|   சந்திரன் 	 |  பாகம்பிரியா அம்மை   | 
|  1.  சிவனுடைய ஒருபாகம் (பகுதி) போன்று தலையில் இருப்பான்.  | 	
பாதிபாகம் பெற்றதால் இளைப்  பாகம் என்று சொல்லுவார்கள். | 
	
|  2.  குவளை மலரைச் சந்திரனால் மலரவும் அடக்கவும் முடியும், கைவாரம் கொள்ளல் - கூத்தை அடக்குதல். | 
குவளை இவளுக்குக் கையில் அழகுத் தன்மையுடையதாயிருக்கும். | 
|  3.  நாகத்தை ஆபரணமாக அணிந்த சிவபெருமானுக்கு உரித்தானவன்.  | 	
இவளும் நாகத்தை ஆபரணமாக அணிந்த சிவபெருமானுக்கு 	உரித்தானவள்.  | 
 
|  4. நல்லகலை (16- கலைகள் நிரம்பி) நிற்பான். | 
இவளும் நல்லகலை (படிப்பு) நிரம்பி நிற்பாள். | 
 |  5.  ஒப்பற்றவனாய் நீயுமலையில் (நீயும் அலையில் என்று பிரிக்க; அலை என்பது பாற்கடலைக் 
குறித்தது) பிறந்தாய்.  | 	இவளும் மேகமலையில் (மேகம்  சூழ்ந்த இமயமலையில்) பிறந்தாள். 
 | 
|   சந்திரன் 	 |  பாகம்பிரியா அம்மை   | 
|  1.  உதையமனம் (உதயமாதல்) 	அத்த மனம் (மறைதல்) என்று இரண்டு மனமுண்டு. | 
இவளுக்கு ஒரே மனம் தான் உண்டு.  | 
|  2.  மனதில் களங்கமுண்டு.  |  இவள் மனதில் எவ்வித களங்கமும் இல்லை  | 
|  3.  உனது பெருமை நிலை நில்லாது சிதைந்தது. (மானம் - பெருமை) சந்திரன் கலைகள் தேய்ந்து குறையச் சாபம் கொடுத்ததைப் பற்றிக் கூறினர்.  | 	
இவளது பெருந்தன்மை அழியாது நிலைத்து நிற்கும்.  | 
|  4.  தேய்ந்தழியும் உடல் உண்டு.  |  இவட்கு எத்தேச காலமும் அழிவில்லை. | 
|  5.  மனமகிழ்கின்ற சிவனிடம் சேர்ந்து சடையினிடம் தங்குவை.  |  	
இவள் எப்போதும் பாதிபாகமாய்ச் சேர்ந்து வசிப்பாள்.  | 
|  6.  இரவுக்குப் (யாசித்தற்கு) புறப்படுவான். இராத்திரியில் என்ற பொருள் வரும்போது இரவுக்கு 	
வேற்றுமை மயக்கம்; யாசித்தல் சிவனிடம் தன்னைக் காப்பாற்றும்படி தக்கன் சாபம்போது யாசித்ததைக் காட்டும்.  | 
இவள் உலகெலாம் பெற்று இனிது காப்பாற்றுவாள்.  |