 
 
 கண்ணப்பர் கலம்பகம்
 நூலாசிரியர் வீ. துரைசாமி முதலியார் 
kaNNappar kalampakam
of vI. turaicAmi mutaliyAr 
In tamil script, unicode/utf-8 format
 
 
Acknowledgements: 
Our Sincere thanks go to the Digital Library of India 
for providing us with scanned images version of the work online.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach. 
We thank the following persons in the preparation and proof-reading of the etext: 
Sakthikumaran, S. Karthikeyan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan, 
Sankarasadasivan, V. Devarajan and Thamizhagazhvan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland. 
This file was last updated on 17 October 2010. 
©  Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation 
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet. 
Details of Project Madurai are available at the website 
 http://www.projectmadurai.org/ 
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
 
 
  கண்ணப்பர் கலம்பகம்
 நூலாசிரியர் வீ. துரைசாமி முதலியார்
 சிவமயம்
 Source:  
 "கண்ணப்பர் கலம்பகம்"
 நூலாசிரியர் வீ. துரைசாமி முதலியார்
  புதுவைக் கவர்மெண்ட் கல்விச்சாலைத் தமிழ்ப்பண்டிதர்.
 (தமிழ் மகவுப் பத்திராசிரியர்)
       (புதுவை அனந்தா பிரஸிற் பதிப்பிக்கப்பட்டது)
--------
 இப்புத்தகத்திலடங்கியவை:  
1.  நூன்முகம்   
2.  சிறப்புக்கவிகள்    
3.  கண்ணப்பர் கலம்பகம்.   
4.   அன்புங்கண்ணப்பரும்  
5.  கண்ணப்பரைக்குறித்த வேறு சிலபாடல்கள்    
-------------
 1.  நூன்முகம்.  
    
    அநாதிமலமுத்த சித்துருவாய சிவபிரானது திருவருளையன்பினானே யடைந்துய்ந்த 
அடியார்கட்கு அடிமை செய்வதே, பவக்கடல் கடந்து முத்தியங்கரையிலேறுதற் 
கேற்ற பாதையாமென்று பண்புடைப் பெரியோர்கள் பகர்ந்துள்ளார்கள். இது,  
 "தலையா னடந்து முத்திநிலஞ் சார்த லொக்கும் பசுதன்மங்கலையார் 
கரத்தான் சிவசரிதை காலா னடத்தாம் பறந்தடைதறொலையே யொக்குஞ்  
சிவபூசை தொண்டர் பூசையாலடைதன் மலைவாயு வேகத்தான்  
மனோவேகத்தான் ஞானநிலை". எனவும்,
"பொடிகொண் மேனியன் பூசையி னும்மவன்-அடியர்பூசையதிக மதிகமே."  
எனவும் வருவனவற்றால் மயலற விளங்குமென்க தம்பிரான் றோழராகிய  
சுந்தரமூர்த்தி சுவாமிகளருளிய திருத்தொண்டத் தொகையின் உண்மைக் 
கருத்தையு முய்த்துணர்க.
    இத்தகைய தொண்டர் தொண்டுசெய்துய்வான் கருதிய சிறு நாயேன்  
சிந்தையின் கண்ணே கண்ணப்பநாயனார் பாதமலரிற் கலந்துய்வா- 
மென்றோரெண்ண மினிதுதிப்ப, அதனாற் கண்ணப்பர் கலம்பகம், 
கண்ணப்பர் பதிகம் என்னுந்துதிகளை இயற்றியுள்ளேன்.   அத்துதிகளைக்கேட்ட 
 அன்பர் சிலர் கண்ணப்பர் கலம்பகத்தை அச்சிட்டு வெளியிடவேண்டுமென்று  
பன்முறை பணிக்க, அவ்வாறு ஆரம்பித்து முதலிற் கலம்பகம் அச்சிட்டானபின்,  
அது கற்பார்க்கு இன்றியமையாது வேண்டப்படும் "அன்புங் கண்ணப்பரும்"  
என்னும் விஷயமும், கண்ணப்பரைக் குறித்த வேறு சில பாடல்களும்  
இப்பதிப்பில் சேர்த்துள்ளேன்.
    இக்கலம்பகத்திற்குக்  குறிப்புரையொன் றெழுதி யச்சிடத் தொடங்குங்கால்  
நூன்முழுதும் விரிவுரையாகவே செய்து அச்சிடுவது அனைவர்க்கும் பயன்படுமென்று   
பகர்ந்தனர் பலர். அவ்வாறு அகலவுரையொன் றினியெழுதி யச்சிடற் கெண்ணியே  
குறிப்புரையைத் தற்போது அச்சிடவில்லை.  
  
  இங்ஙனமாய தொண்டர் தொண்டில் எனது பொல்லாமனமும்  
புகுமாறருளிய எம்மிறைவனாகிய திருக்காளத்தியப்பரது திருவருளைப்  
பன்முறையானும் பாங்குறப் பரவிப் பழிகெடுமாறே வழிபடுகின்றேன்.
புதுவை
உருத்திரோற்காரி ஆண்டு*                             இங்ஙனம்
சித்திரை மாதம்*                                      வீ.துரைசாமி
* ஆண்டு, மாதம் இவையிரண்டும் குறியீடுகளால் அச்சிடப்பட்டுள்ளன.
--------------
   2.  சிறப்புக்கவிகள்.  
 
      திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடாலயம்.
ஸ்ரீலஸ்ரீ. சிவசண்மும மெய்ஞ்ஞான தேசிகமூர்த்திகள்  அருளிய விருத்தம்.
மதியணி சடில வானவன் பத்தி வகையுளி பெற்றகண் ணப்பர்,
துதியுயர் செய்யுள் வனப்பெலா மிளிர்ந்து துதைந்திடு கலம்பகந்தன்னைச், 
சிதைவக லடியா ரினத்தொடு கூடிச் சிவன்றரு மின்பு நினைப்போன், 
புதுவையில் வதியு நற்றுரை சாமிப் புலவன்செய்துய்ந்தன னன்றே.
----------
சென்னைப் பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப் பிரதம பண்டிதராகிய
மகா மகோபாத்தியாயர் உ.வே.சாமிநாத ஐயரவர்கள் கூறிய விருத்தம்.
பூமேவுபுதுமைநகரெழிற்றுரைசாமிப்பெயர்கொள்புலவனெற்றிக்
கோமேவு காளத்தி நாயகனன் பேவடிவாக் கொண்டி லங்கு
பாமேவு கண்ணப்ப வடிகள்கலம் பகநூலைப் பகர்ந்துய்ந் தானால்
தூமேவுதொண்டர்பெருமையையறிந்தபெரியர்மகிழ்தூங்கமாதோ.
----------
சென்னை இந்து தியலாஜிகல்ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்,
கோ.வடிவேலுசெட்டியார் அவர்கள் கூறிய  நிலைமண்டிலவாசிரியப்பா.
    கண்ணா நிலையருட் கண்ணா லோர்ந்து
     மண்ணா நிலையை வாரா தகற்றத்
     தண்ணார் சடிலத் தற்பரன் சங்கரன்
     விண்ணாஞ் சீரார் வியன்கா ளத்திப்
     பண்ணார் மொழியாள் பாகன் பாத
     முண்ணா டன்பா லுவப்பா யடைந்த
     திண்ண னென்னுந் திருப்பெயர் வாய்ந்த
     கண்ணப் பர்தங் கலம்பக மென்ன
     வண்ணமா யொருநூல் வளமார் புதுவை
     யண்ண லாந்துரை சாமி யன்பன்
     பண்ணய மெல்லாம் பண்பா யமைத்திங்
     கெண்ணுமா றெவரு மியற்றியோங் கின்னே.
-------------
 யாழ்ப்பாணத்துச் சுன்னாகம் இராமநாதவித்யாலயம்,  தலைமைத் தமிழ்ப்பண்டிதர் 
நவநீதகிருஷ்ண பாரதியவர்கள் கூறிய கலிவிருத்தம்.
    அடைக்க லம்பக வாதர வொன்றின
     னடைக்க லம்பக வாதர வொன்றின
     னடைக்க லம்பக வாணனை நாடிய
     நடைக்க லம்பக வாணணா நண்ணினான்.             (1)
   வரைகொள சாமிக்கும் வாழ்பரை சாமிக்கும்
    உரைகொள பலபிர பந்தமு ஞற்றினோன்
    அரைசெ னுந்தமி ழம்மக வா ங்கனறை
    நிரை பிற காத்தவ னேதுரை சாமியே             (2)
----------
  யாழ்ப்பாணத்துச்சுன்னாகம இராமநாதவித்யாலயம்,
  மு. ஸர்வேஸ்வரசர்மா அவர்கள் கூறிய சுலோகம்.
--------
பாயாசசக்தி கண்ணப்ப - கலம்பகமனா கலம்
துரைசாமி புதோத்துங்க - ரசி கம லக்ஷணானவிதம்
------
 
திருவாரூர் இலக்கண விளக்க பரம்பரை
சோமசுந்தரதேசிகரவர்கள் கூறியது.
அன்பே சிவமா மென்பதனை யந்த நாளிற் காட்டி யவனாம்
நன்னாகன் றிண்ண னானகண் ணப்பதே வற்கு நற்றவத்தா
லின்புறக் கலம்பகமொன் றிட்டான் றீநகமி ழுலகா கிரியனாம
பண்புடைப் பெரியோன் புதுவைவாழ்வோன் றுரைசாமி முகனமையோனே.
-----------
திருச்சிராப்பள்ளி எஸ்.பி.ஜி.காலேஜ் தமிழ்த் தலைமைபண்டிதர்
        மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் கூறியது.
அன்பினமீ வரமபாக வாளுடைய வடிசண்முக லருளா ****,
இன்புறவே யெடுத்தேத்துங் கண்ணப்பாக் கெழிலுரசெந் தமிழ்ச் சொல்லாலே, 
மன்புகழ்செய கலம்பரான மாலையொன்று புனைந் தணிந்து மாண்புற்றானால், 
பொன்பெரிய புதுவைநகர்த் துரைசாமி யெனும்பெயர்கொள் புலவன் றானே.
-----------
        புதுவையைச்சார்ந்த புதுப்பாளையம் வித்வான்
     அ. பொன்னுசாமிப்பிள்ளை அவர்கள் கூறிய வெண்பா.
அற்பொடுதன் கண்ணையரற் கப்பியகண் ணப்பர்க்கு
நற்கலம்ப கப்பா நவின்றுயாந்தான் - சொற்பரவிப்
பூமிசையெண் ணெண்கலைதோ புந்தியரான மெச்சு துரை
சாமியெனு நாவலவன் றான்
------
   புலிசை, பண்டிதை. அசலாம்பிகையம்மை கூறியது.
இலம்பகந்தா னெனவிளங்க விளம்பிறைசூழ முகடுயாக்க விருங்கா ளத்திச் 
சிலம்பகனார்க் கிடத்தனது சிலம்பகத்தால் விழியிடந்த திறலோன் றாளில்,
நலம்பகமார்ந் திடப்புதுவை நகர்வாழுந் துரை சாமிப் புலவோனின்பக் 
கலம்பகமாமொரு நூலைப்புனைந்தளித்தான் றமிழ்வாணர் களிக்கு மாறே.
--------
    தமிழ்ப் பிரமசூத்திராசிரியராகிய மறைத்திருவன்
    சாமி, விருதை - சிவஞானயோகிகளவர்களியற்றிய
           நிலைமண்டிலவாசிரியப்பா.
   அலகில் கால முலகெ லாமுணர்ந்
    தோதற் கரிய வாதி யகண்டனை
    அன்பாற் பிணித்துத் தன்பாற் கண்பெறச்
    செய்த திண்ணனா மெய்கொ ளண்ணல்
    பரிவல னாயரன் பணிசெய்தாட் கொண்ட  5
   வாதவூ ரடிக ளோது தமிழிற்
    கண்ணப்ப னொப்பதோ ரன்பின் றென்று
    கண்ணிப் புகழ்ந்த கண்ணப்ப தேவர்
    அன்பமிழ் தக்கட லின்பிற் பருகி
    யுண்மை யடிய ருளிற்கா லூன்றி            10
   மெய்ப்பொரு ளுண்மை விளங்குற மின்னி
    உயிருல கின்றெனு மயலற விடித்து
    வெந்துயர்ப் பிறவி வெப்ப மொழிய
    முற்றா வின்ப நற்றீம் வெள்ளம்
    எங்கும் பெருகிப் பொங்கிப் பொலியக்       15
   களிப்புத் தண்கால் கலித்து வீச
    உழுவலொ டருளுமி ழும்பல விழகுங்
    கலந்த கலம்பக நூன்மழை பெய்தருள்
    நிரம்பினன் புதுவை நீணன் னகர்வாழ்
    துரைச்சா மிப்பேர்த் தூயமா முகிலே.      20
-------------------
   கண்ணப்பர் கலம்பகம்.
                        பாயிரம்  
 உ  :   கணபதி துணை
                      திருச்சிற்றம்பலம்.
                    
                         காப்பு.
                   ஐஞ்சந்திவிநாயகர் துதி
                      கட்டளைக்கலித்துறை.
பூமலி சீர்த்திருக் காளத்தி வாழும் புனிதருக்கு
மாமலி யூன்றரு கண்ணப்பர் மீது வளர்துதியா
நாமலி யின்சொற் கலம்பகம் பாட நலந்தருமாற்
றேமலி யஞ்சந்தி யானை முகவன் றிருவடியே.             (1)
                  திருக்காளத்திநாதர் துதி.
                      வெண்பா.
கானமுது வேடரிறை காதலினா லூட்டமகிழ்ந்
தூனமுது வானமுதி னுண்பரனார்-தேனமர்பொற்
பாதகம லங்களுறும் பற்றினோர் பற்றாரே
பாதகம லங்களுறும் பற்று.                  (2)
  
                  ஞானப்பூங்கோதையம்மையார் துதி.
                          (மேற்படி)
வானப்பூங் கோதைமலர் மங்கையர்கள் வந்திறைஞ்சு
ஞானப்பூங் கோதையெனு நாயகிதன்-மானப்பூந்
தாள்களைவார் பற்றார் தரநினைவார் வன்பிறவித்
தாள்களைவார் பற்றார் சதம்.                (3)
               முருகக்கடவுள் துதி.
                    மேற்படி
திண்ணன் பிறக்கவருள் செய்யுஞ் சடானனரைத்
திண்ணன் பிறவாமே சிந்தித்து-நண்ணுமவர்
காற்கஞ்ச முற்றக் கடைப்பிடிகொண் டாற்பகடூர்
காற்கஞ்ச முற்றக்கடை.                                (4)
          சமயாசாரியார்கள் துதி.
       எழுசீர்க்கழிநெடிலடி யாசிரிய விருத்தம்.
அஃறிணை யதனோ டுயர்திணை யெவையு
          மாக்கியே யளித்தழித் தருள்வோன்
கஃறனை வில்லாக் கொண்டநம் முக்கட்
       கடவுளே பிறரிலை  கண்டீர்
சிஃறொழிற் றேவர்க் கறிவருஞ் சிவன்றாள்
             சேர்கிலார் பவமறா ரெனவே
பஃறமிழ் வேதம் விரித்தரு ணால்வர்
          பதங்களை நிதம்பணி குதுமே.                   (5)
            திருத்தொண்டர்கள் துதி.
               கொச்சகக்கலிப்பா.
கடாக்களிற்றி னுரிபோர்த்த கண்ணுதலோன் கழல்சேர்ந்து
விடாக்கனிகொ டிருத்தொண்டர் விரைமலர்ச்சே வடிவீழ்ந்து
படாக்கலச முலைமடவார் பற்றுமுதற் பற்றெவையு
மடாக்கவினெஞ் சுற்றிருக்கும் வாழ்வுளமேற் றாழ்விலமே.      (6)
   -------
 அவையடக்கம். 
                    கலிவிருத்தம்.
புன்மைசே ரூனையும் புனிதர்க் கூட்டிய
வன்மைசேர் திண்ணனார் மலர்க்க ழற்கியான்
சொன்மைசேர் புன்கவித் தொகைந லின் கவித்
தன்மைசேர்ந் தொளிர்வகை தருவர் தாமரோ.             (7)
நூல்.  
ஒருபோகு மயங்கிசைக் கொச்சகக்கலிப்பா
1.  சீர்பூத்த தென்கயிலைத் தேவாதி தேவருக்கே
    நீர்பூத்த வாயிலிடு நிணமலியூ னுணவூட்டிக்
    கண்பறித்துத் திகிரிபெறக் கழலிடுமா னாணவொளிர்
    கண்பறித்துக் கண்ணிலிடுங் கருணைமிகுங் கவின்காட்டி
    முன்னொருக ணப்பியபின் முகத்துதிரங் கண்டயரேன்
    இன்னொருக ணுண்டென்ன வேமாப்போ டிடந்திடுங்கால்
    விண்ணப்பன் பரவுசடைக் கண்ணப்பன் விரவுநுதற்
    கண்ணப்பன் றிருவாக்காற் கண்ணப்ப னாயினையே!
                                
                                      (இது எட்டடித் தரவு)
1.  நலமாருங் காளத்தி நாதரறுண் மிகுமொழியா
    லுலவாத பேரன்பி னுருவாநின் கரம்பிடித்து
    நிலமீது முக்காலு நிற்கவென வுரைத்தன்ப
    வலமாக விருக்கவெனும் வரமருளப் பெற்றனையே!
2.  ஞானமுனி கோசரிக்கு நம்பெருமா னுன்பெருமை
    தானவிலப் பெறும்பேறு தலைவாநீ பெற்றதலால்
    வானவரு மண்ணவரு மற்றவரு முற்றனரோ
    கானவர்தங் குலவுவரிக் கடற்றோன்று கதிர்மதியே!
3.  சிவமேவு மன்பரெலாஞ் செப்பிமகிழ் நின்சீரை
    யவமேவு முலகலகர்பா லறியாதா ரியாருளரே
    தவமேவு நாகனுக்குந் தத்தைக்குந் தனிமகவாய்
    நவமேவும் புகழ்வளர நானிலத்தில் வளர்ந்தனையே!
                        (இவை மூன்று நான்கடித் தாழிசைகள்.)
1.  திடமொடு துடியொலி படவட விகடொறும்
    விடலரு மரையுழை மிகவடல் கருதினை;
2.  கொலைபுரி யிறவுளர் குழுவள விலைபல
    நிலையுல கமுநிறை துதிசெயு நிலையினை;
3.  மனனொடு மொழியுட லெனுமிவை பலபட
    வினலடொ யுலகவ ரியனெறி யுறுகிலை;
4.  கணமரு விமையவர் கருதரு மிறையடி
    கணமகல சிலையொரு கதியெனு மதியினை;
                              (இவை நான்கு மீரடியராகங்கள்)
1.  நின்னன்புங் கானத்தி நிமலர்திரு வருளுமொரு
    தன்னம்பன் னிடலெவர்க்குத் தரமாகுஞ் சாற்றாயே!
2.  ஆனந்த வடிவர்திரு விழிபுதிர மருட்பெருக்காய்த்
    தானங்கு நிகழ்ந்தவகை தரையோர்க்கு முரைபோமோ!
3.  நற்றவமுன் செய்தமையான் ஞாலமிசைக்கோலமிசை
    பற்றெவையு மற்றிறைவன் பற்றினையே பற்றினையே!
4.  வாழ்வடைய விண்ணோர்கள் வணங்குமாற் குளங்குளிரத் 
    தாழ்வடையா நீயன்றித்  தலையன்பர் வேறுளரோ!
5.  அன்னையுமத் தனுமபரனே யாவனென வடைந்திருந்த
    வுன்னையும்பெற் றோரழைக்க வுரையாடாதிருந்தனையே!
6.  கற்றன்பு தலைப்படுவோர் கருதுநின தன்பன்றி
    மற்றன்பு போற்றாத வண்ணமெலா மறப்பரிதே!
                        (இவை யாறு மீரடித்(*)தாழிசைகள்)
        1. பத்தி வித்து நீ;      3. நித்த வின்பன் நீ:
        2. முத்தி வத்து நீ;     4. வைத்த முன்பன் நீ;
                (இவை நான்கு முச்சீரோரடியப் போதரங்கங்கள்)
   
        1. மறமி குத்தனை;    5. அரனை யுற்றனை;
        2. திறமி குத்தனை;    6. அழகு பெற்றனை;
        3. மலித வத்தினை;    7. அமல மேயினை;
        4. ஒலிப தத்தினை;     8. அமர னாயினை.
                (இவை எட்டு மிருசீரோரடியம் போதரங்கங்கள்)
        
                     எனவாங்கு,  
                                      (இது தனிச்சொல்)
       மாயிரு ஞாலம் வழுத்து கருங்கதிர்
        ஞாயிறு நிகர்த்த நலமலி வடிவினை
        மாவரு கான வாழ்க்கையை யாகியுந்
        தேவரும் பரவு மேவரு நிலையை
இரவினும் பகலினும் விரவிநிற் பிரியா
முடுவலாய்ப் பிறந்தென் வடுவறுத் திலன்முன்
மலைமேன் மருந்தின் றலைமேல் வருநின்
செருப்புறு துகளா முருப்பெறு கிலனே
வேட்டமே புரியுங் காட்டினின் னடிக்கீழ்ப்
புல்லாய்க் கல்லாய்ப் பொருந்து மிருந்தவம்
புல்லாப் புலையேன் கல்லா நிலையேன்
பத்திக் கடலாய்ப் பரந்த பெருங்குணம்
வைத்துத் திகழு மறவர் தலைவநின்
றிருவுறு செய்கை சிந்தித் துய்ந்தென்
கருவுறு செய்கை கழிப்பக் கருதி
வந்தடி வணங்கி முந்துறத் தொழுதேன்
காளத்தி யப்பன் கறுணையிற் சிறிதே
மூளப் பத்தி முதறந்
தாளக் கடனின் னடிமலர் சரணே.
   (இது பத்தொன்பதடி நேரிசையாசிரியச்சுரிதகம்)  (1)
         வெண்பா
சரமார் தனுவேந்திச் சார்கங்கு லெல்லா
மரனாரைக் காத்துறங்கா வண்ணல் - சரணுற்றா
லெத்திருக்கு மாறு மியன்முத்திப் பேறுறுமுள்
வைத்திருக்கு மாறு மதி.                          (2)
          கட்டளைக்கலித்துறை
மதிவந் தமர்சடைக் காளத்தி யப்பர்க்கு வாய்ந்திடுநன்
மதிவந் தமர்விருப் பான்மிக வெச்சின் மயங்கவிடுங்
கதிவந் தமர்புகழ்க் கண்ணப்ப ரூட்டுங் கவின்கொளுமூன்
நிதிவந் தமர்மகத் தின்னவி யிற்கவை நீடியதே.         (3)
   அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
நீடும் வண்புக ழாரு மன்புயர் நீதி நன்பொருளோ
டாடும் வென்றியெ லாம மர்ந்திட லாகு மொண்புவியீர்
பாடு தென்கயி லேச ரன்பினர் பாவ லர்ந்திடுசீர்
ஈடு கொண்டதி ராத ரின்பத மேயி றைஞ்சிடிலே.      (4)
     எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
இறைச்சியு மென்புந் திருமுனே கிடக்க
          வெதிர்குதித் தோடிய மறையோ
னுறைப்பொடு மறைந்து நின்றுகண் டுருகு
           முண்மையைச் சிறிதுரைத் தருளாய்
கறைக்கள னெங்கண் மணியெனுந் தொண்டர்
           கட்டுரை பழுதுறா வாறே
நிறைக்கதிர் விழியீந் தடியவர் பெருமை
           நிலைத்திடச் செயுங்குண நிதியே                       (5)
                 தவம்.
     எண்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
நிதமி ருந்துயர் மிகவி ருந்தயர்
           நிலையி னின்றிய லுயர்த வங்கொள
மதிம யங்குல கினர்நி ரந்தர
           மருவு கின்றில ரிதுவென் வஞ்சனை
துதிசி லம்பியொ டரவு வெங்கரி
           தொழும ரன்றின மகிழ வன்பொடு
பதமி றைஞ்சிநல் விழியி டந்தணி
           பரவு  குன்றவர் பதிப தங்களே.                       (6)
   ஒன்பதின்சீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்
பதத்துவிர லானி லாவு மரக்கன்மத மேமி சாது
         பதைத்துவிழ வேசெய் நாதர்பா
லிதத்தவுண வாக மானி னிறைச்சியினை யார்வ மேகொ
         டெடுத்தளிகி ராத ராஜனே
கதத்தொடுமு லாவி யாளி மதத்தகரு மாவி னோடு
         கலக்குபுலி யாதி மேவிவாழ்
விதத்துமிகு கான மேகி மிதித்தடிகெ டாது குட
         விரித்தவ மேது மேயதே.                               (7)
                    வெண்பா.
மேயதமிழ்ச் சாயலுமை பாகத்து வித்தகர்க்குத்
தூயபுகழ்க் கண்ணப்பர் தொண்டுசெய - நேய
மறைமுனி வன்வேடன் வரன்முறையோ வென்றான்
பிறைமுடியோற் கன்போ பெரிது.                           (8)
                புயவகுப்பு.
         ஆசிய வண்ண விருத்தம்.
பெரிதமார் சிந்தனைக் குரியசெயல் கொண்டிடப்
        பிரியமொடு சங்கரர்க்         குறுவேலைதுன்றின
பிறவியறு நெஞ்சகத் தறிஞர்தின முஞ்சொலிப்
         பெருகுதுதி நன்றுரைத்        திடுமாலையொன்றின
பிழைகள்புரி வஞ்சகர்க் கிறையளவு நின்றுனப்
          பெறலரிதெ னுந்தகைப்       பெருவாய்மைதங்கின
பிழிமதுவி ரிந்திடப பொலிவனவ னந்தனிற்
          பிணைமலர்வி ளங்குறப்      பலசூடிவந்தன (8*)
திரிமறவர் தங்களுக் கிறைமைகொடி ருந்துவெற்
          றியின்மிகுதி றங்கொளற்      கிடமாவிருந்தன
திகழ்கலைகள் பன்றிமுற் படுபுலியு மன்றழித்
          திடவிடுச ரமபிணைத்        தெதிரேதுரந்தன
சிறுமழவி லங்குமெய்க் கருவுடைய நொந்தவித்
          திறமுளப யங்கெடுத்         தருளோடுசென்றன
செறியழன்மு னந்தனித் தனியு சிதமென்றறுத்
          திடுபிசிதம் வெந்திடக்        கணையாரவுந்தின(8*)
அரியபுலன் வென்றவர்க் குரியசிவ னன்புமிக்
          கமுதுசெய நன்கமைத்        திடுமூனமர்ந்தன
அறையுமவரை வென்றுறத் திரளெழுமு னிந்துரைக்
          கருவலிமி குந்துபற்           றலர்சாயவிஞ்சின
அமரர்கன வும்புலப் படவறிவ ரும்பரற்
          கமர்வடிவ மின்புறத்         தழுவாமகிழ்ந்தன
அலர்விழியை யம்பெடுத் தரைநொடியி லன்றடுத்
          தடியொடுமி டந்தணைத்     தெழுசீர்பிறங்கின  (8*)    
கரியமணி யென்றிடத் திகழுருநி றங் கொளக்
          கரியின்வரு தந்தமக்          கணிமாலைகொண்டன
கலகமற வென்கவித் தொடையினொடு குன்றியைக்
          கவினுறவ ணிந்துமிக்         கெழிலோடிலங்கின
கருதுமர னன்பநிற் கவினியென முன்சொலிக்
         கணையொடுகரம்பிடித்       திடுபேறுமண்டன
கரியனைய னென்றிலர்க் கரியபதமொன்றுமக்
          கனவனச ரன்புகழ்த்        திருவாழ்புயங்களே. (9)
         சிலேடை - கட்டளைக்கலித்துறை.
புயற்கந் தரவரை யுற்றுக் கிளைவிட்டுப் போகுயர்லால்
இயற்கண் மலரை யிறையிடஞ் சேரெழி லாற்கனிவாய்
நயப்புள் ளுறலா லிசையளி சேர்தலி னாற்றருக்கள்
உயப்பெரு திண்ண ரெனத்தென் கயிலையி லுற்றுளவே. (10)
          பன்னிருசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
உள்ளம் விழைந்து வனமேவி யுற்ற கேழற் றசையரிந்தே
         யோங்கு மெரியிற் காய்ச்சியும துணர்வாய்ப் பாகஞ் செய்ததூட்ட
மெள்ள நஞ்சுண் டறிபலர்நும் விதத்தி லூனின் சுவைகண்டு
         விரவு மன்பர் தமைவிழுங்கி  விடாது பிள்ளை யூனுணவுங்
கள்ள மாக விரந்தார்நீர் காட்டு நெறிநன் றாயிற்றே
         கமல மலரோன் படைத்தகடற் புடவி மனிதர் கணத்தொன்றும்
எள்ளப் படுத லில்லைகுணம் எல்லாச் சாதி தமக்குமுள
          வென்று மதிஞ ருரைசெய்ப வெயினர் குலம்வந் துதித்தீரே.              (11)
     அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
உததிவரு மதியணிந்த தென்கயிலை
           நாதருள முவப்ப நீநின்
கதிர்செறிகண் மணியளித்த கருத்தானந்
          தொண்டரிடங் கனிவு காட்டின்
எதுவுமுற லாமெனவே யியற்பகையார்
          பெண்மணியை யிரந்தா ரம்மா
கதிதருபொன் முகரிநீர் வாய்க்கொடான்
          சிரத்துமிழ்ந்து களிக்குங் கோவே.            (12)
           கலித்தாழிசை
கோலமிகுங் காளத்திக் கோவமர்கண் ணப்பனார்
ஞாலமிசை வேடர்குல நண்ணினர்கா ணம்மானை
ஞாலமிசை வேடர்குல நண்ணினரே யாமாயிற்
சீலவரன் பூசைசெயத் தேர்ந்ததெவ்வா றம்மானை
செய்ததுமுன் பார்த்தன்பாற் செய்முறைகா ணம்மானை.   (13)
               மடக்கு.
          கொச்சகக்கலிப்பா.
மானடுத்த பாணியரை மலர்வேணிப் பாணிபரை
ஊனடுத்த வுணவருத்தி யுடனினிதா வுணவருத்திக்
கானடுத்த வனசரரே கடுவிசைகொள் வனசரரே
வானடுத்த வுறுதவரே மன்காத்த வுறுதவரே.            (14)
      எழுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.  
உற்றபெ ருந்துயர் முற்றுமொ ழிந்திட
            வுத்தம வன்பர்கள் புகழ்வார்கள்
கற்றவ ரும்பொரு ளெத்தனை யும்பல
            கட்டுபு வந்திடு கவிவாணர்
பற்றிடு கின்றனர் நற்றவ முந்திப
            பற்பல நன்பிற வியிலேசெய்
செற்றமி லின்பர்க ணப்பர்தி ருந்தடி
            திப்பிய மொன்றிய செயலாலே.                 (15)
           மேகவிடுதூது.
            வெண்பா.
செய்யவசி யம்புவின்மின் சேர்ந்தணியா வான்பரவிப் 
பெய்யுமுகில் காடிணர்போற் பெட்புறுவீர் - கைதொழுவேம்
கான்வேட்ட மாடுமவர் கான்மலர்த்தார்க் கெங்களிள
மான்வேட்ட வாறுரைமின் மற்று.                         (16)
                 இரங்கல்-தாழிசை
மற்றொர் பற்றி லாரெலாம் வந்து வந்து வந்தனை
             மருவு கின்ற கைலைவாழ் வரத னன்பர் சவரர்கோன்
உற்ற மால்வ ரைக்கணே யுறையு மன்ப ரருளிலார்
             ஓதுமாது வன்றுய ருறுதல் கண்ட றிந்திலார்
பற்று நீடு பேடைகாள் பலவ லர்ந்த வோடைகாள்
             பாடு கண்ட னீழலே தோடு கொண்ட சூழலே
அற்ற மேவு வாரியே யருகி ருந்த சேரியே
             அலர்மி குந்த புன்னையே யரிவை செய்வ தென்னையே  (17)
         பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஐயநின் செறிந்த சுரிமயிர் நிமிர
             வார்த்திலைக் கண்ணியும் பீலி
யதனொடு குறிஞ்சி வெட்சியா தியபூ
             வணிந்துநெற் றியின்முருந் திடையே 
செய்யகுன் றிகள்சேர் மயிர்க்கயி றார்த்துச்
             செவிவளைத் தோடுறக் கவடி
திகழ்கள மக்கு வடங்கரிக் கோட்டிற்
             செறிமணி மாலைகள் சேர்த்தி
மொய்யுறு வலயந் தொடிகரச் செறிகை
             முதுபுவி யதளிடை யுறவே 
மொழியுடை தோலுஞ் சுரிகையு மருவ
             முனைகழற் காற்செருப் பணிந்து
பொய்யிலாப் புகழ்சேர் வனசரா திபநீ
             பொருவரு வேட்டையிற் கானம்
புகுமிகு கோலந் தகநினைந் தெளியேன்
             புந்தியு ணைந்துபோற் றுவனே                 (18)
                  கூதிர்-கலித்துறை 
போற்றரி தாய நீர்த்துளி யோடே புகுவாடைக்
காற்றல னானிங் காவிப டுங்கே டறியாரோ
சாற்றிய வேடர் தாங்கள்மு னஞ்செய் தவமெல்லாம்
வீற்றுரு வெய்தி மேவிய தென்ன மிளிர்வோரே        (19)
                  மடக்கு 
               கட்டளைக்கலிப்பா
மிளிரு மேனி பொடிபட வேடனை
          விழித்த வீசர் விரும்பிய வேடனை 
யனிய நன்மனத் துன்னிய செல்வமே
          யடைய வொன்றி வழிக்கொடு செல்வமே
களிய தற்றுயி ரேகுமக் காலையே
          கருத லுற்றுக் கணப்பனற் காலையே
தெளிவு டன்றுதி செய்யப் பணியதே
          சேர நெஞ்சமிங் குய்யப் பணியதே               (20)
     தலைவன் வினாதல் - கட்டளைக்கலித்துறை
பணிவார் பிறவி யறுப்பார்க் கடிமை பயிலுமெங்கள்
மணிவார் கிராதர் வரைமா நனையீர் வயங்குமிடை
யணிவார் கலையொன்று கண்டதுண் டோவென வஃதறையீர்
நணிவார் பெயருரை யீருரை யீரிவ ணன்னெறியே           (21)
            நேரிசையாசிரியப்பா
           (உயிர்வருக்கமோனை)
நன்கர னார்சேர் தென்கயி லாயம்
நாடிய வேடர் பீடுறு தலைவர்
நிறையு மன்பினர் குறையா மொய்ம்பினர்
நீர்மை மிகுந்த பார்வை யிடந்தவர்
நுண்ணுணர் வில்லோர் நண்ணரு மடிகள்
நூற்றுறை போய வீற்றுயர் பெரியொர்
நெக்குநெஞ் சுருகப் புக்கிறைஞ் சிடுபவர்
நேரா ரோராப் பேராச் சீரார்
நைவினை யின்றிக் கைவினை வல்லார்
நொடிவரை யரனா ரடிமற வாதவர்
நோவறி யாத தேவரு மானவர்
நெளவெனப் பிறவிப் பௌவங் கடத்து
மவரடி நாடொறு மடைது
மவலக் கவலை யறுத்திடற் பொருட்டே              (22)
               மறம்
    எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பொருண்மிகு மன்னன் றிருமுகங் கொண்டு
          புதுமையின் வந்ததூ தாகேள்
அருள்கயி லாய வேடருக் கூன்முன்
          அளித்தவெம் மறவா சொருவர்
இருளற விருக்கப் பிறவர சருக்கிங்
          கெமதுபா வையைத்தர வியையோம்
மருளுநின் னரசு துணையறை வேம்பின்
          மருவலா மகல்கநீ மீண்டே.                         (23)
           வஞ்சி விருத்தம்.
மீளில் வேடன்மெய் வெவ்வழல்
மூள வேவிழி முக்கணர்
ஆள டைந்தநி னருவிழி
கோள டைந்துகொள் கிற்பதே.                     (24)
               வெளிவிருத்தம்
பதும மலர்க்கண் முன்னொன் றளித்தார் பாரீரே
*கதுமென மற்றோர் கண்ணுமி டந்தார் பாரீரே
இதுபொரு ளன்றெந் திண்ணர்செ யற்கே பாரீரே
விதுமுடி யோர்க்குயிர் வேண்டினு மீவார் பாரீரே        (25)
        இளவேனில் - தரவு கொச்சகம்.
பார்போற்றுந் திண்ணர் பயிறென் கயிலைதனி
லேர்போற்று மாய ரிசைக்குழல்கேட் டாநிரைசேர்
கார்போற் றிடுமாலை நான்வருந்தி யுறத்தலைவர்
வார்போற் றிளவேனில் வந்திடவும் வாராரே.         (26)
                    சித்து
          எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
வாய்க்கலச மஞ்சனநீ ராட்டும் வள்ளல்
             வனசரர்கோன் புகழ்கூறுஞ் சித்தர் யாமே
தூய்ப்பரமன் கைச்சிலைமுன் கனக மாக்கித்
             தோன்றிருப்பு மலைவெள்ளி துலங்க வைத்தோம்
போய்க்கடலு ளோர்நாட்டை யீழ நாடாப்
           பொருத்தினோங் கஞ்சமபொன் புணர்வித் திட்டோம்
வாய்த்தமருந் திலைபசிக்குக் கூழ்வா ரப்பா
           வாழ்மனையு மாசைமிகும் வகைசெய் வோமே             (27)
            இரங்கல் - தாழிசை
செய்ய மேனிவெ ணீற ணிந்தவர்
           சேவ டிக்கெமை தொண்டராந்
திண்ண னார்திரு நாட்டி லெந்திரு
           மாது கைக்குரு கேயிழந்
துய்ய விட்டிடு குருகு நாடின
           ளுற்ற மெய்ச்சுக முற்றிலாள்
உரைசெய் கைச்சுக நச்சி னாளன
           முன்னம் விட்டின முன்னினாள்
நைய பாரன்மு னெய்யும் வார்சிலை
           நாணொ லித்திட நாணறா
நாம மேயுல மேவி யன்பர்த
           நாம மேமற வாளிவள்
மெய்ய வித்தைகள் வெய்ய கானக
           மேகி னாருண ரார்கொலோ
விலகி யாருயிர் போகி லோர்முறை
           மீட்கும் வண்ணமு மொண்ணுமோ                            (28)
               ஆசிரியத்துறை
ஒண்மணிநேர் கண்ணப்பா ஏற்றியவன் பெனுந்தீப முயர்கா ளத்திக்
கண்மணிநேர் கண்டரெனுங் கோல்கொண்டு கோசரியார் கருத்திற் றூண்ட
விண்மணியின் மிக்கதென வன்பருளத் திருள்வீட்டித்
தண்மணியின் கதிருமிழந்துபொன்றாது நின்றொளிர்சீர் தனைமே விற்றால் (29)
                     தழை
        அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
மேவித் தழையே கைக்கொண்டு மெல்ல வந்திவ் வனமுற்றே
ஆவித் தழையே மிகநல்ல வழகாங் கொண்மி னெனக்கூறிக்
கூவித் தழையா வுளமுருகிக் குரிசி லொருவர் குலைவுற்றார்
பாவித் தழையா விடிலென்னோ படும்பா டறியேன் பாவாயே          (30)
              வெண்பா
பாவியல்சீர்த் திண்ணர் பகழித் தலைபட்ட
மாவிலங்காய் முன்னமே வந்திலமே - தீவினையாற்
பெற்றோம் பிறவிபல பின்பவர்நற் றாள்சேர்ந்தோம்
அற்றோம் பிறர்பா லடைவு                        (31)
               கிள்ளைவிடு தூது
    அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்
அடையவர் முப்புர மரைநொடி யிற்பொடி யடையந கைத்தவராம்
விடையவர் மெசகறு மிறவுலர் கட்கிறை விறன்மிகு மறபுருவார்
தொடையமை பொற்புய வலியிசை கற்றுயர் சுகுணமு டைச்சுகமே
நடையன மொத்தவ ளுரையன மற்றிவ ணலிவத வர்க்குரையே          (32)
            கார்கண்டு பாகனொடு கழறல்
                கட்டளைக்கலித்துறை
உரைக்கின்ற நாள்களோ ராறிறபி ரானடி யுற்ற திண்ணர்
வரைக்கண் மணித்தேர் விடுமவல வாவிநத வானமுகில்கள்
திரைக்கட லுண்டெழுந் தார்த்திடித தேவாள செறியவிட்டு
நிரைக்கின்ற வம்பெய் தரினந்த மானுயிர் நிற்பரிதே           (33)
                  இரங்கல்.
        எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அரிமதர் மழைக்க ணரிவைமீர் பரம
              னன்பர்கண் ணப்பர்வாழ் வரைமேல்
உரியந துணைவ ருணைபபிரி கில்லேன்
              பிரியினு முயிர்தரி யேனென
பெரியதோ ருரைசொற் றிடுபொழு திளமான்
              பிணைகளு மிணைபயின் மயிலும்
வரியதே னினமு மினியமாங் குயிலும்
              வரைகளு முளமன முளதே                     (34)
    இரட்டை - அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
உள்ளமன் புருவாய வாதவூர்ப் போதமா
             ரொளிமணி யுரைப்பெருமையார்
உம்மன்பை யொப்பதோ ரன்பின்மை கண்டபின்
             உடையவன் கருணையுருவாம்
வள்ளலெற் கருளிலா வென்றானெ னப்புகழ
            வாய்ந்ததலை யன்பரானீர்
வனசரர்கு லத்துதித் தறனிலா மறமொழி
            வழங்குகுழு விற்பயின்றீர்
துள்ளுமான் சேர்கரற் குள்ளமுட லாதிய
            தொழிற்பட வளித்தவர்க்கே
தூயவூன் போனகமெ னக்கனிவி னட்டிட்ட
            துகளிலன் பெங்குணர்ந்தீர்
கள்ளவிழும் வேங்கைமலர் பாறைமீ துற்றிடல்
            கடும்புலி யுருத்தோற்றிடக்
கண்டுமா னினம்வெரீஇ யோடுசீர் மேவுதென்
            கயிலைவாழ் கண்ணப்பரே.                       (35)
            கட்டளைக்கலித்துறை.
கண்ணப்ப னங்கை நுதல்சடை வரமத்தர் காளத்தியின்
கண்ணப்ப னங்கைக் கலைசெய்து வரவுங் கலையினத்தூன்
கண்ணப்ப னங்கைப் பொழுதாக்கி யூட்டிய கானவர்கோன்
கண்ணப்ப னங்கை குவித்திறைஞ் சப்படுங் கண்ணொப்பனே    (36)
      பதினான்குசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
பன்னும் விண்ண வர்க்கெ லாம்ப கர்ந்தி டற்க ரும்புகழ்
          பரவு மெங்கள் பரம னன்பர் புளிஞர் கோன்ப தந்தொழ
மன்னு கின்ற விப்பி றப்பி லேமி குந்த வண்பத
          மருவி னேனி தன்றி யேது மடமை யேனு றும்பயன்
சொன்ன வாய்மை நல்ல றந்து றந்து னேனி ரும்பலந்
          தொடர்ந்து ளேன்வ ருந்தி டத்து யர்ப்பி றப்பி னிப்பிற
என்ன வந்து நேரி னுங்க லங்கி டேன வற்றினுக்
          கென்னு ளந்து ளங்கி டேனி ருந்த வம்பொ ருந்தவே      (37)
                 வெண்பா.
பொருசமரின் மேனிப் பொலிவில் விறலிற்
றிருமால் நிகர்வனெனச் செப்ப - வருவிழியைச்
சாத்தியதொண் டிற்குஞ் சமமுறுதற் கேவிசயன்
பார்த்தெயின னென்றுதித்தான் பண்டு.                 (38)
மடக்கு இரங்கல் - கட்டளைக்கலிப்பா
பண்டு வேலைநஞ் சுண்டக லத்தனே
      பரிவு கொண்டிடும் வேடர்க ளத்தனே
வண்டி ருப்படி வந்திரு மாலையே
      மானு நின்புயத் தார்தரு மாலையே
கொண்டி ருக்குமெம் மானுக்கம் மாலையே
      கூடுறாவிடிற் கொல்லுமிம் மாலையே
மண்டிமேலு மலர்க் கணைக் காமனே
      வாட்டு றாதருள் வாய்ந்திடக் காமனே.                      (39)
வஞ்சித்துறை.
மன்னு திண்ணனார்
பன்னு செய்கையே
வுன்ன வுன்னவே 
துன்னு மின்பமே                         (40)
தழை விருப்புரைத்தல் - கட்டளைக்கலிப்பா
இன்ப மார்ந்திடுங் கண்ணப்பர் காளத்தி
      யெழில்வ ரைக்கணன் பாமிக நீதருந்
துன்பில சந்தமு றுஞ்சந்த நற்றழை
      சுடரும் பொற்றொடிக் கீந்திடத் தோகையும்
என்பெலாமுருக கக்கர மேற்றன
      ளிருக ணொற்றினள் வைத்தன ணற்றனம்
கொன்ப ராவிருட் கூந்தன்மு டித்தனள்
      கூறொ ணாதவள் செய்திடு கோலமே.                      (41)
கொற்றியார்
கலிவிருத்தம்
கோல மார்குழ லின்றிக் குலவரா
வேலவாட்டு மிருந்தொழிற் கொற்றியார்
ஞால மேத்து கண் ணப்பர்நற் காளத்தி
மால ராய்க்குழல் வைக்கிலென் வையமே.                    (42)
              வெண்பா
வையத்தி னல்லாசாய் வாழ்ந்தாலென் வானத்திற்
செய்யசுக மேவித் திகழ்ந்தாலென் - மெய்யரருட்
கண்ணப்ப ரன்பிற் கருத்துற் றுருகாரேல்
எண்ணப்ப யன்படா ரீங்கு                              (43)
                     நகரணிமைகூறல்
         எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
ஈங்குவெங் கதிர்சுடுங் கொடுசுரங் குறுகிலா
           டேந்திழாய் போந்தினிக் காணலா மாணவே
யரங்குமோர் நிகரிலா தோங்குபொன் முகரிநீர்
           யாறுசேர் தென்கயி லாயமுந் தூயநற்
பாங்கமை ஞானமார் பூங்குழல் பாகமார்
           பரமனார் ஞாயில்சூழ் கோயிலும் வாயிலும்
தேங்கவென் புருகுமன் புருவமாந் திண்ணனார்
           திகழுமெய்ப் புகழுமே செய்யவா னிழன்மினே   (44)
               தாழிசை
மின்னு செஞ்சடை வேத கீதர் விழைந்தமஞ்சனம் வாயினீர்
           மிக்கமேனியி லணியுமாமலர் வேடர்கோன்குடு மிக்கணே
துன்னுபன்மல ரினிதினுண்டிடு தூயபோனக மவனெய்து
           சுட்டபன்மிரு கத்தினூனிவை சொல்லொணாமகிழ் செய்தவே
பன்னுதென்கயி லேசரன்புறு பற்குநற்கொல முடுகிய
           பன்றியெய்திட வொன்றிவேடுவர் பதியெனத்திரி பரமனார்
நன்னுதற்கொரு பாகமீந்திடு நாதராதி புராதனர்
           நண்ணுதொண்டர்க ளெண்ணமுற்றிட நல்குநாயக னார்க்கரோ.  (45)
               கிள்ளைவிடுதூது
               கட்டளைக்கலித்துறை
நார்தந்த காளத்தி நண்ணுகண் ணப்பர் நயந்தபுயத்
தார்தந்த ளிக்கென நம்மட மான்மனந் தான்மெலிவாள்
நீர்தந்த வாசை நெருப்பவிப் பீரென நீரவர்பாற்
சீர்தந்த செம்முகப் பைங்கிள்ளைகாள்சென்று செப்புமினே    (46)
                மடக்கு
      அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
செப்பு மரவப் பணியாருந் தேவர்க் குரிமைப் பணியாரும்
ஒப்பு முருவங் கரியாரு முயர்ந்த பத்திக் கரியாருந்
தப்பில் பூசை புரிந்தாருஞ் சாற்று செயலே புரிந்தாரும்
எய்ப்பில் வேடர்க் கிருந்தவரு மெளியே னுளமிக் கிருந்தவரே.    (47)
                        வெண்பா
தவமல்கு சீரார் சவார் பெருமான்
சிவமல்கு சேவடிகள் சேர்ந்தேம் - பவமல்கு
தீவினையுஞ் சிந்தியே செய்யும் பணிசெய்தேம்
வீவினையுஞ் சிந்தியே மேல்.                                  (48)
           நேரிசையாசிரியப்பா
மேல்கீழ் வரம்பு மாலய னறியா
நீளழற் பிழம்பாய் நிமிர்ந்து நின்றோன்
குஞ்சர முகத்தோன் குறிஞ்சிக் கிழவனா
மஞ்சுறு மைந்தரும் வகுத்தபல் லண்டமும்
5   பண்டே கருவிற் பயிலாது பெற்றுத          
தண்டா தினும்பால் தவிரா திருந்த
பச்சுடம் புடையுமா பதிமதி முடியோன்
மெய்ப்பத்தி நாட்டப் பொத்தபபி நாட்டில்
குறவரு மருளுங் குன்றுபல கெழீஇ
10   யும்பற கோட்டு வம்பியல வேலி           
வடுப்பூ ணாத வுடுப்பூர் தன்னில்
கொல்லெறி குத்தெனுங் கொடுமொழி யலது
நன்மொழி யறியா வன்மன வேடர்க்
கிறையவ னாக னிளமக வாகி
15  வண்ணமிக் குடைய திண்ணனென் பெயரோன் 
காளைப் பருவங் கலந்த காலைச்
சிங்க வேற்றிற் றிறனனி சிறந்து
மிகக்கொலை புரியும் வேட்டையி லுயிர்க
ளகப்படு துயருக் ககனமர்ந் தெழீஇ
20  வலங்கொளப் போழய் விலங்கினங் கலங்க   
வார்வலை போக்கி வளைத்திடும் போழ்தத்
தேனமொன் றோட மேனனி தொடர்ந்து
வெயில்பயில் வறியாக் குயில்பயில் பொழிறழீஇ
நன்றறி கல்வி யொறியோர் மதியெனத்
25. தேததடை கிடந்து செறிகலை மலிசீர்
நீளத் திகழ்புகழ்க் காளத்தியென்னுந்
தென்கயிலையில்வாழ் சிவனைக் காண்டலும்
அந்தக நொருவ னருவிழி பெற்றெனப்
பலநாட் பசித்தோன் பராவமு தெதிர்நதெனச்
30. சேய்முகங் கண்ட தாயென மகிழ்ந்து
பருகற் கொத்த பண்பின னாகிக்
கட்டித் தழுவிக்  கரைந்து கரைந்தே
இரும்புபொன் னான வியற்கை போல
மட்டறு மன்பே வடிவங் கொளீஇக்
35. காளத்தி தேவே கருணைத் தேவே
ஆளத் திகழ்ந்த வற்புதத் தேவே
மலையிடை யெனக்கு வாய்த்துறு மணீயே
வான்றிகழ் தருவே தொன்றமிழ் துருவே
தனித்திங் கிருத்தனீ தகுமோ தரியேன்
40. உனைப்பசி தீர்ப்பா ரொருவருமிலரே
எத்தனை நாளுணவின்றிநின் றனையோ
வையா வினிநீ நையா துறுகவென்
றேகியூன் வக்கிப் போகியுண் பித்து
விட்டகலாது கட்டுடைக் காவல்
45. கொண்டிர வெல்லாங் கண்டுகண் களித்து
மறுநாள் விலங்கூன் பெறுமா றகன்று
நாயுடன் வேட்ட மாடி நலம்பெறப்
பலவிலங் கரிந்தூன் பகழியிற கோத்துத்
தீயிற் காய்ச்சி வாயிற் சுவையறிந்
50. தினியன கல்லையி னனிமகிழ்ந் தமைத்தே
தேனுடன் கலந்து செங்கரத் தேந்தி
வேறோர் கரத்து விறகணை தாங்கித்
தூய்ப்பொன் முகரி நீர் வாய்ப்பட வடக்கிப
படுமலர் பலவுங் குடுமியிற் பரப்பி
55. மலைமேன் மருந்தின் மருங்கி னெருங்குபு
கோசரி யணிந்த வாச மலரெலாம்
செருப்படி யொதுக்கித் திருப்புன லுமிழ்ந்தங்
கிலைமலர் வீழத் தலையெதிர் தாழ்த்திக்
கல்லையிற் பிசித நல்ல தெடுத்தெடுத்
 
60. திதுமிக வினிதே யிதுமிக வினிதே
தேனளைந் தினிக்கு மூனமி லூனிது
பதமுற வக்கிப் பயில்சுவை பார்த்தேன்
உண்க வுண்கவெ னுயிரே யுண்கென
வேட்டன காட்டி யூட்டின பின்னர்த் 
65. தேவ தேவன் றிருமுன் னின்று
நடம்பல பயின்று நாடொறு மகிழ்ந்து
தான்கண்ட வாறே சங்கரன் பூசை
புரிதலைச் சிவகோ சரிதவன் கண்டு
புண்ணிய வுருவே புனிதத் திருவே
70. எண்ணுதோ றெனக்கிங் கினித்திடு மமுதே
சிவசிவ வுனக்கிது செய்யத் தகுவதோ
வெனநெடி திரங்கி யிறைதிரு முன்னர் 
என்புக ளொதுக்கி யினிதமர் புனிதம்
செய்தருச் சித்துத் திரும்பின பின்னர்
75. நாகனுந் தத்தையு நண்ண் வேண்டிடத்
தணக்கிறப் பறிப்பினுந் தானளை விடாஅ
நிணப்புடை யுடும்பென நிமலனை யகலான் 
செயறினங் கண்டங் கியன்மறை யவனுறு
மனமெலி வகற்றக் கனவினி லிறையவன்
80. அன்பின் செயலஃ தென்ப துரைத்தபின் 
மறுநாள் மறையோன் மறைந்தங்குரவரன்
கண்ணிலொன் றுதிரங் காட்ட வேடர்கோன்
கைமெய் சோர்ந்து கால்கடள் ளாடி
மூர்ச்சித் தெழுந்தபின் முடுகியங் கோடிக்
85. கொடியருண் டோவெனக் கொறுகொறுத் தலைந்தே
இலைப்புரை கிளைத்து மிலையெனத் தேறிக் 
கண்ணுதல் கண்ணிற் புண்ணீர் மாறத்
திருந்துறத் தேடி மருந்துபல பிழிந்துங்
குருதி நிற்காக் கொடுமை கண்டு
90   தன் கண் ணொன்றைத் தானிடந் தப்ப       
வுதிர நிற்பக் குதிகுதித் தெழலும்
மற்றைக் கண்ணிலுங் குருதி வடியச்
செருப்புப் பாதஞ் சிவன்விழி சேர்த்தி
யின்னொரு நாட்டமுண் டென்றுளங் களித்துப்
95   பகழித் தலையா லகழப் புகுதலும், பரனார்   
அதுதரி யாதே கதுமென வுற்று
"நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பவென்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்பவென்"
றொருகை நீட்டி யிருசையுங் கணையோ
100  டகப்படப் பிடித்தே யருவிழிப் புண்ணிங்  
ககன்றது பாராய் அன்பினிற் றலைவ
நல்லை நல்லையுன் போனமக் கில்லை
தொல்லடி யாரெனச் சொல்லமிழ் தீந்து
மறைவுறு மறையோன் றிறனறிந் தேத்தத்
105    துந்துபி முழக்க மந்தரத் திசைப்ப             
வரனருள் பரவிச் சுரர்மலர் சொரியச்
சிவகதி தரப்பெறுந் திண்ணனைத்
108   தவகதி பெறற்காச சார்ந்தன னாளே.        
                                      (49)
             ஊசல்.
    எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
  ஆளவுடைக் கழற்சிவனா ரன்ப ரானார்
           அருமைபெறுங் கண்ணப்ப ரடிமை கூறி
  நீளமுடைப் பிறவியறு நெறியை முன்னி
           நித்தலுஞ்சித் தங்கரைய நின்று நன்று
  வாளமருங் கண்மடவீ ராடி ரூசல்
           மருவுதன மலையசைய வாடி ரூசல்
  வேளகமுங் குழையமிக வாடி ரூசல்
           விழையுமலர்க் கொடியனையீ ராடி ரூசல். (50)
   எழுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்த விருத்தம்.
  ஊசல்வினைப் பாசமடுத் தேயிடர்பெற் றோடியினைப்
           போடுறுமிப் பூதலமுற் றுழல்வீரே
  தூசையறுத் தாளுறுநற் றோகையிடப் பாகர் சுடர்ச்
           சோதிபதத் தார்வமிகுத் தவரானார்
  காசில்வனத் தேதிரிகைக் கார்முகவிற் பாணமுடைக்
            காதுதொழிற் கானவர்மெய்த் திணனார்சீர்
  தேசுறுபொற் றாள்பரவிப் போதுகளிட் டேபுகழத்
            தீவினைசற் றேனுமுமைச் சினவாவே.         (51)
            கட்டளைக்கலித்துறை.
சினக்களி றங்குறு திங்கள்கண் டுண்ணச் செறிகவள
மெனக்களி காளத்தி மால்வரைக் கல்லா லிடத்திருந்தேன்
றனக்களி வாய்செய்ய நற்கரும் புண்டதைச் சார்சுவையின்
மனக்களி யால்விட் டகலாது நாகன் மகக்களிறே.      (52)
     எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
   களிதந்த கிராதர்கணஞ் சூழ்ந்து போற்றக்
            கான்வேட்டை யாடிவருங் கண்ணப் பற்கு
   வெளிதந்த வருள்பொழியும் பரமர் நின்ற
            மேவுதிருக் காளத்தி விலங்கல் காண
   அளிதந்த வன்புருவ மாயிற் றென்றே
            யறைகுவர்மற் றதன்மூல மறிந்தோ மன்றே.
   எளிதந்தப் பரவேடற் றழுவி முன்ன
            மின்புற்ற விசயனென வியம்ப லாலே.           (53)
                   கார்.
              கொச்சகக்கலிப்பா.
இயம்புறுமன் பேசிவமா மெனவுலகோ ரறிந்துய்ய
நயம்புரிந்த திண்ணர்வரை நமைநீத்தா ரெண்ணாரோ
பயம்புரிகார் காரிகையார் பாற்பொன்னார் மின்னாரச்
சயம்புரியம் பெய்கின்ற தன்மைபெற வார்த்தனவே.      (54)
       அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச்சந்தவிருத்தம்.
   தனையர்பெறு முலகினவ ருனைநிகரு மொருமதலை
            சமையவெவ ரடையுமியலார்
   நினையுறுந லனையுமைய னெனுமவனு முனமுறைசெய்
            நிகரிறவ மிதெனவுரையாய்
   மனைவிமக வெனுமுறவி லலையுமென திதயமது
            மயலறவொர் வழியையருள்வாய்
   வனையுமொளி மிகுதென்வெளி வரையிலமர் பரமர்திரு
            வதனவிழி யுதவுமணியே.                        (55)
       ஈற்றடிமிக்குவந்த நான்கடிக்கலித்தாழிசை.
மணியார்ந்த காளத்தி மாதேவ னடிமருவு
மணியார்ந்த வேடர்குல வருமணியி னடிபரவிப்
பிணியார்ந்த பிறவியறப் பெட்புறுமா றினியாமு
மெணியார்ந்த துதிபலவு மிசைத்திடுவோம் வாரீர்
ஈசர்மகிழ் நேசரென வியம்பிடுவோம் வாரீர்.           (56)
          வேற்றொலி வேண்டுறை.
வார்பெறுபல் வலையிட்டு வனவேட்டை வினைமுடித்து வருவேடர்க்குட்
சீர்பெறுகண் ணப்பர்விணிற் றேவர்க்கு மேலாகிச் சிறந்தாரம்மா
நார்பெறுமன் புறுநெறியை நாடினவ ரன்றோ
பேர்பெறுசங் கரனருள்சேர் பெற்றியுடை யாரே.         (57)
                     களி.
                    தாழிசை
ஆரும்பிறை சூடும்பெரு மானன்பத மேவு
          மன்பிறபொலி யின்புற்றிடு மருமைத்திரு வேடர்
சேரும்புகழ் மிகவிட்டொளி திகழ்தென்கயி லாயஞ்
          செப்பிக்களி யுண்டேவரு சித்தக்களி யேம்யாம்
கூருஞ்செயல் வாமத்தியல் கொளலாமது வினிதே
          குறிமந்திர மறிமின்பல கோலந்திகழ் குடியும்
பேருங்குல முறுசாதியு மறவாவகை தாலம்
          பேசுந்திற மெம்மட்டுள பிழையற்றவை பேறவே          (58)
                      மதங்கு.
            அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
பெறுகின்ற சீர்மலியுங் காளத்தி வாழ்வேடர் பெருமான் சீர்சொல்
லுறுகின்ற மதங்கியரே யிருகரத்தும் வாளேந்தி யுலவினீரே
தெறுகின்றவிழிவாள்கொண்டிளைஞருயிர்சிதைத்தமையீர்செப்புமாசை
யறுகின்ற முனிவரையும் வென்றிகொள வோவிங்கே யமர்கின் றீரே.    (59)
                      குறம்.
         எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
ஈரமதிச் சடையண்ண றென்கயிலைக் காட்டி
          லிருக்குமலைக் குறிச்சியில்வாழ் குறவரெனக் குறவர்
சீரமர்நற் றிண்ணர்முனம் பிறப்பர்பினே பிறவார்
          தெரிமினெனக் குறிபுகலுஞ் சிறுகுறத்தி நானே
கூரவயிற் றெரிதணியக் கூழ்வார்த்துப் பழய
          கூறைகொடுத் தென்குறியுட் கொண்டறிநீ யம்மே
நேரமர்கைக் குறிகண்டேன் கண்ணப்பர் நினைவே
          நினக்குளதோர் தினத்திலவர் நேர்வருகை நிசமே.            (60)
                   ஊர்.
    அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
நிசமுற்ற வடியரெலா முனிவரெலா மமரரெலா நின்று போற்ற
வசையற்றுத் திசைமுற்று மிசையுற்றுத் திகழ்திண்ணர் மகிழூர்கேட்பின்
வசமுற்ற கரியுரியார் ஞானப்பூங் கோதையோடு மன்னி வாழூர்
இசைவுற்று நீவத்தி பூசித்த காளத்தி யிடமா ரூரே.                (61)
                 வண்டுவிடு தூது.
         எழுசீர்க்கழிநெடிலடியாசிரியச் சந்தவிருத்தம்.
இடறும் வண்டுகளெ மரன தன்பாவன
          மியலு நன்சவர ராஜரே
படரும் வென்றிபெறு புயம ணிந்ததொரு
          படலை துன றுமண மாலையே
கொடுமி தன்றியிவ ளடும தனசமாசெய்
          குறியி ருந்தகணை பாயவே
வடுவு டன்றுயில்கொள் செயன்ம றந்தனளுய்
          வகையி லென் றுரைமின் வாழியே.                          (62)
                    வெறிவிலக்கு.
                 கட்டளைக்கலித்துறை.
வாழ்வுடைத் திண்ணர் வளர்தென கயிலை மலையிலொரு
தாழ்வுடைத்தென்று மறியுயிர் கொள்ளச் சமைவதுவும்
சூழ்வுடைத் தென்று கருது மதியிலர் தூரநிற்க
ஆழ்கடற் பூமியி னீயு மடவை யணிமுருகே.                   (63)
                  நாரைவிடுதூது.
                    கொச்சகம்
முருகமர்வா வியின்மீனே முன்னுமொரு முதுநாராய்
கருகுமனத் தன்பர்வரக் கண்டுரைத்து நீவாராய்
பெருகுபவ ரோகமறப் பேரருள்செய் பிஞ்ஞக்கனாரக்
குருகுமன வேடரிறை யோங்குறுமிவ் வுயர்வரைக்கே.            (64)
               வெண்பா
வரைவில்ல யன்பின் மலைவில்லி திண்ணன்
வரைவில்லி யற்செருப்பின் வாய்த்த - கரைவிலிசை
ஏத்தொடங்கி னிப்பா லினிப்பிறவாய் நீபிறவாய்
பாத்தொடங்கி னிப்பார் பரிந்து.                         (65)
      சம்பிரதம் - எண்சீர்ச்சந்த விருத்தம்.
பரியந கத்தினை விரலினெ டுப்பனொர்
          படர்செய்பு லைப்புலி யெனவும்வி டுக்குவன்
விரிகொடி முட்டையி லெழவன முற்றயன்
          விரவம ரைக்குல மலரிலவ ரச்செய்வன்
உரியவி வித்தைகள் பொருளல மற்புய
          முறுமற வர்க்கிறை யுரைசெய்க ணப்பர்தம்
அரியசெ யற்கிணை யவனித லத்திடை
          யடையுமொ ருத்தரை விரையவ ழைப்பனே.           (66)
      முதுவேனில் - எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
அழிவிலா நிலா முற்றத் தலர்மென் பள்ளி
    யடைந்திருக்கத் தென்றலிளங் கன்றுசோலைச்
செழியமா மலரினறு மணங்கொண் டீண்டிச்
    சீதளமா யுடன்மீது தைவந் தேகப்
பழியிலா முதுவேனில் பரந்த போதும்
    படுபொருட்குப் பிரிந்தகொடும் பதகர் வாரார்
சுழியிலா ழாதுவிழி சிவனுக் கீந்த
    தொண்டர்நக ரெனக்குற்ற துணையார் தாமே.          (67)
       நற்றாயிரங்கல் - கட்டளைக்கலித்துறை.
தாம நறைக்குழல் வன்மனப் பேதையென் றன்னைவிட்டுக்
காமனொ ரேதிலன் பின்னடந் தாள்சுரங் காதலொடெ
சேம முறுமட்ட மாசித் திகளணை தென்கயிலை
நாமநற் கண்ணப்பர் தாள்புக ழாரென நன்றிதுவே.          (68)
    நாணிக்கண்புதைத்தல் - அறுசீர்க்கழிநெடிலடியாசிரியச் சந்தவிருத்தம்.
நன்றுவன மொன்றியுறை தென்கயிலை
           யின்கணமர் நம்பர்பத நம்புதிணனார்
நின்றவரை யின்பமொடு தங்குதிரு
           மங்கையென நெஞ்சமுடை வஞ்சியிடையீர்
வன்றுயர்செ யம்புயமெ னுந்தனத
          டம்புறகு வஞ்சனையு டன்றிகழவே
துன்றிமிளி ரம்புநிக ரம்பகம
          றைந்தசெயல் துன்பமிகு மென்பதுளதே.          (69)
         இருபனிக்காலம் - கலித்துறை
உள்ளத் திருந்தே புறம்போன வன்னெஞ்ச முடையார்செயுங்
கள்ளத் திருக்கே நினைந்தேன் றுயர்க்கேயொர் கரைகண்டிலேன்
வள்ளற் பிரானெங்க ளரனன்பர் கண்ணப்பர் வரைமீதிலே
தள்ளப் படாவிப் பனிக்கால மேயென் றனக்காலமே.    (70)
                    மடக்கு.
         எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
காலமிதிற் காரிகையாள் கண்ணிறைநீ ரனவே
          கருதுமுனக் குறுமருமைக் கண்ணிறைநீ ரனவே
ஏலமலர்க் குழலிவடன் மெய்யுமுரு கினதே
          எண்ணுமுனக் கானன்பின் மெய்யுமுரு கினதே
கோலமுறு மிவட்கிரண்டு குவிதனமம் புயமே
          கூறுமுனக் கிருவரைபோற் குலவிடுமம் புயமே
சாலவிவை யொற்றுமைகண் டிவடுன்பந் துடையீர்
          தருசீர்க்கண் ணப்பரெனத் தலைமைமிகுந்துடையீர்.    (71)
        அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
உடையவர்க் குறுகண் டீர்க்கு மொளிவிழி யுடைய கோவே
தடையில்சீர்த் திண்ண னென்னுந் தலைவனே மலைவி லுன்றன்
புடைவரு மன்பி லோரா யிரத்திலோர் பாகம் பொல்லாக்
கடையனு மடையு மாறு காட்டிநீ யருளு வாயே.        (72)
               தாழிசை.
அருளரன்றரு நிலையினார்கர மமர்தரும்வரி சிலையினார்
          அண்டருந்துதி செய்யுமெய்த்தவ ரவனியாசைகள் பொய்த்தவர்
திருவுருக்கரு வரையினார்புலி யதளுடுத்திய வரையினார்
          தேடுவேடர்களிறைவரேயடி யேனுளத்தினு முறைவரே
கருவகற்றிய பத்தியார்சிவ னடிகள்பற்றிய முத்தியார்
          காதலுற்றதி ணப்பனார்விழி   யேபெயர்த்தக ணப்பனார்
மருவுநற்றொடை தந்திலார்மதி மயலறும்படி வந்திலார்
          மாதுதுன்பறும் வண்ணமேயருளாதுறிற்பழி நண்ணுமே.    (73)
       தலைவியைப்புகழ்தல் - கட்டளைக்கலித்துறை
நண்ணீய வன்பெவை யும்பிழம் பாக நனிதிரண்ட
தண்ணர்பொற் குன்றிற் கிளிகடி யுங்குயில் சேர்மொழியார்
கிண்ணத் தனத்தின்முத் தாரமு மாரமுங் கேழ்கிளரும்
வண்ணங்கண் டாற்புவி யோரிமை யாரென்ப வாட்கண்களே       (74)
              மடக்கு-வெண்பா
கண்ணனயன் போற்றிடுமுக் கண்ணனயந் தாளமுகக்
கண்ணனய னந்தந்த கண்ணப்பர் - வண்ணமலர்க்
காற்றுணையே தஞ்சமெனக் கைக்கொண்மன மேமறந்தக்
காற்றுணையே தஞ்சலினிக் காண்.                          (75)
         அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
இனிநா மறிவேந் தென்கயிலை யீசர் தமக்கு விழிமூன்று
முனமே யிருக்க நினதுதிரு முகக்கண் கொண்ட முடிவம்மா
தனியே யெரிகண் ணொன்றொன்று சார்பா லக்கண் மறைவாகும்
பனியா ரொருகண் பகன்மறையும் பண்பால் வேடர் பணிபதியே.    (76)
               மடக்கு- கட்டளைக்க்கலிப்பா
பதியு டுப்பூர்க் கிருந்தவ மன்னவன்
          பகரு நாகற் கிருந்தவ மன்னவன்
மதிஞர் பத்தர்கள் முன்னிடற் கானவன் 
          மன்னு மூனரன் முன்னிடற் கானவன்
கதியி னோடு தனுவிடு கோலனே
          கரிய வாகத் தனுவிடு கோலனே
வாதியு நெஞ்சுறப் பாக்கிய முற்றுமே
          மருவு முள்ளுவப் பாக்கிய முற்றுமே.                     (77)
உருவெளி- அறுசீர்க்கழி நெடிலடியாசிரியச் சுத்த விருத்தம்
முற்றுமன் புருவாய கொற்றவன் றவவேடர்
          முற்றொழுந் திணனாமனே
பற்றுதென் கயிலாய நற்சயந் தனமேவு
          பத்திடியொன் றியபாககேள்
உற்றபங் கயமேவ வைத்தலர்ந் திடுநீல
          மொத்தசெந் துகிராரமே
பெற்றிடுங் கொடியான்மு னுற்றநன் பயனாகு
     பெற்றிகொண் டெதிர்சேருமே.                          (78)
தலைவிகூற்று-அருசீர்க்கழிநெடிலடியாசிரியச் சந்தவிருத்தம்
சேர வெனக்குற வொன்றியோர் சேய ரெனப்பொலி திங்களே
ஈரநிலத்தழல் சிந்தவே யீது டனொத்தது தென்றலே
ஆர ணிவித்தக ரன்பரே யாய கணப்பரை நெஞ்சுளே
தேர விருத்துமி தொன்றுமே தீய வுருக்குமெனென்பதே       (79)
கடலொடுபுலம்பல்-கொச்சகம்
என்பணியார்க் கின்பணியார் கண்ணப்ப ரெழினாட்டில்
நன்குறுபா யலையுநதி நறுந்தரளம வளைசிந்தி
மன்பெருக வார்த்திரங்கும வார்கடலே யென்போனீ
யன்புடையார்ப் பிரிந்தனையோ வலலுமறங் காய் மனவே     (80)
பாண்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
மனமி குந்துயர் கொண்டிடு மெங்கள்பால
          வண்ணமார் பொய்கூறித்
தினமி ருந்துயா தனமள வளந்துதந்
          திகழதனம் விலைசெய்வார
இனமி குந்திட லமர்தலை யன்பரன்
          பியலிசை கொடும்பாண
வனமி குந்தகண் ணப்பர்மால் வரைநகர்
          வருந்திலந் திரும்பாயே                              (81)
காலம்-மடக்கு-எண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
திருவிளங்கு மடவார்வம் பலர்தூற்றுங் காலம்
          சித்தசனார் கைச்சிலைவம் பலர்தூற்றுங் காலம்
உருவிளங்கு மெரிவிரிக்கு மம்புலிக்குங் காலம்
          உரைமலயக் காலென்னு மம்புலிக்குங் காலம்
மருவிளங்கு மிதழிமுடி வள்ளலடி பரவும்
          வனசரர்கோன் கண்ணப்பர் மருவுதிரு நாட்டிற்
கருவிளங்கு மெனதுவளை கலையகற்றுங்காலம்
          காதலர்தொன்மொழியுளநோ கலையகற்றுங்காலம்        (82) 
வெண்பா
காற்கண்ணர் மாலுங் கருதுமரைக் கண்ணரயர்
மாற்கண்ண ராயரனை வாய்த்திலரே-கோற்கணையாற்
கண்ணிடந்த கண்ணப்பர்க் கன்றோசீர்க் காளத்திப்
பெண்ணிடங்கொண் டார்முனின்ற பேறு.                    (83)    
     வலைச்சியார் - கட்டளைக்கலித்துறை.
பேறு பெறுதிருக் கண்ணப்பர் வண்ணப் பெருநகரின்
மாறுறு வாவியின் மீன்கொண்டு விற்கும் வலைச்சியரே
கூறுறு கண்வலை யாலாவி முற்றுங் குலைத்திழுப்போர்
வீறு பிறருமைப் போற்கண் டிலன்யான் விளம்பிடவே        (84)
   எழுதரிதெனல் - அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
யானு ரைத்திடல் கேண்மினே யாது நீருரை செய்யினு
ஆனு டைக்கொடி யண்ணலா ரடிவி ரும்பிய திண்ணனார்
தேனு டைச்சிறுகுன்றிலே சேர் மடக்கொடி நின்றதே
போன லப்பொறி வரையினும் புகன டைக்கரி தாமரோ    (85)
   இடைச்சியார் - ெண்சீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
அரிய முகில் வில்லேந்தி நடந்தாலன்ன
          வணியுருவக் கண்ணப்பர் நகர்கா ளத்தி
யுரியதிரு வீதிதொறுங் குடமு லைப்பால்
          உறுவிலைப்பா லெனநீர்விட் டுரையா நிற்பீர்
கரியவிழிப் பானயப்பால் வனப்பா லிங்கே
          காண்போர்மாற் பால்கொள்ளக் கலசங் காட்டீர்
பெரியநல வண்டர்குல மென்பீ ரானாற்
      பேசுமிடைக் கொடிச்சியராய்ப பெறும்பே ரென்னே          (86)
      இரங்கல்-மடக்கு- எண்சீர் ஆசிரியவிருத்தம்
பெற்றமூர்ந் தவர்பா லுற்ற   சீர்த் திணனார்
          பிழையிலா மொழியும் வழுவிலா விழியும்
கொற்றமார் புயமும் பற்றுகார் முகமும்
           கொண்டல்போ லுருவுங்கண்டிலேன் கொடியேன்
உற்றமா வினமே முற்றுமா வினமே
           உரைகொடுத் தழையீர் வரையிடத் தழையீர்
கற்றிடுஞ் சுகமே யற்கொரஞ் சுகமே
           கண்டிருந் தேனே கண்டிருந் தேனே                      (87)
               தவம் - வெண்பா
தேனார் மலர்ப்பொழில்சூழ் தென்கயிலை யீசர்க்காள்
ஆனார்கண் ணப்ப ரழகியநற்- கானாடி
யுற்றோர்தி னங்கழித்தா லொண்டவம்வே றுண்டுசொலோ
மற்றோர்தி நன்குளமே வாஅந்து.                       (88)
                    பிச்சியார்-கொச்சகம் 
    வந்துமயல் கொளத்திரியும் வாட்கடைக்கட்பிச்சியார்
    எந்துயரங் கண்டுமுயி ரேன்பறிக்க நின்றாரே
    பந்தமறுங் கண்ணப்பர் பண்பார் திருநகரிற்
    சந்தமுறும் வீதி தனிலோர் மருங்குறவே           (89)
            அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்
    மருங்கு வானவர் தோத்திர வோசையும் விஞ்சையர்வரிப்பாட்டு
    நெருங்கு மாதவர் மாமறை யேத்தொடுநிறைதரு காளத்தி
    ஒருங்கு நற்றவ முற்றகண் ணப்பர்த மொலிகழற் றிருத்தாளே
    முருங்கு தீவினைக் காட்டினை யெரித்திடு முளரியின் கொழுந்தம்பர்   (90)
                தோழிகூற்று-கலித்துறை
    கொழுந்தளிர் மென்பூ மாலை தொடுப்பார் குளிர்காவூ
    டெழுந்தலர் கொய்வார் மானைய ழைப்பா ரிவர்தம்முட்
    செழுந்தனி வேலோ னுள்ளம துற்றாடெரிகில்லேன்
    றொழுந்தகு திண்ணர் நல்வரை தன்னுட் டுணி                 (91)
                       வஞ்சிப்பா
             துணிவோடொலி தொடர்கானிடை
             நணிவேட்டையி னலமேவரு
             தென்கயிலையிற் சிவமுற்றிட
             நன்கடைதரு நவிறிண்ணனார்
             பெருகன்போடு முருகித்தினம்         
             தருமுன்கொடு சமைபூசனை-மகிழக்
             கொண்டவ ரன்பொடு கோலநல விழியு
             மண்டரும் வியப்ப வரனார்
             பண்டையிற் கொண்டது பரவிய துலகே            (92)
                  கைக்கிளை-மருட்பா
       உலவு விழியிமைக்க வொள்ளடிபார்தோய
       நிலவுமுகம் வேர்வரும்பு நீர்மை-குலவுபுகழ்
       வானமர் திண்ணர் வரையிடை நண்ணுமிம்
       மானமர் நோக்கி வதியிடம்
       மானவ ருலகெனும் வாய்மைவந் ததுவே                (93)
              வண்டு-கட்டளைக்கலித்துறை
       வந்தனை செய்து மருவுமிப் பாவை வருத்தமுறு
       சிந்தனை தீரவென் செய்வது செப்புமின் றேனினங்காள்
       கந்தனை யீன்றதென்காளத்தி நாதர் கழலடைந்தார்
       நிந்தனை யற்றன்பு நேர நினையார் நிகழ்திண்ணரே       (94)       
          
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்.
அராவி ராவுசெஞ் சடையிடை வெண்மதி யலைபுனல் பூங்கொன்றை
குராவி ராவுபச் சறுகுபொன் மத்தமுங் குலவிட வைத்தாரைப்
பராவி ராவுடன் பகலகல் கிலர்சரண் பற்றிய திணர்சீரை
ஒராவி ராவுளத் தேத்திடின் மறவிபாலுறா தினி திருப்பீரே          (95)
கலிச் சந்தவிருத்தம்
இனிதொன்றிய வனநின்றவொ ரிசைகொண்டிடு திணனார்
வினைசிந்திய கழன்மென்பதம் விடலென்செய லலவாற்
கனிவொன்றிய நினைவின்படி கருதன்பொடு கலவா
மனையின்புற மருவும்பத மனநின்றற விடவே                   (96)
வெண்பா.
விட்டபொரு ளெல்லாம் விரும்பிவிரும் பிப்பலகாற்
கெட்டமன மேயொன்று கேட்டிநீ- துட்டமல
பந்தமே சேராமற் பரவுபுகழ்க் கண்ணப்பற்
காந்தமே தொண்டா யடை.                                    (97)
மடக்கு - எழுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
அடைப்பரி கலத்தூ னான்றினக் களித்தீர்
           அடித்துதி சொலவெனக் களித்தீர்
உடைப்பெரு மிருளே யகநக விரித்தீர்
           உயர்புகழ் புவிமிக விரித்தீர்
தொடைபுய மறவர் பெற்றிடுங் கோவீர்
           சூழ்ந்தான் பற்றிடுங் கோவீர்
கடைபடு வேனோ விலமையா வணமே
           கைக்கொள்வீ ரடிமையா வணமே                               (98)
கட்டளைக்கலித்துறை
ஆமிதென் றேவிலங் கூனை யருத்தி யுடனருத்தித்
தோமில்கண் ணப்பர் கழனாளு மேத்தித் தொழும்படைவோர்
பூமியி லெந்த வினைச்செய் திருக்கினும் புண்ணியரே
சாமிதென் காளத்தி யப்ப னருளுக்குத் தக்கவரே                  (99)
இளமைச்செப்பல்- அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
தக்கவெலா முரைத்துரைத்துக் கண்ணப்பர் தனிவரைசார் தயங்குநாட்டிற்
பக்கமக லாதுவந்து பலகாலுஞ் சில கூறிப் பரிவி னோடு
கைக்கமலத் தாரநறு முறிகொண்டு பின்னிற்குங் களிறன் னாய்தேர்
மைக்கரிய விழிகள்ளங்கற்றிலநற் றனமுளையா மான னாட்கே   (100)
எண்சீர்க்கழிநெடிலாசிரிய விருத்தம்.
நாட்கமலத் தயன்மாலு நண்ண வொண்ணா
              நம்பாடிக் கன்புடைய வேட நம்பி
தாட்கமலந் தலைக்கமலம் பொருந்தத் தாங்கித்
              தவிராத பிறவியெனுந் தளையை நீங்கி
வேட்கமலந் துணையாகும் பிணைய னார்செய்
              வீண்சாலம் வெயில்கண்ட பனிபோல் வீயச்
சேட்கமலக் கார்வரக்காண் டோகை யோகை
               சேர்வதுவே யிம்மையினான் றேர்ந்த சீரே.             (101)
                ------------------
வாழி
வாழி காளத்தி மன்னுஞ் சிவன்கழல்
வாழி யன்பர்கண் ணப்பர் மலர்புகழ்
வாழி யெங்கு மறையுட னாகமம
வாழி முத்தமிழ் வான் முகில் வாழியே.
கண்ணப்பர் கலம்பகம் முற்றிற்று.
---------------------------------
திருச்சிற்றம்பலம்.
இந்நூலாசிரியர் மாணவர் கூறியவை:
கட்டளைக்கலித்துறை
பன்னுங் கலியுக மையா யிரத்திரு பானிரண்டி
லுன்னுந லாண்டு ரௌத்திரி பாசி யுறுமதியிற்
றுன்னும் புதுவைத் துரைசாமி நாவலன் றூயபுகழ்
மன்னுகண் ணப்பர் கலம்பகம் பாடி வழங்கினனே.
கொச்சகக்கலிப்பா.
எங்குந்த மிசைவிளங்க விருக்கின்ற வெழின்மிகுந்த
செங்குந்தர் குலவிளக்காந் திருவுடையான் சிவனடியிற்
பொங்குந்த னுணர்வுடையான் புகல்புலவன் துரைசாமி
தங்குந்தண் டமிழ்க் கவியே தருநிலத்தின் னமிர்தாமால்.
வெண்பா.
கண்ணப்பற் காளாய்க் கவின்றுதிசொற் றேயுற்றான்
கண்ணப்பத் தொண்டனெனுங் காரணப்பேர் - நண்ணுலக
சம்பவங்க டீயவெனத் தள்ளியே யெங்குரவன்
வெம்பவங்க டீய விரைந்து.
                     ------------
    உ
                   சிவமயம்.
     அன்பும், கண்ணப்பரும்.   
                    வெண்பா.
வாளா பொழுது கழிக்கின்றார் மானிடவர்
கேளார்கொ லந்தோ கிறிபட்டார் - கீளாடை
யண்ணற் கணுக்கராய்க் காளத்தி யுண்ணின்ற
கண்ணப்ப ராவார் கதை.
               (கைலைபாதி காளத்திபாதித்திருவந்தாதி)
                        ------
அன்பு.
அன்பானது, தான் வேண்டப்பட்ட பொருளின்கட் டோன்றும் உள்ள நிகழ்ச்சி. உலகத்துப் பொருள்கள் உண்மை மாத்திரையுணர்த்திப் பிழம்பு உணர்த்தப் படாதனவும், உண்மையும் பிழம்புமுணர்த்தப் படுவனவுமென இருவகைப்படும். அவற்றுள், உண்மை மாத்திரையுணர்த்திப்பிழம்பு உணர்த்தப்படாதன காமம், வெகுளி, மயக்கம், இன்பம், துன்பம் முதலாயின. உண்மையும் பிழம்பு-முணர்த்தப்படுவன மாடம், கூடம், மாளிகை, சூளிகை, மனிதன், மரம் முதலாயின. அன்பென்னும் பொருளின் உண்மை மாத்திரையல்லது பிழம்பு உணர்த்தலாகாது. அன்புடையரான குணங்கண்டவிடத்து
இவை உண்மையான் ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற்பாற்று. இவ்வன்பு உலகத்துப் பொருள்களில் பலதிறப்பட்டு நிகழும். நாயகன் நாயகியிவர்கள்பால் உளதேல், சாவிற்சாதல், நோவினோதல், ஒண்பொருள் கொடுத்தல், நன்கினிது மொழிதல், புணர்வுநனிவேட்டல், பிரிவு நனியிரங்கல் முதலியன காணப்படும். பரமேசுரன்பால் உளதேல், அப்பெருமானது உண்மையை நினைக்குந்தோறும் கேட்குந்தோறும் காணுந்தோறும் தன்வசமழிதலும், மயிர்க்கால்தோறுந் திவலையுண்டாகப்புளகித்தலும், ஆனந்த அருவி பொழிதலும், விம்மலும், நாத்தழுதழுத்தலும், உரைதடுமாறலும் ஆடலும், பாடலும், அச்சிவனுவப்பன செய்தலும், வெறுப்பன ஒழிதலும் பிறவும் காணப்படும்.
நாயகன்நாமம் கேட்டவுடன் வசமழிதல் தலையன்பு எனவும், நாயகனைக்கண்டவுடன் வசமழிதல் இடையன்பு எனவும், நாயகனைக் கூடினவுடன் வசமழிதல் கடையன்பு எனவுங் கூறுவர்.
அன்புங் கண்ணப்பரும்.
    இவ்வன்பு இல்லாவழிச் சிவபெருமானை அடைதல் ஒருவாற்றானும் இயையாது. "நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே-புக்குநிற்கும் பொன்னார்சடைப்புண்ணியன்-பொக்க மிக்கவர்பூவுநீருங்கண்டு- நக்குநிற்பனவர் தம்மை நாணியே" என்றார் திருநாவுக்கரசுநாயனார். இத்தகைய அன்பு, பல பிறவிகளிலே பயன் குறியாது செய்துள்ள புண்ணிய மிகுதியினாலே சிவபிரானருள்செய்ய வந்து தோன்றும். இடையறாது முறுகிவளரும் அன்பின் முதிர்ச்சியிலே சிவம் விளங்கும். ஆதலால், அன்புஞ் சிவமும் இரண்டற அபேதமாய் நிற்கும். இதனை, "அன்பினில் விளைந்த வாரமுதே" "ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த வின்பமே யென்னுடையன்பே" "அன்பேசிவமா யமர்ந்திருப்பாரே" என அனுபூதிமான்களாகிய பெரியார் திரு
வாக்குகளானறிக.
கண்ணப்பர்.
    
    இத்துணைப் பெருஞ்சிறப்பினதாகிய அன்புடைமையிலே தமக்கு உயர்வொப்பின்றி விளங்கிய பெருந்தகையோர் இக்கண்ணப்பநாயனார். இவர் வேதாகமங்களைக் கற்றல் கேட்டல் சிறிதும் இல்லாத வேட்டுவசாதியிற் பிறந்தும், சிவபிரானிடத்து மெய்யன்புடையரானதற்குக் காரணம்,முற்பிறப்பிலே வேதாகமங்களை ஓதியுணர்ந்து சிவபெருமானை மனம் மொழி மெய்களால் வழிபட்டமையேயாம். இக்கண்ணப்பநாயனார் முற்பிறப்பிலே பாண்டவர்கள் ஐவருள் ஒருவராகிய அருச்சுனராவர். பாசுபதாஸ்திரம் பெறவேண்டிப் பெருந்தவஞ்செய்த அருச்சுனரோடு கருணாநிதியாகிய பரமசிவனார் வேட்டுவ வடிவங்கொண்டுவந்து விற்போர்செய்து அவரது வில்லினால் அடிபட்டு, பின்பு அவரைத் தீண்டி மற்போர் புரிந்து, அதன்பின்னர்த் தமது திருவுருவைக்காட்ட, அதுகண் டற்புத மெய்திய அருச்சுனர் பரமேசுரனை வணங்கித் தமக்கு முத்திதந்தருள வேண்டினார். அதைக்கேட்ட சிவனார் "நீ பகைவரை யழித்கும் பொருட்டுப் பாசுபதாத்திரம் பெறநினைந்து தவஞ்செய்தனை ஆதலால், இப் போழ்திதனைப் பெறுதி" யென்று கொடுத்தருளி, " நீ என்னை வேடன் என்று இகழ்ந்தமையால் பின் வேட்டுவ ராஜனாகப் பிறந்து திருக்காளத்தி மலையையடைந்து, அன்புருக்கொண்டு நம்மைப் பூசித்து, விலங்குகளின் ஊனை எமக்கு நிவேதிப்பாய்; அந்நாளில் உனக்கு முத்திதருவோம். " என்று திருவாய் மலர்ந்தருளினார் என்பது சீகாளத்திப் புராணத்திற் கூறப்பட்டது.
ஈசுரனது நாமங்கேட்டபோதே தன் வசமழியுந் தலையன்புடைய இந்நாயனார்க்குச் சிவலிங்கப்பெருமானைக் கண்டபோதும் கட்டித் தழுவியபோதும் உள்ளத்து மிக்கெழுந்த அதி தீவிரமாகிய அன்பின்பெருக்கை இத்துணைத்தென்று அக்காளத்தியப்பரேயறிப வரல்லால் வேறியாவர் அறியவல்லார்? இவ்வற்புதத் தலையன்புடைமையாலன்றோ இக்கண்ணப்பர் சிவலிங்கப்பெருமானைத் தரிசித்துத் தொண்டு பூண்ட நாள்முதல் முத்தியடையும் வரையில் ஆறுதினமாக இரவும் பகலும் ஊண் உறக்கமின்றி மனங்களித்திருந்து கண் பெயர்த்தப்பும்போது,
"மதர்த்தெழு முள்ளத்தோடு மகிழ்ந்துமுன் னிருந்து தங்கண்
முதற்சர மடுத்து வாங்கி முதல்வர்தங் கண்ணிலப்ப."
"நின்றசெங் குருதிகண்டார் நிலத்தினின் றேறப்பாய்ந்தார்
குன்றென வளர்ந்து தோள்கள் கொட்டினார் கூத்து மாடி
நன்றுநான் செய்த விந்த மதியென நகையுந் தோன்ற
லோன்றிய களிப்பி னாலே யுன்மத்தர் போல மிக்கார்."
என்றபடி களிதூங்கினார். பின்னர் மற்றைக்கண்ணிலும் உதிரமொழுகும்போது,
"உண்ணிறை விருப்பி னோடு மொருதனிப் பகழி கொண்டு
திண்ணனார் கண்ணி லூன்றத் தரித்திலர் தேவ தேவர்."
என்றபடி மகிழ்வுடனே கண்ணிற் கணையை நாட்டினார். இவரது அரிய அற்புதச் செயலை 
நினைதொறும் நினைதொறும் கன்னெஞ்சமுங் கரைந்துருகுமே!
சிவபிரானுக்கு மாமிசம் நிவேதித்தலும், வாயிற்கொண்டுவந்த நீரான்மஞ்சனம் செய்வித்தலும், காற்செருப்பாற் றிருமுடியிலுள்ள நிருமாலியம் நீக்கலும், தலையிற்சூட்டிய மலர்களைச் சாத்துதலும்,
ஆகிய இவைகளைப் பிறர்செய்ய நினைக்கினும் எண்ணிறந்த காலம் மிகக் கொடிய நரகத்துன்பமடைவாரன்றோ? அங்ஙனமாக, இக் கண்ணப்பர் இவற்றைச் செய்தமையென்னையெனின், இவர் இப்பிறப்பிலே ஓர் ஆசாரியரை யடைந்து இது புண்ணியம் இது பாவம் இது செயற்பாலது இது ஒழிதற்பாலது என்று ஒரு காலும் கேட்டும் அறியார், தாம் சிவபெருமானைக்கண்டபோது நீர் விட்டு மலரிட்டு இருக்கக் கண்டமையானும், ஒரு பார்ப்பான் எதையோ கொண்டுவந்து ஊட்டினான் என்று தம்முடன் வந்த வேடன் கூறக் கேட்டமையாலும் இவையே சுவாமிக்கு உவப்பாவனவென்று துணிந்து, அவ்வாறு செய்ய நினைந்து, தமக்கு இனியதாயது மாமிசமே-யாதலால், அதுவே சுவாமிக்கும் இனியதா மென்றுன்னி ஊட்டினார்; வாய்நீராட்டி மலருஞ் சூட்டினர். பேய்பிடிக்கப்பட்டாரது செயலெல்லாம் பேயின் செயலாதல் போல, பசுபோதம் அற்றுச் சிவபோதம் உற்ற இந்நாயனாரது செயலெல்லாம் சிவனார் செயலென்றே தெளிக.
பரமேசுரனார் திருக்கண்ணில் உதிரங் கண்டபோது இவர்க்குண்டான பதைப்பும், தமது கண்ணைத்தாமே யிடக்கும்போது சிறிதேனும் வருத்தந் தோன்றாமையும், தமது கண்ணைச்சிவனார் விழியிலப்ப உதிரநின்றமை கண்டெழுந்த ஆனந்த மிகுதியும், மற்றைக்கண்ணிலும் உதிரம் வடியக்கண்டு இன்னொரு கண்ணை இடக்கும்போது சுவாமி கண்ணிலுதிரம் இனிவாராதென்ற துணிவினாற் பிறந்தவிருப்பமும் இக்கண்ணப்பர்க்குச் சிவபிரானிடத்துள்ள அன்பே இன்பமாயிருந்த தென்பதைத் தெளிவிக்கின்றன. "அன்பினா லடியே னாவியோ டாக்கை யானந்த மாய்க்கசிந் துருக" எனவும்,  "முடிவிலா வின்பமான அன்பினை யெடுத்துக்காட்ட" எனவும்,  "இறவாத லின்ப வன்புவேண்டி" எனவும் வருகின்ற அருமைத் திருவாக்குக்கள் இங்கே சிந்திக்கற்பாலன.
இதுகாறுங் கூறியவற்றால் அன்பு இன்னதென்பதும், சிவபிரானிடத்து அன்புடைமைக்கு அடையாளம் இன்னவையென்பதும், அன்புடையார்க் கன்றி மற்றையோர்க்கு அரனா ரருளாரென்பதும், அன்பு மூவகையிற் றலையன்பர் இக்கண்ணப்பநாயனார் என்பதும், அவர்க்கு அன்பே இன்பமாக இருந்ததென்பதும் போந்தமையுணர்க.
வெண்பா.
தந்தையாந் தாய்தந்தை நாகனாந் தன்பிறப்புப்
பொத்தப்பி நாட்டுடுப்பூர் வேடுவனாந் - தித்திக்குந்
திண்ணப்ப னாஞ்சிறுபேர் செய்தவத்தாற் காளத்திக்
கண்ணப்ப னாய்நின்றான் காண். 
              (பதினோராந்திருமுறை- நக்கீரர்.)
     ---------
கண்ணப்பநாயனாரைக் குறித்து முன்னை மூதறிஞர்கள் மொழிந்துள்ள பாக்கள் பலவுள. 
அவற்றுள், மிகமுக்கியமான சிலகவிகள் கற்போர் ஓராங்குக் கண்டுவக்குமாறு
 ஈங்குத் தந்து காட்டப்படுகின்றன.
மாணிக்கவாசகசுவாமிகள் திருவாசகம்.
திருச்சிற்றம்பலம்.
கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை கண்டபின்
என்னப்ப னென்னொப்பி லென்னையுமாட் கொண்டருளி
வண்ணப்ப ணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் னீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.
திருச்சிற்றம்பலம்.
------------------
திருக்களிற்றுப்படியார்.
கண்ணப்ப னொப்பதோ ரன்பின்மை யென்றமையாற்
கண்ணப்ப னொப்பதோ ரன்பதனை - கண்ணப்பர்
தாமறிதல் காளத்தி யாரறித லல்லதுமற்
றாரறியு மன்பன் றது.
நக்கீரதேவநாயனாராருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறம்.
திருக்கண் ணப்பன் செய்தவத் திறத்து
விருப்புடைத் தம்ம விரிகட லுலகே பிறந்தது
தேனழித தூனுண் கானவர் குலத்தே திரிவது
பொருபுலி குமுறும் பொருப்புடைக் காடே வளர்ப்பது
செங்க ணாயொடு தீவகம் பலவே பயில்வது
வெந்திறற் சிலையொடு வேல்வரண் முதலிய
வந்தமில படைக்கல மவையே யுறைவது
...     ...    ...     ...      ...     ...
கனவிலா தரிகு மந்தணன் றனகுச்
சீரார் திருக்கா ளத்தியு ளப்பன்
...     ...       ...      ...      ...      ...
திருவுருக் காட்டி யருளிய
புரிவொடு பூசனை செய்யுங்
குனிசிலை வேடன் குணமவை யாவன
உரிமையிற் சிறந்தநன் மாதவ னென்றுணர்
அவனுகந் தியங்கிய விடமுனி வனமது வேயவன
செருப்படி யாவன விருப்புறு துவலே
யெழிலவன் வாயது தூயபொற் குடமே
யதனிற் றங்குநீர் கங்கையின் புனலே
புனற்கிடு மாமணி யவனிரைப் பல்லே
யதற்கிடு தூமல ரவனது நாவே
யுப்புனல் விழும்பொழு துரிஞ்சிய மீரைப்
புன்மயிர் குசையினு நம்மடிக் கினியே யவன்றலை
தங்கிய சருகிலை தருப்பையிற் பொதிந்த
வங்குலி கற்பத் தலரே யவனுகத் 
திட்ட விறைச்சி யெனக்குநன் மாதவ
ரிட்ட நெய்பா லவியே
யிதுவெனக் குனக்கவன்
கலந்ததோ ரன்பு காட்டுவ னாளை
.... ..... ..... .... ..... ..... ..
தக்கன மருந்துகள் பிழியவும் பிழிதொறு
நெக்கிழி குருதியைக் கண்டுசிலை தளர்ந்தென்
அதகனுக் கடுத்ததெ னத்தனுக் கடுத்ததென்னென்
றன்பொடுங் கனற்றி
யித்தனை தரிக்கில னிதுதனைக்  கண்டவென்
கண்ணை யிடந்து கடவுடன் கண்ணூறு
புண்ணி லப்பியுங் காண்ப னென்றொரு கண்ணிடைக் 
கணையது மடுத்துக் கையில் வாங்கி
யணைதர வப்பின னப்பலுங் குருதி
நிற்பதொத் துருப்பெறக் கண்டுநெஞ் சுகந்து
மற்றைக் கண்ணிலும் வடி க்கணை மடுத்தனன் மடுத்தலும்
நில்லு கண்ணப்ப நில்லு கண்ணப்பவென்
அன்புடைத் தோன்ற னிலலுகண் ணப்பவென்
றின்னுரை யதனொடு மெழிற்சிவ லிங்கந்
தன்னிடைப் பிறந்த தடமலர்க் கையா
லன்னவன் றன்கையம் பொடுமகப் படப்பிடித்
தருளின னருள லும்
விண்மிசை வானவர்
மலர்மழை பொழிந்தனர்
துந்துபி கறங்கின தொலைசீர் முனிவரு
மேத்தின ரின்னிசை வல்லே
சிவகதி பெற்றனன் றிருக்கண்ணப்பனே
கல்லாடதேவநாயனாரருளிய திருக்கண்ணப்பதேவர் திருமறம்
பரிவின் றன்மை யுருவுகொண் டனையவன்
போழ்வார் போர்த்த தாழகச் செருப்பினன்
.......   ... .... ....    .........   ... ....
கோசரிக் கன்றவ னேசங் காட்ட
முக்க ண்ணப்பனுக் கொருகணி லுதிரம்
தக்கி ணத்திடை யிழிதர வக்கணம்
அழுது விழுந்து தொழுதெழுந் தரற்றிப் 
புன்மருந் தாற்றப் போகா தென்று
தன்னை மருந்தென்று மலர்க்க ணப்ப
வொழிந்தது மற்றை யொண்டிரு நயனம்
பொழிந்த  கண்ணீர்க் கலுழி பொங்க
வற்ற தென்று மற்றக் கண்ணையும்
பகழித் தலையா லகழ வாண்டகை
யொருகை யாலு மிருகை பிடித்து
வொல்லை நம்புண் ணொழிந்தது பாராய்
நல்லை நல்லை யெனப்பெறுந்
திருவெட்டுவர்தாந் திருவடி கைதொழக் 
கருவேட் டுழல்வினைக் காரியங் கெடுமே.
கல்லாடம்-18
"முன்னொரு காலத் தடுகொலைக் கணைந்த
மூகிலுருப் பெறுமோர் கொடுமரக் கிராதன்
....    ...     ....     ....   .....
வெள்வாய் குதட்டிய விழுதுடைக் கருந்தடி
வைத்தமை யாமுன் மகிழ்ந்தமு துண்டவன்
மிச்சிலுக் கின்னு மிச்சைசெய் பெருமான்"
பட்டணத்துப்பிள்ளையார்.
வாளான் மகவரிந் தூட்டவல் லேனல்லன் மாதுசொன்ன
சூளா லிளமை துறக்கவல்லேனல்லன் றொண்டுசெய்து
நாளாறிற் கண்ணிடந் தப்பவல் லேனல்ல னானினிச்சென்
றாளாவ தெப்படி யோதிருக் காளத்தியப் பருக்கே.
-------------------------
திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் புராணம்
கானவர்தங் குலமுலகு போற்ற வந்த 
       கண்ணப்பர் திருபாதச் செருப்புத் தோய
மான்வரிச் சிலைவேட்டை யாடுங் கானும்
        வான்மறைய நிறைபெரிய மரமுந் தூறு
மேனையிமை யோர்தாமு மிறைஞ்சி யேத்தி
        யெய்தவரும் பெருமையவா மெண்ணி லாத 
தானமுமற் றவை கடந்து திருக்கா ளத்தி
         சாரவெழுந் தருளினார் சண்பை வேந்தர்.
 
தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுது கொண்டே
    தடஞ்சிலா தலசோபா னத்தா லேறி
வாழ்ந்திமையோர் குழாநெருங்கு மணிநீள் வாயில்
     மருங்கிறைஞ்சி யுட் புகுந்து வளர்பொற் கோயில் 
சூழ்ந்துவலங் கொண்டிறைவர் திருமுன் பெய்தித்
      தொழுதுதலை மேற்செங்கை கொண்டுபோற்றி
வீழ்ந்தெழுவார் கும்பிட்ட பயன்காண் பார்போன
         மெய்வேடர் பெருமானைக் கண்டு வீழ்ந்தார்.
உள்ளத்திற் றெளிகின்ற வன்பின் மெய்ம்மை
       யுருவினையு வவ்வன்பி னுள்ளே மன்னும்
வெள்ளச்செஞ் சடைக்கற்றை நெற்றிச் செங்கண்
      விமலரையு முடன்கண்ட விருப்பம் பொங்கிப் 
பள்ளத்தி விழிபுனல்போற் பரந்து செல்லப் 
       பைம்பொன்மலை வல்லிபரிந் தளித்த செம்பொன் 
வள்ளத்தின் ஞானவா ரமுத முண்டார்
       மகிழ்தெழுந்து பன்முறையும் வணங்குகின்றார்
திருநாவுக்கரசு நாயனார் புராணம்.
மலைச்சிகரச் சிகாமணியின் மருங்குற முன் னேநிற்குஞ்
சிலைத்தடக்கைக் கண்ணப்பர் திருபாதஞ் சேர்ந்திறைஞ்சி
யலைத்து விழுங் கண்ணருவி யாகத்துப் பாய்ந்திழியத்
தலைக்குவித்த கையினராய்த் தாழ்ந்துபுறம் போந்தணைந்தார்.
ஏயர்கோன்கலிக்காமநாயனார் புராணம்
(சுந்தரமூர்த்திநாயனார் சரித்திரம்)
வனங்கி யுள்ளங் களிகூர மகிழ்ந்து போற்றி மதுரவிசை
யணங்கு செண்டா டெனும்பதிகம் பாடி யன்பிற் கண்ணப்பர்
மணங்கொண் மலர்ச் சேவடிபணிந்து வாழ்ந்து போந்து மன்னுபதி
யிணங்கு தொண்ட ருடன்கெழுனி யின்புற் றிருக்கு மந்நாளில்
-----------------------
 கண்ணப்பரைக் குறித்த சில பாடல்கள். 
திருவெங்கைக் கலம்பகம்.
காணாம லயன்றேடு நின்மு டிக்கட்
    கண்ணப்பன் றொடுகழற்கால வைத்த போதிற்
கோணாக முரிந்ததுவோ குளிர்வெண் டிங்கட்
    கொழுந்துபொறா தொதுங்கிற்றோ நீர்ப்பெ ணன்பு
பூணாம லருவருத்து நோக்கி னாள்கொல்
    பொன்னிதழித் தொடையல்சூழ்ந் திழுத்த தோசொல்
வீணாள்பட் டழியாத வன்பர்க் கன்பாம்
    விமலனே வெங்காவரு மமர ரேறே.
குறுங்கழி நெடில்.
ஆடுற வடியேன் புதுக்குடந் தருநீ ரன்பன்வாய்ப் புனலுக்காமோ
கூடையின் மலர்பித்தையிற்றரு மலரோ கூறுமென் கவியவன்மொழியோ
நாடருமொருநீயிறையெனும்வழக்கைஞானசம்பந்தனாற்றிட்ட 
வேடுரை செய்ய வென்கரத் திருக்கு மீசனே மாசிலா மணியே.   
திருக்காளத்திநாதருலா.
"தூயவிழி யப்பிடச் சோரிபோய் மற்றைவிழி
பாய வளவனுங்கண் பாய்ச்சாமுன்-வாய்திறந்து
கண்ணப்பா வென்றுருகிக் கண்டமறை யோனுடனே
வண்ணப்பா தங்கொடுத்து வாழ்வித்தோன்." 
திருக்காளத்திநாதர் இட்டகாமியமாலை.
தருமந் தவஞ்சற் றறியாத வேடுவன் றன்செருப்பு
மருமுந்து வேணிக் கணிமா மலரவன் வாயுதகந்
திருமஞ் சனப்புனல் பல்லா லவன்மென்று தின்றதசை
யருமந்த போனக மன்றோநங் காளத்தி யப்பருக்கே.
திருக்காளத்திநாதர் கட்டளைக்கலிப்பா.
விண்ணப் பஞ்சிறி யேன்மாற்ற மற்றஃ
    தொன்று மில்லைவெங் கூற்றுவன் சீற்றமே
பண்ணப் பங்கம் வருமுன்ன முன்னிரு
     பாதப் பங்கயப் பாக்கியம் வேண்டுமா
லுண்ணப் பங்குசெய் தூன்சுவை பார்த்தவற்
    றொவ்வொன் றாவெடுத் துண்ணுமென் றேயன்று
கண்ணப் பன்றர வாயூறி நின்றகங்
     காத ராதிருக் காளத்தி வாணனே.
---------------
      கண்ணப்பர் பதிகம்  
(கண்ணப்பர் கலம்பக நூலாசிரியரால் இயற்றப்பட்டது.)
சீருற்ற காளத்தி மலைமருந் தருள்பெறுந்
    திருநெறித் துறைசீர்பெறத்
திசைமுற்று மறவர்க்கெ லாந்தவத் தான்மிகு
    சிறப்பிற் பிறப்புரிமைகொண்
டேருற் றிலங்கிடப் பொத்தப்பி நாட்டினி
    லியம்புடுப் பூர்நாகனா
மிறவுளர்க் கிறைவன்மகிழ் நிறையுளத் தத்தையா
    மியன்மனைவி மணிவயிறுவாய்த்
தாருற்ற சூர்ப்பனகைக் குமரனரு வான்முன்ன
    ரவதரித் தேதிண்ணனா
மணிநாம நணிவாம மணிபோல வேணியாரு
    மன்புசெய வின்பமுடனே
காருற்ற வடிவுகொண் டடலேறெ னத்திறல்கொள்
    காளையாய்த் தொண்டியற்றிக்
கண்ணைப் பறித்துமணி கண்டர்க்கு முன்னமணி
    கண்ணப்ப னேகண்மணியே.
              தனிப்பாடல்
மருப்படிகொண் டெழுமுலையா ரெண்ணிறந்தார்
    வயிற்புக்கு வருந்து நெஞ்சே
கருப்படிக்கா லருந்தியெனக் களித்தெழுபே
    ரன்பினொடுங் கவின்கா ளத்திப்
பொருப்படிக்கீழ்க் கண்ணப்ப ரருள்வேட்டம்
    புரிகாற்பொன் னடியிற் பூண்ட
செருப்படிக்கீழ்ச் சிறுமணலாய்க் கிடவாத
    தீவினைக்கென் செய்கு வோமே.
சேராத வேடன் செருப்பாலடிக்கவுந் தீண்டவுந்தன்
னீர்வா யுமிழவு முச்சிட்டம் போடவு நீண்டசிலைத்
தாரா லடிக்கவுங் கண்ணீர் ததும்பவுந் தாய்தமர்க
ளாரா கிலுமிலை யோதிருக் காளத்தியப்பனுக்கே.
                   ------
                கண்ணப்பர் கலம்பகச் செய்யுள்
                      முதற்குறிப்பு அகராதி 
| செய்யுள் -  பக்கம் | செய்யுள் -  பக்கம் | செய்யுள் -  பக்கம் | 
 | அஃறிணை  -  2 | காற்கண்ண - 28 | பாவியல் சீர் -14 | 
 | அடைப்பரி   - 31 | கானமுது - 1 | புயற்கந்தரவ  -8 | 
 | அடையலர் -14 | கொழுந்தளிர் -30 | புன்மைசேரூ  - 2 | 
 
| அராவிராவு - 31 | கோலமார்கு - 16 | பூமலிசீர்த்திரு - 1 | 
| அரிமதர் - 14 | கோலமிகு - 9 | பெரிதமரர்சி - 7 | 
 | அரியமுகில்  -29 | சரமார்தனு-  5 | பெற்றமூர்ந்தவ - 29 | 
 
 | அருளான்  -26 | சினக்களிற-  22 | பெறுகின்றசீர் - 23 | 
 
 | அழிவிலா  -25 | சீர்பூத்த-  3 | பேறுபெறுதி - 29 | 
 
 | ஆமிதென்றே  -31 | செப்புமரவ -  18 | பொருசமரின் - 15 | 
 
 | ஆரும்பிறை  -23 | செய்யமேனி -  13 | பொருண்மிகும் - 12 | 
 
 | ஆளவுடைக்  - 21 | செய்யவசி  -  9 | போற்றரிதாய - 10 | 
 
 | இடறும்வண்  - 24 | சேரவெனக் -  28 | மணியார்ந்தகா - 23 | 
 
 | இயம்புறு  - 22 | தக்கவெலா   -  31 | மதிவந்தமர்   - 5 | 
 
 | இறைச்சியு  - 6 | தவமல்குசீ  - 18 | மருங்குவான  - 30 | 
 
 | இன்பமர்ந்    - 16 | தனையர்பெறு  -  22 | மற்றோர்பற்   - 10 | 
 
 | இனிதொன்றிய  - 31 | தாமநறைக்கு  -  25 | மன்னுதிண்ண  -16 | 
 
 | இனிநாமறி  - 27 | திண்ணன்பி  - 2 | மனமிகுந்துயர்    - 28 | 
 
 | ஈங்குவெங்    - 17 | திருவிளங்கு    -  28 | மானடுத்தபா   - 9 | 
 
 | ஈரமதிச்    -23 | துணிவோடொ - 30 | மிளிருமேனி -11 | 
 
 | உடையவர்க்   - 26 | தேனார்மலர்ப்   - 29 | மின்னுசெஞ்   - 17 | 
 
 | உததிவரு   - 8 | நண்ணியவன்   -  27 | மீளில்வேடன்     - 12 | 
 
 | உரைக்கின்ற  -  14 | நன்கரனார்  - 11 | முருகமர்வா -24 | 
 
 | உலவுவிழி    - 30 | நன்றுவன  - 25 | முற்றுமன்பு      - 27 | 
 
| உள்ளத்திரு   - 26 | நாட்கமல     -  32 | மேயதமிழ்ச்    - 6 | 
 
 | உள்ளம்வி    -  8 | நரர்தந்தகா - 17 | மேல்கீழ்வர  -18 | 
 
 | உள்ளமன்   - 14 | நிசமுற்றவ    - 24 | மேவித்தழையே- 13 | 
 
| உற்றபெ    - 9 | நிதமிருந்துய  -  6 | யானுரைத்திட   - 29 | 
 
 | ஊசல்வி   -  21 | நீடும்வண்பு  - 5 | வந்தனைசெய்து   -30 | 
 
 | என்பணியார் - 28 | பண்டுவேலைந - 16 | வந்துமயல்கொ  - 30 | 
 
| ஐயநின்   - 10 | பணிவார்பிற  -  11 | வரைவில்லியன்    - 25 | 
 
 | ஒண்மணிநேர் -  13 | பதத்துலி - 6 | வாய்க்கலசமஞ்   -12 | 
 
 | கடாக்களி   - 2 | பதியுடுப்பூர்   - 27 | வார்பெறுபல்வளை - 23 | 
 
| கண்ணப்ப     - 15 | பதுமமலர்க்    -  12 | வாழ்வுடைத்     - 24 | 
 
 | கண்ணனய   -  27 | பரியாகத்       - 25 | வானப்பூங்கோ  -1 | 
 
 | களிதந்தகி     -22 | பன்னும்விண்ண   - 15 | விட்டபொரு    - 31 | 
 
 | காலமிதி   -26 | பார்போற்று   - 12 | வையத்தினல்  -17 | 
 
 ------------------
This file was last last revised on 15 Nov. 2021
Feel free to send corrections to the webmaster.