pm logo

மூவர் அம்மானை
(திருவெண்காடு ஆறுமுக சுவாமிகள் தொகுப்பு),


mUvar ammAnai
edited by tiruveNkATu Arumuka cuvAmikaL
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of the soft copy
of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2022.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

மூவர் அம்மானை
(திருவெண்காடு ஆறுமுகசுவாமிகள் தொகுப்பு)

Source:
மூவர் அம்மானை.
இஃது. திருவெண்காடு ஆறுமுகசுவாமிகளால் பார்வையிடப்பட்டு
திருவொற்றியூர் இரிசப்பமுதலியார் குமாரர்
பரசிராமமுதலியாரது பரப்பிரமமுத்திராக்ஷாசாலையிற்
பதிப்பிக்கப்பட்டது.
1869 ௵
--------------------
கடவுள் துணை
மூவர் அம்மானை.

புந்திவனஞ்சூழும் பொருவலில்லாப் பிள்ளையார்,
தந்திமுகன் குடவயிற்றன் சப்பாணியம்மானே,
தந்திமுகன் குடவயிற்றன் சப்பாணியா மாகில்,
இந்தவயிற்றுக் கிரையெங்கே யம்மானே
இன்றென்றே யீசனிரக்கலுற் றானம்மானே (1)

தெள்ளுதமிழ் பெருகுந்திருமுட்டத் தெம்பெருமாள்
உள்ளநிலமெல் லாமுழுதுண் டாரம்மானே,
உள்ளநிலமெல்லா முழுதுண்டாரா மாகில்
கள்ளனிவனென்று கட்டுவதென் னம்மானே
கட்டாரோபோரிற் கதிரொளித்தா லம்மானே (2)

திரிசிரமாபுரவிசன் செட்டிமகட் காய்வேடம்,
தரித்துமருத்துவத் தின்றாயானா ரம்மானே
தரித்துமருத்துவத் தின்றாயானா ராமாகில்
மருத்தெண்ணெய்ச் சிக்கன்றி மணமிவர்க்கே தம்மானே,
மட்டுவார் சூழலிருக்க மணமரிதோ வம்மானே (3)

சந்ததமும் பூபோற்றுஞ் சைவசோணா சலனார்,
கந்தனது மாமிதன்னைக் கைபிடித்தா ரம்மானே,
கந்தனது மாமிதன்னைக் கைபிடித்த ராமாகில்,
இந்தவுல கத்தினிற் கேற்குமோ வம்மானே
ஏற்குமென்றே கையின் மழுவேந்தினர் காணம்மானே (4)

விரிந்த புகழ்புள் ளிருக்கும் வேளூர்வ யித்தியனார்,
பரிந்துவினை தீர்க்குந் தெய்வப் பண்டிதர் காணம்மானே
பரிந்துவினை தீர்க்குந்தெய்வப் பண்டிதரே யாமாகில்
மருந்த விலை கைக்கூலி வாங்கு வரோவம்மானே
வாயில் மண்போட்டு வாங்குவர்கா ணம்மானே (5)

புள்ளிருக்கும் வேளூர்ப் புண்ணியனார் பெற்றமுத்துப்
பிள்ளைதனக் கிந்திரனார் பெண்கொ டுத்தாரம்மானே
பிள்ளைதனக் கிந்திரனார் பெண்கொடுத் தாராமாகில்,
வள்ளிதனைக் கொள்ள வழக்குண்டோ வம்மானே
வள்ளியம்மை யம்மான் மகளல்லோ வம்மானே. (6)

மருப்பாரும் பூஞ்சோலை மலைவாழ ரங்கேசர்
திருப்பாற் கடலுடைய செல்வர்கா ணம்மானே
திருப்பாற் கடலுடைய செல்வரே யோமாகில்,
ஏற்பாற்குப் பெண்கொடுப்ப தேச்சலவோ வம்மானே
என்றலவோ மண்ணையுண் டிருந்தனர்கா ணம்மானே (7)

சுசன் பசிவாகி யேமனிளங் கன்றாகி
வீசுபுக ழாரூரின் வீதிவந்தா ரம்மானே
விசுபுக ழாரூரின் விதிவந்தா ராமாகில்
. …………………………………………..
………………………………………….. (8)

ஆறுமுக மாறாறா யாகமெல்லாம் வேறாறாய்
வீறுடைய சண்முகவர் வேதாந்தி யம்மானே
வீறுடைய சண்முகவர்வேதாந்தி யாமாகில்
மாறுடைய வேடவள்ளி மருவுவதென் னம்மானே
மருவென்றே சிவமலையின் மருவினா ரம்மானே (9)

மாலறியாக் கள்ளனிவன் வந்துமன்றி லேபுகுந்து
கோலமுட னாடெடுத்துக் கொண்டொளித் தாரம்மானே
கோலமுட னாடெடுத்துக் கொண் டெளிந்தா ராமாகில்
காறலைகடோ லெலும்புகண்ட துண்டோ வம்மானே
கண்டலவோ விருகழிகு காத்திட்டதம்மானே (10)

தெண்டிரை சூழ்தில்லைச் சிவகாமி தாயார்க்கு
கண்டமெல் லாஞானக் கரும்புகா ணம்மானே
கண்டமெல் லாஞானக் கரும்புகா ணாமாகில்
அண்டர்பிரா னாலைதனை யாட்டாரோ வம்மானே ஆடிப்புலி யூரமர்ந்த னர்கா ணம்மானே (11)

மங்கையு மைபாகர் வழுவூர் விடைநாதர்
திங்களு டன்கங்கை தினஞ்சுமந் தாரம்மானே
திங்களுடன் கங்கைதினஞ் சுமந்தா ராமாகில்
அங்கமெல் லாங்குளிர்ச்சி யாகாதோ வம்மானே,
ஆமென்றே யானையுரித் தணிந்தனர்கா ணம்மானே (12)

வற்றாத வைகையிலும் வாள்விசையன் றன்கையிலும்
பற்றாம லன்னரடி பட்டனர்கா ணம்மானே
பற்றாம லன்னரடி பட்டனரே யாமாகில்
செற்றார் புரமெரித்த சேவகமே னம்மானே
சேவகத்தை கேட்கச் சிரிப்பலவோ வம்மானே (13)

ஆதாரமாங் குடந்தை யானகும்ப நாயகனார்
கோதாடுமன் மதனைக்கொண் டெரித்தா ரம்மானே
கோதாடுமன் மதனைக்கொண் டெரித்தாரா மாகில்
மாதாபிதாக் கள்பழி வாங்குவரோ வம்மானே
வாங்குமுன்னே வாய்தனிலே மண்விழுந்த தம்மானே. (14)

தெற்குமுக மாயிருக்குந் தில்லைச்சிற் றம்பலவர்
நற்புவியே ழுக்குகந்த நாயகர்கா ணம்மானே
நற்புவியே ழுக்குகந்த நாயகரே யாமாகில்
அற்பவிடைப் பெண்ணை யணைவதென் னம்மானே
அணைந்தல் லோவுருவ மானதுகா ணம்மானே. (15)

விரித்தச டைமுடியார் மேலைச்சி தம்பரனார்
வருத்தமுடன் றமக்கொருகால் வாதங்கர ணம்மானே
வருத்தமுடன் றமக்கொரு கால்வாதமே யாமாகில்
டெருத்தகட னஞ்சையுண்டு பிழைத்தரோ வம்மானே
பிழைத்தலவோ நடமாடப் புறப்பட்டா ரம்மானே. (16)

பாட்டைப் பிடித்துப் பயனறிய மாட்டாசார்,
ஏட்டைப் படித்தோதி யெய்தினர்கா ணம்மானே,
ஏட்டைப் படித்தோதி யெய்தினரே யாமாகில்,
பாட்டின் விதியின் பயனறியா ரம்மானே
பயனறியா வாசியன்றோ பட்டனர்கா ணம்மானே (17)

பெற்றபிள்ளை பேரறிந்து பேரிட்ட ழையாமன்
மற்றுமொரு பேரைவகுத் தழைத்தா ரம்மனே
மற்றுமொரு பேரைவகுத் தழைத்தா ராமாகில்
பெற்றத கப்பனது றியா ரம்மானே
பேரறியவா யன்றோபோய் மாண்டா ரம்மானே (18)

தெண்டிரை சூழ்தில்லைச் சிவகாமி சுந்தரியள்,
மண்டல மீரேழுக்கு மாதர்கா ணம்மானே
மண்டல மீரேழுக்கு மாதாவே யாமாகில்
தண்டிகை யேறச்சிலர் கடாங்குவ தென்னம்மானே
தாங்குவது மேறுவதுந் தருமந்தா னம்மானே (19)

கல்லாலின் கீழிருக்குங் காளஸ்திரி யார்தமக்கும்
பொல்லாச் சிலந்தியொன்று பொருந்தின தென்னம்மானே
பொல்லாச் சிலந்தியொன்று பொருந்தினரே யாமாகில்
வல்லானொரு பணிக்கன் வந்ததுண்டோ வம்மானே,
வந்தன்றோ வேடன்வரம் பெற்றா னம்மானே. (20)
கண்டவர்க்கு முத்திகொ டுக்குங் கணபதிக்கு
மண்டலத்தை யுண்டதொரு மாமனுண்டோ வம்மானே,
மண்டலத்தை யுண்டதொரு மாமனுண்டே யாமாகில்,
கொண்டிருக்கப் பெண்ணைக் கொடுப்பர்களோ வம்மானே,
கொம்பனுக்கும் பெண்ணைக் கொடுப்பாரே யம்மானே. (21)

மாட்டிற் பவனிவரு மதுரைக்கு நாயகனார்
காட்டில்வி றகொடித்த காரணர்கா ணம்மானே
காட்டில்வி றகொடித்த காரணர்கா ணாமாகில்,
கூட்டியதைக் கட்டக்கொ டியுண்டோ வம்மானே
கூடாதோ பாசங் குடியிருந்தா ரம்மானே (22)

பாரிற்புகழ் படைத்த பாரமலைச் சிலையான்
வாரிநஞ்சை யுண்டமத மத்தன்கா ணம்மானே
வாரிநஞ்சை யுண்டமத மத்தனே யாமாகில்,
கூறரிய நஞ்சுதான் கொல்லாதோ வம்மானே,
கொல்லுமோ மாற்றறிந்து கொண்டக்கா லம்மானே. (23)

திங்கடனை முடித்த சிங்கபுரி யீச்சுரனார்,
துங்கவேளைக் கரும்பைச் சுட்டனர்கா ணம்மானே
துங்கவேளைக் கரும்பைச் சுட்டனரே யாமாகில்
அங்கமெல்லா நீலவன்ன மானதென்னோ வம்மானே,
ஆகாதோவா லமடர்ந்து நின்றா லம்மானே (24)

தேனமருஞ் சோலைத்திரு வரங்கத் தேம்பெருமாள்,
ஆனவர்தா னாண்பெண் ணலியினர்கா ணம்மானே
ஆனவர்தா னாண்பெண் ணலியின ரேயாமாகில்
ஜானகியைக் கொள்ளுவரோ தாரமா யம்மானே
தாரமாய்க் கொண்டதுவுஞ் சாபத்தா லம்மானே (25)

திருக்கிளர் விராலிமலைச் செவ்வெல ரோதிவைத்த
குருக்குடலை தனிலே குட்டினர்கா ணம்மானே,
குருக்கடலை தனிலே குட்டினரே யாமாகில்
பெருக்கவி வர்க்கும்பெரு மையுண்டோ வம்மானே,
மெருமையிலு மேலான பெருமாள்கா ணம்மானே (26)

எடுத்த புகழரங்க ரேழுலகுந் தானறியப்,
படுத்திருந்த நாகம்பட மெடுத்த தம்மானே,
படுத்திருந்த நாகம்பட மெடுத்த தாமாகில்,
அடுத்துநின்ற கருடனைக்கண் டஞ்சாதோ வம்மானே,
அஞ்சுதலைக் கொண்டலவோ வமர்ந்திருந்த தம்மானே (27)

அத்திபுர மெரித்த வாலங்காட் டப்பருக்கு
நெற்றிக்கண் ணொன்று நெருப்புக்கா ணம்மானே,
நெற்றிக்கண் ணொன்று நெருப்புக்கா ணாமாகில்,
பற்றிச்ச டையிற் படராதோ வம்மானே
படருமென்றே கங்கைபதி விருந்தா ளம்மானே. (28)

தேசத்துக் கொப்பாகச் சிதம்பரத்துத் தெற்காக,
வாசத்துக் கேற்றதல மாயபுர மம்மானே
வாசத்துக் கேற்றதல மாயபுர மாமாகில்
காசிக்குப் போனபலன் காணுமோ வம்மானே,
காவேரிக் கரைகண்டாற் காணுங்கா ணம்மானே. (29)

பெருங்கவாயத் துறையும் பெருமயிலுஞ் சென்மயிலும்
முருங்கையி லேயத்திமு ளைத்ததுகா ணம்மானே,
முருங்கையி லேயத்திமு ளைத்ததுகா ணாமாகில்,
பருங்காயாய்க் காய்த்துப்பு றிப்பாரோ கம்மனே,
பறித்தலவோ கொம்பொடித்துப் பண்ணுகிறா ரம்மானே.(30)

கோணாரிளை முலையார் கோதையிடப் பாகரை
சேணாடர் போற்றுந் திரிபாகர்கா ணம்மானே,
சேணாடர் போற்றுந் திரிபாகரே யாமாகில்,
ஏனாதி மல்பிரமற் கெட்டுவரோ வம்மானே
இடைமதிங்குங் குகைமதிக்கு மெட்டுவரோ யம்மானே (31)

நண்ணியசீர்ப் பூணலுட னட்டாற்றோ ராவருக்குக்,
கண்ணிலும்வா யிலுநெருப்புக் கையிலுமுண்டோ வம்மானே
கண்ணிலுவா யிலுநெருப்புக் கையிலுமுண்டே யாமாகில்
எண்ணரிய திருமேனி யெரிவுண்டே யம்மானே,
எரிந்தலவோ நட்டாற்றி லிருக்கின்றா ரம்மானே. (32)

நாடுசரிசி றந்தசம்புநா தற்கிருப் பிடத்தில்
ஓடும்சலம் பெருகியூற் றெடுத்த தம்மானே,
ஓடுஞ்சலம் பெருகியூற் றெடுத்த தாமாகில்,
சாடுஞ்சி லந்தியொன்று தானுண்டோ வம்மானே,
நீலத்திலொ ருசிலந்தி தானுண்டோ யம்மானே. (33)

சுத்தன் புறட்டன் சுவாமிவடி வேலன்
எத்தன் குலத்திற் கிருளன்கா ணம்மானே
எத்தன் குலத்திற் கிருளனே யாமாகில்
மத்தன் கிழங்குகெல்ல வல்லவனோ வம்மானே
வள்ளிக் கொடிக்கு மயூரன்கா ணம்மானே (34)

செல்வத்தி லேபிறந்து திருக்கடையூ ரானைநம்பி,
வில்வமெடுத் தேத்துதற்கு வினைவருமோ வம்மானே,
வில்வமெடுத் தேத்துதற்கு வினைவருமே யாமாகில்,
வில்வவிருக்க மெல்லாம் வீண்போமோ யம்மானே,
வீண்போகா தேமனையே விழவுதைத்தா ரம்மானே (35)

வேதமெடுத் துவிளங்கு கின்றமெய்ப் பொருளின்,
பாதமிருக் கும்பரி சறியா ரம்மானே
பாதமிருக் கும்பரி சறியா ராமாகில்
காதவழி யோடிக்க லங்குவதென் னம்மானே,
கலங்காம லெவ்வுயிருங் கண்டதுண்டோ வம்மானே (36)

ஆதிதனில தியறிந்து ரைக்கமாட் டாதார்
சோதியொ ளிவதனைச் சொல்லுவரோ வம்மானே,
சோதியெ ளிவதனைச் சொல்லுவரே யாமாகில்
வாதிதனக் குள்ளாகி வருந்துவதென் னம்மானே
வருந்தா ரோமாயை மயக்கத்தா லம்மானே. (37)

சித்தசன் றன்னைத் திருவாய்மெய்த் தேசிகனை
உற்றபொ ருடன்னை யுண்டறியா ரம்மானே.
உற்றபொ ருடன்னை யுண்டறியா ராமாகில்
அந்தனி வனிடமா யாடுவனோ வம்மானே
ஆடானோ தன்றொழிலி லடுவன்கா ணம்மானே (38)

எட்டெழுத்து மைசெழுந்து மேகமெனு மோ..ழுப்பும்,
கொட்டெழுத் தைகாட்டுந் துரையறியா ரம்மானே,
கொட்டெழுத் தைகாட்டுந் றையறியா ராமாகில்
சுட்டசுடு காடிதென்று சொல்லுவரோ வம்மானே,
சொல்லுவார் குருவினரு டொந்திப்பா யம்மானே (39)

சாதிகுல மொன்றாகத் தர்க்கமிடும் பேதையர்கள்,
சாதிகுல மின்னதென்று தாமறியா ரம்மானே
சாதிகுல மின்னதென்று தாமறிவா ராமாகில்
ஆதியந்த நாத மறிவாரோ வம்மானே
அறியாத வாசியதே யாணுவங்கா ணம்மானே. (40)

சாத்திரங் கள்கற்றுந் தனையறிய மாட்டாதார்
வேர்த்துறக் கம்வந்த விதமறியா ரம்மானே
வேர்த்துறக் கம்வந்த விதமறிவா ராமாகில்,
சூத்திரத்திற் சூட்சமுனை சொல்லுவரோ வம்மானே
சொல்லார் குருவினரு டொந்திப்பா ரம்மானே (41)

குருவை யறியார் குருவினரு டாமறியார்
திருவை யெடுத்த திறமறியா ரம்மானே
திருவை யெடுத்த திறமறிவா ராமாகில்,
மதுப்போது கொண்டுவந்த வகையறியா ரம்மானே,
வகையறி யாவாசியன் றோமாயைகா ணம்மானே (42)

சந்திரனை சூரியனைத் தாமறிய மாட்டாதார்
அந்தரத்தைப் பார்த்துப்பார்த் தலைவதென் னம்மானே,
அந்தரத்தைப் பார்த்துப்பார்த் தலைவரே யாமாகில்,
சந்திரனோ டொன்றுஞ் சரியாகா ரம்மானே,
சரியாவர் சகலகுணந் தாமடுத்தா ரம்மானே (43)

வீடுகட்டி வீடெடுத்து வீடிழந்து போவார்கள்,
பாடுபட்டுப் பெற்ற பதியறியா ரம்மானே
பாடுபட்டுப் பெற்ற பதியறிவா ராமாகில்,
கூடுவிட்டுப் பாயுங்கு றிப்பறியா ரம்மானே,
குறிப்பறியா மானிடர்கள் குருடர்கா ணம்மானே (44)

எல்லையற் றதொன்றே யிருக்குமிட மறியார்
கல்லையுரு வாக்குவித்துக் கைதொழுதா ரம்மானே,
கல்லையரு வாக்குவித்துக் கைதொழுதா ராமாகில்,
சொல்லுக்கே யிங்கிதமாய்ச் சொல்லுமோ வம்மானே,
சொல்லாதோ தன்மனது சொல்லிடுங்கா ணம்மானே, (45)

பின்னாசை கொண்டு பிதற்றுகின்ற பேதையர்கள்,
தன்னாசை நின்ற தலமறியா ரம்மானே
தன்னாசை நின்ற தலமறியா ராமாகில்
பன்னும் பொருளறிந்து பற்றுவரோ வம்மானே
பற்றுவா ரந்தப்பதி யறிந்தா ரம்மானே. (46)

தம்பட்ட மேளந்த வின்முரச மெக்காளம்
தொம்பிட்ட சத்தந்தொ னியறியா ரம்மானே
தொம்பிட்ட சத்தந்தொ னியறிவா ராமாகில்
கும்பிட்டு நின்று குழைவதென் னம்மானே.
குழைவாரொ ருவனையே கூடவொண்ணா ரம்மானே. (47)

அன்னைசுற்றம் பெண்டுபிள்ளை யாசையென்னு மிப்பொருளை,
இன்னநிற மின்னகுண மென்றறிவா ராமாகில்,
தன்னுருவங் கண்டநிறஞ் சாற்றுவரோ வம்மானே,
சாற்றுவார் சற்குருவைச் சார்ந்தக்கா லம்மானே. (48)

சித்திரத்தைப் போலுருவைச் சேர்த்தெடுத்து வைத்தாலும்,
உத்தரத்துக் குத்தர மோங்குமோ வம்மானே,
உத்தரத்துக் குத்தரமோங்குமே யாமாகில்,
மற்றுமொரு ரூபம்வழங் குவதென் னம்மானே,
வழங்குவரோ மாவடியில் வாழ்ந்திருந்தா ரம்மானே. (49)

உச்சிமதி யையுயொ ழிந்தேன் பல்லுலகில்
உச்சிமதி யையுயா ரியா ரம்மானே
உச்சிமதி யையுயா ரியா ராமாகில்
இச்சிமதி யையுண் ணாரோ வம்மானே
உண்ணாரே உட்பொருளை யுண்டவர்கா ணம்மானே (50)

நாமமிடு வார்நடு வேநடு விடுவார்
நாமமிருக் குநடு வறியா ரம்மானே
நாமமிருக் குநடு வறியா ராமாகில்
காமனையுங் காலனையுங் கட்டுவரோ வம்மானே
கட்டாரே மேலிருத்திக் கொண்டாக்கா லம்மானே (51)

மந்திரத்தைக் கற்றுமதி மயங்கும் பேதையர்கள்,
மந்திரத்தின் வித்துவகை யறியா ரம்மானே
மந்திரத்தின் வித்துவகை யறியா ராமாகில்,
அந்தாததினுட் பொருளை யறிகுவரோ வம்மானே
அறியாரோ தங்களறி வினா லம்மானே (52)

பெண்ணறிந்து மாணறிந்தும் பேசும்பொ ருளறிந்தும்,
கண்ணறிந்து வாழக் கணக்கறியா ரம்மானே,
கண்ணறிந்தும் வாழக் கணக்கறிவா ராமாகில்,
பெண்ணிதென்று மாணிதென்றும் பேசுவதென் னம்மானே,
பேசும்பொ ருளறித்தார் பேசார்கா ணம்மானே. (53)
எட்டெழுத்தே வீடாயி சைந்தநடு வணையைப்
பட்டுருவிப் பார்க்கப் பரிசறியா ரம்மானே
பட்டுருவிப் பார்க்கப் பரிசறியா ராமாகில்
எட்டெழுத் தையீன்ற வியலறியா ரம்மானே
இயலறியா வாசியன்றோ வெய்துவது மம்மானே (54)

சித்தாந்தந் தன்னைத் தெளியவறி யாதார்
பெற்றதிரு நாமம் பேசுவரோ வம்மானே
பெற்றதிரு நாமம் பேசுவரே யாமாகில்
வித்தான வித்தை விளம்புவரோ வம்மானே
விளம்புவார் மெய்ப்பொருளை மேவினா லம்மானே (55)

ஐம்பத்தோரக் கரத்தை யாராய்ந் தறியாதார்
கம்பத்தொழி றன்னைக் கண்டறி ரம்மானே
கம்பத்தொழி றன்னைக் கண்டறியா ராமாகில்
செம்பொற் பந்தையிவர் சேருவரோ வம்மானே
சேருந்திரு நாமஞ் செப்புவரே யம்மானே (56)

ஆடுபதி யையறிந்து ரைக்க மாட்டாதார்
கூடும்பொ ருளறிந்து கூடுவரோ வம்மானே.
கூடும்பொ ருளறிந்து கூடுவரே யாமாகில்
வீடறிந்து கொண்டு விளம்புவரோ வம்மானே
விளம்பாத பேதையர்க்கு மெய்வருமோ வம்மானே (57)

சந்திரனைக் காணாதே தயங்குகின்ற பேதையர்கள்,
அந்திபக லானதுவே யாய்ந்தறியா ரம்மானே,
அந்திபக லானதுவே யாய்ந்தறிவா ராமாகில்,
மந்திரத்தைக் காணாதே மயங்குவதென் னம்மானே
மயங்குவது தான்சின்ன மாயையா லம்மானே (58)

அருளறிந்து சேர்க்க வறியாத பேதையர்கள்
பொருளறிந்து சேர்க்கப் பொருதுவரோ வம்மானே,
பொருளறிந்து சேர்க்கப் பொருதுவரே யாமாகில்,
இருடனையே நீக்கி யிருப்பாரோ வம்மானே,
இருப்பார னுதினமு மெங்கெங்கு மம்மானே (59)

வாசிக்குள் ளாகிமயங் குகின்ற பேதையர்கள்
ராசிதனைக் கட்டவகை யறியா ரம்மானே
ராசிதனைக் கட்டவகை யறியா ராமாகில்
தேசிகனைக் கண்டு தெரிசியா ரம்மானே
தெரிசிப்பார் சித்தர் சிவபத்த ரம்மானே. (60)

தாயையறி யாதார்தகப் பனையுந் தாமறியார்க்
தாயிருந்த வத்தலமுந் தாமறியா ரம்மானே
தாயிருந்த வத்தலமுந் தாமறிவா ராமாகில்
காயமுருவா னதைக்கண் டறியா ரம்மானே
காமனையுங் காலனையுங் கணக்கறியா ரம்மானே (61)

ஒடுக்க மறியரு ணர்வுநினை வறியார்
படுக்கையிலே நித்திரையைப் பார்த்துறங்கா ரம்மானே
படுக்கையிலே நித்திரையைப் பார்த்துறங்கா ராமாகில்,
எடுத்துரைத்த சாத்திரங்க ளிறந்தனகா ணம்மானே,
இறந்து பிறப்பனவு மிருவினைகா ணம்மானே (62)

தன்வீடுந் தன்முதலுந் தாமறிந்து வாழாமல்
பின்வீடும் பின்முதலும் பேணுவர்கா ணம்மானே
பின்வீடும் பின்முதலும் பேணுவரே யாமாகில்
தன்வீடுந் தன்முதலுந் தாமறிந்தா ரம்மானே
தாமறிந்தால் வீடுகட்டத் தலமறியா ரம்மானே (63)

தன்மமறி யார்தவத்தி நிலைய றியார்
இம்மையிலே மோட்சகதி யெய்துவரோ வம்மானே
இம்மையிலே மோட்சகதி யெய்துவரே யாமாகில்,
தன்மமறியா மற்றவிப்ப தென்ன வம்மானே (64)

உள்ளத்தி னுள்ளேயொ ளித்திருக்கு முத்தமனைக்,
கள்ளத்தி ருக்கறுத்துக் காண்பரோ வம்மானே,
கள்ளத்தி ருக்கறுத்துக் காண்பரே யாமாகில்
தள்ளப்படா தென்றவினை தள்ளுவரோ வம்மானே,
தள்ளுவரா தாமிருக்குந் தலமறியா ரம்மானே (65)

கடையறிந்து விற்கணக் கறியா மூடர்கடாம்
எடையறிந்து வாணிபத்தை யெய்துவரோ வம்மானே,
எடையறிந்து வாணிபத்தை யெய்துவரே யாமாகில்,
கடையறிந்து ……………கைக் கட்டுவரோ வம்மானே,
கட்டறியா வாசியன்றோ கலங்குவது மம்மானே (66)

தில்லையறி யார்சிவ தத்தைத் தாமறியார்,
எல்லையில் லாப்பேரொளியி னெய்துவரோ வம்மானே
………………………………………………………….. (67)

வெண்ணீறிடு வார்விழு வார்விதம் விதமாய்
வெண்ணீறு பூத்தவித மறியா ரம்மானே
வெண்ணீறு பூத்தவித மறிவா ராமாகில்
மண்ணீறி ருக்கும்வகை யறியா ரம்மானே
வகையறிய வாசியல்லோ மயங்குவது மம்மானே (68)

தந்தைக்கு முன்பிறந்து தகப்பனுக்குப் போதகத்தை,
அந்தமுத றான்கடந்தே யறிவித்தா ரம்மானே,
அந்தமுத றான்கடந்தே யறிபித்தாமா ராமாகில்,
தந்தையிட மாகவல்லோ தாமிருந்தா ரம்மானே,
தாமிருந்து மட்பொருளைத் தாமறியா ரம்மானே (69)

பிறந்தவுடலை விட்டுப் பிறம்போன சீவனைத்தான்,
உறங்குதென்று சொல்லவுறக்க முண்டோ வம்மானே,
உறங்குதென்று சொல்ல வுறக்கமுண்டே யாமாகில்,
உறக்கமு மற்றே யோடுதுகா ணம்மானே.
ஓடுகின்ற சீவனுக்கே யுணர்வடுவா ரம்மானே (70)

கட்டாணி முத்துக்க யற்கண்ணி பங்கிலுறை,
அட்டாலைச் சொக்கருக் கேயாறுசிர சம்மானே
அட்டாலைச் சொக்கருக் கேயாறுசிர சாமாகில்
எட்டாத வெள்ளமி ழுக்குமோ வம்மானே
இழுக்கும் பெருகரையி லிருப்பவரை யம்மானே (71)

ஆயன் கடைகடக்க வம்பலமு மாயிருக்க
மாயமாயா டெடுத்த மகதேவ ரம்மானே
மாயமாயா டெடுத்த மகதேவ ராமாகில்
ஆயனுஞ் சற்றேயறி வாரோ வம்மானே
அறிந்தல்லோ நித்திரைக்கண் ணானார்கா ணம்மானே. (72)

குற்றமில்லாச் சங்கரனார் கோயிலுக்குள் ளேயிருவர்,
புற்றுமண் ணையளந்து பொருள்பறித்தா ரம்மானே,
புற்றுமண் ணையளந்து பொருள்பறித்தா ராமாகில்,
தத்தமண் மீதிற்றா னில்லையே வம்மானே,
இல்லையென் றபேர்க்கீச னில்லைகா ணம்மானே (73)

பொய்யுங் களவும் புலையுந் தவிராதார்
பொய்யுங் களவும் புலைதவிர்த்தா ரம்மானே
பொய்யுங் களவும் புலைதவிர்த்தா ராமாகில்
மெய்யென் றெடுத்துத்துணை மேவுவரோ வம்மானே,
மேவுவரோ நின்றநிலை மேவினா லம்மானே (74)

நேரஞ் சிறுக்கு நிலையறிய மாட்டாதார்
பாரஞ் சிறுக்கும் பதியறியா ரம்மானே
பாரஞ் சிறுக்கும் பதியறியா ராமாகில்
வீரஞ் சிறுத்து வினவுவரோ வம்மானே
விரையா லநுபூதி விதத்தினா லம்மானே (75)

ஆங்கார மச்சமகத் தறியாமூடர் கண்மெய்
நீங்காதி ருக்குநிலை யறியா ரம்மானே
நீங்காதி ருக்குநிலை யறிவா ராமாகில்,
போங்கால மானபொ ருளறியா ரம்மானே,
பொருளறி யாப்பொய்க் குருளவே போற்றுவதென் னம்மானே (76)

இடமறிந்து கொண்டே யிருக்கறியாப் பேதையர்கள்
சடமறிந்து வாழத் தடமறியா ரம்மானே,
சடமறிந்து வாழத் தடமறியா ராமாகில்
சடந்தனிலே சற்குருவைத் தாமறியா ரம்மானே,
தாமறியாத் தலைவனையுந் தானறிந்தா ரம்மானே (77)

சற்குருவி னாசனத்திற் சரியாகவே யிருந்து
தர்க்கமிடு மூடருக்குத் தவம்வருமோ வம்மானே,
தர்க்கமிடு மூடருக்குத் தவம்வருமே யாமாகில்,
இப்புவியி லேநரக மெய்துவதென் னம்மானே,
ஏழுநரகின் கீழேயிருந் தனர்கா ணம்மானே (78)

அந்தப்பசும் பொற்கிரிவா ழாதிசத்தி நாதரவர்
வந்தபுலித் தோலுரிக்க வல்லா ரம்மானே
வந்தபுலித் தோலுரிக்க வல்லா ளாராகில்
இந்தமலை மேலிருப் பதென் னம்மானே
இருந்தார் மலையன்மக ளின்பத்தா லம்மானே (79)

(சில செய்யுட்கள் முழுமையாக இல்லை)

மூவர் அம்மானை முற்றிற்று

This file was last updated on 22 Nov 2022
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)