pm logo

எழுமூர் வீராசாமி உபாத்தியாயர்
இயற்றிய "சிவசங்கர சதகம்"


civacangkara catakam
of vIrAcAmi upAttiyAyar
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

எழுமூர் வீராசாமி உபாத்தியாயர்
இயற்றிய "சிவசங்கர சதகம்"

Source:
எழுமூர் வீராசாமி உபாத்தியாயர் இயற்றிய "சிவசங்கர சதகம்"
இஃது மகாவித்வான் காஞ்சீபுரம் இராமசாமி நாயுடு அவர்களால் பார்வையிடப் பெற்றது.
மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை,
87, தம்புசெட்டி வீதி, சென்னை
2வது பதிப்பு, 1917
விலை பை. 9
------------------------------

சிவமயம்.
சிவசங்கர சதகம்.
காப்பு.

வெண்பா.
சிற்சபையிலாடுஞ்சிவசங்கரேசுரன்மேற்
பொற்சதகநாளும்புகலவே- எற்கருளும்
மாதங்கவத்திரத்தான்மாமலரோனும்பணிய
மாதங்கவத்திரத்தான்வந்து.

இதுவுமது.
தேவாதிதேவன் சிவசங்கரேசுரன்மேற்
கோவாமணிச்சதகங்கூறவே--மூவாத்
தவள மதவாரணத்தான்றான்பரவுமெங்கள்
கவளமதவாரணத்தான்காப்பு.

நூல்.

கார்கொண்டமே னியன் மன்றல்சூழ் களிகொண்டசெங் கம லன்றருத்,
தார்கொண்டவிந் திரன்வானவர் தயைகொண்டமா தவ ரந்தணர்,
நீர்கொண்டநின் னருள் கொண்டலோ நிறைகொண்டனர் கறைகண்டனே,
சீர்கொண்டசங் கரிபாகனே சிவசங்கரா சிவ சங்கரா.       1

புல்லாடராவணிவேணியும் பொன்மான்மழுத்திரிசூலமும்
இல்லாமனல்லறனாதிகளினிதாகவன்றொருநால்வருக்
குல்லாசமாவுரைசெய்திடவொளிர் தக்ஷிணாமூர்த்தங்கொடு
செல்லார்சினைக்கல்லாலின்வாழ்சிவசங்கராசிவசங்கரா.       (2)

நாணாகவாசுகி மந்தரநன்மத்ததாய்த்திருமாலுடன்
கோணமல்வானவர் தானவர்கூடிக்கடல்கடையன் றவர்
வாணாளைமாய்த்திடவந்தவவ்வன்னஞ்சையுண்டுயவைத்திடுஞ்
சேணார்பிறையணிவேணியாசிவசங்கராசிவசங்கரா.       (3)

தேராகமானிலமான்மகன்றிறல்சூதனங்கியுமாலுடன்
கூராகவெஞ்சரமாமறைக்கொடுவேகவெம்பரியாகவே
போராடற்சயவீரர்போற்போய்ப்புன்னகைசெய்தங்குறும்
சேரார்திரிபுரமட்டதென்சிவசங்கராசிவசங்கரா.      (4)

மூலாகமநெறிகண்டநன்மிருகண்டுமாமுனிபுத்திரன்
மேலாய்மிகுசீற்றங்கொடுமேதிப்பிடர்வருகாலனைக்
காலாலுதைத் தவ்வன்பனைக்காத்தோயிடர்தீர்த்தாளெனைச்
சேலார்விழியுமைபாகனேசிவசங்கராசிவ சங்கரா.      (5)

தேடாவரும்பொருடேடிகீட்டிசைநோக்கியேசெலும்வாணிபன்
காடாகுமவ்வுழிகங்குலிற்கார்மாரியாற்சவலைப்பட
வாடாதெனவொருதோழனாய்வந்தாண்டவாறெனையாளுவாய்
சேடாதனன்பணிபாதனேசிவசங்கராசிவசங்கரா.      (6)

ஆறாடுமாமுடியும்பணித்தலர் தூவுமாவடிகாணவே
மாறாடுமைந்தன் றந்தையும்மாவன்னமாவாய்க்காண்கிலார்
சீறாடுபாம்பணிவேணியைச் சேய்க்காய்வளை த்தருள் செய்ததென்
சேறாடுகுங்குமவண்ணனேசிவசங்கராசிவசங்கரா.      (7)

ஐயாவுனக்கணிசெய்ததேனலர்மாலையையந்நாளிலேர்
மையார்குழற்கணிகைக்கணிமறையாளனீவாழ்கோயில்வந்
தையானனாவருள்செய்கெனவணிகேசமார்முடிகாட்டி
செய்யாவதிசயமென்சொல்வேன்சிவசங்கராசிவசங்கரா.      (8)

அம்பொன் முடிவல்லாளனார்க்கருளீந்திடுஞ்சேயின்றியே
பைம்பொன்மணிப்பலவீந்துநற்பயனில்லையென்றதனாலுனை
நம்பித்துதிசெயுநாளையினற்பாலனாய்வந்தாண்டசீர்ச்
செம்பொற்சபாபதியெற்கருள் சிவசங்கராசிவசங்கரா.      (9)

வாணாடனைநிலையென்றெழின்மடவார்மயற்கடன்மூழ்கியே
வீணாள்கழித்தேயுன்னிருவிரையார்மலர்ப்பாதநாடியே
பேணாதுழன்றிடுமெற்குநீபெருவாழ்வளித்தருள்செய்குவாய்
சேணாகரர்பணிதேவனேசிவசங்கராசிவசங்கரா.      (10)

மகத்தாதிசைவர்கள்பூசைசெய்மலராய்மதித்துயர்கல்லினை
யகத்தாவலாலுனையேயெறிந்தன்புற்றிடுமச்சாக்கியற்
கிகத்தார்க்கரும்பொருடந்தநீயெனையாளிலவ்விசைநீங்குமோ
செகத்தாதியேயொளிர்சோதியேசிவசங்கராசிவசங்கரா.      (11)

காட்டையுடுப்பூராகவோர்கவிகைக்குளேயரசாண்டிடும்
வேட்டைத்தொழிலெயினப்பிரான்வேதாந்தநின்வதனத்திலார்
ஓட்டைக்கணிற்றன்கண்களையுறவைத்தல்போலென்செய்வன்யான்
சேட்டைப்பொறியற்றோர் பணிசிவசங்கராசிவசங்கரா.      (12)

வில்லார்மணிமுடிசூடியவிதுவின்குலத்துறுபார்த்தன்முன்
பொல்லாதவைம்புலவாதையைப்போக்கித்தவஞ்செயவந்துநீ
வில்லாலடியுண்டேயருள்வேடிக்கையேமிகநன்றுகாண்
செல்லாரழற்கிரிவாசனேசிவசங்கராசிவசங்கரா.       (13)

பாண்டிப்பதிதனில்வாழ்வுகொள்பரிசுத்தவாணிபமாதுனை
வேண்டித்துதித்திடவந்தவள்வீதத்தொழிற்கேகூலியா
யாண்டிட்டபிட்டுண்டவ்வினையாகாமையாலடிநீபடச்
சேண்டங்குவோர்க்கும்பட்டதென்சிவசங்கராசிவசங்கரா.      (14)

உனைநிந்தைசெய்வோர்வாழ்வு தானுடைபட்டிடுமெனலுண்மையே
யெனவெண்ணயாவரும்வானவர்க்கிறைவாமுனையிகழ்வான சொற்
ஜனையேயுரைத்தேதக்கனற்றலைபோய்த்தகர்த்தலையாகினான்
சினமின்மையோர்பெறுசெல்வமேசிவசங்கராசிவசங்கரா.      (15)

ஆதித்தனையொருபாத்திரமாய்க்கொண்டுநீயந்நாளிலே
பூதிப்புனைந்தொளிர்மெய்யொடும்போந்தேகுலாலன்றன் மனஞ்
சோதித்தவர்சூணீக்கிமுற்சுகமீந்தநின்மலதேவமால்
சேதித்துனைத்தொழவெற்கருள் சிவசங்கராசிவசங்கரா.      (16)

தீதாஞ்சவுமியர்கூடியேதிருநாவினுக்கரசன்றனை
வாதாடிநீற்றறையுய்த்துமேவன்கற்பிணித்தேயத்தியின்
மீதாயெறிந்திடவேயதைமிதப்பிக்குநின்விளையாட்டெனே
சேதாம்பல்போன்றொளிர்வாயனேசிவசங்கராசிவசங்கரா.      (17)

தொண்டென்றுநீமுறிகாட்டிமுன் சுருதிப்பிராமணனாயவை
யண்டிச்செயுமண்நீக்கியெம்மாரூரனுக்கருள் செய்ததைக்
கண்டிங்குனைத்தொழுவேன் றனைக்காத்தாள்கிலாப்பவமென்சொலா
செண்டூர்விரன திமோகனாசிவசங்கராசிவசங்கரா.       (18)

மாலஞ்சிவாரிதிபுக்கவுமலரோனரூபமதாகவும்
வேலஞ்சுகண்சசிகேள்வனும்விலகுஞ்சலந்தரசூரரின்
பாலஞ்சுவெண்மலைநண்ணவப்பதகன்றனைக்கண்டித்திடுஞ்
சேலஞ்சமாரலைவாயனேசிவசங்கராசிவசங்கரா.      (19)

அஞ்சாதவன்கொலைசெய்திடவறியாதவன்னிலையெய்திட
மஞ்சார்குழன்மடவார்மயல்மாறா துழல்வசையாளனியான்
எஞ்சாமனீயெனையாள்வதேயெழிலாகுமீதறியாய்கொலோ
செஞ்சாந்தணிவரைமார்பனேசிவசங்கராசிவசங்கரா.      (20)

யோகுற்றவர்க்கருள்செய்யுநீயோகுற்றனையென்றெண்ணியே
பாகுற்றசெஞ்சொல்வாணிதன்பதியேமுதல்முனிவோர்கள்சந்
தேகித்துமாரனையேவுமத்தெய்வத்திறன்மிகநன்றுகாண்
சேகுற்றமூவிலைவேலனேசிவசங்கராசிவசங்கார்.      (21)

தேவாதிதேவாவுன்றனைத்தியானஞ்செய்தேவருமந்தணன்
மேவாவரும்பசிகொண்டுதன்விரைவாய்திறந்திக்காலையில்
தாவாவருங்கொடிவாயனந்தரவேயதற்கருள் செய்திடுஞ்
சேவார் கொடிப்பணகங்கணாசிவசங்கராசிவசங்கரா.      (22)

தவநீதிசேர் திருவாதவூர்த்தனிநாயகர்க்காயன்று நீ
நவஞாலமேனரியானதைகவையற்றநற்பரியாக்குமுன்
உவமானமில்லாச்சீரெனாலோவாமலின்றெனையாளருட்
சிவஞானசற்குருநாதனே சிவசங்கராசிவசங்கரா.       (23)

அம்புற்றசெவ்வனசந்தனையணியார்முனிசிரம்வைத்துமே
வெம்பும்மருங்கானிற்செலவிரைவாக முன்வருசேனமும்
பம்புஞ்சிறைநிழறந்தவப்பாறிற்குவிண்பாலித்திடுஞ்
செம்பொற்சிலையாயெற்கருள் சிவசங்கராசிவசங்கரா.      (24)

கானிற்றிரிபசுவாகிநீகாலன்னருங்கன்றாய்மதில்
வானுற்றிடுஞ்சிகரத்திருவாரூரிலேவளவன்மகன்
தானுற்றவத்தேர்க்காலினாற்சாங்கன்றெழுந்தகையென்னகாண்
தேனுற்ற கொன்றைத்தாரனே சிவசங்கராசிவசங்கரா.      (25)

கொக்கின்னிறகொடுவெண்மணிக்கோவைப்புனையொருசித்தனாய்
மிக்கோர்புகழ் தமிழ்மாறனார்மிளிருஞ்சுவைக்கல்யானையை
இக்குத்தினச்செயவைத்தவுன்னிணையற்றசீரென்சொல்லுவேன்
செக்கச்சிவந்திடுமேனியாய் சிவசங்கராசிவசங்கரா.      (26)

இருந்தாமரைப்பொய்கைக்குளேயிழிபூசுரன்மகனைக்கரா
வருந்தப்பினர்பலநாள் கழித்தவ்வாற்றிந்திடுசுந்தரர்
பொருந்துந்திருப்பதிகஞ்சொலப்புதல்வன்வரும்புகழென்சொல்வேன்
திருந்தும்பணியணிமார்பனேசிவசங்கராசிவசங்கரா.      (27)

கொங்கார்குழற்சிலையார் நுதற்குயிலார் மொழியயிலார் விழிப்
பங்கேருகவதனத்திருப்பாவைக்கு பேகர் தாயென
மங்காதருள்செயுநின்னையேவாழ்த்தென்முனேவாராதெனோ
செங்காவியங்கனிபாகனே சிவசங்கராசிவசங்கரா.      (28)

தாவும்புலிக்கான்மாமுனிதனையற்குணப்பாலற்றுனை
மேவித்து தி செயமாறுயில் வெண்பாற்கடறனையீந்தவுன்
ஏவற்றலைக்கொளுமென்றனுக்கின் றீயவேறொன்றில்லையோ
சேவற்கொடிச்சேய் தந்தையேசிவசங்கராசிவசங்கரா.      (29)

தாய் வேண்டிலன் றமர்வேண்டிவன் சற்றும் பிதாதனை வேண்டிலன்
சேய்வேண்டிலன்றமர்வேண்டிலன் செற்றார் நலந்தனை வேண்டிலன்
மாய்காகுமில்லவள் வேண்டிலன்மாதேவநின்னருள்வேண்டுமுன்
சேய்வேண்டும் வேலினையீந்தவாசிவசங்கராசிவசங்கரா.      (30)

படியேழ்சுமந்திடுமானைகள் பதறித்திடுக்கிடவே பணி
இடியுற்றெனத்திகை மேவுவோரிரியத்தவமுனிவோர்விடுந்
துடியைத்தரித்தாயென்மனத்துயர் நீக்கனிற்கரிதாகுமோ
செடியற்றமாமறையோர் புகழ்சிவசங்கராசிவசங்கரா.      (31)

அரிதான மானிடதேகமிங்கடியேனெடுத்ததனான் மிகப்
பெரிதானவுன்னருள் வேண்டினேன் பின்னென்பதேபிழையாகுமே
விரிபானிலாவெயிறுந்தழன் மேவுஞ்சிகைக்கொலையாள ராய்த்
திரிதானவர்குலகாலனே சிவசங்கராசிவசங்கரா.      (32)

சிந்தேழுநற்குவடெட்டுமிச்செகமுஞ்சிதைத்திடுவென்றுரை
தந்தேமுனம்முனிவோர்விடத்தழல் வீசியேநின்மீதிலே
வந்தேவிழும்மழுவைக்கரம்வைத்தாயெனக்கருள்வைப்பையோ
செந்தேன்மலர்ப்பதவண்ணலேசிவசங்கராசிவசங்கரா.      (33)

ககனப்பெருவெளியின் மதிகலையுண்ணவல்லவரான் விடும்
இகன்மானைநின்கையிலேந்தலுக்கிழிவல்லவென்றனையுன்பதத்
தகம்வைத்தலீதறியாய்கொலோவடியாருயிர்க்குயிராயுறுஞ்
செகநாதசற்குருபோதநற்சிவசங்கராசிவசங்கரா.      (34)

பழுவத்துள் வாழுரவோர் கடம்பணியால் வருமழல்கால்விழி
யுழுவைக்கொடுங்க தமீறிவந்துறவேய தன் சருமத்தினைத்
தழுவித்தரித்திடுமாடையாய் தமியேற்கருடருவாய்கொலோ
செழுமைத்தருங்கைலாசனே சிவசங்கராசிவசங்கரா.      (35 )

மாப்போதசங்கம ரூபமாய்வந்தன்று நீயொருமைந்தனைத்
தாப்போதவுண்கறியாவெனத்தருமன்புளோர்க்கேயுன்னருள்
காப்போதுவல்லாற்கன்மனக்கடையேற்குமுண்டாமோ சொலாய்
சேப்போதெனும் பதநாதனே சிவசங்கராசிவசங்கரா.      (36)

பந்தப்பெருந்தொடாற்றிடப்பயில் வேள்வியோர் தன்னேவலால்
வந்தப்பல பணி தன்னையே மகிழ்சேர்கலன்றானாகவே
சந்தப்புயத் தணிகின்ற துன்றகையென்பனோதயையென்பனோ
செந்தண்கடுக்கையின் மாலையாய் சிவசங்கராசிவசங்கரா.      (37)

பொல்லாத வெங்கொலை செய்யவே புகுவன் முயலகனைப்பவம்
இல்லாதவுன்பாதத்துறுமியலீயுநின்றனை வாழ்த்துமிக்
கல்லாதவில் வெளியன்றனைக்காவாதுன்க்கறமோ சொலாய்
தில்லாபுரிவாழ் சுந்தராசிவசங்கராசிவசங்கரா.      (38)

செந்தீநிறக்குறளுக்கு முன் செந்தாமரைப்பாதந்தொழத்
தந்தாயருட்கண்ணென்னிலுன் சரணண்டியேசாணென்னுமென்
சிந்தாகுலந்தனை நீக்கிடாச் செயலென்னவிவ்வியலென்ன காண்
செந்தாமரைக்கண்ணன்றொழுஞ்சிவசங்கராசிவசங்கரா.      (39)

பொய்யன் கொலைக்களவுஞ்செயும் பொல்லாதவன் புரையேமிகும்
வெய்யன் பொறாமையையுட்கொளுமிகுபாதகன்மிடியோர்க்கிடாக்
கையன்கனாவினுநன்னெறிகருதாதயான் கதி சேரநின்
செய்யன்பருளுளதாகுமோசிவசங்கராசிவசங்கரா.      (40)

கற்றாக்கள் பற்பலமேய்த்திடுங்கண்ணன்மலர்க்கடவுண்முனம்
முற்றாச்சினங்கொண்டேயவர்முடுகும் பொழுதிறைநீ வரச்
சற்றாகிலுமஞ்சாவிதிதலை கொய்தவாமூவாசையைச்
செற்றார் தொழும் பொற்றாளனே சிவசங்கராசிவசங்கரா.      (41)

மெய்யாகநின்னருள் வேண்டினோர் மேவாதபாக்கியமில்லையாற்
பொய்யாகவாஞ்சையினாலுனைப்போற்றுந்திறம் பொய்யல்லவே
ஐயாவினியடியேற்குநின்னருள் கிட்டுமாறுளதாகத்
செய்யா விடிலெவ்வாறுய்வேன் சிவசங்கராசிவசங்கரா.       (42)

அம்போதமே மிகும்வாவியினருகாவுறைந்திடுமந்தணர்
தம்போதமேன்மைகள் குன்றிடச்சமர் செய்தவர் தவமாய்த்திடும்
வெம்போ தமாமுகசூரனை விளியச்செயும் விறல் வீரவென்
செம்போ தகந்தனிலுற்றவாசிவசங்கராசிவசங்கரா.      (43)

கொம்பொன்றினான்மண்கீறியங்குறுதானவன்றனை மாய்த்து பின்
பம்பும் முயிர்த்தொகையாவையும்பதறச்செயுமொருகேழலை
வெம்புஞ்சினத்தாற்கொன்ற தின்வெண்கோடணி விசயத்தினைச்
செம்பொன்மலர்க்கிறையுஞ்சொலான் சிவசங்கராசிவசங்கரா.      (44)

பெருமாறனாரொருகானிலே பெலவேட்டைசெய்தேபின்பவர்
வருமாறில் வெம்பசிமேவவுன்வடிவின்றியுண்ணேனென்னநின்
னுருமானவே செய்யாப்பிலுன்னுருவானதென்னோகோசொலாய்
திருமாமறைசொலும்வாயனேசிவசங்கராசிவசங்கரா.      (45)

பந்தார்கரப்பரவை பயில்பருமாமனைக்கொரு தூதனா
யந்தாருவின்மலர் தூவவிண்ணயனாதியோர்படியாரெலாஞ்
சிந்தாகுலங்கொளவன்று நீ சென்றாயெனுஞ்சீர்காணவோ
செந்தாமரைத்தாளானதேசிவசங்கராசிவசங்கரா.      (46)

வைதீகமாமுனியன்பினான்மண்மாரிபெய்வித்தொன்னலர்
நைவித்தபோதவ்வேதியன்னாதாக தியேதென்றிடப்
பொய்மேவுமவ்வூர் நீங்குமுன் பொற்பாதநற்குறிபின்வரச்
செய்தாண்டதென்பாலில்லையோசிவசங்கராசிவசங்கரா.      (47)

நயங்கொண்ட கார்பெய்யாததானனிவந்திடுங்கலிவெம்மையாற்
பயங்கொண்டுனைப்பூசிப்பவன்பசியான் மெலிந்திடல் நீங்கவே
வயங்கொண்டவெண்மணலைத்தினும்வண்சோறெனச்செய்தன்று நீ
செயங்கொண்டதின்றிலையோசொலாய்சிவசங்கராசிவசங்கரா.      (48)

பாலென்னவேயொளிர் வெள்ளியம்பனிமாமலையுறுதேவை நண்
பாலே தவஞ்செயுமாறுபெண்பாலேவருமுனிவோர்கள் சொல்
லாலேயவர்க்கருள் செய்ததாலடியேற்குமிங்கவர்வேண்டுமா
சேலேமருள்விழி பாகனே சிவசங்கராசிவசங்கரா.      (49)

ஆனாலுமென்போற்றீயருமையாவுனைப்போற்றூயரும்
வானாட்டுமிவ்வையத்துளும் வாய் பேசமற்றோரின்மையாய்ப்
போனாரெனிலினியாவரென்புகர் நீக்குவார் நீயேயருள்
தேனார்மலர்த்தொடைவேணியாய்சிவசங்கராசிவசங்கரா.      (50)

திகழுங்கலிங்கத்தாதிபன் தேகத்திலாகிய குட்ட நோய்
இகழ்வாலவனுயிர் நீக்குவானென்னும் பொழுதினிலுன்னருள்
மிசவாழ்வு தந்தாயாகையான்மிடியேற்குமவ் வினைவேண்டுமோ
செகநாதனேமிகுபோதனே சிவசங்கராசிவசங்கரா.      (51)

சிரமாலைகண்டிகைகுண்டலந்திகழ் நீறுகற்றோயாடையொண்
கரமாலையுங்கொடுகானிலேகாயாமருமலர்வண்ணனுங்
கருணாலயாவளி சேயெனக்கனமா தவஞ்செய்பேர் தருள்
சிரமாலையாயருள்பாரையாசிவசங்கராசிவசங்கரா.       (52)

மகவானொருமகமே செயவளர்விச்சுவவுருவன்னெனுந்
தகையாளனைக்குருவாக்கவத்தவனே செயுந் தவறாலரி
யகமே கொதித்தவனைக்கொலவடர் தீ வினை தீர்த்தாண்டதே
சிகமேலவாசிகபூசித்தசிவசங்கராசிவசங்கரா.       (53)

துருவாசமாமுனிசாபமேற்சூழ்ந்தேவருமொரு நான்கு கோட்
இருவாரணமுனையேத்துமவ்வுழி நீயதைக்காத்தாண்டனை
மருவார்கடற்குள்ளாக்குமிவ்வன்னெஞ்சுனக்காமோமுனஞ்
செருவாரணத்துரியைப்புனை சிவசங்கராசிவசங்கரா.       (54)

தாரார்சுமே தன்னல்லணிச்சடைகட்டியைம்பொறிவெட்டியே
யேராரிலிங்கப்பூசைசெய்தேத்தும்பொழுதேகாலனும்
வாராகுநாணெறிபோ திலேவந்தாண்டருளெம்மையனே
சீரார்மதிநதிவேணியாசிவசங்கராசிவசங்கரா.      (55)

நாராயணன் மேனாளினின்னகையார்சிலம்பணிதாளினில்
ஓராயிரமலர்கொண்டுநெஞ்சுறவேயருச்சிக்கும்பொழு
தேரார்மலரொன்றின்றியேயிருநோக்கிலோர்கண்சாத்தமற்
சேராழிமாயவனுக்கருள் சிவசங்கராசிவசங்கரா.      (56)

முற்றாமதியணி வேணியாமூரன்மலையெனவட்டதில்
சற்றாகிலுந்தொலைவில்லெனச்சாற்றுந்தடாதகையின்புற
வற்றாவருட்குறளுண்ணவே மகிழ்தேவமானிடமாவரி
செற்றாரதன தளாடையாய்சிவசங்கராசிவசங்கரா.       (57)

அலையாறு சூடிய வெந்தையென்னகட்டிற்பசியனன்மாறவே
தொலை யாவருள் செய்தாளெனச்சொல்லுங்கடிகைக்கிந்தனை
நிலையாதுமின்றியேவாடுமெற்கேநின்னிருதாடந்தருள்
சிலையார்நுதற்பரைநாயகாசிவசங்கராசிவசங்கரா.       (58)

பொன் மாலைவாரிதிதோயவே புகலத்திருமகளாகிய
மின்மாலையங்குழனின்னிருமிளிர்பொற்சிலம்படி யேற்றிடக்
கன்மாமலராக்கொண்டவாகடல் கூடலில்வரவேயருள்
தென்மாமலைத்தவனார் துதி சிவசங்கராசிவசங்கரா.       (59)

மாயங்கொளுங்கொலைசெய்கலைவலையென்னமாவிழியார்மயல்
போயந்தநான்மறை ஏபுரப்பூந்தாளினைத்தொழவன்பருள்
தூயம்பிகை தனமார்புயாசுடருற்றவெவ்வயில் வெற்றிவேல்
சேயன்றனைப்பெறுமூலனே சிவசங்கராசிவசங்கரா.      (60)

தங்குஞ்சராசரமோடுமெத்தலமும்படுங்கடைநாளினில்
பொங்குந்திருமாலோடயன் போற்றிப்பணிந் திடமுன்புநின்
அங்கத்திலாரோணஞ்செயுமையாவெனைக்கையாதருள்
சிங்கத்துரிபுனையண்ணலேசிவசங்கராசிவசங்கரா,      (61)

வேலாவலயந்தன்னையேமேவும்புனற்கரசேவிமுன்
கோலாகலஞ்செய்தாலவாய்குலையச்செயுமவ்வீரனை

வேலாலடுவென்றுக்கிரவேந்தற்கருள்செய்தாண்டனை
சீலாகமமறைமூலனே சிவசங்கராசிவசங்கரா.      (62)

நமனோர்கபோதகமாகவேநாயேனையாளிறைநீயொரு
நிமிர்மாவலவில்வேடனாய்நிலவித்தொடர்ந்தேஞாலமேல்
நிமியென்னுமன்களிகொள்ள வேநிறைசெல்வமாம் பொருடந்திடுஞ்
சிமயப்பருப்பதவிற்க ராசிவசங்கராசிவசங்கரா.      (63)

விக்கியாபனஞ்செய்தீந்திடவே தம்வலோனிலையென்றுமே
முக்கியா திகாரணமா தவமுனிவோர் துயருறுகாலையிற்
றிக்கியாதினுங்களி கொண்டிடச்சேயென்னவந்தருள் செய்தைமால் சிக்காதெளியெனையாளுவாய்சிவசங்கராசிவசங்கரா.      (64)

சுசி யுற்றரத்தினம்யாவையுஞ்சோரர்கொடுபோனாரென
அசைவுற்று செந்தமிழ்மாறனாராருந்திருச்சவை தன்னிலே
வசியக்குலமன்னாகியேவந்தேநவமணி தந்தவா
சிசுவென்னையாளுனை நம்பினேன் சிவசங்கராசிவசங்கரா.      (65)

அனலார்விழியிருகோடொடுமதிருங்குரலொடுகூடலிற்
சினமாரவந்தேயேற்றிடுஞ்சிந்தூரமே பொடியாகென
மனுநீதிமாறன்கையினில் மாய்த்தேமகிழ் கொளுநா தயான்
தினநின்பணிசெயுமாறருள் சிவசங்கராசிவசங்கரா.      (66)

தயவே துமில்லாதெங்கணுஞ்சார்ந்தெவ்வகையுடலிற்புகுந்
தயர்வே செயும்பண்டாசுரன திசூரமாய்த்தமீரர்க்கு முன்
துயர்யாவுநீத்தருள் செய்தவாதொழுமென்வினைவிடைகொள்ளவா
செயவீரனைத்தருமுக்கிராசிவசங்கராசிவசங்கரா.      (67)

தாரார்புயக்குலசேகரத்தமிழ்மாறனார் நினதாலயம்
பாரார்புகழ் கொண்டேத்து முன்படிவந்தனைக்கண்டேங்கியே
வாராயாவணிவேணியாமாறித்திருவடிவையெனச்
சீராரருள் செய்தாண்டவாசிவசங்கராசிவசங்கரா.      (68)

கனலூற்றிடும் விழியுங்கொடுங்காலூற்றிடும்புழைநாசியும்
மனவேகமோடதிவேகமாய்மடமார்சமணர்களே விடும்
பனகந்தனைக்கண்டித்து முன்படியேபுகழ்மாறற்கருள்

சினமற்றமாதவர் போற்றிடுஞ்சிவசங்கராசிவசங்கரா.      (69)

திரமேவுவிண்ணவர்மண்ணவர் செறியைம்புலப்பகைவென்றியல்
வரமே தருமுனிவோர்க்கெலாம் வாழ்வும் பெறுஞ்சுகநன்னெறித்
தரமே முதற்பயனல் கிடுந் தருமப்பரித்துவசத்தனே
சிரமாமலைத்தேவேயருள் சிவசங்கராசிவசங்கரா.      (70)

காரின் வளங்குன்றித்துயர்க்கடல் வீழ்ந்துழக்கியநிம்பநற்
றாரின் புயக்குலபூடணத்தமிழ்மாறனின்றிருமுன்னர்வந்
தாரின் புறவெனையாளுவாரமலாவெனப்பொற்காசருள்
சீரின் கலாநிதிசேகராசிவசங்கராசிவசங்கரா.      (71)

கனமே குழல்கயலே விழிகனியேமொழி தனிமின்னெழில்
அனமேகடையெண்ணாயிரமரிவைக்கு முன்றொடிபூட்டியல்
வனமேதிகழுமையோடுமேவந்தேயருள் செய்தாய்மனச்
சினமேதவிர்த்தெனையாளுவாய்சிவசங்கராசிவசங்கரா.      (72)

கோதாம்பலநெறிபோக்கியே குளிர்பூந்திருவடிதன்னிலே
தீதாம்பலவலர் நீக்கியே தின நன்மலர் கொண்டேத்திட
வாதாம்பலகாரணாதிமும்மலமுங்கெடவந்தாண்டருள்
சீதாம்புயசரணாகதிசிவசங்கராசிவசங்கரா.      (73)

நிதமேயனைத்துதிசெய்கிலேனின தன்பர் தாடொழுதுய்கிலேன்
மதமேயறக்கலைகற்றிலேன் மனமேநிலைபெறவுற்றிலேன்
கதமே கொண்மாதர்களாசையாற்கவலைப்படாதெனையாள்விக
சிதமேவிய திரிநேத்திராசிவசங்கராசிவசங்கரா.      (74)

போதுக்குளேநறையாவை நீ பொருளுக்குளேபொருளாவை நீ
வேதத்துளேயொளியாவை நீவிண்ணுக்குளேவெளியாவை நீ
நாதத்துளேவிந்தாவை தேவையற்ற நற்சுதையாவை நீ
சீதப்புனன்மகணாயகாசிவசங்கராசிவசங்கரா.      (75)

ஆற்றின்னிடிகரையார் தருவலர் தாமரைத்தளிர் நீரும்வண்
காற்றின்னலைகாற்பாசமாய்க்கடுபோயினான்மிகவாடினேன்
நீற்றைப்புனைந்திடுமெய்யனே நிமலா தடுத்தாட்கொள்ளுவாய்
சீற்றந்தவிர் முனிவோர்தொழுஞ்சிவசங்கராசிவசங்கரா.      (76)

கலையைத் தொடர்புலியென்னவேகலுழன்றொடரரவென்னவே
வலையிற்படும் புள்ளென்னமாவழலிற்படும்புழுவென்னவே
மலைவுற்றநோய்தனைநின்கையின்மழுவிற்கிரை தானாக்குவாய்
சிலையாமலையணிகையனே சிவசங்கராசிவசங்கரா.      (77)

வதையாவதைத்திடுவாதநோய்மாளும்படியாணின்னருட்
புதையாருளமேவாதசெம்பொற்சோதியே புகழாதியே
விதையாய்மறைவேராய்வருவிமலாமுனிவரர்போற்றிடுஞ்
சிதையாதவற்பு தசிற்பராசிவசங்கராசிவசங்கரா.      (78)

கார்கண்டநற்பைங்கூழெனக்கலைகண்டவொண்பிணையென்னவும்
ஏர்கொண்டமாமதிகண்டிடுமெழில்வேலை நீத்தம் போலவே
போர்கொண்டவென்பிணிநீக்கிநின்புது மாமலர்த்தாளேயருள்
சீர்கொண்டநற்றேசோமயாசிவசங்கராசிவசங்கரா.      (79)

கொலையேபழுத்திடும் வேற்கணார்க்குருகித்துயர்கொளுமென்மன
நிலைபெற்றிடவருள்செய்குவாய்நிமலா மணக்கமலாலயன்
அலைமேவிய திருமால்பணியமலாவடற்கழையேந்திய
சிலைவேடனையெரிசெய்தவாசிவசங்கராசிவசங்கரா.      (80)

பாரொன்றுநின்புகழோதிலேன்பாவித்திருவடி தாழ்கிலேன்
நீரொன்றநின் முடியாட்டிலேனின தன்பர் தாடொழுதுய்கிலேன்
போரொன்றும் வெவ்வினை தீர்த்துவின் பொற்றாமரைத்தாளேயருள்
சீரொன்றகார் விடமுண்டவாசிவசங்கராசிவ சங்கரா.      (81)

தூதாகினாயொருவற்குமுன்றோகைக்குமோர்தாயாயது
போதாமலேய முதுங்கொடுபொருகானிலேயீந்தாயவர்
மூதாதையோமூதன்னையோமுன்னப்பனோவென்னப்பவ
தீதாமழுப்படையாளனே சிவசங்கராசிவசங்கரா.      (82 )

நீரும்விட நீரூர்ந்திடு நீணாகமுங்கோணாமதித்
தாரும்மலர்த்தாரும் மணித்தடமார்பமும்மடற்சூலமும்
ஆருந்தழலதுபூத்திடுமணிநீறுமாதொருகூறுமாய்ச்
சீருந்து வெள்விடையாயருள் சிவசங்கராசிவசங்கரா.      (83)

கல்லாலெறிந்தவருக்கு முன்காலா லுதைத்தவருக்கும்வல்
வில்லாலடித்தவருக்குமே விரைவாயருள் செய்தாண்டனை
சொல்லா ரணமுடி நீடிய தூயாவுனைத்தொழுவன்மனஞ்
செல்லாவெனையுங்காப்பை கொல்சிவசங்கராசிவசங்கரா.      (84)

செந்தாமரைமுகமென்னவேசேலேயிருவிழியென்னவே
சந்தார் தனம் வரையென்னவே தளர்சிற்றிடை துடியென்னவே -
கொந்தார் குழல்முகிலென்னவேகுலையுமடவாராசையாஞ்
சிந்தாகுலந்தீர்த்தாளுவாய்சிவசங்கராசிவசங்கரா.      (85)

வாதப்பெரும்பிணியோடுளம்வாடித்திகைத்திடுவேனைநின்
பாதத்துகளடைவித்து முன்பவநோயையுந்தீர்ப்பாய்குழைக்
காதைப் பொரும் விழிபங்கனேகடுவார்ந்தமைக்களனே செழுஞ்
சீதப்பனிக்கதிர்சூடியசிவசங்கராசிவசங்கரா.      (86)

அந்தாமரைத்தவிசார் தருமயனே முதற்பலதேவரு
நந்தாவுயிர்க்குயிராமுனை நாடோறும் வந்தனை செய்துதே
னுந் தார்மலர்க்கொடுபூசைசெய்துற்றார்களியானென்செய்குவேன்
சிந்தாகான் வளர்பாகனே சிவசங்கராசிவசங்கரா.      (87)

பரமானநின்பதபங்கயம்பணியாமன்மெல்லடிமேவுசு
புரமாதராசையினாலுழல்புலயேனையோர்பொருளாகவே
திரமானநின்சாணாம்புயத்தேனாரருட்கடன் மூழ்கநீ
சிரமாலையாயருளப்பனேசிவசங்கராசிவசங்கரா.      (88)

அவமானகாரியமென்னிடத்தளவில்லையுன்னடியார்க்குநற்
றவமாம்பணியுஞ்செய்கிலாத்தமியேனினஞ்சொலவேண்டுமோ
நவமானநின்னருள்செய்வதே.நலமாமுமையிடமாகிய
சிவமான தற்பரமூலனே சிவசங்கராசிவசங்கரா.      (89)

மங்காதகாதலையுன்றன் மேல்வைத்தார்கள் சீர்பெற்றார்களென் -
றிங்காரியர்பலருஞ்சொலுமிசைகேட்டுன் மேன்மிகவேட்டவென்
பங்காகி நீயவர்வாய்மொழிபழுதென்றிடாப்படி செய்குவாய்
சிங்காரமங்களதேவனேசி சங்கராசிவசங்கரா.      (90)

அறியேனையாவறமென்பதையருமாமறைமுடியாயெனக்
குறியேனையாவுளநெக்குறக்குழையேனையாமடவார்கள்மேல்
வெறியேனையாநின தன்பர் தாள்மேவிப்பணிபுரியா தவிச்
சிறியேனையாள் முகலிங்கனே சிவசங்கராசிவசங்கரா.      (91)

சதாகாலநின்னருணாடுமென் சலனந்தவிர்த்திட வேண்டுமற்
புதாகாரணக்குருவே சொலைம்பொறியிற்செலுமன நிற்கபொற்
பதாகார்வணன்பங்கேருகன்பணியும் பழம்பொருளாகுநற்
சிதாகாசசின்மயதேவனே சிவசங்கராசிவசங்கரா.      (92)

சுத்தத்திருக்கயிலாயமேற்றோன் றுஞ்சுகாதீதச்சுக
முத்தத்திருக்கின்றோய்நிதமுனிவாதிவந்திடரேசெயு
மித்தத்திருட்கிசைவாகியானிளையாதிருந்திடவேண்டுமென்
சித்தத்திருக்கதைநீக்கியாள் சிவசங்கராசிவசங்கரா.      (93)

மனமாதியாங்காணங்களென்வசமாகவுமயலோருந்
தனமாதியாமூவாசைநோய் சாராமலிச்சகமீதிலே
இனமாதியாம்பலபேதமேயெய்தாமலென்றனையாளுவாய்
சினமால்விடைமிசையேவருஞ்சிவசங்கராசிவசங்கரா.      (94 )

பொருளேது நின்னருளல்லது புகழேதுநின்று தியல்லது
மருளே துநின்கழல் கண்டபின்மகிழேது நீன்னன் பல்லதிங்
கிருளே துனையுட்கொண்டபின்னிணையேதெனக்கிப்பூவினிற்
நெருளே துதைந்திடுவோர்பணிசிவசங்கராசிவசங்கரா.      (95)

அத்தாதிதித்தொழில்சிட்டிசங்காரஞ்செயுமரனே மலத்
தத்தாதியிற்பிறவாகெறி தப்பா தருளிப்போது நீ
சுத்தாதிரிபுரைநாதநற்றுரியங்கடந்திடுசோதியே
சித்தாதியோர்பலருந்து திசிவசங்கராசிவசங்கரா.      (96)

துர்ப்போதனைத்தொழிலார்சொலுஞ்சொற்கேட்டுடன்சுழலாமலே
நற்போதனைக்கிடமாக்கியென்னவை தீர்த்திடுநா தாந்தநின்
அற்போதனைக்கிலையென்னிடத்தையாவிதேமெய்யாகுமே
சிற்போ தசற்குருவேயருள் கிவசங்கராசிவசங்கரா.      (97)

உதையா திபாற்கரபோற்றியென்னுயிராகிநின்றாய்போற்றியன்
பதையாய்ந்தருள்வாய்போற்றிநல்லானந்தவாரிதிபோற்றி மன் -
பதையாவருங்குருபோற்றிபற்பலவாகியபதிபோற்றியே
சிதையா தசிற்பரபோற்றியேசிவசங்கராசிவசங்கரா.      (98)

பரமேந்துபூரணமேந்தியென்பவநாசதற்பரபோற்றியுன்
வரமேந்து புண்ணியர்போற்றுகண்மணிபோற்றிமாநிதிபோற்றிபொன்
னுரமேந்துமால்பணிபாதவுத் தமபோற்றிசிற்சுகபோற்றியச்
சிரமேந்து கையாபோற்றி நற்சிவசங்கராசிவசங்கரா.       (99)

போதாசாண்பரிபூரணப்பொருளே சரண்புரையற்றவோர்
நாதாசரணெனையாண்டருணம்பாசரணறையார்மலர்ப்
பாதாசாணென்சொற்கொளும்பரனேசரண்பரிந்தாண்மனோ
தீதாசரண்சிவனேசரண்சிவசங்கராசிவசங்கரா.      (100)

வான்வாழிகான் மறைவா ரியான்வாழ்த்துந்திருச்சதகத்துடன்
மான்வாழியுன்மழுவாழியொன்மலையன்ன வெண்புயம்வாழியுன்
னான்வாழியன்பர்கள் வாழியுன்னருள்வாழியாரியர்வாழி செந்
தேன்வாழ்மலர்ப்பதம்வாழியிச்செகம்வாழியுன்சீர்வாழியே.      (101)

சிவசங்கர சதகம் முற்றிற்று.

This file was last updated on 3 May 2022.
Feel free to send the corrections to the Webmaster (pmadurai AT gmail.com)