pm logo

சிதம்பர சுவாமிகள் இயற்றிய
திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு
சிதம்பர சுவாமிகள் சரித்திரம் & பிள்ளைத்தமிழ்.


tiruppOrUr cannitit tiraTTu by
citampara cuvAmikaL
part 1 - citampara cuvAmikaL life history
in Tamil Script, Unicode/UTF-8 format


Acknowledgements:
Our Sincere thanks go to Digital Library of India and Tamil Virtual Academy for providing.
a scanned PDF version of this work for ebook preparation.
This e-text has been prepared using Google OCR online tool and subsequent proof-reading of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2026.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation of electronic texts of
Tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

சிதம்பரசுவாமிகள் இயற்றிய
திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு
பாகம் 1 : சிதம்பர சுவாமிகள் சரித்திரம்.

Source:
சிதம்பர சுவாமிகள் இயற்றிய
திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு
சென்னை: திருமகள் விலாச அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பெற்றது.
1925.
---------
திருப்போரூர் சந்நிதிமுறைத் திரட்டு பிரபந்தங்கள்
உள்ளடக்கம்

1. சிதம்பரசுவாமிகள் சரித்திரம் 22.விருத்தக் கலித்துறை
2. பிள்ளைத்தமிழ். 23. அட்டகம்
3. அலங்காரம். 24. பெருங்கழி நெடில் விருத்தம்
4. மாலை. 25. குறுங்கழி நெடில் விருத்தம் 1
5. தாலாட்டு 26. குறுங்கழி நெடில் விருத்தம் 2
6. திருப்பள்ளியெழுச்சி 27. குறுங்கழி நெடில் விருத்தம் 3
7. பெரியகட்டியம் 1 28. குறுங்கழி நெடில் விருத்தம் 4
8. சின்னகட்டியம் - 1 29. குறுங்கழி நெடில் விருத்தம் 5
9. பெரியகட்டியம் - 2 30. குறுங்கழி நெடில் விருத்தம் 6
10. சின்னகட்டியம் - 2 31. குறுங்கழி நெடில் விருத்தம் 7
11. எச்சரிக்கை 32. குறுங்கழி நெடில் விருத்தம் 8
12. வண்ணத்தாழிசை 33. குறுங்கழி நெடில் விருத்தம் 9
13. மட்டுவிருத்தம் 34. குறுங்கழி நெடில் விருத்தம் 10
14. கலிவிருத்தம் 35. சந்தக்கழி நெடில் விருத்தம்
15. பெருங்கழிநெடில் விருத்தம் 36. கட்டளைக்கலித்துறை
16. குயிற்பத்து 37. கட்டளைக்கலித்துறை
17. கிளிப்பத்து 38. நேரிசை வெண்பா
18. வண்டுவிடுதூது 39. அடைக்கலப்பத்து
19. கட்டளைக்கலிப்பா 40. விருத்தக்கலித்துறை
20. கொச்சகக்கலிப்பா 41. விடுபாட்டுகள்
21. ஊசல்
--------------------
தொண்டைநாட்டின்சண் ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி ஸ்தலங்களுள் ஒன்றாகிய
திருப்போரூர் ஆதீனம் சிதம்பரசுவாமிகள் சரித்திரம்.

முருகையன் துணை.

சிதம்பர சுவாமிகள் பாண்டிநாட்டிலே திருவாலவாய் முதலாகிய பன்னிரண்டு திருநாமம் பெற்று விளங்குந் திவ்விய க்ஷேத்திரத்திலே சங்கப் புலவர் மரபிலே தோன்றினவரும், அங்கயற் கண்ணம்மை உபாசனாவிரத மேற்கொண்டவரும் ஆகி சிதம்பர கவிராஜர் என்னும் பெயரினராய் ஒருவர் புகழ்பெற்றிருந்தனர்.

கொங்குதேயத்தின்கண்ணுள்ள அவிநாசியிலே, வீர சைவாசாரியராகிய சிவப்பிரகாச சுவாமிகளது பாகிநேயரும் அவர் திருவருள் பெற்றவருமாகிய ஸ்ரீ சாந்தலிங்க சுவாமிகளிடத்தில் ஞானோபதேசம் பெற்ற குமாரதேவர், தமது ஆசிரியரது கட்டளையின்படி விருத்தாசலத்திலே மணிமுத்தா நதிக்கரையிலே ஒரரசம நீழலின்கண் அமர்ந்திருந்தனர். அப்போது ஓர் காரணத்தால் அம்மரத்தின்மேல் அநேக வருஷகாலமாய்க் காத்திருந்த பிரமரக்ஷசு அவர்க்கெதிர்சென்று வணங்கலும், குமாரதேவர், 'நீ யார்? உன்வரலா றென்னை?' என்று வினாவி, அதன் பூர்வ சரித்திரத்தை நன்குணர்ந்து, அது முன்னையதேகம் பெற்றுய்யுமாறு அநுக்கிரகித்து, தமது நியமத்தின்படி ஆறுமாதத்திற் கோர்முறை அவிநாசிக்குக் குரு தரிசனார்த்தமாய் செல்லுவாராயினார். அம்மார்க்கத்தின்கண் ஒரூரிலே அடியார் பத்தியிற் சிறந்த ஒரு ரெட்டியாருக்குத் தமது அநுக்கிரகத்தினாற் பிறந்த புத்திரர்களுக்கு அவ்வூர்க்குவந்த மேற்சொல்லிய சிதம்பர கவிராஜர் அந்த ரெட்டி. யாரின் வேண்டுகோளுக்கியைந்து கல்வி பயில்வித்து வந்தனர்.

அப்படி வருகையில், அங்குவந்த குமாரதேவர் சிதம்பர கவிராஜரது கல்வித்தேர்ச்சியை நோக்கி ஆட்கொள்ளக் கருதிச் சில வேதாந்தச் சொற்களுக்குப் பொருள் வினவ, அதற்கவர் உத்தரஞ் சொல்ல மாட்டாதவராய் நிற்கக்கண்டு, "வினாவிய சொற்கள் அரும்பொருளினவாதலால் இன்னொரு கால் யாமிங்கு வரும்போது சொல்க" என்று கட்டளையிட்டு, அவிநாசிக்குச் சென்று ஆசிரியரைத் தரிசித்து மீண்டு மவ்வூர்க்கு வந்து. கவிராஜரை அச்சொற்களுக்குப் பொருள்வினவ, அப்போதும் உத்தரஞ் சொல்ல மாட்டாதவராய் நின்ற கவிராஜரைக் கிருபாநோக்கத்தால் மூன்றுமுறை கேசாதி பாத வரையில் நோக்கி, அவிநாசி வழிக்கொண்டனர் கவிராஜரும் அச்சொற் பொருள்களை யுள்ளுணர்ந்து, அன்பும் பத்தியும் மிகுந்து, அவரைப் பின்றொடர்ந்து சென்று, மறுநாளுக யத்தில் அவிநாசியடைந்து, பரிணாமத்திற் புகுந்து புறங்காத்திருக்க, ஒடுக்கத்தினின்றும் வெளியே போந்த சாந்தலிங்க சுவாமிகள், இருவரையு நோக்கி மீண்டுள்ளே எழுந்தருளி, தாமியற்றிய வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல் முதலிய நான்கு நூல்களையும், கண்ணுடைய வள்ளலார் இயற்றிய ஒழிவிலொடுக்கத்தையும் கொண்டுவந்து, தரிசனந் தந்து, குமாரதேவரை நோக்கி, "அப்பா! உன்னைப் புத்திரனாக யாங்கொண்ட வாறு நீயும் ஓர் புத்திரனைக் கொணர்ந்தாய், பரிபாகமே லிட்ட இவ்விளவிலைக் கொண்டு இந்நூல்களுக்கு உரையியற்று- விக்கக்கடவை என்று அந்நூல்களைத் தந்தருள, அவற்றைக் குமாரதேவர் இருகையினாலு மேற்றுக் கண்களி லொற்றிக்கொண்டு சிதம்பர சுவாமிகளிடத்திற் கொடுக்க, அவரும் அவைகளைப் பெற்றுச் சிரமேற்கொண்டு வணங்கி, அவருடன் சென்று விருத்தகிரியை யடைந்தனர்.

பின்பு சிதம்பரசுவாமிகள் வீராகம உத்தரசைவ சித் தாந்த நிரூபணமாகிய வீரசாமானியாதி தீக்ஷையை விதிப்படி யநுக்கிரகிக்கப்பெற்று அங்கயோகங்களையு முணர்ந்து ஞானோபதேசஞ் செய்யப்பெற்று ஞானசமாதி கூடியிருக் கையில், ஒருநாள் மயில் ஒன்று தோன்றிச் சொரூபத்தைச்
சிறகால் மறைத்து நிருத்தஞ்செய்ய, அதைக்கண்டு ஆசிரிய ரிடத்திலே சென்று விண்ணப் செய்தனர். அதுகேட்டு "நம்மை யிங்குப் பெரியநாயகியார் ஆட்கொண் டுபிர்த்துணை யாய் நிற்கின்றபடி உனக்கும் உறுதித் துணைபாய் நிற்கின்ற அங்கயற்கண்ணம்மை அதனைப் புலப்படுத்தும்' என்று விடைதந்தனர். குருவாக்கியப்படி மதுரைக்குச் சென்று நாற்பத்தைந்து நாள்வரையில் நாடோறும் பொற்றாமரையில் மூழ்கி நித்திய கருமானுஷ்டானங்களை முடித்து மத்தியான காலத்தில் ஒருபிடி பச்சறுகும் மூன்றுகை தீர்த்தமும் உ உட் கொண்டு நிஷ்டைசாதித் திருக்கையில், தேவியார் சோதனை நிமித்தம் நேரும்படி செய்த சுரம் கைகாற்பிடிப்பு முதலிய நோய்களுக்கு அஞ்சாமலும் மனநிலைகலங்காமலும் விரதம் தவறாமலும் நின்று, மீனாக்ஷியம்மையை நோக்கிக் கலிவெண் பா என்னுமோர் தமிழ்ப் பிரபந்தம் பாடித் துதித்தனர்.

தேவியார் திருவுளமகிழ்ந்து எதிர்வந்து அப்பிணிகளுடன் மலப்பிணியும் நீங்குமாறு தமது மலர்க்கரத்தாற் றடவி, "இப்பதிக்கு வடபால் முப்பதுயோஜனை தூரத்திலே யுத்தபுரி என்னும் சுப்பிரமணிய க்ஷேத்திரம் ஒன்று முன்பு ஆறு தரம் பிரசித்தியாயிருந்து இப்போது ஜீர்ணப் பட்டிருக்கின் றது; அது ஏழாந்தாம் உன்னாலே ஜீர்ணோத்தாரணமாகி நிலைபெற்று விளங்க வேண்டுவது, ஆதலால், அக்கடவுள் உனது நிஷ்டாநுபவத்தில் மயில் வடிவமாய் வந்து சொரூபத்தை மறைத்துநின்றனர். அக்கடவுளே உமது குருவடி வாய் எழுந்தருளித் தரிசனந்தந்து, மேல் உண்மையை விளக். கும்; நீ இதுபோழ்தே அத்தலத்திற்குச் செல்க" எனத் திருவுளம்பற்ற, அவ்வாறே தேவியா ரருட்பிரசாதத்தைச் சிர மேற்கொண்டு வண்ங்கி யுத்தபுரி யென்னுந் திருப்போரூரை நோக்கி வருவாராயினர்.

அந்நாளில் ஜீர்ணமுற்றுப் பனங்காடாகிப் பலவகைக் கொடி செடி மரங்களாலும் அடர்ந்திருந்த திருப்போரூரில் ஓர் பெண்பனை மூலத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் புற்றிடங் கொண்டு வீற்றிருந்தனர். அந்தக் காட்டின்கணுள்ள பனை களின் பலன்களால் ஜீவனஞ் செய்துவந்த சான்றார்களுள் ஒருவன் ஒருநாள் அப்பெண்பனை நன்றாய் ஓங்கி வளர்ந்து ஒலைக்கோர் பாளையாக அரும்பி விசேஷித் திருந்ததைக் கண்டு, அதனைச் சூழ்ந்திருந்த ஊனாங் கொடிகளைக் களைந்து, பாளைகளைக் சிணுக்கறுத்துக் குடங்களை யவற்றினுட்புகுத்தி மதுவின் பயனைக் கைக்கொண்டு, விசேடப் பிரயோஜனம் பெற்று, அன்று மாலைப்போழ்தில் வந்து பார்க்கையில் முன் போலவே மரம் கொடிகளால் மூடப்பட் டிருக்கக்கண்டு, அவற்றையு மறுத்து மதுவின் பலனைக் கைக்கொண்டனன் இவ்வாறு அதிகரித்துச் சுற்றிக் கொள்ளுகின்ற கொடிகளை நாடோறும் களைவதால் வருத்தமுற்று அவற்றை வேருடன் களைய எண்ணிச் சிலருடன் கருவிகளைக் கொண்டு கொடி களைக் களைந்து பருத்துக் கீழேயுருவியோடிய அடிவேரைப் பற்றி வெட்டுகையில் புற்றில் திருமேனி மறைந்துள்ள சுயம்புவின்மேல் வாள்தாக்கிச் சிவப்பு உண்டாக, சான்றான் முதலியோர் மூர்ச்சையாய் வீழ்ந்தனர். அதுகண்ட பிறனொருவன் அயலில் மரமேறிக்கொண் டிருந்தவர்களுக்குத் தெரிவித்துப் பெண்பனையின் அடியை நன்றாகச் சோதித் துப்பார்க்கையில் புற்றினுட் சுயம்புவைக்கண்டு அஞ்சிப்பத் திமேலிட்டு முருகக் கடவுளைத் தோத்திரஞ் செய்ய, மூர்ச்சை யாயினோர் தெளிந்தெழுந்தனர்.

அது முதலாக அவ்வூர்ச் சான்றோர் தமக்குள்ளே ஏணிக்கோர் பெரியபணம் வாங்கிப் பூசை முதலியவை நடத்திவரும்படிக்குச் செய்துகொண்ட ஏற்பாட்டின்படி ஆதிசைவர் ஒருவரைக் கொண்டு திருமஞ் சன முதலிய செய்வித்துக் கற்பூராராத்திகள் செய்விக்கையில் அதைச் சூழ்ந்த ஊரும் அந்நாளில் இயற்றிய கூரைக்கட் டடமாகிய குற்றாலயமும் பற்றிக்கொண்டன. அது கண்டு யாவரும் ஆச்சரியமும் பயமு மடைந்திருந்தனர்.

இது நிற்க, சிதம்பரசுவாமிகள் மதுரையினின்று போ ந்து விருத்தாசலமடைந்து குமாரதேவர் நிஷ்டையிலிருக்கக் கண்டு அவரை வலஞ்செய்து வணங்கி வடதிசை நோக்சிச் செல்லுகையில். பொம்மையபாளயம் என்னும் ஊரிலே சதுரக்கள்ளிப்பாலையே உணவாகக் கொண்டிருக்கும் சிவாநு பூதிச் செல்வராகிய பாலையசுவாமிகள், சிதம்பர சுவாமி ளது அநுபவ சித்தியைக் கேள்வியுற்று அவரைப்பார்க்க விருப்பமுற்றிருக்கையில் தாமும் அவரைக்காணுமாறு அப் பாளயம் நோக்கி வருகையில் இருவரும் ஒருவரையொருவர் எதிர்வரக்கண்டு அளவளாவி, திருமடத்தின் தெருத்திண்ணை யிலிருந்து தந்ததாவனஞ் செய்துகொண்டே எட்டுநாள் வரையில் சுவாநுபவத்தைக் குறித்து வசனித்துக்கொண்டி ருந்து, ஒன்பதாநாள் உதயத்தில் வாய்பூசி சிவார்ச்சனை முடித்து அவருடன் புசித்து விடைகொண்டு கிளியனூர் வழிக்கொண்டு சென்றனர். அப்போது அவ்வூர்ச் சோலையில் பாவோடிக்கொண்டிருந்த செங்குந்தருள் இருவினை யொப்பு மலபரிபாகமு நேரிட்டிருந்த ஒருவிதந்துவாகிய நரைமூதாட்டி தம்மைக் கண்டு பணிந் துபசரித்திட்ட புற் கையமுதைப் புசித்து, அம்மூதாட்டியின் வேண்டுகோட் கியைந்து, அங்கு ஓராண்டிருந்து, பின்னர் "யாமிதுபோது ஜீர்ணோத்தாரணஞ் செய்யவேண்டிச் செல்கின்ற திருப்போ ரூர்க்கு வருக' என்று கட்டளையிட்டு, திருப்போரூராகிய பனங்காட்டை யணுகி, அங்கு வள்ளைப்பூடால் நிறைந்த ஓடையில் நீராடி, நியமங்கள் முற்றி, திருப்போரூர்ப் பிரணவமலைச் சாரலில் வேம்படி சாரலில் வேம்படி விநாயகர் கோயிலில் வந்திருந்தனர்.

மூன்றாநாள் மாலைப்போதில் அத்தீர்த்தத் திற்கு வருகையில், சுவாமிகளணிந்திருந்த ஆபரணங்களைப் பறித்துக் கொண்டுபோக யத்தனித்த கள்வர்கள் கண்தெரியாமல் நடுங்கி, சுவாமிகளை நோக்கி தாங்க ளின்னாரென்றும் செய்யவந்த காரியம் இன்னதென்றும் சொல்லி நமஸ்கரித்து க்ஷமித்தருளவேண்டு மென்று ஓலமிட்டனர். அதற்கிரங்கி அவர்களை நோக்கி, "நீங்கள் இதுவரையில் சம்பாதித்த பொருளில் மிகுந்தபொருளை நம்முருகக் கடவுளுக்கு அற்பண மாக்குவீராயின் கண்கள் தெரியுமாறு சுவாமி கடாக்ஷிப்பார்" என்ன, 'அவ்வாறே தத்தஞ்செய்தோம்'' என்று சொன்ன வுடன் மறைந்தகண்கள் நன்றாய்த் தெரியவே, சுவாமிகளின் அடிபணிந்தெழுந்து தோத்திரஞ் செய்து பொருளைக் கொணர்ந்து தந்துபோயினர். சுவாமிகள் ஓடையில் நீராடி நியம முடித்து அப்பனங்காட்டை நோக்கி வரும்போது அதன் நடுவில் பெண்பனை மூலத்தில் சுயம்புவாய் முளைத்திருந்தருளிய முருகக் கடவுளைத் தரிசித்து அன்றுதொடங்கிச் சரண சம்பந்தமில்லாமல் தரிசனமாத்திரஞ் செய்து கொண்டு பிள்ளையார் கோயிலில் வசித்திருந்தனர்.

ஒருநாள் ஸ்ரீ சுப்பிர மணியர் குமாரதேவரைப் போல எழுந்தருளிவரக்கண்டு, அச்சமுற்று விரைந்தோடிச் சரணஞ்செய்து நின்று, அங்கயற் கண்ணம்மை யருளியதை விண்ணப்பஞ் செய்தனர். அதுகேட்டு, முருகக்கடவுள் "ஆயின் யாமிருவரும் சுவாமி யைத் தரிசிப்போம் வருக'' என்றருளி, இருவரும் பெண் பனையை யணுகாநிற்கையில், சுவாமிகள் ஆசிரியரை நோக்கி "சுவாமி! ஆதியி லிவ்வாலயம் எவ்வாறிருந்தது'' என, ஸ்ரீ சுப்பிரமணியர் அவர் நெற்றியில் திருநீறு சாத்தி நேத்திரத் தாற் பரிசித்து ஆலயமுதலியவற்றைப் பார்ப்பாயாக' என்றனர். ஆலயம், திருமதில், கோபுரவாயில், துசஸ்தம்பம், மாடவீதி, மடாலயம், தீர்த்தமுதலிய யாவும் சிற்பநூலளவுப் படி சிறப்பாக விளங்கி யிருக்கக்கண்டனர்.

ஆசிரியர் அவ்வா லயத்துட் புகுந்து சுவாமி சந்நிதியில் சிதம்பரசுவாமிகளுக்கு அநுக்கிரகித்து 'ஹர ஹா,என்று மூலஸ்தானத்திற் சுயம்பு வாய் வீற்றிருருந்த தம்மைத்தாமே நோக்கி அஞ்சலி முகிழ்த் தாராயினர். அப்போது முருகக்கடவுளாகிய ஆசிரியரது திருவடிகளை எதிராகக்கொண்டு வடதிசையாய் சாஷ்டாங்க மாய்ச் சரணம்புரிந்து எழுவதற்குமுன் ஆசிரியராய் எழுந்தருளிய மூர்த்தி திருவுருக் கரந்தனர். சிதம்பர தேவர் பனை மர மூலத்தில் சுவாமி பழையபடியே யிருக்கக்கண்டு ஆனந்த பரவச ராயினர்,

சிதம்பர சுவாமிகள் கூன் குருடு குட்டம் முதலானவைகளை தீர்த்தல்.

இவ்வாறு ஆசிரியராய் வந்தாட்கொண்ட காரணத்தால் அந்நாள் தொடங்கிச் சரணசம்பந்தம் நடந்துவருகின்றது. பின்பு சிதம்பரசுவாமிகள் நெஞ்சுவிடுதூது என்னும் பிரபந்தமியற்றி விருத்தகிரியில் விருத்தகிரியில் குமாரதேவர்க் கனுப்பி விட்டு வழக்கப்படி விநாயகர் கோயிலில் வசித்திருந்தனர். அப்படி யிருக்குநாளில் அவ்வாலயத்தின் வடபாலுள்ள கண்ணுவப்பேடு என்னும் ஊர்க்கருகில் நெடுநாளாய் நேத்திரந் தெரியாதிருந்த ஒருகுலாலன் தனது பிள்ளைகளால் சுவாமிகளின் பிரபாவங்கேட்டு அவரிடம் வந்து நமஸ்கரித்துப் பிரார்த்திக்க, சுவாமிகள் "நீர் விரும்பியபடி ஸ்ரீ சுப்பிரமணி யர் கடாக்ஷித் தருளுக'' எனச் சிந்தித்தவுடன் அவனுக்குக் கண்கள் தெரிந்தன. அக்குலாலனது வேண்டுகோளால் அவனது சிறுகுடிலின்கண் ஓர் புளிய மரநீழலில் நெகிடி வளர்த்துக்கொண்டு வீற்றிருந்து, அதன் வடகிழக்கிலுள்ள காலவாக்கம் என்னு மூரிலிருந்து வந்து சரணமடைந்த ஓர் முடவனைத் திருநீற்றால் பவித்திரனாக்கி, மீண்டு அநேகர் க்குச் சுரம், சூலை, வயிற்றுவலி, மகோதரம், குடவாதம், குட் டம் முதலிய பன்னோய்களையும் நெகிடித் திருநீற்றால் நிவர் த்திசெய்தனர். இப்படி துன்பம் நீங்கிச் சுகம்பெற்ற பலருஞ் செலுத்திய காணிக்கைகளையும் முன்னர்க்கள்வர் தந்து போன திரவிய முதலியவற்றையுங் கொண்டும் தாமும் அடிமையாய் வெற்பணிசெய்தும் ஆலயத் திருப்பணியை நடத்திவர உத்தேசித்திருந்தனர்.

அதுகண்டு அல்வூர்க்குடிகளும் சான்றார்களும் வந்து நமஸ்கரித்து "தேவாலய ஜீர்ணோத் தாரணஞ் செய்து நித் தியபூசை முதலியவற்றை நடத்தவேண்டுவது தேவரீர் கட மை யாதல் வேண்டும்" என்று வேண்ட, சுவாமிகள் "நீவிர் இக்கிராமத்தை ஆண்டவர்பேரால் தத்தஞ் செய்து, திருப்பணி முதலான காரியங்களில் வேண்டிய பணிகளை எப்போ துஞ் செய்துவரக் கடவோ மென்றும் உறுதி கூறிச் செப் பேட்டில் வரைந்து தருவீராயின் நுமது வேண்டுகோளுக் கியைவோம்'' என்ன, சுவாமிகளின் அநுஞையின்படி நடந்துவந்தனர்.

ஆலய கர்ப்பக்கிருகம் கட்டத்தொடங்கியபோது முற் கூறிய கிளியனூர் மூதாட்டி தனது சரீரப்பிரயாசையால் சேகரித்த ஒரு பொன்னைக் கைக்கொண்டு திருப்போரூரடைந்து சுவாமிகளைத் தரிசித்து அப்பொன்னைக் காணிக் கையாகவைத்துத் தண்டமிட, சுவாமிகள் அம்மூதாட்டி யினது பேரன்பை யுள்ளுவந்து அப்பொன்னைத் திருக்கரங்களாலேற்று நெற்றியிலும் சிரத்திலும் கண்ணிலும் வைத்து வைத்து ஆனந்தமுற்று, அதனைக் கர்ப்பக் கிருகத்தின் சிகர வேலைக்கு உபயோகித்தனர். அப்போது தரிசனார்த்தம் அங்குவந்த சென்னைப் பாளையத்தா செட்டியார் என்பவர் அவ் வற்புதத்தைக்கண்டு இரண்டுபை விராசன் கொண்டுவந்து காணிச்சையாகச் செலுத்த, 'எட்டுநாளைக்குப் பின்னர்த் திரு உளந்திரும்பி அதனைத் திருப்ணிக்கு உபயோகித்துக்கொள் ளும்படி கட்டளை யிட்டனர்.

சிதம்பர சுவாமிகள் நிஷ்டைகூடியிருத்தல்.

இவ்வாறு கிடைத்த காணிக்கைகளைக் கொண்டு கோ யிற்றிருப்பணிகளை நிறைவேற்றி யந்திரஸ்தாடன மமைத் தக் குப்பாபிவேக முதலியன நிறைவேற்றி நித்திய நைமித் தியங்களை நடத்திவந்தனர். இதுநிற்க, தாம் வீற்றிருந்த புளியமரத்தின் தென் கிழக்கில் ஓர் பரிணாமம் நிருமித்து, அதன் வடபா லிருந்த சிறுகுளத்தைத் தடாகமாக்கி, அதன் மேற்பால் ஓர் சிற்றாலயங் கட்டுவித்து, அதில் விநாயக பிரதிஷ்டையும் வேலா யுத பிரதிஷ்டையம்செய்து, அப்பிள்ளையார்க்குச் சுந்தர விநாயசர் என்றும் தடாகத்திற்கு வேலாயுத தீர்த்தம் என் றும் பெயர்தந்தனர்.

முன்னர் நெஞ்சுவிடுதூது என்னும் பிரபந்த மியற்றி ஆசிரியரிட மனுப்பி, ஆலயத் திருப்பணி தொடங்கி நடாத்தி வருங் காலத்தில் திருப்போரூர்ச் சந்நிதிமுறை, பஞ்சா திகாரவிளக்கம் வைராக்கியசதகம் மு தலிய ஐந்து நூல் களுக்கும் உரைசெய்து, திருவாசகத்தில் "புணர்ப்பதொக்க வெந்தை என்னை" என்னும் பாசுரத்திற்கு ஆசிரியராய் வந்த முருகக் கடவுள் கட்டளையின்படி பதவுரை வரைந்த ருளினர்.

பின்னர்க் கிளியனூரம்மைமேல் அருள்புரிந்து ஞானம்மை எனத் தீட்சாநாமந் தரித்தனர். அந்த ஞானம் மை நெடுநாளிருந்து, ஓர் ஏகாலிப்பெண்ணுக்கு அநுக்கிர கஞ்செய்து, சுவாமிகள் கட்டளையால் கிளியனூரையடைந்து நிஷ்டாநுபவம் என்னும் சாஸ்திரமியற்றி, அநுபூதியிலொ நிக்கமுற்றனள் ஏகாலியம்மையும் சிலநாட் பிறகு ஒடுக்க மாயினள் இவ்விருவர் சமாதிகளும் அவ்வூரில் இந்நாள்ள வும் ஆராதிக்கப்பட்டு வருகின்றன.

பூவிருந்தவல்லி என்னும் ஊரைச்சார்ந்த கோவூரிலே வேளாண் மரபிற்றோன்றிய திரிபுராந்தக முதலியார் புத்தி ரர் சிவசங்கரம் என்னும் பெயருள்ள ஓர் சிறுபிள்ளையை இளமைப் பருவத்திலேயே திருப்போரூர் முருகக்கடவுள் ஆட்கொண்டருள, அச்சிறுவன் சென்னியிற் சடைவளரப் பெற்றுப் பித்தனைப்போல் ஓடியும் பாடியும் கூத்தாடிக் கொண்டு மிருந்தனன். இந்த ரகசியமறியாத தந்தை ஆயுள் வேதியரைக்கொண்டு ஒளஷத முதலியவற்றால் தக்க சிகிச்சைசெய்தும் அம்மயக்க நீங்காமையால் திருப்போரூ ரடைந்து சிதம்பரதேவரைப் பணிந்து புத்திரனை எதிரிற்கிடத்தி பிள்ளையின் குறிப்பையுணர்ந்து முறையிட்டனர்.

ஆறு முகந் துணைசெய்யும்" என்றருளிய வண்ணம் ஆண்டவர் கிருபையால் பிள்ளைக்கு அம்மயக்கம் நீங்கினதால் தந்தை மகிழ்கூர்ந்து புத்திரனைச் சுவாமிகளிடத்தில் ஒப்புவித்து விடைகொண்டனர்.

திருப்போரூர் மூலஸ்தானம்.

பின்பு அப்பிள்ளைக்குச் சிவலிங்காரண முதலியவற் றை யநுக்கிரகித்து, திருநீற்றுப்பையும் வேலாயுதமும் ஓர் தட்டுங்கொடுத்து, "குழந்தாய், இன்றுதொட்டு மடாலயத் தில் பிச்சையேற்றுத் திருப்பணிகளை நடத்தி வருக" எனக் கட்டளையிட்டபடி சிவசங்கரசுவாமிகள் முயன்று பிரமோ ற்சவ முதலியவற்றைச் சிறப்பாக நடத்தி வந்தனர்.

சிலநாளைக்குப்பின் வைகாசிமாதம் விசாக பௌர்ணமி யில் தாம் சமாதயில் நிரதிசயானந்த நிலையிற் கலவாமற் கலந்து நிற்குஞ் செய்தி வருவதுணர்ந்து, அதற்கு முன்னாளாகிய சுவாதி நட்சத்திரத்தில் மஹேசுவரபூஜையும் மறு நாள் விசாகத்தில் ஸ்ரீசுப்பிரமணிய மூர்த்திக்கு மஹாபி ஷேகமும், மூன்றுநாள் தொடங்கி வேம்படி விநாயகர்க்கும் பிரணவமலைத் தியாக கைலாசநாதர் சந்நிதிமுதலியவற்றிற்கு முறைப்படி அபிழேகாதிகளும் செய்வித்துத் தரிசனஞ் செய்துவரக்கடவை என்று கட்டளையிட்டு, அன்று மஹேசு வரபூசையை நடாத்திக்காட்டி மறுநாள் வைசாக பௌர்ணி மியாதலால் அபிஷேக முதலியவற்றை நடத்துவிக்கும் படிக்கு அவரை ஆலயத்திற்கு அனுப்பி, தாம் வேலாயுத தீர்த்தத்தில் மூழ்கிச் சிவபூசை யாராதனை முடித்து ஒடுக்கத் தில் நிஷ்டைகூடி யிருந்தனர்.

அப்பொழுது முப்பதாமாண்டு | தொடங்கித் தொண் ணூறாமாண் டளவும் நாடோறுந் தவறாமல் தருவருண கிரியைப் பிரதக்ஷிணஞ் செய்துவந்த சோணாசலதேவர், தாம் விரும்பியாங்கு அருணகிரீசர் குருமுகூர்த்தமாய் மானி டச்சட்டைதாங்கி ஓர் ஆதிசைவரைப்போல தோன்றிக் கட்டளையிட்டவாறு திருப்போரூர்க்கு வா, அதை ஞானநோக் காலறிந்து வரவுபார்த்திருந்த சிதம்பரசுவாமிகளைச் சோண சலதேவர் அடைந்து சரணஞ்செய்து,

நேரிசை வெண்பா.
எடுத்தசன னங்கடோறு மீன்றெடுத்த தாய்மார்
கொடுத்தமுலைப் பாலனைத்துங் கூட்டில் - அடுத்துவளர்
பன்னா கணைதுபிலும் பாலாழி யுஞ்சிறிதா
மன்னா சிதம்பரதே வா.

நெடிலடி விருத்தம்.
நவகுணமுமுக்குறும்பு நவைகண்மற்றனைத்துந்தீர்த்து
பவகுணஞ்சற்றுந்தாக்காப் பரமயோகிகளாய்நின்ற
சிவகுணச்செல்வர்போற்றுஞ் சிதம்பரதேவாவென்ற
னவகுணம்போக்கியாள்வ தையநின்கடனதாமால்.

யானெனல்காணேன் பூரணவறிவின்
      யாதினுமிருந்த பேரிராளிநீ
தானெனநிற்கச் சமத்துறவென்னைத்
      தன்னவனாக்கவுந் தகுங்காண்
வானெனவயங்கி நின்றனவைம்பூத
      மார்க்கமாநெறி தந்துமாறாத்
தேனெனருசித் துளன்பரைக்கலந்த
      செல்வமே - சிவபெருமானே.

என்றுபாடித் துதித்துவணங்க, சுவாமிகள் கிருபை கூர்ந்து அவர் கோரிக்கைபை நிறைவேற்றியருளி தாம் பூஜாதிரவியங்களுடன் நிலவறைவழியாக ஸமாதி ஸ்தா னத்திலிறங்கி ஒடுக்கமுற்று நின்றனர். அச்சமயம் ஆல யத்தில் கர்ப்பூரதீபாராதனை நடந்துவரும் வேளையான தாதலால் சிதம்பரசுவாமிகள் ஆண்டவர் சந்நிதியில் அஞ்சலி யஸ்தராய்த் தோன்றி மூலஸ்தானத்தில் மறைந்திடக்கண்டு சிவசங்கர தேவரும் வேதியர் முதலிய பலரும் அற்புதமும் ஆனந்தமு முற்று ஹரஹர வென்னு மொலியுடன் பரவச மாயினர்.

சிவசங்கர தேவர் ஆண்டவர் அபிஷேகாதி திருப்பணி களைக் குறைவர நிறைவேற்றிப் பரிணாமத்திற்கு வருகையில் ஆசாரியர் பூரணதசையிலமர்ந்த முறைமைகளைக் கேள்வியுற்று அடக்கற்கரிய ஆராமை மேற்கொண்டு ஆசிரியர் ஒடுக்க முற்ற சந்நிதியினின்று.

கழிநெடில் விருத்தம்.
இக்கலியுகத்தி லெழுந்தவென்குருவே
      யின்பமேயன்பினு ணிறைந்த
முக்கனிரசமே முதிர்சுவையமுதே
      மூதறிவேமறைப்பொருளே
சர்க்கரையொடு கற்கண்டெனருசிக்குந்
      தயாளுவேத மியனேன்றனக்குத்
துக்கசாகரத்தைத் தொலைத்தருள்புரிந்தாய்
      தூயநீயெங்கொளித்தனையே.

தாழ்விலாப்பொருளே தனிமுதலான
      தயாளுவே தற்பரவடிவே
வாழ்வினிற்சிறந்த வதுலமெய்ஞ்ஞான
      வானந்தவமுதமே யடுப்போர்க்கேழ்வினை
பிறவியிடர்களைந் தளிக்குமின்பமே
      யெளியேனென்றன்னைச்
சூழ்வினையனைத்தும் தொலைத்தருள்புரிந்தாய்
      துணைவநீ யெங்கொளித்தனையே

இத்தலத்தினின்னடி யடைந்தோர்க்கின்பமே
      யன்பினிலுறைந்த மெய்த்தவக்
கொழுந்தேவிளங் குமாரமுதே
      வேதவேதாந்த தேசிகனே
சித்தமறிந்தென் செனனவெம்பகையை
      சிதைத்திட சிறியனேன் றனக்குச்
சுத்தமெய்ஞ்ஞான சுகமளித்தாண்ட
      சுகிர்தநீயெங் கொளித்தனையே.

அன்பினர்க்குரிய வங்கையிற்கனிபோல
      வமர்ந்திடும்முதலே யெவையுந்
துன்பெனக்கரந்த தோன்றலேதுணையே
      தொடுத்திடக் கறியவான்பொருளே
மன்பதைக்கெல்லாம் அருளுநற்பரமே
      மாதவவடிவமே யடியேற்சென்
பிறப்பிறப்பை தவிர்த்தருள்புரிந்த
      வெந்தைநீ யெங்கொளித்தனையே.

பத்திமைபுரியப் பரிந்தெனையழைத்துப்
      டணித்து வரவெனக்கினிய
புத்திகளுரைத்து போகெனவிடுத்துப்
      புண்மையேன் றன்மையையறிந்த
நித்தநிமல நிட்கள் நிறைவே
      நீணிதியே யருட்குருவே
முத்தியங்கடலே முழுமறைப்பொருளே
      முதல்வநீயெங் கொளித்தனையே.

ஐயனேயருளா லடியனையாண்டிங்
      கருட்குருவென்ன வீற்றிருந்த
துய்யனே துணையே தோன்றலே
      நிறைந்தசுகக் கடலமுதேயெனையிவ்
வையமீதிருத்தி வடியினை மறைத்த
      வண்மையை யறிகிலேன்
தமியேனுய்யுமா றருள்வாய் சிதம்பர
      தேவேயோவென வுண்ணனைந்தழுதார்.

என்னும் இதுமுதலிய செய்யுளால் மனமுருகித் துதித்துத் துயரப்படக்கண்ட சோணாசலதேவர் ஒடோடியும் வந்து, ஆராமையை ஒருவாராற்றி, அவரைச் சிதம்பரசுவாமிகளது ஆசனத்திலிருத்தி, ஆண்டுதோறும் வைசாக பௌர்ணிமி யிலும் அதற்கு முன்னாளிலும் பௌர்ணிமிக்குப்
பின்னாள் களிலும் மஹேஸ்வரபூஜை அபிஷேக முதலிற்றைத் தவ றாமல்நடத்த வேண்டுவதென்று சிதம்பரசுவாமிகள் கட்ட ளையிட்டருளிய முறைமையைத் தெரிவித்து, தாமும் அமுது கொண்டு விடைபெற்றுத் திருவண்ணாமலைக்குச் சென்றனர்.

இனிச் சிதம்பரசுவாமிகள் ஆதீனத்தில் இரண்டாவது பட்டம்பெற்ற சிவசங்கர தேவர் முதலிய பரம்பரை விருத் தாந்தங்களை அச்சிடப்பட்டு வழங்கும் சரித்திரத்தில் கண்டு கொள்க.

சிதம்பர சுவாமிகள் சரித்திரம் முற்றிற்று.
-------------------------

2. பிள்ளைத்தமிழ்.

வேம்படி விநாயகர்துதி.

அண்டகோடிகளுடன் றந்தவுடலியாவையு
        மரியமறைமுதல்களையு
    மக்கரமுமெய்ப்பதமுமைங்கலையுமந்திரமு
        மானபதகதியும்வாக்கு
மண்டியுண்டாகவருகுண்டலியொடைஞ்சத்தி
        மாமுகமெனப்படைத்த
    வள்ளிநாய கன்மீதுபிள்ளைபந்தமிழ் சொலவென்
        மதியினின்றருள்புரியுமாறு
பண்டைமாமலதிமிரம் வீண்டுபோகக்கிரண
        பானுகோடிகளென்னவே
    பழவடியாக்கமலமகலாதுநின்றொளி
        பரப்பியானந்தமுதவி
விண்டுவேமுதலானவண்டர்மாமுனிவர்நார்
        விக்கினமகற்றியாளு
    மேன்மைதருபோரூரினிம்பநிழற்குழவு
        வேழமுகனிருசரணமே.
------------
1. காப்புப்பருவம்.

திருமால்.

பூமேவுபொய்கைப்பொறிச்சிறமர் வண்டினம்
        பொங்கரின் விருந்தயர் தரும்
    போரூரின் முருகனைச்சீர்மேவுகுமரனைப்
        புனிதஞானக்குரவனைக்
காமேவு கடவுட்பசுந்துணர் விரிந்துநறை
        கடினமணத்தொடுபிலிற்றுங்
        கண்ணகன்னிழலரசுசசிகணவனுக்குதவு
        கந்தவேளைப்புரக்க
தூமேவுஞானசத்திக்கடலின்மொண்டுகிற்
        சொலிதசத்துவப்பொருப்பிற்
        றோமறவிவர்ந்துலகமெங்கும்பரந்துயிர்த்
        தொகைவகைப்பயிர்கடழையத்
தேமேவுமதுரம்பழுத்தொழுகுமென்மொழித்
        திருமின்கலந்துமிளிரச்
        செய்யபேரருண்மாரிபொய்யாதுபொழிகின்ற
        செங்கட்கருங்கொண்டலே. (1)
சதாசிவம்.

வேறு.
காரெனவாருயிர்மீ தருளே பொழி
        கண்ணனைவிண்ணவனைக்
        கந்தனையெந்தையை வந்தனையன்பர்
        கடும்பகைகொன்றவனைச்
சீர்சமராபுரியாளனைமாளுறு
        தேவர்மணாளனையோர்
        சின்மயரூபனைநன்மையெலாமுறு
        சேயினையருள் புரிக
வோர்வரிதாமுயிரியாவையு நேர்வினை
        யொத்துமலப்பகைபோ
        யொண்சுகமேவிடவைந்தொழிறந்திடு
        முத்தமசிற்பரமாய்ச்
சேருருவாயுருவாயிருவகையுஞ்
        செறிபொருளாய்நிறைவாய்ச்
        செம்முகமைந்தொடுசெம்மையினின்றருள்
        செய்தசதாசிவமே. (2)

பராசத்தி.
வேறு.
விடயவாவாரகஞ்சொருபவாவார்க்
        மெனப்பகர்விதங்களாகி
        விரிமலக்கங்குலுயிர்விடயஞானத்தினொடு
        மிகசொருபஞானத்தையுந்
தடையதாகச்செயத்தனுவாதிநாளையுந்
        தருமாயையறிவினாலு
        தண்ணருட்பேரறிவினாலுமத்தடை விடுந் .
        தகுபரையையஞ்சலிப்பா
மடலினோடெழுமவுணருடல் வேறுகூறுபட
        வலகை வேதாள பூத்
        மாடப்பெருங்கூகை கூவப்பருந்து நிழ
        னீடச்சிவந்த வடிவே
னொடியிலேவிய குகனை நெடியமான்மருகனை
        நிகரில்போரூர்முருகனை
        நுணிய கூரறிவு கொடுகருதுவோரமுதமென
        நுவலுமோரருள்புரியவே. (3)

விநாயகர்.
வேறு.

பகவதிகரவணைமிசைதுயில்பயிலு
மிகலறுக்குமரனையினிதருள் புரிய
வகரமுமுகரமுமகரமுமாகித்
திகழுறுபிரணவமெழுசிறுகளிறே. (4)

திருநீறு.
வேறு.
சோதிமகரக்குழைசெறிசுந்தரத்
        தோளீராறுடையானைச்
        சுருதியிறைக்குந் தண்டையந் தாட்டுணையென்
        முடியிற்பொறித்தானை
மாதுவளருஞ்சமரபுரி
        வாழ்வைவானோர்சிகாமணியை
        வடிவேலரசைமயிலரசை
        வந்துபுறங்காத்தளித்திடுமா
லாதிபகவன் ஞானவடி
        வழலிற்பூத்து நித்தியமா
        யணிந்தோர் தமக்குவசிகரமா
        யருந்தினோர் கட்காரமுதாய்
நீதியறியும்பசுமலத்தை
        நீக்குமொருநற்குறிகாட்டி
        நிகழ்பேரின்பக்கடலூட்டி
        நின்றபுகழ் வெண்டிருநீறே. (5)

ருத்திராக்ஷம்.

அரியமனமுமறி வரிதா
        யருவாய் நிறைவாயிருந்துமுன
ரமரர்திரிபுரஞ்செய்குறை
        யறையக்கேட்டு முக்கண்வழிக்
கரியகளச்செம்புயல்கருணை
        பொழியப்பெருக்குங்கடற்பிறந்து
கருது மடியார்பவக்கடலைக்
        கடத்துமணியைத்துதித்திடுவாம்
பெரியதவத்துக்குறு முனியெம்
        பெருமான் செவிவாய்மடுத்தருந்தப்
பிறங்குஞானமொழிகறவு
        பெய்யுங்குமுதவாயானைத்
தெரியறுமாமுகைகுறமான்
        றிளைக்குமுலைக்கோடுழவலருந்
திருமார்பகனைச்சமரபுரிச்
        சேயைப்புறங்காத்தளித்திடவே. (6)

பஞ்சாக்ஷரம்.
வேறு.
கருதரியபலவுயிர்கள் பந்தனைக்கார்க்கடற்
        கரையிவரவருகனலையன்பருட்காட்சியை
யருமறையுமறிவரிய வஞ்சுகப்பேற்றினை
        யரியசிவனுரிய பெயரைந்தினைப்போற்று துங்
குரவுகமழ்குறவனிதை கொண்கனைக்கார்த்திகை
        குடமுலையினமுதகடலுண்டகத்தேக்கனைத்
தருணகுமாரனையினிய தண்டலைக்சீர்ப்பொலி
        சமரபுரிதனினிலவுகந்தனைக்காக்கவே. (7)

திருமகள்.
வேறு.
பொற்குவடுபத்துநூறிலகுமுடிதொறுமிரவி
        பூணெனக்கொண்டுமதியம்
பொழிநிலவுவெள்ளத்தின்மிசைமி தந்தழகு செறி
        புண்டரிகமண்டுபுயலை
யற்புதத்தொடு கொண்டுமிளிரவப்புயனடு
        வரும்புநால்வகைமலரொடு
மஞ்சோதிமினலொன்றிருந்தெனவிருந்தொளி
        ரணங்கினைநினைந்துதொழுவா
மெற்செறிதிருப்பரங்குன்றாவிநன்குடி
        யிரும்பொழிற்றிருவேரக
மீறில்சீரலைவாய் விளங்குபழமுதிர்சோலை
        யென்னுமறைபுகழ்பதிதொறுங்
கற்குவடுதொறுமினியநற்சமரபுரியுமுறை
        கடவுளைக்கடவுளரெலாங்
கைமலர்குவிக்கவிருகான்மலர்படைத்தவொரு
        கந்தனையளிக்கவென்றே. (8)

ஸரஸ்வதி.
வேறு.
நெய்தலங்காடுமிருகாவிபொருவள்ளையு
        நிகழ்குமிழுமுகை முல்லையு
நிறைநறைக்குமுதமுந்தொடியுடைத்தோன்றியொடு
        நேர்கன்னிகாரமுகையு
மெய்தரிய நூபுரக்கமலமுஞ்செறிகடவு
        ளெகினம்வெள்ளைக்கமலமீ
தேர்பெற்றமறைமுதலகலை சொற்றிருந்தென
        விருந்தவளையஞ்சலிப்பாங்
கைதையங்கானமும்புன்னையங்கானமுங்
        கானனெய்தற்கானமுங்
கடிமணத்தொடுநறவுமகரமுந் தந்திலகு
        கல்யாணமாமறுகென
மைதவழ்பொழிற்புளினமலிகயற்புலவையும்
        வளையலவனுறுபசியையும்
வாராதகற்றியொளிர் நெய்தலஞ்சமரபுரி
        வருகுகனையருள்புரியவே. (9)

பலதேவர்.
வேறு.
எண்டிசையோர்வசுமெண்மர்கள் வயிரவ
        ரெண்மர்மருத்துவரு
மீரிருமூவருமோரொருபதின்மரு
        மீரறு சூரியரு
மண்டர்வியாழனடும்புயவீர
        ரலர்ந்தசரோருகமே
லந் தணனோரெழுமங்கையர் சோமனும்
        வந்தருளே புரிவார்
தண்டையு நீடுசதங்கையு நீளொளி
        தங்கியகிண்கிணியுந்
தாளிணைமாமலர்மீதினிலோசை
        தழைந்திடவந்துமையா
மொண்டொடி கொஞ்சவிருந்துகுறங்கி
        லுவந்தருள்கொங்கையமு
துண்டருள் கந்தனையஞ்சமராபுரி
        யொண்குமரேசனையே. (10)
-------------
2. செங்கீரைப்பருவம்.


மும்மையுலகெங்கும்பரந்தொளிபரப்பிடு
        முதற்பரையெடுத்தணைத்து
மூதருட்புனித நீர்நிறையவாட்டிப்பெருமை
        மொய்த்தநித்தி வாடையான்
மெய்ம்முழுதுமொத்தியிருவேறற்றவத்துவித
        வெண்ணீறணிந்துமிளிரும்
வீறுபூரணநிலப்பொட்டுமிட்டுப்பெரிய
        மெய்ஞ்ஞானதீபதட்டா
லம்மருவுமாலத்திசுற்றிமற்றிச்சையுட
        னானஞானங்கிரியையென்
றருள்செவிலியாயங்கலுறவாறா
        றகன்றசிவவாரியிலெழுஞ்
செம்மையாரமுதம்பு கட்டவளருங்குழவி
        செங்கீரையாடியருளே. (1)

அஞ்சக்கரப்பரத்தொட்டிலிற்சதுர்வேத
        மானவடமொருநாலையு
மாதியுடனிச்சைஞானங்கிரியைநாமமுற்
        றருள்வளர்ந்தொளிர்சத்திக
டஞ்சக்கரங்கொடுபிடித்தங்கசைத்திடத்
        தகுபரையுமாதிசிவனும்
தாமுளமகிழ்ந் துறச்சோமனென நிலவு பொழி
        தவளயானைக்கடவுளும்
விஞ்சக்கரம்புனையுமுதல்வர்பதினொருவரும்
        விபுதர்களுமரிபிரமரும்
வேணிமுனிவரருமருண்ஞானமுனிவரராதி
        வியனுலகரும்பரவவே
செஞ்சக்கரப்பரிதியென நிலவு போரூர
        செங்கீரையாடியருளே.
திமிரமலமகலவருகுமரசரவணமுருக
        செங்கீரையாடியருளே. (2)

குஞ்சிமுடியுற்ற செஞ்சுடிகையாடச்செடிகொள்
        கோலக்குதம்பையாடக்
குமுதமெனவமுதொழுகுமிதழ்களாடக்கரங்
        கொண்டபொற்றொடிகளாடக்
கஞ்சமலரைப்பொருவுநயனமாடக்கடி
        தடத்தரைவடங்களாடக்
கருதரியமூத்தியின்பு தவுசீறடிமருவு
        கனகநற்றண்டையாட
வஞ்சுவடிவத்தசுரர்திண்டாடவரிபிரம்
        ராதிசுரர்கொண்டாடநீ
ளகிலசரவசரங்கணின்றாடவெண்டிசையொ
        டண்டபகிரண்டமாடச்
செஞ்சரவணப்பொய்மைஞ்சமிசை நிலவுமிறை
        செங்கீரையாடியருளே
திமிரமலமகலவருகுமாசாவணமுருக
        செங்கீரையாடியருளே. (3)

ஐந்தொழிலுமெனதிவைகளாகுஞ்சிருட்டிமுத
        லானமுத்தொழில்சடத்து
மறிவிடத்தோரிரண்டும் வினைக்கீடா
        யவற்றையுயிரறியாமையான்
முந்தி வருதன்னையும்பிறரையுங்கருதிநனி
        முதிர்விழைவு வெகுளிமருவி
முன்னுசுகதுன்பங்கண்மன்னியிருவினை மேவி
        மூடப்பிறப்பிலாழும்
பந் தமுறுமுயிர் சுதந்தரமிலிசடம்பாச
        மானகருவிகண்முழுதுமே
பகருமற்றவை கடத்திடுமொருவனானிவை
        பகுத்துன் சுதந்தரமறச்
சிந்தனை செய்பந்தமறுமென்றெனக்கருள் குரவ
        செங்கீரையாடியருளே
திமிரமலமகலவருகுமரசரவணமுருக
        செங்கீரையாடியருளே. (4)

வேறு,
காமவிடத்தான்மாமயல்கொண்டே நொந்தேனைக்
        காருணியத்தால்வாவெனவந்தாடந்தோனே
தீமையிழைத்தேழ்வாரிதி சென்றேநின்றேனைச்
        சீரருள்பெற்றாரார் கரை தந்தாளெங்கோனே
மாமலமுற்றேதோமுறுநெஞ்சேனுய்ந்தார
        வாய்மொழி நற்றேனீமிசையிந்தாவென்றீயுஞ்
சேமநிதிப்போரூரிறைசெங்கோசெங்கீரை
        தேவர்தமக்கோர்மாமணி செங்கோசெங்கீரை. (5)

வேறு.
களவறுஞானிகளுளமலர் மீதி
        லெழுந்தூறுந்தேனே
கடையனை மேவியமலமறவோர்குரு
        வென்றேவந்தோனே
யளவறு சூரியரெனமயிலேறி
        யுவந்தூருங்கோவே
யகமுகமாயொருசுழிமுனைசேர்பவ
        ரங்கேயுந்தேவே
யிளநிலவாணகையுறுகுறமாதை
        இயைந்தாளுந்தோளா
வெழிலடியார் முதலனை வருமோசை
        கொண்டாருந்தாளா
தெளிவுறவேயெனதகநிறைபேரொளி
        செங்கோசெங்கீரை
திகழ்சமராபுரிமுருகசடானன
        செங்கோசெங்கீரை. (6)

வேறு.
மகபதிசக்கிரிமலாயனத்திய
        வண்சேருங்காவே
மலமறுமுத்தர்களெனுமளிசுற்றிய
        தண்சூழும்பூவே
யிகலறுமெய்த்தவமுழுதையுமுற்றவ
        ரெண்கூரும்பேறே
யெழிலருள்பெற்றுயிர்மயில்கள்களிக்க
        வெழுந்தூருங்காரே
ககனசுரர்க்கொரு துணையெனநெட்டயில்
        கொண்டேநின்றோனே
கடவுண்மடப்பிடித விணைதைத்தொளிர்
        திண்டோண்மெய்ம்போனே
திகழ்மதியொத்தொளிர்சமரபுரிக்கிறை
        செங்கோசெங்கீரை
செறிதயவுற்றவரிதயபுரிக்குக
        செங்கோசெங்கீரை. (7)

வேறு.
குவளைப்பிழி செங்குமுதப்பிழிகோ
        கனகப்பிழி கூடிக்
கோதறுசேதகமாகிக்கூனற்
        கொழுவுழுசீதைதொறுந்
தவளத்தாளத்தொடுபிழியூற்
        றதும்பக்கடைசியர் தந்
தண்ணகையொடுமிதழூறலொடுஞ்சம
        னாமெனவுட்சினவிப்
பவளக்கடிகைப்போணிசரிதிகழ்
        பங்கயமென்கையாற்
பணிலத்தரளத்திரளைத்திடரிற்
        பமழனக்கரைதரவே
திவளுற்றிடுதொண்டீரநன்னாடா
        செங்கோசெங்கீரை
சீரூர்போரூர்வீரமயூரா
        செங்கோசெங்கீரை. (8)

புள்ளுங்கிளியும்மயிலுக்குயிலும்
        பொன்னஞ்சிறையனமும்
பொருகோடரமுங்கரியுந்திரியும்
        பொங்கர்ப்புதுமலர்வாய்க்
கள்ளும்விள்ளுமிறாலி பிழியுங்
        கனிவகையின்சாறுங்
காலாய்மடுவாயாறாயோடிக்
        கடல்புகவெதிரேறித்
துள்ளும்மகரம்புயலினதகடு
        துணித்துச்சலமேவிச்
சுடர்வான்மகரஞ்சாடிக்கங்கை
        துளைந்து திரும்பிவருந்
தெள்ளும்வளதுளதொண்டை நன்னாடா
        செங்கோசெங்கீரை
சீரூர்போரூர்வீரமயூரா
        செங்கோசெங்கீரை. (9)

ஓதிமசாலமே தியினங்க
        ளுழக்கப்பேரேரி
யொள்ளியகமலப்பள்ளிறைவிண்டங்
        குயர் தண்டலையேறத்
தாதவிழ்தண்டலைஞிமிறுகள் விரை செறி
        தடமலர்மீதேறத்
தடநீராடியமடவார்வெருவித்
        தண்ணதிநீரேறக்
கோதறுநதியுறைவாளைகடாவிக்
        குளிர்வயன்மடையேறக்
குலவியமடைதவழ்குடவளைபதறிக்
        கொழுவியகமுகேறத்
தீதறவொளிர்தருதொண்டைநன்னாடா
        செங்கோசெங்கீரை
சீரூர்போரூர்வீரமயூரா
        செங்கோசெங்கீரை. (10)
-----------
3. தாற்பருவம்.


கறையின்றொளிருமதிமுகத்துக்
        கரும்பன்னாருமாடவருங்
கலவித்தேறலயின்றயின்று
        களித்துத் தருக்கிவிளையாடு
நிறையுஞ்சோ மச்சிலைத்தகடு
        நிரப்பிக்குலிசத் தூணிறுத்து
நிலைகொண்டறியநவமணிக
        ணிகழுமாழைத் தசும்புநிரைப்
பொறைகொண்டிலங்கும்பலமாடப்
        புனிதக்கொடிகள்
கற்பகப்பூம் பொங்கர்க்குறுந்தாணறுமுகையிற்
        புடைக்குந்தோறுமலடவிழ்ந்து
தறையினறையின் பெருக்கூறுஞ்
        சமரபுரியாய்தாலேலோ
தமரக்கடலைக்கடைந்தமுதந்
        தருவோன் மருகாதாலேலோ. (1)

மகரப்பரவையளறுபட
        மாயைத்திறமார்கிரவுஞ்ச
வயமால்வரைசெந்தூளியெழ
        மதமாமுகத்துச்சினத்தவுண
னகலக்குலிசவரைதகர
        வரிமாமுகன் பேராயிரவா
யருஞ்சோரிகணின்றலையெறிய
        வண்டகூடந்தொடுஞ்சூத
மிகலற்றலறிவிழிவசுர
        ரெவரும்பதறிக்குடியோட
விலங்குமமரர்கலங்காம
        லெழில்வானுலகங்குடியேறத்
தமைமைச்சுடர்நெட்டிலைவடிவேல்
        தடக்கையெடுத்தோய் தாலேலோ
தமரக்கடலைக்கடைந்த முதந்
        தருவோன் மருகாதாலேலோ. (2)

மூலநிலத்திலதோமுகமாய்
        முகிழ்த்துவிழியின் பொடுதுயிலு
மூரிப்பாம்பெக்காலனலை
        மூட்டியெழுப்பிநிலமாறுஞ்
சீலமொடும்போய்த்தரிசித்துச்
        செழுமாயதியினமுதகட
றேக்கிய கத்தங்கசைவறுமோர்
        தெய்வத்தவத்தோருளவிழியிற்
காலுந்தீபமினல்பந்தங்
        கடிகூர்விறிசுகதிர்மதிபோற்
காட்டுமெளியாயிவையாவுங்
        கடந்தாங்கழிவில்பேரொளியாய்ச்
சாலவிளங்கும்விந்துவெனுந்
        தடமாமயிலோய் தாலேலோ
தமரக்கடலைக்கடைந்தமுதந்
        தருவோன் மருகாதேலேலோ. (3)

வேறு.
காரார் திசைமலிபோரார்களிறு
        கலங்கிப்பிளிறிடவே
கனகநிறத்துத் திருகுமருப்பிற்
        கனிசினமொடுமோதிப்
பேராயிரமுடியுரகனெளிக்கப்
        பின்போய்முன்னோடிப்
பேசருவடவரைகுலவரை திசைவரை
        பெயரும்படி தாவிப்
பார்சூழேழ்கடல்சமுறத்துள்ளிப்
        பனிவானகமோதிப்
பசுரருகோள்கைசாடிப்பீடுறு
        படிவருதகருடையோய்
தாரார்பொழில்சூழ்போரூரிறையே
        தாலோதாலேலேலோ
சண்முகமுக்கட்பண்ணவர் குருபர
        தாலோதாலேலோ. (4)

அமரர் தமக்கன்றொருநாளிரணிய
        வணிவடவரைமீதே
யறை தருமும்மாயையினூடுருவி
        யகண்டாகாரமதாய்த்
திமிரமகற்றியமுச்சுடருக்கொளி
        செய்காரணவொளிவாய்த்
திகழ்தருபுவனசராசரமுழுதுஞ்
        செறிபூரணவெளிவாய்க்
கமையுறுமனவாசகமொடுகாயங்
        கண்டளவிட வருநின்
காட்சியை மாச்சிமைபெறமுன்காட்டிய
        கண்ணேயாவர்க்குந்
தமரெனநிலவியசமரபுராதிப
        தாலோதாலேலோ
சண்முகமுக்கட்பண்ணவர்க்குருபர
        தாலோதாலேலோ. (5)

கோள்கை தடவிக்குடைபலநீடக்
        கொடியெண்டிசை மூடக்
கோதறுபேரணி சூரியர்மறையக்
        கொழுவியவெயில்வீச்
நீளிய சாமரைவீசப்பேரிக
        ணீள் கடலேழெனவே
நின்று முழங்கத்தெய்வதநகரி
        னிரம்புமரம்பையர் தாம்
வேளைமருட்டு விழித்தொழில்கைத்தொழில்
        வேறாகாநடன
மிட்டுவரப்புயலொத்தவன்முதலவர்
        மெய்ச்சிரைச்சுரர்கைத்
தாளமதொத்தவெள்ளானையிலுற்றோய்
        தாலோ தாலேலோ
சண்முகமுக்கட்பண்ணவர்க்குருபர
        தாலோதாலேலோ. (6)

தென்னங்காவைச் சூழப்பூகத்
        திரளவைபுடை சூழத்
தேமாவினமற்றவை புடைசூழச்
        செறிதரு பலவினின
மின்னும்மவை புடை சூழப்பெருவா
        ழைக்காடவை சூழ
மிளிர்கன்னற்காடவை சூழப்புனன்
        மிகுநெற்பணைமருத
மன்னுஞ்சூழற் பொன்னம்பூமியில்
        வானவர்வந்திழிய
மலி சோபானம்போலவிளங்கிய
        வளனொடுமிளமாழைத்
தன்னந்திகழ்சாரற்போரூரா
        தாலோ தாலேலோ
சண்முகமுக்கட்பண்ணவர் குருப
        தாலோதாலேலோ. (7)

செங்கட்சிறுமின்னொளிர்வனமேதிச்
        செழுமேகங்குழுமித்
திகழ்தருவரைமிசைகனை குரலொடு தீம
        பால்சொரிவெள்ளருவி
வெங்கட்பணிமணியின்குவைகழைமணி
        வெண்குவைபொங்கொளிசேர்
வியனீலக்குவையொடுமுச்சங்கநல்
        வேணியெனும்படியே
துங்கப்பேரலைகொண்டுவரன்றித்
        துண்ணென்றிழியொலியாற்
றுடியடிவரை முழைதோறுங்கண்படு
        சோலைச்சாரலெலாந்
தங்கப்பொடியேமிளிர்போரூரா
        தாலோ தாலேலோ
சண்முகமுக்கட்பண்ணவர்குருபா
        தாலோதாலேலோ. (8)

வேறு.
கஞ்சனையன்று முனிந்து சிவந்தருள்
        கையாய் தாலேலோ
காமனை வென்றவர்தோளிலுலாவிய
        காலாய்தாலேலோ
மஞ்சன்மகன்கனவின்சொல்வழங்கிய
        வாயாய்தாலேலோ
மஞ்சள் வடஞ்செறிகுஞ்சரி கொங்கைகொண்
        மார்பாதாலேலோ
விஞ்சுறுமன்பினர்பந்தனைகொன்றொளிர்
        விழியாய் தாலேலோ
வேடுவர்மங்கையுளங்குடிதங்கிய
        மெய்யாய்தாலேலோ
தஞ்செனவந்தவருஞ்சிடுசமர
        புராதிபதாலேலோ
சரவணபவனே குரவணி தருசண்
        முகனே தாலேலோ. (9)

குண்டைச்சமணக்கரிகளையடுகோ
        ளரியே தாலேலோ
கும்பத்திடுமென்பைத்திருவிற்றரு
        குழகா தாலேலோ
பண்டைத்தமிழ்நக்கீரன்சிறை விடு
        பண்பாதாலேலோ
பச்சைக்கொடிகச்சுப்பொருகலசப்
பாலாதாலேலோ மண்டைத்தலையிற்பலிகசை
        கொண்டவன் மைந்தர்தாலேலோ
வாரணமைந்துகரங்கொடுதழுவிய
        வாகாதாலேலோ
தீண்டைத்தாளுந்தோள்களுமழகிய
        சதுராதாலேலோ
சரவணபவனே குரவணி தருசண்
        முகனே தாலேலோ. (10)
--------------
4. சப்பாணிப்பருவம்.


பொருகைநதியிற்படிந்திளமரக்காவிற்
        புகுந்து சந்தப்பொங்கரிற்
புக்குமணநாறுதென்றற்குழவிவிளையாடு
        பொதியப்பொலங்குவட்டிற்
றிறையெறியுமணியாழியங்கையிலடக்கியஞ்
        செந்தமிழ்க்கடல்விரித்துத்
திறமையுடனுறையுமொருகுறு முனியகத்தினுட்
        டிமரமறமறைமுடிவெனு
மருளொளிபரப்புஞானங்கொழுஞ்சுடர்வைத்த
        வாறானனக்கொண்டாலே
யன்பர்வாய்வண்கு முதம்விண்டு தண்டமிழ்நறவ
        மாரவெழுமொருமதியமே
தருணவுமைமுக்கமலமலரவருபரி தியே
        சப்பாணி கொட்டியருளே.
தடமலைநிகர் கரிசுடிரிசவரபுரிமுருக
        சப்பாணி கொட்டியருளே. (1)

அலைகடலிடைப்பெரியமகரமீனீர்கிழிய
        வம்பிற் கடிந்தேகுமா
றரவுயர்த்திடுகொடிக்குருகுலக்கோமக
        னடற்படைக்கட லுடையவே
சிலைவலிய வாகுவலயப்புயப்பற்குணன்
        றேர்கடவிவெற்றிவளைவாய்ச்
செம்மலரில்வைத்துமறுமன்னர் செவிசெவிடுறச்
        செல்லிடத்தொனிமுழங்குந்
தொலைவறுபசுங்கதிரெறிக்குமரகதநிறச்
        சுந்தரப்புயன் மருகனே
சுருதிமுடிவாசனத்துறைபறைமுலைக்குடஞ்
        சொரியமுதவாரிநாறுந்
தலைமைபெறு செங்குமுதவாயனே தூயனே
        சப்பாணிகொட்டியருளே
தடமலையை நிகர்கடிரிசமரபுரிமுருக
        சப்பாணி கொட்டியருளே. (2)

ஈராறு பரிதியீராறுமேருதயத்
        திருங்குழைசுமந்தபுயமு
மீரெட்டுவெண்கலைகண்மேவிக்களங்கமுய
        லின்றிச்செழுஞ்சுடர்விடு
மோராறுகுதியமீராறுதெய்வக்சமல
        வெண்மலர்மலர்ந்தபரியே
        யொற்றுமைபெறக்கொண்டுநிற்றல்போலத்திகழு
        மொளி விழிசிறந்தமுகமுஞ்
சீரார்படைக்கலக்கமலமும்மார்பமுஞ்
        செய்ய தண்டைத்தாளுமென்
        றிமிரமறவெனதகங்குடிகொண்டுமீளாது
        திகழ்வீடுதருகுரிசிலே
தாரார்சடைப்புணிதர் பாலாகுகக்கடவுள்
        சப்பாணி கொட்டியருளே
        தடமலைநிகர்கரிகரிசமரபுரிமுருக
        சப்பாணி கொட்டியருளே. (3)

நனவில்வருகனவிற்சுழுத்தியிற்பொறிகரண
        நற்புருடனிற்பகுதியு
        நபுல்காலபரமதிலசுத்தமாயையும் விண்ணி
        னண்ணு பூரணமாயதோ
ருனலருவியோமத்திருஞ்சித்தவித்தைமுத
        லொருமூவகைக்கருவியு
        மொருபரமதுரியத்து விந்துமிளர்விசுவா
        முண்டசிசையுயர்நாதமும்
வினவலுறுமுபசாந் தமதனின்மாமாயையு
        மிகுசொருபமதனிலிருளும்
        விள்ளுமெனவுரைசெய்தனுள்ளமலமகலவருள்
        விழிவழிப்பொழியுமுகிலே
தன்பதியையெலுவனெனவுளமகிழுமரன் மதலை
        சப்பாணி கொட்டியருளே
        தடமலையைநிகர்கரி கடிரிசமரபுரிமுருக
        சப்பாணி கொட்டியருளே. (4)

குலிசக்குழுச்சுலவுபூனதக்கிம்புரிக்
        கோடுநாலுடையவெள்ளைக்
        குஞ்சரக்கும்பமிசைகொட்டல் போலச்சிவன்
        குவவுப்புயங்கொண்டல்போன்
மலைபெற்றபைம்பிடிப்பாலுண்டுமுத்தமிழ்
        மதம்பொழியுமந்தநாளின்
        மன்னுதத்துவமசியின் மும்மைப்பதங்களை
        வகுத்தறிவுறுத்துமுறைபோற்
கலகப்பிணக்குடைச்சமயப்பெரும்பறவை
        கடியுமொருகருவியதுபோற்
        கருதியபதிமுதற்றிரிபொருளுநிசமெனக்
        கைகுறிப்பறிவித்தல்போற்
றலைமைத்தமிழ்ச்சங்கமளவிட்டவிரக்குக
        சப்பாணி கொட்டியருளே
தடமலையை நிகர்கரிகடிரிசமரபுரிமுருக
        சப்பாணிகொட்டியருளே. (5)

வேறு.
கண்ணன்றிருந்தங்கைமுலையமுதகடலுண்டு
        கனஞானவரையிவர்ந்து
        கருதரியசுரர் முதற்பயிர் கடழைப்பெருங்
        காரவுணமாசுணமெலாந்
துண்ணென்றுளஞ்சுறுக்கிட்டுமுரியச்செழுஞ்
        சுடர்விடுந்தாரைநெடுவேற்
        சோதிமின் மின்னியெழுதீபச்சிகைப்பொருவு
        சுடிகைக்கொடிப்பேரிடி
யெண்ணென்டிசைக்களிறு பிளிறிடவிடித்துமுறை
        யின்னருட்பொழியுமுகிலே
        யிசை முழவுபேரிகைவலம்புரிமுழக்கமுட
        னெழின்மங்கலச்சும்மையுந
தண்ணந்துறைப்பாவையோடிகலுபோரூர
        சப்பாணி கொட்டியருளே
        தகைமைபெறுகுறவனிதைவிழியினைகள் குடி கொள்புய
        சப்பாணி கொட்டியருளே. (6)

வேறு,
மரகதப் பந்திநிறைபைங்கிரணமண்டலம்
        வழங்குகுழைமுகமதிகளு
        மாணிக்கமணிராசியிளவெயிற்றிசைவீசு
        மகுடநீடியமுடிகளுக்
கரகதிர்ப்பகலெனக்கூடர்விரித்தொளிர்வயிர
        கடகநிறைசெறிதோள்களுங்
        கறையகலுமதிமண்டலங்களெனநித்திலங்
        கதிர்விடுமதாணிமார்யுந்
திரகசச்செங்கரினிறத்துகின் மருங்குலுந்
        திப்பியத்தவநமணித்
        திரண்மண்டு தண்டையங்கமலமுந்திகழவிர்
        சித்ரப்பசுஞ்சிறைமயிற்
குரகத்தினைநடவியடியவர்க்கருண்முருக
        கொட்டியருள்சப்பாணியே
        கூரூரயிற்கிறைவபோரூர்நகர்க்கதிப
        கொட்டியருள்சப்பாணியே. (7)

வேறு.
உடலிற்குடர்நீளங்கொடுசென்று
        வணத்திரள்வட்டமிட
        வெள்ளிய செல்வப்பிள்ளைகள்
        பற்பல வுயர்பட்டம் விடல்போற்
கடலிற்படுகுருதிப்பெருவெள்ளங்
        கட்குழிசிறுபலபேய்
        கடிய தன்மூடியபேரிகைமுழவு
        கரங்கொடுகரைகாண
மிடலுற்றிடுபிணமாமலைதோறும்
        வியன்பேய்களியாட்ட
        மிட்டாதத்தலைவட்டாடக்கடு
        வெஞ்சூர்க்குலமுழுதுங்
கொடுமைதிறமும்மறவேல்விட்டவ
        கொட்டுகசப்பாணி
கொற்றவநற்சமரப்பதியுத்தம
        கொட்டுகசப்பாணி (8)

வேறு.
ஆடகத்திரண்மதிலுமேனிலைச்சிகரிகளு
        மாணிமுத்தொளிர்மேடையு
        மாழித்தலைபொருவு பீடுடைக்
        கொடிகள்பல மாடுபொற்குடமாடமு
நீடுதெற்றிகளுமணிசூளிகைச் செழுமனையு
        நேர் செலுத்திய தேர்களு
    நீர்நிறைத் திடுகுடமும்வாழை நற்கமுகினமு
        நீணிலைப்பலதேர்களுஞ்
சேடுறத்தி கமகரதோரணபட லமருகு
        தோறு முத்தமிழோர்களுஞ்
        சீர்மறைத்தலைவர்பரிபூரணத்தவரலகை
        யாளனொத்தவரியாவருங்
கூடிமொய்த்தொளிர்சமரமாநகர்க்கொருமுதல்வ
        கொட்டியருள்சப்பாணியே
        கூடலிற்செழியனழல்கூனறப்புரியுமிறை
        கொட்டியருள்சப்பாணியே. (9)

வேறு.
தீதறு கற்பகநற்றருவுற்ற
        செயக்குலிசப்பாணி
        சேடனுடற்றுயில் பச்சை நிறத்த
        செருச்செய்வளைப்பாணி
போதிடையுற்றுலகத்தையளித்த
        புதுக்கரகப்பாணி
        பூசுரர்நற்றவகற்றவர்ரேத்து
        புவித்தலமுற்றார்கண்
மூதணிகைக்கமலத்தொடுவட்பு
        முகக்கமலப்போது
        மூடவிரிக்கவுதித்தமதிக்கதி
        ரொத்தெழுமெய்த்தேவே
கோதறுநற்சமரப்பதியுத்தம்
        கொட்டுகசப்பாணி
        கூர்கொளயிற்படையுற்றகரத்திறை
        கொட்டுகசப்பாணி. (10)
-------------------
5. முத்தப்பருவம்.


கயல்கொக்குடும்பின்சிரசுகளுங்
        கரிக்கோடேனமுடக்கோடுங்
    கழையுங்கரும்புங்கமுகினமுங்
        கதலிசாலிகடிக்கமலம்
புயனத்தாதிதருமுத்தம்
        புனலிற்கனலிற்புடவியினிற்
        பொன்றும்பொதியிரகேழொளிபோம்
        பொருந்தும்விலையுண்டவை வேண்டே
மியல்புந்றொன்றானழிவிலாத
        யென்றும்புதுமைதருமொளியா
        யெவர்க்குமதிகவரிதாகி
        யிருந்துமிகுந்தமதுரமெலா
முயல்வுற்றளிக்குனின்கனிவாய்
        முத்தந்தருகத்தமே
        முகுந்தன்மருகாசமரபுரி
        முருகாமுத்தந் தருகவே. (1)

சந்தங்கமழ்மந்தானிலத்தோர்
        தருக்கோடிவர்ந்துபொறியளிகா
        றளைக்குமுறுக்குநாண்கழைக்கோ
        தண்டங்குழைத்து வளைத்தேற்றி
யிந்தங்கவிகையமுதநிழ
        லீயக்குயில்கள்விரு தூத
        விசைவாரிதிப்பேரிகை முழங்க
        விருண்மால்களிறுஞ்சுகப்பரியுங்
கந்தங்கமழுங்குழற்படையுங்
        கடவுள் வசந்தனொடுசூழக்
    களித்துவருவோனெளித்தேகக்
        காட்சிதருகட்டழகுடையோய்
முந்துந்தவத்தோர்பணிசரண
        முதல்வாமுத்தந்தருகவே
        முகுந்தன்மருகாசமாபுரி
        முருகாமுத்தந் தருகவே. (2)

பெருங்கருணைசுரர்தொழுகும்
        பிராட்டிபசும்பொற்குடத்தமுதும்
    பிறங்குமறுவரீராறு
        பெரியகுரும்பையொழுக்கமுதுங்
கருகுஞ்சகார்க்கருள்புரிந்து
        கடலின் கடுகிழித்தொழுகுங்
        கங்கைப்பொருந்தாயாயிரமாங்
        கனிவாய்முத்தமிடும்முது
குருகின் சிறையும்பிறைக்கொழுந்துங்
        கூடத்திகழ் செஞ்சடைப்பெருமான்
    குமுதத்திருவாய்முத்தமிடக்
        கொழிக்கு நறவுமோனசுக்
முருகுந்ததும் புங்கனிவாயான்
        முத்தந்தருகமுத்தமே
முகுந்தன்மருகாசமரபுரி
        முருகாமுத்தந் தருகவே. (3)

வேறு.
பணியிற்குறிய துளிதூற்றும்
        பரவைத்தரங்கமெடுத்தெரிந்த
    பணிலத்திரளுபிரசிதம்பூம்
        பணிச்செம்பேய்ந்தமுரணினமு
நனிமுற்றிய சூலுளைந்து சொரி
        களிவெண்டரளததிடதோறு
    நவைதீர்பவளவண்டல்வரை
        நடுவும்படவர்மடமகளி
ரினிதுற்றிவர்ந்துபனைப்பாளை
        யிருந்தகலசமதுவருந்தி
        யிணர்க்கேதகையும்புனைப்போது
        மெடுத்து முடித்துக்களித்தாடு
முனிவர்குழாக்கள்புகழ்போரூர்
        முதல்வாமுத்தந்தருகவே
        முத்தார்கொத்தேயனாதிவரு
        முத்தாமுத்தந்தருகவே. (4)

வேறு.
பூதனமாழைக்கிங்கிணிபலவும்
        பொலிவொடுகணகணெனப்
        புனிதத்தண்டையினொலிகலகலெனப்
        பொற்ருெடி நிறையதிர
மேன் குமரை வடவோசைதழைந்திட
        வியனவமணிமாலை
        விரவியலம்பக்குண்டலமொளிவிட
        மிளரமணிச்சுடிகை
யானமுடப்படமாயிரமுந்தள்
        ளாடத்தளர்நடையிட்
    டம்மை செவிக்கின்சுவைபெறமழலை
        யரும்பிழி சொரிவாயான்
மோனசுகந்தருஞானப்பிள்ளாய்
        முத்தந்தந்தருளே
    முத்தமிழ்நற்சமாப்பதிநாயக
        முத்தந்தந் ருளே. (5)

இருண்மைப்படலங்கெடநுங்குஞ்சுட
        ரெழின்மாணிக்கவரை
        யீரைந்துடனக்கிரி வந்தீரா
        றிணைவுறுபரிசதெனக்
கருடத்துவசனுமறிவரியானணி
        கடகத்தோடழுவிக்
    கறையறு முழுமதியொருபத்தொன்று
        கலந்துமகிழ்துறல்போ
லருண்மொத்தொழுகுமுகத் தொடு முகமைத்
        தழகியமழலைசொலி
        யையனுளங்களிபொங்குற முத்த
        மடிக்கடி தருவாயான்
முருகுற்றெழுநீபத்தொடையழகா
        முத்தந்தந்தருளே
    முத்தமிழ்நற்சமரப்பதிநாயக
        முத்தந்தந்தருளே. (6)

பூவே பூவிற்பரிமளமேயப்
        பூநிறைசுவைநறவே
    பொங்குங்கடலே கடலிலுதித்தெழு
        புனிதத்தெள்ளமுதே
காவேகாவிற்கொஞ்சும்பஞ்ச
        வனக்கடவுட்கிளியே
        கண்ணே கண்ணுறுபாவாய்பூவாய்
        கனியேகனிரசமே
தேவேதேவர்சிரோமணியேயென்
        சீருயிரேயுயிரிற்
        செம்பொருளேயருளே முழுமணியே
        மணியிற்தேசிகமே
மூவாமறையே மறையின் பொருளே
        முத்தந்தந் தருளே
        முத்தமிழ்நற்சமரப்பதிநாயக
        முத்தந்தந் தருளே. (7)

ஆடகநன் கத்தரியால் வேளுக்
        கம்புதிருத்துவபோ
    லலவன்குறு முட்டாள் கொடுகுவளையொ
        டம்புய விதழ்கிள்ளு
மோடையினீடுங்கவையடி
        மேதிக ளுறு குடமடியில்வரா
    லுகள வடிக்கடிமுட்டங்கன்றென
        வுள்ளிச்சொரிவெள்ளம்
பீடு றுமாலைச்சாடிகொளாதெழு
        பிரசவௌத்துடனே
    பொருகிக்கதலியின்மஞ்சளொடிஞ்சி
        பெருங்கழை செஞ்சாலி
மூடிநிறைக்குந்தொண்டைநனாடா
        முத்தந் தந்தருளே
    முத்தமிழ்நற்சமரப்பதிநாயக
        முத்தந் தந்தருளே. (8)

மாலைப்பொழுதிற்பெடையொடுசிறையளி
        வனசக்கோயில்புக
    வளர்மதியமுதகரங்கொண்டிதழ்வா
        சக்கதவதுமூடக்
காலைப்பரிதி கரத்தாலந்தக்
        கதவதிறந்துவிடுங்
    கடிமலரேரிப்பெருமதகெழுநீர்
        கதிர்வசல்புகவெதிர்போஞ்
சேலைச்சினைபடுகளிறு துரத்தச்
        செறிநிலவிறிசெனவே
    சிதறிக்கன்னற்காடு முறிப்பத்
        தேன்முத்தொடுசொரியு
மூலிச்சுதைநிகர்பாலிநன்னாடா
        முத்தந்தந் தருளே
    முத்தமிழ்நற்சமாப்பதிநாயக
        முத்தந் தந்தருளே. (9)

வேறு.
சிமபமொய்த்தொன்றிமயவெற்பன்
        நவபலப்பைம்பிடியனாள்
செறிகளிப்பண்பு றவுரைக்குஞ்
        சிலசொல்கற்குஞ்சிறுகிளா
யமரருக்கும் முனிவருக்கும்
        மடியவர்க்கும்மமுதமே
    யவுணருக்குஞ்சமணருக்குங்
        கொடியலர்க்குமனலமே
குமுதநற்பங்கயமுருக்குங்
        குலிகமிக்குஞ்சுதைநறாக்
        குலவுகற்கண்டிவையிருக்கு
        மிதழளைப்பைங் குழவியே
சமரநற்செம்பதியருக்கன்
        றருகமுத்தந்தருகவே
    தணிகைவெற்பன்சரவணத்தன்
        றருகமுத்தந்தருகவே. (10)
-----------
6. வருகைப்பருவம்.


விரைநறுங்குழலினார் கொங்கைப்பெருங்குவடு
        மிகுதடக்கடலுழக்க
        வெள்ளைவகளைக்களிறுகொள்ளுசூன்முகில்பிளிறி
        விள்ளக்கிழித்தஃதுறு
நிரைதருங்கந்திக்குடக்கழுத்தறமோதி
        நெட்டிலைக்கதலிசாடி
    நீடுகன்னற்காடோடித்துப்பொறிச்சிறைய
        நீலவண்டூதுகஞ்சத்
திரளொடும்பனைமண்டுநெற்றாளுடைத்திடக்
        செறிதரளமுகிலாதியிற்
        சிந்தப்பெருஞ்சோதியுடுமண்டலத்தினிற்
        றிகழ்கின்ற மருதவேலி
மருவியம்புகழ் கொண்ட சமாபுரிதனினிலவு
        மஞ்ஞைவாகனன்வருகவே
    மலிபுவன முழுவதுங்கிடுகிடெனநொடியில்வலம்
        வருகந்தவேள்வருகவே. (1)

பொன்னஞ்சிறைப்பேடையன்னங்களிப்போடு
        புனலாட நிழல்கண்டுதன்
        புகலாவியின் சேவலுடனூடிமாலையம்
        பொழுதிற்கரந்துறைதரத்
துன்னுறு மடற்கேதகைத்துணரை வெள்ளிதழ்த்
        தூயகஞ்சக்குழுவினைச்
        சுரிமுகச்சங்கினைத்திரையெறியுநித்திலத்
        தொசூதியைச்சூலிப்பியைப்
பன்னுநாரைத்திரளை நாடிப்பசும்புனைப்
        பஞ்சரத்திடைகண்டுதன்
    பவளவாயதின் வாய்மடுத்தருகணைத்துப்
        பரிந்ததனின்முனிவகற்றி
மன்னுந்தருக்கொடுதிளைக்குநெய் தற்சமர
        மாநகர்க்கிறைவருகவே
        மலிபுவன முழுவதுங்கிடுகிடெனநொடியில்வலம்
        வருகந்தவேள்வருகவே. (2)

குழையளவு தாவடி செலுங்கயற்கட்கவுரி
        கொஞ்சிவிளையாடுகிளியைக்
        குழகர்வேணிப்பிறைத்தோணிமிச்சுவைத்தலை
        கொழித்தசங்கையில் விடுத்து
முழைவெருவியுகள வெம்புலியதளையானனத்
        துறவைத்துநகைகொட்டியு
    மொளிர்மணிச்சுடிகைமுடவுப்படத்தரவத்தை
        யுலர்தலைமுழைக்கணுய்த்து
மிழைபொருவுமாமையோடதிலறலை மொண்டெரிய
        வித்தரிமருப்புவில்லுக்
    கெண்டோடயங்குபுரி நூனாண்வளைத்திட்
        டெழிற்கரத்திடைபிடித்து
மழைபொருவுகளன்மடியில் விளையாடுகுகசமர
        மாநகர்த்திறைவருகவே
    மலிபுவன முழுவ துங்கிடுகிடெனநொடியில்வலம்
        வருகந்தவேள்வருகவே. (3)

மேருப்பொருப்பையொருதண்டெனக்கொண்டுமெழு
        வேலையையுறிஞ்சிவிட்டும்
    விரிசக்ரவாளகிரியொருவாகுபுரியாக
        வெவ்வலித்தோளிலிட்டும்
பேருற்றகயமெட்டுமெட்டுநாகங்கொடு
        பிணுத்துச்செவிக்கணிந்தும்
        பெரியபுவனப் பொறைத்தடமதெடுத்துப்
        பிறங்குசில்லெனவிடுத்துஞ்
சீருற்றுவிளையாடுபூதக்கணதொடுஞ்
        சென்று சூர்வேட்டையாடுஞ்
        சேவகப்பெருமாளெனாவியுட் பெருமாள்
        செயதேவர் முனிவர்பெருமாண்
மாரிப்புயற்கருணை பொழிகின்றபோரூர
        மாயூரகுகவருகவே
    மலிபுவனமுழுவதுங்கிடுகிடெனநொடியில்வலம்
        வருகந்தவேள்வருகவே. (4)

அளகுபலமூட்டைதன் சிறைகொண்டணைக்குமா
        றண்டராசிகளனைத்து
        மகலப்பெருஞ்சிறையில்விகலப்பொருட்போ
        லடக்கிவைத்தும் விடுத்துங்
களவகலவருசுத்தமாயை வெளிமுழுதுங்
        கடந்தொருகணத்தில் வந்துங்
கலிசுவேதத்திலெழுசலராசிதந்தூழி
        காலவழல்வெகுளிதந்தும்
புளகமெழுமெய்ச்சிறையடித்துப்பிரசண்டப்
        பொருங்காலளித்துநச்சுப்
புழையெயிற்றுரகன்மணியிரவிதந்துஞ்சிறைப்
        பொருவினிழன்மதியளித்தும்
வளமையுடனடனமிடுமாயூரபோரூர
        மாவீரக்குகவருகவே
        மலிபுவன முழுவதுங்கிடுகிடெனநொடியில்வலம்
        வருகந்தவேள்வருகவே. (5)

பூதம்புலன்பொறிகள் கரணக்குணம்பகுதி
        புகலருகலாதிசுத்தம்
        பொருவிலிருமாயையுங்காணவருமாணவப்
        பொங்கிருளுமூடுருவியே
பேதங்களைந்துயிர்ப்போ தங்களைந்துகலை
        பேசொணா நேர்மைவெளியாய்ப்
        பேராயிரங்கோடி சூரியருமட்கப்
        பிரங்கியெழுஞானவொளியா
யேதங்கடந்துட்புறம்பாகிய வைக்கு
        மின்பபரிபூரணமதா
        யிலகருட்சத்தியேசத்தியாகக்கையி
        லெடுத்தஞானச்சேவகா
மாதங்கடங்கண்மும்மாரி பொழிபோரூர
        மாயூர குகவருகவே
மலிபுவன முழுவதுங்கிடுகிடெனநொடியில்வலம்
        வருகந்தவேள் வருகவே. (6)

வேறு.
கருத்தே புகுந்துதிகாட்டுங்
        கண்ணே வருகமெய்ஞ்ஞானக்
கரும்பேவருக்கருணைபொழி
        காரேவருகவானந்தப்
பெருக்கேவருகயங்கள்பெறும்
        பேறேவருகமறைசொல்கிளிப்
    பிள்ளாய் வருகபிறங்குதெய்வப்
        பெருமாள் வருக்கு றமடந்தை
தருக்கே வருகமிடிய கற்றுந்
        தருவேவருகமன்பதைக்கோர்
        தஞ்சேவருகவெமையளிக்குந்
        தாயே வருகபவப்பிணிக்கு
மருந்தேவருக்சமர்புரி
        வாழ்வேவருகவருகவே
மறையின் சிரமெய்ப்பொருளான
        வள்ளால் வருகவருகவே. (7)

வட்டாட்டாகுமெங்கள்பவ
        மாற்றவருகபொறிவேலும்
    வணக்கவருகமனமாவை
        மாய்க்கவருகமலச்சிறையை
விட்டாட்கொண்டுமெய்ஞ்ஞானம்
        விளக்கவருகவியனருளே
        மேலீடாக்கியெங்குநிறை
        மிளிர் பேரின்பந்தரவருக
தட்டாதிருந்தசிவமென்றுந்
        தானென்றிளைக்குமயலகற்றித்
    தானேயதுவாயதுதானாய்த்
        தயங்குமோனந்தரவருக
மாட்டார்சோலைச்சமரபுரி
        வாழ்வேவருகவருகவே
    மறையின்சிரமெய்ப்பொருளான
        வள்ளல்வருகவருகவே. (8)

வேறு.
உயிருண்மருவுதிமிரமிரிய
        வொளிருமளவில்பரிதியே
    யுத்திபொருவுகருணை யமுதே
        வுளனுளுதவுமதியமே
யியலின் மதுரமுழுதுமறியு
        மிசைகொள்பெரிய புலவனே
    இரவுபகலுநினையுமடிய
        ரிதயநகரினரசனே
கயிலையிறைவர் மகிழவொருசொல்
        கழறுபரமகுரவனே
    ககனசுரர்கண்முடிகட்படவுங்
        கமலசரணகடவுளே
மயிலின் முதுகினுதயகுமரன்
        வருகவருகவருகவே. (9)

அறைவரிய கருவியடவி
        யருகவொழுகுநதியமே
        யறிவில் சமயவரிகள் வெருவி
        யலறமுடுகுசரபமே
நிறைகொள்பரமசுகமெய்யடியர்
        நினைவிலுதவுபிரமமே
    நிகழுமயனுமறியவரிய
        நிமலவொளியுண்மதுரமே
கறைகளிரிய வெனது மனது
        கனலிநிலவு புணரியே
        கலகவினைவலனலையடுநற்
        கருணை பொழியு மெழிலியே
மறைகள் குலவுகமலசரணன்
        வருகவருகவருகவே
    மகிமை தழுவுமரபுரியன்
        வருக வருகவருகவே. (10)
----------
7. அம்புலிப் பருவம்.


மானையாகந் தழுவுவாயிவனுமுழைதந்த
        மானையாகந் தழுவுவான்
    வனைசடைக்கங்கையலை தவழ்குழவிநீயதின்
        மடித்தலக்குழவியிவனுந் ரு
தேனனைய மொழியறுவர்மகிழவருவாயிவன்
        றிகழுமவர்மகிழவருவான்
        சிவனடியுமுடியு நீயறிதிமற்றவையிவன்
        சிறுவிரற்சுட்டியறிவான்
சோனை மழையெனவமுதுபொழிகிரணனீயிவன்
        சுக்கருணைய முதுபொழிவான்
        றுன்னிருள்கிழித்தெழுஞ்சோதிநீயிவனடியர்
        துகளிருள்கிழித்தசோதி
யா னலிம் முறைமைகொடுநீநிகர்தியான்மகிழ்ந்
        தம்புலீயாடவாவே
யருமறையினொலிநிலவுசமரபுரிமுருகனுட
        னம்புலீயாடவாவே. (1)

சுரர்சிலர்க்கமுதுதவிநீதேய்வைகதியமுது
        தொல்லுயிர்க்குதவிநிறைவான்
    அறமுறுகளங்கனீயிவனடியர்கனவினுஞ்
        சொல்லுகளங்கமறியா
ருரவரவினுக்கு நீவெருவுவாயஃதுமிவ
        னூர்பரிக்கொருகவளமா
    முலகை வலம்வரவுனக்கொருதினஞ்செல்லுமிவ
        னொருநொடியிலோடிவருவா
னிரவினுக்கொளிபவொளிநீயிவனகம்புறத்
        தெக்காலுமிக்கவொளியா
    னெய்து தண்ணளிசிலர்க்குடையைநீயனைவர்க்கு
        மிவனெண்ணுதண்ணளியினா
னரன்முதலெவர்க்குமொருகுரவனிவனாதலா
        லம்புலீயாடவ வே
    யருமறையினொலிநிலவுசமரபுரிமுருகனுட
        னம்புலீயாடவாவே. (2)

மயிலுமயிலுங்கொண்டுவன்பகை தணிக்கலா
        மலரடித்தோணிகொண்டுன்
    மாறாதபதசலதியேழுங்கடக்கலாம்
        வானுலகுதொழவாழலாம்
வெயிலொளியுங்காலவெனப்புகலமெய்ஞ்ஞான
        மிக்வொளிபெற்றுய்யலாம்
    வீடகத்துலையாதிருந்தமுதருந்தலா
        மிகுதுகட்சிறைபடியலாங்
குயிலனைய மொழியார்முகத்தினுக்கொப்பெனக்
        கூறாதபெருமையுறலாங்
    கொடியகயநோயகன்றெப்பொழுதுமொல்காத
        குலிசமெனவடிவுபெறலா
மயிலை முளரிக்கரங்கொண்டசேவகனுட
        னம்புலீயாடவாவே
        யருமறையினொலிநிலவுசமரபுரிமுருகனுட
        னம்புலீயாட வாவே. (3)

கஞ்சாதனத்தனைச்சிறையிடுவன் முத்தமிழ்க்
        கவிஞனைச்சிறைவிடுப்பன்
    கடியகுன்றடுவனிருள் கடியுங்குணக்குன்று
        கனகும்பனுக்கருளுவ
னெஞ்சாதகடலழித்தரிவைமுருகாவென்
        றிசைக்கவருள்வாரி தருவ
    னிகலவுணர்களை கட்டடைந்த கடவுளரெனு
        மிரும்பயிர் தழைப்பவைப்ப
னஞ்சாயசமணர்கழிவேறவிட்டடியார்நா
        டோறுமீடேறவருவ
    னவை தழுவு புத்தன் முடியிடறியழலடுமென்பை
        நளின மங்கைக்கிணை செய்வ
னஞ்சாதிருந்திடேலிவன் வெசூளிகொளுமுன்
        மம்புலீயாடவாவே
    யருமறையினொலிநிலவுசமரபுரிமுருகனுட
        னம்புலீயாடவாவே. (4)

முக்கணாயகனரியதிருநுதற்குறுவியர்வின்
        மூரிவடவையினுதித்தோன்
        மூதண்டகோளகைகிழித்தெழுந்தாயிர
        முகந்தொறும் வெகுளி பொழியத்
தக்கன்மகசாலையுட்புக்கிங்குறைகின்ற சதகோடி
        தேவரையெலாஞ்
    சாடிக்கொழுங்குருதியாடிப்பெருந்தூளி
        யாடித்தருக்கியாடி
மிக்கவுனதுடலமொருகறியாகமாநில
        மிகுத்தபேரம்மியாக
    மேன்மை தருபாதவெங்குழவிகொடரைத்தனன்
        வியர்வினால்வனையுதவு
மக்கடவுள் கட்கனலமிக்குழவி நீ விரைந்
        தம்புலீயாடவாவே
    யருமறையினொலிநிலவுசமாபுரி முருகனுட
        னம்புலீயாடவாவே. (5)

விரவுபலவண்டங்களிவனுண்டையெனவைத்து
        விளையாடுபைங்கழற்காய்
    விரிகவியாறாறுமிவனே வறலைகொண்ட
        வீறூழியக்காரராம்
பொரிவரியவிருமாயையிவனுள நினைத்தபடி
        புரிகின்றதாதியர்களாம்
        பூரணத்திரஞானவாரியெழுசுவையமுது
        போசனமிவன்றனக்கே
கருதரியமறைநாலுமிவனரசிருக்குமொரு
        கதிர்மணிச்சிங்கவணையாங்
    ககனசுரரனைவருமிவனைப்பணிந் துகை
        கட்டும்பெருஞ்சேனையா
மரிபிரமரிவனுக்கமைச்சராமாதலா
        லம்புலீயாடவாவே
யருமறையினொலிநிலவுசமரபுரிமுருகனுட
        னம்புலீயாடவாவே. (6)

மேகசபலங்களென நீலக்கலாபம்
        விரித்துவிசித்ரகிரிபோல்
        விண்டுவினைமேவியோர் சண்டநாகத்தணை
        விடுத்தவனை வேலை மூழ்கப்
பாகுவாரிதியளறுபடமொன்று சிவலோக
        பரியந்தமேவிநின்று
    பரமனுலகும்பரந்தாமனுலகும்பரி
        மளிக்கின் றகமலனுலகும்
போகமலிகற்பகாடவிநீழல்வாழ்வே
        பொலிந்தபுருகூதனுலகும்
        புகருலகுமதிலகதிருகலகுபூவுலகு
        பொங்கப்பொழிந்துமீளு
மாகிறைவர்பின் வருந்தோகையிறை தன்னுட
        னம்புலீயாடவாவே
        யருமறையினொலிநிலவு சமரபுரி முருகனுட
        னம்புலீயாடவாவே. (7)

புலன்மறுகுபொறியையுறு கமடமெனவுட்கொண்டு
        பொருமுக்குணங்கள் வென்று
        பூரகமிரேசகந்தாரகமெனுந்தொழில்
        புகன்றகாலிற்பயின்று
கலகமறுநடுநாடி சென்றுமுச்சுடர்களின்
        கதிர்மண்டலங்கடந்து
        கணபணாடவியுரகன்முடியிற்றுளக்கமறு
        கம்பத்தினசைவற்றுளோர்
மலவிரவுவிடியமிகு துறவுணர்வுநசையறு தன்
        மலிகுணக்குன்றின் முடிமேன்
        மன்னுஞானக்கதிரெழுந்தொளிபாப்பமா
        றாது தசநாதமுழுது
மலகில் பவதுயிலறக்கூவு சேவலனுட
        னம்புலீயாடவாவே
    யருமறையினொலிநிலவு சமரபுரிமுருகனுட
        னம்புலீயாடவாவே. (8)

வேறு.
கானவர்குலமடமானை மணந்த
        கடம்பன்கரைபொருநீர்க்
    கஞ்சச்சரவணமணைமிசை தனினனி
        கண்டுயில் சிறுகுழவி
யரனவுன்மனைவிவளர்த்திடுமகனிவ
        னம்மானுரலோடே
        யன்றனைத் திருடிக்கட்டுணியிடைய
        னனையுஞ்சிறுவாலை
யூனமிலத்தன்பித்தனிவற்கென்
        றுன்னியிருந்துவிடே
        லுலகசராசரமிவன்முத்தொழில்விட
        வுண்டோகண்டிகொலோ
வானவர்சேனாபதியுடனாடிட
        வாவம்புலிவாவே
        மலிசமராபுரி முருகனதருகே
        வாவம்புலிவாவே (9)

குறுமுட்டானெட்டிதழ்வெண்கமலக்
        கோயிலிருந்தவடன்
    கொழுநன்றொழிறந்திட வோபச்சைக்
        கொண்டற்கிணைசெய்யவோ
தறுக்கட்சிறு கட்டழை செவிவெள்ளைத்
        தந்திக்கரசுறைபுக்
        தறுநிழறரவோ துருவனிருக்குந்
        தங்கக்கிரிதாவோ
பிறவிப்பகையைத்தெறவோதண்கலை
        பிரியாதருடரவோ
        பேசறுமறுவிலரியாவருநிற்கப்
        போருளே தறியே
மறுவுற்றுளநினைவாவாவென்றனன்
        வாவம்புலிவாவே
    மலிசமராபுரி முருகனதருகே
        வாவம்புலிவாவே. (10)
-----------------
8. சிற்றிற்பருவம்.


தேமாங்கனியினடுப்பமைத்துத்
        திகழூன் கழிந்தவலம்புரியிற்
        செந்தேனுலைப்பெய்தரவீன்ற
        செழுமாமணிவெங்கனன்மூட்டிப்
பூமாதளையின் விதையரிசி
        புகட்டிச் சமைத்துக்கதலி மடற்
        பொங்கப்பிழியுமதன் கனியும்
        பொருந்தவளவிக்கறியட்டுக்
காமாதவிப்பூம்பந்தரிடைக்
        கயற்கண்ணாயமிழைத்தவண்டல்
        கருதும்புவனகோடியெல்லாங்
        கரந்தும்படைத்துங்காக்குமொரு
சீமானுனக்கோரிலக்கோசொல்
        சிறியேஞ் சிற்றிற் சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ்சிற்றிற் சிதையேலே. (1)

அங்கைத்தலத்திற்குண்டகழ்நீ
        ரடக்குமுனிவரேறனையா
    னகத்தின்ஞானவிளக்கேற்று
        மடிகேள்பவளவிளக்கவியேல்
செங்கட்டிரண்மெய்யுடையோர்க்குச்
        செழுங்கற்பகத்தினிழறருவோய்
    செந்தேன்றுளிக்குங்குருந்த நிழ
        றீர்க்கேன்மேன்மேற்புடைத்தெழுந்த
கொங்கைச்சுமையோடருங்களபங்
        கூடச்சுமந்துவாடுமிடைக்
        கொம்பரரம்பைமடமகளீர்
        குலவச்சிதையாவீடளித்தோய்
திங்கட்கிரணநித்திலப்பூஞ்
        சிற்றில் சிதையேல்சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதைலேயே. (2)

விதையாயிருக்குமைந்தெழுத்தும்
        வேதாகமமுமுத்தமிழும்
    விளங்குஞ்சரியாதிகணான்கும்
        வீறாகியமெய்ச்சிவமதமுஞ்
சுதையாதரிக்குந்திருநீறுஞ்
        சோதிநயனத்திருமணியுந்
    துகடீர்பத்திவிதிநெறியின்
        றொடர்புஞ்செடி தீர்மெய்யடியா
ரிதயாலயத்தைப்பிரியாதாங்
        கிருடீர்ஞானமணிவிளக்கு
        மிலங்குமவுனந்துளும்பாத
        வின்பவளனுஞ்சந்ததமுஞ்
சிதையாதளிக்குமோரிறையே
        சிறியேஞ்சிற்றில் சிதையேலே
தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (3)
------------

மறையின் சிரமெய்வாச்சியமு
        மருவுங்கருவியாறாறின்
    வயங்குமுடியிற்போருளும்
        வானோர்முடியின்றுந்தொடையுங்
கறைகொண்டமிடற்றோன்றிருப்புயத்துக்
        கடியாரிதழிச் செழுந்தாருங்
    கவுரிகருணைநறவு பொழி
        கண்ணென் கமலத்தண்மலரு
மறையுந் தணிகைமலைச்சுனைக்கு
        ளலருமலருமணக்குமுன
        தருஞ்சீறடிசிற்றிலிற்புழுதி
        யள விமணப்பத்தகுமோதான்
சிறைவண்டோகைக்கிறையோனே
        சிறியேஞ்சிற்றில் சிதையேலே
தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே (4)

அடியார்நிமலத்திருவகத்து
        என்பு பொறுமையாவறுத்த
    லடுப்பாங்கமைத்து மலக்காட்டத்
        ததிகஞானக்கனன்மூட்டி
மடியாதிருந்தவுயிர்க்கலசம்
        வழியவருட்பேருலைவார்த்து
    மாறாப்பெருமைச்சிவானந்த
        மதுரைச்சோறுதினம்பொங்கி
விடியாச்சீவபோத விருள்
        வீயமவுனச்சுடர்விளக்கு
        விளக்கியிருந்தபடியிருந்து
        மேலாஞ் சிற்றில் விளையாடுஞ்
செடி தீரகத்தோர்புகழ்வாலை
        சிறுவா சிற்றில் சிதையேலே
தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (5)

ஆறுவதன்தாமரைக
        ளலருமதுரச்சுதை மடுவே
    யடியாரிதயதாமரையு
        ளரும்பிமாறாப்பரிமளமே
வீறுமமார்கணஞ்சூழ்ந்து
        வியப்பமுளைத்த முழுமதியே
    வெவ்வாளவுணக்கருங்கடலை
        விழுங்கியெழுந்தவடவனலே
மாறுபடுபுன் சமயவன
        மலைத்துமுறித்தமதகளிறே
    மாயாப்பிறவிக்கனலவிய
        வளருங்கருணை பொழிகாரே
தேறுமுயிருட்பூரணமே
        சிறியேஞ்சிற்றில் சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (6)

கரியின் கோடுமகிற்றிரளுங்
        கடிச்சந்தனமுங்கழைமணியுங்
    கடுவூற்றிருந்ததொளையெயிற்றுக்
        கடுங்கணரவின்முழுமணியும்
விரியுந்தரங்கக்கரங்கள் கொடு
        விரவிக்கொழித்துநிலங்கிழித்து
    வேலைபுகுதப்பாதலத்தின்
        மிளிருமிராசவுரகபடம்
பரியு மணிகணீர்கதுவல்
        பரிதியுருவம்பலவெடுத்துப்
    பரமானந்தக்கடல்படிவான்
        பரிந்து மூழ்கித்தவஞ்செயல்போற்
றெரியும்பாலித்திருநாடா
        சிறியேஞ்சிற்றில்சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ்சிற்றில்சிதையேலே. (7)

தருவிற்படரும்வல்லியெனத்
        தகுமாடவரைமடவார்க
    டழுவப்புயத்தின்முலைக்கோடு
        தைப்பத்தெரியண்முகையுடைந்து
முருகுற்றெழுந்து துகினனைக்கு
        மூரிச்சுதைமாளிகையிழைத்த
    முதிரும்பதுமராகவொளி
        முழுமீன்றி கழுமகல்வானப்
பருநித்திலவெண்பந்தருக்குப்
        பவளநெடுங்கால்பலகாட்டும்
    பண்பாமதியம்பந்தர் நடுப்
        பால்வென்டரளப்புஞ்சமெனத்
தெரியும்பாலித்திருநாடா
        சிறியேஞ்சிற்றில்சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (8)

கமலக்களைசெந்நெலிற்களையுங்
        கடைச்சிமகளிர்வளையொலியாற்
    கயல்போய்க்கரும்பைவளைத்தொடிப்பக்
        கலித்தகொழுஞ்சாறொழுகுவழித்
தமரக்களிவண்டொழுங்கேறல்
        சம்பராரிநாணேற்றுந்
    தனுவைப்பொருவமலரோடை
        தருக்குமவன் றூணியைநிகர்ப்ப
நிமலக்கமுகின்குடப்பணில
        நிலவுக்கவிகைதனையேய்ப்ப
    நெடுமாளிகையின்மகளிரவ
        னேருஞாயிற்படையேய்க்குந்
திமிலப்பாலித்திருநாடா
        சிறியேஞ்சிற்றில் சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ்சிற்றில்சிதையேலே. (9)

அருணன்றபனஞ்செவ்விளநீ
        ரகற்றப்பசும்பொற்புரவியிளைப்
    பரும்பும்பொதும்பிற்றுயின்முகினீ
        ராற்றக்கமுகுகுடைநிழற்றக்
கருவினிருந்துநிமிர்ந்துதலை
        கவிழ்க்குஞ்சாலிக்கதிர்க்கற்றைக்
    கவரிமருங்கின் காலசைப்பக்
        கடிச்சண்டகங்கண்மணம் வீசத்
தருணவாழையாலவட்டஞ்
        சந்தப்பொதியக்காலெறியத்
    தரணியிதபங்களிசிறப்பத்
        தயங்குமணித்தேர் மெலச்செலுத்துங்
திருவண்பாலிச்செழுநாடா
        சிறியேஞ்சிற்றில்சிதையேலே
    தேரூர்வீதிப்போரூரா
        சிறியேஞ் சிற்றில் சிதையேலே. (10)
-----------
9. சிறுபறைப்பருவம்.


கனக்குவடென நிலவுவீரவாகுத்தலைவர்
        ககனமுகடளவுமிரதக்
    கணமணிமுழக்குங்கவுட்குழிதிறந்து பாய்
        கலுழிமதகரி முழக்கு
மனகதியினைப்பொருவுகுரகதமுழக்கொடு
        வயப்பூதகணமுழக்கும்
    வால்வளைமுழக்குமதிபேரிகை முழக்குமகல்
        வானவர்கண்முடி முழக்கும்
பனகவணைத்துயிலுமவன் முதலினோரு பயதிசை
        பல்லாண்டுசொலுமுழக்கும்
    படிறவுணமாசுணக்குருமெனச்செவிபுகப்
        பண்டுசூர்வென்றசதுரா
தினகரனை நிகர்சமரபுரியிலுறை குமரவேள்
        சிறுபறை முழக்கியருளே
    செறிகலபமயின் முதுகினுதயசின்மயதூய
        சிறுபறை முழக்கியருளே. (1)

குடமுழாவாணனீராயிரகரங்கொண்டு
        குமுகுமெனவே முழக்கக்
    கொண்டலி நிறக்கடவுண்முழவொலி முழக்கவிரி
        கோகனகமாளிகையினான்
றடமருவுகைத்தாளநற்றொனிமுழக்கவந்
        தமருகத்தொனிமுழக்கத்
    தாரளிமுழக்கமறைநூபுரமுழக்கவிரு
        தாள் கடாளம் முழக்க
வடநதியிரைக்கமணியரவுகளிரைக்கவுழை
        யலறமுயலகனெளிவுற
    வாடகமணிச்சபையினாடகமிழைத்துமைக்
        கன்பு செயுமின்பவடிவோன்
றிடமருவுகுமரனேசமாபுரிமுருகனே
        சிறுபறை முழக்கியருளே
    செறிகலபமயின்முதுகினுதய சின்மய தூய
        சிறுபறை முழக்கியருளே. (2)

ஆறுசமயக்கடவுள் வேறுவேறின்றியா
        னொருவனேயங்கங்கிருந்
    தன்பர்க்குமுத்திதருவித்தென்றியாவர்க்கு
        மறிவித்தவதனமணியே
வீரசுரர் துஞ்சவெஞ்சிறை விண்டுவானவர்கள்
        விண்ணகத்தமுதருந்த
    வெற்றிமுரசன்றுனதுசேனை வாரிதியிடை
        வியப்புறமுழங்குமுறைபோன்
மாறுபடுகாமாதி வெம்படை கடுஞ்சிட
        மலச்சிறைகழன்று ஞான
    மாவிண்ணகத்திருந்தானந்தவமுதெனது
        வாய்மடுத்துண்ணவறிவிற்
றேறுமறைநாதமெனநினதுமுளரிக்கரச்
        சிறுபறைமுழக்கியருளே
    செறிகலபமயின்முதுகினு தயசின்மய தூய
        சிறுபறை முழக்கியருளே. (3)

கட்டைமுட்டழுவுதாணெட்டி தழுடுத்தசெங்
        கமலநான்முகவெகினமுங்
    கவுத்துவமணிப்பணியொடம்போருகாடவி
        கலித்த பச்சைப்பன்றியு
மட்டுலவு சீர்பாதமின்றளவு கண்டிளா
        வானவனுமோரொருவரை
    வழிவருஞ்சரியா திவருவித்து வீடுதரும்
        வனை தமிழ்க்காழிமேவி
யெட்டுணையுமறிவருமனந்தசீவரைவதுவை
        யென்று பெயரிட்டழைத்தங்
    கிரும்புண்டநீரிற்றிரும்பா தவீடுதரு
        மினியகவுணியர் விளக்கே
திட்டமொடுவரமுதவுசமரபுரிமுருகவேள்
        சிறுபறைமுழக்கியருளே
    செறிகலபமயின்முதுகினுதயசின்மய தூய
        சிறுபறை முழக்கியருளே. (4)

வெளியில்வளியசைவற்று நின்றவாறமலவுள
        மிளிர்பரத்திலமாகி
    மெய்த்தவமிழைப்பவர்க்ககல்வானாதிநீர
        வியன்றொளைக்கரநிமிர்த்தங்
களிபொடுங்கரிமொண்டுகுண்டிகை நிறைப்பவல
        வற்பகைக்கவிகடாகி
    யங்கற்பகக்கனிகொணர்ந்துவந்திக்கவனு
        தினமுமவரறையுமறை நூல்
கிளிகள் பயிலக்ககனகந்தருவர்வந்தமுத
        கீதநாதமமுழக்குங்
    கிளர்சந்தனப்பொங்கர்மலிசாரல்கயிலயங்
        கிரிவாரவளநிகர்க்குந்
தெளிவு தருசமரபுரிதனினிலவு குமரவேள்
        சிறுபறை முழக்கியருளே
    செறிகலபமயின்முதுகினுதய சின்மய தூத
        சிறுபறைமுழக்கியருளே. (5)

வேறு.
புகர்படுகொண்டை நிமிர்த்துச்சிகிவாய்
        பொருவக்கருமதிபிற்
        பொங்கமுதள்ளிப்பிடிகளிபெருகப்
        போழ்வாய்வழியூற்றி
மகவுடுதடவும்பொழில்படுமுகில்வாய்
        மணிநீர் திணிதரளம்
        வாரியிரைத்துக்கற்பகநற்குழை
        மலர்கறைசொறிதரவே
தகரமுறித்துக்கயமுனிபகுவாய்
        தந்தப்பிடி நூதலைத்
தைவந்தருகிலணைத்துமணத்திடு
        சண்பகமலர் துயிலுங்
குகைபடுசாரற்போரூரிறையே
        கொட்டுகசிறுபறையே
        கொத்துறு முத்தமிழ்மெத்த வளர்த்தவ
        கொட்டுக சிறுபறையே, (6)

அளைகடைமுடைகதுவியதளிர் வடிவத்
        தாய்ச்சியர்மத்தொலியு
    மங்குடமடி முலைவிம்மிக்கன்றுளி
        யானிரைகத்தொலியுங்
கிளைபடுதொளைவருவிரல்விடுதொறுவர்கள்
        கீதக்குழலொலியுங்
    கேழ்செறிகானக்கோழிகண்முறைமுறை
        கிட்டிக்கூவொலியும்
விளைதருதளவத்தளிபலவிளரி
        விளக்கிய சீரொலியும்
    விடியற்காலைக்கடலைப்பொருவ
        மிகுத்தெழுமாமுல்லைக்
குளமலிகண்ணன்றருபோரூரிறை
        கொட்டுகசிறுபறையே
        கொத்துறு முத்தமிழ்மெத்தவளர்த்தவ
        கொட்டுகசிறுபறையே. (7)

கிளிமொழி புகல்வார்கீதம்பயில்வார்
        கின்னரிவாசிப்பார்
        கேள்கலனணிவார்மாலைகள் புனைவார்
        கிளர்மயினடமிடுவா
ரளிசுழல்பூம்பந்தெறிவார்குங்கும
        மள்ளியிறைத்திடுவா
        ராடவர்புயவணைமீதிற்றுயில்வா
        ரழகுபணிக்கருள்வார்
களிறிடைவருவார்சிவிகையில் வருவார்
        கவனப்பரிவருவார்
    காமனில்வருவார்மாமனில்வருவார்
        கஞ்சனில்வந்தருள்வார்
குளிர் தமிழ்புனை வார்நிகழ்போரூரிறை
        கொட்டுகசிறுபறையே
    கொத்துறுமுத்தமிழ்மெத்தவளர்த்தவ
        கொட்டுகசிறுபறையே. (8)

உதடுகடந்தநெடும்பலுமுட்குழி
        கணுமெக்கியவயிறு
    மூரரவங்கணெளிந்திடு செவிகளு
        முளநெட்டைப்பலபேய்
கதழெரிவெம்பசியற்றனமென்று
        களிப்பொடுகைகொட்டக்
    ககனர்க்கரசிகலற்றனமென்றணி
        கடகத்தோள்கொட்ட
மதமலியவுணருளம்பறைகொட்டிட
        வானவர்நகரியெலா
    மன்னிய வீரப்பேரிகை கொட்ட
        மணிக்குடருத்திரநிணங்
குதிகொளும்வெற்றிச்சத்திதரித்தோய்
        கொட்டுகசிறுபறையே
    கொத்துறுமுத்தமிழ் மெத்தவளர்த்தவ
        கொட்டுகசிறுபறையே. (9)

வேறு.
மரகதமணிக்கு வடுதழைசிறை விரித்துரகன்
        மணிமுடி நெளிக்கவிருமூ
    வளமுளமுடிப்பவளவரையினையெடுத்துநட
        மிடலெனமயிற்பரியின்மே
லருள் விழி கொழிக்கமுகமதி நிலவெறிக்கநினை
        யடியவர்களிக்கவருவோ
    யமணர்கள் பிதற்றுகலைாலைகடன் முழக்ககற
        வருமறைமுழக்கமுறையே
யிருமதுரையிற்பெரியநதி விடுதிருப்பதிக
        மெதிர்செலவெடுத்தபெருமா
னிருளெனமலைக்குமறமவுன தடிக்கமல
        மெனது புன்முடிக்கணருள்வோய்
செருவலிமுழக்குநிசிசரர்கெடவுருத்தவிறை
        சிறுபறைமுழக்கியருளே
    செழுமணிமதி ற்சமாபுரியிலுறைசிற்யாவ
        சிறுபறைமுழக்கியருளே. (10)
------------
10. சிறுதேர்ப்பருவம்.


மதுகரம்புக்கிடறவிரைநறுங்குறியமுகை
        வாய்விரண்டுமடன்மடக்கி
    மதுமாரிபொழிகின்றதொங்கலாகண்டலன்
        வயத்தொடுந்தேருருட்ட
விதுகரமுமகட்கவோராயிரகரங்கொண்டு
        வேலையிருளள்ளியுண்டு
    வெற்பின்முடியெழுகடவுள் சூர்மகற்கஞ்சாது
        வியன்மணித்தேருருட்டக்
கதழெரிச்செங்குஞ்சிவெண்பற்பசுங்கட்
        கரும்பேய்களவுணருடலக்
    கார்வரையுருட்டமாலட்ட திசை தன் தாணை
        கைக்கொள்சக்கரமுருட்டச்
சிதைவறுபெருந்தேருருட்டுபோரூரிறைவ
        சிறுதேருருட்டியருளே
    சிமபமொய்த்திடுமிமயமயில் வயிற்று தயமணி
        சிறுதேருருட்டியருளே. (1)

மறுகுவளியெறியுங்கடுஞ்சி றைப்புலிநக
        வளைத்துண்டவெண்டலைச்செம்
    மாமுதுகுடைக் கருடன் மீதிவர்ந்தொளிபெருகு
        மரகதநிறக்கடவுளு
முருகெரிகடுக்குஞ்சிகைப்பவளவாய்வெண்மை
        மொய்த்தசிறைவில்ளாவடி
    மூதோதிமத்திவர்ந்தாரணமுழக்குநா
        முண்டகமனைக்கடவுளுங்
குறுகியிருபுரனும் வரநடுவிடைப்பைஞ்சிறைக்
        குரகதங்கடவியடியார்
        குறைகலைந்தாறுமதி வதனவழி கருணைபொழி
        கொண்டலேயண்டராசே
சிறுகிடைப்பெருமுலைத்தேவகுஞ்சரிகணவ
        சிறுதேருருட்டியருளே
        சிமயமொய்த்திடுமிமயமயில் வயிற்று தயமணி
        சிறுதேருருட்டியருளே. (2)

பாத்திகிரியுமெலும்புப்பெரும்பலகையும்
        பகர்நாடியுருவாணியும்
    பரியமருமத்தட்டுமரியசீர்க்கூவிரம்
        படிறுசெறிபொறியாடியுங்
காதறருகுஞ்சிக்கொடிஞ்சியும்பலமொழி
        கலித்தபல்லிய ராசியுங்
        கணமொடுமலிந்தவுடலெனவுரை தரும் பெரிய
        கடுவேகமுடைய நானா
பேதமுறுதேர்கண்மீதாறுயிர்ப்பிளையைப்
        பிறங்கிடவிருத்திவெற்றிப்
        பேசருமனப்புரவிகட்டி வினை வடவழிப்
        பெருமநின்னருள்வலவனாற்
றீதறநடத்திடச்செய் தகுமரேசனே
        சிறுதேருருட்டியருளே
    சிமயமொய்த்திடுமிமயமயில் வயிற்று தயமணி
        சிறுத்தேருருட்டியருளே. (3)

உலகினொடுசரவசரமெவையுமாயொன்றினொடு
        மொருபற்றிலாதபொருளா
    யுறுமறிவையறிவிடத்தெழுகின்றசிற்றசைவி
        லுயிருலகுமயலில் பரமு
மிலகுமவை மெங்ஙனமெனிற்கருதுமறிவொன்ற
        தெழுநினைவு சுட்டுபொருளென்
    றிவையோரிரண்டையுமிணைத்தும் பிரித்து
        மியக்கிவருபொருளொன்றுமாங்
கலகமுறுமந்தநினைவின்றாகின்முப்பொருளு
        மின்று பரகதியுமிதுவே
        காணென்று கடையேனை வாவென்றுமுடிமீது
        கஞ்சமலரடிதரித்தென்
சிலைமனங்கனிசெய் தகுமரசற்குரவனே
        சிறுதேருருட்டியருளே
    சிமயமொய்த்திடுமிமயமயில் வயிற்று தயமணி
        சிறுதேருருட்டியருளே. (4)

ஒருபொருளிடத்தினிற்சச்சிதானந்தமுட
        னுருவநாமமுமுள்ளதென்
    றுரை தந்துமுன்னர்பினருண்டாய் விளங்கியுறு
        பிரியமாயுள மூன்றுமே
மருளிரியவருமெய்ம்மையுருவநாமம்பொய்ம்மை
        வன்பழுதையுரகவுருவின்
    மாறாதறிந்திடுதிபின்பதைநன்றா
        மதித்தவர்க்கரவின்மையி
னிருளறும்பிரம்மேநிகழுமற்றொருபொருளு
        மெதிரிட்டிலங்காதென
    வேழ்பிறவிவாரிதியிலாழுமெனை வாவென்
        றெடுத்தருளளித்தகுரவா
தெருளுறுங்கலைமுனிவர்பரவுபோரூர்முருக
        சிறுதேருருட்டியருளே
    சிமயமொய்த்திடுமிமயமயில் வயிற்று தயமணி
        சிறுதேருருட்டியருளே. (5)

வேறு.

வடவைக்கனலெனவுதரக்கனன்மிக
        மண்டப்பசிவிஞ்சி
    மண்டையின் மூளையையளையெனமுதுபேய்
        வாரிவிழுங்கவதின்
புடையிற் சிறுபேய்கெஞ்சிக்கெஞ்சிப்
        பொருமியழத்தேர்கள்
    புணரிக்கலனிற்குருதிக்கடலிற்
        போகக்காநிற
மிடறற்றாடுகவந்தக்குழவினை
        விரிதலை முதுகூளி
    வெங்களநாடகசாலையிலாட்ட
        வெகுண்டெழுமவுணர்கணத்
துடலைக்கறியினரைத்தெழுதேர
        னுருட்டுகசிறுதேரே
    யுமையொருபாகற்கருமைக்குமர
        னுருட்டுகசிறுதேரே. (6)

கவைதருக்குறுமுட்டாண்ஞெண்டருகுறு
        கண்டற்கரியெயிறு
    காணெனவெண்முகையுண்டாய்விண்டது
        காலுந்துகளள்ளி
நவையறு பெடைஞெண்டுக்குதவிப்பக
        நள்ளிருள்ளைமனை வாய்
    நண்புறுமஃதொடுபுக்குக்கொண்ட
        னறுங்குறு துளிவீசத்
தவநனிகுளிரானுளையக்கடறன்
        றண்டிரைவண்கையாற்
    றரளக்கதவும்பவளக்கதவுந்
        தந்தம்மனைமூடு
முவமையினெய் தற்போரூரிறைவ
        னுருட்டுகசிறுதேரே
    யுமையொருபாகற்கருமைக்குமா
        னுருட்டுகசிறுதேரே. (7)

பசுமைப்புல்லிச்செந்நிறவல்லிப்
        பங்கேருகமீதும்
    பால்காய்தாறொட்டுக்குமடற்குலை
        பரிரிங்கதலியினு
நசையுற்றிடு கட்டேறற்பாளை
        நறும்பூகத்திடையு
        நவைதீரீர்வாணெட்டிலை முண்டக
        ணடுவெண்டுணர்தோறுந்
திசையற்றருமணம்வீசுபுன்னாகஞ்
        செறுபுளினத்திடையுஞ்
சினைவளை மதியமுதத் திரள் சிந்துஞ்
        செய்தியின் மணிசொரியு
முசிதக்கல்வியர் சூழ்போரூர
        னுருட்டுகசிறுதேரே
    உமையொருபாகற்கருமைக்குமர
        னுருட்டுகசிறுதேரே. (8)

தாளவெண்மணியுஞ்சங்குந்துகிருந்
        தடவாள்வாய்முரனுந்
    தண்டிரையெறியும்வண்கடலிடையே
        தந்திக்கனகோடு
நரைதருகவரியுநாவியுமகிலு
        நற்சந்தக்குறடு
        நாடறு திரையாலுந்திப்பலாதி
        நண்ணுறல்பண்ணுறவே
யிருநிலமுழுதாளரையர்க்கங்கங்
        கெய்தியநிருபரெலா
    மேர்திறையிட்டங்கவனுளடங்கிய
        யிருந்திடுமுறைமானு
முருமலி நெய்தற்போரூரிறைவ
        னுருட்டுக சிறுதேரே. (9)

வடவரையோராயிரமுழைதோறும்
        வருங்கொடிமினலெனவே
    வாடருகவர்காநீள விதிர்த்திடு
        மாசுணராசனையே
கடகரியெட்டுஞ்சென்னிகவிழ்த்திக்
        கால்கண்மடித்திடவெங்
        கடுவேகத்துடனோடிக்குத்திக்
        கதிர்செறிபுஞ்சமெனப்
படமுடிதாழவெடுத்து தறிப்பர
        தத்தினடித்திடுமோர்
    பருமயில் கடவும்பளக்குன்றே
        பாலசமுத்திரமே
    யுடலுறுமுயிர்கட்சினுதருளமுத
        முருட்டுகசிறுதேரே
உமையொருபாகற்கருமைக்குமர
        னுருட்டுகசிறுதேரே. (10)

பிள்ளைத்தமிழ் முற்றிற்று.
------------------------
வேலுமயிலுந்துணை.

திருப்போரூர்ச்சந்நிதிமுறை - 3. அலங்காரம்.

காப்பு.
முக்கட்பவளமலைவந்ததேனை முராரி தங்கை
பக்கத்தெடுக்கும்பரிமளப்பூவைபருமயிலோற்
கொக்கத்துணைவந்தவுத்தமதேவையுயர்பொருளைச்
செக்கச்சிவந்த நன்மால்யானையைச்சிந்தை சேர்க்குதுமே.     (1)

நூல்.

பூமேவுநாபனுநான்முகத்தோனும்புரந்தரனுந்
தாமேவுவாழ்வு மதிகாரமும்பெறத்தார் புனைந்த
கோமேவு வேல் கொண்டவுணரை மாய்த்தகுமரனெங்கோன்
றூமேவுதாண்மலர்போரூரிலென்முடிசூட்டினனே.     (2)
தெய்வப்பிடிவந்து சேர்ந்துகிர்க்கிரி செந்தளிர்போன்
மெய்வைத்தவள்ளிக் கொடிபடர்தாரு வியனுலகிற்
சைவப்பயிரை வளர்க்குந்தண்மேகந் தகைமைசெறி
நெய்வைத்தவேல் கொண்டுபோரூரிலென்று நிகழ்தெய்வமே.     (3)
கருதார்புரங்கொன்றசேவகனார்க்குங்களிப்புறவே
யொருதாரகப்பொருளோதியவாவுன தன்பரைப்போற்
றருதாரணிசொலுநாயேனையன்புளந்தானுளனோ
விருதாசெஞ்சேவற்சமராபுரிவருவேலவனே.     (3)

சிற்றறிவொன்றுநினைப்பொடுநித்திரைசேர்ந்தியங்கு
மற்றிவைநீங்கிலதுதானெவைகளுமாகிநின்ற
வற்றமில் பேரறிவூடேகலந்திடுமாயவிதே
பற்றறுமுத்தியென்றான்சமராபுரிப்பண்ணவனே.     (4)

எல்லார்க்குமேலவனீயென்றறிந்துனையேத்தியன்பாய்ப்
பொல்லாக்கருமலந்தீர்ந்தான் பொதியப்புகழ்முனிவன்
சொல்லாற்புனைதொங்கனக்கீரன்சாத்தித்துனிகடந்தா
னல்லார்க்கு நல்லவனேசமராபுரிநாயகனே.     (5)

தோட்குக்குமநக்குங் கோக்குழைமாதர்க்குந் தொல்லைமத
வேட்குமுளங்குலைந் தேனைவிடேல்விண்டு மாமலர்க்கை
வாட்குங்கொடிய மருப்பார்மகிடன் வளைப்பிலுறா
தாட்கொண்ட்ருளுகண்டாய் போரிவாழுமயிலவனே.     (6)

அண்டஞ்சராசர னெண்டிசையாவு மளித்த வளுங்
கண்டங்கரிய சிவனுந்தமவங் கரங்களின்மேன்
மண்டன்பினேந்தி முறைமுறைதந்து மகிழ்மதலாய்
தொண்டன்பெனக்கு முளதோ தென்போரிச்சுராதிபனே.     (7)

கொங்கணராரியரொட்டியர்கோசலர்குஞ்சரராஞ்
சிங்களர்சோனகர்வங்காளரீழர் தெலுங்கர்கொங்க
ரங்கர்கலிங்கர்கன்னாடர் துருக்கானைவருமே
தங்கடங்கிறைநீயென்பர்போரிச்சரவணனே.     (8)

மான்சூட்டிறைச்சிசெந் தேன்றோய்த்தருந்தும் வனசரர் ன்மா,
கூன் கோட்டிளம்பிறை நெற்றிக்கும் வேலிணைக் கூர்விழிக்குங்,
கான்கூட்டமாமலர்க் கூந்தற்குங் கொங்கைக்குங்கா தல்கொண்டோன்,
றேன்கூட்டம்வாழ்பொழிற்போரூரனென் முருதேசிகனே.     (9)

கோக்குஞ்சரமதநாற்றந்தவிர்த்துக்குலநரந்தந்
தேக்கும்புழுகுமணம்வீசும்போரியெந்தேவன் செவ்வே
ணோக்கும் விழியருள்போக்கும்பிணியினை நூபுரத்வாள்
காக்கும்பவம்புகவொட்டாதெமக்கென்கவலைநெஞ்சே.     (10)

ஆயன்குழலிசை கேட்கும்பணாமுடியாடரவம்
வாயையங்காந்துமணிகாலுதல்வள்ளல்பாடல் கொண்டு
தூயகொடைகொடுத்தாங்குறும்போரிச்சுராதிபனை
நாயகனைக்குமரேசனைநாடுவர்ஞானிகளே.     (11)

இடமுறச்சூழுமுழைதொறுநாக மெரிபுரை
படமணிச்சென்னியெடுத்தாடன்மங்கலப்பந்தரிலே
சுடர்மணித்தண்டினைச் சூழவிளக்கிட்டசோதி யொக்குந்
தடவரைப்போரிச்சரவணநாயகன்றஞ்செனக்கே.     (12)

பிடிபார்த்தலறவெயினச்சிறார்கள் பிரிந்தகன்றைக்
கொடியாற்பிணித்ததன்மேலேறியாடுங்குளிர்பொழில்சூ
ழடிவாரப்போரிப்பதி வேலவனைவந்தண்டினனென்
குடியார்க்குநல்லகதிவாய்த்ததென்றுளங்கொண்டனனே.     (13)

தோகைநடித்திடவேடச்சிறாருழைக்தோற்பறையை
நாகம்பறித்துலர்வாகைநெற்றாற்கொட்டநாடியளி
யோகை தரும்பண் ணிசைபாடுஞ்சந்தனவொண்பொழில்சூழ்
மாகர்தொழுந்திருப் போரூரன்றாளென் மதி விழியே.     (14)

மேகங்கள் சூற்கொண்டுசாரற்படிந்துமிகக்குமுற
நாகங்கள் கோடிறப்பாயத்தெறித்தநகைத்தாள
தருங்குறமின்னார்கண்மேலுறமொய்த்தெதிர்பார்த்
மோகந் தாகந் தடவியபோரூர்க்குகனென்னருட்டந்தையே.     (15)

வரைமுத்தொளிரும்பளிக்காடரங்கின்மயினடித்தல்
புரையில்சசிமண்டலத்தாடன்மாதர்புரிவதொக்கும்
விரவுற்ற சாரலம்போரூர்விசாகன் விரைமலர்த்தா
ஞரையற்றுணர்வற்றுரியன்பமாகியவுள்ளொளியே.     (16)

பளிக்கறையூதருக்குழைப்பாயலிற்பள்ளிகொண்டே
களிக்குறுமாகந்தருவர் தங்கீதமுங்காரையினால்
விளக்குறுமேனிலத்தோகையர்கீதமும்வேற்றவே
கிளக்கலுறுந்திருப்போரூரனன்பர் தங்கேண்மையனே.     (17)

கருநாகத்தொண்டைக் கயமுனிக்கூட்டங்கல்லுச்சில்லுப்
பொருளச்சிக்கேழலுடனாடுஞ்சாரலம்போரிச்செவ்வே
ளிருபாததாமரைத் யேத்தி வணங்கி யெந்நாளுநினைந்
தொருவாதிருந்திலை நெஞ்சேயென்வீணி லுழன்றனையே.     (18)

அகலேந்துநல்ல முகிலேய்ந்தகூந்த லரிவையர்த
நகிலேந்துமாரவடம்போ லருவிநகந்திகழு
முகிலேந்துமாடநம் போரூர்க்குகன்பத முண்டகத்தைத்
தகிலேந்து நெஞ்சினர்மேன்மதவேளெய்யத்தானஞ்சுமே.     (19)

மதுவார்த்திடுகடம் போலேமயக்குறுமா தரையோர்
கொதுகாக்கருதுறுங்காலமுண்டோ கொடியேன்றனக்கே
விதுவாற் சலந்தருங்கற்சுனை யூடுவிளங்குபிடி
சதுராக்குடைந்துவிளையாடும் போரிச்சரவணனே.     (20)

அள்ளித்தெளித்தன்ன கள்ளிவெந்நீழ லணுகுழைதா
னள்ளிப்புனலெனப் பேய்த்தேரைநாடி நலிவதுபோ
லுள்ளிப்பொய்வாழ்வினை யூர்தொறுஞ்சென்றுழலாதெனையாள்
வெள்ளிப்பொருப்பினன்மைந்தாதென்போரியில் வேலவனே.     (21)

முடைமா றமுல்லை குழல்சூடுமாய்ச்சியர் மூதளைதான்
கடைதோறுமாரத்தின் மாற்பிற்றெறித்திடக் கன்றுதுள்ளும்
புடைபாயுழுவை குமுறுமென்றிந்நிலப் போரியெங்கோன்
படைவேறுணையுண் டெமக்கொருநாளும் பயமில்லையே.     (22)

பூவையுங்கோவுமசுணமுநாகமும்பூம்பொறிக்கான்
சேவலுஞ்சித்திரம்போற்கேட்டுறங்கச்சிறார்ப்பொதுவர்
தூவருந்தீங்குழலோசைவளர்க்கின்றதொல்லை முல்லைத்
தேவருந்தேடும் பொருள் போரிவேலன்றிருவடியே.     (23)

கட்டானிரம்பி யகவிதழ்கீன்றெழு கஞ்சமுடன்
முட்டாடுவைத்திட மெதிதெறித்தொளிர் முத்தையன்னப்
புட்டான்சினையென்றணைக்கின்ற போரிப் புனிதச்செவ்வேண்
மட்டாருஞ்சேவடி தொட்டாலெமக்குநல் வாழ்வுள்ளமே.     ( 24)

மடுப்பமயக்கிடைகொண்டேகுநெஞ்சினைமாற்றியென்னை
யெடுப்பதுனக்குக்கடனையனேயெழில்கூர்பழனத்
துடுப்புமுகக்கொழுச்செல்கின்றசீதையிலூறியநீர்
கடுப்பவனசப்பிழியூறும்போரியங்காங்கேயனே.     (25)

பச்சைக்குடைதிருப்புந்தகைப்பாசடை ரூடுருவ
மெச்சக்கடைச்சியர் சேல்பாயும் போரிவிசாகனெங்கோன்
கொச்சைச்சிறியனையிந்நாளும்பண்ணியகோகனதத்
தச்சிற்கினியெனைப்பண்ணக்கொடானிதுசத்தியமே.     (26)

விருந்துண்டுபின்னைக் குபசாரஞ்செய்யும் விதத்தினத்துப்
பொருந்துஞ்சரோகத் தேனுண்டுமுத்துமிழ்போரியிலோர்
மருந்துண்டதன் பெயர் செவ்வேளஃதென் மலப்பிணியுங்
திருந்துமுதற்பிணி தன்னையும்போக்கிடுஞ் சித்தமிதே.     (27)

தண்டாமரையிலனப்பேடுறவதுதன்னருகே
வெண்டாமரையிரண்டாலுதல்வாணிக்குவெண்கவரி
கொண்டாரவீசுதல்போலுறும்போரிக்குகனிருதாள்
கண்டாலுமின்பக்கடல்வந்துகோக்குங்கருத்தினையே     (28)

வண்டுகிண்டக்கஞ்சம்விண்டு தண்டேன் சிந்தவால்வளைகள்
கண்டயின்றின்புறும்போரூர் முருகன் கதலிணைக்கே
தொண்டுவந்தின்புறுவோர் பாததாமரைத்துளென்சென்னி
கொண்டுவந்தேன்மலம்விண்டேன்பரகதிகூடினனே.     (29)

கன்னியராடிக்கழித்தகத்தூரிகயன்மணக்கு
மன்னியவா திகழ்சமராபுரிமயிலோன்
பொன்னியல்கிங்கிணித்தாளையுதோளையும்போற்றுமை மே
லுன்னியயாவுமுறுநெஞ்சமே புண்மையுண்மையிதே.     (30)

வள்ளைக்கொடிச்செவிசைவலக்கூந்தல் வனசமுகந்
தெள்ளுற்றநீலக்கண்ணாம்பற்செவ்வாய் திகழுந்திகிரிப்
புள்ளுக்குயமன்னப்பேட்டுநடையுடைப்பொய்கைமங்கை
நள்ளத்திகழ்கின்றபோரூர் விசாகனை நாடுளமே.     (31)

கருப்புத்திரளையறுத்துச்செறித்தகனைசகட
மருப்புப்பகட்டைக்கழையாலுழவர்கண்மாறுதொறும்
விருப்புற்றமுத்துததெறித்தொளிர்சாளர வீடுபுகுந்
திருப்பெற்றபோரிக்குகன்றாளரிஞர்க்குத் தித்திக்குமே.     (32)

கரண்டமடிக்கடி நீர்மூழ்கியாங்குக் கயலெடுத்தே
பருண்டமென்னோக்கியர் முன்காட்டனுங்கண் மலர்விழிக்கு
வெருண்டகயலன் றிதுபார்மினென்று விளம்பலொக்குந்
தெருண்டவர் சூழ்திருப் போரூான்றேவர் சிரோமணியே.     (33)

காளைச்சலப்பெயர்நாயினமூழ்கக்கயமடுவி
லாளைப்பகட்டுறும்வாளைப்பசுட்டினமம்பினிற்போய்ப்
பாளைக்கமுகின்மிடற்றப்பாய்ந்துநெற்பண்ணைபுகுங்
கேளொத்தபோரிக்குகனன்பரேயென்கிளைஞர்களே.     (34)

கருக்கடனாயடியேன்புகுதாவகைக்காத்தமுத்திப்
பெருக்குறுமின்பத் திருத்துக்கண்டாய்பெரு நீர்கரையின்
வருக்கை வெடித்தெழுசெஞ்சாற்றுச்சேற்றில் வழுக்கிருத்துக்
குருக்கொளுமுத்துமிழ் போரூர்ச்சடாநநக்கோக்கொண்டலே.     (35)

வீட்டின் பநாடியிருப்போர் தமக்கும் விடயசுக
நாட்டங்கொண்டாங்கவர் போலிருப்போர்க்கு நலனுறவே
காட்டுமுவமைய தாக்கொக்குநீர்மடைக் கண்ணிலகுந்
தீட்டும்புகழ் கொண்டபோரூரன் வேல்சுரர்தேவதையே.     (36)

வாவிக்கரைக்கமுகேகொக்கு நிழல்வயங்கத்தெண்ணீர்
தவிக்கயலதைக்கண்டே வெருவுதறன்கனவின்
மேவுற்ற காட்சிநனவிற்கண்டானின் விளங்கலுறும்
பூவிற்றிருத்திகழ்போரூர்க்குகன்பதம்போற்றுளமே.     (37)

பச்சைநிறத்தநிறைநீர்க்குடங்கள் பலசுமந்தே
யுச்சியிலுற்றகதிரோனுக்கீயுமுயர்ந்துளதெங்
கெச்சமறச்செறிபோரூர்ச்செவ்வேளையிறைஞ்சிநினைப்
பிச்சநெஞ்சேயடுகின்றனன்பாரென்ப்ரதாபத்தையே.     (38)

சாறூற்றெழுந்துகணுவுடைத்தோடுந்தழைக்கரும்பை
வீறேற்றவாழைக்குலையொடுமாசினிவீழ்ந்தொடித்துச்
சேறாக்கியவயற்போரூர்முருகனெந்தீதகற்றிப்
பேறாக்கருணை செய்தே நெஞ்சமேதரும்பேரின்பமே.     (39)

பவளக்கொடியிற்பிணித்தூ சல்புன்னையிற்பார்வைமயற்
குவளைக்கண்கற்குமடமாதராடவக்கோடரும்பைத்
தவளத்தரளமழைபோலவர்மெய் தனிற்சொறியுந்
திவளுற்றபோரிக்குமரேசனென்குலதேவதையே.     (40)

வல்லைத்துரந்த முலைநுளைமாதர் வலையெறியப்
பல்லைத்திறந்துறு மிக்கவிதாலப் பழமிகுக்குந்
தொல்லைத்திருத்திகழ் போரூர்க்குகன்பதஞ்சூடுஞ்சென்னிக்
கில்லைப்பிரமன் றுயருறக்கீறு மெழுத்துக்களே.     (41)

வாடைக்கொதுங்கிடப் பார்ப்புகள்வெள்ளைவனசங்கண்மேற்
றேடிப்பெடையனந் தன்பாலணைத்துறுந் தீதினெய்த
னீடத்திகழ்கின்றபோரூர்விசாக னிமல்பத
நாடிக்களிப்பவர்க்குண்டோ துயரெனுநாமங்களே.     (42)

செக்கர்க்கிடையினுடுக்கூட்டமென்னத்திரைகளினாற்
றொக்கப்படுந்துகிர்மண்டலின் மீதுசுரிமுகங்கள்
கக்கப்படுமுத்தொளிருந்தென்போரியிற்காங்கெயனைப்
பக்கத்துடன் பணிவாரவரேசுகபாரணரே.     (43)

வண்டணையாக்கொண்டு கண்டூங்கும் பூங்கிழன்மாதரையே
கண்டனையாயுனுங் காலமுண்டோகடை யேன்றனக்கே
ஞெண்டினங்கேதகைத் தாதரித்துண்டற னீடுபொய்கைத்
தண்டுறைஞெண்டுட னாடிடும்போரிச் சரவணனே.     (44)

சந்திரகாந்தமணிமாடத்தூடுதன்சாயைகண்டோர்
பைந்தொடிமாதுதலைவனொடூடப்பரிந்தவனே
சுந்தரவாடி நிழற்காட்டியின்புறு சொற்புகலுஞ்
செந்திருப்போரிக்குகனைக்கண்டார்க்குண்டுசித்திகளே.     (45)

ஏதங்கருதினர் சென்மினென்றேயுமிதங்கருதும்
போதஞ்சிறந்தவர்வம்மினென்றேயும்பு கல்வன போல்
வாதஞ்செறியக்கொடியாடும்போரிவரதன்றண்டை
நாதங்கள் யோகியர்யோகினிற்காண்குறுநாதங்களே.     (46)

தேரூரிரவிவலவன்கைமீது செழுங்கொடிக
ளேராகத்தாக்குதலெங்கோ னயிலொளிக்கெய்துமுன்கோ
னேரோசொனில்லென்றுபோரூர்கைகொண்டு நீறுத்தலொ
சீரூருமிந்நகரே கயிலாயந்தெளிந்தவர்க்கே.     (47)

மனப்பரிசோரவிறுமாந்து நாவிமதம் பொழியுந்
தனக்களிற்றன்னமுருகாகுகாவென்றுதானுரைப்பப்
புனக்கிளிகற்கின்றபோரூரிறையைப்புகழ்ந்தவரைச்
சினக்கனல்காமக்கனலும்விட்டோடுந்திசைப்புறனே.     (48)

மதிகொண்டபூச்சக்ரவாளக்குடையின்வருநிழற்கீழ்த்
திகொண்டயானைப்பிடர்மேல்வருமச்சுகந்தனிலு
நதிகொண்டபேரன்பினாற்போரிவேலனை நண்ணியின்பக்
கதிகொண்டமேலவர்காறலை தாங்கல்கனசுகமே.     (49)

அளகாபுரியன்னபட்டணத்தேசுதையால்வனைந்த
களவார்முகில்படிமாடத்தினூகளித்தலினும்
உள காடவியெழமெய்ப்போரிவேலனைப்போற்றியுய்வார்
வளவார்புறந்திண்ணைவைகுதலே தமின்மாசுகமே.     (50)

உள்ளக்கவலையெலாமொழிந்தேனொழியாதுசெய்யுங்
கள்ளக்கருமங்கள்யாவும் விண்டேன் கலைவாணியுடன்
வள்ளக்கமலமலர்மாதுதந்தருள்வாழ்வடைந்தேன்
றெள்ளத்தெளிந்தனன்போரூர்முருகனைச்சேவைசெய்தே.     (51)

பூதரவிற்கொண்டவுணரைமாய்த்தபுராரிமைந்த
னாதரவாலணிப்போரூரிருந்திங்கவனருளாற்
சீதரனன் மருகாமுருகாவென்று செப்பினன்பின்
றாதரம்போலுறுந் தீவினையாவுந் தணந்தனவே.     (52)

வட்டாடல்போலப் பிழைப்பதுஞ்சாவது மாக்கியென்று
மொட்டாரஞ்செய்கின்ற மாயையுணர்ந்து முணரவொட்டா
தட்டாவதானஞ் செயுஞ்சீவரைப் பொய்மையாயிருந்துங்
கட்டாணியானமுத்தே சமராபுரிக்காங்கேயனே.     (53)

ஆள்வேட்டமாடு மயில்விழிமாத ரமை கடந்த
தோள்வேட்டபுன்னெஞ்சமேயதுசீவரைச்சூழ்ந்துகொண்டே
வேள்வெட்டமாடுவ தாங்கேகல்போரி விசாகனிரு
தாள்வேட்டுநாடுதி மேல்வீட்டிலின்பந் தழைத்துறுமே.     (54)

ஆறுசமயருந் தம்மிலொவ்வாதிங்களைவதென்னே
தேறுமறிவின ரெல்லாமறிந்துந் தெளிந்திலரே
பேறு தருந்தெய்வம் யாவைக்கும்யான்பெருந் தேவனென்றே
வீறுமுகங்கொண்டு போரூர்முருகன் விளக்கியதே.     (55)

மற்றவர் நிற்கமெய்ஞ்ஞானிகள் வம்மின்வகுத்துரைக்கே
னுற்றதுகேண்மினெம்போரூர்முருகனுயர்கதியை
நற்றமிழ்க்காழிவந்தெண்ணிலிபேர்க்குநயந்தளித்தான்
கெற்றமவனதலாலெவர்க்குண்டினிக்கூறுமினே.     (56)

கரும்பாற்செய்வேலி சுரும்பார்க்கும்போரியங் காங்கெயன் போற்
றிரும்பாச்சுகந்தரு வீடீவதற்குஞ் சிறப்புடனே
பெரும்பாற்றிருத்தரு பெற்றிக்குந்தேவா பிறரிலையென்
றிகும்பாற்கடற்றுயின் றோனெய்யினூடு கையிட்டனனே.     (57)

வேதனெங்கேயவன்றாதையெங்கே விண்ணினண்ணுபுரு
கூதனெங்கேமிகுதேவெரெங்கேகுறையாதவலப்
போதரெங்கேயறமாதியெங்கேதிருப்போரியில்லாழ்
நாதனெங்கோனவரைப்போலச் சூரையுநாடிடிலே.     (58)

திருநீலகண்டம் வெந்தீவினை தீண்டப்பெறாவெனவே
கருநீலகண்டனைப்பாடியடியரைக்காத்தவனெம்
முருமேலிருந்தபிணியையுமாற்றுவணுண்மைநெஞ்சே
யிருநீலவாவிநம்போரூரனைப்பணிந்தேற்றுவையே.     (59)

அஞ்ஞானத்தாலடி யேன் பிழை செய்யினு மாரருள்சேர்,
மெஞ்ஞானத்தாய் பொறுத் தாட்கொள்ளவேண்டும் வியன் மறைதேர்,
செஞ்ஞானத்தார்புகழ் போரூர்முருக செகமுயி ராம்,
பொய்ஞ்ஞானக்கூட்டத்துக் குட்புறனாகிய பூரணனே.     (60)

புரங்கொன்றதே வெள்ளிமாமலைநீலப்புயமலைமே
லுரங்கொண்டெடுத்தவனீரைந்து சென்னியு மூடுறவே
கரங்கொண்டவாளியினாலெய் தமாயன்கனமருகா
திரங்கொண்டபோரி முருகாவென்றீவினை தீர்த்தருளே.     (61)

நெஞ்சைக்கலக்குறுஞ் சேலோரிரண்டுடை நேரிழையார்
வஞ்சக்கலவிமெய் யென்றேவயங்கினை வன்னெஞ்சமே
துஞ்சற்கும்வந்து பிறத்தற்குமேதது சொற்கதிசேர்ந்
துஞ்சற்குநீ திருப்போரூர்க்குகனை யுறப்பணியே.     (62)

கொலையாதிசெய்தவராயினுமன்புகுணம் பொறுமை
யிலையாமுளத்தினராயினும்போரியிசைந்துகுண
மலைபோலிருந்த வடிவேலனை வந்துவாழ்த்தினரேற்
லையாமெய்ஞ்ஞானமடைவார்முன்மேவுந்துயரிலரே.     (63)

இமையாக் கருங்கண்முலையானை மாதரைபெண்ணியெண்ணிச்
சுமையாகப்பாவஞ் சுமக்கு நெஞ்சேயிது துன்புகண்டாய்
சமையாதியாறு முடையோர்க்கு வீடு தரும்பெருமா
னமையாட்கொள்போரிக் குமரேசன்சேவடி நாடின்பமே.     (64)

சடையாய் பவளக்கொடிபடர்பேரின்பசாகரத்தே
கடையா தெழுந்தசுகவாரமுதினைக்கஞ்சமொன்று
புடை தோன்று முந்திப்புணரி மருகனைப்புண்ணியனை
மிடைதீரப்போரியிற்கண்டேன் கதியின்பமேவினனே.     (65)

மேருப்பொருப்பினைச் சென்றேவியனண்ட கூடமுட்டுஞ்
சூரப்பொருப்பைத் தொளைத்தவைவேலவன்றுங்கனெங்கோன்
போரிப்பிரானெம் பிழைபொறுத்தாலன்ன பூதலத்தே
யாரிப்படி பொறுப் பார்சொல்கநீயிங் கறிந்துள்ளமே.     (66)

அண்டப்பரப்பினைக் கண்டோர்நொடிவரு மாய்ந்தபச்சைக்
கொண்டற்சிறைப்பெரு மாமயிலோன்குக னெங்களையன்
றண்டைத்திருப்பதம் போரில்வானவர் தம்முடிமேற்
றொண்டுற்றபேர் முடிமேன்மறைமேலென்றுந்தோன்றிடுமே.     (67)

தரைபகச்சீத்துத் திசையதிரச்சிறை தான்புடைத்தே
யெரிநிறச்சென்னி நிமிர்த்துவளைத்தெண் புலிநகவாய்
விரைவுறத்தோன்றத் திறந் தூழிமேக மெனத்தொனிக்கும்
பொருகொடிச்சேவலன் போரூரனாரினும் புண்ணியனே.     (68)

நதி பிறைகொன்றை செறி சென்னிமூன்றுகணான்குபுயந்
துதியிருதாணிகழ்மாணிக்கவெற்பைத்தொடர்ந்துபடர்
கதிதருபச்சைக்கொடி தோன்றுமின்பக்கனியளகை
யதிவளமேவிய போரூரில்வந்தெமையாட்கொண்டதே.     (69)

நன்மை நினைத்துன்றிருவடிசேர நயக்குமென்னைப்,
புன்மைநினைத்துளங் கொண்டேக நொந்தனன் பொய்ம்மையினேன்,
மும்மையளிக்குறு மின்பனம்போரி முருகப்பிரான்,
செம்மையளிக்கு நினைவினிவேண்டுஞ் சிறியனுக்கே.     (70)

அவுணக் கருங்கடல் செங்கடலாக்கு மணிநெடுவேற்,
சிவனுற்ற தோட்கிரிச் சேவநன்றன்னைச் செழுங்கொடிக் காற்,
கவணுற்றகைக்குற மானைத்திருடிய கள்வன்றன்னைக்,
குவடுற்றசாரலம் போரியிலேகண்டு கொண்டனனே.     (71)

கோலக்கருங்குயிலே மயிலேயென்று கொஞ்சுமலை
வாலப்பருவமின்றந்தருளானந்தமாமுகிலைச்
சோலைப்புயன்மலர்த்தேன்பொழி பொரிச்சுராதிபனை
மாலைக்கடந்தமனத்திற்கண்டார்க்குண்டுவாழ்வுகளே.     (72)

நீரிற்கயலெனக்கண்ணீர் துலங்கி நெஞ்சைக்கவற்று
நாரிச்சமனையுநம்புவரோநலனே கொடுக்கும்
போரிப்பதியெங்குமரேசன்றாட்கன்புபூண்டுநித்தஞ்
சீரிற்பெரியகதிமேவியின்பஞ்செறிபவரே.     (73)

சூரன்கிளை களைந்தெண்ணிலிதேவர்துயர்களைந்து
வீரஞ்சிறந்தநவவீரர் முன்னவன்வேலையின்மேய்ந்
தாரம்புயறுயில்போரூர்முருகனருளெனக்குச்
சீருங்குணமுமருவுந்தவமுநற்செல்வமுமே.     (74)

இருகோட்டொருமதி சூடும்பிரான் மகிழ்ந்தின்புறவே
திருகோட்டுபோதமுரைசெய்ததேசிகன்செங்குழையாற்
குறுகோட்டிமாதர்விளையாடும் போரிகைக்கூப்பினரைப்
பொருகோட்டெருமையன் கண்டாலுமஞ்சிப்பு றஞ்செல்லுமே.     (75)

ஆரணனாரணனின்னமுங்காண்டற்கரிய பரி
பூரணந்தோன்றிய பூரணனே திருப்போரியில்வாழ்
காரணனேயொருநாணீயளித்தகரையில்சுக
பாரணமென்றருள் வாய்கடையேற்கெம்பரம்பொருளே.     (76)

மெய்வேடம் பூண்டவர்க் குள்ளுப்புறனும் விளங்குபிரான்
பொய்வேடம் பூண்டன னெனறாலுங் காத்தனைபூங்கணையா
லெய்வேட னால்வருந் தாதெனை யாளினியேய்ந்ததினை
கொய்வேடமாண் மணந்தோய் தென்போரிக்குணக்கொண்டலே.     (77)

அருணகிரிப்பெயர் மெய்ஞ்ஞான நாதன்சொல்லால்வனைந்த
பொருநைநதிக்கிரி யான்புகழ்மாலை புனைபுயனே
கருணைமிகுத்தென்னை யாண்டாய்க்கு மீண்டுகைம்மாறுளதோ
தருணவளத்தின னேசமராபுரிச் சண்முகனே.     (78)

மாலோன் விருந்தையை யுண்டாக்கிக் கொண்டிலன் மா மலரோன்,
மேலானநன்சிர மொன்றாக்கிக் கொண்டி லன் மீதுயர்ந்த,
நாலாமறைபுகழ் போரூரன்சம்பந்த நாமங்கொ ண்டே,
நூலாமிடைமயி லாக்கினனென்பை நொடியினிலே.     (79)

சகலமதங்களையெல்லாமுணர்ந்ததவமுனிவோர்
புகலுமிலக்கமெண்ணாயிரம்பேரைப்பொருகழுவி லிக
கலுறவைத்தும் வருமேதமொன்றின்றியேயிருந்தான்
றிகழுறும் போரியன் சம்பந்தநாமஞ்சிறந்துகொண்டே.     (80)

எண்ணற்கரியசமணக்களைந்தேதமிலாத்
தண்ணுற்றபோருணீர்பாய்ச்சிக்சைவப்பயிர் வளர்த்து
நண்ணச்சிவானந்தபோகம் விளைவிக்கநல்லுழவன்
விண்ணுற்றதேவருஞ் சூழ்போரிவாழ்கின்றவேலவனே.     (81)

தாருகன்கோளரி மாமுகன்நினைக்கின்றனதுபெயர்க்
காருறுமால்வரை சூதம் வெஞ்சூரகங்காய்ந்தவைவேற்
பேருறுவோர்தமைக்காலனுந் தீண்டப்பெறானெனிலே
போரியென்னாயகன்றாட்கேசரணம்புகுநெஞ்சமே.     (82)

ஆருயிர்யாவைக்குமானந்தத்தேனையளிக்குமுக்கட்
டாருவினாற்கவிமாமழையே பொழிதண்முகிலே
காரிருண்மாமலந்தீர்த்தெனையாளக்கடனுனக்கே
சீருறு தேசிகனேபோரிமாநகர்ச்சிற்பரனே.     (83)

வீரத்தவுண ருயிர்களைமேய்ந்து விரைவினர்,
சோரிக்க டலிடை யாடிக்குடர்த்தொங்கள் சூடிவெற்றி,
கூருற்றவேல் கரங் கொண்டோன்றென்போரிக் குமரனென்மேற்,
சீருற்ற பேரருள் வைத்தானிஃதென் றெளிந்திலனே.     (84)

தேவருநாகரும்யாவருமும்முறை தெண்டனிட
மேவருமாமகுடத்தினிராசிகண்மீதொளிருந்
தூ வருமாமணிராசிகண்மேவித்தொடர்ச்சி வந்த
பூவருதாளினன்போரூர்க்குகனெனும்புங்கவனே.     (85)

கொக்கரித்தேவருந் தானவர்சேனையைக் கொன்றுழக்கி
மிக்கரத்தக்கடலாடிப்பிணமலைமீதிவர்ந்து
செக்கரிற்றோன்றுங்கணநாதர்சேவிக்குஞ்சேவடியா
னிக்கரிக்குஞ்சுரும் பார்க்கின்றபோரிக்கிறையவனே.     (86)

மணிகொண்ட சேடன் படாமுடிதூக்கி மணியு தறித்,
திணிகொண்டமால்வரை மாடேபுறந்துறச் சேண்பறந்தங்,
கணிகொண்டதேவர்தொழச்சென்று மீண்டிங்ககவுமும்மைக்,
குணில்கொண்டபேரிகை யார்க்கின்றபோரிக் குகன்மயிலே.     (87)

வாரிசுழலவடவரையாதிவரைசுழலக்
காரொடுசந்திரசூரியர் மீன் கறங்காச்சுழலக்
கூரிருள் யாக்கையரக்கர்சுழன்றிடக்கோதில் பச்சைத்
தேரெனவட்டம் வரும்போரிவேலன்சிறைமபிலே.     (88)

மின்னற் சுடர்விழுதோட்டுமணிக்குழை மெல்லியலார்
பொன்னுற்ற பூண்முலைவேட்ட நெஞ்சேயிதுபொய்ம்மயக்கே
தன்னைத்தலைவனையாராய்ந்தடையுந்தகைமையின்புக்
கென்னப்பனாகிய போரூர்ச்செவ்வேளை யிறைஞ்சுவையே.     (89)

முகடிடித்துச்சக்ரவாளத்தை முட்டி வெங்மூரியெட்டுப்
பகடுகுத்திக்கனல் சிந்திடப்பார்த்துப்பரவை யெல்லா
மகடுறத்தேக்கி விடுத்துறத்தாவியரைக்கணம் போய்க்
ககனமுற்றும் வரும்போரூரனேறுங்கனதகரே.     (90)

மகுடங்களாறுங்குழையோர்பனிரண்டும் வானவரும்
புகழுங்கடகங்களீராறுமாரியும்பூனதப்பொன்
றிகழுமதாணியுஞ்செந்துகிராடையுஞ்செஞ்சிலம்பு
நிகழும்படி தரித்தோர்தெய்வம்போரிநிலாவியதே.     (91)

நின்பாததாமரைக்கன்பேதுமின்றியனீசன்பொல்லேன்
புன்போதமேலிட்டபொய்யேன் பிழையைப் பொறுத்தருளா
யம்போருகமலரோராறலந்தவருட்கடலே
செம்போரிவேலவனேயிமையோர்கள் சிகாமணியே.     (92)

செப்புக்கவித்தன்னவன்குரத்தான்மண்சிதைத்தெறியுந்
துப்புற்றமாவிற்கிணையாகவோதினர்சொல்கணத்தே
யொப்பற்ற மூவுலகும்போய்த்திரும்பு மொருமனத்தை
யெப்பற்றியாலுரைத்தார்சமராபுரியென்குணனே.     (93)

மெய்யாநெறிக்க ணடியேன்செலுத்த விலங்கிமிகு
பொய்யாநெறிக்க எனனைக்கொடுபோமுளப்போர்க்களிற்றை
யையா நினதரு ளாங்கயிற்றாற்பிணித் ததானண்டைச்
செய்யாருந்தாட்கந்துசேர்ப்பாய் தென்போரியஞ் [+] சேவலனே.     (94)

---
[+] சேவலனே என்பது சேவகனே என்றிருக்க வேண்டு மெனத் தோன்றுகின்றது.
----
உள்ளுறுபுன்னினைவெல்லாமொழிந்திங்குணர்வரிய
நள்ளிருளன்னவஞ்ஞானமுந்தீர்ந்துநலனுதவுந்
தெள்ளியபேரருளூடே கலந்தின்பு சேர்ந்திருப்பக்
கள்ளநெஞ்சேற்கும்வருமோ தென்போரியங் காங்கெயனே.     (95)

எல்லாப்பொருள்களுந் தானாகித்தானொன்றிலேய்வதின்றாய்ச்
சொல்லாற் கருத்ததனாற்சென்று கூடருஞ்சோதியதா
மல்லாரணப்பொரு ணாயேற்குமீய மதித்துகொல்லோ
நல்லார்க்கினிய குகனேதென்போரி யென்னாகனே.     (96)

எண்ணியவெண்ணியவாறேசிறியனுக்கீந்தருளும்
புண்ணியனேநின்மகிமையையோர்ந்திலன் பொய்யவனேன்
கண்ணுறுமாமணியே கருத்தூறுங்கனிரசமே
தண்ணளிமாமுகிலே போரிமேவிய சண்முகனே.     (97)

உள்ளத்தழுக்கினையெல்லாமகற்றியுனதுபத்
வள்ளக்கமலத்தெழுநறவானந்தவாரியிலே
கள்ளச்சிறியனைவைத்தாளவேண்டுங்கழனிமடை
யள்ளத்திறந்திடும் வாளைகள் போரியயிலவனே.     (98)

மலஞ்சோர் கடத்தைப்பிணிக்கூட்டை யொன்பது வா யிற்பையை,
நலஞ்சால வெண்ணிக் கடையேன் களித்தன னாய்ப்புலையேன்,
றிலஞ்கார் தயில மெனவெங்கு மன சிவா னந்தத்தேன்,
கலந்தேகளிப்பதென்றோ சமர புரிக் காங் கெயனே.     (99)

எண்ணிலிகாளத்தின் பின்னரிக்காயமினிதளித்தாய்
நண்ணுறுமீதினுமெய்ப்பத்தியீந்திலைநாயடியேன்
பண்ணியபாவமென்றேகும்பரசதியென்றடைவேன்
விண்ணுறுதேவருஞ்சூழ்போரிவாழ்கின்றவேலவனே.     (100)

திரவணிநீடிய போரூர்கைகூப்பிச்செங்கமலச்
சரவணவாவியினீ ராடித்தங்கச்சதங்கை கொஞ்சுங்
குரவணிபா தம்பணிவோர்க்கினிமைகொடுக்கும்பிரா
னரவணிவோன்குமராவடியேனுன்னடைக்கலமே.     (101)
-------------------

4. திருப்போரூர்ச்சந்நிதிமுறை. - மாலை.

வேண்பா.
விநாயகர்துதி.

மருப்புநிலவாலென் மலதிமிரம்போக்குங்
கருக்கோடைபோக்குமதக்காராற் - றிருப்போரூர்
நிம்பத்தின் கீழிருந்து நேயர்க்கு
வாழ்வளிக்குங் சம்பக்கடமாகளிறு.

பூவார்ந்தகற்பகப்பூம்பொங்கரிடத்திற்சிறந்த
தேவாய்ந்த செல்வமுதற்செல்வமெல்லாந் - தூவாய்ந்த
வேள்பணிந்தபோழகாமேதகுபோரூராநின்
றாள் பணிந்தார்க்குண்டாகுந்தான்.     (1)

காழியிலேவந்து கணக்கிலாச்சீவரை நீ
டூழியின்பத்துய்த்தவொருவனே - யாழியெனுந்
துன்பத்திருந்தேனைத்தூக்கித்தென்போரூரா
வின்பத்துள்வைப்பாயினி.     (2)

இருட்டறையைநோக்கு விழிக்கேற்று விளக்கென்றூழ்
பொருட்டனையே காட்டுமவை போலே - மருட்டனையு
மாயையினாற்பேரருளான் மாற்றியறிவளிக்கும்
தாயனையான்போரூரன்றான்.     (3)

நாயேனுன் சீரடிக்கு நன்கல்ல செய்தாலும்
பேயேனிழைத்த பெரும்பிழையை - நீயே
பொறுத்தாள்வதுன்கடனாம்போரூராவென்னை
பொறுத்தாலெனக்காருறவு.     (4)

ஐம்பொறியாற் கண்டுபினரற் பித்தானாயடியே
னெம்பெருமான்மிச்சிலுனக்கேறுமோ - வம்பனே
னீ காட்டக்காண்பதெனநேயமுறப்போரூரா
வாய்காட்டீ கற்புதமேயாம்.     (5)

விதிவழியே நின்றுன்மிளிர்கமலத்தாளை
மதி தழையுமன்பால்வணங்கிக் - கதிதழையு
மன்பரைப்போல்வேடமணிந்துநின்றேன்போரூரா
வன்பருக்குள் வன்பனேன்வந்து.     (6)

இல்லறத்தானல்லேனியற்கைத் துறவியல்லே
னல்லறத்துஞானியல்லெனாயினேன் - சொல்லறத்தி
னென்றேனுமில்லேனுயர்ந்ததிருப்போரூரா
வென்றேநானீடேறுவேன்.     (7)

இன்போரணுவாயிடரதற்குமாமலையாம்
புன்போகம் வேண்டிப்புலம்பாதே - யென்போடே
யுள்ள முருகவருமொண்போரூரையனருள்
வெள்ளமுறநெஞ்சேவிரும்பு.     (8)

மயக்கமெலாநீங்கியுன்றன்மாமலர்த்தாட் கீழே
யியக்க மறுவாரிதிபோலென்றே - தியக்கமறு
பேரானந்தம் பெறுவேன்பேணுதிருப்போரூரா
சீராருந்தேவாதெளிந்து.     (9)

அளகையர் கோன்வாழ்வுமனங்கன்போலேரு
மளகவடமீன்போலணங்கு - முளமதனி
லுன்னாதுகைவிட்டுனைப்பிடித்தார்போரூரா
வென்னாதாவுகொண்டேனியான்.     (10)

வள்ளிக்கொடிப்படமாகற்பகதாரு
தெள்ளிப்புகழ் தெய்வச்சிந்துரமே - யுள்ளிக்
களித்துவிளையாடுங்கன கமலைபோரூ
ரளித்துவிளையாடுமரசு.     (11)

மெய்ப்பொருளாநின்னைவிரும்பியின்பமேவாது
பொய்ப்பொருளைநாடியிடர்போந்தேனைச் - செப்பரிய
மட்டழகார்சோலைமலிந்ததிருப்போரூரிற்
கட்டழகாகாத்தாள்கடன்.     (12)

வள்ளையாரோடைமலி போரூராறுமுகப்
பிள்ளையார்பாதம்பிடி நெஞ்சே - கொள்ளையார்
வன்பிறப்பு நீங்குநமைவாரிதிபோல் வந்தடருந்
துன்பிறக்குங்கூடுஞ்சுகம்.     (13)

இருளிற் கிடந்தவெனையன்றே தூக்கி
யருளைத்தரத்தனுவேயாதி - தெருளுற்றுத்
தந்தவனீ மற்றவையைத்தந்ததுபோனிற்கீத
லெந்தறகைபோரூரானே.     (14)

இடர்களையுமின்பக்கரும்பையெமது
தொடர்பிறவி நீக்குந் துணையைத் - தொடர்பாகி
யுள்ளும்புறப்புமொளிவீசும்போரூரிற்
றெள்ளுமணியைநெஞ்சேசேர்.     (15)

சேர்ந்துநமதுசெயலற்றமுடிமேற்சேர்த்தி
பொங்கிமணக்குமின்டப்போரூரன்றாட்பூவைத்
யார்ந்தகளிமேன்மேலுமாக்கியே - சார்ந்தெவணும்
தங்கிமனமேதருக்கு.     (16)

முடித்தேன்களித்தேன்று சிப்பெல்லாமாறிக்
குடித்தேனானந்தக்கொழுந்தே - னடித்தேனெம்
மாரூரர்போற்றியடிபணிந்துநின்றுதொழும்
போரூரன்பாதாம்யுயம்.     (17)

அருளே வடிவாகியானந்தவாரிப்
பொருளாயானென்னதெனல் போமோ - மருளேது
மில்லானேபோரூரிறைவனே நாயேற்கு
நல்லானேசொல்லாய்நயந்து.     (18)

என்னை விழுங்கியிருக்கநீயானந்தந்
தன்னைவிழுங்கித்தருக்கநா - னன்னையிலுஞ்
சாலவருள்புரிந்தசற்குரவாபோரூரா
வேலமருள்செய்யேலினி.     (19)

படலமுரித்த விழிபானுவைக்கண்டாற்போ
லுடலமுதலாணவநோயோட்டி - யடியிணையைக்
காட்டிய நீமீட்டுங்கனமயக்கிற்போரூரா
கூட்டியெனையாட்டாதாட்கொள்.     (20)

எனதபிமானம்பிடித்தவிந்தவுடலாதி
யுனதபிமானம்பிடித்தாயுற்றே - யெனதாகக்
கொண்டேன்மயக்கங்குலையுநாளெந்தநாட்
கண்டேபோரூராகழறு.     (12)

எனக்க வலம்வாராமலெந்காளுங்காத்து
மனக்கவலைமாற்றுமருந்தாம் - புனச்சிறுமி
றத்துபுனற்போரூரன்றாள்.
முத்துவடக்கோடுழுதமுந்நான்குதோளுடையான்.     (22)

பொருப்பெனவேபஞ்சின் பொதியெனினுஞ்சின்ன
நெருப்பணுகினீறாகுமாப்போல் - விருப்பமுட
னுன்னைத்தொடர்வார்க்குறுபவநோய்போரூரா
பின்னைத்தொடராபிறந்து.     (23)

கண்ணிற்கருமணியே கற்பகமேகற்றோர்க
ளுண்ணிற்குமோரொளியேயோர்பொருளே - யெண்ணிற்கும்
போரூரிறையே புனித நிறையானந்தச்
சீரூரினாயேனைச்சேர்.     (24)

வேல்கொண்டேன்றோளில் வியன்சதங்கைமொய்த்திருந்த
கால்கண்டேனாருமுகங்கண்டேனே - நீலகொண்ட
மாயூரங்கண்டேன் வளமைதருபோரூரிற்
போயூரங்கண்டேன் புகுந்து.     (25)

தாயாமெனக்குரியதாதையாஞ்சற்குருவாந்
தேயாக்கருணைபொழிதெய்வமா - மாயப்
பொருணீக்குமன்பர் புனிதவீடேற
விருணீக்கும்போரூரிறை.     (26)

கேட்டதெல்லாம்பாலிக்குங்கேடிலாத்தாதாவும்
வீட்டுநெறிகாட்டும் வியன்குருவு - நாட்டமென
வுண்ணின்று நாயேற்கொளிகாட்டுஞ்சிற்பரனு
மெண்ணின்றபோரூரிறை.     (27)

ஐம்பொறியாற்போகமயின்றாலுநாயேனுன்
செம்பதுமத்தாளிணையேசிந்திக்க - வும்பருக்குங்
காணவரிதாமின்பங்காணத்தென்போரூரா
பூணவருளேபுரி.     (28)

அன்பெலாநின்பாலேயாக்கியடியேனுன்
னின்பெலாமுண்டிங்கிளைப்பாறக் - கொன்புனைவேற்
கையாதென்போரூரிற் காங்கேயாவீடுதவு
மையா நீகண்பார்த்தருள்.     (29)

நீலக்கடன் முகட்டினேருதயசூரியன்போற்
கோலக்கலாபக்குரகதமேற் - சாலவுநீ
தோன்றியடியேன்றுயர் தீரப்போரூரா
ஆன்றியடியேன் முடிமேலோது.     (30)

மலையரையனீன்ற பிடிவாழ்ந்துதவுமியானை
கலையரையனைப்புடைத்தகாளை - சிலையரையன்
மாப்பிளைதென் போரூரின்மாணிக்கச் செஞ்சதங்கைக்
காற்பிளைநாபேனார்கதி.     (31)

ஏதுபிழைசெய்தாலுமேழையேனுக்கிரங்கித்
தீதுபுரியாததெய்வமே - நீதி
தழைக்கின்றபோரூர்த்தனிமுதலேநாயேன்
பிழைக்கின்றவாறு நீபேசு.     (32)

முக்கரணத்தாலுமுசியா துணைப்பணியுந்
தக்கவர்கடாட்டாமரைமீது - புக்கபொடி
யொன்றினுமென்சென்னிக்கோரணியாப்போரூரா
சென்றுறுவேன் வீடுதெளிந்து.     (33)

மூவாசை கொண்டு முசிக்குநெஞ்சேபோரூரிற்
றேவாசைகொள்ளத்தெரியாதோ-தேவாசை
கொண்டாபேனந்தங்குறைகளெல்லாமிக்கணமே
விண்டாயேகண்டாயேவீடு.     (34)

குழவியழுதகுரற்கேட்டதாய்வந்
தழுதகண்ணீர் மாற்றியமுதூட்டுங் - கெழுதகைபோ
னாயேனிடர்களைந்துநல்லருளூட்டும்போரூர்ச்
சேயேநந்தாயாகுந்தேர்.     (35)

கலங்கினேன் கண்ணீருன்கையாற்றுடைத்தே
யலங்கிலைவேலாறுமுகத்தையா - புலன்கரணங்
கண்டறியாவின்பங்கடையேற்குப்போரூரா
வுண்டறியத்தந்தாளுவந்து.     (36)

மலைமுழையிலுற்றாலென்மாமருந்துண்டாலென்
கலைமுழுதுங்கற்றாலென்காணா -ரிலைநிலவு
வேல்பிடித்தகையான்வியன் போரூரையனிரு
கால்பிடித்தாற்காண்பார்கதி.     (37)

விருப்பமுடனேபணிபுமெய்யன்பனை
மிருப்பு நெஞ்சவெண்போலியையுங் - கருப்பிரதக்
கட்டியார் தீஞ்சுவைபோற்காதலர்க்கீயும்போரூர்ச்
செட்டியார் தாமறிவார்தேர்ந்து.     (38)

கோழிப்பதாகையுஞ்சீர்க்கோலமயில்வாகனமு
மாழிப்பெருக்குறிஞ்சியார்வேலும் - வாழியெனத்
தோத்திரஞ்செய்போரூரிற் சுந்தரனார்பேரருளோர்
மாத்திரையினெஞ்சேவரும்.     (39)

அயிலேந்துதோளானையாறு முகத்தானை
மயிலேந்துதாளானைவாழ்த்திப் - புயலேந்து
தண்டலையார்போரூர்ச்சரவணனைநெஞ்சமே
கண்டலையாதுற்றார்களி.     (40)

புயல்போற்கருணை பொழிவிழியான் றன்னை
மயல்போக்குமாமருந்தைவந்தெஞ் - செயல்போக்கும்
போதானந்தச்சுடரைப்புண்ணியனைப்போரூரி
னாதாந்தனைமனமேநாடு.     (41)

உரகப்படந் தூக்கியுதறுபசுந்தோகைத்
துரகமிசைத்தோன்றுஞ்சுடரே - பரகதியில்
வாழ்ந்தருளநாயேன் வளமை தரும்போரூரா
சூழ்ந்தருளாய்சாலத்தொடர்ந்து.     (42)

கடலைச்சேறாக்கிக்கடுவரை நீறாக்கிய
மிடலுற்ற சூரனும்வீட்டி - யடலுற்ற
வேல்கொண்டார்தெய்வத்தை மெய்யாகப்போரூரின்
பால்கண்டார்க்குண்டோபவம்.     (43)

மறப்புநினைப்பாகிவருதிரையெந்நாளும்
புறப்படாவின்பப்புணரி- யுறப்புகுந்தே
யாடிக்களிக்குமருட்போரூரையனடி
கூடிக்களிக்குங்குழாம்.     (44)

முத்துச்சிவிகையராய்மூரிமதயானையராய்த்
தத்துபரிமான்றேரிற்றங்குநராய் - மெத்து
மரியாதனத்தராயாளுவர் பூம்போரூர்
பிரியாதானீறணிந்தபேர்.     (45)

பேய்போந்துயரம்போம்பித்தம்போம் போகாத
நோய்போமிடிபோநுவலுங்காற் - றாய்போல
நன்னிதியைப்போல நயந்த திருப்போரூரன்
சந்நிதியைக்கண்டளவேதான்.     (46)

குமராநமாவென்றுகூறினாரோர்கா
லமராவதியாள்வரன்றி - யமராசன்
கைபுகுதார்போரூரன் கால்புகுவார் தாயுதரப்
பைபுகுதார்சேரார்பயம்.     (47)

குற்றமிழைத்தாலுங்குணமாகக்கொண்டுநம்மேற்
பற்றுவிடாதபழம்பொருளா - முத்தமழைக்
காரூரரையனுக்குக்கற்பகநீழற்கொடுத்த
போரூரரையனெஞ்சேபோற்று.     (48)

வேலுமயிலும் விளங்குஞ்சிறு சதங்கைக்
காலுமீராறுகனதோளுஞ் - சால.
வருளுதவுமாறுமுகமுமுளபோரூர்ப்
பொருணமதுநெஞ்சமேபோற்று.     (49)

சரவணவாவிச்சலமூழ்கியன்பாற்
குரவணிதாணாடிக்கை கூப்பிப் - பரகுருவே
யென்றோதிவாழ்த்தியிரும்போரூர்சூழ்ந்தவரை
நின்றோதி நெஞ்சேநினை.     (50)

வேலைநினைந்தாயோவியன் கிங்கிணிசூழ்ந்த
காலைநினைந்தாயோகனபோரூர்-வேலையாச்
சூழ்ந்து தொழுகாயோநீ சூரியாகாரிருளைப்
போழ்ந்திடுவாளே தோபுகல்.     (51)

அம்புலியேபோரூர் வந்தாறு முகங்கண்டாயோ
நம்புமடியார்சபையைநண்ணினையோ - வெம்பரனைப்
பண்ணளியாற் பாடினையோபாற்கடல் போலேவிளங்குந்
தண்ணளிநிற்கேதுகாண்சாற்று.     (52)

கடவுட்பிடிக்கோர்களிப்பாகும்வள்ளிக்
கொடிசுற்றத்தானுங்குலாவு - மடியர்க்கே
யேண்ணிதொறுமுள்ளத்திலின் பூறும்போரூரிற்
கண்ணுதலான் றந்தகரும்பு.     (53)

வாளைப்பகடுமடைவாயடைக்கவரு
மாளைப்பகட்டுமணிபோரூர் - நீளிடத்தி
லைவண்ணமுண்டங்கதிலோரரசிருக்கு
நைவண்ணம்போகநெஞ்சேநாடு.     (54)

என்போதநின்பாலே யீதலே நல்லறனா
முன்போதங்கைக்கொள்வதொண்பொருளா - முன்பாதத்
தானந்தமின்பமாமாரமுதேபோரூரா
மோனந்தான் வீடாகுமொய்த்து.     (55)

சூக்குமையாம்வாக்குந் துனியாணவ்வுடலு
நீக்கரியவென்போதநெஞ்சமே - போக்கி
யிருந்தபடியிருக்கவென்றுபோரூரா
திருந்தவரம்பாலிப்யாய்ச்செப்பு.     (56)

ஐவாயவாவையுமுன்னாரடிக்கேவைப்பதலர்
மெய்யானவன்பேவியன் சலமாம் - பொய்யாத
வுன்போதத்தாலறிவதொண்சுடராம்போரூரா
வென்போதநைவேத்தியம்.     (57)

அமரர்க்கின்பாகுமவுணர்க்கேகைப்பா
மியைப்பிடிகரத்திலெய்துஞ் - சமயத்
தலைவனார் மோந்துகொளச்சாரும்போரூரிற்
கலைவலாரேத்துங்கனி.     (58)

மரகத மாமலைமேன்மாணிக்கவெற்புத்
திரகதமாய்த்தோன்றுந்திறம்போல் - வருமுனது
காட்சியினை நாயடியேன் கண்டுதொழத்தந்தருளாய்
மாட்சிதருபோரூராவந்து.     (59)

ஆணிப்பொனென்கோவருளாழிதானென்கோ
மாணிக்கமென்கோமதியென்கோ - பேணிப்
பணிவாரிருள்போக்கும்பானுவென்கோபோரூர்க்
கணியாகுந்தெய்வத்தையான.     (60)

ஆனந்தமாகடலேயாராவமுதமே
மோனந்தருஞ்சுடரேமுத்திவித்தே - தேனந்து
கஞ்சமலர்வாவிக்கனபோரூரையாவுன்
றஞ்சமெனைக்காத்தாள்சரண்.     (61)

பாம்பாகத்தோன்றிற்பழுதை சற்றுந் தோன்றாதாம்
பாம்பின்றாத் தோன்றிற்பழுதையே - மேம்பாடாய்ப்
பொய்தோன்றின்மெய் தோன்றாபோரூராநின்னருளான்
மெய்தோன்றிப்பொய்தோன்றா வீடு.     (62)

கானலைநீரன்றென்றுகாட்டக்கண்டானொருவன்
மாநலநீரென்றுமயங்கல்போ - னீநலமாய்ப்
பொய்யுலகம் பொய்யாகக்காட்டியும்போரூரனே
மெய்யெனவுண்ணைந்தேன்மிக.     (63)

கும்பமுனிக்குக் கொடுமலங்கண்மூன்றறுத்துச்
செம்பதுமத்தாள்கொடுத்ததேசிகா - நம்ப
வறியேன் மலமறுத்தாயற்புதம்போரூரா
சிறியேன்மேலென்னருளோசெப்பு.     (64)

அஞ்ஞானவல்லிருள்போயன் பர் குணக்குன் றின்மிசை
மெஞ்ஞானபானுவெளிதோன்றச் - செஞ்ஞான
நாதத்தொனிகூவுநற்கொடிப்போரூரனிரு
பாதத்தை நெஞ்சேபணி.     (65)

பவளக்கொடியூசற்பன்னிரண்டின் மீதே
யிவருற்றசூரியர்போலேய்ந்து - திவளுற்ற
குண்டலங்களாடவருகோவைப்போரூரனைப்போற்
கண்டிலன் பொய்யாக்கருணைக்கார்.     (66)

மூதண்ட கூடமுகடுதொடத்தாணீட்டுங்
கோதண்டபாணிகுலமருகன் - றீ தண்டா
வண்ணமெமையாண்டான்மகிழ்போரூரையனினி
யெண்ணமெனைநெஞ்சேயெமக்கு.     (67)

ஆம்பல்வாய்விள்ளவடியார்கரகமலங்க
கூம்பவுதிக்குங்குளிர்மதியே - தேம்பி
யழுதபிள்ளைக்காய்போலருட்போரூரையா
தொழுகவெற்கு நீயே துணை.     (68)

என்செயலாய்த்தோன்றவிருட்டிரோதம்புரிந்தாங்
குன் செயலாய்த்தோன்றவொளியருள்செய்-துன்செயலா
லென்போதந்தோன்றா துன்னின்பாரப்போரூரா
வுன்போ தந்தந் தாளுவந்து.     (69)

உள்ளந்தனிலேயுவமையிலாவானந்த
வெள்ளந் துளும்பவிளையாடும் - பிள்ளைகளே
சூழுந்திருப்போரூர்ச்சுந்தராவென்பிறவி
யேழும்போநெஞ்சேயெமக்கு.     (70)

ஒளியாற்கதிரவுணருனுடலாற்கால
னளியாற்குளிர்மதியேயாகு - மெளிதினனி
தூரம்போய்மீளுதலாற்சொன்மனமாம்போரூரில்
வீரன்கரத்தேந்தும்வேல்.     (71)

கைக்குரியகஞ்சமாங்கண்ணுக்கோர்காட்சியா
மெய்க்குரியசென்னிக்கேமென்முடியாம் - பொய்க்காதென்
னெஞ்சத்துளின் பநிறைக்கும்பரஞ்சுடராந்
தன்சுற்றபோரூரன்றாள்.     (72)

வள்ளவளச்செம்முளரிமாளிகையின் மீதிருந்து
பிள்ளைமடவன்னப்பெடைநோக்க - வுள்ளலொடு
செவ்வாய்ச்சிரலாடுந்தேன் வயற்போரூராள
னெவ்வாய்ப்புமாகுமெமக்கு.     (73)

வீதிமணக்கும் விரைக்குங்குமச்சேறே
யோதிமணக்குமுயர்மாடந் - தாதுசெறி
பூமணக்குஞ்சோலை புகழ்மணக்கும் போரூரிற்
பாமணக்குஞ் செவ்வேள்பதம்.     (74)

மயிலடையுஞ் சந்தமலைச்சாரலெங்குங்
குயிலடையும் பூஞ்சோலைக்குள்ளே - புயலடையும்
பொன்மாடமெங்கும்புகழ்போரூர்வாழ் தெய்வந்
தன்மாடடைவார்தவர்.     (75)

தன்னை மறந்து கண்ணீர்த்தண்டரளமார்பணியும்
பின்னை முருகாவென்றுபேசுமுளத் - துன்னுங்
குயிலாலுஞ்சோலைக்குளிர்போரூரானை
மயின் மேல்வரக்கண்டமான்.     (76)

எத்திக்குந்தானாயிருந்தடியேனுள்ளத்தே
தித்திக்குந்தேனளிக்குஞ் செட்டியாங் - கொத்தி
யரவமணிப்பை தூக்கியாடுமயிலேறிக்
குரவமணிபோரூர்க்குகன்.     (77)

அன்புந்தருநல்லருளாழியுந் தரும்பே
ரின் புந்தருமெண்ணியதருமே - மன்பதையைக்
காக்கும்போரூரான்கடையேனைத்தன்னடியா
னாக்கும்போரூரானறிந்து.     (78)

நோவவுரையானெம்மை நோவக்கண்பார்த்திடான்
சாவநினையான்றளரவிடான் - பாவனைய
சொல்வாய்க்குறத்தி துணைபிரியாப்போரூர
னல்வாய்ப்பரையனெஞ்சேநாடு.     (79)

திருவடிக்கே தோன்றுஞ்சிறியேன்றுயர
மொருவருக்குந்தோன்றா தென்னுள்ளே - சருவியெனை
யிந்நாளும்வாட்டுமிடர்களைப்போரூரா
நன்னாளிந்நாளா நயந்து     (80)

ஆசையுமன்புமபிமானமுமுனது
பூசையிலேவைக்காது பொய்க்காளாய்ப் - பேசரிய
பெண்ணாசையாதிபிடித்துழன்றேன்போரூரா
வெண்ணாதுநின்னையிருந்து.     (81)


தீயவனென்குற்றந் திருவுளத்தினாடாதென்
றாயனையபோரூர்ச்சரவணா - தூயசுக
வீட்டுக்குள்வைப்பாய்வினையேனைப்பொய்க்காயக்
கூட்டுக்குள்வைக்கேல் குறித்து.     (82)

வேல்விடலாயென்றுமணிவீரக்கழல்புனைந்த
காலுடைய சூரடுகாளாயென்று-மாலின்
மருகனேயென்றுமடநெஞ்சேபோரூர்
முருகனேயென்றுமுயல்.     (83)

காதலித்தவாறுதவுங்காங்கெயனார் தாளிணையை
யாதரித்து நன்றாயனுதினமு - நீதரித்துக்
கள்ளமெலாம்போகக்கருது நெஞ்சேபோருர்வந்
துள்ளமெலாமின்பமுறும்.     (84)

கருப்புச்சிலையானுங்கைகூப்பழகா
பொருப்புச்சிலையான் புதல்வா - விருப்புற்ற
வென்னெண்ணத்தின் படியேயீந் தருளாய்போரூரா
வுன்னெண்ணத்தின்பாயுவந்து.     (85)

நாடு தனிலேயுழலு நாயேனை வாவென்று
வீடுதனில்வைக்கவிரும்புவாய் - பீடு தரு
காட்சியேபோரூரிற்கற்பகமேயாருயிர்க்கோர்
சாட்சியேயுன்றாள்சரண்.     (86)

ஆறியனாய்வந்து மறிவுக்கறிவாயுங்
கூரியநூறந்துங்கொடியேற்குப் - பேரறிவு
தந் தாய்மறந்து தளர்கின்றேன்போரூர்வா
ழெந்தாயென்செய்கேனினி.     (87)

என்றுமபிமானமேழையேன் மீதுவைத்து
நன்றுபுரியுங்குமரநாயகா - வின்றுசுக
பூரணத்தினாயேன்புகவைப்பாய்போரூர்வாழ்
காரணத்தாயுள்ளேகலந்து.     (88)

கைவிட்டானாயேனைக்காப்பாரொருவால்லை
பொய்விட்டார்போற்றும்புனிதனே - மையிட்ட
கண்ணாரிருவர்கலந்த புயத்தழகா
தண்ணார்போரூராதரித்து.     (89)

ஆனைமுகத்தாற்கிளையவாறு முகத்தானை
மானையிடத்தில்வைத்தோன் மாமகனை - மானுதவு
வேடிச்சிதோள்சேர்ந்தமெய்ப்புயனைநெஞ்சமே
நாடிச்சிபோரூர்நயந்து.     (90)

மெய்யடியார்போலமிகநடிப்பேன் மெய்யடியார்
செய்யடிமைத்தொண்டேதுஞ்செய்திலேன் - பொய்யடியே
னுன்னாட்கமலபதத்துண்ணிறையப்போரூரா
வெந்நாட்கிடைக்குமெனக்கு.     (91)

நோயுற்றடராமனொந்துமனம் வாடாமற்
பாயிற்கிடவாமற்பாவியேன் - காயத்தை
யோர்நொடிக்குணீக்கியெனையொண்போரூரையாநின்
சீரடிக்கீழ்வைப்பாய்தெரிந்து.     (92)

குறைகளையுங்கோவேகுணமளிக்குந்தேவே
மறைமுடிவுகாட்டுமணியே - யிறையவனே
போரூராவென்றுபுகழநெஞ்சேயெந்நாளுங்
காரூர்மயக்கமருங்காண்.     (93)

கோதுபடாதகுணஞானசாரமே
யேது படிறேனிழைத்தாலுந் - தீதாகக்
கொள்ளாதுபோரூர்க்குமரவேணாயேனை
யெள்ளாதுகாத்தாளினி.     (94)

மருளுடையேன்செய்தபிழைவண்போரூரையா
வருளுடையநீ பொறுத்திங்காளாய் - தெருளுடையாய்
வேறு துணைகாணேன் வினையேன்றனக்குரிய
வாறுதுணையாறானனம்.     (95)

பஞ்சரத்தின் மூடி வைத்தபைங்கிளிபோனாயேனை
யஞ்சிரத்தக்கூட்டிலடையாதே - விஞ்சு
மருளொளியிற்சேர்த்தியமுதூட்டிவைப்பாய்
தெருளொளியேபோரூராதேர்ந்து.     (96)

எப்போதுமென்முடியுனின்பத்திருப்பாத
மெய்ப்போதின் கீழிருக்கவேண்டுமே - மெய்ப்போத
வேதாவணங்கவரும்வித்தகாபோரூரி
னாதாமயில்வாகனா.     (97)

கன்றழைக்குமுன்னே கருதிவருமாப்போல
நின்றழைக்குநாயேற்குநேர்தோன்றி - யொன்றினுக்கு
மஞ்சாதேவாவென் றழைப்பாய்தென் போரூரா
வெஞ்சாதபேரருளாலின்று.     (98)

ஊழுக்காளாகியுறுபோகமேகருதிப்
பாழுக்குழைத்தபடிறேனை - யேழுக்குட்
போகாவகை புரியாய் போரூராபன்னிரண்டு
வாகாவடிவேலவா.     (99)

உண்ணாதபோகமில்லையுற்பவியாக்காலமில்லை
நண்ணாததேகமில்லைநாயினே - முண்ணாடிப்
பண்டுவந்ததுன்பமறப்பார் தொழுபோரூரானைக்
கண்டுவந்து நெஞ்சேகருது.     (100)

ஒளங்குளிரவானந்தமுண்டேன் - வளங்களெல்லா
களங்கமெலாமற்றேன்கதிபுகுந்தேனாயே
முற்றேன்றிருப்போரூருத்தமனார்சீர்பாத
நற்றாமரைதொழுதநான்.     (101)

ஆறுமுகம்வாழியாறிரண்டு தோள்வாழி
தேறுபதம்வாழியிருதேவிமார் - வீறுபுடை
வாழிவேல் வாழிமயில்வாழிபோரூரா
வாழிசகம்வாழிமகிழ்ந்து.     (102)
--------------

This file was last updated on 5 Feb. 2026
Feel free to send the corrections to the webmaster (pmadurai AT gmail.com)