pm logo

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
மங்கையர்க் குகந்த மனோன்மணி ஒப்பாரி


manOnmaNi oppAri
of tangkamuttutAs
In tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

தங்கமுத்துதாஸ்‌ இயற்றிய
மங்கையர்க் குகந்த மனோன்மணி ஒப்பாரி

Source:
ஜெகமெங்கும் புகழ்பெற்ற இன்பமானகீதமணி
திருசிறபுரம் ஸ்ரீமான் R. T. தங்கமுத்து தாஸ் அவர்கள் இயற்றிய
மங்கையர்க் குகந்த மனோன்மணி ஒப்பாரி
V. Press Madras
----
உ.
வெண்பா

அம்பிகைபாள் மனமகிழும்
ஆதி புதல்வா இத்ததி
மனோன்மணி ஒப்பாரி இயம்புதற்கு தும்பிமுகனே துணைபுரிவாய்
நின்பதமே நம்பினேன் என தருள்புரிவாய்
--------

தகப்பனாருக்குப் புலம்பல்

தங்ககக் கண்ணாடி நான் தருமராஜா பெற்றபெண்னாள்
நான் தட்டில் அரிசிகொண்டு தங்காலிபூவுகொண்டு
நான் தலையை முழுகி தலை மயிரை சிக்குணர்த்தி
என்னைபெற்ற அப்பா நான் தவத்தால் பிறந்தமகள்
தலைக்கு நல்லஎண்ணைகொண்டு தயங்கி நடை நடந்து
தம்பூரடிக்க தனமேகம் எக்களிக்க

தஞ்சாவூருபட்டு தனிபெசவு பட்டுகொண்டு
சேலத்துப்பட்டு சேணியன் கைப்பட்டுகொண்டு
காறைசூடிபட்டு கைநெசவு பட்டுகொண்டு
அறந்தாங்கிபட்டு அழகான பட்டுகொண்டு
என் அங்கஜரைமுன்னே விட்டு அருமை தம்பிகளை பின்னே விட்டு
தங்காளும் ஓடி வந்து தனிவாசம் நின்றழுதாள்
தங்கமணியடிக்கும் என்னைப் பெற்ற அப்பா
இங்கபோர தருமலோகம் ஓசையிடும்

வெள்ளி நிலைக்கண்ணாடி நான் வீமராஜா பெற்றமகள்
விதை செல்லரிசிகொண்டு வெள்ளாவிபூவெடுத்து
வென்னீரில் தலைமுழுகி விரலாலே சிக்குணர்த்தி
வரத்தால் பிறந்தமகள் என்னைப்பெற்ற அப்பா
நான் வங்காளம் விட்டு வாகுடனே எண்ணை கொண்டு
வங்காளத்தம்பூழம் வகையேௗம் எக்களிக்க
வடநாட்டுப்புட்டு வாகான பட்டு கொண்டு
தென்னாட்டுப்பட்டு தினுசுக்கொரு பட்டுகொண்டு
மேனாட்டுப்பட்டு மேலான பட்டுகொண்டு
என்னைக்கொண்ட மன்னவரை முன்னே விட்டு
என் பிறவி தம்பிகளை பின்னே விட்டு
இன்னக்கி விரைந்துவந்து நின்றழுதால்
வெள்ளிமணியடிக்கும் நீங்கள் போகும்
வீமலோகம் ஓசையிடும்.

கருங்கல்லு சுவருவைத்து என்னைப் பெற்ற அப்பா
கல்லிழைத்த தூண்குறத்தி கனகமணி பந்தலிட்டு
காலாலும் சேவதரும் கால்களும் வைத்திருந்தீர்
உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு காவல்ரும் வந்து சொல்ல

நீங்கள்பெற்ற கண்மணியும் கேட்டு கலங்கிமனமுருகி
என்னைபெற்ற அப்பா அந்த கனகமணி பந்தலிலே
என்னைக்கொண்டகட்டழகரும் நானும் களைப்பாரவந்தாலும்
அந்த கனகமணி பந்தலிலே நாங்கள் களைப்பார நீதியில்லை
நீங்கள் பெற்றக்செல்லி எனக்கு கவலைகளும் ரொம்பவல்லோ

இணைக்கல் சுவருவைத்து என்னை பெற்ற அப்பா
இளம்பவள தூணிருத்தி இளகுமணிபந்தலிட்டு
ஏவலாளும் சேவகரும் எதிராக காவல்வைத்தீர்
உங்கள் கண்மறைந்த நாழிகைக்கு எவலர்கள் வந்து சொல்ல
உங்கள் இனையமகன் சேதி கேட்டு இலகிமனமுருகி
இந்திரலோகம் போலிருக்கும் அந்த இலகுமணி பந்தலிலே
என்னைகொண்ட ஈஸ்வரரும் நானும் இளைப்பா வந்தாலும்
இளைப்பார நீதியில்லை நீங்கள் பெற்ற பெண்ணாளுக்கு
இடைஞ்சல்களும் ரொம்பவல்லோ
-------------

தாயாருக்குப் புலம்பல்

பத்துமலையொதிக்கி பழனிமலை தானொதிக்கி
பாவைக்கொடி யொதிக்கி பத்தாயிரம்பூ பொதிக்கி
என்னைப்பெற்றுவளர்த்த பார்வதியைத் தானொதிக்கி
பத்துமலையிழந்தேன் பழனிமலை தானிழந்தேன்
பாவைக்கொடி யீழந்தேன் என்னைப்பெற்ற
பார்வதியைத் தானிழந்தேன்

இன்னைக்கு பத்தூரு பச்சைகிளி
இந்தப்பாவிவாசல் பறந்தோடி வந்தாலும்
நான்பாலு யெடுத்துவைத்து பசியாரி போக்களென்றால்
நாங்கள்பாலு குடிக்கவில்க பசியாடு போகவில்லை
உன்னைப்பெற்ற பார்வதியாள் பட்டதொரு
பாதகங்கள் சொல்லுமென பதரி அழகுதம்மா

எட்டுமலையொதிக்கி இடும்பன் மலை தானொதிக்கி
இளம் பவளக்கொடியொதிக்கி எண்ணாயிரம்பூ வொதிக்கி
நான்பாவி என்னைபெத்த ஈஸ்வரியைத்தா னொதிக்கி
எட்டுமலை யிழக்தேன் எதிர்த்தமலை தானிழந்தேன்
இனம் பவளக்கொடியிழந்தேன் எண்ணயிரம்பூ விழந்தேன்
நான் பாவி என்னை யீன்தெடுத்த ஈஸ்வரியை நானிழந்தேன்
எட்டூரு பச்சைக்கிளி இதை தேடிவந்தாலும்
இள நீரு கண்திறந்து இளைப்பாரி போங்களென்றால்
நாங்கள் இளைநீர் குடிக்கவில்லை இளப்பாரி போகவில்லை
என்னைப்பெற்ற ஈஸ்வரியாள் பட்டதொரு
இடஞ்சல் தனை சொல்லுமென ஏங்கி அழுகுதம்மா

தலையை வலிக்குதென்று என்னை ஈன்றதாயே
நீபெற்ற தங்காளுக்கு சட்டனவே ஆளுவந்தால்
தலைவலிக்கேற்றதொரு தனித்தைலம் தானிறக்கி
தங்கரயிலேறி தரனியிலும் பாசாகி
பச்சை ரயிலேறி பவுன்ரயிலும் பாசாகி
உன்னுட வாசலில் தனித்தைலம் கொண்டுவந்து
என்னைப் பெற்றதாயே கான் தங்காளும் வந்துநின்றால்
நான் தாயிழந்தபாவி என்று என்னைபெற்றதாயே
உன்வாசல் ஜனக்களெல்லாம் ஏசுறார்கள்

பிடரிவலிக்குதென்றல் என்னைப் பெற்ற அம்மா
பெற்ற பெண்ணாளுக்கு ஆளுவந்தால்
பிடரிவலிக்கேற்றதொரு பிணிதைலங்கொண்டு
பொன்னு ரயிலேறி புது ரயிலும் பாசாக
சின்ன ரயிலேரி சிகப்புரபில் பாசாகி
உன்னுடைய வாசலில் பிணித்தைலங்கொண்டு
நீபெற்ற பெண்ணாளும் பின் பக்கம் வந்துநின்றால்
பெற்றவளைத் தோற்ற பெரும்பாவியென்று
உன்னுடைய வாசலிலே பேசி என்னை எசுசார்கள்.
-----------

புருஷனுக்குப் புலம்பல்

கும்பகோணம் பொன் சருவம் உன்னைத்தேடியசாமி
நான் குயிலால் இடுப்பில்வைத்து குளத்திலே தண்ணீர்மொள்ள
குளத்தோரம் போனாலும் குளத்திலே உள்ளஜனம்
நாண்கொண்ட வரிழந்தவள் கோமானைத் தோற்றவள்
என்னைத் தேடி யசாமி நான் குயிலாள் புலம்புறது
நீங்கபோன கொள்ளிமலை கேட்கிலையோ.

அரக்கோணம் பொன் சருவம்
என்னைத்தேடிய சாமி நான்
அறிவை இடுப்பில் வைத்து
ஆற்றிலே தண்ணீர் மொள்ள
அவசரமாப் போனாலும்
ஆற்றிலே உள்ள ஜனம்
இன்னைக்கு அர்ச்சுனரிழந்தவள்
என்னைக்கொண்ட அழகரைத் தோற்றவள்

புருஷனிழந்தவள் என்னைத்தேடிய
புண்ணியரைத் தோற்றவள்
அரக்கோணம் பொன்சருவம் ஆகாது என்று சொன்னார்
என்னைத் தேடியசாமி நான்
அரிவை வருத்துரது
நீங்கள் போன அரலிமலை கேட்கலையோ.

பொன்னிழைத்த பாய்மேலே
என்னைத்தேடிய சாமி
கம்மிறுபேரும் பொருந்தி விளையாடையிலே
பொல்லாத பாவி எமன் உங்களுக்கு
பூலோகவாழ்வு போதுமென்று சொன்னாரோ
பொன்னுரதம் தந்தாரோ அந்த
பொன்னூத மேறி
என்னைத்தேடிய சாமி நீங்க
அந்த புவனடிக்கு போகலாமோ
இங்கே பூர்த்து மலர்ந்திருக்கும்
பூவை இழக்கலாமோ.

பவுனிழைத்த பாய்மேலே
என்னைத் தேடியசாமி நீங்கள்
படுத்துறங்கும் வேளையிலே
பழிகாரபாவி எமன் உங்களுக்கு
பட்டணத்துவாழ்வு பக்ஷமும் போதுமென்று
பவுனூதமேறி என்னைத்தேடியசாமி
பரமலோகம் போகலாமோ இன்னக்கி
பண்புடனுடுத்திவரும் பட்டை யிழக்கலாமோ.
------------

பிள்ளைக்குப் புலம்பல்

செண்பகம்பாதி ஸ்ரீரங்கம் பேர்பாதி
செண்பகம் பூர்த்து செழித்து மலர்ந்திருக்கும்
என்னைப்பெற்றி தாயே அந்தசெண்பகபூ வெடுத்து
ஸ்ரீரங்கநாதருக்கு திரிகால பூசைசெய்ய
என்னைப் பெற்ற தாயே நான் பாவியுட
வாசல் ஒரு சேயனில்லா சஞ்சலந்தான்.

மல்லிகைபாதி மாயூரம் பேர் பாதி
மல்லிகைப்பூத்து மலர்ந்து செழித்திருக்கும்
என்னைப்பெற்ற தாயே அந்த
மல்லிகைப்பூ வெடுத்து மாகதேவநாதருக்கு
தாயே நான் பாவி வாசல் ஒரு மதலையில்லா சஞ்சலத்தான்,
கொழுந்து ஒருபாதி கும்பகோணம் பேர்பாதி

கொழுந்து செலிர்த்து குளிர்ந்து மலர்ந்திருக்கும்
அந்த குனிந்த கொழுந்தெடுத்தி
கும்பேஸ்வர நாதருக்கு
குருபூசை செய்வதற்கு என்னைப்பெற்ற தாயே
உன்னுடைய வாசலிலே ஒரு
குழந்தையில்லா சஞ்சலந்தான்.

மனோன்மணி ஒப்பாரி முற்றிற்து.
---------------

This file was last updated on 24 April 2022.
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)