு கின்ற தியாம்உன் றன்னிடை
மெய்திகழ் உயிரென மேவும் பான்மையால்.
310
830 நின்னிடை யாமுளோம் நீயும் ஊர்தியாய்
மன்னுதி எமதுபால் மற்றி தல்லதை
இன்னுமோர் வடிவு கொண் டெம்மைப் போற்றுதி
அன்னதும் உணர்கென அருளிச் செய்தரோ.
(306. யானம் - வாகனம். 307. சதுர்வித யுகம் - கிரேத திரேத துவாபர
கலி என்னும் நான்கு வகை யுகங்கள். பதம் - கால். சேறி - செல்வாய்.
309. புறக்கணித்துளார் - அலட்சியம் செய்தவர்கள்.
311. இன்னுமோர் வடிவு - மானுட வடிவு.)
311
831 வேறு
கூர்ந்த சூலக் கொடும்படை வானவன்
சார்ந்து போற்றுந் தருமக் கடவுளை
ஊர்ந்தி டுந்தனி யூர்திய தாகியே
சேர்ந்தி டும்படி சீரருள் செய்தனன்.
312
832 அந்த நாண்முத லாதிப் பிரான் றனைச்
சிந்தை மேல்கொண்ட சீருடை யன்பர்முன்
நந்தி யாகும் நலம்பெறும் ஊர்திமேல்
வந்து தோன்றும் வரம்புரி பான்மையால்.
313
833 சாற்றும் அவ்விடைக் கேதனைத் தாங்குபேர்
ஆற்றல் ஈந்த செயலறிந் தல்லவோ
மாற்ற லார்புரஞ் செற்றுழி மாயவன்
ஏற்றின் மேனிகொண் டெந்தையைத் தாங்கினான்.
314
834 ஆத லால்அரன் அவ்விடை யூர்ந்திடல்
ஏத மோவன் றிதுநிற்க தெண்டிரை
மீது தோன்றும் விடத்தையுண் டானென
ஓதி னாய்அதன் உண்மையைக் கேட்டிநீ.
315
835 வேறு
நிருதர் தம்முடன் அவுணரும் அமரரும் நேர்ந்து
திருகு வெஞ்சினத் தொருபகல் முந்துபோர் செய்ய
இருதி ரத்தினும் பற்பலர் வல்லையில இறப்ப
வெருவி யன்னது கண்டனர் அமரினை விடுத்தார்.
316
836 மேலை வானவர் அவுணர்தங் கோவொடு விரவிக்
கால மெண்ணில இருந்துபோர் செய்வது கருதி
நாலு மாமுகத் திறையவன் பதத்தினை நணுகிச்
சீல மோடவன் தாள்மலர் பணிந்துரை செய்வார்.
317
837 ஒல்கு மாயுளை உடையரேம் பற்பகல் உஞற்று
மல்கு பேரமர் இயற்றுவான் பாற்கடல் மதியா
அல்க லின்றிய அமிர்தினை வாங்கியே அடிகேள்
நல்கு வாயெமக் கென்றலும் அயன்இவை நவில்வான்.
318
838 ஆதி மாயவற் கிச்செயல் மொழிகுவம் அவனே
ஓத வேலையைக் கடைந்தமு தளித்திடும் உண்டால்
சாதல் வல்லையில் வந்திடா தென்றயன் சாற்றிப்
போது நாமென அவரொடும் பாற்கடல் புகுந்தான்.
319
839 நனந்த லைப்படு பயங்கெழு தெண்டிரை நடுவண்
அனந்தன் மீமிசைச் துயிலுறும் மூர்த்தியை அணுகி
மனந்த வாதபேர் அன்பொடு நான்முகன் வழுத்த
நினைந்து கண்விழித் தொய்யென எழுந்தனன் நெடியோன்.
320
840 நீவிர் இவ்விடை வந்தவா றென்னென நெடியோன்
பூவின் மேல்வரு பண்ணவன் அவுணர்கள் பொருவில்
தேவர் வேந்தர்கள் வேண்டிய குறையினைச் செப்ப
ஆவ தென்றதற் கியைந்தனன் அளித்திடும் அருளால்.
(314. செற்றுழி - அழித்தபோது. ஏற்றின் மேனி - இடபவடிவம்.
316. நிருதர் - இராக்கதர். அவுணர் - அசுரர்.
320. நல் + நந்து + அலைப்படு - நனந்தலைப்படு. நந்து - சங்கு.
பயம் - பால்.)
321
841 அருள்பு ரிந்தெழு மாயவன் மந்தரம் அதனை
உருள்பு ரிந்திடு மத்தென நிறுவியே உடலாம்
பொருள்பு ரிந்திடும் மதியினை மதலையாப் புரியா
இருள்பு ரிந்தவா சுகிதனை நாணென யாத்தான்.
322
842 ஒருபு றத்தினில் அமரர்கள் ஒருபுறத் தவுணர்
இருபு றத்தினும் ஈர்த்திட நல்கியிப் புவிசூழ்
தருபு றக்கிரி யனையமத் தடிமுடி தன்மெய்
வருபு றத்தினுங் கரத்தினும் பரித்தனன் மாலோன்.
323
843 ஆன தன்மையின் மாயவன் பரித்துழி அமரர்
கோனும் வானவர் யாவரும் அவுணருங் கோமான்
தானும் வாசுகி பற்றியே வலியுறுந் தகவால்
வானி லாவுமிழ் பாற்கடல் மறுகிட மதித்தார்.
324
844 மதித்த வேலையவ் வேலையி னுடைந்தென வாய்விட்
டதிர்த்த தேவரும் உலைந்தனர் குலைந்தன அகிலம்
கதித்த மேருவுஞ் சலித்தன ஒலித்தன கரிகள்
பதைத்து வெய்துயிர்த் தொடுங்கின நடுங்கின பணியே.
325
845 உடைந்து போவது கொல்லென அமரர்கள் ஒருங்கே
தொடர்ந்து தம்பெரு வலிகொடே மந்தரஞ் சுழலக்
கடைந்து வேலையைக் கலக்குறி ஈர்த்திங் கயிறாய்
அடைந்த வாசுகி பொறுக்கலா தயர்ந்ததை அன்றே.
326
846 ஊன்று பேதுற வெய்தியே யாற்றவெய் துயிர்த்துத்
தோன்று வெஞ்சினங் கொண்டுமெய் பதைத்துநாத் துடிப்ப
ஆன்ற ஆயிரம் வாய்தொறும் ஆலகா லத்தைக்
கான்ற தத்துணை அளக்கரும் உமிழ்ந்தது கடுவே.
327
847 ஈற்றுக் கோடியின் எழுமுகிற் கோடியின் இருண்டு
கூற்றுக் கோடியின் மறங்கொடு திசைதொறுங் குலவுங்
காற்றுக் கோடியின் விரைவினால் வடவையங் கடுந்தீ
நூற்றுக் கோடியிற் பரந்ததவ் விடமெலாம் நொய்தின்.
328
848 ஓட லுற்றெழுந் தவ்விடஞ் சூழ்தலும் உலையா
ஓட லுற்றனர் தானவர் உம்பரா யுள்ளோர்
ஓட லுற்றனர் முனிவரர் ஓடலுற் றனரால்
ஓட லுற்றனர் உலகெலாம் படைத்திடும் உரவோர்.
(322. மதலை - தூண். நாண் - கயிறு. 323. புறக்கிரி - சக்கரவாளகிரி.
324. பரித்துழி - தாங்கியவுடனே. மறுகிட - கலங்கும் வண்ணம்.
325. கரிகள் - திக்கு யானைகள். பணி - அட்டநாகங்கள்.
வேலையின் இன் : சாரியை.
327. அளக்கர் - பாற்கடல். கடு - விஷம். 328. ஈற்றுக்கோடி - யுகமுடிவு.)
329
849 தண்டு ழாய்முடிப் பண்ணவன் இனையதோர் தன்மை
கண்டு மந்தரங் காப்புவிட் டுள்ளமேற் கவற்சி
கொண்டு நாமின்று போற்றுதும் ஈதெனக் குறியா
அண்ட ராதியர் மேற்செலும் விடத்தின்முன் அடுத்தான்.
330
850 மேல்வ ருங்கொடு விடத்தின்முன் னுறுதலும் வெகுண்டு
சால அங்கது தாமரைக் கண்ணன்மேல் தாக்கி
மூல முள்ளதோர் வச்சிர மணிநிற முருக்கி
நீல வண்ணமே யாக்கிய தவனும்நின் றிலனால்.
331
851 கோல காலமாய் உலகெலாம் அடுந்தொழில் கொண்ட
ஆல காலமுன் நிற்கலார் அரிமுத லானோர்
மூல காலமும் இறுதியும் இன்றியே மூவாக்
கால காலன்வாழ் கயிலையை அடைந்தனர் கடிதில்.
332
852 முந்து வெவ்விடஞ் சுடுதலால் இரிந்தவர் முக்கண்
எந்தை எம்பெரு மாட்டிவாழ் கயிலையில் எவரும்
வந்த தற்புத நீரதோ வெருவினால் மைந்தர்
தந்தை தாயிடத் தன்றியே யாங்ஙனஞ் சார்வார்.
333
853 வேறு
ஆயவர் கயிலையில் அமலற் காகிய
கோயிலின் முதற்பெருங் கோபு ரத்திடை
நாயக நந்தியந் தேவை நண்ணியே
போயதெந் துயரெனப் புகன்று போற்றினார்.
334
854 போற்றிய பின்னுறப் புகுந்த வாறெலாஞ்
சாற்றினர் கேட்டலுந் தகுவர் தேவர்கள்
வீற்றுற அவண்நிறீஇ வேதன் மாறிசைக்
கோற்றொழிலாதமைக் கொண்டு போயினான்.
335
855 நடைநெறி யருள்புரி நந்தி யெம்பிரான்
கடைநிலை ஐந்தவாங் காப்பில் எண்டிசை
அடைதரு மன்னரை அருளின் நோக்கியிவ்
விடைதனில் உறுதிரென் றியம்பி யேகியே.
336
856 அருள்முறை நாடிமால் அயனென் றுள்ளதோ£
இருவரை அமலன்முன் எய்த உய்த்தலுங்
கருணையங் கடல்தனைக் கண்டு போற்றினார்
பரவச மாயினார் பணிந்து பன்முறை.
337
857 போற்றினர் நிற்றலும் புரத்தை முன்அடும்
ஆற்றலின் உம்பரான் உரிநின் மேனிதான்
வேற்றுரு வாய்இவண் மேவிற் றென்னெனச்
சாற்றினன் யாவையும் உணருந் தன்மையான்.
(330. போற்றுதும் - காப்போம். 331. மூலம் - முன்னர். முருக்கி - கெடுத்து.
332. கோலகாலம் - பேரொலி. மூலகாலம் - தோற்றம். மூவா - அழியா.
333. வெருவினால் - பயமுற்றால். 338. அரி - திருமாலே!.)
338
858 மெய்வழி பாடுசெய் மேலை யோர்க்கெலாம்
உய்வழி புரிபவன் இனைய ஓதலும்
மைவழி மேனியன் மானம் உள்ளுற
அவ்வழி இனையன அறைதல் மேயினான்.
339
859 வஞ்சின அவுணர்கள் வான மேலவர்
வெஞ்சின அமரினில் விளிந்த வேலையில்
எஞ்சலில் ஆயுவுற் றிகல்செய் வாமெனப்
புஞ்சமொ டயனொடு புகறல் மேயினார்.
340
860 அன்னமென் கொடியினன் அனைய ரோடுபோந்
தென்னொடு கூறினன் யானெ ழுந்தரோ
உன்னருள் பெற்றிலன் உணர்ந்தி டாமலே
மன்னிய அமிழ்திவண் வருதல் வேண்டினேன்.
341
861 தானவர் அமரர்கள் சதுர்மு கத்தவன்
ஏனையர் தம்முட னியானின் றெய்தியே
பானிறை கடல்கடை பொழுதிற் பாயெரி
யானது மருளுற ஆலம் போந்ததே.
342
862 உன்றன தருள்பெறா உண்மை நாடியே
இன்றுல குயிரெலாம் இறக்க அவ்விடஞ்
சென்றதி யாவருந் தெருமந் தோடினார்
நின்றவென் மெய்யையிந் நிறம் தாக்கிற்றே.
343
863 வேற்றுரு வாக்கியென் மெய்யில் தாக்கலும்
ஆற்றலன் அகன்றனன் அனையர் தம்மொடே
ஏற்றம தானவெம் மிடர்கள் யாவையும்
ஆற்றுநர் யாருளர் மற்று நீயலால்.
344
864 உன்னருள் பெறாமல்அவ் வுததி சேர்தலால்
இன்னதொர் இன்னல்வந் தெய்திற் றாதலால்
நின்னடி அடைந்தனம் நீடு தீயெனத்
துன்னிய கொடுவிடந் தொலைக்கச் செல்லுமால்.
345
865 ஆரணம் யாவையும் அறிந்து நாடொணாப்
பூரண வுமையொடு பொருந்தி இன்னதாம்
ஏரண வுருவுகொண் டிருக்கை எம்மையாள்
காரண மன்றியே கருமம் யாவதோ.
346
866 தீயென எழுதரு சீற்ற வெவ்விடம்
ஆயதை மாற்றியே அளியர் தங்களை
நீயருள் புரிகென நீல்நி றத்திகழ்
மாயவன் உரைத்தனன் வழுத்தி நிற்கவே.
(340. ஆயு - ஆயுள். புஞ்சம் - கூட்டம். 346. ஏரணம் - அழகு.)
347
867 மாதிர இறைவரும் வானு ளோர்களும்
நீதியில் அவுணரும் நின்ற எல்லையில்
நாதனை வழுத்தலும் நம்பன் கேட்டரோ
ஏதிவை அரவம்என் றியம்ப லோடுமே.
348
868 வானவர் அவுணர்கள் மாதி ரத்தவர்
ஏனையர் வல்லிடத் தின்னல் உற்றுளார்
கோநகர்க் கடைதொறுங் குழுமி ஏத்தினார்
ஆனதிவ் வொலியென அயன்வி ளம்பவே.
349
869 கறுத்திடும் மிடறுடைக் கடவுள் நந்தியைக்
குறிப்பொடு நோக்கியே கொணர்தி யாலெனப்
புறத்திலம் மேலவன் போந்து மற்றவர்
திறத்துடன் உரையுளில் செல்ல உய்ப்பவே.
350
870 வந்தவர் யா£ரும் வணங்கி ஈசனைப்
புந்தியில் அன்பொடு போற்றி யாற்றவுங்
நொந்தனம் விடத்தினால் நொய்தில் அன்னதைச்
சிந்தினை எமக்கருள் செய்தி என்னவே.
351
871 வேறு
ஈதெலாங் கேட்ட மேலோன் இறைவியை நோக்கி இன்னோர்
ஓதலா மாற்றம் உன்றன் உளத்தினுக் கியைவ தாமோ
மாதுநீ புகறி யென்ன வந்துநின் னடைந்தார் வானோர்
ஆதலால் அவர்க்கு வல்லே அருள்புரிந் திடுதி என்றாள்.
352
872 வண்டமர் குழலெம் மன்னை மற்றிவை இசைத்த லோடும்
அண்டரு மகிழ்ச்சி எய்தி ஆதியங் கடவுள் தன்பால்
தொண்டுசெய் தொழுகு கின்ற சுந்தரன் தன்னை நோக்கிக்
கொண்டிவண் வருதி யால்அக் கொடுவிடந் தன்னை என்றான்.
353
873 என்றலும் இனிதே என்னா இறைஞ்சினன் ஏகி யாண்டுந்
துன்றிய விடத்தைப் பற்றிச் சுந்தரன் கொடுவந் துய்ப்ப
ஒன்றொரு திவலை யேபோல் ஒடுங்குற மலர்க்கை வாங்கி
நின்றிடும் அமரர் தம்மை நோக்கியே நிமலன் சொல்வான்.
354
874 காளக வுருவு கொண்ட கடுவினை உண்கோ அன்றேல்
நீளிடை அதனிற் செல்ல நெறிப்பட எறிகோ என்னா
வாளுறு மதிதோய் சென்னி வானவன் அருள அன்னான்
தாளுற வணங்கி நின்று சதுர்முகன் முதலோர் சொல்வார்.
355
875 ஐயநீ யன்றி யாரிவ் வனல்விட மாற்று நீரார்
செய்யகைக் கொண்ட ஆற்றாற் சிறிதெனக் காட்டிற் றன்றே
வெய்யதோர் இதனை இன்னே விட்டனை என்னிற் பின்னை
உய்வரோ யாரும் இன்னே ஒருங்குடன் முடிந்தி டாரோ.
(348. மாதிர விறைவர் - திசைகாவலர். அரவம் - ஓசை.
349. கோநகர் - (இக்)கயிலையின். கடைதொறும் - திருவாயில்கள் தோறும்.
353. அண்டரும் - அடைதற்கரிய. சுந்தரன் - இவர் இறைவனின் அணுக்கத்
தொண்டரில் ஒருவர்; பின்னர் பூமியில் சுந்தரமூர்த்தியாக வந்து தோன்றியவர்.
354. ஒரு திவலை - ஒரு துளி.
355. காளகவுருவு - கருமை நிறம். உண்கோ - உண்ணவோ.
எறிகோ - எறியவோ.)
356
876 முடிவிலா உனக்கே அன்றோ முன்னுறு பாக மெல்லாம்
விடமதே எனினு மாக வேண்டுதும் இதனை வல்லே
அடியரேம் உய்யு மாற்றால் அருந்தினை அருள்மோ என்னக்
கடிகமழ் இதழி வேய்ந்தோன் கலங்கலீர் இனிநீ ரென்றான். 357
357
877 என்றனன் விரைவில் தன்கை ஏந்திய விடமுட் கொள்ளச்
சென்றது மிடற்றில் அன்ன திறத்தினை யாரும் நோக்கி
இன்றெம துயிர்நீ காத்தற் கிங்கிது சான்றாய் அங்கண்
நின்றிட வருடி என்றே நிமலனைப் போற்றல் உற்றார்.
358
878 போற்றலும் மிடற்றில் எங்கோன் பொலன்மணி அணிய தென்ன
மாற்றருந் தகைமைத் தான வல்விடம் நிறுவி அன்னார்க்
கேற்றநல் லருளைச் செய்ய யாவரும் இறந்தே இன்று
தோற்றின ராகும் என்னச் சொல்லரு மகிழ்ச்சி கொண்டார்.
359
879 மாமகிழ் சிறந்து நிற்கும் மாலயன் முதலோர் தம்மைத்
தூமதி மிலைச்சுஞ் சென்னித் தொல்லையோன் அருளால் நோக்கிக்
காமரு கடலை இன்னுங் கடைதிரால் அமுதுண் டாகும்
போமினீர் இன்னே என்னப் போற்றினர் வணங்கிப் போனார்.
360
880 போனவர் தொன்மை போலப் புணரியைக் கடைந்த காலை
மேனிகழ் அமிர்த மேனை வியன்பொருள் பலவும் வந்த
வானவர் தாமே பெற்றோர் மற்றவை தம்மை ஆலம்
ஆனதை அமலன் உண்ட தவருயிர் அளித்த தன்றே.
361
881 கடல்விடம் நுகர்ந்த தொல்லைக் கடவுள்பின் னழிக்குங் காலை
உடலுயிர் அகிலம் யாவும் ஒடுங்கிய விடம தன்றோ
சுடலைய தாகும் அந்தச் சுடலைகாண் அனைய சோதி
நடநவில் கின்ற எல்லை நாடருந் தகைமைத் த·தே.
362
882 அங்கதும் அன்றி எந்தை அகிலமு முடித்த ஞான்றின்
எங்கும்வௌ¢ ளிடைய தாகி ஈமமாம் அவ்வீ மத்து
மங்கையுந் தானு மேவு மற்றிது தவறோ அன்னான்
கங்கையை முடிமேற் கொண்ட காதைமேல் உரைத்தும் அன்றே.
363
883 ஈசனை ஒருஞான் றம்மை எழில்பெறு கயிலைக் காவில்
பேசலள் ஆடல் உன்னிப் பின்வரா விழியி ரண்டுந்
தேசுறு கரத்தாற் பொத்தச் செறிதரு புவனம் யாவும்
மாசிருள் பரந்த தெல்லா உயிர்களும் வருத்தங் கொள்ள.
364
884 திங்களின் கதிரும் ஏனைத் தினகரன் வெயிலுந் தீயின்
பொங்குசெஞ் சுடரும் ஏனைப் புலவர்தங் கதிரு மற்றும்
எங்குள ஔ¤யும் மாய்வுற் றிருள்நிறம் படைத்த மாதோ
சங்கரன் விழியால் எல்லாச் சோதியுந் தழைத்த நீரால்.
(357. அருந்தினை அருள்மோ - அருந்தி அருள்க.
359. பொலன்மணி - அழகிய நீலமணி.
361. புணரி - போற் கடல். ஏனை வியன்பொருள் - மற்றைய மேலான
காமதேனு, கற்பகத்தரு முதலிய பல பொருள்கள்.
364. ஒரு ஞான்று - ஒரு தினம். பொத்த - மூட.)
365
885 தன்னிகர் பிறரி லாத தற்பரன் விழியி ரண்டுங்
கன்னிகை கமலக் கையாற் புதைப்பஅக் கணம தொன்றின்
மன்னுயிர்த் தொகைகட் கெல்லாம் வரம்பிலா வூழி யாக
அன்னதோர் பான்மை நோக்கி அருளுவான் நினைந்தான் அன்றே.
366
886 ஓங்குதன் நுதலின் நாப்பண் ஒருதனி நாட்டம் நல்கி
ஆங்கது கொண்டு நாதன் அருள்கொடு நோக்கி யாண்டும்
நீங்கரு நிலைமைத் தாகி நின்றபேர் இருளை மாற்றித்
தீங்கதிர் முதலா னோர்க்குச் சிறந்தபே ரொளியை ஈந்தான்.
367
887 மண்ணுறு புவனத் துள்ள மாயிருள் முழுதும் நீங்க
உண்ணிகழ் உவகை மேல்கொண் டுயிர்த்தொகை சிறத்த லோடுங்
கண்ணுதல் இறைவன் செய்கை கவுரிகண் டச்சம் எய்தித்
துண்ணென விழிகள் மூடுந் துணைக்கரம் வாங்கி னாளால்.
368
888 சங்கரன் விழிகள் மூடுந் தனாதுகை திறக்கும் எல்லை
அங்குலி யவையீ ரைந்தும் அச்சத்தால் வியர்ப்புத் தோன்ற
மங்கையத் தகைமை காணூஉ மற்றவை விதிர்ப்பப் போந்து
கங்கையோர் பத்தா யாண்டுங் கடல்களிற் செறிந்த அன்றே.
369
889 ஆயிர நூறு கோடி அணிமுகம் படைத்தி யாண்டும்
பாயிரு நீத்த பரவலும் அதுகண் டஞ்சி
மாயனும் அயனும் வானோர் மன்னனும் பிறரும் போற்றி
மீயுயர் கயிலை நண்ணி விமலனை அடைந்து தாழ்ந்தார்.
370
890 அடிமலர் தொழுதே எந்தாய் அறிகிலோம் இதுவோர் நீத்தங்
கடல்களும் அன்றால் யாண்டுங் கல்லென விரைத்தி யாரும்
முடிவுறு திறத்தால் அண்டம் முழுவதுங் கவர்ந்த முன்னாள்
விடமெனப் பரித்தே ஈது விமலநீ காத்தி என்றார்.
371
891 என்றலும் நதிகள் தோற்றம் இயம்பிஎவ் வுலகுஞ் சூழபோய்
நின்றவந் நீத்தந் தன்னை நினைத்தவண் அழைத்து நாதன்
ஒன்றுதன் வேணி மேல்ஓர் உரோமத்தின் உம்ப ருய்ப்ப
மன்றலங் கமலத் தோனும் மாலுமிந் திரனுஞ் சொல்வார்.
372
892 மேதினி யண்ட முற்றும் விழுங்கிய கங்கை உன்றன்
பாதியாள் கரத்தில் தோன்றும் பான்மையால் உனது சென்னி
மீதினிற் செறிக்கும் பண்பால் விமலமாம் அதனில் எங்கண்
மூதெயில் நகரம் வைகச் சிறிதருள் முதல்வ என்றார்.
(366. புதைப்ப - மூட. 367. ஒரு தனி நாட்டம் - இங்கு நெற்றிவிழி.
368. துணைக்கரம் - இருகரங்கள். 369. அங்குலி அவை ஈரைந்தும் - பத்து விரல்களிலும்.
371. கல்லென - கலீரென. 372. நீத்தம் - சலம்பிரவாகம்.
373. மேதினி அண்டம் - பிருதிவியண்டம். பாதியாள் - உமை. விமலமாம் -
பரிசுத்தமானதாம்.)
373
893 இறையவன் வேணி யுள்புக் கிருந்ததோர் கங்கை தன்னில்
சிறுவதை வாங்கி மூவர் செங்கையுஞ் செறிய நல்க
நிறைதரும் அன்பால் தாழ்ந்து நிகழ்விடை பெற்றுத் தத்தம்
உறைநகர் எய்தி அங்கண் உய்த்தனர் அனைய நீத்தம்.
374
894 அந்நதி மூன்று தன்னில் அயனகர் புகுந்த கங்கை
பன்னருந் திறலின் மிக்க பகீரதன் தவத்தால் மீளப்
பின்னரும் இமையா முக்கட் பெருந்தகை முடிமேல் தங்கி
இந்நில வரைப்பிற் செல்ல இறையதில் விடுத்தல் செய்தான்.
375
895 நானில மிசையே உய்த்த நன்னதி சகரர் எல்லாம்
வானுயர் கதிபெற் றுய்ய மற்றவர் என்பிற் பாய்ந்து
மீனெறி தரங்க வேலை மேவிய தி·தொன் றல்லால்
ஏனைய நதிகள் தொல்லை இடந்தனில் இருந்த அன்றே.
376
896 தொல்லையில் இறைவி அங்கைத் தோன்றி கங்கை நீத்தம்
ஒல்லையில் உலகங் கொள்ளா தடக்கிய உண்மை அன்றோ
அல்லிருள் அனைய கண்டத் தாதியங் கடவுள் முன்னோர்
மெல்லியல் தன்னை வேணி மிசைக்கொண்டா னென்னு மாறே.
377
897 மாதுமை வசத்த னாகி மருவுவான் என்றி அன்னான்
நாதனே தருளே எல்லாம் நண்ணுவித் தருளும் வண்ணம்
பேதக மாகித் தானோர் பெண்ணுருக் கொண்டு மேவும்
ஆதலின் அவள்வந் துற்ற தன்மையை அறைவன் கேட்டி.
378
898 தொல்லையோர் கமலத் தண்ணல் தோன்றியே இருந்த காலைப்
பல்லுயிர்த் தொகுதி தன்னைப் படைப்பது கருதி முன்னர்
வல்லையிற் சனக னாதி மைந்தர்நால் வரையுநல்க
நல்லுணர் வெய்தி அன்னோர் நற்றவ ராகி உற்றார்.
379
899 அன்னதற் பின்னர் வேதன் அளிப்பதும் அல்கா தாக
இன்னலுற் றிரக்கம் எய்தி யாதினிச் செய்வ தென்னா
முன்னுறு குமர ரோடு முகுந்தன திடத்தில் எய்திப்
பொன்னடி வணக்கஞ் செய்து தன்குறை புகன்று நின்றான்.
380
900 நின்றிடு கின்ற காலை நேமியங் கரத்து வள்ளல்
இன்றிது நம்மல் முற்றா தீசனால் அன்றி யென்னா
நன்றுணர் முனிவ ரோடு நான்முக னோடும் வௌ¢ளிக்
குன்றினில் ஏகி நாதன் குரைகழல் பணிந்து சொல்வான்.
(374. சிறு வதை - ஒருசிறிது. மூவர் - திருமால், பிரமன், இந்திரன் என்ற மூவர்.
375. பகீரதன் - இவன் சகரர் வம்சத்தில் வந்த ஒரு அரசன், மிக்க முயற்சியுடையவன்.
376. நானிலம் - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நிலங்கள்; பூமியுமாம்.
சகரர் - இவர் அயோத்தி நகரை அரசுபுரிந்த சகரன் புதல்வர்கள்; இவர்கள்
அறுபதினாயிரவர் ஆவர்.
379. தொல்லை - முன்னொரு கற்பம். சனகன் ஆதி மைந்தர். நால்வர் -
சனகன், சனந்தனன், சநாதனன், சனத்குமாரன் என்னும் நான்கு புதல்வர்கள்.
381. முற்றாது - முற்றுப்பெறாது.)
381
901 அண்டர்கள் முதல்வ கேண்மோ அம்புயன் படைப்பின் உள்ளங்
கொண்ட னன்அதுமல் காதால் குறையிது நீக்கு கென்ன
வண்டுள வத்தி னானை மைந்தரை அயனை நோக்கி
நுண்டுகள் படவே ஈசன் நொய்தென வீறு செய்தான்.
382
902 ஏகனை ஆகை வைகும் எந்தைதன் னிடப்பா லான
வாகுவை நோக்கும் எல்லை மற்றவண் உமையாள் தோன்றப்
பாகம திருத்தி அன்னாள் பரிவொடு கலந்து மேவிக்
கோகன தக்கண் னானைக் குமரரை அயனைத் தந்தான்.
383
903 தந்துழி ஈசன் தன்னைத் தனயரும் அயனும் மாலும்
வந்தனை செய்து போற்ற மாயவன் வதனம் நோக்கி
நத்தம தருள தாகு நங்கையோ டினிது சேர்ந்தாம்
முந்தையின் வேதாச் செய்கை முற்றிடும் போதி என்றான்.
384
904 என்னலும் உவகை எய்தி யாமினி உய்ந்தோம் என்னா
அன்னையொ டத்தன் தன்னை அளியொடு வலஞ்செய் தேத்திப்
பின்னரும் வணக்கஞ் செய்து பெயர்ந்தனர் பின்பு வேதா
மன்னுயிர்த் தொகுதி யெல்லாம்வரன்முறை படைக்கல் உற்றான். 385
385
905 மாற்றலர் புரமூன் றட்ட வானவன் உமையா ளோடும்
வீற்றிருந் தருள லாலே விழைவுடன் ஆண்பெண் மேவி
ஆற்றவும் இன்ப மெய்தி ஆவிகள் பெரிது மல்க
நாற்றிசை முகத்தன் செய்கை நன்றுற நடந்த தன்றே.
386
906 தேனமர் கமலத் தண்ணல் செய்தொழில் முற்று மாற்றால்
ஆனதன் னருளை யாங்கோ ராயிழை யாக நல்கி
மேனிகழ் கருணை தன்னால் மேவுவ துணராய் ஏனை
வானவர் போலெங் கோனை மதித்தனை மதியி லாதாய்.
387
907 காமரு வடிவாய் எங்குங் காண்பது சத்தி அங்கண்
மாமய மாகி நின்றான் மன்னிய சிவனாம் ஈது
தூமறை முதலா வுள்ள தொலைநூல் புகலும் அன்னால்
தாமொரு புதல்வன் தன்னைத் தந்தவா சாற்று கின்றாம்.
(382. மல்காதால் - மலிவுற்றதில்லை. மைந்தர் - சனகாதியர்.
383. வாகு - தோள்.
386. ஆற்றவும் - மிகவும். ஆவிகள் - உயிர்கள். 388. காமரு - அழகிய,
388
ஆகத் திருவிருத்தம் - 907
-----------

This file was last revised on 2 August 2008
This eText was made available as a service by Siva. Vanmeegi, Bangalore.