pm logo

ஸ்ரீ ஜானகிஸ்வயம்வரக்கும்மி
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள்


Sri jAnaki svavayamvarak kummi
by rangkanAyaki ammAL
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2021.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

ஸ்ரீ ஜானகிஸ்வயம்வரக்கும்மி
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள்


Source:
ஸீதா கல்யாணமென்னும் ஸ்ரீ ஜானகிஸ்வயம்வரக்கும்மி.
ஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாளால் இயற்றியது.
திருச்சி லக்ஷ்மி விலாஸ அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1924-u காபிரைட் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது.

ஸ்ரீராதாருக்மணி ஸத்யபாமா ஸமேத ஸ்ரீகிருஷ்ணாய பரப்ரம்மணே நம:
ஸ்ரீஸீதா லக்ஷ்மண பரத சத்ருக்ன ஹனுமத் ஸமேத ஸ்ரீரகுநந்தன பரப்பிரும்மணே நமஹ:

ராகம், பலபீமா மெட்டு.

பல்லவி.
வருவாயே, அருள்வாயே.
வாணி ஸரஸ்வதி தேவியென் வாக்கினில் வரு
சரணங்கள்.

1. திருமகள் ஸீதை திருமணம் பாட
திருவரங்கேசன் திருவடிபணிந்தேன்         வரு

2. கண்மணிஜனகன் பெண்மணி ஸீதை
கல்யாணமி தனைக் களிப்புடன் பாட         வரு

3. அருமைநிறையுமென் ஆசாரியர் திரு
அடிமலர் தொழுதேன் அன்புடன் நாவில்         வரு

4. அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டிய
அனுமானருளால் நினைவினில் நீயே         வரு
-------------

1-வது கட்டம்.
ஸீதையின் திருவவ தாரம்
ராகம் - மாயா கானி மெட்டு.
பல்லவி.
மாநிலம்புகழ்ந்திடும் மிதிலாபுறநகர்
மஹராஜன் ஜனகன்
அனுபல்லவி.
ஆனந்தமாயொரு யாகமும் செய்திட ஆலோசனை புரிந்தார்         மா.
சரணங்கள்.

1. மங்களமான முகூர்த்தமதில் உயர் மாமறையவருடனே
தங்கக்கலப்பையால் தயவுடன் மகிழ்வாய் தரணியையுழு துவந்தார்.         மா

2. பொன்கலப்பைமுனையில் பெட்டி தடுக்கவே பூரித்துமே யெடுத்தார்
என்னிது வென்றார் திறந்தவர் பார்த்தார் இளஞ்சிரு குழந்தைகண்டார்         மா

3. பார்த்தார் மகிழ்வாய் பாலையின் வடிவை பக்ஷமுடன் யெடுத்தார்
சேர்த்தார் மார்பினில் செல்வக்கண்மணியை சித்தமகிழ்ந்துரைத்தார் மா

4. பாற்கடலமுதோ பங்கயம்வளரும் பத்மாஸனிதானோ
போக்கவே யென்கலி தீர்க்கவே திருமகள் பெண்ணாயுதித்தாளென்றார்        மா
----------

2-வது கட்டம்.
ராகம் ராமன் தூதனான மெட்டு.
பல்லவி.
அருமைக்குழந்தை யென்று யெண்ணினார்         மஹா
ராஜன் ஜனகன் துதி பண்ணினார்         அரு.
அனுபல்லவி.
அரண்மனை தனில் வந்து பெருமையுடன் மகிழ்ந்து
தருமபத்தினியிடம் தந்துமிகப்புகழ்ந்து         அரு.
சரணங்கள்.

1. கோதானம் பூதானஞ் செய்திட்டார்         வெகு
கோலாகலத்துடன் தொட்டிலிட்டார்
ஸீதாதேவியென்று செல்வப்பெயருமிட்டு
சித்தங்களித்துகந்து உத்தமர்ஜனகரும்

2. பின்னுஞ் ஜனகருக்கோர் பெண்மணிவந்து
புறந்தனள் ஊர்மிளைக் கண்மணி
மன்னன் ஜனகருக்குத் தம்பிகுஜத்வஜர்க்கு
மாண்டவி சிருதகீர்த்தி மகளிருவருதிக்க         அரு.
----------

3-வது கட்டம்.
ராகம் - மாறனே வருவாய் மெட்டு.
பல்லவி.
தவிழ்ந்தனள் ஸீதை
தந்தை ஜனகர் சிந்தைமகிழ தங்கமேனியொளிகள் திகழத்         த.
சரணங்கள்.

1. கவிழ்ந்த கூந்தலசையவே யிருகண்ணிணைகள் மிறளவே
காரைகண்டி ஹாரமுடனே கங்கணவொலி மின்னவேமிகத்         த.

2. தண்டைபாதஸரமொலிக்கத் தளர்நடை நடந்தனள்
தங்கையருடன் கூடியே விளையாடி யெங்குமோடியழகாய்         த.
----------

4-வது கட்டம்.
ராகம் - ஆவோலுபாவோ மெட்டு.

பல்லவி.
மஹ ராஜாதிராஜன் பெற்ற ஸீதே புவி
தன்னில் உதித் மலர் மாதே

சரணங்கள்.

1. வர்ணபீதாம்பரமுடுத்து வாரணிந்து மைதிலி         அதி
சின்னஞ் சிறியதொரு கண்மணி         யிளங்
கன்னிகைப் பருவநல் பெண்மணி         மஹ


2. கோடி சூர்யக் காந்திமின்ன கோமளாங்கி         ஜானகி
கூடி ஸகிகளுடன் நின்றனள்         வெகு
மேடியதாகவே புக ன்றனள்         மஹ
--------

5-வது கட்டம்.
லங்கபங்ககாலோடா மெட்டு.

பல்லவி.
மாலையிலே பூஞ்சோலையிலே         நாம்
மாமலர் கொய்வோம்         வாராய்
மாமலர்கொய்வோம் வாராய் பூமலர்ச்சோலை பாராய்
மங்கையூர்மிளா தங்கைமாண்டவி நங்கை ஸ்ரீ தகீர்த்திநேராய்.


சரணங்கள்.

1. அடி சேலையொத்தவிழியாளே பசும்பாலையொத்தமொழியாளே
செண்பகம்பாதிரி, புன்னைமல்லிகை செங்கழுநீருடன்ரோஜா மா

2. அடி யன்னமொத்தநடையாளே கொடியின்னலொத்தயிடையாளே
அரளிபிச்சிமருகொன்னைவேர் தவனம் மழகிய பன்னீர் ஜாதி மா
-----------

6-வது கட்டம்.
ராகம் - காக்ஷி கண்காக்ஷியே மெட்டு,

பல்லவி.
ஆடுவோம் பந்தாடுவோம் சிங்காரமண்டபத்தில் ஆ
ஆடிவிளையாடிமிகப்பாடியே கொண்டாடியே பாலாடு

சரணம்.

1. பளிங்கமண்டபந்தனில் பாங்கியர்களே நாடி
பரமசிவன் தனுஸின் பக்கமதில் ஒன்று கூடி
பாத்திபன் எனதய்யர் பார்த்திருக்கின்றார் வாடி
பாலெடுத்து மிக வடிப்போம் நாமும்
பாங்குடனே கையில் பிடிப்போம்
பந்தயம் வைத்து நன்றா யெடுப்போம்
பந்தயம் யென் தந்தையின் முன் விந்தையுடன் வைத்து விளை
---------
7வது கட்டம்

பப்பள பளபளமெட்டு

1. சலசலவென்று பாதலரத்தின் சத்தங்கேழ்க்கவே ஸ்ரீ
ஜானகியும் ஸகியுடனே செண்டடித்தாளே

2. பளபளவென்று பதக்கஹார ஜொதி மின்னவே
பாங்கியுடன் ஸீதை பாடிப் பந்தடித்தாளே.

3. ஓடியோடி மண்டபமெங்கு மோட்டம் பிடித்தவள்
கூடியொன்றாய்த் தங்கையுடன் செண்டடித்தாளே.

4. விருவிருவென்று சுத்திச்சுழன்று பந்தடிக்கவே
விழுந்து பந்து சிவதனுஸில் போயொளிக்கவே.
------------
8-வது கட்டம்.

கள்ளக்கிருஷ்ணன் மெட்டு.
1. பாங்கியரே வேகமோடி பந்தினை நீ சென்று தேடி
பரமன் வில்லினைத் தூக்கி பார்த்தெடுத்து வாபோடி

2. ஸீதை சொல்லைக்கேட்டு ஓடி சிவதனுஸண்டை தேடி
செண்டைக்காணொமென்றுறைத்தாள் சேடியர்கள் ஒன்று கூடி

3. சீக்கிரமாய்ச் சென்று ஸீதை சிவதனுஸையப்போதே
தூக்கியிடக்கைய்யினாலே தூயபந்தையெடுத்தாளே

4. ஜானகியும் வில்லைத்தூக்க ஜனகராஜனும் பார்க்க
ஏனிதென்ன அத்புதமோ யென்று ஸபைதனில் சொல்வார்.
----------
9-வது கட்டம்
அம்மாவுனக்கிதுவும் மெட்டு

பல்லவி.
மஹராஜன் ஸபைதனிலே சொல்வார்
மாணிக்க மண்டபத்தில் மந்திரிமார் முன்பினிலே மஹ

சரணங்கள்.
1. அருபதினாயிரவர் வந்து அசைக்கமுடியாத வில்லை
இடது கையால் தூக்கிப் பந்தை யெடுத்தனளே ஸீதை யென்று மஹ

2. கண்மணி யென் ஜானகிக்கு கணவனாக வந்திடு வோர்
உண்மையுள்ள பலசாலி உத்தமராய் வேண்டுமென்று மஹ

3. பந்தயமாய் வைத்து விட்டேன் பரமசிவன் வில்லிதையான்
வந்தெடுத்து வளைத்தவர்க்கே தந்திடுவேன் பெண்ணை யென்று மஹ

4. கல்யாணப் பத்திரிகை காக்ஷியுடன் அச்சடித்து
எல்லா தேசங்களுக்கும் இப்பொழுது அனுப்புமென்று மஹ
-------------
10-வது கட்டம்
ஸ்ரீ ஸீதா ஸ்வயம்வரப் பத்திரிகையனுப்புதல்.
ராகம், பல்லவி, நலங்கிடுகிறாள் மெட்டு.

மன்னன் ஜனகன் சொல் கேட்டுடனே யவர்
மந்திரிகள் மனமகிழ்ந்தார்.

அனுபல்லவி.
கன்னிகை ஸீதைக்கு கல்யாணமென்றவர்
காதலுடன் மிகப் புகழ்ந்தார் மன்ன

சரணங்கள்.

1. கல்யாணபேரிகை கொட்டிநகரெங்கும்
காக்ஷியுட னலங்கரித்தார்
நல்லவேளை தனில் திருமணவோலை
நன்றாகயெழுதி முடித்தார் மன்ன


2. வில்லை முறித்திடும் வல்லவருக்கெங்கள்
வேந்தன் ஜனகன் தன் பெண்ணை
கல்யாணஞ்செய்து தருவோமென்றதி
காதலோடெழுதி முன்னே மன்ன

3. தேசதேசமுள்ள ராஜராஜர்க்கெல்லாம்

திட்டமோடனுப்பி னாரே
பூசுறர் கோசகர் ராஜரிஷிகள்க்கு
புகழ்ந்தனுப்பியே நேரே மன்ன
-------------
11-வது கட்டம்.
தேசதேசர் ராஜர்கள் வருவது.
ராகம், பல்லவி, அருமையுள்ள காதலியே மெட்டு.


தேசாதிதேசமுள்ள ராஜாதிராஜர் வந்தார்
ஆசையுடன் மிதிலைம ஹாராஜன் மணிமண்டபத்தில் தேசா

சரணங்கள்.

1. அங்க வங்க கலிங்கர்களும் கொங்கர் கொச்சி குடகினரும்
மங்கை ஸீதை சுயம்வரத்தை மகிழ்வுடனே பார்க்கவெண்ணி தேசா

2. தொல்லுலகிலுள்ளவர்கள் யெல்லவருங் கூடிக்கொண்டு
கல்யாணிஜானகியைக கல்யாணஞ் செய்ய வெண்ணி தே

3. மந்தரத்தை யானெடுப்பேன் பந்தினைப் போலாடி நிர்ப்பேன்
இந்தசிவதனுஸெனக்கு யெந்தமூலைகாணுமென்று

4. உத்தமராஞ் ஜெனகருக்குப் புத்தி கொஞ்சம் காணுமென்றார் தே
சொத்தைவில்லை வளைப்பதர்க்கு யெத்தினைபேர் வேணுமென்று தே.
---------------
12 வது கட்டம்.
ஸ்ரீராமன் விச்வாமித்திரர் யாகத்தைக் கார்ப்பது.
ராகம், பல்லவி சூரியன் மறையுமுன்னே மெட்டு


திருவயோத்தி நகரமாளும் தசரதேந்திரன்
தேவி கௌஸல்யைகுமாரன் ராமச்சந்திரன் திரு

சரணங்கள்.

1. அருந்தவமுனி கோசிகர்வந்து அழைத்திடமகிழ்ந்தார்
அந்தரங்கத்தம்பியுடனே அடவியில் நடந்தார் திரு

2. மூடையான தாடகியுயிர் முடிய மாய்த்திட்டார்
கூடச்சென்று கோசிகமுனி வேழ்விகார்த்திட்டார் திரு

3. பாதகன் சுவாகுவினுட பிராணனை மடித்தார்
காதகன் மாரீசனைக் கொண்டு கடலினில் ஒளித்தார் திரு
---------------
13-வது கட்டம்.
ஸ்ரீவிச்வாமித்திரர்க்கு ஸீதை திருமணப்பத்திரிகை வருதல்.
ராகம், கைம்மான மெட்டு.

1. குவலயத்தோர் கொண்டாடும் கோதண்டராகவனும்
தவமுனிவர் வேழ்விதனைத் தம்பியுடன் கார்த்துகந்து

2. வீர ரகுராமச்சந்திரன் விச்வாமித்ரர் ஆச்ரமத்தில்
ஸாரமுள கதைகேட்டு ஸந்தோஷத்துடனிருக்கையிலே

3. உத்தமராம் ஜனகமன்னன் புத்திரி திருமண வைபவத்தின்
பத்திரிகை தன்னையப்போ பாங்குடன் தூதர்கள் கொண்டுவர

4. கண்டுடனே கௌசிகரும் களிப்புடனே யதியானந்தமாய்
கொண்டுவந்துராகவன் முன் கோலாகலமாய்ச் சொல்லுகின்றார்
------------
14-வது கட்டம்.
விச்வாமித்திரர் ஸ்ரீராகவனிடம் சொல்வது
ராகம்- வந்தனந்தந்தேன் மெட்டு

பல்லவி.
ராமச்சந்திரா கேளும் சியா மசுந்திரா

சரணங்கள்.

1. பூமிபுகழுமிதிலை நகர பூபதி ஜனகேந்திரன்
புத்திரி கல்யாணப் பத்திரிகை பாருமே ஸ்ரீராம

2. சிவதனுஸை வளைத்தவர்க்சே ஸீதையென்னும் பெண்ணையே
மகிழ்வுடன் ஜனகரும் திருமணமது செய்து தருகிறார் ஸ்ரீராம

3. வேகமாக முனிவருடனே போகவேணுங்காணுமே
ராகவா தம்பியுடனே நீரும் வருகவேணுமே ஸ்ரீராம

4. விச்வாமித்திரமுனிவர் சொல்லை வீரராமன் கேட்டுடன்
இச்சையாய் மிதிலை நகரம் ரிஷிகளுடன் வந்திட்டார் ஸ்ரீராம
-------------
15-வது கட்டம்.
விச்வாமித்ரர் ஸ்ரீராமலக்ஷமணருடன் மிதிலா நகரம் வருவது.

ராகம் - பல்லவி, ஆனந்தபைரவி.
மிதிலைநகர் நாடி வந்தாரே ஸ்ரீராமச்சந்திரன்
மாமுனிவரைக் கூடிவந்தாரே.

1. மதிமகிழ்ந்து விச்வாமித்ர மாமுனிவர் பின்தொடர்ந்து
அதிமகிழ்வாய்த்தம்பியுடன் ஆனந்தமாய் வழிநடந்து மிதி

2. கல்லைப் பெண்ணாய்ச்செய்துகந்து கௌதமர் தன் பூஜைகொண்டு
வில்லைப்பார்க்க மனிதிலெண்ணி வேந்தன் ஜனகன் பட்டணமாம் மிதி

3. கோசிகரும் ரிஷிகளுடன் கூட்டமதாய் வந்திடவே
ஆசையுடனுபசரித்து ராஜன் ஜனகரெதிரழைக்க மிதி

4. அவரவர்க்குத் தகுந்தபடி அன்புடனே பூஜைசெய்து
கௌரவமாய் ஜனக மன்னன் கௌசிகா முன் சொல்லுகின் றார் மிதி
------------------
16-வது கட்டம்.
ஜனகராஜன் ஸ்ரீராமா லக்ஷமணர்களை யாரென்று
விச்வாமித்ரரிடம் வினவுதல்,
ராகம், பல்லவி, பிலசிதே மதுரழரா மெட்டு,

ராஜகுமாரரிவர் ஆரைய்யா
கோசிகரே புகல்வீர்.

சரணங்கள்.

1. ஆசையுடயயெனக் கறிந்திடச் சொல்லுவீர்
அழகிளஞ்சிருகுமரர் இருவர்கள் ராஜ
2. சியாமள காத்திரர் ஸாரஸநேத்திரர்
க்ஷத்திரியகுலதிலகர் இருவர்கள் ராஜ
3. விமலகெம்பீறர் வெகுஸுகுமாறர்
வீரர்கள் புகழ்தீரர் இருவர்கள் ராஜ
4. சிவதனுஸெடுப்பரோ ஸீதைகைப்பிடிப்பரோ
புவனசுந்திரரூபர் இருவர்கள் ராஜ

------------
17 வது கட்டம்.
ஸ்ரீஜனகராஜருக்கு ஸ்ரீராமலக்ஷமணர் வரலாறு கூரல்,
ராகம், பல்லவி, மறையோரே மெட்டு

ரகு வம்சகுலதிலகன் ராஜன் தசரத தவபாலன் ரகு

அனுபல்லவி.
புகழ்மிகுந்த கௌசல்யா புத்திரனிவன் ஸ்ரீராமச்சந்திரன் ரகு

சரணங்கள்.

1. புமிபுகழ் தசரதர்க்கு புத்திரர் நால்வர்தனில் மூத்தோன்
ராமனுக்கு யிளைய தம்பி லக்ஷமணனிவன் வெகுகுணசீலன்- ரகு
2. அசுரர்பயம் நீங்கியே யான் யாகமும் செய்திடமனதிலெண்ணி
அயோத்தி சென்று தசரதனை அன்புடன் வேண்டியே கூட்டி வந்தேன் - ரகு.
3. தம்பியோடென்பின் வந்தான் தாடகிசுவாகு தனை மடித்தான்
அன்புடன் வேழ்வியைக்கார்த்தான் அகலியின் சாபத்தை தீர்த்துகந்தான்- ரகு

4. சுந்தரி ஸீதை கல்யாண சுயம்வர மண்டபநாடி வந்தான்
வந்திருக்கோம் யிவர்களுடன் வரவழையும் சிவதனுஸை யென்றார்-- ரகு.

-------------
18-வது கட்டம்.
ஸ்ரீ ஜனகராஜன் சிவதனுஸை ஸபையில் வரவழைப்பது.
ராகம் பல்லவி, ராஜனே கேளூமைய்யா மெட்டு.

மன்னன்ஜனகன் மகிழ்ந்தார் சுயம்வர
மண்டபத்திலனைவரே னழைத்துகந்தார் மன்

சரணங்கள்.

1. பொன்னின் மணியாசனத்தில் ராஜர்களைப்
புகழ்ந்து உபசரித்து யிருக்கச் செய்தார்
மன்னுபுகழ் சிவதனுஸை வளைத்தவர்க்கே
மகள் ஸீதையைத் தருவேனென் றுரைத்தார் மன்

2. சிவதனுஸினைப் பலபேர் கிங்கிலியர்
சேர்ந்து ஸபைதனிலே யிழுத்துவைத்தார்
புவனி முழுதும் வஸிக்கும் வெகுஜனங்கள்
பூரித்து மண்டபத்தில் வந்து நிறைந்தார் மன்

3. மாமுனிவர் பலர் சூழ விச்வாமித்ரர்
மகிழ்ந்து ஸ்ரீராகவன் லக்ஷ்மணருடன்
நேமமுடன் ஸபையில் வந்தார் ஜனகரும்
நேசமுடனு பசரித்தழைத் துகந்தார் மன்

4. கோடி சூர்ய னுதித்தாப்போல்
கோதண்டராமனும் வீற்றிருக்கக்
கண்டாளொரு தோழி ஓடியே
களிப்புடன் ஸீதைமுன் வந்துரைத்தாள் மன்
-----------
19-வது கட்டம்.
ஸ்ரீராமலக்ஷ்மணர் அழகைக்கண்டு ஸீதாதேவியிடம் ஸகி சொல்லுதல்.
ராகம் - புள்ளிக்கலபமயில் காவடிச்சிந்து மெட்டு.

1. அரசன் ஜனகன் பெற்ற பெண்ணே எங்கள்
அன்புள்ள ஜானகிக் கண்ணே அதி
அத்புதவடி வழகர் அருந்தவமுனிவர் பின்
பாராய் வந்து நேராய்

2. மன்னவன் தசரத குமாரர் யிந்த
மண்டலம் புகழும் தனிவீரர் மேல்
மாடியின் மேல் ஜன்னலிலே வாடி சென்று பார்த்திடுவோம்
மாதே யெங்கள் ஸீதே.

3. தாதிசொல்லைக் கேட்டுடன் மகிழ்ந்தாள் ஸீதை
தங்கையர்கள் தன்னுடனெழுந்தாள் அந்த
மாதரசிஜானகியும் மாடியின் மேல் வந்து நின்று
பார்த்தாள் மனம் வேர்த்தாள்

4. அந்தரங்கத் தோழியர்கள் கூடி சீதை
அருகினில் நின்றுமே கொண்டாடி யிங்கு
வந்திருக்கும் மன்னரிலுன் சிந்தையிர்க்கிசைந்த வரைப்
பாராய் பதில் கூ றாய்
----------
20-வது கட்டம்.
தோழிகள் ஸபையில் வந்திருக்கும் ராஜர்களை ஸீதைக்குரைக்க
ஸீதை பதில் சொல்வது.
ராகம் -ஆ ஆ. இதுயென்ன மெட்டு.


1. பாராய் நமக்கெதிர் ஜோராயிருப்பவர் பாண்டிய மஹராஜன் ஸீதா
பல்லுவிழுந்து சொல்லுமிழந்தோன் மெல்லுரவாயன் போ போடி

2. படேசிங்களன் பைட்யாதேக்கோ பஞ்சாப்மஹராஜீ ஸீதா
அமாரி மர்க்கடஸமான ரூபி து மகி கியாபோல் சல்சல் ஜாவ்

3. ஜோடியாய் சால்வைபோற்றியிருப்போன் சோள மஹாராஜன் ஸீதா
தாடி வெளுத்து தலையும் நிறைத்தோன் தள்ளுக்கிழவன் போபோடி.

4. உங்குரகங்கண நோடியித்தாரே அங்கராஜனவனு ஸீதா
அங்காவரிகே கண்களொந்துபூ வாகியிதெ நோடே ஸகியா

5. மிசதோனுசைய் பெட்டியுன்னாடே காசிராஜனதடு ஸீதா
காசிவானிகி சைலொக மொண்டி சூஸுகோபோ போவே செலியா

6. மாமுனிகோசகர் பக்கமதில்பார், மரகதவண்ணன் ஹே ஸீதா
சாமளவண்ணன் தாமரைக்கண்ணன் ஸரியோசொல்வாய் நீ ஸீதா

7. தாசரதி ஸ்ரீராமனைப்பார்த்துடன் தலை குனிந்தே மகிழ்வாய் ஸீதா
நேசமிகுந்த ஸகியவள் தன் முன் ஆசையுடன் சொல்வாள் ஸீதா
-------------
21-வது கட்டம்
ஸ்ரீஜானகி ஸ்ரீராகவன் வடிவைக்கண்டு தோழியிடம் சொல்வது
ராகம் - ஜப்பான் ஜிண்டான் மெட்டு.

பல்லவி.
என்ன செய்வேன் ஸகியிவர் தனுஸெப்படி வளைப்பாரடி.

சரணங்கள்.

1. ஆனாலும் சிருவரடி அழகில் ஸுகுமாரரடி
அரசன் பெற்ற அருமைமகன் அரதனுஸைத்திறமையுடன் என்

2. பந்தயமாயிந்தவில்லைத் தந்தைவைத்ததென்ன தொல்லை
பங்கயக்கண்ணன் பச்சைநிறத்தோன் சங்கரன் வில்லை
செங்கைத்தலத்தால் என்

3. எந்தன் மனங்குளிர்ந்திடவே தந்தைமனமகிழ்ந்திடவே
எடுத்துக்கையில் பிடித்து வில்லை ஒடித்து என் கை
பிடித்திட நான் என்

4. என்னையிவர் தெரி வாரோடி எங்கவலை யறிவாரோடி
ஆரடி சொல்வர் அவரிடத்தில் நேரினில் சென்றென்நெஞ்சமதை என்.
-------------
22 வது கட்டம்
தோழி ஸீதைக்கு ஸமாதானங்கூறல்.
ராகம் -ஆயிதென்ன புதுமை மெட்டு.

பல்லவி.
ஆயிதென்ன வருத்தம்
அரசன் ஜனகன் பெற்ற அருமைத்திருமகளே ஆ.

அனுபல்லவி.
தீர ரகு குலகெம்பீரர் சிவதனுஸைத்
திறமுடனே யெடுப்பர் விறைவினிலே யொடிப்பர் ஆ.

சரணம்

1. மனமது களித்திருப்பாய் யிந்த மன்னர் திறமதை
மகிழ்வுடன் பார்த்திருப்பாய்
கனக கமலமுக வனஜ நயனியுன்னை
மனுகுலதிலகரும் மணம்புரிந்து மகிழ்வர் ஆ.
-------------------
23 வது கட்டம்.
ஸீதையின் ஸ்வயம்வர வைபவத்தைக்கேட்டு
லங்கை ராவணன் ஓடிவந்து ஸபையில் சொல்லுதல்.
ராகம் – சிட்டான் குருவி, மெட்டு.

1. ராவணன் ஸபையில் வந்து நின்றான் வெகு
ஆவலாய் ஜனகன் முன் புகன்றான்

2. வில்லு என்னொருவனுக்குக்காணுமோ யிதை
எடுக்கவுமித்தினை பேர் வேணுமோ

3. சுண்டுவிரலா லி தனை யெடுப்பேன் சிறு
துண்டு துண்டாக வொடித்துக்கொடுப்பேன்

4. கைலைமலை தூக்கியவன் நானே என்
கைவலுவைப்பாருமே நீர் தானே

5. என்று சொல்லி வில்லைக் கையிலெடுத்தான் கீழே
இருபது கைகளையுங்கொடுத்தான்

6. வில்லை மல்லுக்கட்டித் தூக்கி விழுந்தான் மார்பில்
விழுந்துமே லழுத்திடப் பறந்தான்

7. பத்துவாயினாலுங் கத்தியழுதான் மிகப்
பார்த்து ஜனகரையுந் தொழுதான்

8. வேந்தன் ஜனகருமிதைத் தெரிந்தார் யிவனை
விடுவிக்க உத்தரவு புரிந்தார்.
-----------
24-வது கட்டம்.
ராவணன் வில்லைத் தூக்கித் தன்மீதில் போட்டுக்கொண்டு
வெட்கங்கொண்டு லங்கைக்கு ஓடிவிடுதல்
ராகம் - பல்லவி, ஆண்டிபண்டாரம் மெட்டு.

ஓடிச்சென்றானே யிலங்கை
கூடி நின்றானே

சரணங்கள்.

1. சேர்ந்து பலகிங்கிலியர் சிவதனுஸைத் தூக்கி விட
சோர்ந்துமிக ராவணனும் சொல்லாமல் நில்லாமல் ஓடி

2. பட்டபெருங்காயங்களைத் தொட்டுக்கையால் தடவிக்கொண்டு
நட்டுத்தலைகவிழ்ந்து நாணி வெகு வேகமுடன் ஓடி

3. முக்கிக்கொண்டு வாயில் ரத்தங் கக்கிக்கொண்டு தான் மிகவும்
துக்கங்கொண்டு வெக்கமுடன் நிக்காமல் ஓடியோடி ஓடி

4. கூட்டிடாமல் யாருந்தன்னைக் கேட்டிடாமல் புண்கள் தனைக்
காட்டிடாமல் மூடிக்கொண்டு ஓட்டமாக ஓடியோடி ஓடி
-----------
25-வது கட்டம்.
ராவணன் லங்கை சென்ற பின்பு ஸ்ரீராகவன் மாடியின் மேல்
நின்ற ஸீதையைக் கண்டு மோகமுறுதல்.

ராகம் தெம்மாங்சிந்து.
பத்துத்தலை ராவணனுங் கத்திலங்கை சென்றபின்பு
சித்திடை நம்ஜானகியும் சேர்ந்துமவள் தங்கையுடன்
மேடியுடன் தான்நடந்து மாடியின்மேல் ஜன்னலண்டை
கோடி சூர்யகாந்திமின்ன நாடிநின்று பார்ப்பதனைக்
கண்டார் மகிழ்வுடன் கல்யாணராமச்சந்திரன்
விண்டார் தம்பியென்னும் விளயலக்ஷ்மணனிடம் கண்
-----------

26-வது கட்டம்.
ஸ்ரீராமர் லக்ஷ்மணனிடம் ஸீதாதேவியை வருணிப்பது.
ராகம் -அம்பா மதுரை மீனாக்ஷி மெட்டு.


1. ஆ தம்பி லக்ஷமணனே பாராய் யிளந்
தைய்யலி வளழகை நேராய்
தங்கநிறமுடையாள் அங்கவடிவுடையாள்
இங்கித நல்விழியாள் யின்ன முதமொழியாள் தம்

2. யிவள் தானோ ஜனகன் தன் குமாரி யென்
மனதிர்க்கிசைந்த ஸுகுமாரி
அன்ன மொத்தநடையாள் மின்னலொத்தயிடையாள்
என்ன மெத்த ஜாடையாய் யென்னமோதான்
பார்க்கிறாள் தம்பி

3. சிறு மங்கை யிந்தப் பெண்மணி ஸீதே யென்
மனதைக் கவர்ந்தன ளிப்போதே
மாடியினில் வந்து மேடியுடன் நின்று
சேடியுடன்கூடி வேடிக்கை பார்க்கிறாள் தம்பி

4. அதி உன்னத வடிவுள்ள மாது யிந்த
உலகத்தில் யிவளைப்போலேது
உத்தமியிம்மானை சித்தமதில் யானே
பத்தினியாய்த்தானே பதித்திருக்கேனே தம்பி
---------------

27-வது கட்டம்
ஜனகராஜன் மந்திரிகள் சபையில் வந்திருக்கும் மன்னர்களை
வில் வளைக்கும்படி சொல்ல அவர்கள் பதில் சொல்வது

ராகம்- புவனசுந்திரா மெட்டு

1. சிவதனுஸெடுப்பீர் ஸிந்துராஜனே
ஸீதைதனை நீர்மணம் புரிந்திடலாம்
கவலையென்ன யானிருக்க யெவர்வரவேணும்
காலில் முள்ளுதைத்துக் கடுக்குதுங்காணும்.

2. மகதராஜனு மஹிபசூரனு
சிவனுசாபமு சொல்பநோடிரீ
ஜனகரவரு ஹெதரபந்து நனகுஹேளீரோ
ஸீதா சிக்கம்ம யேனுமாடிரோ.

3. அங்கராஜனே யிங்கே வாருமே
சங்கரதனுஸை சற்றுபாருமே
இங்கில் யானும் வருகும்வேளை சகுனமில்லையே
ஏதோ வில்லெடுக்க மனமும் வல்லையே

4. போஜராஜுமீ ராசதோனுயீ
யீசசாபமு ஸூசுகோவலா
யீசமயமு மாகுபெண்டிலி யரஸரங்காதே
யேமோஜாத முலோ குருபலம் லேதே.
--------------

28-வது கட்டம்
எல்லா அரசர்களும் ஒன்றுகூடி ஸபையில் சொல்வது
ராகம்- அய்யா முருகேசா மெட்டு

1. வந்திருந்த ராஜரெல்லாம் வகைவகையாய்ப் போக்குச்சொல்லி
மந்திரியைக் கூவியப்போ மன்னரெல்லாஞ் சொல்லுகிறார்
நல்லது போங்காணும்
வில்லெதற்கு வேணும்

2. கல்யாணமென்று சொல்லி கடிதமதைத்தானெழுதி
எல்லவறைந்தானழைத்து யேதுக்கிந்த வம்பு செய்தீர் நல்ல

3. தொட்டுவிட்டால் தோள் கடுக்கும் தூக்கிவிட்டால் மாறடைக்கும்
எட்டியிதைத் தான் வளைக்க யீசனுக்கும் கை நடுங்கும் நல்ல
4. சொல்லுமுங்கள் பெண்வேண்டாம் தோர்ப்புடனே ஜயம் வேண்டாம்
அல்லதெங்கள் உயிரிருந்தால் ஆயிரம் பெண் தேடிக்கொள்வோம் நல்ல
-------------

29-வது கட்டம்
ஸ்ரீராகவனை விச்வாமித்திரர் வில்லெடுக்கும்படி சொல்வது.

கும்மி - மெட்டு.

1. என்று சொல்லி வந்த மன்னரெல்லாம்
யெழுந்திருந்தவர் போகக்கண்டு
மந்த ஹாஸத்துடன் ராகவனும்
மாமுனிவரை நோக்கலுற்றார்

2. கோசலை பாலகன் கண்ணிணையின்
குறிப்பை நன்றாய்த்தானறிந்து
ஆசையுடனந்த விச்வாமித்திரர்
ஆனந்தமாகவே சொல்லுகின்றார்

3. மங்களமுண்டாகு முந்தனுக்கு
மரகதவண்ணா ராமச்சந்திரா
சங்கரன் வில்லிதை நீருமெடுத்திப்போ
சந்தோஷமாக வளையுமென்றார்

4. தவமுனியவர் சொன்ன பின்பு
தாசரதியந்த ராகவனும்
மகிழ்வுடனே தனுஸினருகினில்
மத்தகஜம் போல் நடந்து வந்தார்.
-----------

30-வது கட்டம்
ஸ்ரீராமர் வில்லை. எடுப்பது.
ராகம் ஸுநுஜாவே மெட்டு.

1. பச்சை நிறத்தொளி வீச         அங்கு
பார்த்தவர் மனங்கூச         அதி
பாலசுந்திர ராமச்சந்திர பார்த்திபேந்திரனெழுந்தார்

2. கோடி திவாகரன் கூடிப்         பெருங்
கூட்டமதாகவே நாடி         இந்தக்
கொலுமண்டபத்தில் வந்ததென்று கொண்டாடினர் பலர் கூடி

3. மாணிக்கமண்டபந் தன்னில் அந்த
மன்னாதி மன்னர்கள் முன்னில்         உயர்
மத்தகஜத்தைப்போல, நடந்து உத்தமனங்கு வந்தார்

4. வேந்தன் ஜனகன் பார்க்க         வேரு
வேந்தர்கள் மனம் வோக்க
விஜயகோதண்டராமன் மலர் போல் வில்லைக்கரத்திலெடுத்தார்.
-----------

31-வது கட்டம்
ஸ்ரீராமர் வில் ஓடிப்பது
ராகம் - ஸொந்த சகுனிமாமா மெட்டு.

1. வில்லைக்கையில் தூக்கினார் வீரதீரராகவன்
வேந்தன் ஜனகன் காணவே வேறுமன்னர் நாணவே வில்

2. தனுஸினைவளைத்திட்டார் தரணிமன்னர் தலையுடன்
நாணதையிழுத்திட்டார் நங்கை ஸீதைமனதுடன்        வில்

3. விரைவினிலே யிழுக்கவே வில்லிரண்டாயொடியவே
புவனி தன்னில் விழுகவே பெரியசத்தங்கேழ்க்கவே         வில்

4. மோகங்கொண்டு மன்னர்கள் மூர்ச்சையாகிவிழுகவே
வேகமாகவிண்ணவர் புஷ்பமாரி பொழியவே         வில்

5. மன்னன் ஜனகராஜனும் மனமகிழ்ந்து நாடவே
கன்னிஸீதையோடிவந்து புஷ்பமாலை போடவே        வில்

6. அஷ்டதேச வாத்தியங்கள் அழகதாய்முழங்கவே
எட்டுதிக்கும் புகழவே யெல்லவரும் மகிழவே        வில்
-------------

32 வது கட்டம்.
ஸ்ரீஜனகராஜன் தசரத மஹாராஜரை உபசரித்து அழைத்து வருவது.
ராகம் நின்றதொரு பாலகனை மெட்டு.


1. மன்னன் ஜனகராஜன் மகிழ்வுடன் மந்திரிகள் தனையனுப்பி
உன்னதமாய் மிகப்புகழ்ந்து தசரதரை உபசரித்தழைத்து வந்தார்.

2. பரதசத்ருக்னருடன் பக்ஷமுள்ள பாரியர் தங்களுடன்
அளவற்ற சேனையுடன் மீதிலைநகர் ஆசையுடன் வந்து கந்தார்.

3. எதிரழைத்துபசரித்து தசரதரை யேற்றமுள்ள ஜனகரப்போ
மதிமகிழ்ந்தன்புடனே தசரதர்முன் மங்களமாய்ச் சொல்லுகின்றார்.

4. வில்லினையு முறித்துவிட்டார் உம்முடையவிஜயகோதண்டராமன்
கல்யாணி ஜானகியை சுபதினத்தில் கல்யாணம் செய்து கொள்வார்.

5. எந்தனுடபுத்திரியாம் ஊர்மிளையை லக்ஷ்மணர்க்கு தந்திடுவேன்
மந்தஹாஸமதிவதனி தம்பியின் பெண் மாண்டவி ச்ருதகீர்த்தியை

6. பரதசத்ருக்னருக்கும் திருமணம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று
பெருமையாய் தசரதர் முன் ஜனகரும் பிரியமாய் வேண்டி நின்றார்.

7. மங்கள வசனங்கேட்டு தசரதர் மனமிக மகிழ்ந்துகொண்டு
எங்களுக்குமுங்களுக்கும் ஸம்மந்தம் இசைந்ததென் பாக்யமென்றார்.

8. கோசிகர் வஸிஷ்டருடன் ஜாபாலி காசிபர் ஸதானந்தரும்
ஆசிகளைக்கூறிக்கொண்டு சோபன அக்ஷதைகள் வழங்கிக் கொண்டார்.
--------------

33-வது கட்டம்.
ஸ்ரீராமலக்ஷமணபரத சத்ருக்னரை ஜனகராஜன் எதிரழைத்துவருவது.
பாகம்- தாரதில்லானா மெட்டு.

பல்லவி

1. மன்னவன் ஜனகரும் மன மகிழ்ந்தார்
மாப்பிள்ளைகளை யெதிரழைத்து வந்தார்
பொன்னகரைப்பழிக்கும் நன்னகர் மிதிலையில்
மன்னிய வீதிகள் தன்னிலுகந்து
உன்னிதவா த்யமுழங்கிடவே உம்பர்கள் முனிவர் கொண்டாடிடவே         மன்

2. அதிபதி தசரதர் ஆனந்திக்க
அகிலத்தோரனை வரும் மனங்களிக்க
ரதகஜ துரகபதாதிகள் கூடவே
மதி தலராஜர்கள் மகிழ்ந்து கொண்டாடவே
துதிபெருமிதிலையின் வீதியிலே விதவிதவாத்யமுழங்கிடவே         மன்

3. மத்தாப்பு வாணங்கள் துலங்கிவர
மகத்துக்களனைவரும் நெருங்கிவர
பத்தினிகௌசலை பெற்றகுமாரனை
பார்புகழ் தீரனை ஸ்ரீரகுவீரனை
உத்தமமான முகூர்த்தமதில் உல்லாசத்துடனுபசரித்து         மன்

4. பூரித்து விண்ணவர் மனங்களிக்க
பூமலர்மாரிகள் மகிழ்ந்திறைக்க
நேரிழைமாதர் அரம்பையராடவே
நேர்த்தியதாகவே கின்னரர் பாடவே
ஆரத்திகொண்டு சுமங்கலிகள் அழகுடன் பாடியேசுற்றிவர        மன்
---------------

34-வது கட்டம்.
மிதிலையிலுள்ளவர் ஸ்ரீராகவனை வருணிப்பது.
ராகம்- தன்முகத்துச் சுட்டி மெட்டு.


1. பூமிபுகழும் மிதிலைத்தெருக்களில் கூடி         ஸ்ரீ
ராமலக்ஷ்மண பரதசத்ருக்னரை நாடி

2. கூட்டங்கூட்டமா யோட்டமாயோடிவந்தார்        வீர
கோதண்டராமனைக்கண்டுமகிழ்ந்து புகழ்ந்தார்.

3. ஸ்ரீகள் புமான்களனைவருந் தன்னை மறந்தார்        நம்
ஸ்ரீராமச்சந்திரன் ஸேர்வையைத்தேடிப்பறந்தார்.

4. பட்டத்துராணிகள் பிரபுக்கள் தேவிகள் பார்த்தார் உயர்
பச்சைவண்ணனிடம் தங்கள் மனந்தனை சேர்த்தார்

5. பாரடி பாரடி பாங்கியரேயடி யென்றாள்         சிலர்
யாரடி கூரடி யென்றுமே மூர்ச்சித்து நின்றாள்.

6. ஆழிவண்ணனோ அனங்கனோ அன்பனோ யேடி அடி
தோழியே சீக்கிரமோடியே கூடியே         வாடி.
---------------

35-வது கட்டம்.
மிதிலையிலுள்ள பெண்கள் சொல்வது..
பாகம் - கேசவழராசேஸ்ரீ மெட்டு.

பல்லவி.
தோழியரே யோடியிங்கே வாருங்கோடி சேருங்கோடி.
துரைஜனகர் மாப்பிள்ளையை மகிழ்வுடனே பாருங்கோடி        தோ

சரணங்கள்.

1. ஆழிநிற வண்ணனடி அம்புயம் போல் கண்ணனடி
அழகிய நம்ஜானகிக்கு ஆசை மணவாளனடி தோ

2. புகழ்மிகுந்த கௌசலையின் புத்திரராம் உத்தமராம்
அகமகிழ்ந்து கௌசிகரின் யாகமதைக் காத்தவராம்        தோ

3. கல்லையும் பெண்ணாக்கிவைத்த கண்ணியராம் புண்ணியராம்
வில்லையும் துண்டாய்முறித்த வீரதீர ராகவராம்         தோ

4. மன்னனிந்த ராகவனை மைதலியும் மாலையிட
என்ன புண்யஞ்செய்தனளோ எல்லவரும் கூருங்கோடி        தோ
------------

36-வது கட்டம்
ஸ்ரீஸீதாதேவியும் ராகவனும் மாலைமாற்றுவது.

ராகம் -பல்லவி ஆயர்மனையில் மெட்டு.

மாலைசாற்றி மாலைமாற்றி மகிழ்ந்தனள் ஸீதை பூமலர்

அனுபல்லவி.
பாலையுவதி ஜானகிவெகு பாங்குடன் ரகுராகவனுடன்         மா

சரணங்கள்.

1. ஜாதிமல்லிகை முல்லைரோஜா சண்பகம் வகுளம்
சம்பங்கி குருவேர் கொழுந்துடன் சாமந்தி துளவம்
பாதிரிமரு புன்னையரளி பன்னீர்சுகந்த பரிமளமலர்         மா

2. அஷ்டதேச வாத்யமுழங்க அமரர் கொண்டாட
அகிலஜனங்கள் யாவரும்வந்து அங்கினில் கூட
இஷ்டமுடைய தசரதருடன் ராஜன் ஜனகர் மகிழ்ந்து நாட        மா.
------------

37-வது கட்டம்.
ஊஞ்சல் ராகம் பைரவி.


1. நவரத்னக்கால் நிறைந்த பந்தல் நீழல்
நல் வைரமணியிழைத்த ஊஞ்சல்மீதே
புவனிதனிலவதரிதத மங்கை ஸீதை
புகழ்பெரும் ஸ்ரீராகவனோ டாடிரூஞ்சல்

2. இந்திரனும் சசியுமொரு வடந்தொட்டாட்ட
ஈசனுட னுமையுமொரு வடந்தொட்டாட்ட
சந்திரனும் ரவியும் வெண்சாமறைகள் போட
ஜானகியும் ராமனுடன் ஆடி ரூஞ்சல்

3. மன்மதனும் ரதியுமொரு வடந்தொட்டாட்ட
மலரயனும் வாணியுமோர் வடந்தொட்டாட்ட
இன்னிசையாய் மாதர் பலர் கீதம்பாட
ரகுநாதன் ஸீதையுடன் ஆடிரூஞ்சல்

4. கௌசலையும் தசரதரும் குளிர்ந்து நோக்க
களிப்புடனே ஜனகமன்னன் மகிழ்ந்து பார்க்க
கோசிகரும் வசிஷ்டருங்கொண்டாடி யேர்க்க
காகுஸ்தன் மைதிலியோடாடி ரூஞ்சல்.
------------

38-வது கட்டம்.

ஸதாரண லாலி.

1. கந்தமலர் மீதுறையுங் கட்டழகி ஸீதை
இந்து முகசுந்திர ஸ்ரீராமன் மகிழ் கோதை         லாலி

2. கௌஸலை குமாரனே ஓ கல்யாண ராமா
கௌசிகரின் வேள்விதனை காத்த பரந்தமா         லாலி

3. கல்லையும் பெண்ணாக்கிவைத்த கமலமலர்ப்பாதா
தொல்லுலகில் கீர்த்திமிகும் துரையோதகாதா         லாலி

4. சிவதனுஸை முறித்து கந்த சீர்மிகுந்த தோளா
புவனிபுகழ் ஜனகன் பெற்ற வீதை மணவாளா         லாலி.
------------

39-வது கட்டம்

லாலி.


1. அவனியலுதித்த மானே         ஸ்ரீராகவன்
முகமலர் பொருந்து தேனே
அகவினையில் நொந்து நானே        போற்றினேன்
அருள் செய்யிகழாமல் தானே.

2. ஜனகேந்திரன் பெற்ற ஸீதே        ரகுவீரன்
சித்தமதுகந்த கோதே
உனதடுமை நான் தப்பாதே எந்தனை
ஒருபோதுங் கைவிடாதே.

40-வது கட்டம்.

பல்லவி
லாலி ஸ்ரீராமச்சந்திர லாலி ரகு வரேந்திரா.

சரணங்கள்.

1. லாலி தசரதேந்திரபுத்ரா லாலிஸுகுணசீலா மித்ரா
லாலி ஜானகி களத்ரா லாலி ராமபத்ரா         லாலி

2. லாலி நீலமேகசியாமா லாலி ரவிகுலாப்தி ஸோமா
லாலி ஸ்ரீரகு ராமராமா லாலி ஸ்ரீபரந்தாமா         லாலி
---------------

41-வது கட்டம்
ராகம் - கல்யாணி தேவிமீனாக்ஷி மெட்டு.
பல்லவி
தேவீ ஸ்ரீ ஜானகி தன்னைத் திருமணம்புரிந்தார் ஸ்ரீ

அனுபல்லவி.
பாவனசுகுமாரசுந்திரன் பச்சைமேனி ராமச்சந்திரன்
பாங்காய் சுபவேளை தனிலே பார்த்திபன் ஜனகேந்திரன் புதல்வி
கோகில மிருதுஸுரவாணி
கோமள தருணி கல்யாணி
ஆகம வினுத புராணி
அற்புத குண கண பூஷணி         தேவீ ஸ்ரீ

சரணங்கள்.

1. அகிலதேசவாத்தியம் முழங்க அந்தணர்கள் நெருங்க
மகிழ்வாகவே வஸிஷ்டரும் சுபமந்திரம் வழங்க
அகமகிழ்வுடன் தசரதர் வெகு ஆனந்தமாய்க் களிக்க
அன்பாகவே பூரிதக்ஷிணை ஆசையோடனை வருக்குமளிக்க
பூமகளாகிய ஸீதையை
பூபதியாகிய ஜனகரும்
தாமரைக்கண்ணன் ஸ்ரீராமருக்கு
தாரை நீர் வார்த்து மகிழ்ந்திட         தேவீ ஸ்ரீ

2. அம்பரந்தனில் தேவர்புகழ அயனரன் கண்டுமகிழ
ஆனந்தமாய் கந்தருவர்கள் புஷ்பமாரிபொழிய
உம்பர் முனிவர் திகழ்ந்துகூட தும்புருநார தரும் பாட
ரம்பாதியர் வினயமோடதி ஸம்பிரபமாய் நடனமாட
ஜகமதிலுள்ளவர் கூட
ஜானகி ராமனை நாட
மகிழ்வுடன் கூடிக்கொண்டாட
மங்கையர் சோபனம் பாட        தேவீ ஸ்ரீ
------------

42 வது கட்டம்.
ராகம்-கோபுர தரிசனம் மெட்டு.

பல்லவி ஸ்ரீராகம்,
ஸ்ரீங்கார அற்புதமென்னா சொல்வேன்
ஸீதா ராமர்கல்யாண வைபவமதின்         ஸ்ரீ

சரணங்கள்.

1. மங்கள மாகவே குஜத்வஜர் பெண்மணி
மாண்டவியை பரதர் மணம்புரிந்து மகிழ்ந்த         ஸ்ரீ

2. பக்ஷமதாகவே யூர்மிளை தேவீயைப்
பாங்குடன் லக்ஷ்மணர் பாணிக்கிரஹணம் செய்த ஸ்ரீ

3. சுந்திரவதி ஸ்ரீதகீர்த்தியை சத்ருக்னர்
விந்தைய தாகவே விவாஹம் புரிந்திட்ட         ஸ்ரீ

4. அழகிய தாம்பூலகந்த மணிந்ததி
ஆனந்தமாகவே யகிலரும் புகழ்ந்திட்ட         ஸ்ரீ
-----------

43-வது கட்டம்.
ராகம்-சங்கராபரணம்.

பல்லவி.

ஸீதா கல்யாணம் வைபவமே ஸீதாக

சரணங்கள்.


1. வேதாந்தவிதிவினுத விமல கல்யாணி
வீரகோதண்டஸ்ரீ ரகுவீர ராணி        ஸீதா
2. ஜகதேக காரணி ஜலஜ தள நயனி
ஜனகராஜகுமாரி ஸ்ரீராமபத்தினி        ஸீதா.
------------

44-வது கட்டம்.
ராகம்- மஜதாரி யென்னும் ஹிந்துஸ்தானி மெட்டு,

பல்லவி.
ரகுவீரா கம்பீரா நலுகிடரா        ரகு.

சரணங்கள்.

1. பிகுவதேரா ராரா தீரா பிலுவபிலுவ ஸுந்திரா
பீரியகாந்தாலேச்சிரா நா பீரீயகாந்தாலேச்சிரா        ரகு

2. பார்த்திபேந்திரா ராமச்சந்திரா பத்மவதனா பாவனா
பிராணநாதா லேச்சிரா நா பிராணநாதாலேச்சிரா.         ரகு
--------------

45-வது கட்டம்.

ராகம்-பல்லவி, ஸஹானா
பச்சைவண்ணனே யெந்தன் பிராணபதியேயுந்தன்
பாதத்தில் நலங்கிடுறேன்.

அனுபல்லவி.
அச்சுதனேயெந்தன் அந்தரங்கதுரையே
அரனயன் பணிந்திடும் அமலபொற்தாளனே         பச்சை

சரணம்.

1. கௌளலைபாலனே கதிர் குலஸோமனே
கல்யாண ராகவனே
கௌசிகன் வேழ்வியைக் கார்த்த கம்பீரனே
கல்லைப் பெண்ணாக்கிய கமலப்பொற்பாதனே        பச்சை
--------------

46-வது கட்டம்
ராகம் - கலிலோ மெட்டு.

பல்லவி.

மனமோஹன ஸுந்திர ராமா
மணமிகும் கந்தணம் பூசி மகிழுவேன்         மன

அனுபல்லவி

புனுகத்தர் பன்னீர் பரிமளம் வீச
பூசுவேன் ஆசையாய் நேசனே பாருமென்        மன

சரணம்.

1. ரகுவம்சகுலாதிப சுந்திர தருணா நின் திருமுடியில்
ஸொகுஸாகவே மல்விகைஜாதி ஸுகந்தமாமலர்
சூட்டுவேன் பாருமென்
------------

47-வது கட்டம்.
ராகம் - எஜிபன மோஹன மேட்டு,

பல்லவி.
ஜானகிதேவி வெண்சாமரம் வீசினாள்
ஆனந்தமாகவே அம்புயகரத்தினால்

சரணங்கள்.

1. கோஸலை பாலகன் கோமள மேனியில்
வாசனை வீசிடவே வெட்டிவேர் விசிறியால்         ஜா

2. கங்கணம் வங்கியின் காந்திகள் மின்னவே
சிங்காரமாகவே ஸ்ரீரகுநாதன் முன்பாய்         ஜா
-----------

48 வது கட்டம்.
ராகம் - பாலாபிஷேகம் மெட்டு,

பல்லவி
கண்ணாடியாருமே கல்யாணராமனே
காகுஸ்தனே கருணாகரனே
மண்ணவர் விண்ணவர்யெண்ணியே நண்ணுக
மாமலர்க் கண்ணா சாமளவண்ணா கண்ணாடி

சரணம்

1. வீராதி வீரா ஓ தீரா கெம்பீரா
வேந்தா சிகாமணியே சுகுமாரா
கல்லைப் பெண்ணாக்கிய கமலபொற்பாதா
வில்லைத்துண்டாக்கிய விமலப்பிரக்யாதா
பூமா நேமா ஸ்ரீபரந்தாமா
கோமள சுந்திர ஸ்ரீரகுராமா         கண்ணாடி
----------

49-வது கட்டம்.
ராகம் பத்யம் ஆனந்தபைரவி.

பார்க்கடல் தன்னிலே பாம்பணை மீதிலே
பள்ளிகொள்கின்ற ஸுகமதை மறந்தீர்
தீர்க்கவே தேவர்குறை போக்கவே புவனியில்
தசரதர் மைந்தனாய் வந்துதித்தீர்
கார்க்கடல்வண்ணனே கௌசிகர்வேழ்வியை
கானகந்தனில் வந்து பார்த்துகந்தீர்
கருணையுடன் மிதிலைநகர் நாடிவந்தீர்
கல்லையும் பெண்ணாக்கி மனமகிழ்ந்தீர்
அரதனுஸை நொடியினிலொடித்தெறிந்தீர்
அன்புடைய நாதனே அடிமலர் தண்டநிடுரேன்.
---------

50-வது கட்டம்.
மங்களம்.

தசரதபாலனே தீனானு கூலனே
திசையெங்கும் புகழ்பெற்ற தயசீலனே
சசிரவிநயனனே லாரஸவ தனனே
ஸத்குண விஜயஸ்ரீ ஸாகேதராமா
மங்களம் ஜயவிஜய ஸ்ரீராமா
மங்களம்.
-----------

51-வது கட்டம்.

பல்லவி.
நீரஜ தளநயனி நேத்தியாய் நலங்கிடுவேன்
நித்யமங்கள கல்யாணி         நீரஜ.

சரணங்கள்.

1. பார்தனில் வந்துதித்த பத்தினியே உத்தமியே
பார்த்திபன் ஜனகன் பெற்ற பெண்ணின்மணியே
காரணியே பூரணியே கண்மணியே யானுனக்கு
காதலாய் நலங்கிடுவேன் பாதமலர் தந்திடுவாய்        நீரஜ

2. சந்தணம் பூசுனேனெந்தன் ஜானகியுனக்கழகாய்
சம்பங்கி மல்லிகைமுல்லை மலர் சூட்டுவேன்
அந்தமுடன் பொட்டிடுவேன் அற்புதக்கண்ணாடியிதில்
அன்னநடைமின்னரசே யுன்னழகைப்பார்த்தருளென்        நீர
------------

52-வது கட்டம்.
பத்யம் ராகம் - எதுகுல காம்போதி.

ஜனகராஜகுமாரி        ஸரஸகுண சுந்தரி
ஸிங்கார பரிபூர்ண        சந்திரவதனி
கனகமயபூஷணி         யமிருதமிருதுபாஷணி
கருணாகடாக்ஷி         கமலநயனி
வனஜமலர் வாஸிநீ        வைபோககாரணி
வாஸவார்ச்சிதவந்திய         விமலசரணி
உனதுஸௌந்தர்யமதை நாடிமிதிலைவந்தேன்
உள்ள மகிழ்வுடன் சிவதனுஸொடித்துகந்தேன்
எனதுகண்மணி தாம்பூல புஷ்பம் தந்தேன்
இன்பமுடன் வாங்குவாய் அன்புடைய அமிருதரஸமே
-------------

53-வது கட்டம்.
ராகம் - கேதாரம் பல்லவி வாஸவன் முன் மெட்டு.

பந்துகந்து மகிழ்ந்து ஆடினாள்
பச்சைநிரவண்ணனுடன் பிச்சிமுல்லைமல்லிகைப்பூப்         பந்து

சரணங்கள்

1. கோமளமுடைய தாமரைவளர் பூ
மாதுஜனகன் பெண் ஸீதை மகிழ்வுடன்
பூமி புகழ்ந்திடும் ஸாமி ஸ்ரீரகு
ராமனுட னதிப்பிரேமையுடன் மலர்ப்         பந்து

2. பொன்னின் நிறவொளி மின்னுபிடியிடை
அன்னமெனும் நடைக் கன்னல்மொழியாள்
மன்னுமணிமுடி துன்னும் ரவிகுல
மன்னன் ராகவன் தன்னுடனே மலர்ப்         பந்து
----------

54-வது கட்டம்.
மங்களம் ராகம்-நாதபிந்து, திருப்புகழ் மெட்டு.


1. மங்களம் ஜய ஸார்வ பௌமனே.
மங்களம் ஸீதாபி ராமனே
மங்களம் சுபமங்களம் ஜய ரகு ராமா.

2. மங்களம் ஜானகி ஸமேதனே
மங்களம் ரகுவம்ச நாதனே
மங்களம் ஜயமங்களம் சுப வர நாமா

3. மங்களம் கோஸலை குமாரனே
மங்களம் குணசீல தீரனே
மங்களம் ஜய ஜானகி மனோஹர ஸோமா

4. ரங்கநகர நிவாஸனே ஸ்ரீ
ரங்கநாயகி நேசனே சுப
மங்களம் ரங்கராஜனே யருள் பரந்தாமா
-----------

55-வது கட்டம்.
கதவுதிறக்கிற பாட்டு.
கண்ணிகள்.


1. கட்டழகியே யெந்தன் காதலி ஜானகியே
எட்ட நிற்பதென்னடி பெண்ணேயெந்தன்
கிட்டவந்து சொல்லடி கண்ணே

2. கிட்டவந் துறைக்கயான் கமல. நவரத்தினக்
கல்லிழைத்த நகைகள், தானே வெகு
காக்ஷியோடணிந்திருக்கேனே

3. அணிந்தபணிகளுடன் அருகில் வராமல் நிர்க்கும்
ஆலோசனையென்ன சொல்வாயே யானும்
அறிந்துகொள்ளவே ஸீதை நீயே

4. அறிவேன் கருங்கல் உமதடி மலர் தூளிபட்டு
அழகிய பெண்ணதாய்ப் போச்சுதே யெந்தன்
ஆபரணம் ரத்னக்கல் லாச்சுதே

5. ரத்ன நகையணிந்து பர்த்தாவிடத்தில் வந்தால்
அத்தனையும் பெண்ணுருவாகுமோ உந்தன்
புத்தியிலுமிதெண்ணப் போகுமோ

6. எண்ணமுரைத்திடுவேன் யெந்தனைவிட்டு
பெண்மணிகளை நீருங்காணுமே நெஞ்சில்
எண்ணாமலிருந்திட வேணுமே

7. எண்ணுவேனொரு கண்ணை ராஜன் ஜனகன் பெண்ணை
யின்பமுடைய ஒரு மாதையே நெஞ்சில்
எந்தப் பொழுதுமடி ஸீதையே

8. ஸீதை யடியவள் யான் செய்தபிழை பொறுத்து
சிந்தை மகிழ்ந்தருளும் நாதனே யும்மை
ஸேவித்தேன் கமல பொற்பாதனே.
-----------

56வது கட்டம்
ராகம்- பூபாளம், உதயராகம்


1. தேவானுகூலா ஓ தேவி கோசலைபாலா
தசரத ராமனே யெழுந்திரும்
ஆவலோடழைத்திட்ட கோசிகன் வேள்வியை
அன்புடன் காத்தோனே யெழுந்திரும்

2. கல்லைப் பெண்ணாக்கிய கமலபொற்பாதனே
கல்யாணராகவா யெழுந்திரும்
வில்லொடித்து மிதிலை வேந்தன் பெண் ஸீதையை
விவாஹஞ்செய்துகந்தோனே யெழுந்திரும்

3. அட்டகாசமாய் வந்த பரசுராமனை யோட்டி
அயோத்திவந்த துரையே யெழுந்திரும்
தட்டாமல் தந்தைமொழி தம்பிஸீதையுடனே
தண்டகாரண்யம் சென்றாயெழுந்திரும்

4. சித்த மகிழ்வுடனே குகனைத் தோழமைகொண்டு
சித்ரகூடமே வந்தாயெழுந்திரும்
பக்தியுடனழைத்த பரதர்க்கு மகிழ்வுடன்
பாதுகமளித்தோனே யெழுந்திரும்.

5. மூர்க்கன் விராதனைக் கொன்ற சூர்ப்பணகையின்
மூக்கறிந்துகந்தோனே யெழுந்திரும்
காக்கவந்தெதிர்த்திட்ட கரதூஷணை ஜயித்து
கபந்தனை வதைத்தோனே யெழுந்திரும்

6. வந்தமாருதியுடன் சென்று சுக்ரீவனுக்காய்
வாலியைக்கொன்றவனே யெழுந்திரும்
அந்தரங்கத்துடனே அனுமானை தூதாக
அனுப்பி மகிழ்ந்தவனே யெழுந்திரும்

7. அரக்கன் விபீஷணர்க் கபயங்கொடுத்து கடல்
அணையாலக்கரை சென்றா யெழுந்திரும்
வருக்கத்துடனே வந்து யெதிர்த்த இராவணனைத்தன்
வம்சத்தோடழித்திட்டா யெழுந்திரும்.

8. தசமுகனை வதைத்து தேவி ஜானகியுடன்
திருவுளமகிழ்ந்தோனே யெழுந்திரும்
திசையெங்கும் புகழவே புஷ்பகமேறியே
திருவயோத்தியில் வந்தா யெழுந்திரும்

9. மன்னுபுகழ் பரதன் மனமிக மகிழ்ந்திட
மகுடாபிஷேகங்கொண்டாயெழுந்திரும்
உன்னருள் பெற நாடுமடியாள் ரங்கநாயகிக்
குதவி யருள வேண்டு மெழுந்திரும்.

10. ஸாகேதராமனே ஸ்ரீபரந்தாமனே
ஜானகி நேசனே யெழுந்திரும்
ஆகமவினு தனே அணியரங்கேசனே
அழகிய மணவாளா யெழுந்திரும்.

ஸ்ரீஸீதா கல்யாணமென்னும் ஜானகி ஸ்வயம்வரக் கும்மி முற்றிற்று.
*******

This file was last updated on 07 July 2021.
Feel free to send the corrections to the webmaster.