pm logo

"திருவையாற்றுப்‌ புராணம்‌
(பஞ்சநத மான்மியம்‌) - முதல்‌ பாகம்‌ "

tiruvaiyaRRup purANam - part 1
(pancanata mAnmiyam)
In Tamil script, unicode/utf-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Tamil Virtual Academy for providing a scanned PDF of this work.
We thank Dr. Meenakshi Balaganesh, Bangalore, India for her assistance in the preparation of this work for publication.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
https://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

"திருவையாற்றுப்‌ புராணம்‌
(பஞ்சநத மான்மியம்‌) - பாகம் 1 "

Source:
திருவையாற்றுப்‌ புராணம்‌
பஞ்சநத மான்மியம் - [அருஞ்சொல்‌ உரையுடன்]
பதிப்பாசிரியர்‌ : பேராசிரியர்‌. சி. கோவிந்தராசனார்‌
தஞ்சாவூர்‌ மகாராஜா சரபோஜியின்‌
சரசுவதி மகால்‌ நூல்‌ நிலையம்‌
அரண்மனை, தஞ்சாவூர்‌.
1991 , விலை ரூ. 44/-
தஞ்சை சரசுவதி மகால்‌ வெளியீட்டு எண்‌, 327
-------
திருவையாற்றுப்புராணம் ( பஞ்சநத மான்மியம்‌ )
1. கடவுள்‌ வணக்கம்‌ (17) 11. சதானந்தனத்தியாயம்‌ (102)
2. அவையடக்கம்‌ (4)12. சிவசருமனத்தியாயம்‌ (43)
3. புராண வாழ்த்து (4)13. சிவதாசனத்தியாயம்‌ (56)
4. ஆச்சிரமச்‌ சிறப்பு (38)14. சுசிகரனத்தியாயம்‌ (52)
5. பிரியவிரதன்‌ காதை (82)15. சுசரிதனத்தியாயம்‌ /
பிரணதார்த்திகர்‌ சருக்கம்‌ (97)
6. ததீசி அத்தியாயம்‌ / நால்விலங்கு
கதிபெற்ற‌ சருக்கம்‌ (48)
16. சருவ விசையனத்தியாயம்‌ (154)
7. சுரதனத்தியாயம்‌ (76)17. தேவனத்தியாயம்‌ (27)
8. இந்திரரத்தியாயம்‌ (26)18. அனித்தியரத்தியாயம்‌ (61)
9. திருமகளத்தியாயம்‌ (20)19. கிரிச்சிரரத்தியாயம்‌ (70)
10. கவதமனத்தியாயம்‌ (41)20. பிரதக்கணயோகம்‌ (19)
---------

வெளியிடுவோர்‌ உரை

திருவையாறு என்னும்‌ இத்தலம்‌ தஞ்சாவூர்‌ திருமானூர்‌ சாலையில்‌ தஞ்சைக்கு வடக்காக 13 கிலோ மீட்டர்‌ தொலைவில்‌ உள்ளது. இது சோழ நாட்டுத்‌ தேவாரத்‌ தலங்கள்‌ வரிசையில்‌ காவிரியின்‌ வடகரைத்‌ தலமாகப்‌ போற்றப்‌ பெறுகின்றது. அப்பர்‌ சுவாமிகளுக்குக்‌ கயிலை தரிசனம்‌ அளித்தது இத்திருத்‌தலமாகும்‌. சோழப்‌ பெருமன்னர்களால்‌ எடுக்கப்‌ பெற்ற ஐயாறப்பர்‌ திருக்கோயில்‌, வடகயிலாயம்‌, தென்கயிலாயம்‌ (லோகமா தேவீச்சரம்‌) ஆகிய மூன்று கற்றளிகளை உடையது திருவையாறு ஆலயமாகும்‌. நாதப்‌ பிரம்மம்‌ என்று அழைக்கப்‌ பெறும்‌ ஸ்ரீ தியாகய்யர்‌ சென்ற நூற்றாண்டில்‌ வாழ்ந்த பதியும்‌ இவ்வூராகும்‌.

ஸ்ரீ தியாகய்யர்‌ சங்கீத மும்மூர்த்திகளில்‌ ஒருவராவர்‌. இவர்‌ வடமொழி- யிலும்‌, தெலுங்கிலும்‌ சிறந்த புலமை பெற்றவர்‌. இவர்‌ கடைசிக்‌ காலத்தில்‌ சந்நியாசம்‌ வாங்கிக்‌ கொண்டதால்‌ இவருக்கு “நாத பிரம்மானந்தர்‌” என்கிற பெயர்‌ கொடுக்கப்பட்டது. இவர்‌ சமாதி இத்திருத்தலத்தில்‌ இருப்பதால்‌, ஆண்டு தோறும்‌ இவருடைய நினைவு நாள்‌ புஷ்ய பகுள பஞ்சமியன்று இவ்வூரிலும்‌, மற்ற ஊர்களிலும்‌ வெளிநாடுகளிலும்‌ சிறப்பாகக்‌ கொண்டாடப் படுகின்றது. அது சமயம்‌ தொடர்ந்து தியாகராஜ ஆராதனை பல இசை வித்துவான்களால்‌ நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

பஞ்சநதம்‌ என்று வடமொழியில்‌ கூறப்பெறும்‌ திருவையாறு திருத்தலத்தின்‌ புராணப்‌ பெருமையினைப்‌ பஞ்சநதமான்மியம்‌ என்னும்‌ வடமொழி நூல்‌ விரித்துரைக்கின்றது. தஞ்சை நாயக்க அரசர்களின்‌ மதி அமைச்சராய்த்‌ திகழ்ந்த கோவிந்த தீட்சிதரின்‌ வேண்டுகோளுக்கிணங்க பஞ்சநத மான்மியம்‌ தமிழில்‌ பாடல்‌ வடிவில்‌ எழுதப்‌ பெற்றதை இந்நூலின்‌ பாடல்‌ ஒன்று கூறுகின்றது. நூலாசிரியரின்‌ இயற்பெயர்‌ குறிக்கப்பெறவில்லை- யாயிலும்‌, அவரது பிற பெயர்களாக வேதப்‌பிரியன்‌, சிரவண மன்னன்‌ என்ற பெயர்களை நூலின்கண்‌ உள்ள குறிப்புகளால்‌ அறியமுடிகிறது.

கி. பி. 17-ம்‌ நூற்றாண்டில்‌ மலர்ந்த இத்தமிழ்‌ நூலினை ஏட்டுச்‌ சுவடியிலிருந்து நூல்‌ வடிவாகக்‌ கரந்தைப்‌ புலவர்‌ சி. கோவிந்தராசனார்‌ அவர்கள்‌ செம்மையுற நன்கு பதிப்பித்துள்ளார்‌. அவருக்கு எம்‌ மனமார்ந்த பாராட்டுக்கள்‌.

இதுபோன்ற பல அரிய நூல்களை வெளியிட நிதியுதவி புரிந்து வரும்‌ நடுவண்‌ அரசுக்கு என்‌ நன்றியினைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

தஞ்சாவூர்‌.       தி. சண்முக ராஜேஸ்வரன்‌,
26-10-91       இ. ஆ. ப.,
      மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ மற்றும்‌ இயக்குநர்‌ (பொ)
சரசுவதி மகால்‌ நூலகச்‌ சங்கம்‌.
-----------------
வேண்டுகோள்‌
கருணை உள்ளங்கொண்ட நம்‌ முன்னோர்கள்‌, அரிய பெரிய இலக்கியங்களைப்‌ பனையோலைகளில்‌ எழுதிச்‌ சுவடிகளாக நமக்குத்‌ தந்துள்ளனர்‌. அவை பல்வேறு இடங்களில்‌ உள்ளன. சுவடிகள்‌ பழுதடைவதற்கு முன்‌ எம்மிடம்‌ அன்பளிப்பாகக்‌ கொடுத்து உதவினால்‌ மக்களுக்குப்‌ பயன்படும்‌ வகையில்‌ புத்தக உருவில்‌ வெளியிடப்படும்‌.

எம்மிடம்‌ கொடுப்பதன்‌ மூலம்‌, சுவடி தந்தவர்‌களும்‌ சுவடி எழுதியோரும்‌ அழியாப்புகழைப்‌ பெறுவர்‌. அவை பதிப்பாக வருமாயின்‌, சுவடி தந்தார்‌ பெயரும்‌ இடம்‌ பெறுவதோடு அப்பதிப்பில்‌ ஐந்து பிரதிகளும்‌ பெறுவர்‌.

எனவே “நாம்‌ பெற்ற பேறு பெறுக இவ்வையகம்‌” என்ற எண்ணமுடைய நற்பண்பாளர்கள்‌ தம்மிடமுள்ள சுவடிகளை எமது மகாலுக்குத்‌ தந்துதவ வேண்டுகிறோம்‌.

      இங்ஙனம்‌,
      தி. சண்முக ராஜேஸ்வரன்‌, இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சித்தலைவர்‌ மற்றும்‌ இயக்குநர்‌ பொறுப்பு
சரசுவதி மகால்‌ நூலகம்‌, தஞ்சாவூர்‌.
-----------------

முகவுரை

பாரதபூமி புண்ணியத்‌ தலங்கள்‌ நிறைந்த பூமியாகும்‌. இமயத்திலமைந்த திருக்கயிலாயம்‌ முதலாக, தென்கோடி முனையிலமைந்த கன்னியாகுமரி அம்மன்‌ திருக்கோயில்‌ வரையில்‌ எண்ணிலாத திருக்கோயில்கள்‌ விளங்குகின்றன. மூர்த்தி எழுந்தருளிய அற்புதத்துடன்‌ புண்ணியம்‌ தரும்‌ தீர்த்தங்களும்‌ பொருந்திய நல்லிடங்களே தலங்களாகும்‌.

அவை சைவ வைணவ சமயங்களின்‌ சார்பில்‌ பெருகி நிற்பனவாயினும்‌, இந்திய மக்களின்‌ சமய ஒருமைப்பாட்டிற்குரிய சான்றாகவே விளங்குகின்‌றன. இவ்வாறமைந்த பழமைக்குரிய திருக்கோயில்‌ தலங்களுள்‌, தமிழகத்தில்‌ காவிரியாற்றின்‌ இருகரைகளிலும்‌ அமைந்துள்ள சிவத்தலங்கள்‌, தென்கரைத்‌ தலங்கள்‌ வடகரைத்‌ தலங்கள்‌ என்ற குறிப்புடன்‌ வகை செய்யப்பட்டுள்ளன. அவற்றுள்‌, சோழநாட்டில்‌, காவிரியின்‌ தென்கரையிலமைந்த சிவத்தலங்களுள்‌ திருவையாறு மிகச்சிறந்த பழமைநிறைந்த புண்ணியத்‌ தலமாகும்‌.

இத்தலத்தினைத்‌ தேவாரமுதலிகள்‌ மூவரும்‌ பாடி வழிபட்டுள்ளனர்‌. காவிரிக்‌ கரையில்‌ சிவத்தலங்கள்‌ பலவிருந்தும்‌, இத்தலத்தை மட்டும்‌
“அழகார்‌ திரைக்‌ காவிரிகோட்டத்‌
தையா றுடைய அடிகள்‌''

என்ற சிறப்புடன்‌ சுந்தரர்‌ பாடலில்‌ குறித்திருப்பது இதன்‌ மாண்பினைக்‌ குறிப்பதாகும்‌.

இத்தலத்தின்‌ அழகிய இயற்கை வளத்தினையும்‌, பக்திக்கும்‌ முத்திக்கும்‌ இடமாகும்‌ தனிச் சிறப்பினையும்‌.

முத்திசையும்‌ புனற்பொன்னி மொய்பவளம்‌ கொழித்துந்தப்‌
பத்தர்பலர்‌ நீர்மூழ்கிப்‌ பலகாலும்‌ பணிந்தேத்த
எத்திசையும்‌ வானவர்கள்‌ எம்பெருமான்‌ எனஇறைஞ்சும்‌
அத்திசையாம்‌ ஐயாறற்கே ஆளாய்‌ நான்‌ உய்ந்தேனே.

என்று திருநாவுக்கரசர்‌ அகங்‌ குழைந்து பாடியுள்ளார்‌ .

திருவையாற்றுத்‌ தலத்தின்‌ தெய்வச்‌ சிறப்பியல்புகளை விளக்கும்‌ புராணமே இத்நூலாகும்‌. தலங்களைப்‌ பற்றிய தெய்வீகக்சிறப்பினையும்‌ சமயநெறியில்‌ மக்கள்‌ அடையும்‌ பயனையும்‌ கூறும்‌ நூல்களே புராணங்கள்‌ என்று பெயர்‌ சூட்டப்‌ பெற்றுள்ளன. புராணம்‌ என்பதற்குப்‌ பழமையைக்‌ கூறுவது என்பது பொருளாகும்‌. இதனைத்‌ “தொன்மம்‌'' என்று தொல்‌காப்பியம்‌ கூறும்‌. புராணங்கள்‌ தமிழ்‌ வழக்கிலும்‌ வடமொழி வழக்கிலும்‌ மிகுதியாக வெளிவந்துள்ளன. அவற்றில்‌ தெய்வீகச்‌ செயல்களையும்‌ வேதாகம நியதிகளையும்‌ விளக்கும்‌ புராணங்கள்‌ பதினெட்டென்று தொகுத்து வழங்கியுள்ளனர்‌,

தமிழ்ப்புலவர்களைக்‌ கொண்டு பண்டைய அரசர்கள்‌ தாம்‌ அமைத்த கோயில்களுக்குப்‌ புராணம்‌ செய்யச்‌ செய்துள்ளனர்‌. அம்முறையிலேயே பழமையான கோயில்கட்கும்‌ அரசர்களின்‌ விருப்பத்தாலும்‌, புலவர்களின்‌ பக்தித்திறத்தாலும்‌ கி. பி. 19 - ஆம்‌ நுற்றாண்டு வரையில்‌ புராணங்கள்‌ தோன்றியுள்ளன.

தமிழில்‌ புராணம்‌ பாடிய புலவர்கள்‌, கடவுள்‌ வாழ்த்துக்கள்‌, நாட்டுச்‌சிறப்பு, நகரச்சிறப்பு, தலச்சிறப்பு, மூர்த்திச்‌ சிறப்பு, தீர்த்தச்சிறப்பு ஆகிய அமைப்புடன்‌ கதை நிகழ்ச்சிகளையும்‌ இலக்கண விதிமுறைப்படி செய்யுள்‌ வடிவில்‌ செய்துள்ளனர்‌. அத்தகைய சார்பிலேயே திருவையாற்றுப்‌ புராணம்‌ செய்யப்பட்டுள்ளது.

இப்புராணம்‌, “திருவையாற்றுப்‌ புராணம்‌ - பஞ்சநத மான்மியம்‌” என்ற பெயரால்‌ குறிக்கப்‌ பெறுகின்றது. திருவையாற்றுப்‌ புராணத்தின்‌ உள்ளுறையனைத்தும்‌ தலத்தின்‌ மகிமையினை தர்மதான நெறிமுறைகளினால்‌ காட்டப்பட்டுள்ளமை அறியத்தக்கதாகும்‌. அவை, இத்தலத்தில்‌ வசித்தல்‌, வந்து தங்குதல்‌, துன்பகாலத்தில்‌ தஞ்சம்‌ புகுதல்‌, வயது மூப்படைந்த காலத்தில்‌ வந்து தங்கியிருந்து இயற்கையடைதல்‌ முதலிய செயல்களால்‌ பெறப்படும்‌ புண்ணிய பலன்கள்‌ நன்மைகள்‌ ஆகிய அனைத்‌தினையும்‌ இப்புராணம்‌ நன்கு புலப்படுத்துகின்றது. மற்றும்‌,

இத்தலத்தில்‌ வாழும்‌ வேதியர்கட்கு, அன்னதானம்‌, நெல்‌ வயல்‌ தானம்‌, அரிசி தானம்‌, பொன்‌ தானம்‌, தான்ய வகை தானம்‌, பட்டாடை தானம்‌, குடியிருப்பு மனை வீடு தானம்‌, மா பலா வாழை தோட்ட தானம்‌ ஆகிய சிறந்த தானங்களை வேதாகம யாகாதி நியதிகளின்‌ வழி செய்யின்‌ செய்தார்‌ பெறும்‌ பலன்களை இப்புராணம்‌ மகரிஷிகளின்‌ வாசகமாக உணர்த்துகின்றது.

மூதாதையர்க்கு இத்தலத்தில்‌ வேதியர்‌ வழி கர்மாதிகள்‌ செய்யின்‌ பிதுர்க்கள்‌ பெறும்‌ நிறைவினை விளக்குவதுடன்‌, எத்தகைய பாபம்‌ செய்தாராயினும்‌ இத்தலத்தில்‌ வேதியர்‌ வழி ஸ்மிருதி நெறியில்‌ கிருச்சிரவிரத பிராயச்‌சித்தம்‌ அனுட்டிப்பார்களாயின்‌, பாபங்கள்‌ அனைத்தும் ‌ நீங்குதலோடு, அவர்‌கட்குக்‌ கண்ணோய்‌ விலகி, முத்தியும்‌ சித்திக்கும்‌ என்‌ற பாபவிமோசன பிராயச்சித்தங்கள்‌ கிரிச்சிரவத்தியாயத்தால்‌ கூறப்பட்டுள்ளது. மேலும்‌,

மக்களேயன்றி, இத்தலத்திற்கு வந்து காவிரி நதியில்‌ நீராடி பிரணதார்த்திகரராம்‌ ஐயாறப்பனை வழிப்பட்ட எவ்வுயிரும்‌ நற்பேறு பெறுமென்பதனை நால்வகை விலங்குகள்‌ நற்கதி பெற்ற சருக்கத்தால்‌ ஆசிரியர்‌ நன்கு புலப்படுத்தியுள்ளார்‌.

இப்புராணத்தினை இயற்றிய ஆசிரியர்‌ பெயர்‌ சுவடியில்‌ குறிக்கப்பெறவில்லை. ஆயினும்‌, வேதப்பிரியன்‌, சிரவணமன்னன்‌ என்ற பெயர்களால்‌ ஆசிரியர்‌ தமது சிறப்புப்‌ பெயர்களைப்‌ பாடல்களில்‌ வழங்கியுள்ளார்‌.

ஆசிரியர்‌ வடமொழிப்புலவராகவும்‌ வேதாகம நெறிமுறைகளில்‌ தேர்ச்சி பெற்றாராகவும்‌, தமிழில்‌ பாடல்கள்‌ இயற்றும்‌ பயிற்சியுடையாரரகவும்‌ இருப்பதனை நூன்‌முறையால்‌ அறியப்‌ பெறுகின்றது .

ஆசிரியர்‌, அவையடக்கமாகக்‌ கூறியுள்ள பாடலொன்றில்‌.
“மலிபுனல்சூழ்‌ சோணாடு தஞ்சையிற்‌
      காத்திடு மரசர்‌ மதியமைச்சன்‌
ஒலிமறைதேர்‌ கோவிந்த தீக்ஷ்தராயன்‌
      திருவாக்‌ குடை மையாலே
கலியுகத்துச்‌ சகனாண்டு
      மூவைஞ்ஞூற் றிருபதின்மேல்‌ காணுமேழாய்‌
பொலிவருடத்‌ தையாற்றுப்‌ புராணம்‌
      வடமொழி தமிழாற்‌ புகலலுற்றேன்‌.”

என்று கூறுவதால்‌, தஞ்சையை ஆண்ட விசயநகர நாயக்கமன்னர்‌ அவையில்‌ தலைமை மந்திரியாக இருந்த கோவிந்த தீட்சதர்‌ காலத்தில்‌ நூலாசிரியர்‌ இருந்தவரென்பதும்‌, தீட்சதரின்‌ வேண்டுகோளின்‌ படியே திருவையாற்றுப்‌ புராணம்‌ செய்தாரென்பதும்‌, இக்காலம்‌, கலியுகத்துச்‌ சகவாண்டு - 1527 என்பதும்‌ புலனாகின்றது.

கோவிந்த தீட்சதர்‌ பன்மொழிப்புலமை பெற்ற மதிநுட்பம்‌ வாய்ந்த அமைச்சராவார்‌. தஞ்சையரசர்‌ சேவப்ப நாயக்கரின்‌ மகன்‌ அச்சுதப்ப நாயக்கர்‌ காலத்தில்‌ தீட்சதர்‌ அமைச்சராக இருந்துள்ளார்‌. அச்சுதப்ப நாயக்கர்‌ ஆட்சிக்‌ காலம்‌ கி. பி. 1605-ல்‌ திருவையாற்றுப்‌ புராணம்‌ செய்யப்பெற்றுள்ளது.

இத்தலத்திற்குத்‌ தமிழில்‌ அச்சாகியுள்ள புராணம்‌ ஒன்றுள்ளது. அந்‌நூல்‌ கால வழக்கில்‌ அருகியுள்ளது. அப்புராணச்‌ செய்திகளினின்றும்‌ இப்‌புராணம்‌ முற்றிலும்‌ வேறுபட்டதாகும்‌.

இப்புராணத்தின்‌ மூலச்சுவடியில்‌ பல ஏடுகள்‌ சிதிலமடைந்துள்ளதனை அறிய முடிகின்றது. படியெழுதிய போதமைந்த பேதங்களைத்‌ திருத்தஞ்‌ செய்வதற்கு அமைவின்மையினால்‌, Copied Volume - எனும்‌ கைப்பிரதியிற்‌ கண்டுள்ளவாறே சில பாடல்கள்‌ தரப்பட்டுள்ளன.

பொதுநோக்கில்‌ இப்புராணம்‌ திருவையாற்றுத்‌ தலத்தின்‌ தருமதான பிராயச்சித்த மகிமையினை மக்கட்கு உணர்த்துவதாகவே இருப்பதனை சிவநெறியாளர்‌ யாவரும்‌ அறிந்து பயன்பெறுவதற்குரியதாகும்‌.

இப்பணியினை யான்‌ மேற்கொள்ளுதற்குதவிய மாவட்ட ஆட்சியர்‌ அவர்கட்கும்‌ அண்மையில்‌ பதவி ஏற்று அரும்பணியாற்றிவரும்‌ சரசுவதிமகால்‌ நூலக இயக்குநர்‌ பேராசிரியர்‌, மு. சதாசிவம்‌, எம்‌. ஏ., எம்‌.லிட்‌., அவர்கட்கும்‌, நூலக நிர்வாகர்‌ திரு. அ. பஞ்சநதம்‌ எம்‌. ஏ., எம்‌. லிட்‌., சயி. அவர்கட்கும்‌, தஞ்சை ராம்‌ பிரிண்டர்ஸ்‌ அவர்கட்கும்‌, எனது அன்பு நிறைந்த நன்றி உரியதாகும்‌.

10 - 12 - 1989,       சி. கோவிந்தராசனார்
தஞ்சாவூர்‌       கரந்தை.
--------------

திருவையாற்றுப்‌ புராணம்‌ - கடவுள்‌ வணக்கம்

ஆடவல்லான்‌ துதி

உலகெலாம்‌ படைத்தேந்து மிருவர்விழி யருளுங்கற்‌ பகமு மாகி
பலவெலாம்‌ படைத்துடைய வொருகரும்பி னிருசுரும்புக்‌ கருளுங்‌ கோவாய்‌
வலமெலாம்‌ படைத்தடைந்த வண்டிரண்டு மகிழ்ந்தாட ஆடா நிற்கும்‌
நலமெலாம்‌ படைத்தசுவை யானந்தப்‌ புதுத்‌ தேனை நாவிற்‌ கொள்வாம்‌. 1
[இருவர்‌ - பிரமன்‌, திருமால்‌. கற்பகம்‌ - வேண்டிய பொருளை நல்கும்‌ தெய்வமரம்‌.
இருசுரும்பு - கம்பளன்‌, அசுவதரன்‌ ஆகிய கந்தருவர்‌. வண்டிரண்டு - பதஞ்சலி, வியாக்கிரபாதர்‌.
புதுத்தேன் - புதுமைக்கும்‌ புதுமையாக இருந்து அன்பர்கள்‌ உள்ளத்தே இனிக்கும்‌ சிவமாகிய தேன்‌.]

பரம்பொருள்‌ துதி

எழுத்தேறும்‌ பொருள்போன்றும்‌ பொருளேறும்‌
      அணிபோன்று மிருள்வான்‌ போன்றுஞ்‌
செழுத்தேறு முலகுரைக்கும்‌ பேதமெலாங்‌
      கடந்திருந்த செம்மற்‌ றாகிக்‌
குழுத்தேறுங்‌ குறிக்கொண்டு நெஞ்சழுத்து
      மஞ்செழுத்தாற்‌ குழைந்திழைந்து
பழுத்தேறுஞ்‌ செழுஞ்செம்பொற்‌ சோதியையா
      தியையோதிப்‌ பணிதல்‌ செய்வாம்‌. 2
[எழுத்தேறும்‌ பொருள்‌ - எழுத்துக்களாலான சொற்கள்‌ தரும்‌ பொருள்போன்று.
எழுத்தேறும்‌ - எழுத்தில்‌ பொருந்தி நிற்கும்‌. அணி - செய்யுளுக்கமைந்த ஒப்பனை - அழகு.
செழுத்து ஏறு - கல்விகேள்விகளில்‌ வளம்பெற்று உயர்ந்த. ஐஞ்செழுத்து - சிவன்‌ நாம ஐந்தெழுத்து.]

சிவபெருமான்‌ துதி

அருகரா யையா றடைந்தாடி நின்றாடுனர்க்‌ கன்பாய்‌ நம்‌
முருக ராடலிற்‌ பராவக மொழிகென மொய்ம்பின்‌ மே
லொருகரம்‌ புயத்துமைய வளோச்சலு முளமகிழ்ந்து அருளோங்கும்‌
மருகரா மேதிலொப்பி லாநாயகர்‌ மலர்ப்பதந்‌ தொழுவோம்‌ யாமே. 3
[மொய்ம்பு - வலிமை பெற்ற தோள்‌, பராமுகம்‌ - பார்வை செலுத்தாதநிலை.]

ஐயாறப்பர்‌ துதி

பஞ்ச நதீசுரன்‌ செப்பேசன்‌ பிரண தாத்திகர பைரவி னோர்தந்‌
தஞ்சமெனு நோக்கரிய திருமேனி தளர்ந்தகுடி தாங்கு நாதன்‌
விஞ்சுமுப கைலாய மோடு மாறாட வல்லான்‌ விண்ணோர்க்‌ கெல்லாம்‌
அஞ்ச லென்ற பெருமானென்‌ றளவில்பே ருடையானுக்‌ கன்புசெய்வாம்‌. 4
[தளர்ந்தகுடி – வறுமையால் வாடிய குடி, உபகைலாயம் - தென்‌ கயிலாயம்‌.
விண்ணோர்‌ - தேவர்‌.]

தலப்பெருமை

பிறப்பும்‌ பிணியும்‌ பிணக்கும்‌ பகையும்‌ பிழைப்பும்‌
      கவியும்‌ பிரித்தம்‌ புவிநின்‌
நிறக்கும்‌ துயருண்‌ டிருக்கும்‌ பிவிழுந்‌ திளைக்குந்‌
      தலநின்‌ நடுக்குந்‌ தவமுந்‌
துறக்கங்‌ கமலங்‌ கட்குன்‌ றிவைமுன்‌ சுரக்குஞ்‌
      சுகமுண்‌ டிருக்குந்‌ திருவுஞ்‌
சிறக்கும்‌ பயனுங்‌ கொடுக்கும்‌ பதியும்‌ திருப்பஞ்‌
      சந்தம்‌ பஞ்ச நதமாம்‌. 5
[பிணக்கு - மனமாறுபாடு. துறக்கம் - சிவபதம்‌. திரு - பொருட்‌ பேறு.
பஞ்சநதம்‌ - ஐந்து ஆறுடையதலம்‌.]

அறம்‌ வளர்த்த நாயகி துதி

திறம்‌ வளர்த்த முலைகள்‌ சிவபோகம்‌ பூப்பச்‌
      செல்வமொடு கல்விவிழி பூப்ப ஞானம்‌
புறம்‌ வளர்த்த குழல்பூப்பத்‌ தான்முன்‌ பூத்த
     புவனமெலாம்‌ நளினமிகு வாம்பற்‌ பூப்ப
பறம்‌ வளர்த்த மணிநீல கண்டர்‌ பங்காள்‌ மங்கல
     நாண்பூப்ப வருள்பூப்ப யார்க்கும்‌
அறம்‌ வளர்த்த நாயகியா ரழகுபூத்த அடிக்கமல
     முடிக்கருள அன்பு சேர்ப்பாம்‌. 6
[சிவபோகம்‌ - சிவானுபோகம்‌. பூப்ப - சிறப்ப. ஞானம் - தத்துவமுணர்ந்த
பேரறிவு. புவனம் - உலகம்‌. நளினம் - குளிர்ச்சி ஆம்பல்‌ - தாமரை, அல்லி.]

அத்த னையாறுடையா னெவ்வுருவங்‌ கொள்ளு
      மவ்வுருவு மாங்கே கொண்டு
வந்தணையு மறவளர்த்த நாயகியை வடிவுடைய
      மங்கை தன்னை
கந்தணையும்‌ முலைவண்டார்‌ குழலாளை தேனுற்ற
      சொல்லி தன்னை
பந்தணைமென் விரலாளை யழகியபொன்‌
      னனையாளை பணிதல்‌ செய்வாம்‌. 7
கந்து - பற்றானகச்சு. பந்தணை - இறைவனோடு ஒன்றுதல்‌.

விநாயகர்‌ துதி

இந்திரன்‌ கைதோட்டி பறித்துயமன்‌ பாசமீர்த்து
      இறைவன்‌ கையில்‌
சிந்துரமென்‌ கனிகவர்ந்து சித்தசன்‌ சிலைக்‌ கரும்பைச்‌
      சிதைத்துக்‌ கோட்டால்‌
தந்திரமே ருபொழிந்துதவும்‌ தண்பொன்னி
      விலாழியெனத்‌ தந்தை யாற்று
வந்திருவல்‌ வினைகவர்ந்து வரமருளும்‌
      மதக்களிற்றை வசஞ்செய்‌ தோமே. 8
[சிந்துரமென்கனி - சிவந்த பழுத்த மாங்கனி. சித்தசன் - காமன்‌. சிலைக்கரும்பு - வில்லாகக்
கொண்ட கரும்பு. விலாழி - நுரை, மதமாகிய நுரை, தந்தையாறு - தந்தை சென்ற நெறி.
மதக்களிறு - மதநீர்பெருக்கும்‌ யானைமுகக்கடவுள்‌].

ஆட்கொண்டார்‌ துதி

கண்ட துண்டிலை யெனாமே கண்டவ பொய்க்கரி கூறாமே
அண்ட நாயகனைக்‌ கண்டார்க்‌ கறிகரி காட்டுந்‌ தன்கை
யொண்டிற்ற பிரமன்‌ செங்கோ லொருவனை யாற்றுப்‌ பெற்ற
தொண்டருக்‌ கினியான்‌ பாதந்‌ தொழுதுநாம்‌ துயரந்‌ தீர்ப்போம்‌. 9
[கரி - சான்று, அண்டநாயகன்‌ - உலக நாயகன்‌.]

திருஞானசம்பந்தர்‌

தோடு காட்டியு மிசைத்தமிழ்‌ தூக்கினார்‌ சுருதிக்‌
காடு காட்டியுங்‌ கூடலிற்‌ கசடர்மு னகன்ற
சேடு காட்டியு மிறைவழி நீரிவை காட்டி
வீடு காட்டினோ னெமக்கிருள்‌ தூர்க்குமோர்‌ விளக்காம்‌. 10
[தோடு காட்டி - ஞானப்பாலளித்த அம்மையின்‌ காதணியாம்‌
தோட்டினை முதலிற்‌ சுட்டிக்காட்டி, இசைத்தமிழ்‌ - பண்ணும்‌
பாணியும்‌ கூடிய தேவாரப்பாடல்‌. கூடல்‌ - மதுரைமாநகர்‌.
நீர் - புனல்‌ (புனல்‌ வாதம்‌)]

திருநாவுக்கரசு

அளக்கர்நீர்‌ தகளிநெய்‌ யருக ரிட்டகல்‌
விளக்கருந்‌ திரியென வமண மாசிரு
டுளக்க வைஞ்செழுத்‌ தெனும்‌ தூண்டு கோலினால்‌
விளக்கென விளங்குநா வேந்தைப்‌ போற்றுவாம்‌. 11
[அளக்கர்நீர்‌ - உப்பமைந்த கடல்‌ நீர்‌. அருகர்‌ - அருகராய துறவியர்‌.
நாவேந்து - திருநாவுக்கரசு, வாக்கீசர்‌.]

சுந்தரர்‌

வந்தா னாவலூர்‌ வலிதகப்‌ படுத்‌
திந்திரப்‌ பரவையை கலக்கி யின்ப மார்ந்‌
தந்திவோர்‌ சங்கிலி யணைத்‌ திறுக்கிய
சுந்தரக்‌ களிற்றினைத்‌ தொழுது போற்றுவாம்‌. 12
[வலிதகப்படுத்தி - வலிய வந்து தடுத்தாட்கொண்டு.
இந்திரப்‌ பரவை - ஐந்து இந்திரியமாகிய கடல்‌. சங்கிலி - சங்கிலியார்‌.]

மணிவாசகர்‌.

தேசிகன்‌ ஞானபோத மந்திரச்‌ சிறையிற்‌ பட்டுப்‌
பாசவெண்‌ டோலுரித்து பவுத்தர மேலாலங்‌ கான்று
வாசக மாணிக்கங்‌ களுமிழ்ந்து மண்டலத்‌ தினாடி
ஆசில்‌ மன்றகத்‌ தடங்குஞ்‌ சேடனுக்‌ கன்புசெய்வாம்‌. 13
[தேசிகன்‌ - ஞானகுரு. ஞானபோதம்‌ - சிவஞானபோதம்.
மந்திரச்சிறை - சின்முத்திரையார்‌ காட்டிய தத்துவச்‌ சிறை. பாசம் -
உலகப்பற்று. பவுத்தரம்‌ - மிகு தூய்மை. மண்டலத்தினாடி –
சுழுமுனையில்‌ கண்டு. ஆசில்‌ மன்றம்‌ - தூயதான பொன்னம்பலம்‌.]

சண்டேசுவரர்‌

அமர ரெக்கற மூட்டிய பரிகலத்‌ தமுதும்‌ பெற்றுக்‌
குமர ரெக்குறச்‌ சூட்டிய கொன்றையும்‌ பதமும்‌ பெற்றுப்‌
பமர வாரிச சந்தந்‌ தண்ணெனத்‌ தரும்பரிசால்‌
நமரை யாட்கொளப்‌ பெற்றவன்‌ பதந்துணை நவில்வாம்‌. 14
[அமரர்‌ - தேவர்‌. குமரரேக்குற - முருகன்‌ ஏக்கம்‌ பெற. நமர்‌ -
உயிர்களோடு ஒன்‌றிப்பிரிப்பவர்‌. எமன்‌.]

சைவாச்சாரிய சந்தான குரவர்‌

ஐவ ராய்‌ தஞ்சத்தியா லககெலா மளிக்குந்‌
தெய்வ ராயரே யொருவராய்‌ திருமுறைக்‌ காணிப்‌
பொய்வ ராயவகை நிறுத்திய புகழ்மைசேர்‌ புதுமை
சைவ ராயரெண்‌ மூவர்தா ளெமக்கொரு சரணால்‌. 15

நூல்‌ செய்ய அருளியவன்‌

வடியுமணி குழைக்காதி னந்தணனால்‌ வந்தமலன்‌ வழங்க கங்குல்‌
விடியுமள வில்சைவர்‌ வைதிகர்‌ மயேசுரர்மெய்த்‌ தானத்‌ துள்ளோர்‌
முடிவில்சிவ கணத்தொருவ னானதிரு வம்பலவன்‌ மொழிய வன்றோ
அடிதொழுது பஞ்சநதிப்‌ புராணமிதை யறையலுற்றே னகிலம்‌ போற்ற. 16

நூல்‌ செய்த காலம்‌

மலிபுனல்சூழ்‌ சோணாடு தஞ்சையிற்‌
      காத்திடு மரசர்மதி யமைச்ச
னொலிமறைதேர்‌ கோவிந்த தீக்ஷ்தராயன்‌
      திருவாக்‌ குடமை யாலே
கலியுகத்துச்‌ சகராண்டு மூவைஞ்ஞாற்‌
     றிருபதின்மேற்‌ காணு மேழாய்ப்‌
பொலி வருடத்‌ தையாற்றுப்‌ புராணமிதை
      வடமொழி தமிழாற்‌ புகலலுற்றேன்‌. 17
[17. ஒவிமறை - ஒலிக்கின்ற வேதம்‌ (சாமவேதம்‌), கோவிந்ததீட்சதர்
- விசயராகவ நாயக்கரின்‌ அமைச்சர்‌... சகராண்டு - சாலியவாகன
ஆண்டு கலியுகத்தில்‌ சாலியவாகன ஆண்டு 1527ல்‌ நூல்‌ செய்யப்‌
பெற்றமை. (கி. பி. 1605).]
--------

2. அவையடக்கம்‌

வெங்க ளங்கமுங்‌ குறைவுமென்‌ றிகழ்ந்திடார்‌ மேலோர்‌
திங்க ளங்குள வமுதமே பருகுவர்‌ தெளிந்தோ
ரெங்க ளங்கமு மேதுசொற்‌ குறைவுமென்‌ றிகழார்‌
தங்க ளங்கமாஞ்‌ சிவன்புகழுக்‌ கிடனென தளிர்ப்பார்‌. 1
[1. களங்கம்‌-குற்றம்‌. தெளிந்தோர் - ஆய்ந்துதெளிந்த
அறிவுடையோர்‌.]

புவிப்பு லன்களிற்‌ புல்லியோம்‌ போலியா புகலுங்‌
கவிப்பு லங்களைக்‌ கயக்கிலேன்‌ சுவைக்கிலேன்‌ கடனீ
ரவிப்புலம்‌ பெறப்புய லின்வாய்ப்‌ படுதல்போ லான்றோர்‌
செவிப்பு லன்களிற்‌ புகுதலுந்‌ தீஞ்சுவைப்‌ படுமால்‌. 2
[2. புல்லியோம்‌ - அறிவில்‌ மெலிந்தயாம்‌.' கயக்குதல்‌-கலக்கம்‌ செய்தல்‌.
அவிப்புலம்‌ - உணவுக்காம்‌ நெல்விளையும்‌ நிலம்‌. புயல்‌ - காருண்டு
காற்றால்‌ உந்தப்பெறும்‌ மேகம்‌.]

சுவை யடக்கிய கவிஞர்சொல்‌ லடக்கில்‌ யான்‌ சொல்லு
மவை யடக்கிலோர்‌ பயன்தரு மவையடக்‌ கியபோ
லிவை யடக்குமென்‌ றெண்ணியுண்‌ ணுழைவரெண்ணியபி
னவை யடக்கிலே மெனிலென்‌ நவையடக்‌ குவரால்‌. 3
[3. சுவை - பொருட்சுவை. நவை - ஏளனத்திற்‌ கிலக்கான குற்றம்‌.]

நாக்க ளாயிரஞ்‌ செவிக ளீராயிரம்‌ நண்ணிய
பாக்க ளாயிரங்‌ கோடியோர்‌ முகம்பெறப்‌ படினுந்‌
தேக்கள்‌ வார்பொழில்‌ திருவையாற்‌ றியல்பெலாஞ்‌ சேர்‌
மாக்கள்‌ கூறவுங்‌ கேட்கவும்‌ வல்லரோ மதிக்கில்‌! 4
[4. தேக்கள்‌ - தேனீக்கள்‌ பொருந்தும்‌ மலர்த்தேன்‌. மாக்கள்‌ - மாக்கள்‌
போன்றறி விலாத மக்கள்‌.]

அவையடக்கம்‌ முற்றும்‌.
-----------------

3. புராண வாழ்த்து

நாத னருணந்தி சனககுமாரன்‌ வியதரன்‌
சூதன்‌ நற்றவத்தோர்‌ போதமுறைக்‌ கூறக்கேட்டு
ஓதரிய பிரமனது வதனத்துதித்‌ ததீதத்தின்‌ தொடர்ச்சிக்‌
காதலுரு காதையிது பஞ்சநதி மேன்மைப்‌ பகருங்காலே. 1
[1. போதம்‌ - புகட்டுமறிவு. அதீதம்‌ - குறிப்பில்லாத ஆன்மா. எண்ணமொன்றில்லாததீதம்‌'” (சிவப்பிரகாசம்‌) ]

நற்றவ ரொருகா லத்து நைமிசா ரணியந்‌ தன்னில்‌
சொற்றகு சூதனாலே தொல்கதை யாவுங்‌ கேட்டார்‌
மற்றவர்‌ திருவை யாற்று மான்மியம்‌ விதந்து கேட்ப
விற்றவர்க்‌ குரவொன்னாது முரைத்தனன்‌ உரைக்கும்போது. 2
[2. சூதன்‌ - சூதமாமுனிவன்‌. தொல்‌ கதை - புராணம்‌.
மான்மியம்‌ - அற்புதம்‌. உரவு - அறிவுத்திண்மை.]

தவந்தரு சுமந்து வெய்யோன்‌ றவகுலத்‌ தெய்வ வன்மர்க்‌
குவந்திடச்‌ சொற்றா னப்போ......... னுரைத்த வாறு
நவந்தரு நாத சன்மன்‌ நவின்றனன்‌ விருத்திக்‌ குன்றா
நிவந்த வித்தொடர்ச்சி மேன்மை யெம்மனோர்‌ நிகழ்த்த வன்றோ! 3
[3. நவம்‌ - புதுமை. விருத்தி - விளக்கம்‌. நிவந்த - மேலான. பெருகிய.]

சூதனே சுமந்து நம்பன்‌ சொல்வகை யிஞ்ஞ ணிற்ப
நாதமா முனிவன்‌ கூற‌ நங்கை கேட்கின்ற வண்ணங்‌
காதை கண்முறை நிறுத்தி கழறுகே னிவனி ருக்கும்‌
போதக விருக்கை யோடு புகன்றிடு மரபு சொல்வேன்‌. 4
[4: கழறுகேன் - கூறுகின்றேன்‌. போதக விருக்தை - ஞானந்தரும்‌
இருப்பு.]

புராண வாழ்த்து முற்றும்‌.
-----------------

4. ஆசிரமச்‌ சிறப்பு

பொன்னி யாறு
வெய்ய மால்வினைப்‌ பசிகெட மடியின்‌ மேல்வளர்க்கும்‌
வையக மாதெனுந்‌ தாயவள்‌ மானுடங்‌ காக்குஞ்‌
சைய்ய மாமுலை சுரந்து வார்ந்தொழு கியதகைத்தாற்‌
பொய்யிலா வாற்புனித நீர்‌ பொன்னிமா நதியாம்‌ 1
[1. வெய்ய - கொடிய. மால்வினை - உண்மைபுலப்படாவாறு
மயக்கும்‌ தீவினை. சைய்யம்‌ - மலை, விந்தயம்‌. பொன்னி - பொன்‌ கொழித்துவரும்‌
காவிரியாறு.]

வெண்ணுரைக்‌ குழாங்கள்‌ கங்கையாய்‌ வேழமுத வண்‌
டொண்ணி றத்தகா லுந்தியா யூடெழக்‌ கிளர்ந்த
வெண்ணில்‌ செம்மணி யவற்றிடைப்‌ பாதலத்‌ தெழுந்த
புண்ணியப்‌ பெருஞ்சுனை யாய்‌ புகுந்த பொன்னி. 2
[2. வெண்ணுரை - வெண்மையான நுரை. குழாம்‌ - கூட்டம்‌, தொகுதி.
எண்ணில்‌ - எண்ணிக்கை இல்லாத. சுனை - தானே நீர்‌ சுரக்கும்‌ மலைப்புழை.]

இறைவனைத்‌ துறைதொருந்‌ தழீத்தண்‌ ணளிபதி
நிறையளர்க்‌ குநெல்வளர்த்‌ துயிர்ப்பசிப்‌ பிணிநீக்கி
முறைதிறத்‌ தொடுசெல்வ மூதறி வுறவாநல்‌
லறம்‌ வளர்த்‌ தவனிகாத்‌ ததுகாவிரி யாறு. 3
[3 - துறை - இருகரையும்‌ பொருந்த தலங்கள்‌, மூதறிவு - அனுபவ
அறிவு, அவனி - மண்ணுலகம்‌.]

கற்ப நிற்பவர்க்‌ குதவிய கவிஞருட கல்வி
பொற்ப நல்விளக்‌ கெண்ணில்‌ புரிந்தபூ விளக்குச்‌
சிற்ப ரானபல வருளுருக்‌ கொண்டருள்‌ சீர்போற்‌
பொற்ப பல்கால்களாய்ப்‌ பிரிந்து மப்படி வருதலால்‌. 4
[4. கற்ப - கல்வி கற்பதற்கு, பொற்ப - அழகுபெற. கால்‌ - பாசன
வாய்க்கால்‌, சிற்பர்‌ - மாந்தரின்‌ அறிவுக்கு அப்பாற்பட்டவர்‌.]

இலஞ்சி கோட்டக மோடை பட்டந்‌ தடமேநி
புலஞ்செய்‌ கால்வயல்‌ மனைக்கிண றியாவையும்‌ புகுந்து
நிலஞ்செய்‌ யன்பினோர்‌ மனத்தள வானருள்‌ நீங்கா
நலஞ்செய்‌ தென்னநின்‌ றெங்குமாய்‌ விரிவ தன்னதியே. 5
[5. மனைக்கிணறு - வீடுகளிலுள்ள கிணறு, நிலஞ்செய்யன்பினோர்‌ -
ஈத்துவக்கும்‌ வேளாண்குடியினர்‌.]

பொன்னி றைத்திடு துறையார்‌ பதிப்புதுப்பூ
முன்னிறைத்து மன்மதன்‌ சரசாலை முக்கனியின்‌
பன்னிறைத்‌ துரைசந்திரன்‌ பதிநிதி யளகை
மின்னிறைத்த பன்மணி யிறைத்திடுவியன்றுறையே. 6
[6. சரசாலை - காமவேள்‌ தொழில்‌ செய்யும்‌ இடம்‌, அளகை –
அளகாபுரி, குபேரனது நகர்‌. மின்னிறைத்த - ஒளிவீசின.]
மலையிற்‌ சந்தரைத்‌ தருஞ்‌ சுரமான மதம்வரன்றி
முலையிற்‌ பாலனை யணையும்‌ வயற்றியற்‌ கடைசியர்‌
முளைமஞ்ச ளிலையிற்கொண் டுராய்க்கருங்கழி நெய்தல்‌
தலையிற்‌ சேரலாற்‌ றேரலா (தென்ப) தியம்பினர்‌ 7
[7. சந்து - சந்தனம்‌, கடைசியர்‌ - மருதநிலமகளிர்‌. கருங்கழி -
ஆழ்ந்த உப்பங்கழி, நெய்தல்‌ - கடலும்‌ கடல்‌ சார்ந்த இடமும்‌.]

உரைத்த காவிரிக்‌ கடற்புணர்‌ தலையொரு சாரத்‌
தரைத்துழாய்வரு தருமமும்‌ புனிதமும்‌ தடுப்ப
நிரைத்த கையரித்‌ திட்டமர்‌ நின்ற கேதகையின்‌
வரைத்த மாதவ ரிருக்கையொன்‌ றிருந்தது மன்னோ! 8
[8. புனிதம்‌ - தூய்மை. கேதகை - தழைத்த தாழை. மாதவர்‌ -
மிக்கதவமுடைய ஞானியர்‌. இருக்கை - வாழ்விடம்‌.]

துள்ளு மீன்களும்‌ கடற்றிரை தருபொரு மீனும்‌
புள்ளு முண்கிலா புலவென வத்துறைப்‌ பூவிற்‌
றெள்ளு தாதொடு மணமலர்க்‌ கெழுஞ்சிறை வண்டுங்‌
கள்ளு முண்கிலா களிமயக்‌ குறுமெனக்‌ கருத்தால்‌. 9
[9. திரை - அலை, கள் - இனிய தேன்‌. களிமயக்கு - அறிவு அற்று
மகிழும்‌ மயக்கு.]

ஈன்ற நித்திலப்‌ பந்தரி லிருந்தவெண்‌ சங்கஞ்‌
சூன்ற சூலுயிர்த்‌ தவைதழுவுந்‌ துணைப்பெடை தூக்கு
மான்ற செறுநர்‌ மருளவுநம்‌ மருள்கிலா மடற்றென
கான்று விப்பன தாமரைச்‌ செழுங்களி யன்னம்‌. 10
[10. நித்திலம்‌ - முத்து, பந்தர்‌ - பந்தல்‌ (போலி) சங்கம்‌ - சங்கு,
சூன்ற - வளர்ச்சி பெற்ற.]

அளிய மாதவர்‌ தீண்டவும்‌ வளைப்பவு மவைகொண்
டெளிதி லீசனைச்‌ சேர்க்கவும்‌ வறிகிலேம்‌ யாமே
தெளிவி லெய்தின பிறவெனச்‌ செறிமடற்‌ றாழை
வெளிறி வார்ந்துகண்‌ ணீர்கவிழ்ந்த தொப்பதேவேலை. 11
[11 அளியமாதவர்‌ - அன்பே உருவான தவத்தோர்‌. தீண்டவும் –
கையாற்றொடவும்‌, வெளிறி - வெளிர்த்து.]

மாதவத்‌ திருமடந்தை மார்மாசிலா மனத்துக்‌
கோத முத்தமும்‌ புன்னைவா ளரும்புமொய்ம்‌ புறுமால்‌
சீத நித்திலம்‌ பாலென மிதித்திலார்‌ சிவனுக்‌
காதல்‌ பற்றிய வரும்யினு மடியிடா ரம்மா! 12
[12. சீதநித்திலம்‌ - குளிர்ச்சி தரும்‌ முத்து, அலைதரு முத்துக்களையும்‌,
புன்னை உதிர்ந்த மலர்களையும்‌ சிவனுக்குரியவை என்பதால்‌
மிதித்திடார்‌ என்பதாம்‌.]

இருட்ருடி மாணவின்‌ நிகர்த்தன புன்னைக ளிடையே
பொருட்கோண மாயையிற்‌ பொற்பொதிய விழத்‌ தண்போது
மருட்ட வீழுயி ரொத்தன மதுகர மவற்றை
தெருட்டு மூழ்வினை யொத்தன திசையுலாந்‌ தென்றல்‌. 13
[13. மாண்‌ - செறிவு, பொருட்கோண மாயை - உண்மைப்‌ பொருள்‌
இதுவெனக்காட்டாது மயக்கும்‌ மாயையின்‌ நெறிப்பாடு. தன்போது -
தனது வினைப்போது, மருட்ட - ஆசை மயக்கம்‌ தர]

ஞாழலொன்று கல்லாலென நகைநிறைப்‌ புளின்‌
நீழ லங்குறை நீருறுமேனிய னெனதிமயிர்‌
சூழல்வார்‌ பவளக்கொடி சடையெனச்‌ சுரிசங்கூத
தவழ்ந்த வெண்மதி பிறையெனத்‌ தோன்றுவதொருபால்‌. 14.
[14. ஞாழல்‌ - ஞாழல்‌ மரம்‌, நகை - மெல்லோலி, நீழல்‌ - நிழல்‌,
சுரி சங்கு – சுழித்‌தமைந்த சங்கு, பிறை - மூன்றாம்‌ பிறை.]

கரிய நெய்தலங்‌ காடுமா லாயிடைக்‌ கமல
மரிய பொன்னிற வன்னமம்‌ மலர்மயி லயலே
சுரிமுகத்தொடு நேமியுந்‌ துஞ்சுவ நெடியோர்க்‌
குரியவன்படை யெனகழி கிடந்ததாங்‌ கொருபால்‌. 15
[15. நெய்தலங்காடு திருமாலுக்கும்‌ பொன்னிற வன்னம்‌
செந்தாமரையுறை திருமகளுக்கும்‌ - உருவகம்‌. நேமி - சக்கரப்படை,
கழி – உப்பங்கழி]

பூத்தகொங்கு நான்முகனென பொலிந்த தாம்மலர்‌
வாய்த்துதைந்த வண்டிசைமறை யிசையெனத்‌ தெழித்த
மீத்தவழ்ந்த சங்குமிழ்த்தமுத்‌ தொழுகுவ வெண்ணூல்‌
சேத்ததங்‌ கையிற்கரக மொத்தசைந்தது செழுங்காய்‌. 16
[16. துதைதல்‌ - பொருந்துதல்‌, மறை - வேதம்‌, தெழித்த -ஆரவாரஞ்
செய்தன. கரகம்‌ - கமண்டலக்குடுவை.]

ஆறுகாலமு மைந்தென நிலத்தி லாய பொருளும்‌
நாறு நாண்மலர்‌ நான்குமூ வுலகுள்‌ நல்கும்‌
பேறிராப்‌ பகலிரண்டுமோர்‌ பெற்றியாற்‌ பிறழா
தேறுமேலுக கணையதவ்‌ விருடியாச்‌ சிரமம்‌, 17
[17. ஆறுகாலம்‌ - வைகறை, காலை, நண்பகல்‌, மாலை, இரவு,
யாமம்‌; நாள்மலர்‌ - அப்பொழுது மலர்ந்த மலர்‌, விருடி - முனிவன்‌.]

கொந்தார்தரு மலர்கிட்டிய குழைகின்றன வளையா
வந்தாமரை குறுவார்வறல்‌ போழவன்‌ வழியாய்த்‌
தந்தாழ்மலர்‌ தருகென்றுவரு தாவிற்கொடி தடுப்ப
நந்தாவனந்‌ தவாகொய்துழி நயந்துய்ப்பன புயலே. 18
[18. கொந்து - கொத்து, குழைகின்றன - தாழ்ந்து நிற்கின்றன,
குறு - மென்மை, நந்தாவனம்‌ - தூய்மையில்லாதார்‌ உட்புகாத
மணமலர்‌ சோலை, கொய்துழி - பறித்த போது, நயந்து - விரும்பி,
புயல்‌ - மழைதருமேகம்‌.]

குளநெற்கிளி கொய்தேந்து புகுகின்றன முன்றி
லுளநற்பொறி ளிளிவாயணி லுமிகண்டன வொதுங்கச்‌
சுளகிற்பொலி திரள்வித்தன சுழலுங்களி மயிலே
வளமைத்தவ மடவார்விரல்‌ வருந்தாவகை மனைவாய்‌. 19
[19. பொறி - பொறி போன்ற, சுளகு - தாற்றும்‌ முறம்‌,
மடவார்‌ - மனைப்‌ பெண்டிர்‌.]

குடமின்றியும்‌ குளிர்‌நற்புனல்‌ குலவுற்றன குழிசிக்‌
கிடலின்‌றியும்‌ அரிவல்சியி னெழப்‌பொங்கின தொடலும்‌
விடலின்றெவ ரெவர்க்கும்‌ பதமிசையத்‌ கொலைகில்‌
வரலொன்றுயி ரெனமாதவ ருடனாமனை யறமே. 20
[20. குழிசி - குடம்‌, வல்சி - உணவு, மனையறம்‌ - இல்லறம்‌.]

முடிவெண்‌ பாவடி காதினர்‌ முதிர்கண்டி வெண்பொடி மேனியர்‌
மடிநூலின ருடுசீரையர்‌ புலமாஞ்‌ ... ………………………………..
செடிவோரிய வேராமொரு திருவாளினரு................... பேணிய
நடையாரவ ரகலாததவ்‌....... …………………. விடமே. 21

பூதம்புல மன்மாருயிர்‌ புருடஞ்சிவ மறிவே
வேதம்படு மிவையன்னிய முயிரீதிது பரமென்‌
றோதும்‌ பொருள்‌ மறையாகம முணர்கின்றவர்‌ தெளிவார்‌
போதம்பெறு வனதும்‌ பிசு கம்பூவையு மவனே.
[22. போதம்‌ - பக்குவஞானம்‌, பிலசுகம்பூ - பசைப்புத் தன்மையுள்ள பூ,
பக்குவ ஆன்மாவைப்‌ பற்றிக்‌ கொள்ளும்‌ பதிப்பூ.] 22

அவ்வாச்‌ சிரமத்‌ தந்தணர்‌ வருட்டலை மையி
னொவ்வாச்சம யங்கண்டுயர்க நின்றொரு குரவோன்‌
மெய்யவர்‌ தெளித்திரி புண்டர வெண்ணீற்றி னுள்ளங்கை
வாய்த்த நெல்லியின்‌ யாவையும்‌ கரைகண்டவ னொருவன்‌
[23. ஒவ்வாச்‌ சமயம்‌ - மாறுபட்ட சமயம்‌, குரவோன்‌ - ஆசான்‌, திரிபுண்டரம்‌ - நெற்றியணி
முச்‌சுவடாம்‌ நீற்றுக்‌ குறி, கரைகண்டவன்‌ - ஐயம்‌ திரிபு அற முழுதும்‌ கற்றவன்‌.] 23

மோனந்தரு மஞ்சக்கர மொழியுசெப முதிர்வான்‌
ஞானந்திரண்‌ டனையானவன்‌ பெயர்நாத சன்மாவாந்‌
தானம்‌ பொறை நெறிவாய்மை தயாநற்குண மின்பம்‌
மானந்தரு மந்தான்திரண்‌ டனையாளவன்‌ மனையாள்‌.
[24. மோனம்‌-மெளனம்‌, பஞ்சு அக்கிரம்‌ - ஐந்து எழுத்தாலாம்‌ சிவ மந்திரம்‌,
பொறை - பொறுமை, நெறிவாய்மை - ஒழுக்கத்‌ தூய்மை, தயா - கருணை, இரக்கம்‌.] 24.

அனவத்தி யெனுபேரின ளன்னாணிழ லன்னாள்‌
மனவற்புத னெடுநாள்மிக வாழ்கின்றவள்‌ கேள்வன்‌
பனவத்தவ மனையானெதிர்‌ பணியாமொழி பணியா
வினவத்தக வொன்றுண்டென வேட்டாளிது கேட்டாள்‌.
[25. கேள்வன்‌ - கணவன்‌, பனவத்தவம்‌ - நெடிதாக வளரும்‌ தவம்‌.] 25.

ஞாலந்தனி லேபுண்ணிய தவமுத்தம தவமோ
சீலந்தரு தீர்த்தத்தெவை தெய்வப்புனல்‌ யாதோ
மேலங்கது கேட்கின்றவர்‌ வினைதீர்ப்பதுண்‌ டிலென்‌
பாலன்புடை யாயென்று பணிந்தீது பகர்வாள்‌.
[26. சீலம்‌ - நற்குண நல்லொழுக்கம்‌, தீர்த்தம்‌ - பாபம்‌ தீர்க்கும்‌ தெய்வதீர்‌, பகர்வாள்‌ - சொல்லுவாள்‌.] 26.

பாவமூட்டுவாள்‌ பற்பல சொல்லெதிர்‌ பறைவாள்‌
கோலமூட்டுவா ளாண்மைபோற்‌ கூறிய கொடியா
ளாவமூட்டிய கணைவிழி யகலிய லெனுஞ்‌
சாப மூட்டிய தீயெனத்‌ தணப்பதே தருமம்‌.
[27. ஆவம்‌ - வில்‌ நாண்‌. தணப்பு - நீக்குதல்‌.] 27.

கொழுநனைத்‌ தொழுதெழுபவள்‌ கொழுநன்முன்‌ பின்னோர்‌
கெழுநலத்‌ துள்கருணைய எிருமுது குரவோர்த்‌
தொழுநலத்‌ தவளிங்குத்‌ தங்குறிப்புத்‌ துறக்கினுந்‌
தழுநலப்பயன்‌ கெடுக்கினுந்‌ தணப்பரோ தக்கார்‌.
[28. தொழுநலம் - தொழத்தக்க பண்புகள்‌. தழுநலம்‌ - பின்பற்றும்‌ நலன்கள்‌. தணப்பரோ - நீக்கிவிடுவார்களோ?] 28.

எக்குணங்க ளுண்டில்லை யெனுமிடை விடாது
தக்கநின்‌ சரண்வருவுந்‌ தாழவும்போ கின்றேன்‌
தொக்க தெய்வமுங்குரவருஞ்‌ சுற்றமு மற்று
மொக்க நின்றநீ யலகிலாதுடையா யெனுடையாய்‌. 29.

ஆதலாலெனக்‌ கருள்திரு வுள்ளம்வைத்‌ தாள்கென்‌
றோதலாலவ னன்புகொண்‌ டுரைத்த துரைக்கும்‌
போதலார்‌ குழலணங்க னாள்மகிணனைப்‌ போற்றி.
ஈதலாம்‌ விரித்தனை யெனத்தொருத்‌ திசைப்பாள்‌.
[30. மகிணன்‌ - (மகிழ்நன்‌) மனையாளின்பம்‌ நுகர்ந்து மகிழ்பவன்‌.
ஒருத்து - மனம்‌ ஒன்றுபட்டு.] 30.

இமயகிரி கயிலைதேவ ரிருங்கிரி நீலகண்ட
முமயவள்‌ மகிழ்கேதாரம்‌ பர்வதமுயர்‌ காளத்தி
சிமயநற்‌ கழுக்குன்‌ றண்ணாமலைதிரு முதுகுன்றோங்கு
மமைசிரா மலைபொருங்கிரி மேன்மை சொற்றாய்‌.
[31 கேதாரம்‌ - இமயமலையில்‌ அமைந்த சிவத்தலம்‌.] 31.

வளம்பெறு சோமநாதங்‌ கோகரண மற்றையஞ்சைக்‌
களங்கடல்‌ பாற்றேன்பார்‌ கன்னியாங்‌ குமரியோடு
கிளந்திசை முழங்கிராமீச்‌ சரங்கோடி கீழ்பானாகை
தளங்கமழ்‌ முல்லைவாயி லாதிதற்‌ றலங்க ளென்றாய்‌.
[32. கோடி - கோடியக்கரை, நாகை - நாகர்பட்டினம்‌, முல்லைவாயில்‌
முல்லைவாயில்‌ - திருமுல்லைவாயில்‌] 32.

சிதம்பர மாரூர்காசி காஞ்சிசீர்‌ விருப்பாக்கந்தே
விதம்பர விரிஞ்சை கோவல்‌ வெண்காடு காழி
இதம்பர மளிக்குதம்‌ புள்ளிருக்கும்‌ வேளூர்மாயூர
முதம்பர மளிக்கத்தக்க முத்திமெய்த்‌ தலங்களென்றாய்‌.
[33. இதம்‌ - இம்மையிலின்பம்‌, பரம்‌ - மறுமையில்‌ வீடுபேறு,
முதம்பரம்‌ - முதன்மையான பேறு.] 33.

அருமறைக்‌ காடுமத்தியாச்‌ சுனங்கும்ப கோணம்‌
வருவலஞ்சுழி சுவாமிமலை வேதிகுடி நெய்த்தானந்‌
திருவளர்‌ பழனஞ்சோற்றுத்‌ துறைதிருப்‌ பூந்துருத்தி
யருள்வளர்‌ கண்டிதந்தி வனங்கூட லறைந்தப்பால்‌.
[34. கண்டி - திருக்கண்டியூர்‌. கூடல்‌ - வெஞ்சமாக்‌ கூடல்‌.] 34.

திருவையாறு யென்றுசெப்பேச்‌ சுரந்தலந்தீர்ந்த மேன்மை
மருவிய ரவர்க்கு முத்திதரு மெனவகுத்தா யாங்கு
மொருவையான்‌ கேட்ககேட்க வூறிய வமுதாமன்பின்‌
அருவியார்‌ குணக்குகுன்‌ றொப்பாமின்னுநீ யருள்கவென்றாள்‌.
[35. ஒருவையான்‌ - ஒரே மனத்தான்‌. ஊறிய - மேலும்‌ மேலும்‌
பெருகிய] 35.

பெரும்பசிக்‌ கவிழ்புல்மேய்ந்‌ தாகத்துக்கு பெருநீர்விட்டு
வரும்பசு நிறைந்தவேரி மடைதிறக்‌ கென்று நின்றாங்‌
கரும்பவிழ்‌ நறுமென்கூந்த லனவத்தியளிக்கு முன்சொல்‌
விரும்பலுந்‌ தவத்தின்‌ மேலோன்‌ மிகமகிழ்ந்தக மலர்ந்தான்‌.
[36. ஆகத்துக்கு - உடம்பினுக்கு. மடை - நீர்மடை.] 36.

பெண்மை நுண்ணறிவு பெற்ற தெமதருந்தவப்‌ பேறென்றாங்‌
குண்மையா ரருளையுண்ணி யொருவனை நினைந்து பாகம்‌
பண்முக மொழியைப்‌ போற்றி கணபதிப்படிவு கண்டு
சண்முகற்‌ றொழுதுநந்தி கணாதிபர்க்‌ குச்சிதாழ்ந்து.
[37. உண்மையார்‌ - உண்மையான நெறிதரும்‌ சிவாகம முடையார்‌,
ஒருவன் - சிவன்‌, நந்தி கணாதிபர் - நந்தியெம்பெருமான்‌ வழி முறைத்‌
தொடர்ந்த சமயக்‌ குரவர்கள்‌.] 37.

மற்றுள சிவனன்பர்க்கு மனமிடங்‌ கொடுத்துநின்ற
பொற்றொடி தன்னைநோக்கி குரவனைப்‌ புந்திகொண்டு
முற்றுமங்‌ குரைக்குமுன்‌ னாலுளங்கொண்டு மொழியப்புக்கா
னற்றவன்‌ வாக்கில்யானு மாசையா னவிலப்புக்கேன்‌. 38
[38. குரவன்‌ - தன்‌ ஆசான்‌. நற்றவன்‌ - நல்ல தவமுடைய
நாதசன்மன்‌.] 38.

ஆச்சிரமச்‌ சிறப்பு முற்றும்‌.
---------------------------------

5. ஆலயச்‌ சருக்கம்‌ / பிரிய விரதன்‌ காதை

பாயிரம்‌
ஆலையம்‌ பிரணதார்த்தி கரத்துட னஞ்ச லென்றல்‌
மாலையற்‌ கரிய யோக மாரன மங்க மூர்த்தி
மேலையாஞ்‌ செப்பேசர்‌ மிகுபஞ்ச நதி காவேரி
காலையஞ்‌ சங்கிராந்தி கருதுமாதந்‌ துலாமே.
[1. மால்‌ அயற்கு - (மாலையற்கு) திருமால்‌ பிரமன்‌ ஆகியோர்க்கு,
ஆரணம்‌ - தமிழ்மறை.] 1

இம்முறைச்‌ சருக்க மீறாரென வகுத்திவற்றுண்‌ முன்ன
மெய்மை மாமனுவின்‌ நீதி விலங்குகள்‌ நான்கின்வீடு
செம்மைசேர்‌ சுரதின்காதை தேவர்கோன்‌ பணிகளான
பொய்மை தீராலயத்தின்‌ புதுமையைப்‌ புகலலுற்றாம்‌.
[2. சருக்கம்‌ - உட்பிரிவு, மாமனு - பெரும்‌ புகழ்‌ படைத்த
மனுமன்னன்‌.] 2

பிரிய விரதன்‌ காதை
பூட்டாச்‌ சிலையு மச்சிலை யின்வழி பொழியாக்‌
      கணையுங்‌ கணையிலாந்‌
தீட்டாத்‌ துதியும்‌ படைத்துடைய செந்தா
      மரைபோல்‌ முகத்தினனாய்‌
சூட்டார்‌ சுடராச்‌ செழுஞ்‌ செம்பொற்‌ சோதி
      யிலிங்கம்‌ பெருமையிது
கேட்டார்க்‌ கிறும்பூ தூறுங்‌ காதை கேளா யென்று
      கேளாயென்று கிளக்குமால்.
[1. பூட்டாச்சிலை - எதிரிட்ட புருவங்கள்‌. பொழியாக்கணை - கண்கள்‌.
துதி - பார்வைகவர்ச்சி. இறும்பூது - பெருமகிழ்ச்சி.] 1

இன்ன காலத்தித்‌ தலத்தில்‌ இலிங்க வுருவ மெழுந்ததெனச்‌
சொன்ன கால மின்மையினாற்‌ சோதி யுருவாம்‌ பரமசிவ
னென்ன காலத்‌ துளன்றே யிலிங்க வுருவு யிப்பதி
மன்ன லாயிற்‌ றென்ப தல்லால்‌ மற்றோர்‌ வகையி லுரைப்பரிதால்‌
[2. பரசிவன்‌ - எங்கும்‌ நிறைந்துள்ள சிவன்‌. மன்னலாயிற்று –
நிலைபெற்றது.] 2

பூத மைந்து மொன்றோ டொன்று பொன்றுங்‌ கால மப்பதியில்‌
நாத மொன்று சிவலிங்க நலியா தழியாச்‌ சுடருருவா
யேத மின்றி மேல்‌ கீழா மீரே ழுலகு மொன்றாகிப்‌
பேத மொன்று படைப்பமைப்பிற்‌ பின்னு மதுவாய்ப்‌ பிறங்குமால்‌.
[3. பூதம்‌ ஐந்து - வான்‌, நிலம்‌, நீர்‌, காற்று, தீ, என்பன.
பொன்றுங்காலம்‌ - ஒன்று சேரும்‌ காலம்‌, நாதம்‌ - இனிய ஒலி.] 3

ஊழி யூழி பேதத்தி லும்பர்‌ முனிவர்‌ மனுமுதலா
மாழி வேந்தர்‌ பொருட்டாக வங்கணி லிங்க மாயடங்கி
வாழி யவராற்‌ செய்பணிகள்‌ மகிழ்ந்து நல்கும்‌ பயனீய்ந்து
சூழு ஞாலத்‌ துயிர்முற்றும்‌ தொடர்ந்து போற்ற வைகுமால்‌
[4. உம்பர்‌ - தேவர்‌. ஆழிவேந்தர்‌ - ஆணையாகிய சக்கரத்தினை
உடைய அரசர்‌. சூழுஞாலம்‌ - கடலாற்சூழப்பட்ட உலகம்‌.] 4.

ஆய பேதத்‌ தொருகாலத்‌ தவனி முதலாம்‌ படைப்பமைந்து
ஞாயி றாதி மனுமுதல்வர்‌ நண்ணி யுலக நடத்துநாட்‌
சேய கதிரோன்‌ வழி மனுவின்‌ செல்வனிரண்டா மனுமன்னற்‌
றாய பிரிய விரதனெனத்‌ தோன்றிப்‌ புரந்தோன்‌ தொல்லுலகம்‌
[5. பேதம்‌ - வேறுபாடு. ஞாயிறாதிமனு - ஞாயிற்றை முதன்மையாக்
கொண்டு தோன்றிய மனுமுதலிய மன்னர்‌. சேய – சிவந்த;
புரந்தோன்‌ - பாதுகாத்தோன்‌.] 5.

நேரி வரையும்‌ பொன்வரையும்‌ நிலக்கீழ்‌ வரையு மேழ்வரையும்‌
பூமி வரையுந்‌ தன்பொறியே பொறித்து வேந்தர்‌ யாவரையும்‌
தோமி லுடுவின்‌ வரையாக்கிச்‌ சுடரோ னென்னத்‌ தனியாழி
தாமின்‌ புறவே யெவ்வுயிருந்‌ தானே தாங்கிச்‌ செலுத்தினான்‌.
[6. தன்பொறி - தனது அரச இலச்சினை. உடு - விண்மீன்‌.
சுடரோன்‌ - சூரியன்‌, தனியாழி - தனி ஆட்சி.] 6.

மனுவின்‌ ஞானச்‌ செங்கோலான்‌ மாறா நிலவின்‌ வெண்குடையான்‌
குனிவிற்‌ கலைநூல்‌ வாலறிவன்‌ குலவுத்‌ தோளான்‌ குணமிக்கான்‌
பனுவற்‌ சுவையுண்‌ செவிவாயான்‌ பருமக்‌ கலுழிக்‌ கடகளிற்றா
னனிகக்‌ கடலா னம்பொன்மணி யாழி திகிரி நெடுந்தேரான்‌.
[7. வாலறிவன்‌ - தெளிவும்‌ நிறைவும்‌ பெற்ற அறிவுடையவன்‌.
குலவுத்தோள்‌ - திரண்ட அழகியதோள்‌. பனுவல்‌ - நீதிநூல்கள்‌.
அனிகக்கடல்‌ - கரைபொரும்‌ கடல்‌.] 7.

முகட்டுக்‌ குவவு முலைநுடங்கு கொடிநுண்‌ ணுசுப்பு மொய்த்தமணிப்‌
பகட்டுப்‌ பரும்பணை யல்குற்‌ பாவைய ரேருடைப்‌ பண்பினான்‌
சுகட்டுத்‌ திகரிக்‌ கிரியண்டக்‌ கோளக்‌ கொடிஞ்சித்‌ தனிநெடுவா
னகட்டுக்‌ கிடுகிற பொருப்பகட்டு நெடுந்தேர்‌ செலுத்தியானா நாள்‌ 8.

புடவிக்‌ கிடையே யோரெழுகாற்‌ பொலன்‌ பூட்கலின்‌ நெடுமான்‌ றேர்‌
கடவிப்‌ பெரியோன்‌ வலனேர்பு திரிகாற்‌ காலாழ்‌ காறேறுத்‌
தடமைக்‌ கயமா யாழியெனச்‌ சான்ற நடுவிற்‌ றிடரேழு
மிடமொத்‌ தெடுதீ வெனச்‌ சிறந்த தென்றாலுரைப்ப தெமக்கெளிதோ! 9.

வைய மாழ்ந்த கடல்‌ கண்டு வைய மேழு பேரிடந்‌ தோறுந்‌
செய்ய புதல்வ ரிருக்க வெனத்‌ தினமும்‌ தீது நீக்கிடுவான்‌
வெய்ய தாலுங்‌ காலுணவின்‌ (வேகம்‌) புடைத்த சிறகைக்‌
கய்ய கோவு மெனுங்‌ கவளப்‌ பரிமேற்‌ கொண்டு காக்குமால்‌. 10.

விண்ணிற்‌ றனிக்காற்றொடு நீங்கி விரையேழ்‌ பரியுமொன்‌ றாக்கி
மண்ணிற்‌ செலுத்தும்‌ பரிதிபோற்‌ வலியோன்‌ வருநா ளொருநாளில்‌
கண்ணுற்‌ றிலங்கை யிமையநடுக்‌ கீழ்மேல்‌ கடற்கு னடுத்தலையாய்‌
நண்ணிக்‌ குணபாற்‌ றெழுந்தவொளி புணரிமேற்‌ கைந்தோ டாகுங்கால்‌,
[11. பரிதி - சூரியன்‌. புணரி - கடல்‌] 11.

காயமேற்‌ காய மில்லா கட்டுரை யுருமிற்‌ றோன்றித்‌
தூயதெள்‌ ளமுத மென்னத்‌ துணுக்கென வின்ப மூற
நாயக மனுவின்‌ மைந்த நராதிப நினக்கு நன்மை
நேயமேல்‌ வைத்துண்‌ டாக நிகழ்த்துவங்‌ கேண்மோ வென்றான்‌.
[12. காயம்‌ - காட்சிக்கமைந்த உடல்‌, உரும்‌ - இடியேறு - நேயம்‌,
அன்பு.] 12.

கேட்டவன்‌ வியந்து நின்று கிழக்குமத்‌ திசையை நோக்கி
வாட்டழற்‌ கடைநா ணின்ற வடிவெனச்‌ சொலித்து வான்போய்‌
நீட்டமுற்‌ றுலகீ ரேழு நிறைந்தெளி துளும்பக்‌ கண்டு
தேட்டமா லயர்க்கு நின்ற செறிதழ றழம்பி தென்றான்‌.
[13. சொலித்து - பளபளத்து, தேட்டம் - தேடுதல்‌, தழல் – வளர்ந்ததீ] 13.

என்றவன்‌ குறுகு மேலவை யிலிங்கமாய்‌ குறுக வாங்கு
நின்றொரு புருட மூர்த்தி நிருமியா வடிவிற்‌ றோன்றி
நன்றியில்‌ சிறந்த நாம நாமிவ ணழைத்தோ மிப்பா
லொன்றுசெய்‌ கழும நின்றா லுண்டென வுணர்த்து கின்றான்‌.
[14. புருட மூர்த்தி - எல்லா ஆற்றலும்‌ முதன்மையும்‌ பெற்ற தலைவன்‌,
நிருமியா வடிவு - இன்னவா நிதுவுள தென்று அளவிட்டுப்‌ பேசவியலா
நுண்வடிவு, நாம - நற்பெயருடையானே.] 14.

பற்பல வுயிரு நாமே நமையலாற்‌ பதிவே றில்லை
சிற்பர வுருவம்‌ யாமே காரணஞ்‌ செகத்துக்‌ கெல்லாங்‌
கற்பனைக்‌ கடந்தோ மாயை கற்பித நமது மற்றைச்‌
சொற்பயில்‌ சரா சரங்கள்‌ தோற்றமு நம்மி னாகும்‌.
[15. சிற்பரவுருவம்‌ - ஞானவெளியான உருவம்‌. செகம்‌ - உலகம்‌,
சராசரங்கள்‌ - நிலையியற்‌ பொருள்களும்‌ இயங்கியற்‌ பொருள்களும்‌] 15.

கால மூன்றாகி யாவும்‌ யாவருங்‌ காணக்‌ கண்டோம்‌
ஞாலமே லனேக கோடி நான்முகற்‌ கண்டே நாமே
கோலமாய்க்‌ கணிப்பில்‌ காலங்‌ குரைகடற்‌ றுயின்று காக்குஞ்‌
சீலமால்‌ கோடா கோடி செல்லவுங்‌ கண்டேங்‌ கண்டாய்‌.
[16. காலம்‌ மூன்று - சென்றன நின்றன நிகழ்வன. ஞாலம்‌ - உலகம்‌.
நான்முகன்‌ - பிரமன்‌; கணிப்பில்‌ - ஆய்ந்து கணக்கிடுவோமாயின்‌,
சீலமால்‌ - சிறப்புப்‌ பொருந்திய திருமால்‌.] 16.

ஒன்றுபத்‌ தொன்று நூறு ஆயிர மாதி ஐந்திற்‌
பின்றிய வண்ட கோடி பேரண்டம்‌ பிறழ வேறாய்‌
குன்றுடன்‌ மிதப்ப நீரிற்‌ குயக்கலம்‌ போலக்‌ காண்போ
மன்றுமப்‌ பிரளை யத்து மசைவிலா திருப்போ மப்பா.
[17. ஐந்தில்‌ பின்றிய - விண்‌, நீர்‌, காற்று. தீ, மண்‌ ஆகியவற்றின்‌
மாறுபாடாகிய, பேரண்டம்‌ - திரண்ட பெரிய கோளுலகம்‌. குயக்கலம் –
மண்பானை. பிரளயம்‌ - ஊழிக்காலத்து வெள்ளம்‌.] 17.

கோத்தநீ ரண்ட மெல்லாங்‌ குமிழியின்‌ மாயக்‌ காண்மோ
மாய்த்தநீ சுவரத்‌ தீய்ந்து மற்றெலா மொடுங்க வூழித்‌
தீத்தெரிக்‌ காண்போம்‌ தீயிற்‌ றிரட்டிய நீறு பூசி
கூத்துநின்‌ றாடி மீட்டோர்‌ கூத்தினா னுதிப்பக்‌ காண்போம்‌.
[18. தீத்தெரி - தீயாற்படுதல்‌ நிலை. நீறு - வெண்ணீறு. உலகங்களெல்லாம்‌
அழிய ஆடும்‌ கூத்து - கொடுகொட்டி. உலகங்களெல்லாம்‌ தோன்ற
ஆடும்‌ கூத்து - துடிநிலைக்கூத்து.] 18.

ஞானதே சிகர்பாற்‌ கேட்ட வேதசாத்‌ திரஞா னத்துள்‌
மோனமோ டுணர்விற்‌ கானு முத்தரே யெளிதிற்‌ காண்பா
ரானவா றன்றிக்‌ குன்றி லறையிலைங்‌ கனலி னின்று
கானமேற்‌ றவஞ்செய்‌ தாலு காண்பவர்க்‌ கெளியோ மல்லோம்‌.
[19. ஞானதேசிகர்‌ - தத்துவநூற்பேரறிவும்‌, மெய்யுணர்வும்‌ பெற்ற குரு,
வேதம்‌ - தமிழ்மறை, ஞானசாத்திரம்‌ - சிவஞானபாடியம்‌ முதலாய
மெய்ஞ்‌ஞான சாத்திரங்கள்‌. அறை - குகை, கனல்‌ - தீ. கானம்‌ - காடு.] 19.

எங்கு மாண்டிடினும்‌ மாளா தித்தல மதனா லிங்கே
எங்குமா யிருந்து நீங்கா திருந்தன மிப்பால்‌ மன்னா
எங்குநம்‌ மிடமென்‌ றாலு மிதுநமக்‌ கிடமா மென்று
மெங்குநம்‌ முருவமே யெமக்கு நயந்தகுரு விலிங்க மீதால்‌.
[20. எங்கும்‌ மாண்டினும்‌ - எல்லா இடங்களும்‌ அழிந்து போனாலும்‌.
நமக்கு இடமாம்‌ - நமக்கு உரிய இடமாம்‌.] 20.

ஊர்களெண்‌ ணிலைவுண்‌ டேனுந்‌ திருவையா ரூரா யுள்ளோம்‌
பேர்களெண்‌ ணிலவென்‌ னிலுஞ்செப்‌ பேச்சுர னென்னும்‌ பேரேம்‌
சீர்களெண்‌ ணில்யுகங்கள்‌ சேரலால்‌ சீர ணித்துப்‌
பார்களெண்‌ ணில்சூழ்‌ தேரோய்‌ பழகிய திந்தக்‌ கோயில்‌.
[21. செப்பேசுவரன்‌ - திருவையாறுடைய சிவன்‌ திருநாமம்‌.
சீரணித்தல்‌ - தம்முள்ளடக்குதல்‌, பழகிய - விரும்பி நிலவிய] 21.

இப்படிப்‌ பழகி முன்னு மிழைத்தன ரளவி லன்பர்‌
பொய்ப்படி தவிர்த்த நீயும்‌ புதிதென புரிந்து செய்தி
மெய்ப்படி நன்மை மேன்மேல்‌ வேண்டினன்‌ முனக்கென்‌ றன்றோ
னப்படி சொலித்த செம்பொற்‌ சோதியுள்‌ ளொளித்தா னம்மா!
[22. பொய்ப்படி - நிலையில்லாத வாழ்க்கை. மெய்ப்படி - நிலையான
பேரின்ப வாழ்வு. சொலித்த - கதிரொளியாகிய. ஒளித்தான்‌ -
உருவொளி கரந்தான்‌.] 22.

மறைதலு மிறைவன்‌ கிட்டி வாளொளிப்‌ பிழம்புள்‌ ளாக
உறைசிவ லிங்கங்‌ கூர்த்து பார்த்தலு மோட வைத்த
கறைதவிர்‌ செம்பொன்‌ போலக்‌ காணவா மூன்றி ரேகை
நிறைபல துவார மோடக்‌ கண்டதி சயித்து நின்றான்.
[23. வாளொளிப்‌ பிழம்பு - அருகிய ஒளித்திரட்சி. ஓடவைத்த உருக்கி -
ஓடவிட்ட, கறைதவிர்‌ - குற்றமில்லாத. இரேகை - வரிச்சுவடு.] 23.

புழைப்படு துவாரந்‌ தோறும்‌ புத்தமு தூரக்‌ கண்டான்‌
பிழைபடா மறைச்‌ சொல்‌ வாய்மை பெருந்துரு வரத னாதிக்‌
குழைபடு மனத்‌ தவத்துக்‌ கோதமன்‌ வசிட்ட னீடு
நுழைபவ ராங்கு நீங்கா திருப்பது நோக்கிக்‌ கண்டான்‌.
[24. புழை - துளை, புத்தமுது - புதிய அமிர்தம்‌. துரு - துருவாசன்‌.
நீடு - நெடுங்காலம்‌.] 24.

அன்னவன்‌ பயந்து பின்னர்‌ அதிசய மெய்தி நின்று
தன்னுள மகிழ்ந்து ரோமஞ்‌ சலிகொளத்‌ தடக்கை கூப்பி
முன்னரஞ்‌ சலி புரிந்து முறைமுறை வணங்கி யாங்கு
பொன்னகர்‌ சிகர மாடம்‌ புரிசைகோ புரங்கள்‌ செய்தான்‌.
[25. ரோமாஞ்சலி - மயிர்க்கூச்செறிதல்‌. முறை முறை வணங்கல்‌ -
சைவாகம நெறிப்படி வணங்கல்‌. சிகரம்‌ - விமானம்‌. புரிசை –
திருச்சுற்று மாளிகை.] 25

சூளிகை மண்ட பங்கள்‌ சுடர்நவ மணியிற்‌ செய்து
மாளிகை வீதி கண்டு மனமிட மியற்றி யங்கண்‌
வேள்வியின்‌ மறையோர்‌ மன்னர்‌ வணிகர்வே ளாளர்‌ மற்றைக்‌
கேளியல்‌ சாதி யாவுங்‌ கிளையுட னிருத்தி னானே.
[26. சூளிகை - பெருமுற்றம்‌, மாளிகை வீதி - திருமாளிகை நடைவீதி.
கேளியல்‌ சாதி - திருக்கோயில்‌ பணீச்‌ சுற்றமான உவச்சர்‌, மாணி, திருமஞ்சனத்தார்‌,
அலகிடுவார்‌, ஆகியோர்‌.] 26.

பிரியமா விரத னென்பான்‌ பிரக்கிய கோயி றன்னை
புரியையாம்‌ புகல வேண்டிற்‌ பொன்னுல களகை தன்னை
சுரிகுழல்‌ மடவார்‌ தேவர்‌ சூழ்வொடு சூழ்ந்தாற்‌ போலுஞ்‌
தெரியிலப்‌ பதிகள்‌ போற்றுஞ்‌ சிவபுரி தானும்‌ போலும்‌!
[27. பிரக்கிய - விளக்கமாகச்‌ செய்த. அளகை - குபேரன்‌ நகர்‌,
ஆரி குழல்‌ - சுரித்துக்கட்டிய கூந்தல்‌. மடவார் - இளமகளிர்‌,
தேவமகளிர்‌, சிவபுரி – கயிலை.] 27.

செம்பொற்‌ சோதி செழுஞ்சுடர்‌ சூழ்ந்தெழுந்
தும்பர்ப்‌ போகிய வொண்மையிற்‌ றோன்றுமா
லம்பொற்‌ கோயிலு ளாதியிற்‌ றூவியின்‌
பைம்பொற்‌ சோதி பறந்து நிமிர்ந்தவான்‌
[28. செம்பொற்‌ சோதி - மாசற்ற பொன்னொளி.
தூவி - மென்மையாகப்‌ பரவிய.] 28

தலத்தினோ டொளி தங்கிய சூழெலா
மலத்து நீடு மனத்திருள்‌ மாய்வபோற்‌
குலத்து நீடிய கோயிற்‌ சோதியாற்‌
புலத்து நீடு புறத்திருள்‌ போவதால்‌.
[29. மலம் - ஆணவ மலம்‌, குலம் - தேவகுலம்‌, புலம்‌ -
காட்சிக்கமைந்தவுலகம்‌] 29.

நீல மாளிகை நித்திலப்‌ பத்திபாய்ச்‌
சால மாலிருட்‌ டாரகை யென்பதொன்‌
றேல மால்விசும்‌ பில்லென வல்லெலாங்‌
கோல மார்முகிழ்‌ பதக்‌ கோயிலே.
[30. நித்திலம்‌ - முத்து. தாரகை - வீண்மீன்கள்‌, வீசும்பு - வானம்‌,
மால்‌ - இருள்‌, கோலம்‌ - அழகு, முகிழ்பது - புலப்பாடுறுவது.] 30.

மாசிலா மதிற்‌ பச்சை மணிச்சுடர்‌
தேசு லாவ தெரிவது வானமே
லாசிலா மிசை யாறுளாந்‌ தொடராற்‌
பாசி யூறிப்‌ படர்ந்தது போலுமே.
[31. ஆசுஇல்‌ - குற்றமற்ற, தேசு - அழகு, பாசி - பச்சை நிறப்பற்து.
இப்‌பாடல்‌ தற்குறிப்பேற்ற அணிபெற விளங்கிற்று.] 31.

மாணிக்கக்‌ கல்லிழைத்த பொன்‌ மண்டப
மாணிக்‌ கட்டழல்‌ விட்டெரித்‌ தம்பொன்வாள்‌
வேணிக்‌ கட்பயில்‌ வேலையும்‌ வேலையிற்‌
பாணிக்‌ கப்பயில்‌ பாண்மையிற்‌ றோன்றுமே.
[32. மாணிக்கத்தழல்‌ - மாணிக்கத்தின்‌ ஒனியாகிய தழல்‌, வேணி - சடைமுடி.
வேலை - வான கங்கை, பாணிக்கப்பயில்‌ - தாள மிசைக்கக் கற்கின்ற.] 32.

மட்டிலா நவமா மணிக்‌ கோபுரம்‌
விட்டவாய்‌ நிலை விண்ணுழை வெண்மதி
யொட்டி வெள்ளிடை யொள்வயி ரங்களா
முட்டி நின்று முயங்க மயங்குமே.
[33. நவமாணிக்கம்‌ - ஒன்பது வகை இரத்தினங்கள்‌, விண்ணுழை –
விண்ணிடத்துவழி, முயங்க - ஒன்றுசேர.] 33.

மரகதப்‌ பச்சிலை மாண வண்ணமாய்‌
கருமணித்‌ தொடர்‌ சாழக ஞானமா
வெரிமணிக்‌ கதி ரின்மணித்‌ தாமரை
வரநதிக்குள்‌ மலர்ந்தது போலுமே.
[34. மாண - சிறப்பமைந்த, கருமணி - நீலமணி; சாழக ஞானம்‌ -
யோகப்‌ பயிற்சியால்‌ பெறும்‌ ஞானம்‌; வரநதி - தெய்வநதி.] 34.

மழைத்த நீல மரகதப்‌ பன்மணி
இழைத்த செம்மணி யெங்கு மெரித்தலாற்‌
குழைத்த பாசொளி கூண்டெழு செவ்வொளி
தழைத்த சோலையா தளிர்த்தது போலுமே.
[35. மழைத்த - குளிர்ந்த நீரோட்ட முள்ள, செம்மணி - இரத்தினம்‌,
பாசொளி - பச்சை நிறவொளி.] 35.

துங்கமேரு விற்கவின்‌ றொடுத்தகோ புரத்தலை
சிங்கமே லுரிஞ்சுகார்‌ கள்சீயமே னடக்குமா
தங்கமே நிகர்த்தவத்‌ தலைப்பசும்புண்‌ வாய்தொறும்‌
பொங்கு சோரிபோலவ்‌ விண்பொலிந்த சோதி மின்னலாம்‌.
[36. துங்கமேரு - அழகிய மேருமலை, உரிஞ்சுகார்‌ - படிந்த மேகம்‌,
சீயம்‌ - சிங்கம்‌, சோரி - இரத்தம்‌.] 36.

. ஆனுயர்த்த அண்ணல்‌ கோயி லறிகுறிக்கு மதகெலாம்‌
மேனிரைத்த விடையினோடு விண்ணுலாவு வெண்டுகிற்‌
கோனிரைத்த கொடிநுடங்கல்‌ கொடியமால்‌ விடைக்குலம்‌
வானதிப்‌ புனற்குநா வளைத்துநின்ற மானுமே.
[37. ஆனுயர்த்த அண்ணல்‌-இட்ப இலச்சினையுடைய கொடியை
உயர்த்திய சிவபெருமான்‌, விடை- இடபம்‌, கோன் - இந்திரன்‌,
வானதி – ஆகாயகங்கை] 37

துஞ்சுவா னெழுந்துவான்‌ மதிற்புறஞ்‌ சுமக்கவீழ்‌
மஞ்சுவர்‌ யுமிழ்ந்தநீர்‌ மலிந்தநுண்‌ டுளிப்பர
பஞ்சுவாய்‌ வேதமோது மந்தணாளர்‌ வீதிவாய்‌
விஞ்சுவாய்‌ பிரமவிந்து விமலமே விளைப்பவே.
[38. துஞ்சுவான்‌ - படிந்த மேகம்‌, வான்‌ மதில்‌ - உயர்ந்த மதில்‌, மஞ்சு -
படர்மேகம்‌, பஞ்சுவாய்‌ - மென்மையான வாய்‌, அந்தணாளர்‌ - வேத
பிராமணர்‌, விமலம்‌ - தூய்மை.] 38.

வான நாடு மாளிகைக்கண்‌ மாடசூளிகைக்குழாந்‌
தான நாடு தேவரூர்‌ விமாமகோடி தடைசெயப்‌
பானல்‌ வாயம்‌ பேச்சினார்‌ பரிந்துருட்டு சிறியதே
ரேனையாக முற்றினோ ரெடுத்ததேர்‌ தடுப்பவே.
[39. வானநாடு - வானளாவிய. தானநாடு - எல்லா செல்வங்களுமுள்ள தேவவுலகம்‌.
பானல்‌ - குவளை மலர்‌ போன்ற.] 39.

புள்ளு மானிலத்தர்‌ தேவ பூதராதி பேதமா
யள்ளு மாவடைத்த நாழி கைப்புடைப்‌ பணித்தலாற்‌
றெள்ளு மாரணத்‌ திறத்‌ தெழிக்கும்‌ வேதிகைத்தல
முள்ளுமாவி யாவையும்‌ படைப்புலோக மொக்குமே.
[40. புள்ளு மானிலம்‌ - நிலையில்லாது சுழலும்‌ உலகம்‌. பேதம் –
வேறுபாடு; தெள்ளும்‌ ஆரணம்‌ - தெளிந்த வேதம்‌. வேதிகை –
வேள்விமாடம்‌. படைப்பு லோகம்‌ - பிரம உலகம்‌.] 40.

விதியுணர்த்தும்‌ விஞ்சையால்‌ விரிஞ்சன்‌ வேதனாலென
புதியதூய திருவினாற்‌ புயல்‌ நிறத்தன்‌ மார்பெனக்‌
கதிவிளைத்த தருமமிக்க காட்சியாலவ்‌ வேதிகை
விதிதறித்த மதிமுடித்த செம்பொன்மேனி மானுமே.
[41. விரிஞ்சன்‌ - பிரமன்‌. புயல்‌ நிறத்தன்‌ - மேகவண்ணன்‌, திருமால்‌.
மதிமுடித்த - மேனி - சிவபெருமான்‌. மானும்‌ - ஒக்கும்‌.] 41.

ஓமதூபம்‌ விம்ம விம்மவோதி மங்கள கனகரிந்‌
தேமகூட மன்ன மன்னர்‌ வீதிமரட மிறைகொளாத்‌
தாமவார்‌ குழற்குமாதர்‌ தருமகிற்‌ புகைவெரீயிக்‌
காமர்‌ காவகம்புகும்‌ புறாவொடுங்‌ கலப்பவே.
[42. ஓமதூபம்‌ - வேள்வித்தீயிலிடும்‌ நறும்புகை, தாமவார்‌ -
(தாமம்‌ வார்‌ குழல்‌) மலரணிந்த நீண்ட கூந்தல்‌.] 42.

இரைத்த புட்கொடிக்குழா மிரண்டுபாலு மிருபெருங்‌
கரைத்தடம்‌ புனற்பெருக்கு மொய்மணிக்‌ கதிர்க்குலாம்‌
திரைத்‌திறங்க டோரணங்க ளென்னவின்ன வாற்றினாற்‌
புரைத்தபொன்‌ கொழித்த பொன்னி யாறுவெள்ளம்‌ போலவே. 43.

மகரவாயில்‌ மாரனூர்‌ மனைப்பொதும்ப ரும்பர்கோ
வகரவம்பொன்‌ மேடைவேத னாடுவெண்‌ பளிக்கரை
புகரில்‌முற்ற மால்பதம்‌ புதுச்சுதைப்‌ பரப்பொளிச்‌
சிகரசூளி கைத்‌தலங்கள்‌ கயிலையிற்‌ சிறக்கவே.
[44. மகரவாயில்‌ - மகரதோரணவாயில்‌. மாரனூர்‌ - மன்மதன்‌
வாழிடம்‌. புகரில்‌ - குற்றமற்ற.] 44.

யாழ்நிரைத்த மாதர்முன்கை யேந்துகிள்ளை யினியப்பா
றூணிரைக்‌ கொருத்தாயை யூடியோடி நீடுசீர்‌
வாணிகன்‌ மாமணிப்‌ பசும்பொன்‌ மாளிகைத்‌
தூணிரைத்த பாவையாம்‌ சுகங்களோ டொளிப்பவே.
[45. கிள்ளை - கிளி. ஊடி - பிணக்கு, பாவை - பதுமை,
சுகம்‌ - கிளி.] 45.

சூழநீணிற்றுவான்‌ சுடர்நிலா வுடுக்கள்‌ போலுங்‌
காழகத்‌ துகில்வான முத்தினகம்‌ பலமணிக்கேசந்‌
நீழல்வா யளகையாளி நிதிச்சரக்‌ கறைதிறந்தாங்‌
கூழறாச்‌ செல்வக்‌ குப்பையொழிவற்றா தென்றும்‌
[46. நிதிசரக்கறை - செல்வமாகும்‌ சரக்குகளுள்‌ள அறை.
கூழ்‌ - உணவு. குப்பை - தொகுதி.] 46.

பெறற்‌கருந்‌ தலத்தின்‌ மேன்மை பெருந்திருக்கிழவன்‌ வீடுந்‌
துறக்கமு மடிப்படுத்‌ தொன்மைய தெனு மாலங்கு
வறற்பரு நிதியின்‌ மல்கும்‌ வைசிகர்‌ மறுகுமின்பம்‌
சிறக்கவே பதிகட்கீழ்‌ செறியதா தூக்கும்‌ போலும்‌!
[47. பெருந்திருக்கிழவன்‌ - குபேரன்‌. துறக்கம்‌ - இன்பவுலகம்‌,
வறற்பழி – குறைவுஅற்ற. தூக்கும்‌ - அளவிட்டு நிற்கும்‌.] 47.

கோவள மகளிர்‌ கூந்தற்‌ குறையளி குறிஞ்சி பாட
பூவள வேள்வீ வேளாண்‌ புரவல ரிருக்கை யாங்குத்‌
தாவள மேக மாழ்கித்‌ தண்கடற்‌ றுகிரு முற்றும்‌
தூவள வளையுஞ்‌ சீந்தி சோனையிற்‌ சொரியு மாதோ!
[48. கோவள மகளிர்‌ - அரச செல்வமுடைய பெண்கள்‌. புரவலர்‌ -
உலகைப்‌ புரப்பவர்‌. சோனை - கார்மேகம்‌.] 48.

மாந்தர்‌ கற்பகங்கள்‌ சிந்தாமணி சீரார்‌ மாதா தேனு
வாய்ந்த ருணிதிகுற்றாட்டி றொட்டிட்டுச்‌ சூழ்வோர்‌
போந்து தெள்ளமுது நல்கும்‌ புதுமதி யாகவங்ஙண்‌
ஏய்ந்தபுன்‌ பசியினோரை யிமையவர்க்‌ கரசனாக்கும்‌ 49.

பாங்க மாதடந்‌ தாட்டாழை பச்சிள நீரின்‌ மீது
தூங்குவ துண்மென்‌ பாளை துயல்வாறோகை போல்வ
வாங்குபு வல்லி யொல்கும்‌ மருங்கற்‌ பணைத்த கொங்கை
தாங்கிய முத்தின்‌ றொத்துந்‌ தாள்வடம்‌ புரள்வ போலும்‌! 50.

வேளுழ வாளர்‌ மாட மேலிருந்‌ தாடு மஞ்ஞை
வாளுழ வாளுகு செங்கோல்‌ மனுபர னெடுத்த கோயி
லாளுடை பரனுக்கின்ப வடியவா நியம மன்னார்‌
தாளுடை தடங்கடங்கள்‌ சார்வெனச்‌ சார்வதாமே. 51.

அவிநயம்‌ ரம்பை கொல்லிப்‌ பாவை அவய வங்கள்‌
செவிகவ ரமுதகீதந்‌ தெய்வ காந்தாரி போற்பிறக்க
கவின்‌ பயக்‌ கிக்கூடற்‌ பன்னகக்‌ கன்னி காமங்‌
குவிமுலை யிரதி யன்னார்‌ குழீயது தெருவினோர்பால்‌
[52. அவிநயம்‌ - பொருள்தரும்‌ ஆடல்‌. ] 52.

கோணயக்‌ கடல்கார்‌ வாங்குங்‌ குளிறொளி ௩டுக்குப்‌ பேரி
வீணை கைத்திரிகை தாளம்‌ வேள்வளை துடி தடாரி
தோணயத்‌ தொலிக்கு மாந்தர்‌ தொல்குடி யோர்மால்‌ மாயை
யாணையிற்‌ பிரிந்த தன்ன வகம்படித்‌ தொண்ட ரோர்பால்‌.
[53. பேரி - பேரிகை, துடி- உடுக்கை, தடாரி - பறை, அகம்படித்
தொண்டர்‌ - உடனிருந்து பணிசெய்யும்‌ மக்கள்‌.] 53.

பாவையுங்‌ கழங்கும்‌ பந்தும்‌ பாடுமம்‌ மனையும்‌ யாழுங்‌
கோவையந்‌ தமிழு மீசன்‌ குரைகழற்‌ கன்பும்‌ பூண்டார்‌
பூவையர்‌ பேதை முன்னோர்‌ பொதுமனை மகவான்‌ செல்வம்‌
யாவையும்‌ நல்கி வைகு மின்பத்தி னியைந்த தோர்பால்‌.
[54. பாவை - மகளிர்‌ விளையாடும்‌ பதுமை; கழங்கும்‌ - உருட்டி
விளையாடும்‌ கருவி; கோவை – சீராகவமைந்த; மகவான்‌ - இந்திரன்‌.] 54.

பால்வரை பொதும்பர்‌ முழைவைத்த பேரிறாற்‌ றெனமுச்‌
சீலவரிச்‌ சுரும்புந்‌ தேனும்‌ நிமிரு நின்றிமிர்வ தேய்ப்ப
கோல்வரித்‌ திவவின்‌ யாழுங்‌ குழலுந்‌ தண்ணுமையு மேங்க
நூல்வரி கழக கேள்வி நுகர்ச்சியிற்‌ பயின்ற தோர்பால்‌.
[55. பொதும்பர் - மரச்செறிவு, முழை - பொந்து. பேரிறால் –
பெரியதேனடை; சுரும்பு - கருவண்டு. தேன்‌ - தேனீ. நிமிரு –
வரிவண்டு. திவவுயாழ்‌ - விரலால்‌ திறஞ்செய்யும்‌ யாழ்‌. நூல்வரி
கழகம்‌ - நூல்களை முறையாக ஆய்ந்த தமிழ்ச்சங்கம்‌.] 55.

மலையகழ்ந்‌ தெடுக்கத்‌ தக்கார்‌ மறிகடல்‌ கவிழ்க்க வல்லார்‌
நிலைதளர்‌ பூதமைந்து நிறுத்துமா கணத்தோ டொப்பா
ரலைபுனல்‌ வேணியன்ன லாலய பணிமேற்‌ கொண்டார்‌
தொலைவிலா வேறூழ்‌ வலித்தேர்‌ னிவந்தரதஞ்‌ சூழலோர்பால்‌ 56.

ஏழ்வகை யுலோக மாக்கி யெழில்பெற யிருத்தி யவ்வா
றூழ்வர வழிக்குந்‌ தன்மை யுடைமையாற்‌ தெய்வத்‌ தன்மை
தாழ்வற மயனை யென்னார்‌ தபதியர்‌ சிற்ப ராவர்‌
ஆழ்வரு மதினுண்‌ மாந்த ரனைவரு மிகுந்த தோர்பால்‌. 57.

சந்தியுஞ்‌ சதுக்கமுஞ்‌ சார்வுஞ்‌ சித்திரப்‌
பந்தியும்‌ பந்தரு பளிக்குத்‌ தோன்றிய
மந்திரப்‌ பொதியிலு மன்றுமா வாயிலுஞ்‌
செந்திருப்‌ பொலிவுறச்‌ சிறந்த தெங்குமே. 58.

பழுத்த செந்தமிழ்‌ சேந்த பதக்கமே
லழுத்துவ மணியெனப்‌ பொலிந்த தல்லது
வழுத்தருந்‌ திருமகள்‌ வாழ்தற்‌ கத்திசைச்‌
செழுத்த பூம்பொருட்‌ டெனச்‌ சிறந்ததப்பதி. 59.

பணிக்க மணிமுடிப்‌ பைம்பொன்‌ மெள்ளமேல்‌
மணிக்‌ கிணையல்லதிப்‌ புவன மாமனை
அனுக்க தீவினை யிருளகற்‌ றவோர்‌
தனிப்‌ பருந்திரு விளக்கென்‌ னத்தக்கதே. 60.

தெறுகதிர்‌ பகல்‌ விளக்காக்குஞ்‌ செம்பொனின்‌
மறுகணி வளநகர்‌ வளைத்த பைம்‌போதும்‌
புறழ்நவ மணிப்பணி நிதியை யுள்ளுடையப்‌
பிறழ்‌மணி மரகதப்‌ பேழை போன்றதே. 61.

வில்வ மாசினி பலாவேங்கை பச்சிலை
குல்லை கேதகை யிருவேரி கூதளம்‌
மல்லிகைச்‌ சாதி செவ்வந்தி பித்திகை
முல்லையே முதலிய மொய்த்த சோலையே.
[62. வேங்கை - வேங்கைமரம்‌. பச்சிலை - மரு, மருக்கொழுந்து
முதலியன. கேதகை - தாழை. குல்லை - துளவம்‌, இருவேரி –
வெட்டிவேர்‌. சாதி – சாதிமுல்லை. பித்திகை - பிச்சிப்பூ
(முல்லை வகை என்பர்‌.)] 62.

திக்களப்‌ பனபணை வேர்கள்‌ சேடனூர்‌
புக்களப்‌ பனசுரத்‌ தருவைப்‌ போலியாய்‌
மக்களாற்‌ றுவதென்ன மதித்த ளக்கெனத்‌
தக்களப்‌ பனசினை தான்வா னெலாம்‌.
[63. பணை - பெருத்து நீண்ட. சேடனூர்‌ - நாகவுலகம்‌.
சுரதரு - கற்பகமரம்‌] 63.

மடற்‌ கமுகுஞ்‌ சலவாய்வஞ்சி மாதரும்‌
துடக்கிய கொடிக்கிடை யாடுந்‌ தோகையை
மிடைத்த மகளிர்‌ வந்திறங்கு கொம்பரு
முடற்பஞ்‌ சஞ்சோலையோ டொன்று போலவே.
[64. கமுகு - பாக்குமரம்‌. சலவாய்‌ - ஓசையிடும்‌ வாய்‌,
தோகை - மயில்‌.] 64.

மாயவ னடிவடிவென வளர்ந்த சோலையூ
டேய்வன மனமேய்ந்த பூந்தடஞ்‌ சேயவள்‌
புலவியிற்‌ சிந்தைவைத்‌ துப்புலப்படுத்‌ திணைந்த
நலமிகு மகளிர்போ லன்னஞ்‌ சேர்ந்ததுவே.
[65. பூந்தடம்‌ - தாமரைக்குளம்‌. சேயவள்‌ - திருமகள்‌.] 65.

கஞ்சமுங்‌ குவளையும்‌ காவியும்‌ கயற்‌
புஞ்சமு முடங்கியப்‌ புரியின்‌ மாதரார்‌
நஞ்சமுங்‌ காலனும்‌ போலு நாட்டவே
லஞ்சலி னீரா னடைந்த போலுமே.
[66. கஞ்சம்‌ - தாமரை. குவளை - நீலோற்பலம்‌, (செங்கழுநீர்‌);
காவி – கருங்குவளை. புஞ்சம்‌ - திரண்ட நிலை. நஞ்சமும்‌
காலனும் - விடமும்‌ எமனும்‌ போன்ற. நாட்டம்‌ - கண்பார்வை.] 66.

பொய்கையந்‌ திருமகள்‌ புனல்வஞ்‌ சிக்கொடிக்‌
கைகளிற்‌ றுணர்த்தபூங்‌ கொம்பர்‌ காதலர்‌
வைகலிற்‌ றழுவலின்‌ வணங்கியாம்‌ பல்வாய்‌
மொய்கொடே னூறனீர்‌ மூசி யுண்பவே.
[67. வைகல்‌ - நாட்பொழுது. மொய்கொள்தேன்‌ ஊறல்‌ நீர்‌.
மூசி – மூடிக்‌கொண்டு. காலைப்பொழுதில்‌ ஆம்பல்‌ இதழ்
குவிந்திருக்கும்‌ இயல்பு, மூடி மறைத்து கள்ளை உண்ணுவது
போன்றிருந்ததென்று நயம்‌ தோன்றிற்று.] 67.

கொன்றைவாழ்‌ சடையினோர்க்‌ கேலுங்‌ கொள்கையாற்‌
றென்றலார்‌ பதமனைந்‌ தெழுந்தே மகிழ்ந்‌
தொன்றலா ஞானவா னுலகுண்‌ டாலென
மன்றலார்‌ நந்தா வனமுஞ்‌ சூழ்ந்தவே. 68.

இவையிவை சிவபதி சிறப்ப நாற்கவி
கவிஞரு மதிக்கொணா காட்டி கண்டனன்‌
செவிபொர வரியளி செறிந்தெழுந்‌ தழுந்திய
கவுளிழி கலுழி வெங்கடாக்‌ களிற்றினான்‌.
[69. நாற்கவி - ஆசு, மதுரம்‌, வித்தாரம்‌, சித்திரம்‌. வரியளி –
வரிபொருந்திய வண்டு, கவுள்‌ - கபோலம்‌, கலுழி - மதவெள்ளம்‌] 69.

ஆடி யருளும்‌ பஞ்சநதி யத்தர்க்‌ காடுமைஞ்‌ சினுக்குங்‌
கோடிப்‌ பசுவி னீரைநல்கி குறையா நைவேத்தியம்‌ புரிந்து
தேடி யளவி னிதிவீசித்‌ திருப்பங்‌ குனியத்திற்‌ றிருநாள்‌
நாடி யெவருந்‌ தொழப்புரிந்து நற்றீர்த்‌ தமுங்கண்‌ டாடினான்‌.
[70. ஆடும்‌ ஐந்து - பஞ்ச கைளயம்‌, நிதி - செல்வம்‌, பங்குனித்‌ திருநாள்‌] 70.

நித்த நைமித்திகப்‌ பூசை நிமலர்க்‌
கத்தினப்‌ படிபுரியச்‌ சுத்தபர மார்ச்சனை
சைவச்‌ சுருதிபீடந்‌ தாபித்துதான முறைவகுத்து
நத்தறாத வயற்கழனி நாடுவூர்ப்‌ பல நல்கினான்‌.
[71. நித்த நைமித்திகம்‌ - சைவாக விதிப்படி நாளும்‌ செய்யும்‌ வழிபாட்டு
மூறை, சைவ சுருதி பீடம்‌ - சைவ ஆசார்யர்‌ வழி வரும்‌ சந்தான பீடம்‌,
நந்து அறாத – நத்தைகள்‌ நீங்காத, நாடு ஊர் - அர்ச்சனா போகமாக
நாடும்‌ ஊரும்‌ இறையிலி செய்தல்‌.] 71.

நோக்கவரியத்‌ திருமேனி வருளகன்‌ றழைத்து நுவன்றபடி
ஆக்கவரிய திருக்கோயி லனைத்துமாக்கி யமைத்த தற்பின்‌
வீக்கவரியும்‌ வார்க்கழற்கால்‌ வேந்தர்‌ வேந்தன்‌ கரணங்க
டாக்கவரிய தனிமுதலைத்‌ தன்பா லன்பினிவை துதிப்பான்‌. 72.

ஒன்றாய்‌ கண்ட வடிவா யானந்த முயர்வா யெழுந்த வொளியாய்‌
மன்றாய்‌ தண்கணி றையாய்‌ நிலங்கள்‌ மரமாய்‌ வளங்கள்‌ பதியாய்‌
குன்றாய்‌ விலங்கு முதலா விருந்து குணிகள்‌ வரவீரர்‌ குறியாய்‌
நின்றா யுன்மேன்மை நினைவிக்‌ கிலன்றி நினையா வருகின்று நினைவார்‌
[73. ஒன்றாய்‌ கண்ட வடிவு - ஒரே தீப்பிழம்பாகவும்‌, மூவராகிய ஒருவனாகவும்‌
கண்ட வடிவு, நிறைவு - முழுமை, முழுமுதல்‌. மரமாய் - எல்லா உயிர்களுமாய்‌,
குணி - குணமுடைய.] 73.

ஆறாடு சென்னியணி காளகண்ட யரியாதி தேவரறியார்‌
பேறாடி நின்றுதொழுவார்க்‌ களித்த பெருமான்‌ குழைத்தகளபச்‌
சேறாடு கொங்கை யுமைபாகப்‌ பஞ்ச நதிசெப்பி யேசமுழுது
நீராடி யென்று நினைவிக்கி லன்றி நினையாவர்‌ நின்று நினைவார்‌.
[74. ஆறாடு சென்னி - கங்கை விளையாடும்‌ முடி, காளகண்ட –
விடத்தில்‌ கொண்டவனே.] 74.

கனிகின்ற வன்புகண்டு கருணையங்‌ கடலாய்‌ நின்றோன்‌
றனிநின்று நம்பாற்‌ கேட்டவர்‌ நன்றுதந்‌ தோமென
வினிதங்கு நல்கிச்‌ செம்பொற்‌ சோதியா யிருப்பானிப்பான்‌
மனுமைந் தன்றானு மாங்கு வாழ்ந்தனன்‌ நெடுநாள்மன்னோ!
[75. கனிகின்ற அன்பு - ஆருயிர்‌ கட்கு இரங்கும்‌ பேரன்பு, தனி நின்று –
ஒரே சிந்தனையுடன்‌ இருந்து, நன்று - கேட்ட நல்லவரங்கள்‌.] 75.

மன்ன னன்புடன்‌ வரவர வறமென்மேல்‌ நன்மை
பன்னருஞ்‌ சிறப்பிற்‌ பெற்றுப்‌ பஞ்ச நதேச வாசந்‌
துன்னலா லழிவிலாத துறக்கமுங்‌ கடந்த தொல்சீர்‌
முன்னவ நிறையோ டொன்றாம்‌ முத்தியின்‌ பத்துப்புக்கான்‌.
[76. வாசம்‌ துன்னலார்‌ - வாச நீராடி வாசமலர்‌ சூடி மகிழ்பவர்‌,
துறக்கம்‌ - வீடுபேறு, முத்தி - பிறவாப்‌ பெறும்‌ பேறு] 76.

என்றுமா முனிவன்கூற ஏந்திழை யிலிங்க மேன்மை
நன்றென மகிழ்ச்சி பொங்க நவின்ற மூன்றிரேகை யாங்கே
தொன்றுபன்‌ றுளைகள்‌ யாதுள்‌ ளூறிய வமுத மேது
நின்றவர்‌ விடாம லாங்கு நிகழ்வதென்‌ கூறுகென்றான்‌.
[77. பன்துளை - பலதுளைகள்‌, ஆங்கு - அத்துளையின்‌ உள்ளே.] 77.

அதிசயத்‌ திறைவன்‌ பஞ்சநதியி லிங்கத்தை யன்பாற்‌
குதிகொளா னந்தவெள்ளக்‌ குமிழிபோற்‌ புளகங்கொள்ள
மதிநுதற்‌ குமுதச்செவ்வாய்‌ வாணுதல்‌ வல்லிநின்போற்‌
புதியது வினவிக்‌ கேட்ப தரிதெனப்‌ புகழ்ந்துசொன்னான்‌.
[78. குதிகொள் - பெருகிச்‌ செழித்த, மதிநூதல்‌ - பிறைமதி போன்ற
நெற்றி, குமுதச்‌ செவ்வாய்‌ - செவ்வல்லி பூவிதழ்‌ போன்ற சிவந்தவாய்‌.] 78.

முக்குணச்‌ செயல்செய்‌ மூன்று தொழிலுடை வடிவ மூன்றுந்‌
தொக்கவவ்‌ விடத்து முன்னாட்‌ டோன்றிய வவற்றி னின்றும்‌
புக்கிடத்‌ தக்க தாதல்‌ போக்கிய யதிரேகை யாகப்‌
பக்கது குறியாற்‌ கண்டாய்‌ பசுந்தமி ழனையச்‌ சொல்லாய்‌.
[79. மூன்று குணம்‌ - மென்மை தன்மை வன்மை, மூன்று தொழில்‌ -
ஆக்கல்‌ காத்தல்‌ அழித்தல்‌, பக்கு - பக்குவமாகப்‌ பகிர்ந்துள்ளது.] 79.

அகிலமும்‌ பிரளயத்தி லமிழ்ந்த நாள்‌ முனிவ ரெல்லாம்‌
மகிதலத்‌ தில்வரப்‌ பஞ்ச நதியி லிங்கத்து வாழ்வர்‌
சகலமு மூழித்‌ தீயிற்‌ றவிக்கு நாளமுத முண்டு
புகலென விருக்குஓ சார்ப்ப புழைகளின்‌ புதுமை கண்டாய்‌.
[80. அகிலம்‌ - உலகம்‌, பிரளயம்‌ - ஊழிக்காலத்து வெள்ளம்‌, சர்ப்பம்‌ -
பாம்பு, புழை - புற்றிலுள்ள துளை.] 80.

அப்புழை யளாயத்‌ தூயதி னாட்டிய வபிடே கத்தின்‌
மெய்ப்புல னருசி லெல்லாப்‌ பிணிகளு நீங்கு மெய்யே
யெப்பெரு சுகமு முண்டாம்‌ யாவர்க்கு மறிவிக்கு மேலைக்‌
கைப்புனல்‌ பருகில்‌ மேலாங்‌ கதிபெற லெளிது வாய்மை.
[81. புழை - துளை, பருகில்‌ - உண்டால்‌, மேலாங்கதி - உயர்ந்த
நல்வாழ்வு.] 81.

வேதக விரதம்‌ போல மலவுடல்‌ விமல மாக்கும்‌
பேதக மிடிகள்‌ போக்கும்‌ பெருகுமா கல்வி வாக்குஞ்‌
சேதக நாக சேடந்‌ தீவினைச்‌ சேடத்‌ துள்ள
சூதக நீக்கு மென்று தொல்கதை யொன்று சொல்வான்‌. 82.

பிரியவிரதன்‌ காதை முற்றும்‌.
-----------------------------------------

6. நால்‌ விலங்கு கதிபெற்ற சருக்கம்‌

ததீசி யத்தியாயம்‌
அருந்ததியைப்‌ புறக்‌ கிறுத்து மணங்குறு கற்புடையாய்‌ கேள்‌
பெருந்ததிப்‌ பெற்றவ னென பெயரோனால்‌ தலத்தில்‌
வருந்திவரு நால்‌ விலங்கும்‌ மஞ்சனத்தாற்‌ பரலோகம்‌
பொருந்தியது நினைத்தாலும்‌ புதுமையே போலுமால்‌
[1. அணங்குறு - தெய்வத்தன்மை பொருந்திய, ததி - அமையம்‌,
மஞ்சனம்‌ - மந்திர நீர்‌.] 1.

ஏறுடை சிவ பெருமா னெய்தவருள்‌ மெய்ஞ்‌ ஞானம்‌
பேருடைய விருப்‌ பல்லாற்‌ பெருஞ்செல்வ மெனவுலகில்‌
வேறுடைய கடவுளர்‌ சீர்‌ வெண்வாத்‌ துடைத்‌ துடையான்‌
நீறுடை கவசத்‌ தானின்‌ நீடு தலங்கள்‌ சேவித்தான்‌.
[2. ஏறுடை - இடப வாகனமுடைய.] 2.

திருவிரா மீச்சரத்துத்‌ தீர்த்தங்கள்‌ மகிழ்ந்‌ தாடி
கருவுறா வகை யருளென்‌ நிறை யடிகள்‌ கண்டகன்று
வருவிரா கத்தவத்தோன்‌ வன்கான வழிவருங்கால்‌
வெருவிரா வொரு நான்கு விலங்‌ கிரங்கி யழுதனவே. 3

பொல்லாத கொடு நாகம்‌ புகுந்த நெடு நாட்பொசித்தே
மெல்லாரு மிகழ்‌ செந்நாயே பன்றிக்கா மானென்‌
றொல்லாத பிறப்புற்றே மொழிந்திட லென்றோ வென்று
சொல்லாநன்‌ மாந்தரெனச்‌ சோர்ந்தழுது சொல்‌ வேளை. 4

இந்நாலு விலங்கிரங்க யாதோவென்‌ றணுகு தலு
முன்னாக வந்திறைஞ்சி முனிவனை வந்தனை செய்ய
வன்னாலு மென்னுற்றீர்‌ குலமென்னோ நீவிர்‌
மன்னானும்‌ பிறப்பரிய வருமாறென சொல்கென்றான். 5

புண்ணிய மாதவ கேட்டி புனித மறையவர்‌ குலத்து
கண்ணிய கவுசிகன்‌ வழியிற்‌ கனல்வேள்வி வேதியன்‌ யான்‌
பண்ணிய பாதக மிகலாற்‌ பதிதார மவர்‌ கையி
லெண்ணிய தானப்‌ பொருள்‌ கொண்‌ டிருணிரையந்‌ தனில்‌ வீழ்ந்தேன்‌.6

வன்னரகந்‌ தொலைந்‌ தேறி மானி லத்திற்‌ பிறப்புற்றே
னின்னிதனா லீதொழிவ தென்றோ வென்றயர்‌ வுற்றேன்‌
முன்னறிய வருமாறு முனிவரொரு பதின்மற்‌ கியான்‌
அன்னமிகு பயனாலென்‌ றறைந்தது வெங்காம மன்றோ! 7

காசிபர்‌ கோத்திரத்‌ துதித்தே நான்மறையுங்‌ கரைகண்டேன்‌
பேசுவரென்‌ பேர்விசுவப்‌ பிரியனெனப்‌ பேதையென்‌
றேசிக நன்மனையா ளைச்‌ சென்று வலுதிற்‌ றழுவி
மாசனையக்‌ கனலெரிவாய்‌ வன்னரகந்‌ தனில்‌ வீழ்ந்தேன்‌. 8

மானிரை நீங்கிய பின்‌ மாலாமிப்‌ பிறப்புற்றே
னீனமிது தணப்பதினி யென்றோ வென்றயர்‌ கின்றேன்‌
மேனியிலுத்‌ தூளன்மா வெண்ணீறு முன்புனைந்தேன்‌
ஞானமுத லறிந்தேனென்‌ றறைந்தது செந்நாய்‌ மாதோ. 9

தக்ககவுண்‌ டிண்யகுலச்‌ சார்பினென்‌ புண்டோனென்‌
றொக்க லுரைத்‌ திடுபெயரே னொருசுருதி மந்திரத்தை
புக்கருக நல்லார்க்குப்‌ போதித்தே னப்பாவந்‌
துக்கமுற விருள்சூழ்‌ நரகத்துத்‌ துஞ்சினேன்‌. 10

நரகணைத்து நீங்கியெழுந்‌ திப்பிறப்பி னண்ணினேன்‌
உரகமென கண்டென்னோ வொழிவதென அயர்கின்றேன்‌
விரகமுற முன்செய்த மெய்ப்புகழா லென்னறிவு
கரகனிய கண்டேனென்‌ றுரைத்த மான்கலை மாதோ! 11

வேத பராகர்‌ குலத்தென்‌ மெய்யொழுக்க நெறிநின்றேன்‌
தாதைதாய்‌ தமையனோடு தாழாது வைதுறுக்கிப்‌
பேதையே னடிதொறுத்த பெரும்பாவங்‌ காலன்விடு
தூதரால்‌ வென்னரகந்‌ துய்த்தனென்‌ பலகாலம்‌. 12

ஆங்குநர கங்களொழித்‌ திப்பிறப்பே னாயினேன்‌
ஈங்குவருவ துயரகல்வ தென்றோ வென்றயர்‌ கின்றேன்‌
பாங்குறுநின்‌ போல்வோர்தம்‌ பதங்பணிந்தேன்‌ கொல்லோமுன்‌
ஓங்குமறி வுணர்ந்தேனென்‌ றதுமுளவு மாமாதோ. 13

தீராத வினையெவையுந்‌ தீர்ப்பர்‌ பெரியோ ரென்றும்‌
வாராத பேரின்பம்‌ வரக்காணின்‌ வருமென்றும்‌
ஆராரு முரைப்பருனை யடைந்தே முக்கவை தீர்த்துச்‌
சீரார்நற்‌ கதியருளத்‌ திருவுளஞ்‌ செய்சென்றனவே. 14

ததீசி யடியினைச்‌ சூழ்ந்து தாழ்குதலுமே யவ்விலங்கு
கதிபெறுமா னொன்றுமயல்‌ காணாது நினைத்‌ தெண்ணிப்‌
பதிகளது திலதமென்னும்‌ பஞ்சநதி யேயலது
விதியலவென்‌ றகந்துணிந்து விலங்குகளுக்‌ கருள்செய்தான்‌. 15

அஞ்சலிர்‌ அஞ்சலிர்‌ நீரென்‌ றபயமளித்‌ தைய்யாறு
தஞ்சமல திலைவருக வென்றழைத்துத்‌ தக்கோனும்‌
விஞ்சைகொல்‌ லென்றதிசயிப்ப விலங்குகள்பின்‌ வரவந்து
பஞ்சநதித்‌ துறைபொன்னி படிந்தனன்‌ மற்றவற்றோடும்‌. 16

முனிமூழ்கி யெழ வெழுந்து முன்போதப்‌ பின்போந்துந்‌
துனிமூழ்கு விலங்குகளுந்‌ தூயோனுங்‌ கோயில்‌ வரப்‌
பனிமூழ்கு முகிலுறங்கும்‌ பைம்பொற்‌ கோபுரவாயிற்‌
தனிமூழ்கு துயரகலும்‌ நிற்கென நின்றேன்‌ சார்ந்தே. 17

முக்காலும்‌ வலம்வந்து பன்னிருகால்‌ முன்பணிந்து
தக்கானுஞ்‌ சன்னிதியிற்‌ றான்றெரியத்‌ தெரிசிப்பான்‌
புக்கான்‌ காலத்துச்‌ சைவமறைப்‌ பூசுரர்கள்‌
தொக்கார்‌ நித்தியபூசை தொடங்கி நடத்தினர்‌ மாதோ. 18

புனிதமுடன்‌ சிவபருதி பூசைகளைச்‌ செய்துட்‌ கோயிற்‌
கினியது வாரம்‌ பேணி யிருந்து விகுதிப்‌ பொருளும்‌
நனிவிகுதிப்‌ பகுதி யொடு நற்பகுதி முதலொடுக்கிக்‌
கனிவுதரு சித்தத்தை சிவமதனிற்‌ கலப்பித்து 19

தத்துவங்க ளொடுங்கியபின்‌ றான்‌ மீதாய்த்தூலத்தைச்‌
சுத்தியுறச்‌ செய்தவழி தோற்று வித்துச்‌ சித்திபெறும்‌
சித்தமுறப்‌ பூசித்துச்‌ சிவசக்தி நிறைவாக்கிப்‌
புத்தியின்மந்‌ திரமடைவே பூதமுறச்‌ செய்தமைத்து 20

சிவஞான விலிங்கத்தைச்‌ சித்தத்தி லருச்சித்துத்‌
தவநாவி மகமோம்பிப்‌ புரம்புவரத்‌ தான்வேண்டி
நவனாதி முதற்புரிந்து நம்பனிரு மாலியத்தைப்‌
பவனாத மெனத்தீண்டிப்‌ பணிமாறி நறும்புனலால்‌, 21

சந்தனாதி நெய்சாற்றி முற்காதி யாற்றணத்து
நந்தையாதி யிற்கவர்ந்திடுங்‌ கவ்விய கயப்பிற்‌
றைந்தகையுந்‌ தனித்தனியா னைம்பல வமுதுஞ்‌
சுந்தரக்‌ கடுகறுகொடு பன்னலர்‌ சூழ்ந்து. 22

அரைத்த சந்தனக்‌ குழம்புட னாயிரத்‌ தாரை
உரைத்த மந்திரஞ்சோதக மாட்டி யோங்கொளியை
விரைத்துகிற்‌ கொடுபுலத்தி யோர்புது மலர்வேய்ந்து
திரைத்த வங்கியின்‌ தீபன நிவேதனஞ்‌ செய்து, 23

சத்தியாதி மேற்சத்தியி னளவு தாமரையாய்‌
வைத்த கன்னிகை யாசனஞ்‌ சிவாதன மருவித்தா
தொத்த முத்தியினியாகு முண்டாதியிற்‌ செறிந்து
சுத்தவித்தை மேனியுஞ்‌ சேர்வித்தெழு சோதியாய்‌, 24

திறையும்‌ பேரொளிப்‌ பிரிவிலோர்‌ மின்னென னின்று
குறைவில்‌ தாணெனவொரு முகக்குறி யெனநான்கா
யறையுமா முகமைந்துடைக்‌ கருமமா மவனைப்‌
பொறையினால்‌ வருவழியினாற்‌ புகுந்திடப்‌ புரிந்து, 25

இருவகை விந்துநாத மிகவகை பீடத்தோகி
பொருசிவ லிங்கமான வுருவரு வுடையான்‌ தன்னை
மருவுதல்‌ முதலோரைந்தின்‌ மலரடி வதனஞ்‌ சென்னி
திருவுரு புன்றெளித்து திருவுளம்‌ மகிழ்ச்சி பேணி. 26

ஆயிரங்‌ கழஞ்சு நாவி கற்பூரம்‌ அணிந்து சந்தம்‌
வேயுறு தோளி பங்கன்‌ மேனியி னிறையச்‌ சாத்தித்‌
தூயநல்‌ லாடை பட்டுத்‌ தோய்‌ துயிலுத்‌ தரீயஞ்‌
சேயமார்‌ பணியு முந்நூல்‌ சேர்த்திமுன்‌ மணிப்பூண்‌ வேய்ந்து 27

பொன்மணி மகுட மாதி புனைந்துசெங்‌ கழுநீர்‌ நெய்தல்‌
பன்மலர்க்‌ கமலம்‌ புன்னை பாடல மலரி மாறு
நன்மதுப்‌ பிலிற்றுங்‌ கண்ணி படலிகை நானற்‌ றாரம்‌
மன்மகிழ்‌ விதத்தி லேற்றி யிலையமும்‌ வணங்கினாரே. 28

போகமும்‌ பூசை செய்து நறும்புகை புனைந்து தீப
மாகம விதியி னாக்கி யமுதமாம்‌ புனித வண்ணம்‌
பாகமா முழுது முற்கம்‌ பாளிதங்‌ கன்னல்‌ பொங்கல்‌
வாகுறு கருணை மற்றும்‌ வர்க்கமு மேற்றி னாரே. 29

பல்வித வபூர்வ மொவ்வொன்‌ றாயிரப்‌ பத்த தாக
நல்விதக்‌ கனியு மவ்வா றாகவே விளநீர்க்‌ கன்னல்‌
மெல்லிலை பழுக்காய்‌ கற்பூ ரத்தொடு விரும்ப வேற்றிச்‌
சொல்விரி தீபம்‌ தட்டம்‌ பற்பல சுற்றினாரே. 30

அருகொடு வேம்பு, சுற்றி காய்ப்புநீ றணிந்து பத்தோ
டறுவகை யுபகரித்து நிருத்த கீதாதி யோங்க
மறைபல துதிக்கு மட்டும்‌ வந்த மாதவனு நின்று
குறையிலா வுருத்தி ரச்சீர்‌ மந்திரம்‌ வழங்கினானே. 31

அடியவர்‌ விரும்பிற்‌ றெவ்வா றரியது மெளிய தாக்கி
மடிவுறத்‌ திருவுள்‌ ளத்தின்‌ முகிழ்த்திடுங்‌ கருணை நோக்கி
படிவுறப்‌ பலகால்‌ வீழ்ந்து பரமனே போற்றி போற்றி
துடியமர்‌ கரத்தாய்‌ போற்றி யென்றிது துதிக்க லுற்றான். 32

வணங்கிலேன்‌ வணங்கு வோர்தம்‌ வயப்படேன்‌ உய்யப்‌ பெற்றார்
இணங்கிலேன்‌ இணங்கி நீயே யானென வெண்ணு கில்லேன்‌
கணங்கிலேன்‌ சத்தம்‌ நீங்கேன்‌ கறங்கியப்‌ பிறவி னோக்கி
அணங்கிலேன்‌ புறத்தி கண்டா யணியையா றுடைய கோவே. 33

ஓதிலேன்‌ ஓதலில்லேன்‌ உணர்கிலே னுணர்வொ ுங்கிற்‌
போதிலேன்‌ போது தூவிப்‌ போற்றிலேன்‌ போற்றுகில்லே
னீதிலே னெனக்கு நீயே யானென என்னச்‌ செய்யும்‌
தீதிலே னல்லே னாளாய்‌ திருவையா றுடைய கோவே. 34

கொடுத்திலேன்‌ கொள்ளு கில்லேன்‌ கொடைப்பொரு
ளல்லெனக்‌ கொள்கென்‌
நடுக்கிலே னீயே யானென்‌ றகிலமும்‌ சத்திற்‌ காணேன்‌
விடுத்திலே னனைத்து நீங்கா மெய்யுணர்‌ வருளி வீழா
தெடுத்திநீ புரத்தி கண்டா யெழிலையா றுடைய கோவே. 35

ததீசிமா முனிவ னன்பிற்‌ றழல்மெழு காகி நம்பன்‌
துதியினால்‌ மகிழ்ந்தேம்‌ யாது வேண்டினை சொல்லு கென்னக்‌
கதியினால்‌ விலங்கின்‌ வந்த காமுத நான்கிற்‌ கிந்த
பதியினாற்‌ றருதும்‌ முத்தி யென்னவே பணிந்தே னப்பால்‌. 36

வனத்துள்‌ நான்கு மென்பின்‌ வந்தன புறத்து நின்ற
வினத்துள தொண்டற்‌ குற்ற புகழ்பழி யாவும்‌ நின்பாற்‌
கனத்துள வாகி நிற்றல்‌ காசினி யறிந்த திந்த
தினத்து எவ்வுயிர்க்கு நல்லத்‌ திருவுளஞ்‌ செய்கென்‌ றானே. 37

கேட்டிசின்‌ மறையோய்‌ நம்மைக்‌ கேழ்கிளர்க்‌ கந்த நீரால்‌
ஆட்டிய புனற்றெளித்‌ தாங்கு அளித்தலு மடையு மென்று
காட்டிய முதல்வன்‌ கூற நற்றவன்‌ கையிற்‌ கொண்ட
மீட்டியல்‌ கமண்ட லிப்பாற்‌ பெய்தனன்‌ புனித னன்னீர்‌. 38

வாயிலி னின்ற னான்கு மாக்கள்மே லிரைத்த லோடும்‌
போயின பாப ரூபம்‌ புனிதரா யொரோ வொருத்தர்க்‌
காயிர ரம்பை மாத ரணிமணி விமான மேற்குங்‌
காய்கதிர்‌ நான்கு நின்றார்‌ காயமே காயம்‌ பெற்றார்‌. 39

தந்திர விஞ்ஞைக்‌ கூத்தி னியல்பெனத்‌ தாமே னின்றும்‌
வெந்திறல்‌ முனியைப்‌ போற்றி விளங்கொளி யுருவி னோரா
யிந்திர னுலகம்‌ புக்கா ரிருந்தனர்‌ கற்ப மாண்டும்‌
மந்திர முனிவர்‌ போற்ற மாயவ னுலகம்‌ பெற்றார்‌. 40

ஆண்டொரு கற்பம்‌ செல்ல வரிதிரு வைகுந்‌ தத்துக்‌
காண்டகுஞ்‌ செல்வத்‌ தோடு முறைந்தனர்‌ கற்பம்‌ பின்னர்‌
தீண்டருஞ்‌ செய்ய மேனி சிவனுறை யுலகம்‌ புக்கார்‌
ஆண்டனர்‌ கற்ப காலம்‌ வானவர்‌ பெற்ற மாதோ! 41
[41. கற்பம்‌ - 482 கோடி ஆண்டு பிரமன்‌ ஆயுட்காலம்‌. வைகுந்தம்‌ -
திருமால்‌ உறையும்‌ உலகம்‌. சிவனுறைவுலகம்‌ - கைலாயம்‌.]

சிவனருள்‌ குருவுந்‌ தானுஞ்‌ சித்திக ளொவ்வார்‌ கற்ப
மவனுறு மடைவின்‌ வைகி யாதியாம். பரமன்‌ றானே
புவனமில்‌ ஞாலம்‌ நல்க ஒன்றுபட்‌ டெங்கு மாகிக்‌
கவனமும்‌ வரவு மில்லாக்‌ காட்சியின்‌ பேறு பெற்றார்‌. 42
[42. புவனம்‌ - மண்ணுலகம்‌. ஞாலம்‌ - உலகம்‌. கவனம்‌ - கலக்கம்‌.
வரவு - தீமைகள்‌ வருதல்‌. பேறு - நல்வாழ்வு.]

ததீசியு மத்தலத்‌ திற்‌ றங்கினா னெடுநா ளன்றி
விதிதரு வசிட்ட னாதி மெய்த்தவ ரென்று நீங்கார்‌
பதியதன்‌ வரத்தி னாலே பாரிடைப்‌ பூசு ராதி
யதிகய நீச ரீறா யடைந்தனர்‌ பல்லோ ரென்றான்‌. 43.
[43. விதிதரு - முக்கால நிகழ்ச்சிகளையும்‌ சொல்லுகின்ற, பார்‌ -
பூமி. பூசுரர்‌ - வேதபிராமணர்‌.]

பன்றி நாய்‌ கரபங்க ளாதி பாரிடைப்‌ பிறந்து மாயு
நன்றிலா வுயிர்கட்‌ கெல்லாம்‌ நானழு திரங்கு கில்லேன்‌
சென்றுநா டறியச்‌ செம்பொற்‌ சோதிவாழ்‌ திருவை யாற்றி
லொன்‌ றிடா மாக்கட்‌ கென்றே உயிர்த்து நானிரங்கு மாறே. 44
[44. கரபம்‌- யானை, செம்பொற்சோதி - ஐயாறுடைய ஈசன்‌,
ஒன்றிடா - சென்று சேராத, மாக்கள்‌ - மக்கள்‌, விலங்கினங்கள்‌]

பஞ்சந தேசஞ்‌ சென்று பணிகிலா மாக்கட்‌ டாமே
துஞ்சிய பிணமும்‌ பேயுஞ்‌ சூகர மாடு மற்றுந்‌
தஞ்சமென்‌ றடைந்தோ ரெந்த சாதியோ ரேனுந்‌ தேவர்‌
கஞ்சன்‌ மாலயனாற்‌ போற்றுங்‌ கடவுளர்‌ முதலோ ரென்றான். 45
[45. சூகரம்‌ - பன்றி, கஞ்சன்‌ - பிரமன்‌, மால்‌ - திருமால்‌.]

இந்திரன்‌ செல்வ மெண்ணே னயனுல கிச்சை யில்லேன்‌
செந்திருக்‌ கிழவன்‌ வீடுஞ்‌ சிந்தியேன்‌ சிவனு லோக
முந்துற நினைக்க வேண்டில்‌ முதல்வன்‌ வாழ்‌ திருவையாற்றி
னிந்தனைக்‌ காவா யேனும்‌ பிறக்கவே நினைக்கின்‌ றேனே. 46
[46. அயன்‌ - பிரமன்‌, இச்சை - ஆசை, செந்திருக்கிழவன்‌ - குபேரன்‌.]

தாரகைப்‌ பிரமங்‌ கங்கைத்‌ தடங்கரைக்‌ காசி யென்னு
மூரகத்‌ துபதே சிக்கு மொருவனே யஞ்செ முத்துஞ்‌
சேரவத்‌ துறைநீர்‌ பொன்னித்‌ திருவையாற்றி லிறந்தோர்க்‌ கெல்லாம்‌
பாரகத்‌ துபதேசிப்பன்‌ பவப்பிணி தீரு மாறே. 47
[47. தாரகை - விண்மீன்‌, பிரமம்‌ - முதன்மை. பாரகத்து - உலகத்தில்‌.]

அத்தலத்‌ தரசனுக்கு ஆலயத்‌ திரண்டு பாலு
முத்தமக்‌ கயிலா யங்க ளுலகெலாம்‌ கண்டு போற்ற
வைத்தன னிறைவன்‌ மற்றோர்‌ மன்னனுக்‌ காக வென்று
சத்தியக்‌ காதை மீது சாற்றுவான்‌ தவத்தின்‌ மேலோன்‌. 48
[48. அரசன்‌ - இராசராசன்‌, கயிலாயம்‌ - தென்‌ வட கயிலாயங்களாக
விளங்கும்‌ ஆலயங்கள்‌. சத்தியக்‌ காதை - உண்மை தெறிகளார்ந்த
சரித்திரம்‌]

நால்‌ விலங்கு கதிபெற்ற காதை முற்றும்‌.
--------------------------------------

7. சுரதன் அத்தியாயம்‌

சுரும்பி யீர்ந்தலர்ந்த மாலை துளிக்கின்ற பசுந்தேன்‌ மாரி
பெரும்பெயல்‌ போலுங்‌ கூந்தற்‌ பெய்வளைத்‌ தோழி கேளாய்‌!
அரும்பெறல்‌ அவனி காக்கும்‌ அடையலாஞ்‌ சிங்க வேற்றை
விரும்பினற்‌ கமுத மன்னான்‌ வெண்மதி வழியின்‌ தோன்றல்‌. 1
[1. சுரும்பி - கருவண்டு, மாரி - மழை, பெயல்‌ - பெய்கின்ற கருமேகம்‌.
அரும்‌ பெறல்‌ - பெறுதற்கரிய. வெண்மதி வழியின்‌ தோன்றல்‌.
சந்திர குலத்தில்‌ தோன்றியவன்‌.]

தலைப்படு மமைதி ஞான்று தளர்விலா வாய்மை வல்லான்‌
கலைப்பொருள்‌ நுழைந்து முழங்குங்‌ கதம்புல னுடைமை தக்கான்‌
சிலைப்பெயர்‌ பகழி மாரி செங்களங்‌ கடந்த வோரி
மலைப்பட வேலிற்‌ றீட்டித்‌ தன்பெயர்‌ வைக்கும்‌ நீரான்‌. 2.
[2. தலைப்படும்‌ - தொடக்கமுறும்‌, கதம்‌ - வலிமை.]

நற்குணக்‌ கடலி னெல்லை நானெறிப்‌ பயிர்க்கு மேகம்‌
பொற்குவை வீசும்‌ வண்கைப்‌ பொதுவறு தருமச்‌ சிந்தை
கற்புடை வேள்வி முற்றும்‌ கண்டவன்‌ காமக்‌ காட்சி
சொற்புனை முரச மொப்பான்‌ சுரதனென்‌ றொருவ னுண்டால். 3
[9. நானெறி - கல்வி கேள்வி ஆண்மை ஒழுக்கம்‌, பொற்குவை –
பொற்குவியல்; வேள்வி - யாகம்‌]

உலகெலாம்‌ கழனி வாழும்‌ உயிரெல்லாம்‌ பைங்கூழ்‌ தீங்கில்‌
நிலமெலாம்‌ களையின்‌ குப்பை யரணையே யென்றூ ழாகப்‌
புலமெலாம்‌ வளர்த்த தேக்கம்‌ புரிந்தனன்‌ கருணை தானே
நலமுளத்‌ தெண்ணீ ரென்ன நரந்தக வுழவன்‌ காக்கும்‌. 4
[4. பைங்‌ - நெற்பயிர்‌, புலம்‌ - வயல்‌, தேக்கம்‌ - பயிர்ச்‌ செறிவு]

எத்திறத்‌ திருவும்‌ பெற்றான்‌ இனிப்பெறத்‌ தகுவ தொன்றே
புத்திரச்‌ செல்வ மென்று புரிந்தனன்‌ தருமந்‌ தானும்‌
அத்தகப்‌ பேறுறாமை அருந்துயர்க்‌ கடலி னாழ்ந்து
முத்திறப்‌ பொழுதுங்‌ கண்ட முனிவரை தேடிச்‌ சென்றான்‌. 5
[5. திரு - செல்வம்‌, புத்திரச்‌ செல்வம்‌ - மகப்பேறாம்‌ செல்வம்‌,
முத்திறப்‌பொழுது - முக்காலத்தமைந்த பொழுது.]

கங்கையின்‌ கரையை நீங்கா கடுஞ்சினம்‌ கடிந்த காட்சி
புங்கவர்‌ நார தாதிப்‌ புனிதரை யாங்குக்‌ கண்டான்‌
பங்கய மலர்த்‌ தவத்த பருதியின்‌ முனிவர்‌ தாளின்‌
கொங்கலர்‌ மகுடம்‌ தீண்டக்‌ குழைந்தனன்‌ தொழுது சொல்வான்‌. 6
[6. சினம்‌ - கோபம்‌, புங்கவர்‌ - பிராமணோத்தமர்‌, தேவர்‌,
குழைந்தனன் - பணிந்தனன்‌.]

ஊழ்வினை ஞானக்‌ கண்ணின்‌ உணர்வுடை பெரியோர்க்‌ கேண்மின்‌!
வாழ்வினைப்‌ பெற்ற மக்கள்‌ மக்களைப்‌ பெற்றார்க ளாயின்‌
தாழ்வினை வைக்கும்‌ வைய்யந்‌ தாழ்வில வாழ்வில ரேனும்‌
வீழ்வினை மக்கட்‌ பேற்றின்‌ மேம்படல்‌ கூறும்‌ போலும்‌! 7
[7. ஊழ்வினை - முற்பிறப்பான்‌ தொடரும்‌ வினை, வீழ்வினை –
தாழ்மையான செயல்‌.]

ஆதலின்‌ மதலை காணும்‌ ஆசைமாக்‌ கடலின்‌ வீழ்ந்தேன்‌
பூதலத்து அசுவ மேதம்‌ புத்திரர்க்‌ காமி யங்கள்‌
காதலிற்‌ செய்தேன்‌ வந்து கைதரும்‌ புனை மாறாகச்‌
சாதலி னமிழ்ந்து கின்றேன்‌ தடங்கரை யின்னுங்‌ காணேன். 8
[8. மதலை - பிள்ளை, மாக்கடல்‌ - மிகப்‌ பெரிய கடல்‌, அசுவமேதம்‌ -
அசுவமேத யாகம்‌, காமியங்கள்‌ - கிரியாதிதான தருமங்கள்‌, புனை
மாறு - ஈடான மாற்றமாக.]

யாது காரணமோ தெய்வத்‌ தியற்கையோ தேறேன்‌ பாவம்‌
ஈது காரண மீதிப்பாற்‌ செய்யுஞ்‌ செயலீது பாராய்‌!
ஓது காதலனுக்‌ கென்றிங்‌ குரைத்துய்யக்‌ கேண்மி னென்ற
மாதுலந்‌ தோளி னார்க்கும்‌ மாதவ ருணர்ந்து கண்டார்‌. 9
[9. தேறேன்‌ - தெளிவு பெறேன்‌, மாதவன்‌ - தவமுனிவன்‌.]

சழக்கன்று மனத்திற்‌ கோடி தரணிபா லரனந்த கோடி
தொழக்கன்றும்‌ கழற்கால்‌ வேந்தே! தொல்லையோர்‌ பிறப்பு நீயே
குழக்கன்று பலவும்‌ மாளக்‌ கோக்களிற்‌ பிரித்த பாவம்‌
பழக்கன்று பிரிந்த தொன்றால்‌ பாலனின்‌ றின்மை யென்றார்‌. 10
[10. சழக்கன்று - வழக்கன்று, தரணிபாலர்‌ - அரசர்‌, குழக்கன்று –
இளமையான பசுக்கன்று. கோக்களில் - பசுக்களினின்றும்‌, பழக்கன்று –
துன்பமடைந்த கன்றுக்குட்டி.]

காமரு மகப்‌ பெறாத காரணந்‌ தெரிந்தீ ரைய்ய
கோமுதப்‌ புரிந்து பாவக்‌ கொடுமை தீர்ந்‌ துய்யுமாறு
மாமக்‌ கடன்கன்‌ செய்ய வருவது முணர்த்தீ ரென்றே
தாமரைக்‌ கடவு ளன்னீர்‌ சாற்றுதி ரென்று தாழ்ந்தான்‌. 11.
[11. காமரு - விருப்பம்‌ பொருந்திய, மாமகம்‌ - சிறந்தயாகங்கள்‌,
தாமரைக்‌ கடவுள்‌ - பிரமன்‌.]

பிள்ளைமால்‌ வெள்ள வாரிப்‌ பெருக்கிடை சுழியிற்‌ பட்ட
புள்ளிமான்‌ கன்றை யொத்தாய்‌ புனிற்றிளங்‌ கன்றின்‌ தீங்கால்‌
தள்ளுமா றொன்று கூறிர்ச்‌ சங்கரன்‌ கயிலை யாகும்‌
வெள்ளிமா மலையைக்‌ காண்ட லன்றிவே நின்று கண்டாய். 12.
[12. மால்‌ - மயக்கம்‌, வாரி - நீர்‌ பெருக்கு, புனிற்றிளங்கன்று –
அப்பொழுது பிறந்த இளங்கன்று.]

கயிலையின்‌ சிகர மொன்று காண்டலுங்‌ கடவாப்‌ பாவம்‌
வெயிலைமுற்‌ கண்ட கங்குல்‌ விடிந்தென விடியு மன்னா!
பயிரவம்‌ பின்னை செய்யும்‌ பான்மையை யல்லைக்‌ கண்ட
சயிலமே புதல்வர்‌ பேறுந்‌ தருமென வருளி னாரே. 13.
[13. சிகரம்‌ - மலையுச்சிமுடி, கடவா - நீங்காத, கங்குல்‌ - இரவுப்‌
பொழுது, பயிரவம்‌ - இத்தகைய தீங்கு, சயிலம்‌ - மலை.]

தீதறு தத்துவ ஞானந்‌ தெளிந்தவர்‌ பாபம்‌ நீக்கக்‌
கூறு மற்றிவைக்‌ கொண்டு டுடன்பட்‌ டெழா....... .
மாறின்‌ மந்திரி காக்கென மண்ணெலாம்‌ அளித்‌ தாணையிட்டு
மாற்றமில்‌ மனத்தின்‌ நோக்கொடு மற்றவர்க்‌ கொன்று
விளம்புவான்‌. 14

கயிலைக்‌ கண்டுமைக்‌ காண்பளவுந்‌ தனிப்பெரும்‌ தகவினானே
பியலின்‌ வைத்த பெரும்‌ பொறை முற்று மோர்‌
செயலினுங்‌ களிற்றின்‌ பிடர்‌ சேர்தரு காவல்‌ தன்னை
மயலறு ஆணையானே வழங்குதி ராட்சி யென்றான்‌. 15
[15. பியல்‌ - யானையின்‌ பிடர்‌, பொறை - அரச பாரம்‌,
மயல்‌ - மயக்கம்]

வேறு
சரதம்‌ பூண்டவர்‌ தம்மொழி தெப்பமாகப்‌
பரதம்‌ பூண்டமா மலைக்கரை யேறுவான்‌
விரதம்‌ பூண்டிட மென்கைத்‌ தலத்தினால்‌
சுரத நீதவம்‌ தொடங்கென்‌ றேகினான்‌. 16
[16. சரதம்‌ - சாதனை, யோக சாதனை, மாமலை –
பெரியமலையாகிய கரை.]

கொடிய சல்லியம்‌ கோட்சுறவம்‌ பனமா
விடமெனத்‌ திகழ்‌ வெண்கவரிக்‌ குழா
முடன்‌ பசுத்தன வொண்டழைக்‌ கானகம்‌
கடலின்‌ நீந்தினன்‌ காவல னென்பவே. 17.

முழைக்‌ கொடு வரிக்குல முழைக்கழு வுகைத்திட
முழக்குவ புழைக்கை மதமா மழைப்பிளி றுடைத்திட
மடக்குழை முடக்குள மலிகழை வெடித்தழல்‌ விதிர்ப்பன
கணக்கவரி துடித்திட கடுவரிக்கண்‌ முயிர்க்கு நெறியே. 18
[18. முழை - மலைக்குகை, அரிக்குலம்‌ - சிங்கக்‌ கூட்டம்‌,
மதமா - யானை, கடுவரி - புலி,]

எண்ணவும்‌ நடுக்கமுள விப்படி யிவற்றிலென்ன
நண்ணவு நடுங்கு மிரவி வடவைக்‌ கடவுளு
முண்ணவு நடுங்கிடு முருத்திரன்‌ நடுங்கிடும்‌
வெண்ணையி னடுக்கி லொக்கும்‌ பனியடுக்கம்‌ விரிப்ப
தென்னோ! 19
[19. அடுக்கில்‌ - ஒன்றன்‌ மேலொன்றாக உயர்ந்து
வளர்ந்த மலை.]

இப்படிப்‌ பனிப்படலை பொழவரும்போ தவனிறுத்திய கருத்தறிவான்‌
மெய்ப்படி யளிக்குமோ ரமைச்சனொடு பற்பலர்‌ வியந்துற விரைந்து
வரலு மெய்ப்பொரு ணிணைந்ததனிற்‌ வருமெது வடுவின வைகள்‌
வரத்தினி யுரைத்தியென வச்சமோ டமைச்சன்‌ மொழிவான்‌. 20
[20. படலை - படலம்‌, தொகுதி, மெய்ப்பொருள்‌ - இறைவன்‌.]

கரகப்‌படலம்‌ படர்‌ வாளுறை கழித்தவா கண்டகலியினா
லரகநின்றன்‌ புவியை யாணையினளித் தனமதற்‌ கொரு
பகைபுதுமை கேள்நீ கன்னந்தலை செயித்த பொழுதுந்‌
தகைநெடுங்கிரி யொடுங்கிட மறுப்படு குறுப்பர்‌ செயலாம்‌. 21

மன்னனிலை யின்னகரி மந்திரியா தந்திரமதித்திடு நிதிக்குவை யெல்லாம்‌
பொன்னியல்‌ மதிற்குள்‌ ளதெனக்கிவன்‌ முதற்பகை போர்த்தகு
      தூதொத்தனவோ
முன்ன முலகெங்கனு முழுப்படை பரப்பியபின்‌ மூண்டபடை போது நினைவா
னுன்ன நினைவொன்றுரையு மொன்றென விணங்குமுற வோதவொரு
      தூதுவிடவே. 22

யாமலது மெய்த்துணை யிறைக்கொருவ ரெத்துணையு மில்லையது
      சொல்லிலெமையே
கோமகன்‌ மிக்கக்கறு வுமென்பது கோடென்றளவு கூசியதுபேச நினையேந்‌
தாமறிவா நிற்கவிது காவலன்‌ மகப்பெறு தவங்கருதியங்‌ கயிலை
போமாமவன்‌ காசியுமோ ராளிலறிவித்தி லிரதற்குரிமை சற்று நினையீர்‌! 23
[23. கோமகன்‌ - அரச குமாரன்‌, கறுவுதல்‌ - பொறாமைபடல்‌.]

போனது கிடைக்க வினியாமொருமை பற்றியிறைபோய்‌ வருக மற்றவருஞ்‌
சேனையொடு கைப்பொருளினாலே களித்தரசு செல்லுமள வெல்லையகல்‌
     வோமெனத்‌
தேனில்‌ மற்றீதொரு குற்றமெனவுங்‌ கடியுமொன் றுசிலர்‌ ன்றுபுகல்வா
ரூனமுறும்‌ பொழுதிடற் பழியகற்‌ றரிதுபாயமிலிது பாயமிதுவே. 24

நால்வகை திரட்படை பெரும்பொரு ளிருக்கும்‌ மதிநன்‌குடைய மந்திரியரென
மேலுணர்வதிப்‌ படையுடைத் திடுவர்‌ போதியென்‌ வேலை யுடையாய்‌
சாலவுமற்‌ சிறியரே னுமவர்‌ பற்பல தாங்கநிறையங்க மணையார்‌
பீலிசீரிதப்‌ பொருளடுக்கினு மொடிக்குமது பெய்யுமொரு வைய்யமலவோ? 25
[25. நால்வகை - நான்கு வகைப்படை.]

அங்கு சிறிதென்று விடி லெங்கும்‌ அழல்கொண்டு சுடுமப்பொழுத விக்கவகசமோ
திங்கள்‌ மறுவன்று வாவின்‌ றளவு நின்றதுசிறைப்பட மறைப்பரெவரோ?
மங்கையரு மம்புவியு மன்றியுலகம்‌ புகழுமைந்தர்‌ தவமுந்து தவமோ?
வெங்களையு நின்ற கருமங்களை யன்றியிறையின்ப முறுமைந்தர்‌ பிறரோ! 26

என்று பலவேதுவின்‌ மறுத்தவ னிறுத்தலு மிசைந்தவனி சைந்துக்கவையா
நன்றென மனத்தோடவரேகு பரியூடுவரு நற்பரிசிறக்க வனமேற்‌
சென்றனன்‌ விரைந்து நகரொன்ற வவரொற்றர்‌ பலர்‌ செப்பலு மாப்பகை சேயா
மின்றியிகல்‌ கோரமெனும்‌ வெம்படை விடுத்தவரை வென்றன னோரைந்து
     பகலின்‌. 27
[27. ஏது - காரணம்‌, பரி - குதிரை, இகல்‌ - பகைத்தல்‌, ஐந்து பகல் - ஐந்து நாளின்‌ பகற்காலத்தில்‌.]

அன்னர்‌ பகை மன்னர்‌ செல்வ ரணைகுடை சேனைகள னைத்து முறவாரி
யுன்னுமவ ராசைக்களவாக புக்குழியுடனறு பைவென்றுல கெலா
மன்னு முயிர்க்‌ களித்திட வளித்தும்‌ தலைக்குளம்‌ வருந்துதல்‌ பொருந்தி
     யெழலு
முன்னுதிசை யெட்டின்விசையப்‌ பெயரை யிட்டுலகிலுத்தம
தல்த்திருத்தினான்‌. 28
[28. அன்னர்‌ - அவ்வாறமைந்தவர்‌, அணை - சேர்த்துள்ள.]

துங்கனதி சிந்துவர கண்டதின்‌ குடக்குள்‌ தொலைக்கடன்‌ தப்புனவல்லாற்‌
கங்கையொடு கவுதமி கருங்குழலி செஞ்சரசு கம்பையொடு கம்பை படியா
வெங்குமகிழ்‌ காவிரி நதிக்கிரு கரைக்கு ளிருந்துறையனேக முழுகா
பங்கயவயற்‌ பனிலம்‌ மங்கலமுலக்கமிடு பஞ்சநதிப்‌ புக்கனனரோ. 29.
[29. துங்கம்‌ - தூய்மை, சிந்து - சிந்து ரதி, தொலைக்கடன் - பாபம்‌ நீக்கும்‌.
செயல்‌, சரசு - சரசுவதி நதி, பனிலம்‌ - வெண்சங்கு.]

அங்கத்தின்‌ படையொடு பொன்னித்‌ துறையங்‌ கெய்தி
சங்கற்பஞ்‌ செய்து மூழ்கி யெழுந்து தருந்‌ தானம்‌
துங்கத்தந்தணருக்‌ கருளித்‌ தொல்குலமா மூன்றும்‌
பொங்கச்‌ செய்த தக்கடன்கள்‌ புரிந்தா னால்‌ குலத்தவர்க்கும்‌. 30
[30. அங்கம்‌ - அரச அங்கம்‌, சங்கற்பம்‌ - மனவுறுதி, உறுதிப்பாடு,
துங்கம் - தூய்மை.]

செம்பொற்‌ சோதியை முன்பு வணங்கித்‌ தெரிசித்து
பைம்‌ பொற்கோயில்‌ வலம்பெற வுளப்படா வேளைத்‌
தும்பிக்குந்‌ தருவானிலை போனிலை தருவானை
நம்பிக்‌ கண்டு எழுந்தவர்‌ சூழலை நன்னுங்கால்‌. 31
[31. செம்பொற்‌ சோதி - ஐயாறுடையப்பன்‌, ஈசன்‌. நன்னுதல்‌ -
நெருங்கியடைதல்.]

தொண்டு தரும்‌ புண்டரீக நீறுங்‌ கற்றோ தாசுங்‌
குண்டிகையுங்‌ கண்டிகையுந்‌ தண்டுங்‌ கொண்டீர
மண்டிதமுங்‌ கண்டும்பர்‌ தொழுந்துரு வரசன்றாள்‌
புண்டரிகந்‌ தெண்டன்புரி தொண்டின்‌ புறமாக, 32
[32. புண்டரீகம்- புலித்தோல்; நீறு - திருநீறு, குண்டிகை - கரகம்‌,
கண்டிகை - உருத்திராக்கமாலை, தண்டு - யோக தண்டம்‌.]

நின்‌ பதியும்‌ பண்டாரமும்‌ நீயு நீர்நாடு மன்பதையும்‌
குன்றா நன்றாகி வாழ்வோ வென்றின்பு தருஞ்சொற்கூறி
இறையோ னிறையோனினன்பு தயங்கற்‌ பாலர்க்கு
நிறைவன்றி யோர்குறையுண்டோ வலை வென்‌றான்‌. 33
[33. பண்டாரம்‌ - பொருள்‌ சேமிப்பறை, நீர்நாடு – சோழநாடு]

அத்திரி பாலகரைத்‌ திரிசூல னருட்‌ கோலத்‌
தத்துவ ரூப வுருத்திரசாபத்‌ தவத்தோய்கேள்‌ கத்திரியாதிப
ரெத்திரு வோரிலர்க்‌ கடனேந்து மெய்த்திருவா மொரு
புத்திரனாலுள மிடியானேன்‌ போனதொரு கருமம்தீர, 34
[34. அந்திரி - அத்திரி முனிவர்‌, மிடி - மனத்துன்பம்‌.]

தருமந்‌ தானம்‌ மகங்கள்‌ புரிந்தெனத்‌ தக்கோரும்‌
கருமங்கோவின்‌ கன்றுக்குத்‌ தீமைபுரிந்தாய்‌ கயிலாய
மருமருந்தா கண்டாலுள தென்றா ரடியேனூழ்‌
வருமம்‌ போலு மதற்கிடையீடும்‌ வந்ததன்‌றால்‌, 35
[35. மகம்‌ - யாகம்‌, தக்கோர்‌ - முனிவர்‌, அருமருந்து –
குறை நீர்க்கும்‌ சிறந்த மருந்து.]

மரகத்தாவே யுன்முன்‌ விண்டேன்‌ மகவாசைத்‌
தரகத்தாலே வேட்கை மிகுத்தேன்‌ சந்தாபச்‌
சோகத்தாலே வந்தோருக்‌ கருளித்‌ துயர்தீர்க்கும்‌
யோகத்தாயுன்‌ கருணைத்‌ தெண்ணீ ரூடுற்றேன்‌. 36
[36. மரகத்தாவே - சோலைக்கதிபதியே, விண்டேன்‌ -
மனத்திலுள்ளதைச்‌ சொன்னேன்‌. தரகம்‌ - தளர்ச்சி.]

நீயே யல்லாற்‌ கற்பங்கோடி நெடுங்கால
நாயேனுள்ளஞ்‌ சிந்தித்‌ தென்னா நவையில்லா
சேயுஞ்‌ சீரெந்தவு பாயஞ்‌ சிந்தித்துந்‌
தாயே தந்தா ளுன்னிரு சரணன்றான்‌. 37
[37. கற்பங்கோடி - அளவிட முடியாத காலம்‌, நவை - குற்றம்‌,
தாயே - தாய்போன்ற பெரியீர்‌.]

சுரதன்‌ கேண்மோ வென்றரனுருவத்‌ துருவாசன்‌
விரதந்தூயோய்‌ விதிப்பு நம்‌ வீடாக
வரதங்‌ கூறும்‌ பெரும்‌ பெருநூல்‌ மரபுண்டு
சரதஞ்‌ செப்பேச்சுரன்‌ அருளுண்டு தயங்காதே. 38
[38. சுரதன்‌ - சுரத மன்னன்‌, வரதம்‌ - காத்தருளல்‌,
சரதம்‌ - மெய்ப்‌ பொருள்‌.]

அஞ்சேலித்‌ தலமேல்‌ கயிலை யழைப்‌ பிப்போம்‌
நஞ்சேர்‌ கண்டனருட்‌ கொண்டே யென நாடோறுந்
தஞ்சலெஞ்‌ சக்கர மூவையுந்‌ தப்பாமற்‌
செஞ்சலின்‌ கண்‌ சூடியை யுள்ளஞ்‌ சிந்தித்தேன்‌. 39
[39. அஞ்சேல்‌ - கூஞ்சேல்‌, செஞ்சல்‌ - நெற்றி.]

இப்படி நாற்பது நாட்செப்பேச ரிருப்பாக
மெய்ப்படி பஞ்சநதே சனையுள்ளம்‌ விழைந்தெண்ணிப்‌
பொய்ப்படி இப்படி யென்றறி ஞானப்புனிதன்றான்‌
தெய்ப்படி யொக்கும்‌ படிவந்தவனைத்‌ துதிசெய்வான்‌. 40
[40. இருப்பு - தங்குதல்‌, மெய்ப்படி - உண்மையான தெறியில்‌,
பொய்ப்படி - பொய்யான ஒழுக்கம்‌. தெய்படி - தெய்வத்தையொத்த.]

சோமச்‌ சூரியனரி பிரமா தொழுதவற்குங்கரியோய்‌ சூலத்தோய்‌
காமற்‌ காயுந்‌ தோயாதவற்குங்‌ கரியோ யிருடிகள்செய்‌
சேக்கரர்‌ வோமத்‌ தோவாதித்‌ தேவர்‌ வொப்பார்‌ தம்மின்‌
மிக்காரவர்‌ நாமம்‌ பிரணதார்த்திகர்‌ நம்பர்‌ பஞ்ச நதியானே. 41
[41. சோமன்‌ - சந்திரன்‌, அரி - திருமால்‌, தோயாதவர்‌ - சரணடையாதவர்‌,
சேக்கரர்‌ - வேத வித்தகர்‌, தோவாதி - ஆகுதியேற்பவராதிய.]

மாதர்பதருக்‌ காதார மாயாதீதர்‌ சங்கரர்‌
பூதாதியை யெலாம்‌ படைத்தளித்து போக்கு முதல்வர்‌பெருமைக்கு
மீதாயனுவுக்‌ கணுவாகும்‌ விபுதர்‌ தக்கன்‌ வேள்விக்கு
நாதர்‌ நாத வேதாந்தர்‌ நம்பர்‌ பஞ்சநதியானே. 42
[42. தர்பதர்‌ - தருபதர்‌, கர்வமுடையவர்‌, மாயாதீதர்‌ - மாய்கைத்‌
தெளிவுடையவர்‌, விபுதர்‌ - ஞானவொளியானவர்‌.]

பாவாகித்‌ தந்தகரமெனப்‌ பரவீட்டின்‌ மாயக்காயநடு
மேவமலர்‌ வெண்டாமரைக்குள்‌ வெளியாந்த காரமாய்‌
மோகமோவ நிறைந்த பொருளினு முறைந்து நுண்ணிதாஞ்‌
சோபனாவிடையங்‌ காச்சுகானந்தர்‌ நம்பர்‌ பஞ்சநதியானே. 43
[43. பாவாகி - இரக்கமுடையதாகி, சுரம்‌ - அபயகரம்‌, பரவீடு –
மோட்சம்‌, மோகம்‌ - பற்று, சோபனம்‌, அருள்வடிவு.]

மேலாமண்ட வடிவானோய்‌ விரும்பியறி வோர்க்கறிகுறியாய்‌
பாலாமூலப்‌ பகுதிக்குள்‌ பொருட்குப்‌ பரமாம்பசு
காலாதீதா முப்புரங்கள்‌ கடந்தோ ருமையாள்‌ காதலர்‌
நாலாரணத்தி னிச்சியமே நம்பர பஞ்சநதியானே. 44
[44. மேலாமண்டபம்‌ - மேலுலகங்கள்‌, பாலா - பகுதிப்பாடுடைய,
காவலன்‌ நாலாரணம்‌ - நான்கு வேதம்‌.]

என்றிப்‌ பாலன்‌ தனிமொழி முனிவர்க்கு யானைப்‌ பாலன்‌ சூர
வென்றிப்‌ பாலக னிருபாலுறவொரு மெய்ப்பால்‌ முடிவேயுங்‌
கொன்றைப்பாலன்‌ பின்‌ பாலவர்‌ முன்பால்‌ கோயிற்பால்‌
முன்றிற்‌ பாலன்வரவுமை யறிய பாலனு முன்னின்றான்‌. 45
[45. பாலன்‌ - பாதுகாப்பவன்‌, கொன்றைப்பாலன்‌ - சிவபெருமான்‌.]

வெள்ளிமலைச்‌ செங்கதிர்‌ கொடியென விளங்கும்‌ விடையோனைத்‌
தெள்ளிய மெய்ப்பொடி வெண்முகில்‌ கதிர்செறிவன்‌ போல்‌வானைத்‌
துள்ளு மறிப்பிணை பரசுபினா கஞ்‌சூல மெடுத்தானை,
வள்ளலை யத்திரி குமரன்‌ றொழுது மகிழ்ந்து பணிந்தானால்‌ 46
[46. வெள்ளிமலை - கைலைமலை, மறிப்பிணை - பெண்மான்‌,
பினாகம்‌ - சிவனது வில்‌.]

பத்தர்க்‌ கபய மளிக்கும்‌ பெருமாள்‌ பஞ்சநதிப்‌ பெருமான்‌
முத்தர்க்‌ கினிமை கொடுக்கும்‌ பெருமான்‌ முனிவர்க்‌ கருள்‌ பெருமான்‌
இத்துருவாசப்‌ பெயரோய்‌, தவநெறி யானின்றுதியாற்‌
சித்தக்‌ களி மிக்கோமினி வேண்டிய செப்புக வினியென்ன, 47
[47. முத்தர்‌ - பரிபக்குவமடைந்த முனிவர்‌, சித்தம்‌ - மனம்‌,
செப்புக – சொல்லுக.]

கண்ட களிட்பிற்‌ குழறிய மொழியிற்‌ காணப்‌ பெற்றேனா
னண்ட ருளத்துங்‌ கிட்டாப்‌ பொருள்வரமாயினு மொன்றுண்டு
தொண்ட ரெவர்க்குங்‌ கருணைக்‌ கடலே சுரதன்‌ மகப்பேறுமால்‌
கொண்டு சரண்புக்கான்‌ கயிலாயங்கும்பிடிலஃ துண்டாம்‌ 48
[48. அண்டர்‌ - தேவர்‌, மகப்பேறுமால்‌ - மகப்பேறு கிட்டாத மயக்கம்‌.]

கயிலைக்‌ கிரியிற்‌போகவும்‌ வல்லான்‌ காவல்‌ குணர்‌வுடையான்‌
பயிலப்‌ பஞ்சநதிக்கே யென்றொடு படிதம்‌ பேசிநடப்பான்‌
சயிலத் தனையிப்படி நின்னருவிற்‌ சங்கர விங்காகச்‌
செயிலச்‌ சுரதன்‌ பேறுந்தமியேன்‌ வாக்குமமை வுண்டாம்‌. 49
[49. பயில - இருந்து நிகழ்த்த, படிதம்‌ - துதித்தல்‌, கீழ்ப்படிதல்‌,]

சங்கர கிங்கரருக்குத்‌ தக்கன்‌ தரவென்றே யன்றோர்‌
கங்கண முன்கை கட்டினையன்றிக்‌ கடவுளர்க்‌ கிரண்டோ
வெங்கரு மங்கட்‌கிட்டரு னிட்டாத மிசைய னின்னிசையன்றோ
துங்கவ ரந்தரு கென்று புகழ்ந்துதுரு வாசன்கூற. 50
[50. துங்க வரந்தருகென்று புகழ்ந்து துருவாசன்‌ கூற,]

நன்றப் படியென வப்பொழுதக் கணந்‌நந்திக்‌ கங்கைகயிலைக்‌
குன்றிற்‌ கொணரென்றருளி, கொணருங்‌ குவடுகள்‌தன்‌ கோயில்‌
முன்றிற்‌ கிடனும்‌ வலனுமிருத்தி முதற்குறி யுருவாயங்‌
கொன்றிப்‌ பஞ்சநதேசனன்‌ றவனுக்‌ கொன்றங்குரை செய்வான்‌. 51
[51. அக்கணம்‌ - அந்த நொடியில்‌, குவடுகள்‌ - சிகரங்கள்]

அத்திரி காணமுளையக் கயிலாய மழைப்பித்‌ தன்‌கோயில்‌
உத்தர தக்கண கயிலையெனப்‌ பெயரோதச்‌ செய்தோமேற்‌
புத்திர சோகச்‌ சுரதற்கருளுக, புவியோரில்‌ யாரேனும்‌
பத்தியி லித்திருமலை யைக்‌கண்டோர்‌ பாவங்‌ காணாரால்‌. 52
[52. அத்திரி - அத்திரி முனிவர்‌, உத்தரம்‌ - வடக்கு, புவி - உலகம்‌,
திருமலை - உத்தர தக்கண கயிலாயக்‌ கோயில்கள்‌.]


தெரிசித்‌ தவருக்குண்டா மகவுந்‌ திருவுங் கயிலாயம்‌
வரிசைக்‌ கயிலைக்‌ கிணையாமித் தலவாசமு மவ்வாசம்‌
பரிசிப்படி யென்றருளி மறைந்தான்‌ பாவாய்‌ முனிவோனுங்‌
குருசிற் கருளித்‌ தெரிசிப்பித்தான்‌ கருத்தாற்கூறும்‌ கயிலாயிம்‌. 53
[ 53. மகவு - பிள்ளை, பரி௬ - நன்மை, குருசில்‌ - சிறந்தவன்‌.]

சிவனித்திறத்தால்‌ வரங்கொடுப்பச்‌ செப்பேச்சுரமும்‌ விடை கொண்டு,
தவநித்தியனை யடிவணங்கித்‌ தக்காய்‌ நினது பொருளா
னவனிக்கரசு வழிபெற்றதாலே வழியாப்‌ பதம்‌ பெற்றேன்‌
இவனித்தகை யென்னபுகழ்‌ வெண்ண முடித்தே னெனத்‌தொழுது. 54
[55. எஞ்ஞான்றும்‌ - எக்காலத்திலும்‌, காமப்பேறு - பிள்ளைப்பேறு.]

நின்பா லேவ லெஞ்ஞான்று நீங்காப்‌ பணியே பணியெனக்‌கென்‌
றன்பாற்‌ புகழுமன்ன னுளமறிந்து தவத்தோ னாசியா
னன்பால்‌ காமப்பேற்‌ றுலகளித்து நம்பால்‌ வருதியெனக்‌கொடுத்‌
தன்பால்‌ விடைகொண் டத்தினத்திற்‌ சார்ந்தானரிய தவத்திறைவன். 55

தெவர்க்களிக்கத்‌ தென்புலந்தார்‌ களிக்கத்‌ தன்னூர்‌ செல்லுநாட்‌
பூவர்‌களிக்கக்‌ கருங்குழலார்‌ நட்டோரமைச்‌ சோர்புவி யுள்ளார்‌
யாவர்க்‌களிக்கச்‌ செய்யாதா ரிவ்வா ரெய்திப்‌ புரந்தானால்‌
மூவர்‌களிக்கச்‌ செயுஞ்செயல் களெல்லா மொருவன்‌ மூதுலகம்‌ 56
[56. தென்புலத்தார்‌ - பிதுர்க்கள்‌, பூவர்‌ - பிராமணர்‌, கருங்குழலார்‌ -
பெண்கள்‌, நட்டோர்‌ - நட்பினர்‌, புவி - நாடு, உலகம்‌. புரத்தல்‌ - பாது
காத்தல்‌, மூவர்‌ - பிரமன்‌ திருமால்‌ சிவன்‌.]

அந்நாள்‌ மன்னன்‌ குலமனைவி யருங்கற்புடையா டிருவயிற்றில்‌,
செந்நாண்‌ மலரிற்‌ கருப்பமுதற்‌ செவ்வாய்‌திரிந்து விழிகுழிந்து
கன்னாண்‌ கமனற்‌ முலையிடைபோய்‌ கனத்ததெழுந்த தெனக்‌கறுப்ப,
மெய்ந்நா ணிறைந்து பொறையுயிர்த்தாள்‌ மேலாமோரை நன்னாளில்‌. 57
[57. குலமனைவி - பட்டத்தரசி, கன்னாண்‌ - கல். நாணுமாறு,
மெய்ந்நாள்‌ நிறைந்து - கருப்பவளர்ச்சிக்கமைந்த மாதங்கள்‌
நிறைவுபெற்று. பொறையுயிர்த்தாள்‌ - பிள்ளையைப்‌ பெற்றெடுத்தாள்‌.
ஓரை - நற்பொழுது.]

தாமமுற்று மங்கலங்க சாதரூப முடனாம்‌ காணஞ்‌
சிவதத்த னென்று நாட்டி நான்மறையோர்க்‌ கைநிறைப்ப
தேவர்க்கும்‌ அளித்திறைவன்‌ காமர்‌கலமை மலரிறைத்துக்‌ களிப்பமை
பாவலஞ்சேர்‌ நளினமிகு பாவையர்தம்‌ பற்பலவாட்டமு மமைப்பித்தான். 58
[58. தாமம்‌ - யானை, மலை, கலங்க - நேர்‌ஒப்பிடலாகாமல்‌ வருந்த,
காணம்‌ - பொற்காசுகள்‌, சிவதத்தன்‌ - சிவன்‌ பெயரால்‌ தானம்‌ செய்பவன்‌
பாவலஞ்சேர்‌ - பாட்டு இணையாகச்‌ சேர்ந்த, பாவையர்‌ - ஆடல்‌ மகளிர்‌.]

அன்னம்‌ சவுளம்புரி முன்னுபருவந்‌ தோறுமடை வியற்றிப்‌
பன்னுக்‌ கருதிக்கிடை கலையின்‌கழகம்‌ பகடுபரி படையின்‌
மன்னும்‌ பிறவின்‌ கல்லூரி மற்றும்‌விடாது கற்றேறிப்‌
பொன்னங்‌ கழலாலூர்க்‌ கடலைக்‌கடந்தான்‌ குரவன்‌ புணையாக. 59
[59. அன்னம்‌ - உணவு, சவுளம்‌ - தேவைப்பொருள்‌, கிடைகலை –
வேதாகம விருத்திக்கழகம்‌, குரவன்‌ - அரசடிரு மன்னன்‌ மகன்‌,
சகல கலைகளையும்‌ கற்றனன்‌.]

சொல்லுங்‌ கிழத்தி வீரமகன்‌ தொடர்த்துமணப்பத்‌ தொல்குலத்தி
இல்லின்‌ கிழத்தி மலர்க்கோதை யுடனேயிணக்கி நன்னாளிற்‌
செல்லின்‌ முழங்க முரசெருக்கி திரைநீராடை மண்மடந்தை
புல்லின்‌ மணக்க வென்மகற்குப்‌ புனைந்தானிளமைப்‌ பொன்‌மடங்கும்‌. 60
[60. சொல்லுங்கிழத்தி - புகழ்ந்து சொல்லுங்‌ அரசி, செல்‌ - மேகம்‌
முரசு செருக்கி - முரசு ஒலி மிகுந்து நிற்க, நீராடைமண்‌ - கடலால்‌
சூழப்பட்ட உலகம்‌.]

மைந்த சிவதத்தன்‌ புவி காக்க வெனவைத்துத்‌
துந்தி பரியொட்டக முதற்‌ பொதி சமைத்து
முந்து மணிபொற் குவை முதற்பொரு ளனைத்தால்‌
வந்தனன்‌ விரும்பும்‌ வரமெல்லாம்‌ வாழுபெருமைத்‌ திருவையாறு. 61
[61. புவி - உலகம்‌, நாடு. பரி - குதிரை, பொதி - மூடைப்பொதி,
சமைத்து - அமைத்து.]

ஈசரடியாரும்‌ மறையோரு முதல்‌ யாரும்‌
மாசுரதனே வருக மால்வருக வென்றங்‌
ஆசியெதிர்‌ பேசவடி தோரடி வணங்கி
ஏசிலுரு வாசனையு மன்போடு மிறைஞ்சி. 62
[62. மா - சிறந்த, ஏசில்‌ - குறையில்லாத.]

அப்பிரண தார்த்திகரனை தொழுத மாந்தர்‌
ஒப்பிலவை காசிமதி யோங்குபிறை யோங்க
வைப்புவிதை யிட்டமுளை யோங்க மகமோங்க
மெய்ப்பெரு விழாத்துவக்க மோங்க விழைந்தானால்‌. 63
[63. மகமோங்க - யாகாதிகள்‌ சிறக்க, வைப்பு - சேமிப்பு.]

வீதிமணி மாளிகை விளங்கி மனைதோறுஞ்‌
சோதிமகாச்‌ சுருள்‌ தோரணம்‌ நிறைத்துப்‌
போதுவிரி தூமினிய பொற்றிகற்‌ நெளித்து
தீதில்திரு வாழ்‌நகர்‌ செம்மை திகழ்வித்தான்‌. 64
[64. மணி மாளிகை - ஆராய்ச்சி மணியோடு கூடிய மாளிகை.
திரு – இலக்குமி; செம்மை - சிறந்த அமைப்பு.]

சாமரை பதாகைகுடை சல்லிகை கணாடி
மாமணிபொன்‌ மாலைபுது வாகன மனேகங்‌
காமர்பணி பூண்மணி கருப்பூர விளக்கந்‌
தேமரு நறும்புகை செழுந்துகிலின்‌ வண்ணம்‌ 65
[65. பதாகை - விருதுக்கொடிகள்‌, சல்லிகை - சிறுபறை, கணாடி
- கண்ணாடி காமர்‌ - அழகு, தே - தெய்வம்‌.]

ஆடலாட மங்கையரை அன்ன நடமின்னார்‌
பாடல்‌ மடவார்‌ பரிகலம்‌ பரிசனங்கள்‌
கோடுதுடி பேரிவளை கொக்கரை முழங்கந்‌
தேடரு நெடும்பொருள்கள்‌ செய்தன ரனேகம்‌. 66
[66. பரிகலம்‌ - உண்ணும்‌ கலம்‌, பரிசனம்‌ - ஏவலாளர்‌ பரிவாரம்‌,
கோடு - சங்கு, துடி - உடுக்கை. பேரி - பேரிகை, வளை –
முத்திரைச்சங்கு.]

தேசனபிஷேக வகை யாவுஞ்‌சிறந்‌ தோங்க
யோசனை மணங்கமழும்‌ மொண்‌கருவின்‌ வண்ணம்‌
வாசனைநெய்‌ நறுங்கருணை யாறுசுவை மற்றும்‌
பூசனை மிகும்படிப்‌ புதுக்கினன்‌ விளங்க. 67
[67. தேசன்‌ - எங்கும்‌ நிலவியுள்ள ஈசன்‌, ௧ரு - புனுகு சவ்வாது;
பூசனை - காள்‌ வழிபாட்டு முறைமை.]

அத்தனடி யார்க்குழு வனைத்து மகிழ்வெய்த
நித்தனை யனிமித்தியம்‌ நடக்க நிறைநெல்லின்‌
வித்திடின்‌ மணிக்குவை விளைக்கும்‌ பழனத்தோடு
அத்தனன்‌ புனற்பெருகு மூர்களொரு நூறே. 68
[68. அத்தன் - ஐயாறுடையார்‌, நித்தனைய - நாளும்‌ நிகழும்‌,
நிமித்தியம் - நிவந்தங்கள்‌, பழனம்‌ - நெல்விளை நிலங்கள்‌,
நன்புனற்கு - அபிஷேக திருமஞ்சனத்திற்கு.]

தொடுத்த திருநாள்‌ முடியுமெல்லை தினந்தோறும்‌
மடுத்த சிவனன்ப ரகிலத்‌ துள்ளோர்க்‌
கெடுத்த சுவையாரமுத மேற்ப மகிழின்பங்‌
கொடுத்தநெடுந்‌ தேர்விழவு கூட்டி முடிவித்தான்‌. 69
[69. தொடுத்த - தொடர்ந்தமைத்த, விழவு - தேரோடும்‌ விழா.
முடிவித்தான்‌ - விழாவினை நிறைவித்தான்‌.]

முடிவினில்‌ பிரத மூழ்கியெழு வித்துப்‌
படிதனிலிவ்வாறு திருநாள்‌ விளங்கப்‌ பண்ணி
யடிதொழுது சொல்லரு மகிழ்ச்சி யோடடைந்தான்‌
கொடிமதி னெடும்பதி குலக்குரவர்‌ கோமான். 70
[70. பிரதம் - பார்ப்பனர்க்கு இறையிலியாகக்‌ கொடுக்கும்‌ நிலம்‌.
நெடும்பதி - தலைநகர்‌, குலக்குரவர்‌ - பிராமண ஆசாரியர்‌.]

ஆண்டுதோறு மிப்படி யருந்திரு விழாக்கண்‌
டெண்டரு வினைப்பயனொழித்‌ திறைவன்‌ வாழ்‌
மாண்டரு சிவலோக முறமற்றவ னிருத்தும்‌
பூண்டகைய காளை சிவகர்த்தன்‌ பிறந்தானே. 71
[71. எண்தரு - பல பிறவிகளைத்தரும்‌, வினைப்பயன்‌ -
தீவினைப்பயன்‌, சிவகர்த்தன்‌ - சரத மன்னனின்‌ மகன்‌.]

தற்பர னெடுங்கயிலைக்‌ கேகியதுந்‌ தாதை
சிற்பரன்‌ செப்பேச்சுர னருளாற்‌ பெறுஞ்சிறப்பு
முற்பவ முற்றமய னெனுங்குரு வுரைப்ப
வற்புதனை ஐயாரணுகிச்‌ செய்தன னவ்வாறே. 72
72. தற்பரன்‌ - ஆன்மாக்களோடு ஒன்றிய சிவன்‌, சிற்பரன்‌ - அறிவுக்கு அப்பாற்பட்ட சிவன்‌. ]

பங்குனி முதற்‌ பிறையிற்‌ பஞ்சநதி வாணர்க்கு
இங்கித விழாநடத்தி யெய்தினனல்‌ வீட்டிற்‌
பொங்கு சிவதத்தன்றலன பொற்பெறு தவத்தோன்‌
சங்கரனுஞ்‌ சித்திரையிற்‌ றந்தனன்‌ விழாவே. 73
[73. இங்கிதம்‌ - முறைமையானமைந்த சிறப்பு. பொங்கு –
புகழ்மிகுந்து.]

இத்திறமிம்‌ மன்னர்வழி தோன்று மேனையோருஞ்‌
சித்திரை வைகாசி பங்குனித்‌ திருவிழாவும்‌
பத்தியில்‌ வெவ்வேறாந்‌ திருநாட்படி புதுக்கி
முத்திவழி பஞ்சநதி யென்றுமுயன்‌ றுற்றார்‌. 74
[74. ஏனையோர்‌ - அரசமரபினர்‌. திருநாள்படி – திருநாட்களுக்
குரிய நிவந்த இறையிலிகள்‌.]

தோகையன வத்தி சுரதன்றுதி களைந்து
மோகை யெழு காலையிலுரைக்கில்‌ மகவுண்டாம்‌
மாகையி லிக்காதை புகன்றோரருள்‌ கேட்டோர்‌
ஈகையோ டைய்யாற்றி லொரு மாதமிருந்தோரே. 75
[75. மோகை இருள்‌ மயங்கும்‌ விடியல்‌, மாகை - சிறந்த பகுதி.
சுரதன்துதி - சுரதனைப்பற்றிய வரலாறு.]

அத்திரு விழாத்‌ தரிசித்தோர்‌ பிறப்பறுப்பர்‌
சத்திய மோரய்யமிலைச்‌ சாற்றிய தெனப்பின்‌
மெய்த்தகு புரந்தரனு மேவுபணி மேற்கொண்‌
டுத்தமனருட்‌ கருணை பொற்காதை யுரைப்பாம்‌. 76
[76. பிறப்பறுப்பர்‌ - முத்தி பெறுவர்‌, உ.த்தமன்‌ - ஐயாறப்பன்‌.
பொற்‌ காதை - பொன்போன்ற காதை.]
--------------

8. இந்திராத்தியாயம்‌

குதலையின்‌ மொழிகற்குங்‌ கோமள மயிலேகேள்‌!
முதலையி னமரர்க்கு முத்தரு மவுணர்க்கும்‌
விதலையின்‌ மாமுனிவர்‌ விண்ணவர்‌ படர்‌ தீர
சிதலையின்‌ ஒருகாலைத்‌ தீயவரொடு தோற்றார்‌. 1
[1. குதலை - மழலைப்‌ பிள்ளை, கோமளமயிலே - அழகு நிறைந்த
மயிலை ஒத்த பெண்ணே! முத்தர்‌ - முத்திக்கு இலக்கானவர்‌,
வீதலை - பூமி, சிதலை - சுதல்‌.]

கானுடை மதுவாசக்‌ கற்பகனிழ னீங்கி
மானுட வடிவாகி மகபதி திரியுங்காற்‌
றானுடை மதிவல்லான்‌ சற்குரு வந்தெய்தித்‌
தேனுடை நறுமாலைச்‌ செம்மலோடிது சொன்னான்‌. 2
[2. கான்‌ - வனம்‌, மகபதி - இந்திரன்‌.]

இந்திர னியலென்னே யேதிலுறு பகைவெல்லுந்‌
தந்திர நினைகில்லாய்‌ தவமில்லை மடிக்கற்றாய்‌
நிந்தையின்‌ வடிவுற்றாய்‌ நீயினி விரைசெறிப்‌
பைந்தமிழ்‌ முனிபொன்னி பஞ்ச நதிக்கென்றான்‌. 3
[3. ஏதிலுறு - பகைவரால்‌ உற்ற, மடி - தகுதி பெறாமை, விரை –
விரைந்து செல்வாயாக, பைந்தமிழ்முனி - அகத்தியன்‌.]

ஈசனைமுன்‌ கும்பிட்‌ டிறைவனி லிங்கத்துக்‌
காசறு வடபாலேய்‌ மாதிரு மகடன்னைப்‌
பூசனை புரிகென்னப்‌ புங்கவர்‌ பெருமானுந்‌
தேசனை வரமெய்தச்‌ சென்றன னினியிப்பால்‌. 4
[4. காசறு - குற்றமற்ற, வடபாலேய்‌ - வடக்குப்புறம்‌ சென்று,
பூசனை - வழிபாடு, புங்கவர்‌ - தேவர்‌.]

திருப்பொன்னியடுத்த செழுங்கரை போய்த்‌
தருப்பஞ்ச நதீசனைத்‌ தாடொழுதான்‌
விருப்பஞ்செய்‌ பார்த்தனை மேற்‌றெழுமாக
கருப்பந்‌தரு தோத்திரங்‌ கட்டுரைக்கும்‌ 5
[5. பொன்னி - காவிரி நதி, செழுங்கரை - வளம்‌ நிறைந்த தரு –
கற்பகத்தரு, பார்த்தன்‌ - தேவர்க்கரசன்‌.]

நீரொன்‌ றடியார்கள்‌ நினைத்த தெலாம்‌
வேறொன்‌ றொழியாமல்‌ விழைந்த ருளை
யாறஞ்சுடை நாயக வரசுர வாகனநந்தி
மேலேறுஞ்‌ சுடர்‌ வெற்றியெனக்‌ கருளே. 6
[6. நீரொன்றடியார்‌ - வேதியர்‌, ஐயாறஞ்சுடை நாயகன்‌ -
திருவையாற்றி லமர்ந்தருள்‌ பஞ்சகவியம்‌ விரும்பும்‌ தலைவன்‌]

கதிரொன்றிய சக்கரங்‌ கைத்தலத்‌ தீந்தத்‌
திரும்பகை மாலுக்ககற்றிய வமுதிருந்‌ தருள்வாக்குப்‌
பொருந்திய தெனக்கென வலியமை பகையை
முறித்ததன். மேலாமருஞ்சமர்‌ வெற்றியெனக்‌ கருளே. 7
[7. சக்கரம்‌ - விட்டுணுவின்‌ சக்கரம்‌, அருஞ்சமர்‌ - மேலான போரினை]

அகிலத்தேவை யெண்ணினும்‌ படியச்‌
சகலர்க்கு முடித்த தயாநிதியே
விகலத்தி விளைத்தனன்‌ மேல்வுணர்க்‌
கிகலச்‌ சமர்வெற்றி யெனக்கருளே. 8
[8. அகிலம்‌ - அனைத்துலகம்‌, எண்ணினும்‌ படிய - எண்ணிக்‌
கைக்குளடங்‌காமல்‌, சகலர்‌ - யாவருக்கும்‌, விகலம்‌ - மனத்தாழ்வு.]

என்றிந்திரன்‌ ஏத்தி யிறைஞ்சுதலும்‌
நன்றென நிறை பஞ்சநதேசனவர்க்‌
குன்றஞ்‌ சிறைகொள்‌ குலிச்சத்தவனுக்‌
கொன்றின்புற வென்றி யுரைத்தனனால்‌. 9
[9. இறைஞ்சுதல்‌ - பலவாறு போற்றி வணங்குதல்‌, குலிச்சத்தவன்‌ -
குலிசமென்னும்‌ படையை உடைய இந்திரன்‌.]

மறுவலர்‌உண்டி யில்லார்க்கில்லை வீரியத்தின்‌ வாழ்க்கை
அறிவிலார்க்‌ கில்லை மேலையுல்‌ கமராழ்வி லார்க்கும்‌
பிறைகுலவு நுதலாரில்லை பிணியின்மை யில்லோர்க்கில்லை
செறிவிலா த்தவம்‌ போர்வென்றிச்‌ செல்வ மில்லோருக்கில்லை. 10.
[10. மறுவலர்‌ - வறுமையடைந்தவர்‌, வீரியம்‌ - திடத்தன்மை,
அமராழ்வு - பண்பமையுணர்வு, இல்லோர்‌ - நல்லொழுக்கம்‌
இல்லாதவர்‌.]

மானவீரியத்தை வேண்டில்‌ வேண்டுமால்‌ யாமேவேண்டும்‌
ஞானமேவேண்டிற்‌ காமன்‌ வேண்டுநல்‌ லழகுவேண்டிற்
பானுவேவேண்டு மாரோக்கியந்‌ தனைப்‌ பரந்துவேண்டி
லானபாக்‌ கியத்தைவேண்டி லருந்திருப்‌ பூசைவேண்டும்‌. 11
[11. மான - மிகுதியான, வீரியம்‌ - வீரம்‌, பானு - சூரியன்‌,
பாக்கியம்‌ - நற்செல்வம்‌.]

ஆகையா லுனக்குவாகை வேண்டிடி லரியச்செல்வம்‌
மோகையால்‌ வேண்டும்‌ வேண்டிலொரு திருப்பூசை வேண்டும்‌
பாகையாமொழியுங்‌ கோயிலெம்‌ மிடப்பாலில்‌ வாழ
வாகையாற்‌ கோதமர்க்காயிரத்து னாம்‌ யாமேயென்றான். 12
[12. வாகை - வாகை மலர்‌ சூடும்‌ வெற்றி, திருப்பூசை - மேலான பூசை,
மோகை - விருப்பம்‌, பாகையா மொழி - இனிமையான மொழி,
மொழியும்‌ - மொழியை உடைய உமாதேவி.]

ஆயிரச்‌ செங்கணானும்‌ அம்மொழி யமுதுட்கொண்டு
சேயிதழ்‌ பதுமபீடச்‌ செல்விதங்‌ கோயிலாங்கண்‌
மாயிருந்‌ தச்சன்றன்னை வருகென வந்த போழ்தே
கோயிலின்‌ முன்னரன்னோன்‌ கூபமொன் றிழைத்தான்‌ மன்னோ. 13
[13. ஆயிரச்‌ செங்கணான்‌ - இந்திரன்‌, செல்வி - இலக்குமி,
மாயிருந்தச்சன் - தேவதச்சன்‌, மயன்‌. கூபம்‌ - கிணறு.]

ஆமதிற்‌ கடவுளும்ப ரமுதமே நிறைந்தநீராற்‌
கோமள வல்லிதன்னைக்‌ குழைந்தனன்‌ குளிரவாட்டி
தேமலர்‌ மாலைச்சாந்தஞ்‌ செழுமதிக்கலன்க ளேந்தி
வாமநற்‌ கலாபம்வீக்கி வனைந்தனன்‌ பிறவுமாதோ. 14
[14. உம்பரமுதம்‌ - தேவரமுதம்‌, குழைந்தனன்‌ - மனம்‌ உருகினன்‌,
தேமலர்‌ - தேன்‌ பொருந்திய மலர்‌, வாமம்‌ - அழகு.]

நெய்ம்மண மமுதமேற்றி நிறைமுகப்‌ பஞ்சவாசம்‌
வெம்மடி பழுக்காய்த்தட்டம்‌ வெள்ளிலைக்‌ களாசிதாங்கி
செம்மணப்‌ பத்திமுன்னாத்‌ திருவடித்‌ தொழுதெழுந்தாங்‌
கம்மணத்‌ திருவின்முன்னின்‌ றருந்துதி புகலலுற்றாம்‌. 15
[15. நெய்மணவமுதம்‌ - நெய்மணக்கும்‌ நிவேதன அன்னம்‌,
பஞ்சவாசம்‌ - ஐந்து வகையான மணம்‌, அவை - இலவங்கம்‌, ஏலம்‌,
கற்பூரம்‌ விலாமிச்சம்‌ தக்கோலம்‌, திரு - இலக்குமி.]

முரியுந்திரை வெண்கடற்பிறந்து முட்டாச்செந்தாமரை நாப்‌பணரியன்‌
மருமத்தலம்‌ பிரியாவன்னா யுன்னைத்‌ தொழுகின்றேன்‌
பரியுமசுரப்‌ படையைவெல்லும்‌ படையும்படைத்த சாக்கரையும்‌
விரியுமெண்பது பெரும்பரியும்‌ பிரியாதிருத்தி நீயெனவே. 16
[16. முரியும்‌ - வளையும்‌, திரை- அலை, வெண்கடல்‌ - பாற்கடல்‌,
முட்டாள்‌ - முள்ளோடு கூடிய தாளினை உடைய, மருமத்தலம்‌ - மார்பு.
சாக்கரையர்‌ - படைத்தலைவன்‌.]

துங்கப்பிருகு மகளாகிச்‌ சுவாகர்சுதாவின்‌ வடிவாகு
மங்கைக்கமல மலர்தாங்கும்‌ அன்னாய்‌உன்னைத்‌ தொழுகின்றேன்‌
வெங்கட்‌ பகுவாய்ப்‌ படைவெல்லும்‌ வேழவரசும்‌ வெம்பரியும்‌
தங்கக்குவையு மெப்பொருளுந்‌ தணவாதிருத்தி நீயெனவே. 17
[17. துங்கம்‌ - அழகு, சுதா - மகன்‌, வெங்கண்பகுவாய்ப்படை - அசுரர்‌
படை, வேழவரசு - அரசயானை, வெம்பரி - கொடிய வேகமுள்ள
குதிரை தணவா - நீங்காமல்‌.]

உலகமெவைக்குந்‌ தாயாகி யுமைபராதியுந்‌ திரையுருவா
யலகில்‌ விளையாட்‌ டுடைமதனன்னா யுன்னைத்‌ தொழுகின்றேன்‌
புலவர்‌ முகத்து மாசிலிருக்கைப்‌ புலமையிடத்து மனையகத்து
நிலவியெனையு மெப்பொழுதும்‌ நீங்காதிருத்தி நீயெனவே. 18
[18. அலகில்‌ - அளவில்லாத, மதனன்‌ - காமன்‌, மாசில்‌ - குற்றமற்ற,
நிலவி - கலந்து.]

பூசையாற்‌ றுதியானெஞ்சம்‌ பொலிந்து பூமகளுந்தோன்றி
யோசையார்‌ செல்வமெல்லா முதவினளொன்று சொல்வா
ளாசையாலன்னை மார்களெழுவரிங்‌ கரிசித்‌ தெய்தின்‌
மாசயம்‌ உறப்போர்செய்வாய்‌ மகபதி விரைகவென்றாள்‌. 19
[19. ஓசையர்‌ - ஒலி பொருந்திய அன்னைமார்‌ - சப்தமாதர்‌, மாசயம்‌ -
மிகுந்த வெற்றி, மகபதி - இந்திரன்‌.]

விச்சுவக்‌ கருமனுக்கு விளம்பினா னவணிறைஞ்சி
நிச்சய வடிவமெல்லாம்‌ நிருமிப்ப நிருதிப்‌பாங்கர்‌
இச்சையுட னிருந்தாங்‌ கணிந்திர னியைந்துபோற்றி
நச்சுவரர்க் கினியார்‌பூசை நடத்தினா னயந்துமாதோ. 20
[20. விச்சுவக்கருமன்‌ - விசுவகர்மா, தேவதச்சன்‌. நிச்சய - திட்டமான,
நிருமிப்ப - செய்தமைக்க, நச்சுவரர்‌ - பாம்பணிபவர்‌.]

நான்முகப்‌ பேதையைந்து முகமுளப்‌ பெதும்பை நான்கைந்
தான்முக மாறுபெற்ற மங்கைதா ரணியளிக்கு
மெண்முக மடந்தைமிக்க வெண்மருப்‌ பிடைமண்டாங்கு
மான்முக வரிவைநூறாம்‌ மகமுகத்‌ தெரிவையோடும்‌. 21
[21. நான்முகப்பேதை - பிராமி, ஐந்து முகமுளப்‌ பெதும்பை –
மகேசுவரி, முகமாறுபெற்ற மங்கை - கெளமாரி, எண்முகமடந்தை –
நாராயணி, மான்முகவரிவை - வராகி, மகமுகத்‌ தெரிவை – இந்திராணி]

பிறங்கிய பிறையெயிற்றுப்‌ பெருமுகப்‌ பேரிளம்பெண்‌
றங்கிள ரெழுவராகு மன்னையரிவர்க்‌ கெஞ்ஞான்று
மறங்கிளர்‌ வெற்றிவேண்டி வானவன்‌ புரித்தபூசை
திறங்கிளத்‌ துரைக்கில்‌ வாக்கில்‌ சிந்தையி லெட்டாதம்மா! 22
[22. பிறங்கிய - விளங்கிய. பிறை எயிறு - பிறை போன்ற பற்கள்‌.
பெருமுகப்பேரிளம்‌ பெண்‌ - சாமுண்டி. வானவன்‌ - இந்திரன்‌.
திறங்கிளந்து - திறத்தினை விளக்கமாக.]

அன்னையர்‌ மகிழ்ந்து முன்னின்ற மாச்சயமுனக்குண்டாக
நின்னது பதியினேகி நினக்குறு பகைஞர்பேரில்‌
முன்ன நீயமரிழைத்தி முனிந்தவர்‌ மேலாம்போதிற்‌
பின்னவர்‌ படையினொன்று பெரிதுநா முடித்துமென்றார்‌. 23
[23. அன்னையர்‌ - சப்தமாதர்‌. மாசயம்‌ - மிகப்பெரிய வெற்றி,
மேலாம்‌ போதில்‌ - பகைவர்‌ தாக்குதல்‌ மேலாகும்‌ போது,
முடித்தி - அழிப்போம்‌.]

மாதரை விடைகொண்டெய்தி மகபதி பதியிலவ்வா
றோதரு பகைமேற்‌ போர்மூண்டிழைத்‌ தன்னைமாரும்‌
மோதின ரசுரர்சேனை முடிந்திட விடிந்ததம்மா
வேதமிலிரவி முன்போ மிருளிமை யோர்க்கெல்லாம்‌. 24
[24. மாதர்‌ - சப்தமாதர்‌, மகபதி - இந்திரன்‌. பதி - இந்திரவுலகம்‌,
மோதினர்‌ - தாக்கினர்‌, ஏதமில்‌ - குறையில்லாத, இமையோர்‌ - தேவர்கள்‌.]

இந்திர னிருமித்தேத்து மெழுவரைத்‌ தொழுவோருக்கும்‌
வெந்திறற்‌ பகையால்‌ தீயால்‌ வேந்தர்‌ கள்வராலும்‌
வந்திடாதுன்பங்‌ கூபத்‌ தமுதினால். மடந்தையோரும்‌
மைந்தனைப் பெறுவள்‌ தீராவன்பிணி தீருமென்றான். 25
[25. எழுவர்‌ - ஏழு தெய்வ அன்னையர்‌, கூபத்தமுது - கிணற்றுத்‌
தெய்வ நீர்‌.]

இந்திராத்தியாயம்‌ முற்றும்‌
@@@
இன்னன கோயிலுண்மை யினிச்சிவ சருமன்காதை
தொன்னலச்‌ சிவதாசன்சீர்‌ சுகரிதன்‌ ததீசிமீது
பன்னருஞ்‌ சுகரிதன்றன்‌ பான்மைக ளாய்வகுத்த
முன்னரும்‌ பிரணதார்த்தி கரன்திறம்‌ மொழியலுற்றாம்‌. 26

ஆலயச்‌ சருக்கம்‌ முற்றும்‌.
************

9. திருமகளத்தியாயம்‌

மாதவன்‌ வடிவெல்லாம்‌ வந்துதிரண்‌ டின்தேன்‌
காதல னெனவந்தாய்‌ கமலத்தமு தொப்பாய்‌
கோதமன்‌ தரிசிக்கக்‌ கோமள வடிவோடும்‌
பூதலத்தே யுதித்தாய்‌ புக்கனன்‌ புகலென்ன. 1
[1. மாதவன்‌ - திருமால்‌, இன்தேன்‌ - இனியதேன்‌, கமலம்‌ - தரமரை
கோமளம்‌ - மிக்கு அழகு, புதலம்‌ - மண்ணுலகம்‌, புகல்‌ - அடைக்கலம்‌.]

நன்னினைவிது மாதே! நாரணன்‌ மனையாளைப்‌
பன்னிய கதையீது, படித்தவர்‌ செளியூறத்‌
துன்னினர்‌ மிடிபோகுந்‌ துரிசுறு மடையாரு
மென்னிட வருமென்று விழுந்தவன்‌ மொழிகின்றான்‌. 2
[2. நாரணன்‌ - திருமால்‌, பன்னிய - பற்றிச்‌ செய்த. துன்னினர்‌ -
கேட்டவர்‌, மிடி - துன்பம்‌, துரிசுறு – குற்றமுடைய]

பண்டொரு காலத்துப்‌ பாரிடைய வரெல்லா
மண்டரு முகலத்துப்‌ பிறவியை யஞ்சினராய்‌
விண்டனர்‌ பாசத்தின்‌ முத்தி விருப்போடு
மண்டின ரையாற்றின்‌ வந்தனர்‌ நிறையுங்கால்‌. 3
[3. பண்டொரு - முன்பொரு, மண்தரு - மண்ணமைந்த, பாசம்‌ -
பற்றுள்‌ளம்‌, மண்டினர்‌ - சேர்ந்து கூடினர்‌.]

அத்திரி வைசம்பாயின னங்கினர்‌ விசுவா
மித்திரன்‌ மார்க்கண்டன்‌ சயிமினி மிருகண்டு
மெய்த்துரு வாசன்‌ வான்மீகி வசிட்டன்‌
பாரத்துவன்‌ ததீசீ யகத்திய னானந்தன்‌. 4
[4. பாடலில்‌ - பிராமண சிரேஷ்ட கோத்ர முதல்வராகிய
ரிஷபுங்கவர்கள்‌ கூறப்‌ பெற்றுள்ளனர்‌.]

அனக சுமந்திரி பிருகு சதாளந்தன்‌
கனதவங்‌ கெளத்தமனா ரதனொடு காசிபனுஞ்‌
சனக சனந்த சனற்குமர சனாதர்‌ முதற்‌
சினமிலருந்‌ தவரும்‌ செப்பேசம்‌ பயில்வார்‌. 5
[5. கனதவம்‌ - மிகுந்த தவம்‌, சினமில்‌ - கோபத்தை வென்ற,
அருந்தவர்‌ - கடிய தவத்தையுடையவர்கள்‌.]

முதனிலை யோரில்லின்‌ முயலுந்‌ தருமரோவற்‌
புதன்மறை வானத்தோர்‌ போற்றிய புலனைந்தும்‌
மதநிலை யோராயாரும்‌ மறைமுடி பெனவோதும்‌
பதனிலை யிதுவென்றிப்‌ பஞ்சநதம்‌ புக்கார்‌. 6
[6. முதனிலையோர்‌ - வருணத்துள்‌ முதன்மையுடையவர்‌, தருமர்‌ -
இல்லறம்‌ செய்வோர்‌, அற்புதன்‌ - பிரமன்‌, மறை - வேதம்‌,
மறைமுடிபு - வேதங்கள்‌ கூறும்‌ முடிவு, பதனிலை - நிறைபக்குவ நிலை,
பஞ்ச நதம்‌ - திருவையாறு.]

ஒருதலமுடையான்‌ பேரி ருவகையோடு முன்னீர்‌
வருதரை யுளவானால்‌ வருணமு மலிந்தீண்டி
வருட மெணில வெண்ணி மதிக்கினு முடிவொண்ணாப்‌
பரிசனங்‌ கடலெல்லாம்‌ பதவுண வரிதாமால்‌. 7
[7. ஒருதலம்‌ - ஒப்பற்ற சிவத்தலம்‌, பேரிருவகை - ஐயாரப்பன்‌,
பிரணதார்த்தீகரர்‌, முன்னீர்‌ - வானம்‌. பூமி பாதாளம்‌,
ஆகியவற்றிலமைந்த நீர்‌]

இன்னற்‌ பசியென்றே தனயிமே லேறியநஞ்‌
சுண்ணத்‌ தனிமீளா தொருமந்திர மில்லை
பன்னற்‌ கருணையினோர்‌ பண்டிதர்‌ பிறரில்லை
அன்னத்‌ திரளையதற்‌ கவுடமா யுண்டயதே. 8
[8. இன்னல்‌ - தீமை. மீளா - பிழைக்க, பன்னல்‌ - பரிகாரம்‌ செய்தற்கு,
பண்டிதர்‌ - மருத்துவர்‌, அன்னத்திரள் - அன்ன உருண்டை
(சோற்றுருண்டை) அவுடதமா – மருந்தாக]

என்னுந்‌ தாபதரிற்‌ கவுதம முனியென்பான்‌
தன்னன்‌ புளனாகித்‌ தலவாசஞ்‌ செய்வோர்க்‌
கன்னந் தருகிற்பா னமலனை யையாற்றிற்‌
றுன்னும்‌ பொற்கோயிற்‌ றொழுது துதிசெய்வான்‌. 9
[9. தாபதர்‌ - தபோதனர்‌, தலம்‌ - சிவத்‌தலம்‌, அன்னம்‌ - உணவு,
துன்னும் – பொருந்திய]

பூரண ஞான மிரண்டற்ற புராதனனே
காரண னெழுதலாங்‌ கதிரொளியே சரணம்‌
தாரண வெம்பசியித்‌ தலவாசஞ்‌ செய்வோர்க்‌
காரணனே தொலையா வன்னம்‌ தரவேணும்‌. 10
[10. பூரணன்‌ - நிறைவானவன்‌, காரணன்‌ - யாவற்றிற்கும்‌ முதற்‌
காரண மாயுள்ளவன்‌, ஆரணன்‌ - வேத முதல்வன்‌, தொலையா –
குறையாத, அன்னம்‌ - சோற்றுணவு.]

வேதமுதற்‌ பொருளி னிலக்கே மெய்யாவிக்‌
கோதனமா யூட்டா வுண்பவனே சரணஞ்‌
சாதுயர்‌ வெம்பசியித்‌ தலவாசஞ்‌ செய்வார்‌
காதலுறத்‌ தொலையா வன்னம்‌ தரல்வேண்டும்‌. 11
[11. மெய்யாவிக்கு - மெய்மையான உயிர்க்கு, ஓதனம்‌ - உணவு,
சாதுயர்‌- சாவளவாகுந்துன்பம்‌, தொலையா - குறையாத.]

ஓங்காரங்‌ காயத்திரி யுண்மைப்‌ பொருளே
தேங்கானந்தர பொய்ச்செறி வில்லாய்‌ சரணம்‌
தாங்கா வெம்பசி யித்தல வாசஞ்செய்வோர்க்‌
காங்காலந்‌ தொலையா வன்னம்‌ தரவேண்டும்‌. 12
[12. தேங்கு - நிலைத்த, ஆனந்தர - ஆனந்தமயமானவனே,
பொய்ச்செறிவில்லாய்‌ - உண்மைப்‌ பொருளானவனே,
ஆங்காலம்‌ - இறுதிக்‌ காலம்‌ வரையில்‌.]

இன்னன புகல்வோனுக்‌ கிறைவனு மெதிர்‌தோன்றிப்‌
பொன்னலர்‌ மறைவாசப்‌ பூமகணீ வாவிங்‌
கன்னமும்‌ நிதியுந்‌ தானியமு மளிக்கென்ன
தன்னமா வடபாலி லிருக்கத்‌ தாபித்தான்‌. 13
[13. இன்னன - இவ்வாறாக, புகல்வோன்‌ - விண்ணப்பம்‌
செய்வோனாகிய முனிவன்‌, பூமகள்‌ - இலக்குமி]

மாலொடு துயிலினீங்கா மனையென்‌ றெண்ணா
பாலக னிடர்தீரப்‌ பாற்கட லணைந்தான்‌
மேலவன்‌ மனை யென்னான்‌ வெம்பசி தணியென்ன
ஞாலத்துயர்‌ பஞ்சநதிநற்‌ பதியோர்க்‌ கீய்ந்தான்‌. 14
[14. மாலொடு - திருமாலோடு, மனை - மனைவியாகிய திருமகள்‌.]

மாதவர்‌ பலரோடு மங்கல மகடன்னை
கோதகம்‌ பூசித்துக்‌ கொடியுன்‌ வரமென்ன
போதலும்‌ முனிவோனும்‌ பூசனை புரிகிற்பால்‌
நாதனை முதலர்ச்சித்‌ திடனிடை நண்ணுதலும்‌ 15
[15. மாதவர்‌ - முனிவர்‌, கோதகம்‌ - உள்ளக்களிப்புடன்‌.]

திருப்பாற்‌ கடற்றாமரை செம்மலர்மேல்‌
விருப்பாற்‌ கடலேந்திய வேழமிரண்‌
டுருப்பாற்‌ கவிழ்‌தெள்ளமுது உள்ளொளிர்‌
விருப்பாடனைக்‌ கண்டணன்‌ யாவரோடும்‌. 16
[16. வேழம்‌ - யானை, உருப்பால்‌ - உருவான கலசங்களால்‌,
விருப்பாள்‌ தனை, விருப்புடனிருப்பவளாகிய இலக்குமியை,]

அணிபூந்துகில்‌ சந்தகி லாவிநறை
மணிபூத்த விளக்கு வழங்கியபின்‌
பணிபூப்ப வணிந்து பலபலவாய்க்‌
கணிபூத்தன வூண்கருணைத்‌ தோகையும்‌. 17
[17. பூந்துகில்‌ - மென்மையான பட்டாடை, சந்தம்‌ - சந்தனம்‌,
அகில்‌ - அகிற்புகை,]

அவிப்பாய்ந்த மணம்‌ மகக்காரடலை
குவிப்பாய்‌ வீழ்ந்து நெய்க்குயங்கமழச்‌
சவிப்பாவை மகிழ்ச்சிதரும்‌ படியாற்‌
புவிப்பாற்‌ பலவகைசெய்தனன்‌ பூசனைமே. 18
[18. அவிப்பாய்ந்த மணம்‌ - வேள்வியில்‌ அவிப்பாகமாகப்‌ பெய்த
பொருள்‌களால்‌ உண்டாகும்‌ மணம்‌, சவிப்பாவை - வல்லமை
பொருந்திய திருமகள்‌.]

அஞ்ஞான்று தொட்ட தலத்திற்திருவு
மெஞ்ஞான்று மிருந்தன னீகையினால்,
வைஞ்ஞான்ற கருங்குழல்‌ மற்றதனால்‌
எஞ்ஞான்று மிரும்பசி யில்லையதில்‌. 19
[19. அஞ்ஞான்று - அப்பொழுது, திருவும்‌ - இலக்குமியும்‌,]

தனம்‌ தானியம்‌ யாதெல்லாதா மெனினும்‌
மனந்‌ தாழ்ந்து விரும்பில்‌ வரந்தருவாள்‌
இனத்தாமரை மேலிரு தாமரை கொண்‌
டனந்தா னிருந்தாலென வாங்கிருந்தாள். 20
[20. மேலிரு தாமரை - மேல்‌ வீற்றிருப்பாளாகிய இலக்குமியின்‌
இரு தாமரை போன்ற கண்கள்‌. அனந்தான்‌ - அன்னந்தான்‌.]

திருமகளத்தியாயம்‌ முற்றும்‌
---------

10. கவுதமனத்தியாயம்‌

பூமகள்‌ வரம்பெறு தவப்புனித னங்ஙண்‌
காமக்‌ கன்னதிரு வருட்கடல்‌ கிடைப்பான்‌
கோதமன்‌ முயன்று வரமுற்றசெயல்‌ சொல்லின்‌
மாமகிழவுங்‌ கூறுமிது கேளென வகுப்பான்‌. 1
[1. பூமகள்‌ - திருமகள்‌, காமதக்கன்ன - விரும்பதக்க தன்ன.]

ஐம்புலனடக்கி புனல்‌ முப்பொழுது மாடி
பம்பு மெழுத்தஞ்சு யுதமாக வுருப்பண்ணி
வம்பரு முறுத்திரும்‌ வலத்தொடு முரைத்தே
உம்பர்‌ பெருமானை யருங்சித்தின னோராண்டு. 2
[2. புனல்‌ - தூய நீர்‌, பம்பு - ஒலிக்கின்ற.]

ஈர்த்த மதிவார மிரவணன்‌ முணலுற்றுங்‌
கார்த்திகை யிலாட்டு மபிடேகமொடு கஞ்சம்‌
பூத்தனைய தீபமொரு கோடிபுரிவித்துந்‌
தீர்த்தனரு ளெய்தும்வகை செய்தன னோராண்டு. 3
[3. மதிவாரம்‌ - திங்கள்கிழமை, கஞ்சம்‌ - தாமரை.]

வாயு வுணவாலு மொருவற்‌ சாமுயன்றா
னேயுமுண வேதுமில னோர்வருட மெய்திக்‌
காய்கதிரி டத்திலிரு கண்களை நிறுத்தி
ஆயமுறு மூச்சற வியற்றின னோராண்டு. 4
[4. காய்கதிர்‌ - வெய்யல்‌ காய்கின்ற சூரியன்‌.]

ஊனமறு காவிரி வடாதுகரை யோர்பால்‌
வான்முகி லேறுமுயர்‌ கோபுர மருங்காய்த்‌
தானமிசை யண்ணலெழுத்‌ தஞ்சுமதி தன்னிற்‌
பானவமு தென்னவவ னுண்டு பயிலெல்லை. 5
[5. முகில்‌ - மழைமேகம்‌, மருங்கு - பக்கம்‌, தானமிசை, -
ஆசனம்‌ மீது, பானவமுது - நீர்‌ பருகுதல்‌ போன்று. ]

பூதப்படை சூழக்கண நாதர்புடை மொய்ப்ப
நாதக்‌ கடலேத்த நந்தி விருந்தோத
மேதக்கும ரர்க்குகன்‌ வேழமுகன்‌ மேவப்‌
பாதப்பத சாலத்தொலிப்‌ பாதமோ டிலங்க. 6
[6. நாதம்‌ - இசை நாதம்‌, வேழமுகன்‌ - விநாயகன்‌.]

துண்டமதி கண்டரவு சுற்றச்‌ சடைமுற்றும்‌
விண்டலர்க்‌ கடுக்கையின்‌ விழுந்து மீதுற்று
குண்டல மிருந்திசை குழைத்த செவிமேலா
யொண்டருகு கண்டொரு கையுற்றமறி கற்ற. 7.
[7. துண்டமதி - பிறைச்சந்திரன்‌, அரவு - பாம்பு, கடுக்கை -
கொன்றை மாலை, மறி- மான்‌.]

வாமவிழி நாணலுறப்‌ பார்வைநகை கூறக்‌
காமனை யெரித்தவிழி கண்டதி சயிப்ப
நாமமுரு மிரப்பை வாதக்‌ கானலிக்க
வாமையுட னென்னநெடு மால்மிகை யடக்க. 8
[8. வாமவிழி - அழகியவிழி, நாமமூறு - அச்சமுள்ள,
மிகை - கர்வம்‌.]

கொக்கிற்‌ கண்டு மதியிற்‌ கயல்குதிப்ப
நக்கதலை யோடுமுடி கண்டன்‌ நகைக்கத்‌
தொக்கத்திரு நீறுமிட றூடிருடோ டுடுக்கை
கைக்கண்டு மழுவச்ச மபயக்கர நிறுத்த. 9
[9. கயல்‌: மீன்‌, மழு - மழுவாயுதம்‌.]

பொன்னின்மலை வெள்ளிமலை மீது வரல்போல
மின்னொளி மேனியன்‌ வேள்விடை யினேறி
முன்னர்வர லோடுமுனி வன்றவ மொழிந்தான்‌
சன்னதியில்‌ வீழ்ந்தறி வயர்ந்து துதிசாற்றும்‌. 10
[10. மின்னொளி மேனியன்‌ - சிவபெருமான்‌, வேள்‌ -
மன்மதன்‌, அறிவயர்ந்து - அறிவுமயங்கி.]

நின்னியலின்‌ மெய்யினொளி நிகழ்ந்து நிறைகின்றாய்‌
அன்னிய மன்னிய மிலாமலுல காணாய்‌
மின்னுமதி யங்குயிர்ப்புக்‌ கொளியினை விளைத்தாய்‌
பொன்னின்மய மேனியன்‌ பொன்னடி பணிந்தேன்‌. 11
[11. நின்னியலின்‌ - நினது இயல்பான தன்மையினால்‌,
அன்னியம்‌ - வேறுபடா நிலை.]

சித்துருவுள்‌ சித்துருவென செகம்‌ விரித்தாய்ச்‌
சத்துடனாம்‌ சத்தென வியன்றனைச்‌ சமைத்தாய்‌
மெத்து புவியிற்‌ புறமுள்ளும்‌ விரிக்கின்றாய்‌
புத்தமுத மொத்தவனே பொன்னடி பணிந்தேன்‌. 12
[12. சித்துரு - அற்புதவல்லாமை, சகம்‌ - உலகம்‌, சத்து –
சீவசத்து, வியன்‌ - அகன்ற உலகம்‌, புத்தமுதம்‌ - புதிய அமுதம்‌.]
காரண முதற்றுணைகள்‌ கற்பனைக்‌ கடந்தா
யேரணவு மாறுசுவை யின்ப நிகழ்வித்தாய்‌
ஆரண முரைக்கவரு சுகத்துருவ மானாய்‌
பூரண வரத்தநின்‌ பொன்னடி பணிந்தேன்‌. 13
[13. காரண - எல்லாவற்றிற்கும்‌ முதற்காரணமானவனே,
ஏர்‌ அணவு - அழகு தழுவுகின்ற, மாறு சுவை - வாழ்வின்‌
வேறுபட்ட அனுபவங்கள்‌, ஆரணம்‌ - வேதம்‌. பூரண –
நிறைவானவனே.]

பஞ்சநதி நாதனின்‌ பொன்னடி பலகாலு
மஞ்ச லெனுமாறு பணித்தேனெனும்‌ வாக்குத்‌
தஞ்சமனை யான்தவதி னாற்றுதி யயனாதியார்‌
நெஞ்சமகிழ்ந்தோம்‌ வரநினைத்த துரையென்றான்‌. 14
[14. அஞ்சலெனுமாறு - அஞ்சாதே என்று ஆதரவு
செய்யுமாறு, வர நினைத்தது - தோன்றிவர நாங்கள்‌
நினைத்தது. உரை - பணிந்தவுரை.]

உன்னைக்‌ கண்டிலார்‌ கண்டிலாருலகொடு தமையு
முன்னைக்‌ கண்டுளார்‌ கண்டுளாருலகொடு தமையு
முன்னைக்‌ கண்டிலேன்‌ கண்டிலேனுலகுட னெனையீன்‌
றுன்னைக்‌ கண்டிட்டுள்ளேன்‌ உலகுட னெனையே. 15
[15. மூன்னை - முன்னரே, இட்டுள்ளேன்‌ - மனத்தில்‌
இறுத்தியுள்ளேன்‌.]

உன்னைக்‌ காண்பதே பொருளாலுன்னை முன்னிகழ்ந்து
பின்னைக்‌ காண்பதே துரைப்பதே துரைத்திடாய்‌ பெரியோய்‌!
பொன்னைக்‌ கொண்டொரு நினைப்புறு மேனியாய்புனிதா
வென்னப்‌ போற்றிய கவுதமன்றனக்கு வேறிசைப்பான்‌. 16
[16. புனிதா - தூய்மையானவனே! கவுதமன்‌ - கவுதம முனிவன்‌.]

மாதவாதப நன்றுநின்‌ வாய்மொழி வாய்மை
சீதமாதப நாளினீர்‌ தீயிடைச்‌ சஞ்சரித்தும்‌
வாதமுண்டு கானமருவியுங்‌ காண்கிலார்‌ மகத்தின்‌
பேதநூறு களியற்றியும்‌ பெற்றிலா ரின்னும்‌. 17
[17. மாதவ ஆதப - சிறந்த தவத்தில்‌ சூரியனைப்‌ போன்றவனே,
வாய்மை- தூய விருப்பம்‌, வாத முண்டு - குளிகையை உண்டதால்‌,
மகத்தின்‌ - யாகாதிகளின்‌.]

நம்மைக்‌ கிட்டுவதெமது புண்ணியத்தின்‌ ஞானத்தாற்‌
செம்மைப்‌ பட்டிடுமாதலா லெமைத்தெரிசித்தாய்‌
மும்மைக்கும்‌ பயனெய்தினை மூதுலகத்தோர்‌
கிம்மைக்குப்பபன்‌ போலவன்‌ கேண்மியா வென்றான்‌. 18
[18. செம்மைப்பட்டிடும்‌ - பரிபக்குவமமையும்‌, இம்மை –
இப்பிறவி, கேண்‌மியா - கேட்பீர்கள்‌!]

ஓசை சுவைகந்தம்‌ வடியுறு களியென்று
மாசையற வேண்டு நின்னடிக்‌ கடியரோடும்‌
பாசமிக வேண்டுமுயர்‌ பஞ்சநதிச்‌ சார்வாம்‌
வாசமுற வேண்டும்‌ இஃதால்‌ வரமெனக்கே. 19
[19. ஓசை - ஒலி, கந்தம்‌ - மணம்‌, களி - மகிழ்ச்சி, மாசை –
மயக்கம்‌, பாசம்‌ - பற்றாசை, வாசம்‌ - புகழ்‌.]

முத்தி தருதின்‌ திருவையாற்றுத்‌ துறைமூழ்கிச்‌
சித்திதரு செம்பொற்‌ குறிபோற்றித்‌ தினமும்‌
பத்தியோடு மப்புல புரிக்குட பதியாயப்போ
யெத்திறனா னெவர்க்கு மமுதீந்திடவும்‌ வேண்டும்‌. 20
[20. முத்தி - மோட்சம்‌, சித்தி - தவத்திறன்‌, குறி - தத்துவக்குறி.]

இப்பதியி லப்படி யளித்திடுக வென்னிற்‌
செப்பிய புரிக்குள்‌ மணலுள்ள சிவலிங்கந்‌
தப்பில வெனக்கது தெரிந்துப சரித்தற்குமே
யப்பயன்‌ மிகுந்தது மலர்ந்திட லெண்ணி, 21
[21. இப்பதி - பஞ்ச நதீசுவரம்‌, தப்பில - தப்பவில்லை,
மேயப்பயன்‌ - பொருந்திய பயன்‌, மலர்த்திடல்‌ - தோற்றுவித்தல்‌.]

பாலமுதம்‌ நின்னது பதிக்குட்‌ பகிர்கென்னச்‌
சாலமலர்‌ மங்கையை யிருத்தினை தயாவாற்‌
காலமழை யின்றி விளைவஃகிக்‌ கடல்சூழு
ஞால மறையோர்க ளொழியாம லணுகுற்றார்‌: 22
[22. காலமழை - பருவமழை, விளைவஃகி - விளைவு
குறைந்து, மறையோர்‌- வேதியர்‌.]

ஆனமரு மத்தல துகுந்த தரிகட்கு
பானவழு தம்பகிர்‌ நல்லப்‌ பயிர்‌ வித்தில்‌
வூன்றலரிக்‌ கதிர்‌ விளைந்து தொகுமாறோர்‌
தானவயல்‌ வேண்டுமிது தக்கவர மென்றான்‌. 23
[23. மருமத்தலம்‌ - தத்துவத்தலம்‌, அதிதி - விருந்தினர்‌,
பானம்‌ - இனிப்‌பான நீர்‌, பகிர் - பகிர்ந்தளிக்கும்‌, தானவயல்‌-
தான தருமத்திற்கமைந்த நிலம்]

அவ்வியலளித்‌ தருளி யண்ணலு மறைந்தான்‌
செவ்வியெனு மவ்வகை திருத்த மொடுசெய்‌
யவ்வலன்‌ வாலரிசியாய்‌ வயல்‌ விளைக்கவ
தெவ்வியலி னோருமவ ணெய்தி யுணவேற்றார்‌. 24
[24. அவ்வியல்‌ - அவ்வாற்மைந்த நிகழ்ச்சி, செவ்வி –
காலத்தருமை, அவ்‌வலன்‌ - அவ்வாறமைந்த சிறப்பால்‌,
அவணெய்தி - அங்கே சென்று.]

பாற்றிரண்ட வன்னமுண்டை யாரடுத்த பண்பினார்‌
பேரிரண்டு முண்டெனப்‌ பிரானையன்பு பேசியே
நூறிரண்ட மார்பினார்‌ திரண்டு நோயதி னெய்துநா
ளாறிரண்டு காலமாரி யன்மையால்‌ வறந்ததால்‌ 25
[25. பால்திரண்டவன்னம்‌ - பால்‌ திரண்டதைப்‌ போன்ற
அன்னம்‌, ஆறிரண்டு - பன்னிரண்டு, காலம்‌ - வருடம்‌,]

ஆயவங்கி நின்றகுண்டம்‌ ஆம்பிதங்கி நின்றிட
தீயெழுந்‌ தெரித்த சுலவி செல்லெழுந்‌ திருத்தலால்‌
ஓய்விலாத பானலோடை கானலோடை யாயுறத்‌
தோயும்‌ வண்டொலித்த சோலைச்‌ சூரையே யொலித்ததால்‌. 26
[26. ஆய அங்கி - வேள்வித்தீ, குண்டம்‌ - வேள்விக்குண்டம்‌,
ஆம்பி - அடர்‌ பூண்டு, சுலவிட - சுற்றிலும்‌, செல்‌ - கரையான்‌
புற்று, பானல்‌ ஓலை - நீலோற்பலம்‌ மலர்ந்த நீரோடை,
கானல்‌ - வெப்பம்‌ நிறைந்த பாலை நிலம்‌; சூரை - சூரைக்காற்று.]

கொத்துமுத்து மாலைபச்சை மரகதங்‌ கொழித்தல்போல்‌
செய்த்தலைப்‌ பயிர்த்துணர்ச்‌ செறிந்தமூரல்‌ வல்சியா
லெத்திறத்த வர்க்குமின்ப வமுதமீத லாலவண்‌
மொய்த்தருத்தி யாயருத்தி னார்முதற்‌ குலத்தினார்‌. 27
[27. கொத்து - கொத்தான, செய்த்தலை - வயலின்‌ உயர்வான,
துணர்‌ - கதிர்க்கொத்து, மூரல்‌ - வெண்பற்கள்‌, வல்சி –
சிறந்த உணவு, அவண்‌ - அவ்விடத்தில்‌.]

கோடையிற்‌ குளிர்ந்தனீழ றேடிவந்த கொள்கைபோ
னாடுகாடு வாழுமக்கள்‌ நல்விலங்கு புள்ளெலாம்‌
வேடையால்‌ மெலிந்துவந்து முனிமே விருக்கைசூழ்‌
நீடுசோலைக்‌ காவிலாவி நின்றுகண்டு தயங்கினார்‌. 28
[28. வேடையால்‌ - வேட்கையால்‌, மேவிருக்கை - தங்கியுள்ள
இடம்‌. கா- சோலை, ஆவி - நீர்நிலை.]


தெருளு மேன்மை யோரியற்கைச்‌ செப்புமாறென வெம்புலிக்‌
கருளையுண்ண முலைசுரந்து கோகுலங்கள்‌ நின்றவா
லருளில்வெம்‌ புலிப்பிணாவு நாவினா விளங்குழா
முருவமுற்று நக்கிநின்‌ றொருங்குபால்‌ சுரப்பவே. 29
[29. குருளை - புலிக்குட்டி, கோகுலம்‌ - பசுக்கூட்டம்‌,
பிணா - பெண்புலி (பிணவு)]

ஆடுதோகை பாம்பினண்ட மடைகிடப்ப வமுத
மோடுசீ றெலிக்குணா வுகப்பமற்று மித்திறங்‌
கோடுகோத மின்றியொன்று போல்வகோத மத்தவன்‌
பீடுசே றிருக்கைசூழ பிறங்குகின்ற யாவுமே. 30
[30. ஆடுதோகை - ஆடுகின்ற மயில்‌, பிறங்குகின்ற –
விளங்குகின்றன.]

பனையளவு தினையளவி என்றுரைக்கும்‌ பாரில்‌
பல்லுயிர்க ளனைத்து மிடர்பசி தீர்ந்துய்ப்ப
வினையளவில்‌ வரும்வளம்போல்‌ வேலை மேய்ந்து
சினையளவி யுறையாலி செவ்விபெறப்‌ பெய்ததேயமெலாம்‌. 31
[31. பல்லுயிர்கள்‌ - அனைத்துயிர்களும்‌. மிடர்‌ - துன்பம்‌,
வேலை - கடல்‌, சினையளவி - மேகம்‌ கருக்கொண்டு,
ஆலி - மழைத்துளி, செவ்வி - பருவகாலம்‌.]

தாயருத்த முலைசுரந்து மகவுண்டாங்குத்‌ தரணிதன்னில்‌
போயருந்த முனியிருக்கையாவும்‌ புடைபிரியா வந்தணரும்‌
தேயமுறப்போதுமெனச்‌ செப்பும்போதிற்‌ சேர்ந்தவர்‌ நட்பு
நீயிரெமைப்‌ பிரியாதிங்‌ கிருத்திரென்று நிறுத்திக்கொண்டான்‌. 32
[32. மகவு - குழந்தை, தரணி - உலகம்‌, தேயமுற - தங்கள்‌
தங்கள்‌ நாட்டிற்குச்‌ செல்ல, இருத்திர்‌ - இருப்பீர்களாக]

நல்லோரைச்‌ சார்தலினால்‌ முன்புநல்லோர்‌ நன்மையகத்‌
தெய்துதலா லின்றுநல்லோம்‌
வல்லோர்‌ சொல்லிய முத்திப்பண்பு வரப்பெறுகமென
வுடனே மகிழ்ந்திடாது,
எல்லோரும்‌ அறிவிழந்து வருடமீரா நிருந்தும்‌ பயனென்னா
தேகல்மாற்றிப்‌
பல்லோரும்‌ பழிசமைக்கிற்‌ றகையாமென்று பசுவொன்று
பொய்யுருவிற்‌ படைத்துவிட்டார்‌. 33
[33. நன்மையகம்‌ - நலம்பொலியும்‌ இல்லம்‌, வல்லோர்‌ - சான்றோர்‌.]

அரிசிவிளை கழனியிற்‌ புக்கருந்திலன்னம்‌ அந்தணருக்கிட
லொழியுமப்பாற்‌ போதென்‌
றொருதிருக்கைத்‌ தண்டங்‌ கொண்டோங்குமுன்‌ வீழ்ந்‌
துயிரிழந்‌ திறப்பக்கண்‌
டுரவோயந்தோ சுரபிபுரி குலைப்பாவஞ்‌ சூழ்ந்ததுன்பாற்‌
றுருசருந்திலெனப்‌ பெயர்ந்தார்‌ தூயோன்‌ தங்கு விரைவிலா
சிவசிவ சங்கரவென்றான்‌. 34
[34. அரிசிவிளைகழனி - நெல்விளையும்‌ வயல்‌, உரவோர்‌ - முனிவர்
குலைப்பாமம்‌ - கொலைபாவம்‌, துருசு - குற்றம்‌.]

புன்றொழிற்‌ புலையரிட்ட பொய்ப்பழி கண்டுங்கேட்டு
நன்றென நகைதுத்‌ தீம்பானச்சா வருந்தவர்க்குக்‌
கொன்றிடும்‌ அன்றிப்புல்லாக்‌ கூட்டிய பாவம்போல
வென்று மாதுன்பஞ்‌ செய்யாதென முனிசாபமிட்டான்‌. 35
[35. புன்தொழில்‌ - கீழான தொழில்‌, தீம்பால்‌ - இனிய பசுப்பால்‌,
நச்சா – விடமாகுமா]

சுருதியின்‌ மிருதிநூலிற்‌ சொல்லிய வெல்லைநீங்கிச்‌
சிரவுத மாத்தந்தன்னிற்‌ சிந்தனை யவ்வாறு
யுரியவா தனையிகழ்ந்து வைதிகப்‌ புறம்பாயமெலா
பரசிவன்‌ பூசைமின்றி நரகுறு பதிதராக. 36
[36. சுருதி - சாமவேதம்‌, மிருதி - ஸ்மிருதி.]

அரனறி யயனுக்கேற்கும்‌ பத்தர்போலத்‌ தமராகி
யொருவரை நிந்தையோதி யொருவரைப்‌ பிரித்துவேறாய்‌
திருதிதல்‌ நீறுமக்க மணியுமே தேவர்க்கெல்லாம்‌
புரிதரு போதுவென்னாது புண்டராத்‌ தாராயப்போதவர்‌. 37
[37. அரனறி - அரனால்‌ அறியப்பட்ட, நிந்தை - பழிச்சொல்‌,
அக்கமணி - உருத்திராக்கம்‌.]

விறலரிக்‌ கடிமையென்று வெள்ளை மண்‌ ணெடுத்துக்கீறி
செறிதழல்‌ காய்ந்தசங்கு சங்குசக்கரந்‌ திண்டோட்சுட்டு
முறுகுவன்‌ பராய்முருட்டு மூடராய்‌ நும்போல்வாரை
நெறிவரிற்‌ சதுத்தாள்‌ தூளி நேர்பணிந்‌ திடுவீரென்றான்‌. 38
[38. விறல்‌ - வெற்றி,வீரம்‌. வெள்ளைமண்‌ - திருமண்‌,
முருட்டு - பிடிவாதச்சொல்‌.]

அரிசன மண்ணால்மின்னார்க்‌ காடவர்‌ கரசூசத்தை
தரைசெறி வெள்ளைமண்ணாற்‌ போக்குதற்கு மாலின்றோர்‌
மிரையமே சாந்தியாக நினைத்தவர்‌ நெற்றிமீது,
புரைசெயு மண்ணையிட்டுப்‌ போயினர்‌ புலையராகி. 39
[39. அரிசனம்‌ - மஞ்சள்‌ நிறம்‌, கரம்‌ - கை, சூசம்‌ - அறிகுறி,
நிரையம்‌ (நிரயம்‌) நரகம்‌.]

கெளதமன்‌ சாபத்தாலே குரவரைப்‌ பழித்தோரெல்லாம்‌
பாதகராகி மண்ணிற்‌ பரந்தபா சண்டரானார்‌
வேதபூ நெறியுநீத்து வேறுநூல்‌ கற்பித்தோதி
சாதகராகிச்‌ சில்லோர்‌ சைவருள்‌ மாறினார்‌. 40.
[40. பாசண்டர்‌ - புறசமயத்தவர்‌, குரவர்‌ - குரு.]

சாபமிவ்வாறு கூறித்‌ தாபதன்‌ திருவையாற்றுத்‌
தேவனைச்‌ சிவனைச்செம்பொற்‌ சோதியைச்‌ சேர்ந்து
தாவர வாழ்நாள்பெற்றான்‌ சதானந்த னென்னுஞ்சேவை
யாவரும்‌ மகிழப்பெற்றான்‌ சிவனருளிவனு மென்னான்‌. 41

கவுதமனத்தியாயம்‌ முற்றும்‌.
---------------------------------------

11. சதானந்தனத்தியாயம்‌

பிதாநந்தன்‌ தனக்கும்நல்கும்‌ கல்வியே பெரியோர்‌ சொல்லும்‌
நிதானந்தன்‌ தந்‌தைக்கீயு நிதிமகன்‌ குணமேயன்றோ
சதானந்தன்‌ தனக்கு மீந்தான்‌ ஓதுநற்கல்வி
யதானந்த நன்மையின்பம்‌ ஈந்தன னவனுக்கன்னோன்‌. 1
[1. நல்கும்‌ - அளிக்கும்‌, நிதிமகன்‌ - குபேரன்‌.]

கருமத்தி னியமம்பூண்ட கவுதமி கல்விசெல்வந்‌
தருமத்தின்‌ முதல்வனான சதானந்தன்‌ தாதைதாளில்‌
பொருமத்‌ தியன்பிற்பல்காற்‌ றாழ்ந்துபொற்‌ றடக்கைக்‌ கூப்பி
மருமத்தில்‌ வைத்துநின்று மனவினா வொன்றுசொல்வான்‌ 2
[2. நியமம்‌ - செய்கடன்‌ முறைமை, தாதை - தந்தை, மருமம்‌ - நெஞ்சு.]

பலமலி யுயிர்கட்கெல்லாம்‌ பற்றுக்கோ டாகிநிற்ற
லவமல தில்லைமற்றைத்‌ தவங்களும்‌ தக்கதீர்த்தஞ்‌
சிவமலிதலத்தி லாற்றில்‌ சிறந்திடு மாதலாலன்‌
னவமலி நினைவினின்ற யானொன்று நவிலக்‌ கேண்மோ. 3
[3. பலமலி - பல்வேறுபட்ட நிலைகளில்‌ பெருகிய, அவமல –
குற்றமல்ல, சிவமலி - சிவனருள்‌ பெருகும்‌.]

பூதலத்‌ தெத்தலத்துப்‌ புண்ணியம்‌ வளருமெந்த
மாதலத்‌ தஞ்செழுத்தின்‌ சித்திகள்‌ வாய்க்கு நித்தம்‌
ஓதலுற்‌ றெத்தலத்தி லுயர்ந்திடு முனக்கேயல்லால்‌
காதலுற்‌ றெவர்க்குந்தோன்றா தெனக்கது கழறுகென்றான்‌. 4
[4. பூதலம்‌ - உலகம்‌, ஐந்தெழுத்து - பஞ்சாட்சரம்‌, கழறு –
சொல்வாயாக.]

அரும்பெறற்‌ பொற்புதல்வன்‌ கூற்றுக்கக மகிழ்ந்தன்பி னெண்ணி
வரும்புது நினைவிற்‌ கேற்ற மாதலம்‌ பொன்னிசார்ந்த,
பெரும்பதி திருவையாறு பேசரும்‌ பெருமைத்தென்ன
விரும்பினு மெளிதிற்சித்தி விளைக்குமென்‌ றினையகூறும்‌. 5
[5. அரும்பெறல்‌ - அருமையாகப்பெற்ற, மாதலம்‌ - சிறந்ததலம்‌,
பொன்னி - காவிரியாறு, பேசரும்‌ - பேசுதற்கரிய]

ஒருகாதல்‌ கேடிருப்பஞ்சநதத்‌ தலத்துத்த மஞ்சீரருகா
வருகாவிரி தீர்த்தத்தி லதிக மாங்கு
வருகாதலர்‌ வந்தவ ராடினார்‌ வாசமுற்றோர்‌
பெருகாசை யறுத்தருட்‌ பேருடன்‌ பெற்றுவாழ்வார். 6
[6. காதல்‌ - விருப்பம்‌, பெருகாசை - மிகுந்திடும்‌ பற்றாசை,
அறுத்தல்‌ - விட்டுவிடல்‌, பேரு – புகழ்ப்பேறு.]

வாசஞ்செயில்‌ முத்தி யளித்திடு மாதவத்தி
லீசன்‌ பரமந்திர மெண்ணி லிருந்திறக்கிற்‌
பாசந்தவிர்‌ ஞான மளித்தான்‌ பாக்கியஞ்சேர்‌
தேசந்தரு மின்ப மருந்துதல்‌ திண்ணமன்றோ. 7
[7. வாசம்‌ - விரும்பிவாழ்தல்‌, தேசம்‌ - சிவலோகம்‌, அருந்துதல்‌ -
அனுபவித்தல்‌.]

முழுத்தச்‌ சிவலிங்கம்‌ வணங்கினும்‌ முத்திவாய்க்கும்‌
வழுத்தும்‌ புனல்மூழ்கினு மின்ப வளங்களீயும்‌
மழுத்தும்‌ பொழுது உண்ணினைவோர்க்‌ கண்மத்தலத்தி
லெழுத்தஞ்சுரு வொன்றொரு கோடியெனச்‌ சிறக்கும்‌. 8
[8. முழுத்தம்‌ - மங்கலம்‌, வழுத்தும்‌ - போற்றுதல்‌ செய்யும்‌,
புனல்‌ - காவிரி நீர்‌, மழுத்தும்‌ - தாழ்ச்சி. உண்ணினைவோர்‌ -
உள்நினைவோர்‌, உள்‌ - உள்ளம்‌, மனம்.]

நற்கால மறிந்துபுகுந்து நதிக்குள்‌ மூழ்கி
யற்கால மணிகண்‌ டனையன்போடு கண்டவர்க்கு
முற்கால னடுங்குவ அந்தணர்‌ முன்புதாழ்ந்து
நெற்காசு நிலம்போல்வ நல்கிநினைத்த துண்டாம்‌. 9
[9. நற்காலம்‌ - நல்லன நிகழும்‌ காலம்‌, முற்காலன்‌ நடுங்குவ –
முற்பட்டதாகவரும்‌ காலன்‌ நடுங்கும்படியான, நல்கி –
தானமாகக்‌ கொடுத்து.]

பஞ்சாவக னாயகா சேர்வை பலிக்கில்யார்க்கு
மஞ்சாகிய பாதகனா சனமாகும்‌ நாளிற்
தஞ்சா யுமையோ டான்வந்து தடஞ்சேவிக்க
யெஞ்சா வுபதேச மிகுத்தியருத்தும்‌ இன்பம். 10
[10. சேர்வை - வழிபாடு, அஞ்சாகிய பாதகம்‌ - பஞ்சமாபாதகங்கள்‌,
நாசனம்‌ - அழிதல்‌ தன்மை, ஆன்வந்து - இடபத்தின்மீது தோன்றி. ]

ஒரு தாபதனுண்ண வருத்திடுமோர்‌ விழுக்குக்‌
கருதாத சிவன்பதி யெய்தியக்கால்‌ மட்டும்‌
பெரிதாநல முண்பரெனிற்‌ பிறபேசி லென்னாம்‌
அரிதா மிருவற்கிடி லன்னவனாய துண்மை. 11
[11. தாபதன்‌ - தபோதன பிராமணன்‌, நலமுண்பர்‌ - நலத்தினை
அனுபவிப்பர்‌. அன்னவனாயது - அத்தபோதனனாவது.]

எப்பாதக ராயினு மப்பதி மீதிறந்தார்‌
செப்பாதவன்‌ மண்டலமூடு திறப்ப வேகி
யொப்பாகு மிராசிய மண்டலத்தூடு புக்கு
வைப்பாகுவர்‌ தலமேன்மை மதிக்க வற்றோ! 12
[12. அப்பதி - திருவையாறு, ஊடு திறப்ப - நடுவே திறக்கவும்‌,
வைப்பாகுவா்‌ - நல்லுகத்தில்‌ நிலைத்திருப்பர்‌, தலமேன்மை –
திருவையாற்றுத்‌ தலத்தின்‌ உயர்வு]

எல்லாக்‌ கருமத்தோடு சித்திக ளீவதென்றார்‌
கல்லாப்‌ பரஞான மளித்துயிர்‌ காப்பதென்றா
நல்லார்க்‌ கதுபோ லுளதோ பிறந்தனீயுஞ்‌
செல்லாச்‌ சுகமுண்டிட நற்றவஞ்‌ செய்யென்றான்‌. 13
[13. கருமம்‌ - நற்செயல்கள்‌; கல்லா - பயிறசி பெறாத,
செல்லாச்சுக - அழியாத சுகம்‌.]

ஆனந்த முனித்தவ னித்திற னத்தனேவ
ஞானந்தரு பஞ்சநதிப்பதி நண்ணி நன்னீர்‌
பானந்தரினும்‌ பரிசிக்கினும்‌ பார்க்கி னுஞ்சீர்‌
வானந்தரு காவிரியாடி மகிழ்ந்து புக்கான்‌. 14
[14. காவிரியாடி - காவிரி நதியில்‌ நீராடி, புக்கான் –
கோயிலினுள்‌ சென்றான்‌. ]

முக்கால்‌ வலம்‌வந்து பணிந்துமுன் னான்குகாலம்‌
எக்காத லரும்புவி தீர்ப்பொடு விம்மிமுன்போய்த்‌
தக்காய்‌ சரண்சரணென்று தடங்கை கொட்டி
நெக்காடி நின்றாடு கணீர்வழி மார்பினின்றான்‌. 15
[15. முக்கால் - முக்காலமும்‌, கணீர்‌ - கண்நீர்‌, வழி - வழியும்‌,]

கறவைப்‌ பயிரிகின்ற புனிற்றிளங்‌ கன்றுநீங்கி
பறவைக்‌ குழுவானதி யாடிய பண்புபோலுஞ்‌
செறிவிற்‌ கொடியாடிய கோபுரத்‌ தெற்குவாயி
லறவைப்பெனு மன்னதி யுத்தரமாக வெய்தி 16
[16. கறவை - பால்பசு, அறவைப்பு - அறநிதி, உத்தரம்‌ - வடக்கு.]

வலத்தா லுளமடக்கி யரைக்குறவா வைத்திடத்‌
தலத்ததாக நிறுத்தி னிமிர்ந்து இருகைகணீட்டி
யலர்தாமரை கூப்பிய போல்மிசை யஞ்சலித்து
நலத்தா மொழியக்‌ கரமஞ்சும்‌ நவின்றுநின்றான்‌. 17
[17. மிசை - தலைக்குமேலாக, அஞ்சலித்தல்‌ - இருகை கூப்புதல்‌,
அக்கரமஞ்சும்‌ - பஞ்சாக்கர மந்திரமாகிய ஐந்தெழுத்தினையும்‌,
நவின்று - சொல்லிக்‌ கொண்டே, நலத்தாமொழி - நலம்‌ தரும்‌ சொல்‌.]

நிற்றற்றொழில்‌ பூசனை நேசுறு நேரமல்லால்‌
மற்றப்பொழுதித்‌ தவமோர்‌ வருடம்‌ புரிந்தான்‌
அற்றதி னளிக்கும்‌ அருட்கட லாதலாலே
நற்றத்து வனத்தவனுக்‌ கெதிர்நுண்ண லுற்றான்‌. 18
[18. நேசுறு - அன்பு பொருந்திய, அற்றதினளிக்கும்‌ - பற்றற்ற
நிலையில்‌ அருள்‌ பாலிக்கும்‌, நற்றம்‌ - நற்குணம்‌.]

சித்தியோகச்‌ சதானந்தன்‌ சிந்தையிற்‌
பத்திசோதித்தருள்‌ பான்மையால்‌ முதற்‌
றத்துவம்யாவுமாய்த்‌ தோன்றும்‌ தன்மையோ
னுத்தமனிந்திர வுருவிற்‌ றோன்றினான்‌. 19
[19. சித்தியோகம்‌ - குறிக்கோளுடன்‌ புரியும்‌ யோகம்‌,
பான்மை - முறைமை, உத்தமன்‌ - சிவபெருமான்‌.]

உழைமழு மறைத்துவஞ்ச சிரமமும்‌ பலவன்‌
கழைபொரு முகம்பொரு படையுங்‌ கைக்கொள்ளாத்‌
தழைசெவி மழை மத்தகருட்‌ செம்புக்காப்‌
புழைமலி தடக்கைவெண்‌ பொருப்பி லேறினான்‌. 20
[20. உழை - மான்‌, மழு - மழுவாயுதம்‌, வெண்‌ பொருப்பு –
ஐராவதம்‌ என்னும்‌ யானை; வஞ்சசிரமம்‌ - வச்சிராயுதம்‌.]

பொன்மலி மவுலியும்‌ புனைந்த பட்டமும்‌
பண்மணிக்‌ கடகமும்‌ பசும்பொன்‌ மாலையும்‌
மன்மணிக்‌ குழைகளும்‌ வயங்கத்‌ தோன்றினான்‌
மின்மினிக்‌ கொடிகள்சூழ்‌ மேகம்‌ போலவே. 21
[21. மவுலி - சடைமுடி, பட்டம்‌ - நெற்றிப்பட்டம்‌, மன்மணி –
இரத்தினம்‌]

பாங்கமர்‌ மரகத வண்ணம்‌ பையவந்‌
தாங்குடல்‌ முழுவதும்‌ மளவிற்‌ றாலென
ஓங்கொளி யொளித்தலி னுருவு பச்செனத்‌
தாங்கினன்‌ வண்ண மவ்வாறே தாங்கினான்‌. 22
[22. பாங்கு - பக்கம்‌, வண்ணம்‌ - நிறம்‌.]

ஊழிதோ றூழிதோ றுதித்த நாளெலாம்‌
ஆழியா னாழிகேட்‌ டருச்சித்‌ திட்டகண்‌
வாழியாய்‌ மெய்யெல்லாம்‌ வயங்கிற்‌ றென்னவெண்‌
பூழியா னாயிரங்‌ கண்ணும்‌ போற்றினான்‌. 23
[23. ஊழி - படைத்தவுலகம்‌ அழியும்‌ காலம்‌, ஆழியான்‌ - பாற்‌கடலில்‌
பள்ளி கொண்ட திருமால்‌, ஆழி கேட்டு - சக்கரப்‌ படையைப்‌ பெற
வேண்டி, வயங்கிற்று - விளங்கியது. பூழியான்‌ - திருநீறுடையானான சிவபெருமான்‌.]

பூமரு தாரினான்‌ அயிர்‌ பூட்கைமேற்‌
சாமரைத்‌ திரளிடைத்‌ தோற்றுந்‌ தன்மைதான்‌
தேமரு கடற்கண்‌ செவ்வித்‌ தெண்டிரை
காமரு கற்பகங்‌ கண்டால்‌ போலுமே. 24
[24. பூமரு - மணப்பூக்கள்‌ பொருந்திய, தார்‌ - மாலை, அயிர் –
அயிராவதம்‌, பூட்கை - முகபடாமணியும்‌ யானை, காமரு - விரும்பத்தக்க.]

குரிசி லூரயிர வெங்குஞ்‌ சரத்தினுக்‌
கிருமருங்‌ கரம்பைய ரிரட்டு சாய்மரை
சொரிமத விருந்துணப்‌ புவிச்‌ சுரும்புகள்‌
மருவலி னவைபுகா வகைதடுத்த தே. 25
[25. குரிசில்‌ - ஆசாரிய முனிவர்‌, கரம்பையர்‌ - தேவநாட்டிய
மங்கையர்‌, சுரும்புகள்‌ - கருவண்டுகள்‌.]

செங்க ணாயிரவன்‌ வந்தெய்தச்‌ சிந்தையைத்‌
தங்கணாய கரடிக்‌ கமைந்த தன்மைபோல்‌
அங்க ணாதரவுடனே திறந்‌ தரிச்சனை
புங்கவ ரதிபனடி புரிந்து போற்றினான்‌. 26
[26. செங்கணாயிரவன்‌ - இந்திரன்‌, அங்கண்‌ - அழகியகண்கள்‌,
புங்கவர்‌ - தேவர்கள்‌, அதிபன்‌ - இந்திரன்‌.]

மூவரினால்‌ வராய்‌ மொழிய நின்றநீ
மேவாக்‌ கருமமென விளம்பிக்‌ காண்கெனத்‌
தேவருக்‌ கரசனீ செய்யு மாதவ
மோவாப்‌ புகுந்தன முறையென்‌ றோதினான்‌. 27
[27. மூவர்‌ - சிவன்‌ பிரமன்‌ திருமால்‌, நால்வர்‌ - சிவபெருமான்‌
இந்திரவடிவமாகிய வடிவொடு நால்வர்‌, ஓவா - நீங்காமல்‌.]

நன்று நின்வரத்தருள்‌ நயந்த தாயினு
மின்று நானினைத்த தெம்பிரானை யென்றன்‌
நின்ற னிசையப்பொருள்‌ யாது நேர்பட
வென்றேவா துறினு மென்னியம்‌ பென்றானரோ. 28
[28. நயந்தது - அன்புசெய்தது, ஏதுறினும்‌ - எச்செயலாயினும்‌,
இயம்பு - சொல்லுக.]

சிவனிடத்‌ தன்புவைக்குஞ்‌ சிந்தையான்‌ விரும்பிநின்றே
னவனிடத்ததது ஃகுதுங்கேட்பேனல்‌ துணைக்‌ கேள்நீயே
நவனினைத்தொன்று தந்தாயாயினு நயந்து கொள்ளேன்‌
புவனிற்‌ பிறர்க்குவேண்டும்‌ பொருள்‌ கொடுத்‌
தகல்கவென்‌ றான்‌. 29
[29. உஃகுதும்‌ - மனம்‌ மயங்குகின்றேன்‌, நவனினைத்தது –
நவநிதியினை ஒத்ததொரு செல்வம்‌, நயந்து - விரும்பி, அகல்க‌ -
நீங்குக.]

உனக்குநல்‌ வரங்கள்‌நல்க வந்தயா னுலகில்வேறு
மனக்குறை தீர்ப்பதுண்டோ வல்லையாம்‌ போகுமுன்னம்‌
நினைத்திருக்கு நீங்கிக்‌ கேளேன்‌, நிற்றலோடுங்‌
கனத்திட னுடையபத்திக்‌ கவுதமியொன்று கூறும்‌. 30
[30. நல்க - தருதற்கு, நினைத்திருக்கு நீங்கிக்கேளேன்‌ - நினைத்திருக்கும்‌ எண்ணத்திலிருந்து நீங்கி மற்றொரு வரம்‌ கேட்பாயாக.]

திருவையா றுடையான்றானே திருவுள மகிழ்ந்து தந்தார்‌
தருமிதான்‌ பசுத்தான்‌ புள்ளின்‌ கிளைகடா மேனுமாவே
னொருவனீ வலிதினல்கி னுலகமூன்‌ றளவுமின்பந்‌
தருபத மேனும்வேண்டே னென்றனன்‌ தவத்தின்மிக்கோன்‌. 31
[31. கிளைகள்‌ தாமேனும்‌ - சுற்றமாவதாயினும்‌.]

மாதுமைப்‌ பாகனான வள்ளலை வேண்டிலன்றிச்‌
சீதனயனோ டுன்னைத்‌ திருவள முத்திவேண்டேன்‌
நாதனதாணைத்‌ தாங்கி நரகினுளேனும்‌ வாழ்வே
ஓதுவ தொழிகபோக வும்பர்க்‌ கரசனென்றான்‌. 32
[32. மாதுமைப்‌ பாகன்‌ - சிவபெருமான்‌, சீதன்‌ - திருமால்‌,
அயன்‌ - நான்‌முகன்‌.]

அகத்தமா மகிழ்ச்சிபொங்க வாயிரங்‌ கண்ணுஞ்செப்ப
முகத்தொரு மூன்றினுக்குந்‌ தேவர்க்குந்‌ தலைவனாமென்‌
சகத்தொரு மூன்றினுக்குந்‌ தேவர்க்குந்‌ தலைவனாமென்‌
மகத்துவ மறியாய்க்கண்டு மதிக்கிலாய்‌ மோகம்போலும்‌. 33
[33. அகத்த - மனத்திடத்தில்‌, சகம்‌ - உலகம்‌, மகத்துவம்‌ -
தெய்வாற்புதம்]

சுடலையே வீடாய்ப்பிச்சைச்‌ சொன்றியுண்டு மைத்தம்பு
நடலையெனப்‌ பணிந்துமாலை நகுதலை யேந்திப்பித்தா
யுடனிரு வாணியாகும்‌ ஒருவன்‌ மோகத்தினாலே
கடவுளர்‌ துறக்கத்தின்பங்‌ கவுதமி யிழந்தாயந்தோ. 34
[34. சொன்றி - சோறு, மோகம்‌ - பற்று, துறக்கம்‌ - மோட்சம்‌.]

மோகத்துத்‌ தவறுவேண்டி முயன்றனை யந்தோவந்தோ
ஆகத்துக்‌ குணமொன்றில்லா னவனிடத்‌ தன்மைவிட்டுப்‌
போகத்துச்‌ சித்தம்வைத்தெம்‌ புறந்தனி லளவிலின்ப
போகத்துக்‌ குணமுளெம்பா லன்புவைத்‌ துறுதியென்றான்‌. 35
[35. மோகத்துத்தவறு - ஆசையால்‌ வருகின்ற குற்றம்‌, ஆகம்‌ -
உள்மனம்‌, போகம்‌ - சுகபோகம்‌.]

சார்வினர்‌ சார்ந்தவாக்குத்‌ தருவது தத்தஞ்செல்வச்‌
சீரலத்திக மில்லை யாதலாற்‌ சிவனைவேண்டி
போவருமிடியே யல்லார்‌ பிறவிலை யெம்மைவேண்டி
லூர்திரு வளருஞ்செல்வ முண்மையே யுணர்த்தியென்றான்‌. 36
[36. சார்வினர்‌ - தன்னைச்‌ சார்ந்தவர்‌, தத்தம்‌ - தங்கள்‌ தங்களது.]

பிணஞ்சுடு புகைமலிந்த சுடலையிற்‌ பேயும்பூதக்‌
கணங்களு மிணங்கமாண்ட நீறுட லஞ்சல்பூசி
உணங்கழி தலையுமென்பு மாலையாய்‌ நிமிரவேந்தி
துணங்கையங்‌ காளிமாதர்‌ தோகத்‌ தாடுவாரே. 37
[37. மாண்ட - மாட்சிமையுடைய, உணங்கழி - தசை கழிந்த,
நிமிர - நிறைவாக, துணங்கை - துணங்கைக்‌ கூத்து,
தோகம்‌ - ஒப்பானதால்‌]

உடைகரித்‌ தோலாபித்தருள்‌ மத்தமறு கெருக்கந்‌
தொடையலங்கார தீண்டிற்‌ சுட்டிடு நெருப்புமெய்யா
கடைதோறு மிரக்கமுணர்க வாலியா நிருவாணத்‌
தாடிருள்‌ மருவாகங்கை வெள்ளமே சுமக்குநீரார்‌. 38
[38. உடை - அரையாடை, கரித்தோலாம்‌ - யானையின்‌ தோலம்‌,
மத்தம்‌ - ஊமத்தைப்பூ, அறுகு - அறுகம்‌ புல்‌, எருக்கந்தொடை –
எருக்கம்பூ மாலை, கடை - வாயில்‌, வாலியா - இளமையோடு.]

முருக்கிய சினத்தீக்கையர்‌ முரணுடை மூன்றுகண்ணா
ரருத்தினு லேறிப்பாந்த ளேந்துவ ரின்னவாற்றா
லுருத்திர யெனுலகமுற்றார்க்‌ குலப்பிலா மிடியேமற்றித்‌
திருத்தகு செல்வமில்லை செல்வநீ, தெரியாய்போலும்‌! 39
[39. முரணுடை - மாறுபாடுடை, அருத்தினில்‌ - கழுத்தில்‌,
இன்னவாற்றல்‌ - இவ்வாறான ஆற்றலுடைமையான்‌, உலப்பிலா - என்றுங்குறைவுபடாத.]

என்னிடத்‌ தன்புவைக்கு மியல்பின ரின்பங்கூறிற்‌
பொன்னுல கத்துத்தேவர்‌ விஞ்சையர்‌ புடைசூழ்ந்தேத்த
முன்னிநிற்‌ பளவிற்சிந்தா மணிநிதி முழுதுநல்கப்‌
பன்னரு மகிழ்ச்சிபொங்கப்‌ பருகுவ ரமுதவெள்ளம்‌. 40
[40. பொன்னுலகம்‌ - தேவருலகம்‌, விஞ்சையர்‌ - வித்யாதரர்‌,
சிந்தாமணி நிதி - வேண்டியவெல்லாம்‌ அளிக்கும்‌ தெய்வமணி,]

தேமரு நறியதண்பூங்‌ கற்பக நீழல்சேர்ந்து
கோமளக்‌ குமுதச்செவ்வாய்‌ கொடியிடை யரம்பைமாதர்‌
மாமது வள்ளத்தேந்த வாயமுத முடனேமாந்திப்‌
பூமலர்ச்‌ சேக்கைவைகு புலவியின்‌ புணர்ச்சியுண்பார்‌. 41
[41. தேமரு நறிய தண்பூ - தேன்‌ பொருந்திய மணமுள்ள குளிர்ச்சியான
பூக்கள்‌, கோமளம்‌ - ஒப்பற்ற அழகு, குமுதச்‌ செவ்வாய்‌ - அல்லி
மலரிதழை ஒத்தச்‌ சிவந்த இதழ்களோடு கூடிய அழகியவாய்‌, மாமது –
சிறந்த மது, வள்ளம்‌ - பொற்கிண்ணம்‌, வாயமுது - மங்கையர்‌ முத்தம்‌,
சேக்கை - மென்‌மையான படுக்கை, புலவி - காமக்‌ கலவி.]

அரம்பை மென்கைத்‌ திலோத்தமை யுருப்பசியாதிக்‌
கரும்பனார்‌ முலைதோள்‌ போர்க்‌காம வாரிதியில்‌
வரம்பிலின்பம்‌ நெஞ்சுருகி யொன்றாகுவர்‌ மதித்து
விரும்புகின்‌ றதாம்‌ செல்வமேல்‌ வேண்டுதியென்றான்‌. 42
[42. உருப்பசி - ஊர்வசி, தேவலோகத்து ஆடல்மகள்‌, கரும்பனார்‌ -
காமவின்பச் சுவைக்குக்‌ கரும்பையொத்த இனிய மகளிர்‌, வாருதி –
பெருங்‌கடலில்‌, விரும்புகின்றதாம்‌ - நீ விரும்புகின்றதாகிய.]

மகவா னுரைக்‌ கேள்வியின்‌ வந்து மனம்‌
புகுவா ரழல்‌வேல்‌ புகல்‌போல்‌ விதிர்த்து நெஞ்சில்‌
தகவா விஃதென்ன தென்று தடங்கை இரண்டானும்‌
மிகவார்‌ செவிமூடி முன்னாய்‌ விளம்புகின்றான்‌. 43
[43. மகவான்‌ - நூறுயாகங்கள்‌ செய்தவனான இந்திரன்‌, அழல்‌
புகுவார்‌ வேல்‌ புகல்‌ போல்‌ - தீயில்‌ புகுந்தாரின்மேல்‌ கூரிய வேல்‌
புகுந்ததைப்‌ போன்று விதிர்த்து - நடுநடுங்கி, தகவா - தகுதியில்லாத.
மிகவார்‌ - மிகவும்‌ நீண்ட.]

நன்றிந்திர நன்று நவின்றதுநீ
யெனனிந்திர வெண்ணிணை யெம்பெருமா
னொன்றின்‌ திருவிள்ளனுமக்குள தென்‌
றன்றுஞ்‌ சொனினைக்கு மாசியாமால்‌. 44
[44. நவின்றது - கூறியது. எம்பெருமான்‌ - சிவபெருமான்‌, திருவிள்ளல்‌ - மேன்மையைப்‌ பேசுதல்‌, உமக்கு உளதென்று அன்று - உமக்கு
உளதாமென்பது இல்லை, உம்சொல்‌ - உமது சொற்கள்‌, மாசியாமால்‌ - குற்றமுடையதாகும்‌.]

நிந்தித்தனை பற்பல தீயதனுட்‌
சிந்தித்தல வோர்மொழி செப்பினையா
லெந்தக்குணமு மிலனென்‌ றனையொன்‌
றந்தப்‌புகழ்‌ மெய்மை யறைந்தனையால்‌. 45
[45. நிந்தித்தனை - இகந்து பேசினை, எந்தக்‌ குணமிலனென்றனை –
சிவபெருமானுக்கு எந்தக்‌ குணமும்‌ இல்லை என்று கூறினை, மெய்மை –
இது உண்மையாகும்‌.]

வளமைத்‌ திருவிலழகேச னென்னுங்‌
கிளவிக்‌ கெதிரேது கிளத்திடுவோ
முளநட்‌ பன்னான்‌ பினுத்திரதக்‌
களகைக்‌ கிறை செல்வ மறிந்திலையே. 46
[46. அழகேசன்‌ - குபேரன்‌, அளகை - அளகாபுரி இறை - இந்திரன்‌.]

திருமாலையி னீதிசைப்‌ பாலரெலாந்‌
தருமார்வ னல்கிய தன்மையினார்‌
பெருவாழ்வுறு வீரது பேதையுனக்‌
கொருமால் கொளமறந் திவணோதினையே. 47
[47. தரும்‌ ஆர்வம்‌ நல்கிய - தருகின்ற ஊக்கம்‌ தந்தருளிய ஒருமால்‌ -
ஒப்பற்ற மயக்கம்‌, இவண்‌ - இவ்விடத்தில்‌ ஓதினை - கூறினை.]

சூரந்தக னாதியர்‌ தொல்‌ சமரால்‌
நிரந்தர மெய்த்திரு நீங்கிய நாள்‌
தரந்தக வாங்கி யவர்க்‌ களித்தவனோ
வரந்தரு திருவற்றவன்‌, உண்மை கொலோ! 48
[48. சூரன்‌ - பத்மாசூரன்‌, அந்தகன்‌ - இயமன்‌, மெய்த்திரு –
தங்கட்குரிய உரிமைச்‌ செல்வம்‌, தரத்தக - உள்ளவாறே,
உண்மை கொல்‌ - இது உண்மையாகுமா? ஓ- அசைச்‌ சொல்‌.]

தானே யொளியா யுலகந்‌ தருவா
நூனேய்‌ குணத்தி னொருத் தனுமாய்‌
வானேய்‌ பாரபரன்‌ வாய்மை யினாற்‌
கோனே குணமின்மைக்‌ குறித்த னையே? 49
[49. தானே யொளியா யுலகந்‌ தருவான்‌ - தானே ஒளி உருவாய்‌ நின்று உலகங்களை இயங்கச்‌ செய்பவனாகிய ஈசன்‌, “வானாகி மண்ணாகி
வளியாகி ஒளியாகி” என்னும்‌ திருவாசகவுரை இவ்வடிக்குப்‌ பொருந்தியதாம்‌. கோனே – தேவர்கட்கரசே.]

மாலாதிபர்‌ தக்கன்‌ மகத்துணலான்‌
மேலாலட வீரனை விட்டுமதாம்‌
பாலார்‌ புகழ்‌வன்மை பரித்தவனைப்‌
போலா மிடியென்று புகன்றதுவே. 50
[50. மால்‌ ஆதிபர்‌ - திருமால்‌ முதலாயினோர்‌, மகத்துணலால்‌ - தக்கன்‌ செய்யாகத்தில்‌ அவிப்பாகம்‌ உண்டாதனால்‌, அடல்‌ வீரனை –
வெற்றித்திறன்‌ படைத்த வீரனாகிய வீரவாகு தேவரை,
மிடியென்று - வறுமைத்துன்பம்‌ படைத்தவனென்று, புகன்றது - கூறியது?]

சிவசங்கர சம்புவெனுஞ்‌ செயலால்‌
வசங்கெழு புன்மை யறுத்‌தழியாக்‌
கவசம்‌ பெறுசீர்தரு காட்சியளித்து
வசந்தரு மாட்சிநீ துணிகில்லையரோ! 51
[51. சிவன்‌ - எல்லாமாகியுள்ளவன்‌, சங்கரன்‌ - நலமெலாமளிப்பவன்‌,
சம்பு - அரிய காலத்தில்‌ வந்து அருள்‌ பாலிப்பவன்‌, புன்மை - அற்பமான
சிந்தனை; மாட்சி - மேலான அருள்‌.]

கையெழ கடல்வாரி யகற்றவனைப்‌
பொய்யேதுமிலாப்‌ பத்தர்‌ புறத்துடையா
னெய்யேது மறிவற்றிறையோ யவணீ
மெய்யே திருவின்மை விளம்பியதே! 52
[52. கையெழ - அங்கையில்‌ அடங்க, பத்தர்‌ - சிவனுக்கன்பு செய்த
பக்தர்‌. (அடியார்கள்‌) எய்யேது - அடையும்‌ உபாயம்‌, ஏதும்‌ அறிவற்று இறையோய் - எத்‌தகைய அறிவுமில்லாமல்‌ இந்திரனே.]

கரி தேர்பரி பொன்றெதிர்‌ கண்டவரைப்‌
புரி பூசனையிற்‌ பெறு புண்ணியரென்‌
றரியோர்‌ புகல்‌ வாய்மை யறிந்திலையோ
பெரியோயறிவிற்‌ சிறுபிள்ளை கொணீ. 53
[53. கரி - யானை, பரி - குதிரை, அரியோர்‌ - திருமால்‌ முதலாயினோர்‌,
புகல்‌ - புகழ்ந்து சொல்லுகின்ற வாய்மை - இறையுண்மை, கொள்‌ நீ - கொண்டுள்ளாய்‌ நீ சிறு பிள்ளை - சிறுபிள்ளைக்குரிய அறியாமையினை.]

ஈசன்‌ திருவெண்ணி யிகழ்ந்தனையங்‌
காசன்றியவன்‌ பருமத்‌ திறமே
தேசொன்றுவ ரென்று சிரித்தனைநன்‌
றேசன்றி யிருந்தமை யெண்ணிலையால்‌. 54
[54. திரு - திருவருளை, ஆசன்றி - குற்றமில்லாத, பருமம்‌ - ஆற்றல்‌
மிகு வலிமை, தேசு – கவர்ச்சித்தன்மை]

பேய்‌ நட்பினனென்று பிதற்றினை நீ
தீய நுட்பினர்‌ வந்தடி சேர்ந்திடினுந்‌
தாயொப்பனெனுந்‌ தகை சற்றறியாய்‌
நீயற்ப விணக்கம்‌ நினைத்தனையே. 55
[55. பேய்‌ - சுடலையில்‌ ஆடும்‌ பேய்கள்‌, நுட்பினர்‌ - வஞ்சகர்கள்‌,
தகைமை - மேலான நன்மை, அற்பம்‌ - எளிதான இணக்கம்‌ -
செயற்பாட்டினை, சுடலையில்‌ ஆடும்‌ பேய்கள்‌, நுட்பினர்‌ -
வஞ்சகர்கள்‌, தகைமை - மேலான நன்மை, அற்பம்‌ - எளிதான இணக்கம்‌ - செயற்பாட்டினை,]

அண்டங்கள்‌ காத்து அவையாக்கியெடுத்‌
துண்டங்கு உமிழ்‌ வெற்றியுணர்ந்திலைஓர்‌
முண்டந்தகு பூதமுயக்கறியா தன்மையது
விண்டிங்‌ குரைசெய்தனை விண்ணுடையாய்‌. 56
[56. அண்டங்கள்‌ - உலகங்கள்‌ யாவையும்‌, பூதமுயக்கு - பூதங்களின்‌
இணக்கம்‌, விண்டிங்கு உரை செய்தனை - பலவாறு பேசி இங்கு
வார்த்தை யாடினை.]

சுடலைச்‌ சுரமாவது சூதகமா
கடவுட்‌ குழு வெந்தழி கானகமாம்‌
விடலைச்‌ சுடர்விட்ட விளக்கொளியா
லடலைப்‌ பொடி பூசியதா மறிகிலையே. 57
[57. சுரம்‌ - வெஞ்சுரம்‌, சூதகமா - சூதகமாகிய மாமரம்‌, கடவுள்‌ குழு -
செத்துப்‌ பிறக்கின்ற தெய்வக்‌ கூட்டம்‌, அடலை - சாம்பல்‌.]

நின்போலிய மாலயன்‌ நிந்தனையா
லென்போடு முடித்தலை யீர்ந்தணிவோன்‌
பின்‌போத மறந்து பிழைக்குவரென்‌
றன்போட வனுண்மை யறிந்திலையோ? 58
[58. நின்போலிய - உன்னைப்‌ போன்று அறியாமை மேவிய,
மாலயன் - திருமாலும்‌ பிரமனும்‌, பின்போத - பின்னாகத்‌
தொடர்ந்து இரந்து செல்ல.]

பெண்ணாடலை வென்றிடு பெற்றியெலா
முண்டான வருவித்தென வோர்ந்திலையோ
வெண்ணாதொரு காளி யெதிர்ந்திடவாது
தன்னா லரிகாணவ வனாடியதே. 59
[59. பெண்ணாடலை - பெண்களால்‌ ஆடப்பெறும்‌ நடனத்தை அருவித்து - அருமையான இயல்பாகும்‌, வாது - போட்டி, அரி - திருமால்‌. ]

அருவெங்களி றஞ்சலை யஞ்சலையென்‌
றொரு மங்கையுமஞ்ச வுரித்திடுநாள்‌
சருமம்‌ புனைகென்றிசை யாற்றிய நீ
கருமம்‌ கொல்மறந்தனை காவலனே. 60
[60. அருவெங்கரி - அரிய கொடிய யானைய சூரன்‌, ஒரு மங்கை –
உமாதேவி, சருமம்‌ புனை - உடலின்‌ மேலாடையாக அணிந்து கொள்வீர்‌,
இசை - சொல்லிய, கருமம்‌ கொல்‌ - உனது தீவினையோ! காவலனே –
தேவலோகக்‌ காவலனாகிய இந்திரனே.]

மெச்சிக்‌ கமலத்தன்‌ விதந்திட வந்து
உச்சித்தலை கொண்டரி யொண்ணுதல்‌நீ
ரச்சத்துட னேற்றவ னாடின்னாற்‌
பிச்சைத்‌ தழல்‌ பிச்சரெனப்‌ பெரியோய்‌! 61
[61. கமலத்தன்‌ - பிரமன்‌, தழல்‌ - நெருப்புச்‌ சுடர்‌, பிச்சர்‌ - பிச்சிப்‌
பூமாலை உகந்தவர்‌.]

கந்தக்‌ களிமால்‌ மலர்‌ கட்டி நறைச்‌
சந்தத்துட னேத்தினுந்‌ தாழ்‌ சடைமே
லெந்தத்‌ துணர்‌ சாத்தினு மின்புறுமா
லந்தப்புனை தரலறு காதியினா லாகும்‌. 62
[62. கந்தக்களி - மணத்தை விரும்பி மகிழ்கின்ற, மால்‌ - திருமால்‌,
நறை - தேன்‌, சந்தம்‌ - சந்தன மலர்‌, ஏத்தினும்‌ - துதித்துப்‌ போற்றினும்‌,
புனை- கட்டப்பட்டமாலை, துணர்‌ - மணமுள்ள மலர்க்‌ கொத்து, அறுகு - அருகம்புல்‌.]

நெருப்பா முரு வென்றனை நிந்தயையால்‌
விருப்பா ரன்னாரன்ன மேலொரு நா
ளுருப்‌பா ரகமோத வுயர்ந்‌ தகன்ற
பொருப்பான துணர்ந்திலை பொய்த்திடுவோய்‌! 63
[63. நிந்தனை - பழிச்சொல்‌, உருப்பார்‌ அகம்‌ ஒத - அங்கங்கள்‌
பொருந்திய வேதமந்திரத்தைச்‌ சொல்ல, பொருப்பு – மலை]

நீராண்மையின்‌ மேன்மை நினைத்திடலாற்‌
பேராண்‌ வருமென்றொரு பிச்சைக்கவர்ந்தாரா
வுண்வோனை அகங்கள்‌ தோறும்‌ ஓராய்‌ பலி
யுண்பவ னென்றனையே உண்மை காணாய்‌! 64
[64. ஆண்மையின்‌ மேன்மை - ஆண்தன்மையின்‌ உயர்வு, பேராண் -
பெருமை தரு ஆண்‌ தன்மையோடு; பிச்சைக்‌ கவர்ந்தாரா - தாருகாவனத்து இருடிகள்‌ மனைவியர்களிடும்‌ பிச்சையினை ஏற்றாராக, உண்வோனை - அவர்கள்‌ உள்ளத்தினை கவர்ந்துண்டவனை, ஓராய்‌ - உண்மைத்‌
தன்மையினை அறியாதவனானாய்‌.]

வன்மாதவர்‌ மாதவர்‌ சோதனையாற்‌
றன்‌தாரழற்‌ கால்‌வரு தன்மையெனாய்‌
கன்மாம லரான்‌ கவாலியெனா
முன்‌மானி ருவாணம்‌ மொழிந்தனையே. 65
[65. வன்மாதவர்‌ - வலிமை மிக்க சிறந்த தவத்தைச்‌ செய்தவர்‌, தன்தார்‌ -
தனது கொன்றை மாலையின்‌, அழற்கால்‌ - தீக்‌கொழுந்து, கன்மா
மலரான்‌ - பிரமன்‌, கவாலி - (கபாலி) கபாலமாக மண்டையோட்டை
ஏந்தியவன்]

ஆலந்தனையுண்‌ டமுதுண்ணவுமக்‌
கோலந்‌தவிர்‌ வித்துந்‌ தொள்ளிழையார்‌
கோலங்‌ குறையாது கொடுத்தவனுக்‌
கேலுங்‌ கரைப்புனமறுகு வென்றதுவே. 66
[66. ஆலம்‌ - விடம்‌, ஒள்ளிழையார் - மகளிர்‌, கோலம்‌ - இளவயதழகு,
ஏலும்‌ - ஏற்புடையது, அறுகு - அறுகம்புல்‌. என்றதுவே - என்று
இகழ்ந்து கூறியது]

மங்கைக்‌ கரசம்பிகை வாழுகின்றவாய்ச்‌
செங்கைப்‌ பெறுவோனைத்‌ திரண்டுலகம்‌
பொங்கப்‌ படும்‌ நீர்‌ புனையா விடும்போது நீ
ரெங்குற்றினீர்‌ கங்கையு மெண்ணிலோரால்‌. 67
[67. அம்பிகை - மங்கையர்க்காசியென்னும்‌ அம்பிகை, வாய்‌ -
ஆலவாய்‌, (மதுரை) செங்கைப்‌ பெறுவோனை - சிவந்தகைளில்‌
பொற்றாளம்‌ பெற்றோனாகிய ஞானசம்‌பந்தப்‌ பெருமானை,
பொங்கப்படும்‌ நீர்‌ - பெருகி வரு வையையாற்று நீரில்‌, புனையா –
எதிரேலும்‌ தெப்பமாகத்‌ திருமந்திரப்‌ பதிகமார்ந்த ஓலையை,
எங்குற்றிணீர்‌ நீர்‌ - எங்கே இருந்தீர்‌]

ஏந்துங்கனல்‌ விட்டிடி லெவ்வுலகுங்‌
காந்துங்‌ கடனீர்‌ சகுவறுங்‌ கடைநா
ளாத்துங்க மடக்கிய வாற்றியாய்ச்‌
சீந்துங்‌ கனலாற்‌ குறை செப்பினையே. 68
[68. ஏந்துங்கனல்‌ - ஒருகையிலேந்திய தீச்சுடர்; காந்தும்‌ - சுட்டெரிக்கும்‌,
கவறும்‌ - வற்றிப்‌ போகும்; கடை நாளாம்‌ - ஊழிக்காலமாகும்‌,
துங்கம் – அழகு; வாற்றியாய்‌ - ஆற்றலுடைய இந்திரனே,
சீந்துங்கனலால்‌ - பற்றாக்கும்‌ பொறாமைக்கனலால்‌.]

எங்குந்‌ திருமேனி யெனச்‌ சுடர்‌ மூன்‌
றங்குங்‌ கறிவிப்ப கணத்திறனோர்‌
பங்கம்‌ பிகை கண்‌ புதை பக்குவமாம்‌
வெங்கங்குல்‌ விடிந்த வியப்பறிவாய்‌. 69
[69. சுடர்மூன்று - சூரியன்‌, சந்திரன்‌, அங்கி; கணம்‌ - இமைப்‌ பொழுது.]

அடையார்‌ புர மட்டிட வம்புவியா
நடையாரிரதத்தடி நாடியனா
ளுடையா வுடையானை யுடன்றிருமால்‌
விடையாய்‌ வெரினேந்திய வீறுணராய். 70
[70. அடையார்‌ - தன்னையடையாத முப்புரத்தார்‌. அட்டிட - அழிக்க,
விடையாய்‌ - ஏற்றுவாகனமாய்‌, வெரிந்‌ - முதுகு.]

தேம்பாட்டிய னனைத்துயிர்‌ செற்றிடுவான்‌
மேம்பாட்டினர்‌ விட்ட விடப்பகுவாய்‌
தாம்பாட்டறி கென்று தரித்தவனைப்‌
பாம்பாட்டி னனென்று பழித்தனையே. 71
[71. தேம்பாட்டியன்‌ - தேனினும்‌ இனிய பாடலேற்றவன்‌.
செற்றிடுவான்‌ - அழிக்கும்‌ பொருட்டு, பகுவாய்‌ - நாகம்‌,
தரித்தவனை - அணிந்தவனை.]

நீயென்‌ செய்வை பாவனினக்‌ கெதிர்‌
நின்றேயுஞ்‌ சிதனிந்தை யெனச்‌ செவி
வைத்தாயுந்‌ திறனாயின்னா தலினா
னேயங்கெடு பாதக நிச்சயமே. 72
[72. நின்றேயும்‌ - நின்று பொருந்தும்‌, சிவனிந்தை - சிவனைப்‌ பற்றிப்‌
பேசிய பழிப்புச்‌ சொல்‌, இன்னாதலின்‌ - பொருந்தாதது ஆதலினாலே,
நேயம்‌ கெடும்‌ - நட்பு கெடும்‌, பாதகம்‌ - பெரும்பாவம்‌.]

முன்னம்‌ புரிபாதக நான்முனியாது
இன்னம்‌ பயில்கின்றன இன்னதனாற்‌
பின்னும்‌ புரிவேனொரு பேதமையா
னுன்னன்பு பெறத்‌ தவமோதியதே. 73
[73. முன்னம்‌ - முன்னதாக, பாதகம்‌ - பெரும்பாவம்‌.]

சிவனை நிந்தனை செப்பினோன்‌ தன்னினுஞ்‌
செவி வைத்தவ னுடன்பிறி துரைப்பவன்‌
பாதக னவனைக்‌ கவனமொடு நாக்கறுத்தவன்‌
கயிலையிற்‌ சேர்ந்து தவனிகழ்த்த திருபத்தொரு
தலைமுறை தழைக்கும்‌. 74
[74. செவி வைத்தவன்‌ - கேட்டவன்‌, பிறிதுரைப்பவன்‌ - பிறிதொன்
றுரைப்‌பவன்‌, தலை முறை - மரபு வழித்தலை முறை.]

அல்ல தக்கணஞ்‌ செவிபுதைத்‌ தாகாவென்று
சொல்லப்புறம்‌ போதலே தூயவாய்க்‌ கியல்பாம்‌
மெல்லனாமு மப்புறத்‌ தினிமேவு தலியல்பென்‌
றொல்லெனப்‌ பெயர்ந்தொரு மொழிமகபதிக்‌ குரைப்பான்‌. 75
[75. அக்கணம்‌ - அப்பொழுது, ஒல்லென – விரைவாக; மகபதிக்கு –
இந்திரனுக்கு.]

முனிவரச ரவ்வாய நெருப்பினாற்‌ கடலிடை மூழ்கி
தனிதராதரச்‌ சுழல்வினானலங்‌ கிளர்ந்‌ தெழுந்த
வினிய வாரமுதாதி யாயஞ்செல்வ மெயென்று
தனிதருந்‌ துணிவெவன்‌ கொனின்வயங்‌ கொலாதக்கோய்‌. 76
[76. அவ்வாய - அத்தகையதாக, அமுதாறியாயம்‌ - அமுதம்‌ முதலாகிய]

மூன்று நாளையி லழவதுன்பத மதில்முன்னூ
றென்ற விந்திரா வருவரேதெனக்கு நீயளனிப்பாய்‌
தான்றுளங்கு வான்றளத்திடை தளர்ந்திடும்‌ பிறக
ஊன்று கோலென மதித்தவானோர்க்கு நின்றுரையே. 77
[77. முன்னூறு - முன்னதாக உண்டான துன்பம்‌, தான்‌ துளங்கு –
தானாக விளங்குகின்ற, வான்தளம்‌ - வானத்திடத்தில்‌.]

இளமை வெய்யின முன்மஞ்சலாம்‌ யாக்கைநீர்க்குமிழி
வளமை, மின்னென மாய்வது வானரமகளிர்க்‌
குளமகிழ்ந்தனை மாதரார்‌ கலவியால்‌ வருவ
தளமரும்‌ பிறப்பிறப்பென வறிகிலா யந்தோ. 78
[78. இளமை - இளமைப்பருவம்‌ வெய்யின - காலை வெய்யலென
முன்னராகப்‌ பின்‌, மஞ்சலாம்‌ - மங்கிய முதுமையுடையதாகும்‌,
யாக்கை - உடல்‌, நீர்க்‌ குமிழி - நீரில்‌ தோன்றும்‌ குமிழ்‌ போன்றது,
வளமை - செல்வம்‌.]

நீவரந்தர வந்தனை நன்றுநின்‌ மனையை
யாவர்‌ காப்பரோ விங்குளா யங்குளவுரிமைத்‌
தேவர்‌ மாதரை யசுரர்கொண்‌டேகவுஞ்செய்வர்‌
போவதேகடன்‌ போகேன்‌ நோக்கினன்‌ புலந்தான்‌. 79
[79. நின்மனை - நினது மனைவி இந்திராணி, தேவமாதர்‌ -
தேவர்களின்‌ மனைவியர்‌.]

புண்ணிய முனிவனோக்கப்‌ புறத்தான வடிவுநீங்கிக்‌
கண்ணுளர்‌ படங்களைந்து கதுமெனத்‌ தோற்றியாங்கு
வண்ணமும்‌ பிறவும்‌ வேறாய்‌ வெளிப்பட மனந்துணிக்கென்‌
றண்ணல்மால்‌ விடைமேனின்ற வருட்கட லுருவங்கண்டான்‌. 80
[80. புறத்தான - மேலொப்பனையான, களைந்து - நீக்கி, கதுமென –
உடனாக, துணிக்கு - தைரியம்‌.]

அரவுமங்கமுங்‌ கங்கையிற்றோய்தலிற்‌ புனிதமா யழகார்ச்‌
சிரகரோடிகை திங்களாரமுதுடன்‌ தெறித்தலு முயிர்சேரக்‌
குரவுகொன்றைபச்‌ சறுகு செஞ்சடை யொளிகுலவி வான வில்வீசப்‌
பிரமநெஞ்சினும்‌ பிறங்கிடா நிறங்கிளர்‌ பிஞ்ஞகன்‌ முடிப்பார்த்தான்‌. 81
[81. அரவு- பாம்பு, குரவு - குராமலர்‌, அறுகு - அறுகம்புல்‌, பிறங்கிடா –
விளங்காத, பிஞ்ஞகன்‌ - சிவபெருமான்‌.]

அன்றலர்ந்த செந்தாமரை யனையதோர்கண்ணு மதன்‌ பின்னா
னின்றலர்ந்ததாமரை நிகரொருகணு நின்றுபின்னனலார்‌ மேலொன்‌
றரும்பியதாமரை போன்றதோர்‌ கண்ணு மெண்ணுதல்‌ நீறும்‌
துன்றுபாம்பணிக்‌ குழைகளுஞ்‌ சங்கவெண்டோட்டோடு
தெரிசித்தான்‌. 82
[82. அன்றலர்ந்த - அப்பொழுது மலர்ந்த, நிகர்‌ - ஒப்பதான, அரும்பிய
தாமரை - மொக்கு, (நெற்றிக்கண்‌) நுதல்‌ - நெற்றி, குழை - சிவபாகத்துச்‌ செவிக்கணி குழை, தோடு - உமை பாகத்துச்‌ செவிக்கணி குழை]

நீலகண்டமு மக்க மாலிகைகைகளும்‌ நீண்டுயர்ந்தொழுந்‌ தோளின்‌
கோலமும்புனைமணி பணிவளையுங்‌ குஞ்சிரத்‌ தடக்கைபோல்‌
நாலுநாற்கரத்தபையமும்‌ வரதமும்‌ நவ்வியு மழுவும்‌ பாற்‌
சூலமாதிபடைகளுந்‌ தோற்றலுந்‌ துணைளிழிப்‌ பயன்பெற்றான். 83
[83. நீல கண்டம்‌ - விடம்‌ பொருந்தியதால்‌ நீலநிறம்‌ பொருந்திய கழுத்து: அக்கமாலிகை - உருத்திராக்கமணி மாலை, குஞ்சிரத்தடக்கை –
யானையின்‌ துதிக்கையைப்‌ போன்ற வலியகை, நவ்வி - மான்‌.]

ஆடரவணி யுதரபந்தனமும்‌ மத்தமரையுமார்‌ தட்டுங்‌
கோடராவி மற்றாழினர்க்‌ கண்மணிக்‌ கொட்டெருத்தி
சேடுயர்ந்தெழிற்‌ பருத்த வெள்ளேற்றினைச்‌ செலுத்தி மாலறியா
தேடருந்‌ திருச்சிலம்‌ பொலிகழற்‌ கெதிர்நின்று கண்களி கொண்டான்‌. 84
[84. ஆடு அரவு - படமெடுத்து ஆடும்‌ பாம்பு, மத்தம்மரை – ஊமத்தை
யுடன்‌ தாமரையும்‌, வெள்ளேறு - இடபம்‌.]

(வேறு)
ஞானவானந்த நிலையமாய்க்‌ கருணையாய்‌ ஞாயிறாயிரங்‌ கோடி
யானபேரொளிய மயமாய்‌ அடியவர்க்கன்பினா லுருக்கொண்ட
வானனாயகன்‌ அகிலமெலாந்திரண்டதோர்‌ வடிவமருமை யாளுந்‌
தானுமங்ஙனம்‌ புலப்படவேஆக்கினன்‌ சதானந்தமுனி யம்மா! 85
[85. ஞாயிறு - சூரியன்‌, வான நாயகன்‌ - வானுலகங்கட்கெல்லாம்‌
தலைவனாகிய ஈசன்‌, வடிவமர்‌ உமை - உலகமெலாம்‌ திரண்ட வடிவம்‌ பொருந்திய உமாதேவி.]

அமரரறிந்தார்‌ முனிவரரி அயன்‌அனந்தன்‌ கந்தற்பர
சமர்வீரனே யாதியான தலைவர்பூதேச ருந்தனைச்சூழக்‌
குமரர்நந்தி சண்டேசன்‌ மற்றன்பினோர்‌ குறுக நற்குலவேதத்‌
தமரர்வேலையிற்‌ றழங்கவந்‌ தருளியச்‌ சங்கரன்தனைக்‌ கண்டான்‌. 86
[86. அமரர்‌ - தேவர்‌, அயன்‌ - பிரமன்‌, அனந்தன்‌ - ஆதிசேடன்‌,
கந்தன்‌ - முருகன்‌, சமர்‌ வீரன்‌ - வீரவாகுதேவர்‌, பூதேசர்‌ - உலக மக்கள்‌,
வேலையிற்றழங்க - கடலொலி போல்‌ சங்கர வொலியெழுப்ப.]

கண்டுதாள்களில்‌ வீழ்ந்தனன்‌எழுந்தனன்‌ கனிந்து கண்ணீர்வார
விண்டவேரியி னானந்தவெள்ளத்தின்‌ மிதந்தன்ன கூத்தாடித்‌
தொண்டனேன்‌ மொழிதுரிசெலாம்‌ பொறுத்தனை தூயனேயென விம்மி
அண்டர்‌ நாயக னகமகிழ்ந்து அருள நல்லருந்துதி துதிக்கின்றான்‌. 87
[87. விண்டவேரி - புகழ்ந்து கூறும்‌ தேன்‌, துரிசு - குற்றம்‌.]

காரண மாயை வஞ்சக்‌ காரியங்‌ கலந்து நிற்றல்‌
ஆரண ஞானம்‌ நின்னாற்‌ பெறப்படு மளவு மாகு
ஆரண மடையா வாறு ஆக்கிய ஞானத்தால்‌ நின்‌
பூரண மறியு மட்டும்‌ அதலிற்‌ புகல்‌ வேறுண்டோ? 88
[88. காரணமாயை - காரணத்தன்மையானாய மாயை, ஆரணம்‌ -
வேதம்‌, பூரணம்‌ - நிறைவு, புகல்‌ - சொல்லுதல்‌.]

மாயை காயாதி யாதல்‌ மாய்தலு மற்றுநீநின்‌
ஜேயஞா னாதிச்‌சத்தி நிகழ்த்திடு மளவு மென்றால்‌
பாயமால்‌ வினையிற்றுன்பம்‌ பயத்தலும்‌ பரமானந்த
தூயநிற்‌ காணுமட்டும்‌ துதித்தலிற்‌ றணை வேறுண்டோ? 89
[89. மாயை - பொய்த்தோற்றம்‌, காயாதி - காயம்‌ ஆதி, உடலாதியாகும்‌,
பாயமால்‌ - பொருந்திய ஆசையால்‌ வரும்‌ மயக்கம்‌.]

வஞ்சநீ யென்னிற்‌ றுஞ்சா வஞ்சநீ வஞ்ச மென்னிற்‌
றுஞ்சு மாயஞ்சுஞ்‌ சுத்தி வெள்ளியிற்‌ றுஞ்சுந்‌ துஞ்சா
நெஞ்சுமால்‌ நீங்க நீயே யானெவி னின்னை நோக்கிய
பஞ்ச நதேசம்‌ போற்றும்‌ பணியலாற்‌ பணிவே றுண்டோ? 90
[90. அஞ்சும்‌ - ஐந்தும்‌, ஐம்புலன்களும்‌, மால்‌ - மனமயக்கம்‌, சுத்தி –
தூாயனவாகும்‌, நெஞ்சுமால் - மன மயக்கம்‌.]

மூலமாய்‌ நடுவா யீறாய்‌ முழுதுமாய்‌ முழுதுங்‌ காணுங்‌
காலமாய்த்‌ திசையாயெட்டுக்‌ கடவுளாய்க்‌ கமலமே பொன்‌
கோலமாய்‌ மாலாய்‌ இன்பக்‌ குணமுமாய்க்‌ கணத்தின்‌ மேலாஞ்‌
சீல மாதவர்‌ சூழ பொன்னித்‌ திருவையா றுடையாய்‌ போற்றி. 91
[91. மூலமாய்‌ - ஆதியாய்‌ - காலமாய்‌ - முக்காலமுமானவனாய்‌, கடவுளாய்‌- பிறகடவுளர்களாய்‌, மாலாய்‌ - காத்தற்‌ கடவுளாய்‌, சீல மாதவர்‌- தவவொழுக்‌ கமுடைய சிறந்த தவத்தோராகவும்‌.]

சுருதியால்‌ மனத்தால்‌ வாக்கால்‌ சோதியா லளவை யாலும்‌
பருதியார்‌ காத்தோனாதி பண்ணவ ராலுந்‌ தோற்றா
யொருதியா னத்த யுன்னை யுணருமா றுரைக்கு மாறெனக்‌
கருதியா னென்று போற்றுங்‌ கவுதமிக்‌ கிறைவன்‌ சொல்வான்‌. 92
[92. சுருதி - வேதம்‌, பருதியார்‌ - சூரியன்‌, பண்ணவர்‌ -
ஆசாரிய பிராமணர்‌ ]

முந்தியான்‌ மகிழ்ந்துவந்தெந்‌ தவத்தினான்‌ முனியைக்காண
நிந்தையா முரைக்க நேர்ந்து நிறுத்தலா லுண்மலர்ந்தேம்‌
அந்தவா றன்றிப்‌ போற்றுந்‌ துதியினா லன்புவைத்தோம்‌
சிந்தையார்‌ வரமே தென்று செப்பினான்‌ திருவையாறன்‌. 93
[93. சிந்தையர்‌ - மனத்தில்‌ பொருந்திய, செப்பினான்‌ - கூறினான்‌.]

வைதீக சைவ நீதி வழாதவர்‌ மாதவத்தின்‌
செய்தியா லழுக்காறில்லாச்‌ சிந்தைய ரைந்தவித்தோர்‌
மெய்திகழ்‌ நீற்றர் ஞான விழியினர்‌ வழி சேரன்பாய்‌
பொய்தவி ரொழுக்கம்‌ பூண்டோர்க்‌ கடிமையான்‌ புரியவேண்டும்‌. 94
[94. வைதிக சைவ நீதி - வைதிக சைவ சமய நெறிகள்‌, வழாதவர்‌ - பின்‌ பற்றாதவர்‌, அழுக்காறு - பொறாமை, ஐந்தவித்தோர்‌ - ஐம்புலன்களையும்‌ அடக்கிய சான்றோர்‌.]

நின்திரு வேந்தரங்கில்‌ நின்னை நிந்தனை சொல்லுகின்‌றார்‌
அன்றியும்‌ நிந்தை கேட்பேர்‌ அவருட னிணங்கி னோர்கள்‌
வென்றஐம்‌ புலத்தாம்‌ பன்னூல்‌ விஞ்சையின்‌ மேலோ ரேனும்‌
கொன்றுழல்‌ புலைய ரேனும்‌ குறிகொளு மறிவு வேண்டும்‌. 95
[95. அரங்கில்‌ - அரங்கமாகிய உலகில்‌, நிந்தனை - பழிச்சொல்‌, விஞ்சை
- வித்தைகள்‌, குறி கொளும்‌ அறிவு - நற்குறிப்புடன்‌ செயற்படும்‌ அறிவு]

கண்கள்‌ நின்னுருவங்‌ காணக்‌ காதுநின்‌ காதை கேட்கப்‌
பண்களி நாவு நின்சீர்‌ பாடவென்‌ கால்நின்‌ கோயில்‌
எண்கொடு சூழச்சென்னி யிறைஞ்சநீ யானேயாகத்‌
திண்கரை யில்லாவின்ப வெள்ளத்துள்‌ திளைக்க வேண்டும்‌. 96
[96. காதை - திருவிளையாடற்கதை, எண்‌ கொடு - எண்ணிக்கைக்‌
கொள்ளும்‌ வலம்‌, திண்கரை - வலிய கரை.]

வேண்டு மவ்வரங்கள்‌ கேட்டு விமலனும்‌ மகிழ்ந்து நீயே
பூண்டுலாய்‌ பத்தி யன்பு புனிதனன்‌ றுதவி யெல்லா
மீண்டுமத்‌ தலத்தின்‌ மேன்மை விளம்பி யிப்பதி நீங்காமே
காண்தக விரித்தி யென்று கரந்தனன்‌ கரவிலாதான்‌. 97
[97. விமலன்‌ - ஈசன்‌, இப்பதி - திருவையாறு, காண்தக விரித்தி –
விரி வாகச்‌ சொல்வாயாக, கரந்தனன்‌ - பறைந்தனன்‌.]

மாதவர்‌ குழாத்தி னோடு வாசமத்‌ தலத்தின்‌ தாய்ப்பக்‌
காதலைம்‌ புலங்கடந்து சகமெல்லாம்‌ கருத்திற்‌ கொண்டு
சாதலும்‌ பிறப்பு நீங்கி சதானந்தன்‌ பரமஞான
போகசீவ முக்தி பெற்றான்‌ புனித னானான்‌. 98
[98. குழாம்‌ - கூட்டம்‌, வாசம்‌ - நிலைத்திருத்தல்‌, சகம்‌ - உலக
நிகழ்ச்சிகள்‌; சீவ முத்தி - எடுத்த பிறவியோடு இரண்டறக்‌ கலந்த
மேல்‌ நிலை]

மூவர்‌வாழ்‌ பதங்க ளேறு முனிவர்தம்‌ மிருக்கை நண்ணுந்‌
தேவர்சூழ வையின்‌ வைகு நசையெலா நிற்குந்‌ தன்னை
யாவரெண்ணின ரங்கெய்து மெண்ணிய தேவர்க்கு மீய்குங்‌
காவலற்‌ காசிநாசிக்‌ கற்றவர்க்‌ குருவா மன்னோன்‌. 99
[99. மூவர்‌ வாழ்பதம்‌ - மூன்று முதற்தெய்வங்களாகிய, சிவன்‌, பிரமன்‌,
திருமால்‌ ஆகிய கடவுளர்‌ உறையும்‌, கைலை, சத்தியலோகம்‌, வைகுந்தம்‌
ஆகிய பதங்கள்‌, பதங்கள்‌ - வாழுமிடங்கள்‌, நசை - விருப்பம்‌, காசி நாசி- காசியெனும்‌ வாரணாசி.]

உலகமெலாங்‌ கடந்து நித்தனாயினோ னுண்மையீது
தகவுகூறிய வினுக்காதை சாற்றினோர்‌ கேட்கப்‌ பெற்றோர்‌
மகவுவாழ்‌ வின்பஞானம்‌ வளரவாழ்ந்‌ திருந்துதக்கோன்‌
சகமேல்‌ மதிக்கப்பெற்ற தவப்பயன்‌ பெறுவரென்றான்‌. 100
[100. தகவு - பொருந்திய, சாற்றினோர்‌ - சொல்லியவர்‌]

இன்ன கோயிலுண்மை யினிச்‌ சிவசருமன்காதை
சொன்ன வச்சிவதாசன்சீர்‌ சுசீகர நீதிமீது
பன்னருஞ்‌ சுசரிதன்றன்‌ பான்மைகளாய்‌ வகுத்தே
மன்னரும்‌ பிரணதார்த்தி கரத்தில்‌ மொழியலுற்றாம்‌. 101
[101. சுசீகரநிதி - தூய்மையான நீதி, பான்மைகள்‌ - அருஞ்செயல்கள்‌]

வாரணங்‌ குறுமென்கொங்கை மங்கைகேழ்‌ திருவை
பூரணன்‌ பணிந்துதன்னைப்‌ போற்றுநர்‌ துன்பந்தீர்க்குங்‌
காரணம்‌ பிரணதார்த்தி கரனெப்‌ பேர்பெற்றானென்‌
றாரணந்‌ தெரிந்ததூயோ னனவத்திக்‌ குரைக்கலுற்றான்‌. 102
[102. பூரணன்‌ - நிறைந்த தவமுடையவன்‌, ஆரணம்‌ - வேதம்]
----------------

12. சிவதருமனத்தியாயம்‌

காரண பிரணதார்த்திக்‌ கரனெனப்‌ பேர்பெற்றானென்‌
றாரணந்‌ தெரிந்தோன்‌ கூறியனல்வரத்தின்‌ மகிழக்கண்டு
வாரணங்‌ குறுமென்கொங்கை மங்கைபங்‌ குடையசெல்வப்‌
பூரணன்‌ பின்னுமாங்குப்‌ புரிந்ததோர்‌ புதுமைகூறும்‌. 1
[1. ஆரணந்தெரிந்தோன்‌ - வேதங்களை உணர்ந்தோன்‌,
புதுமை - அற்புதம்‌.]

நவசருவ னலோர்க்கீய்ந்து நான்மறைப்‌ பொருள்களாய்ந்துங்
கவுசருத்திரன்‌ கண்வேய்ந்துங்‌ காலைநன்னீரிற்‌ றோய்ந்துந்‌
தவசருநெறியில்‌ வாய்ந்துந்‌ தகுபுனல்‌ கரணங்காய்ந்துஞ்‌
சிவசருமப்‌ பேர்பெற்றான்‌ திருமறைக்‌ குலத்தோர்செல்வன்‌. 2
[2. அலோர்‌ - பொருளற்றோர்‌, தோய்ந்தும்‌ - நீராடியும்‌. தகுபுனல்‌ -
புண்ணிய தீர்த்தம்‌, திருமறைக்‌ குலத்தோர்‌ செல்வன்‌ - வேதியர்‌
குலத்திலுதித்த செல்வன்‌.]

ஆதியா முகத்திரேதத்‌ தருந்தவந்‌ துடங்கினார்க்கு
சாதியா வகுத்தும்பொல்லா கபப்பிணி யடுத்ததாக
வேதியர்‌ கபமேலுந்தி மெய்வறந்‌ தேன்பெருத்து.
கோதியா லெழக்குரைத்து கோழைநூ லொழுக்கின்று கான்று. 3
[3. அருந்தவம்‌ தொடங்கினார்க்கு - அரிய தவத்தினை நியதியோடு
தொடங்கியவர்கட்கு, கபப்பிணி - கபரோகமெனும்‌ தோய்‌, கோதியா –
துன்பந்தரத்‌ தக்கதாக.]

ஈருணெய்ப்பறப்‌ புலர்த்தி யிரைப்பெழ நுரைத்துரைத்‌ துரைப்பி
னீருதெய்‌ தோறுஞ்சிந்தி நிமிருடல்‌ வளைந்துளைப்ப
பாருளா மாயுள்வல்லோர்‌ பண்ணிய மருந்திற்றீரா
தோருமந்‌ திரத்திலோவா தூக்கிமே லெழுந்தததந்‌ நோய்‌. 4
[4. நெய்ப்பற - பசையற்றுப்போக, ஆயுள்‌ வல்லோர்‌ - ஆயுள்வேதமெனும்‌ முறையிற்பிணி தீர்க்கும்‌ மருத்துவர்‌, வா - நீங்காமல்‌,]

மண்டித லெரியுந்தீயின்‌ மரந்தடித்‌ திட்டதென்ன
பண்டிதர்‌ புரிந்ததெல்லாம்‌ பாவமே யாகிப்பெற்ற
தெண்டிரை யுலகிற்றிர்த்தத்‌ திருந்தியாவு மூழ்கிக்‌
கண்டிருந்‌ தலங்கள்போற்றிக்‌ காலங்கள்‌ கழிக்குநாளில்‌. 5
[5. மண்டி - மேன்மேலும்‌ பெருகி, பண்டிதர்‌ - மருத்துவர்‌, தெண்டிரை -
கடலால்‌ சூழப்பட்ட.]

பரசம யங்களென்னும்‌ பாயிரு ளுலகநீற்றின்‌
கிரணவெண்‌ ணிலவுவீசுங்‌ கேழ்கிளர்‌ பருதியார்க்குங்‌
குரவனாஞ்‌ சிறப்பினெந்தை கோதமன்‌ சிறுவனான
சேயுரதவப்‌ பொன்னான்‌ சதானந்த முனிவர்‌ கண்டான்‌. 6
[6. பரசமயங்கள்‌ - சிவசமயமல்லாத பிறசமயங்கள்‌.]

கண்டிருமி யேங்‌கியுடல்‌ கால்வளைத்‌ தவிர்ப்பொற்‌
றண்டொடு குழைந்துயிர்‌ தளர்ந்தடியில்‌ வீழக்‌
கொண்டமறை யேறுகொளு கொம்பனைய கோமா
னெண்டனு நுடங்கின்னை யாரெழுக வென்றான்‌. 7
[7. கால்‌ - தனது இருகால்களும்‌, குழைந்து – நிலைதளர்ந்து]

எங்குல மிருஞ்சுருதி யோரதினி யெனப்போ
துங்கசிவ சனன்மனது தொல்லைவினைக்‌ கொல்லோ
வெங்கய வரும்பிணி விளைந்திட மெலிந்தேன்‌
சங்கையி லிருந்த தருமதான நனிசெய்தோன்‌. 8
[8. துங்க - மேலான, வெங்கயவரும்‌ - கொடிய தீமையாக வரும்‌,
சங்கை - சந்தேகம்‌.]

மந்திர மருந்தின்‌ மதிகண்ட கடல்மானுந்‌
தந்திரத்‌ தவத்தின் முனிபுற வகன்றகுஞ்சி
ரித்திற திருக்கயவ ரெய்திலிடை நீங்காப்‌
புந்தியினு லோபமது பொன்றொழிவ தின்றால்‌. 9
[9. மதிகண்டகடல்‌ - சந்திரனைக்‌ கண்ட கடல்‌ பெருகுவதைப்‌ போல,
இத்திறம்‌ - இத்தகைய உறுதிப்பாடு, புந்தி - அறிவு.]

உட்பகை படைத்தமன ரொத்தன்னுயிர்‌ பால்‌
மட்பகை ஞாகைதிரிகை யொத்தனன்‌ மனத்தாற்‌
றுட்கென விரைத்திறுகு துக்க வுலகத்தால்‌
வடகமி லொதுக்கிட மனைக்குடியை யொத்தேன்‌. 10
[10. உட்பகை - மனப்பகை, திரிகை - திரிபதகை, கங்கை.]

முடையுடல்‌ விடுக்கில்‌ முறையன்றேன்‌ முயன்றே
னுடலுயிர்‌ விடுத்தொழிவ துண்மையென நின்றே
னிடைமக னெறிந்தமர்‌ வென்ன மெலிகின்றே
னடையுறு பிறப்புள்‌ பயன்களணை கில்லோன்‌. 11
[11. முடையுடல் - முடை நாற்றமுள்ள உடல்‌, அடையுறு பிறப்புள -
தொடர்ந்து வரும்‌ பிறப்புண்டாக.]

கயப்பிணி யெனுங்கடல்‌ கடக்குநெறி காணே
னுயப்பெற வெதிராதபுனை யுன்னையல தில்லேன்‌
செயப்படுவ தின்னதிது தீயதுயர்‌ தீரும்‌
பயத்தகரை யென்றுரை பணித்தருள்க வென்றான்‌. 12.
[12. கயப்பிணி - தீமையான நோய்‌, புனை - மிதவை, பயத்தகரை –
பயனுடைய கரையைப்‌ போன்று.]

எக்குறை யுள்ளோரு மறிவுள்ள வரையெய்தி
லக்குறை தவிர்ந்து யாவராலவரை யேய்ந்துந்‌
துக்கமுறு வோர்க்குறை துடைத்திடுவ துண்டோ
மிக்கனதி கற்பதரு வெண்மதியி னாலும்‌. 13
[13. துடைத்திடுவர்‌ - நீக்கிவிடுவர்‌, மிக்க - மிகுதியான.]

ஆதலி நல்லோர்‌ திலதமான முனிவநின்‌
பாதமலர்‌ கண்டுப்‌ பிறவிப்‌ பய னடைந்தேன்‌
தோதகவு தீரநுவ லென்றிலு நோன்மைக்‌
கோதமறு கோதம குமாரனிது கூறும்‌. 14
[14. திலதம்‌ - நெற்றியிலிடும்‌ பொட்டு, நோதகவு - நோவுதரும்‌ நிலைமை,
கோத - சினம்‌, வன்புறு - கொடுமையுற்ற, ஊழால்‌ - முன்செய்த
வினைப்பயனால்‌. ]

வன்புறு வியாதியின்‌ வருந்து மறையோயித்‌
துன்பமுற லந்தணன்‌ கொலைத்தொடர்பினூழா
லென்பர்பெரி யோர்களுன தின்னலிநு பன்னிற்‌
புன்பிரம கத்தியது பொலிவிதி போலும்‌. 15
[15. அன்னது - அவ்வாறானது, துன்னு - நெருங்கிய, இன்ன –
இவ்வாறான.]

அன்னதுமோ ரந்தணனுக்‌ காடாவு வானந்‌
துன்னுசுடர்‌ தீண்டவரு தொல்லையிலோ ரெல்லைச்‌
சென்னல்கல மெனவுரை செய்து தவலின்றா
யின்னதுய ரெய்தினை யெனத்தனி வினாவும்‌. 16
[16. சிலப்பொலி - சிலம்‌பொலி, தவிர்விர்‌ - நீங்குவீர்‌, பரிகாரம்‌ - நீக்கும்]

அந்தணர்‌ கொலைப்பயனு மன்ன சிலப்பொலி
தந்தொழில்‌ வினைப்பயனு மொன்றுற்றதாகா
திந்தவித முந்தவிர்‌ விரென்னுபரிகாரத்‌ துய்ந்திடுவதுத்த
மிந்தவகை யாணணுகி வுய்ந்திட வுரைப்பாய்‌. 17
[17. உபாயம்‌, உத்தம்‌ - உத்தமம்‌].

இறைவனூற்குப்‌ பொருள்பிரிதா யெண்ணங்குரவ னில்லாமை
மறையந்தணரை மூழ்காமல்‌ மறிந்தலன்ன முண்பதன்மு
னிறையுங்கணிநூல்‌ வழியன்றி நிருழித்தோரை நாளுரைத்த
லறையுங்‌ குற்றப்பரிகார மறியாதொன்றைச்‌ செய்வித்தல்‌. 18
[18. பிரிதா - வேறொன்றாக, குரவன்‌ - ஆசாரியன்‌, குரு, அறைபும்‌ -
சொல்லும்‌.]

பொய்வேடத்தால்‌ வணங்குவித்தல்‌ பிறர்கைக்‌ குடன்படலுஞ்‌
செய்வேடத்தாற்‌ கல்வியாற்‌ செல்வமிகவா லகந்தையுறல்‌
எவ்வேடத்துந்‌ தன்னைத்தான்‌ புகழ்தலிவையே முதலாக
……………………………………………………………… 19
[19. வணங்குவித்தல்‌ - பிறரை வணங்கும்படிச்‌ செய்தல்‌, அகந்தை -
அகங்காரம்‌.]

தனந்தானியங்க ளெவையெனுந்‌ தானஞ்செல்லின்‌ மறையோர்க்கு
மனந்தானுவப்ப நல்காமை மற்றும்பலவுண்‌ டதன்போலி
கனந்தாழ்‌ மறையோர்‌ வெங்கொலைக்கு கயனோய்‌எப்பிறவி யொருநூறு
முனந்தாமுடைய போலிக்கு மூன்றுபிறப்புத்‌ தருமாமால்‌. 20
[20. தானம்‌ செல்லின்‌ - தானமாகச்‌ செல்லுமானால்‌, மனந்தானுவப்ப
நல்‌காமை - மறையோர்‌ மனம்‌ மகிழ்வடையும்‌ அளவிற்குக் கொடுக்காத
செயல்‌.]

தன்னாலிறந்தோன்‌ தலையோட்டிற்‌ தானேற்றுண்டான்‌ முதலாக
அன்னால்வாக்குப்‌ பரிகார மளவின்றென்ற லருநாக
மின்னாப்பிறவி யித்துன்ப மென்பரெளிதி லின்னுமொரு
பொன்னாலையஞ்‌ சேறையாநற்நிற்‌ புகுந்துபுரியுந்‌ திறங்கேண்மே. 21
[21. இன்னாப்பிறவி - தாழ்ந்த பிறவி, புரியும்‌ - செயலாற்றும்‌, ஐயாறு - திருவையாறு, சேறை - திருச்சேறை எனலாம்‌.]

பொன்னிதாழ்ந்து முப்பொழுதும்‌ பூதிபூசி யாயிரங்காற்‌
சென்னிதாழ்ந்து பஞ்சநத செப்பேச்சுரத்தி லாயிரப்பத்‌
துன்னித்தாழ்ந்தஞ்‌ செழுந்தோதி வலம்நூறியற்றி யுடைய
பன்னிப்பண்டு செய்தநவைப்‌ பலருங்கேட்கச்‌ சொல்வாரால்‌. 22
[22. பொன்னி - காவிரியாறு, தாழ்த்து - மூழ்கி, பூதி - திருநீறு, துன்னி - முன்னடைந்து, பண்டு - முன்பு, நவை - குற்றம்‌, சொல்வர்‌ - இறைவன்‌
முன்னர்‌ கூறுவார்கள்‌.]

புரிந்தபிறப்பில்‌ பரிகாரம்‌ புகன்றேனினது பொலிக்குந்‌
தெரிந்தபிறவி வேறதனாற்‌ மிருவையாற்றி லொருமாதம்‌
அருந்தியொருபோ துற்றதிறமே யாக்கில்மலன்‌ தீர்க்குமினி
விரைந்துபுரிக வெனவிடுத்தான்‌ மேவித்தொடுத்தான்‌ விரதமே. 23
[23. புரிந்த - உண்டான, பரிகாரம்‌ - தீர்க்கும்‌ உபாயம்‌, மலன்‌ -
பாபப்பிணி புரிக – செய்வாயாக.]

வழுவாநியத்‌ தொடும்புரிந்த மாதமுடிவில்‌ ஒருநாளிற்‌
செழுவானசெக்கர்‌ திருமேனி சிவனைநினைத்த நினைவோடு
மழுவானபிணி நோயென்றால்‌ வந்தகற்றுமென நேர்ந்துயிர்த்‌ தயர்ந்து
விழுவானுறங்கும்‌ போழ்தத்தின்‌ வினைதீர்ப்பவனு மேவினான்‌. 24
[24. வழுவா - குற்றப்படாத, நியமம்‌ - விரத உறுதிப்பாடு, மழுவான பிணி - மழுவாயுதத்தின்‌ கொடுமைச்‌ செயல்‌ போன்ற பிணி, வந்தகற்றும்‌ - சிவன்‌
தோன்றி நீக்குவான்‌.]

வெண்ணீறுங்‌ கையுமாய்‌ வேதியனுக்‌ கருகிருந்து
தண்ணீரிற்‌ றாமரைப்பூந்‌ தாதுகவிழ்ந்‌ துகுப்பதெனப்‌
புண்ணீர்‌ வெம்பிணி யுடலைப்புல்லி யெடுத்தகலமடிமே
லண்ணீ நிட்ட வன்தலை தொட்டடியளவுந்‌ திமிர்ந்திட்டான்‌. 25
[25. வேதியன்‌ - கவுதமன்‌, பூந்தாது - மகரந்தப்‌ பொடி. புல்லி - பற்றிக்‌
கொண்டு, மடிமேல்‌ - மடியினிடத்தே, நீறு - திருநீறு, நிமிர்ந்திட்டான்‌ - நிறைவாகப்‌ பூசிக்கொண்டான்]

எம்பிரான்‌ திருநீறே எழுபிறவிப்‌ பிணிதீர்க்கும்‌
தம்பிரான்‌ திருக்கரத்துச்‌ சாத்திய துதைவத்தால்‌
வம்புலாங்‌ கயநோயின்‌ வல்வினை தீர்த்திடலரிதோ
செம்புலாங்‌ களிம்பனைய மலப்பிணியுமந்‌ தீர்ந்ததால்‌. 26
[26. துதைவத்தால்‌ - சாத்திய திருநீற்றால்‌, வம்புலாம்‌ - தொல்லையாம்‌, செம்புலாம்‌ - செம்பு உலோகத்தில்‌ பொருந்திய, மலப்பிணி - பிறவியைப்‌
பற்றித்‌ தொடர்ந்த மும்மலப்பிணி, தீர்ந்தால்‌ - அகன்றது. ஆல்‌ - அசை]

இரும்பு பரிசனவேதிக்‌ கெரிபசும்‌ பொன்னானதுபோல்‌
அரும்பெறல்‌ செம்பொற்சோதி யங்கையாற்‌ றீண்டுதலுங்‌
கரும்புற மெய்முழுதோடக்‌ காய்ந்தெளிர்‌ காஞ்சனம்போல்‌
பொரும்பிணியுந்‌ தீர்ந்துயர்ந்து புனிதவுரு வானதால்‌. 27
[27. பரிசனவேதி - பொன்‌ செய்யும்‌ மூலிகை, எரி - ஒளிவிடும்‌,
காஞ்சனம்‌- பொன்‌. புனிதவுரு - தூய உருவம்‌. நீற்றினாற்றலால்‌ வரவு.]

நீற்றினாற்றலால்‌ வரவுநிமிர்ந்து துளங்கு மறையோனை
போற்றினான்‌ கருணையினா லெழுப்புதற்குச்‌ செழுஞ்சுருதி
யாற்றினா லரியனாதல்‌ அளவையாற்‌ காண்பரிய
போற்றினாதண்‌ மலரடியாற்‌ றுகைத்தருகு பெயர்ந்தனனால்‌. 28
[38. ஆற்றல்‌ - தெய்வீக வலிமை, துகைத்து - படியநடையிட்டு,
அருகு - அருகில்‌,]

தன்னையடைந்தவ ரிடும்பைத்‌ தடுப்பா னன்கன்றிடிலு
முன்னையவன்‌ பிணிகாணான்‌ பிரானையுமுன்‌ காண்கிலனா
லென்னை யருளிருந்‌ தவற்றெனமேலென்‌ றருமறையோன்‌
முன்னைய வன்போடு தெழியாமொழிதளர்‌ வெழுந்தனனால்‌. 29
[29. இடும்பை - கொடிய துன்பம்‌, முன்னை - முன்பிருந்த, அன்போடு - நிறையன்போடு, தெழியா - ஆர்வம்‌ எழுச்சி பெற, மொழிதளர்‌ - என்ன சொல்லுவதென்று தடுமாற்ற நிலையால்‌ தளர்ந்து.]

கம்பலையுங்‌ கண்ணீருங்‌ காயமுறத்‌ தூயோனும்‌
கொம்பலையு மலர்த்தாது கொழிக்குமண லுடன்குலிக்கும்‌
பைம்பொனுரை திரைப்பொன்னி படிந்து சிவாலயத்தெய்தி
சம்புவைமுன்‌ தொழுதிறைஞ்சித்‌ தானறிந்த படித்துதிப்பான்‌. 30
[30. கம்பலை - பக்தியினாலான மெய்‌ நடுக்கம்‌, காயமுற - உடலில்‌
பொருந்த, குலிக்கும்‌ - கொழித்து ஒலிக்கும்‌, பொன்னி - காவிரியாறு,
சம்பு - சுகமளிக்கும்‌ ஈசன்‌,]

பிறவியின்‌ வருதுன்பம்‌ பெறினுறு வயர்வெல்லாஞ்‌
செறிவதுன்னரு ளெய்துஞ்‌ செவ்வியி னளவன்றோ
லறுகுறுசடையோய்‌ நின்னங்‌ கையென்‌ முடிமேல்வைத்து
குறைதவிர்‌ வித்தாய்‌ உனதரு ளெளிதேகொல்‌. 31
[31. அயர்வு - தளர்ச்சி, செவ்வி - ஏற்றசமயம்‌ (காலம்‌), அறுகுறு –
அறுகம்‌ புல்‌ பொருந்திய.]

சுருதியின்‌ முடிவொன்றுங்‌ துனிகிலவெனு மாறுன்‌
திருவடிமுடி வைக்குஞ்‌ செவ்வியி னளவென்றாற்
பெருவடி நிழலோயென் பிணிகெட மணிமன்றூ
டொருவடி யுடல்வைத்தா யுனதருளொளிதோ கொல்‌. 32
[32. சுருதி - வேதங்கள்‌, பெருவடி - பெருமை பொருந்திய திருவடி,
மணி மன்றாடு - இரத்தினங்கள்‌ வைத்திழைக்கப்பட்ட அம்பலத்தினிடத்தே]

சீரொளி யன்றிங்கண்‌ செங்கதி ரொளியெனலுன்‌
பேரொளி தனையுள்ளம்‌ பெருவதன்‌ முன்னென்றாற்‌
காரொளி மிடரோயென்‌ தயவுடனவை தீர்வித்‌
தோரொளி திகழ்வித்தா யுனதரு ளெளிதோகொல்‌. 33
[33. [இப்பாடல்‌ : 33, Mss - 290 சுவடியில்‌ இல்லை], சீரொளி - சிறந்த
ஒளி, காரொளி - கருமையொளிர்கின்ற, மிடரோய்‌ - கழுத்தினை
உடையவனே.]

பவபவ காநாதர்‌ பதமுதல்‌ யோகத்‌
தவத்தவ்‌ வினைதீர்க்குஞ்‌ சங்கர வென்னாளு
நவநவ வுருவாவோய்‌ நலமிகு பகவானே
சிவசிவ தமியேனுன்‌ திருவடி தொழுகின்றேன்‌. 34
[34. கா - காப்பாற்றுவாயாக. நவநவவுருவாவோய்‌ - புதுமைக்கும்‌
புதுமையான திருமேனியின்‌ பெறுகின்‌றவனே.]

புரகா வுமை பாகர்‌ புங்கவ மலர்‌ வேதன்‌
சிரகா விடை யேறுஞ்‌ சேவடி திருமார்பி
னுரகா சதவெற்பூ டுறைபவ்‌ விறையோனே
அரகர தமியேனின்‌ னடியிணைத்‌ தொழுகின்றேன்‌. 35
[35. புரகா - பாதுகாப்பவனே, புங்கவ - மேலானவனே, மலர்‌ வேதன்‌ -
தாமரை மலரில்‌ வீற்றிருக்கும்‌ பிரமன்‌, சிரகா - சிரத்தைக்‌ கையிலு
டையவனே, உரகா - பாம்பாபரண மணிந்தவனே, சதவெற்பு - கயிலை
மலை, பவ்விறை - பவ்வியமான கடவுள்‌.]

கசிதா மறிசூலத்‌ தருமகம்‌ பூ நாகஞ்‌
சுசிந்தி கழியங்கஞ்‌ சூரக வேயி னொடுங்‌
கசவுரி யுடனே நதிக்‌ கானக நடமாடும்‌
பசுபதி தமியேனின்‌ பதமலர்‌ தொழு கின்றேன்‌. 36
[36. மறி - மான்‌, சுசிந்தி - தூய செந்நிறம்‌, சூகரவேய்‌ - பன்றியுருவான
திருமாலான மூங்கில்‌, கசவுரி - யானைத்தோல்‌ போர்வை.]

பலகாலும்‌ இப்படியே பரவசனாய்த்‌ துதிப்பவளவிற்‌
பிலகார்வ மனங்கண்டு பிரணதார்த்‌ திகர்பேர்‌
சிலகால முதல்படைத்த திருவையா றுடையானும்‌
அலகானன்‌ கருணையினால்‌ வந்தவர்க்கு வெளிநின்றான்‌. 37
[37. பரவசம்‌ - பூரண மகிழ்ச்சி, அலகானன்‌ - பேய்களின்‌ தலைவன்‌,
எளி நின்றான்‌ - எளிமையாகக்‌ காட்சியளித்தான்‌.]

வருதிசிவ சருமாநின்‌ மறைத்துதியின்‌ மிகமகிழ்ந்தே
தருதிவர மெனக்கேட்டித்‌ தக்கதுதந்‌ தளித்துமெனச்‌
சுருதிகமழ்‌ செம்பவளத்‌ தூராகிய வாய்மலர்ந்தருளி
யொருதிருவை யாறுடையா ருரைத்தலுமற்‌ றவ னுறைப்பான்‌. 38
[38. சுருதி - சாமவேதம்‌, செம்பவளத்தூர்‌ - சிவந்த பவளக்‌ கொடியின் வேர்‌.]

செய்தவத்தி னுயர்ந்தோர்‌ செய்கின்ற தவத்தோர்க்கு
மெய்தவினிச்‌ செய்யவரு தவத்தோர்க்கு மனத்தெண்ணங்‌
கைதவமி லுனைக்காணுங்‌ காட்சியே யெனிலெனக்கு
மெய்திகழ்‌ வெளிப்பட்டாய்‌ வேண்டுவரம்‌ பிறிதுண்டோ. 39
[39. கைதவம்‌ - கைமேலானதெனும்‌ தவம்‌, வேண்டுவரம்‌ - நான்‌
வேண்டுகின்ற வரம்‌.]

இலம்பாட்டி னர்க்கின்றோ ரெரியிரத வாதத்தா
னலம்பாட்டின்‌ மருந்தொன்று நாடியகழ்ந் திடுகுழியி
னிலம்பாட்டி னேர்பட்ட நிதிவிட்டுப்‌ பெறுமாறென்‌
புலம்பாட்டில்‌ நினையன்றிப்‌ புதியவர மினியாதோ. 40
[40. இலம்பாடு – வறுமை; இரதவாதம்‌ - இரசவாதம்‌, செம்பைப்‌
பொன்னாக்கும்‌ சித்து, புலம்பாட்டில்‌ - அறிவால்‌ அறியும்‌ செயலால்‌].

கஞ்சன்மிகு பதுமமலர்‌ கடவுளர்தஞ்‌ செல்வமெலாந்
துஞ்சிவிழி த்திடுவதன்முன்‌ துகலறக்‌ கெடுமதனாற்‌
றுஞ்சாநின்‌ றஞ்சலுறு பெருஞ்செல்வந்‌ தருகுதியேல்‌
பஞ்சநதி பிரியாமை பரிந்தருள்க வரம்‌என்றான்‌. 41
[41. கஞ்சன்‌ - திருமால்‌, பதுமமலர்கடவுள்‌ - பிரமன்‌, துகலற - சிறிதுமில்‌
லாமல்‌, அஞ்சலுறு - அஞ்சத்தக்க, பஞ்சநதி - திருவையாறு.]

நித்தியெனுங்‌ கேட்டருளி நீநினைத்த பொருணன்றால்‌
முத்திமுதற்‌ காரணமென் றகமலர்‌ முகமலர்ந்து
சித்திதரு தலவாச வரங்கொடுத்து தியானத்தா
லத்திருவை யாறமர்ந்தான்‌ அந்தணனு மங்கிருந்தான்‌. 42
[42. நித்தி - நிலைத்தவை, சித்தி- விரும்பியதைப்‌ பெறும்‌ ஆக்கம்‌,
தியானம்‌ - மனத்தால்‌ நினைத்திருக்கும்‌ செயல்‌.]

தலவாசம்‌ பெறுமதனாற்‌ சிவசருமன்‌ சங்கரன்பால்‌
உலவாத பேரின்ப முத்தியுல குற்றான்மேற்‌
பலவாகுந்‌ தனையடைந்தோ ரிடும்பைபரித்‌ தளித்தகதை
சிலவாகமிங்‌ குரைத்ததுனக்‌ கெனமுனிவன்‌ செப்பினான்‌. 43
[43. தலவாசம்‌ - திருவையாற்றுத்தலத்தில்‌ வாழ்தல்‌, உலவாத - அழியாத, இடும்பை - துன்பம்‌.]
-----------

This file was last updated on 17 Feb. 2026
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)