pm logo

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
சாரதா ஒப்பாரி


cAratA oppAri
of tangkamuttutAs
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
சாரதா ஒப்பாரி

Source:
திருசிரபுரம் ஸ்ரீஜத் R. T. தங்கமுத்து தாஸ்
அவர்கள் இயற்றிய சாரதா ஒப்பாரி
V. Press Madras
---------


கூட்டுவண்டி கட்டியல்லோ என்னைப்பெற்ற அப்பா
நீங்கள் கோட்டைக்கே போனாலும்       1

கும்பாவிலக்கி நீபெற்றபெண்ணாள் குணமறிந்து சோறிடுவேன்
கும்பா நிழலாடும் உங்கள் வாசல்'குயிலுவந்து வாதாடும்
அந்த குயிலைப்பிடித்தடைத்து உங்கள் கண்மறைந்த
நாழிகைக்கு நீங்கள் பெற்ற செல்லி
என்னுடைய குறைதீர்க்க யாருமில்லை.       2

மாட்டுவண்டி கட்டியல்லோ என்னைப்பெற்ற அப்பா
நீங்கள் மதுரைக்கே போனாலும் வட்டி விலக்கிடுவேன்
நீ பெற்றபெண்ணாள் உங்களுட மனமறித்து சோறிடுவேன்
வட்டி நிழலாடும் உங்கள் வாசல் மயில் வந்து வாதாடும்
உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு மயிலைப்பிடித்தடைத்து
உங்கள் பெற்றசெல்லி என்னுடமன தறிய யாருமில்லை.       3

ஈக்கி இளம்வேட்டி என்னைப் பெற்ற அப்பா
ஈரிலை கெண்டவேட்டி நீங்கள் இருதாமடித்துடுத்தி
ஈரோட்டு வக்கீலோடு இருந்து நாயம் பேசி விட்டால் ஈரோட்டு
தேவடியாள் என்னைப்பெற்ற அப்பா
உங்களுக்கு இருந்து வழிதிறப்பாள்
உதிர்க்க வந்து கையெடுப்பாள்.       4

பார்ப்பான் இளம்வேஷ்டி என்னைப் பெற்ற அப்பா
பட்டுக்கெண்ட மேவேட்டி நீங்கள் பாக்காமடித் துடித்தி
பட்டணத்து வக்கீலோடு நீங்கள் பகுந்து ஞாயம்பேசையிலே
பட்டணத்துத்தேவடியாள் பார்த்து வழிதிறப்பாள்
என்னைப் பெற்ற அப்பாடங்கள் பக்கம் வந்து கையெடுப்பாள்.       5

ஈக்கி சிறுவீக்கி என்னைப்பெற்ற அப்பா
நீங்கள் பெற்ற இந்திரனும் கைகுழந்தை
ஈக்கி முத்திதோப்பாக்கி இந்திரனை ஆளாக்கி
இந்திரரேசந்திரரே எமலோகம் போனவரே.       6

நீங்கள் இறந்திட்டாகுற்றமில்லை
பாக்கு சிறுபாக்கு என்னைப் பெற்ற அப்பா
நீங்கள் பெற்ற பாண்டியனும் கைக்குழந்தை
பாக்கு முத்தித் தோப்பாக்கி பாண்டியனே ஆளாக்கி
கள்ளரே கருணரே கைலாசம் போனவரே.       7

பயணம் வச்சா குற்றமில்லை
பத்துவண்டி பொட்டிரதம் என்னைப் பெற்ற அம்மா
பரமரோட தங்கரதம் பார்வதியாள் வாராளென்று இன்னைக்கி
பச்சைக்கிளிகளெல்லாம் என்னை பெற்ற அம்மா
உங்கள் பக்கம் வந்து கையெடுக்கும்.       8

எட்டுவண்டி பொட்டிரதம் என்னைப் பெற்ற தாயே
எமலோகதங்காதம் ஈஸ்வரியாள் வாராளென்று இன்னக்கி
இளமைக்கிளிகளெல்லாம் என்னைப் பெற்ற அம்மா
உங்க எதிரே வந்து கையெடுக்கும்.       9

கோட்டை சிகப்பு வாங்கி என்னைப் பெற்ற அம்மா
குருட்டுக்கே கல்லிழைத்து நீங்கள் பெற்ற பெண்ணாள்
என்னைக்கொடுக்க இடமில்லாமல் கொள்ளிடமே
தள்ளினீர்கள் கொள்ளிடத்தே நீந்தியல்லோ
என்னைப்பெற்ற தாயே நீ பெற்ற குயிலால் வரத்தாமதந்தான்.       10

மதுரை சிகப்பு வாங்கி என்னைப் பெற்ற அம்மா
மாட்டலுக்கே கல்லிழைத்து நீங்கள் பெற்ற பெண்ணாள்
என்னை மதிக்க இடமில்லாமல் வைகையிலே தள்ளினீர்கள்
வைகையை நீந்தியல்லோ என்னைப்பெற்ற தாயே
நீ பெற்ற மயிலாள் வரத்தாமதந்தான்.       11

உறுமணலுக்குள்ளர்ரே என்னைப் பெற்ற அம்மா
நீ பெற்ற பெண்ணாள் இன்னக்கு நான்
சீதை ராமரும் தேரி சேரி வந்தாலும்
தேரை நிறுத்தியல்லோ என்னைப் பெற்ற தாயே
தேரைவிட்டு கீழிறங்கி நீ பெற்ற பெண்ணாள் எனக்கு
திருஷ்டி சுற்றி உள்ளழைப்பாய்.       12

நாட்டு மணற்குள்ளாக என்னைப்பெற்ற அம்மா
எனக்கு வாச்ச ராமரும் சீதையும் - தமேறி வந்தாலும்
ரதத்தை நிறுத்தியல்லோ என்னைப்பெற்ற தாயே
ரதத்தை விட்டு கீழிறங்கி நீ பெற்ற பெண்ணாள் எனக்கு
கலுக்குசுற்றி உள்ளழைப்பாய்.       13

நல்ல துளசியின்னு என்னைப்பெற்ற அம்மா நீங்கள்
நடுக்கிணறு பாத்திவிட்டீர் நந்தி விஸ்வநாதருக்கு
என்னைப்பெற்றதாயே நான்பாவி நல்லமலராகலியே.       14

உயர்ந்த துளசியின்னு என்னை பெற்ற அம்மா நீங்கள்
உரைக்கிணரே பாத்திவிட்டீர் உமாபதி நாதருக்கு
என்னைப்பெற்ற தாயே நான் பாவி உகந்தமலராகலியே.       15

மல்லிகை முல்லையரும்பு என்னைத் தேடிய சாமி
மலராபனியரும்பு மலர வைத்து பார்க்காமல்
என்னைத் தேடிய பன்னா மங்கவைத்து பார்க்கலமா,       16

செண்பக முல்லையரும்பு என்னைக் கொண்ட மன்னவரே
சிதராபனியரும்பு சிதரவைத்து பார்க்காமல்
என்னைத்தேடிய மன்னவரே நான் பாவி
என்னை சிதரவைத்து பார்க்கலாமா.       17

வாழை எழு நூறு என்னைத் தேடியசாமி நம்ம
வாசவாங்கினது முன்னூறு இந்தச் சண்டாளன் வாசல்
வாழைச்சுற்றி பூ வெடுக்க வாய்த்த கணவனில்லை
வாதாட ஞாயமில்லை.       18

தென்னை எழு நூறு என்னைத் தேடியசாமி நீங்கள்
தேடியது முன்னூறு தென்னைச்சுற்றி பூவெடுக்க
இந்தச்சதிகாரன் சீமை தேர்ந்த கணவனில்லை
சீராட ஞாயமில்லை.       19

செண்பகப்பூ பொந்தியிலே என்னைக்கொண்ட மன்னவரே
செல்வனுமே உண்டானால் சீமையிலே பாதியுண்டு
சீராட ஞாயமுண்டு என்னைத் தேடிய மன்னவரே
செல்வனுமே இல்லாமல் சீமையிலே பாதியுண்டு
சீராட ஞாயமுண்டு என்னைத்தேடிய மன்னவரே
செல்வனுமே இல்லாமல் சீமையிலே பாதியில்லை
சீராட ஞாயமில்லை.       20

மல்லிகை பொந்தியிலே என்னைக்கொண்டமன்னவரே
மஞ்சனுமே உண்டானால் மண்ணிலே பாதியுண்டு
வழக்காட ஞாயமுண்டு என்னைத்தேடியசாமி
மஞ்சனுமே இல்லாமல் மண்ணிலே பாதியில்லை
வழக்காட நீதியில்லை.       21

சங்கமுள்ளு கல்கோட்டை என்னைத்தேடியசாமி
ஜனம் பெருத்த நந்தாடு நான் சங்கை ஒதிக்கிவைத்து
ஜனத்தாரை தள்ளிவைத்து சந்திரரேகை பிடித்தேன்
சங்கமுள்ளு குத்துகிறது ஜனத்தாரு பேசுகிறது என்னை
தேடிபசாமி சகிக்கமனம் கூடலியே.       22

இண்டமுள்ளுகல் கோட்டை என்னைத் தேடியசாமி
இனம் பெருத்த நக்காடு இண்டை ஒதிக்கிவைத்து
இனத்தாரை தள்ளிவைத்து இந்திரரை கைப்பிடித்தேன்
இண்டமுள்ளு குத்துகிறது என்னைத் தேடிய மன்னா
எனத்தாரு பேசுறது இருக்கமனம் கூடலியே.       23

அந்திச் சிவந்திப்பூ என்னைத் தேடியசாமி
இந்தச்சண்டாளன் சீமை அரைச்சேர் மல்லிகைப்பூ
அல்லி முடியுமுன்னே இந்தப் பாவியுடவாசல்
நான் அருச்சுனரை கொள்ளையின்னே.       24

காலைச்சிவந்தியப்பூ என்னைத் தேடியசாமி இந்தச்
சண்டாளன் சீமை கால்சேரு மல்லிகைப்பூ
கலந்து முடியுமுன்னே இந்தப்பாவியுடவாசல்
நான் கருணரை கொள்ளையிட்டேன்.       25

உச்சி சிவந்தியப்பூ என்னைத்தேடியசாமி
இந்தச் சண்டாளன் சீமை ஒருசேரு மல்லிகைப்பூ
உவந்து முடிக்குமுன்னே இந்தப்பாவியுடவாசல் நான் பாவி
என்னைக்கொண்ட உத்தமரை தொள்ளையிட்டேன்.       26

ஐந்து வயதிலே என் சாமி துரைராஜாவே
நான் அறியாத நாளையிலே ஒரு
ஆரமதை கையில் கொடுத்து அரசாணி முன்பாக
அனைவோரும் தாமரிய அடியாளை மாலையிட்டீர்
அந்த அவனிதனில் என்னை விட்டு அயன்பதிக்கு
போரீங்களே ஆசை சதமென்பேன் அய்யோ
என்னைக்கொண்ட மன்னவரே அலறுதல்லோ என் வயது.       27

பத்து வயதினிலே என்சாமி துரைராஜாவே
எனக்கு பரிசமது தான் போட்டு பலபேரும் தாமறிய
பாங்காய் மணந்துகொண்டு பட்சமுடன் வாழ்ந்திருந்து
ஒரு பாலனை பெற்றெடுத்து பரிவாய் வளர்த்துவந்தோம்
அந்த பாலகனை யிங்கேவிட்டு பரமன்பதி போனீங்களோ
நான் பாப்பாத்தி பெற்ற பெண்ணாள்
நான் பாதையிலே நின்று பதறி அழுகுறேனே.       28

தங்கத்தால் ஊஞ்சலிட்டு என் தருமரும் நானும்
சாய்ந்து விளையாடையிலே அத்த தஞ்சாவூர் தேவடியாள்
உங்களை தனியாய் அழைத்தாலோ
ஒருதனி லெட்டர் கொடுத்தாலோ
நீங்கள் லெட்டர் கண்டவுடன் தங்காயி லறி தஞ்சாவூர்
ஒருசாரையிருந்து தீண்டாதோ அவள் சாமிபாதம் சேராளோ,       29

அந்தபவள மணி மண்டபத்தில் நாம் பாசிவிளை யாடையிலே
அந்த பட்டணத்து தேவடியாள் உங்களை பார்த்து
அழைத்தாலோ அவள் பதில் லெட்டர் தந்தாளோ
நீங்கள் பக்குவமாம் சென்றீரோ அந்த தேவடியாளை
ஒரு பாம்பு இருந்து தீண்டாதோ
நம்ப வீடு நீங்கள் வந்து சேர்வதெப்போ,       30

இன்றைக்கு தங்கத்தால் ஏரோப்பினேன்
என்னைக்கொண்ட மன்னவரே
நீங்கள் சந்தோஷமாய் போகும் பிளான் ,
நீங்கள் ஏரோப்பிளேன் மீதேறி தாசிவீடு போரீரென்று
எனக்கு தயக்குதல்லோ என்மனது,       31

வெள்ளி ஏரோப்பிளேன் ஏறிவேகமாய் போரீரென்று
எனக்கு வேகுதே கும்பி ஐயோ
அந்த பொல்லா வேசியாளே ஒரு பூநாகம் தீண்டாதோ
அவள் போகாலோ பரமலோகம்.       32

முத்தாலே பந்தலிட்டு நாம் இருபேரும்
காசு விளையாடையிலே அந்த கருவூரு தேவடியாள்
கண்ணை அடித்தாளோ ஒருகடின சேதி சொன்னாளோ
அவள் பின் கால்கடுக்க நடந்தீரோ
கருகுதல்லோ என் மனது.       33

நம்ம பழனிமலை போன துண்டு பரமனையும் கண்டதுண்டு
அந்த பழனி ஆண்டவனை நான் ஒரு பாலன்வரம்
கேட்டதுண்டு பாலன் பிறந்து நம்ப இருபேரும்
மகிழ்ந்து விளையாடையிலே அந்த பொல்லாத எமன்வந்து
தங்களை வாவென்று அழைத்தாரோ
உன்னை எமலோகம் சேர்த்தாரோ
இந்த மங்கை புலம்புரதும் நீங்கள் போகும்
எமலோகம் கேழ்க்கலையோ.       34

தாங்கள் ஸ்ரீரங்கம் போயி அந்த ஸ்ரீரங்கநாதரை
சீர்பாதம் தெண்டனிட்டு ஒரு சிசுவரம் கேட்டதற்கு
சிசுவை கொடுத்தாரே சீராக வாழ்ந்தோமே
சிசுவை கையில் எடுத்து நம்மயிரு பேரும் ஸ்ரீரங்கம்
சித்திரை தேர் பார்க்க போவதற்குள் நீங்கள் சிவலோகம்
சேர்ந்தீரோ திருவடியும் ரொம்ப வல்லோ.       35

நீங்கள் சைக்கிலேறி கான் பெற்ற என் மகனே
நீங்கள் நம்ம சந்துவழி வந்தாயானால்
நம்ம சந்தினில் உள்ளவர்கள் தருமர் மகன் வாரானென்று
உன்னை தாங்கி அழைப்பார்கள் தங்கமென்று தாங்குவார்கள்
தங்கை சைக்கிலேரி தனிவழியாய் போகையிலே
அந்த பொல்லாத எமன் வந்து வாவென்றழைத்தாரோ
உன்ன வழிபார்த்து நின்றாரோ நீங்கள் வைகுந்தம் சேர்ந்தாயோ.       36

சாரதா ஒப்பாரி முற்றிற்று.


This file was last updated on 19 April 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)